மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.9.24

Astrology அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது உண்டாகும்?

Astrology  அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது உண்டாகும்?

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery. 

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.24

Astrology பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?

Astrology பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு
உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரணமடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.

எங்கே பார்க்க முடியும்?

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.24

Astrology - வாத்தியாராவது எப்படி?


Astrology - வாத்தியாராவது எப்படி?

வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார்.
அதாவது class teacher!

அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?

பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)

இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும்  புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other

இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.

ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teachibg ability) கொடுத்தான். அதானால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.24

Astrology மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

Astrology  மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான்.

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!
------------------------------------------------------------------------------
உதாரணம்

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம்.

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்
பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்.
லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!
இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.24

Astrology - உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!

Astrology - உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!

கிரக உறவுகள்

கிரகங்களில் சில ஒன்றிற்கொன்று நட்பாக இருக்கும். அல்லது பகையாக இருக்கும் அல்லது சமம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும். அது நன்றாக - அதாவது தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருப்பது நல்லது. ஜாதகத்தில் பலனை அலசும்போது அது உதவும்!

கிரகங்கள் உச்சம்பெற்று இருக்கும் நிலை உன்னதமானது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்

1. சூரியன் மேஷத்தில் உச்சம். அது செவ்வாயின் வீடு. நட்பு வீடு
2. புதன் கன்னியில் உச்சம். அது அவருக்கு சொந்த வீடு.
3. குரு கடகத்தில் உச்சம் அது சந்திரனின் வீடு. நட்பு வீடு
4. சனி துலாமில் உச்சம் அது சுக்கிரனின் வீடு. நட்பு வீடு
---------------------------------------------------
5. சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆனால் அது நட்பு வீடல்ல சம வீடு
6. செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் வீடு அது செவ்வாய்க்கு நட்பு வீடல்ல சம வீடு
7. சுக்கிரன் மீனத்தில் உச்சம் அது குருவின் வீடு. சுக்கிரனுக்கு அது நட்பு வீடல்ல சம வீடு
-----------------------------------------------------
8 & 9 ராகுவும், கேதுவும் உச்சம் பெறுவது விருச்சிகத்தில். ஆனால் அது பகை வீடு!
(பகை வீட்டில் எப்படி உச்சம் என்று யாரும் கேட்க வேண்டாம். பதில் சொல்ல அதை வகுத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை)
-----------------------------------------------------------
மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார் 
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.9.24

Astrology. சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

Astrology. சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ஆசைகளைத் துறந்தால் போதும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் உதறித்தள்ளினால் போதும்! முடிகிற காரியமா அது? கஷ்டம்தான்!!

அமெரிக்காவில் வீடு வாங்கியவன். அந்தக் கடன் முடியுமுன்பாகவே, சென்னை அடையாறிலும் ஒரு வீட்டை, வங்கி உதவியுடன் வாங்குகிறான். கேட்டால் அமெரிக்க வீடு பிளைகளுக்காம். அடையாறு வீடு வயதான காலத்தில் அவன் வந்து தங்குவதற்காம். அத்துடன் கோவை சேலம் நெடுஞ்சாலை வழித்தடத்தில், அவனாசி அருகே பத்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போடுகிறான். கேட்டால் அது சேமிப்புக் கணக்காம். எதிர்காலத்தில் இட விலை எல்லாம் எகிறும்போது ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் வருமாம். எப்படி இருக்கிறது? இந்த மாதிரி ஆசாமி எல்லாம் சன்னியாசி ஆகவே முடியாது. யாருக்காகச் ச்ம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்க்கிறான் என்பது அவனுக்கே  தெரியாது. வயதான காலத்தில் சனீஷ்வரன் எப்படிப் புரட்டிப் போடுவான், எந்த மருத்துவமனையில் படுத்திருக்க நேரிடும், ஒருவாய்ச் சோறாவது உண்ண முடியுமா? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

இதுதான் இன்றையப் பணத் தேடலின் நிலைமை. ஆயிரங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். லட்சங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். கோடிகளைத் தேடி அலைபவனும் இருக்கிறான். ஆனால் அலைபவன் எவனும் நிம்மதியாக இல்லை. அது மட்டும் உண்மை!

பாலியல் பலாக்காரம் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன. பெண்ணாசையையும் மனிதர்கள் துறப்பதில்லை.

சன்னியாசம் என்றால் என்ன? அதை முதலில் பார்ப்போம்!

renounce என்ற ஆங்கில வார்த்தைக்கு (to give up) கை விடு என்று தமிழில் பொருள் வரும்.  renouncer என்றால் எல்லாவற்றையும் விட்டவன் - துறந்தவன் என்ற பொருள்வரும். துறவி என்று வைத்துக்கொள்ளுங்கள். துறவி என்றால், நம்க்குப் புத்தரும், ஆதிசங்கரரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும் மனதில் வந்து நிற்பார்கள்.

Sannyasa (Devanagari: संन्यास, saṁnyāsa) is the life stage of the renouncer within the Hindu scheme of āśramas. It is considered the topmost and final stage of the ashram systems and is traditionally taken by men or women over fifty or by young monks who wish to renounce worldly and materialistic pursuits and dedicate their lives to spiritual pursuits. People in this stage of life develop vairāgya, or a state of dispassion and detachment from material life, renouncing worldly thoughts and desires in order to spend the remainder of their lives in spiritual contemplation. A member of the sannyasa order is known as a sannyasin (male) or sannyasini (female).- உபயம் விக்கி மகராஜா!

சன்னியாசி ஆவதற்கான முக்கிய அமைப்பு ஜாதகப்படி என்ன?

நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் வலுவாகப் பத்தாம் வீட்டில் அல்லது ஏதாவது ஒரு கேந்திர வீட்டில் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனைத் துறவறத்தில் த்ள்ளிவிடும். நிச்சயம் அவன் துறவறம் பூண்டு விடுவான். உலக ஆசைகளை எல்லாம் கடாசி விட்டு, இறைவன் திருவடிகளைப் போற்ற ஆரம்பித்துவிடுவான். இறைவனின் மேன்மையை அனுதினமும் நினைக்க ஆரம்பித்துவிடுவான். உலக வாழ்க்கை ஒரு மாயை (illusion)  என்பதை உணர்ந்துவிடுவான்

அவ்வாறு இருக்கும் கிரகங்களில் 
சூரியன் அதிக வலுவுடன் இருந்தால், அத்தைகைய சன்னியாசி, காடுகளில் வசிப்பான்.
சந்திரன் அதிக வலுவுடன் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், மரியாதைக்கு உரியவனாகவும் இருப்பான்.
செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.
புதன் அதிக வலுவுடன் இருந்தால், அதிகமான சீடர்களுடனும், அதிகமான பேச்சுக்களுடனும் இருப்பான். (He will be a loose talker)
குரு அதிக வலுவுடன் இருந்தால், ஒரு கையில் திருவோட்டுடனும், ஒரு கையில் தண்டத்துடனும் இருப்பான். அவனுக்குப் பல சீடர்கள்/பக்தர்கள், பின்தொடர்பாளர்கள்/  followers  இருப்பார்கள்
சுக்கிரன் அதிக வலுவுடன் இருந்தால் தேசாந்திரியாக, ஊர் விட்டு ஊர் சுற்றுபவனாக இருப்பான்.
சனி அதிக வலுவுடன் இருந்தால், உடலில் ஆடை கூட அணியாமல் பக்கிரிபோல திரிவான்

எல்லாவற்றையும் விட முக்கியமாக அந்தக் கூட்டணியில், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் இருந்தால், அந்த ஜாதகன் மனைவி, மக்களை இழந்தவனாக இருப்பான். அல்லது அவகளால் துன்பமுற்றவனாக/ சோகமுற்றவனாக இருப்பான். அல்லது அவர்கள் இல்லாதவனாக இருப்பான். அதாவது பிரம்மச்சாரியாக இருப்பான். ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து அந்த நிலை மாறுபடும்.

உங்களில் யாரும் சன்னியாச ஆக வேண்டாம். அதற்காக இதை நான் பதிவிடவில்லை. ஆனால் தேவையில்லாத  ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்கொண்டு அவற்றை அடையும் நோக்கத்துடன் வாழ்க்கையின் மேன்மையான தருணங்களை இழந்து விடாதீர்கள்.

அன்புடன்
வாத்தியார்
========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.9.24

Astrology: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!

Astrology: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!

குருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம் மற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல விதங்களிலும் நன்மையானதாக இருக்கும். 

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே கிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும் சந்திர புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம்  3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா என்றால், அதில் வரும்  சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி,  ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

உதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

சொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்
    சுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
    நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
    சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!

நிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு!  எல்லா வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும் பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்! 

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும் மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.24

Astrology: : கோடி நன்மை தரும் குரு மகா திசை!


Astrology: : கோடி நன்மை தரும் குரு மகா திசை!

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களின் முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய  பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள். அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால், அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும். ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும் குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்) நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும் பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்! 

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும் மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.24

Astrology: சள்ளையான சனி மகா திசை!


Astrology: சள்ளையான சனி மகா திசை!

சள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா? ஆகவே சொல்லவில்லை! 

அதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

உதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
    கெடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று 
    கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன்தானும்
    பாங்கான வருஷம் மூன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சது மெத்தவுண்டாம்
   அளவில்லா தனச் சேதமாகுந்தானே

சாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!