Astrology: பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!
சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் நல்லது. அதுவும் உச்சம் பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில்
இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருக்கும். உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில் அல்லது
புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அப்போது கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!
இப்போது கிரகங்கள் உச்சம் பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!
இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றால் புகழ் பெறுவார்
மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றால் நகரத்தின் தலைவராகவும், செல்வந்தராகவும் இருப்பார். பதவியில் இருந்தால், உயர் பதவி பெறுவார்.
நான்கு கிரகம் உச்சம் பெற்றால், செல்வந்தராகவும், அரசாங்க கெளரவம் பெறுபவராகவும் இருப்பார்.
ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றால், அமைச்சராக, தர்மவானாக , புகழ் உடையவராக இருப்பார். பல வீடுகள், வாகனங்கள் உடையவராகவும் இருப்பார்.
ஏழு கிரகங்கள் உச்சம் பெற்றால், உலகாளூம் திறமை உடையவர்!
உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சமாக உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com