மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

15,637,914

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. என்று கூறுவதற்கு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பயன்படும்.

நமது முனுசாமிகள் (அதாங்க நமது முனிவர்கள்) அவற்றை எல்லாம் தொகுத்து சிறப்பாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

யோகங்கள் இரண்டு வகைப்படும். நல்ல யோகங்கள் (Good yogas). கெட்ட யோகங்கள் (ava yogas)

நன்மை செய்யும் கிரகங்களின் கூட்டணி நன்மையான யோகங்களைத் தரும். தீய கிரகங்களின் கூட்டணி தீமையான (அவயோகங்கள்) யோகங்களைக் கொடுக்கும்.

நல்ல பெற்றோர்கள். நல்ல வீடு, மேன்மை மிக்க கல்வி, நல்ல வேலை, அன்பான மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், பெயர், புகழ், உடைமைகள், மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகாரம் இவை எல்லாம் அல்லது இவ்ற்றில் சிலவாவது கிடைக்க ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருக்க வேண்டும்

அதைவிடுத்து, வாழ்க்கை அவலமாக, வறுமையாக இருந்தால் அது அவயோகக் கணக்கில் வரும். வறுமை, உடல் ஊனம், கல்வியின்மை, விபத்துக்கள், தீர்ர்க்க முடியாத நோய்கள், அடிமைத்தனமான வாழ்க்கை, புத்திக்குறைவு அல்லது புத்தியின்மை அல்லது பேதமை சுருக்கமாகச் சொன்னால் பைத்தியக்காரத்தனம் (madness) எல்லாம் இதில் அடங்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், உச்சம் பெற்ற நிலையில் அந்த சுக்கிரன் ஜாதகருக்கு சொகுசான (Luxurious) வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். அதாவது எல்லா செள்கரியங்களையும், வசதிகளையும் கொடுப்பார். அது விதி (Rule) ஆனால்  அதே சுக்கிரன் அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் நீசமடைந்திருந்தால், முன் சொன்னது அனைத்தும் ஊற்றிக்கொண்டுவிடும்!

ஆனால் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்கள் ஊற்றிக் கொள்ளாமல் தங்கள் பணிகளை தங்களுடைய தசாபுத்திக் காலங்களில் செவ்வனே செய்துவிடும்.

பிருஹத் ஜாதகம், சரவளி போன்ற நூல்களில் ஏராளமான யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான யோகங்கள், அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து வரிசையாகப் பின்னொரு சமயம் பார்ப்போம். அவைகள் தனிப் பாடங்கள்.

யோகங்கள் எப்படி உண்டாகின்றன?

அமரும் இடத்தைவைத்து அல்லது கூட்டு சேரும் இடத்தை வைத்து அவைகள் உண்டாகும்

ராசியில் இருக்கும் இடத்தை வைத்து யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நவாம்சத்தை வைத்து அவைகள் செல்லுமா? அல்லது செல்லாதா? என்பதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு ராசியில் சுக்கிரன் உச்சமடைவது ஜாதகனுக்கு சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும். எல்லா விதமான வசதிகளையும் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில், அதே ஜாதகத்தில் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அவைகள் அனைத்தும் கேன்சலாகிவிடும்.

அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் யோகத்தைத் தராது. யோகங்கள் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாலும், நன்மையான வீடுகளில் அவைகள் அமர்வதாலும் அல்லது நன்மை செய்யும் இன்னொரு கிரகத்தின் கூட்டணியாலும் அல்லது பார்வையாலும் கிடைக்கும். ஆகவே அவை அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட முக்கியமான 5 யோகங்கள் இருப்பது ஜாதகத்தின் மேன்மையை அல்லது சிறப்பைக் கணிக்க உதவும்.

அவை என்னென்ன?

1.குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்
2.செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம்
3.புதனால் ஏற்படும் பத்ர யோகம்
4.சுக்கிரனால் ஏற்படும் மாளவ்ய யோகம்
5.சனியால் ஏற்படும் சச யோகம்

மேற்கண்ட அந்த 5 யோகங்களும் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகனை தெய்வப்பிறவி என்று சொல்லலாம். தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பெற்றவன் என்று சொல்லலாம். அதற்கு பஞ்சமகா புருஷ யோகம் என்று பெயர்

ஆகவே அவைகள் உங்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இருந்தால் கவலையை விடுங்கள். அவைகள் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றங்களைத் தரும்.

எப்போது தரும்?

தங்களுடைய தசா புத்திகளில் தரும்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.25

Astrology: கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

Astrology:  கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு 90 நிமிடங்களும் (ராகு காலம்), கேதுவிற்குத் 90 நிமிடங்களும் (எம கண்டம்) அந்த நேரங்களில் முக்கியமான செய்ல்களை மக்கள் தவிர்ப்பார்கள். நாமும் தவிர்க்க வேண்டும்

சரி சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன். சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சுற்று வருவதைப் போல, நாகுவும் கேதுவும் 18 ஆண்டுகளில் ஒரு சுற்றை முடிப்பார்கள். அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் த்ங்கிச் செல்வார். அங்கே தங்கி வழக்கப்படி அந்த இடத்திற்கான சோதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஜாதகனுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த ராசிக்குத் தன் நடையைக் கட்டிவிடுவார். அடுத்த ராசிக்கு, கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்ரில் செல்வார். ராகுவும், கேதுவும் எதிர் சுற்றில்தான் சுற்றுவார்கள் என்பது பால பாடம். அது அனைவருக்கும் தெரியும்.  Rahu and ketu rotates in anti clock wise

அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ராகு தங்கும்போது, தங்கிச் செல்லும்போது  ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான பலனைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------
தலைப்பு: ராகுவின் கோள்சாரப் பலன்:

1. ஒன்றாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை உண்டாகும்.
2. இரண்டாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு சொத்து, செல்வம் விரையமாகும்
3. நான்காம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு விரோதங்கள் ஏற்படும். எதிரிகள் உண்டாவார்கள்
4. ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு கவலைகள் ஏற்படும். மகிழ்ச்சி இருக்காது.
5. ஏழாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு மனைவியால் உபத்திரவங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும். ஜாதகியாக இருந்தால் அவளுக்கு அவைகள் அவளுடைய கணவனால் ஏற்படும்.
6. எட்டில் ராகு இருக்கும் காலம் உடல் நலத்திற்குக் கேடானது.
7. ஒன்பதில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் தூர தேசங்களுக்குச் செல்ல நேரிடும்.
8. பத்தில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்குத் தொழிலில், வியாபாரத்தில், போட்டிகள், விரோதிகள் ஏற்படுவார்கள். அவர்களால் அல்லல் பட நேரிடும்.

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய நான்கு இடங்களிலும் ராகு சஞ்சாரம் செய்யும் காலத்தில், ஜாதகனுக்கு ஒரு சிரமமும் ஏற்படாது.

இந்தப் பலன்கள் யாவும் பொதுப்பலன்கள், தசாபுத்தி சிறப்பானதாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பலன்கள் குறையும் அல்லது இல்லாமல்
போய்விடும்!
-----------------------------------------------------------------------------------
நம் ஜாதகத்தில் (Birth Chart) கிரகங்கள் இருக்கும் இடத்தில் நடப்பு கோள்சாரப்படி  ராகு வந்து அமருவதால் ஏற்படும் பொதுப்பலன்கள்:

1. சூரியன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உண்டாகும். படுத்தி எடுக்கும்.
2. சந்திரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனின் தாயாருக்கு அது நன்மையல்ல. தாயாரின் உடல் நிலைக்குக் கேடு உண்டாகும். அதனால் ஜாதகனுக்கு மன அழுத்தம் உண்டாகும்.
3. செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். அத்துடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, வாக்குவாதம் போன்ற விவகாரங்கள் ஏற்படும்.
4. குரு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும்.
5. சுக்கிரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்குக் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
6. சனி அல்லது ராகு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு அதிகமான மன அழுத்தம் (Tensions) உண்டாகும். அது எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!