மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.9.23

Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga



Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga 

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். 
ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) 
என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் 
காட்டில் விட்டால் என்ன ஆகும்? 
கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து 
விட்டால் என்ன ஆகும்? 
சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது 
கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். 
இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different portfolios). 
அவை அத்தனையும் கெடும்.

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே 
விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, 
அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் 
ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா 
கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் 
கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் 
அதிகக்கேட்டைச் செய்யாதா?

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். 
மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். 
ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை 
அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.23

Astrology உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?

Astrology உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?

கிழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

1. ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் செல்வந்தர். மேன்மையான குணம் உடையவர். வீரம் மிக்கவர்.
2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நல்ல உணவு, உடை, ஆபர்ணங்களை உடையவராக இருப்பார்.
3.செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், பகட்டானவராக, வீரம் மிக்கவராக, வேறு ஊரில் வசிப்பவராக இருப்பார்.
4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.
5.குரு உச்சம் பெற்ரு இருந்தால், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.
6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவராக இருப்பார்
7. சனி உச்சம் பெற்று இருந்தால், அரசியலில் தலைமை பதவியும்,  அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்கள் தலைவராகவும் இருப்பார். மேலும்

நாட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களால் நன்மை பெறுபவராகவும் இருப்பார்
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.23

Astrology யோகங்கள் ருச்சகா யோகம்! Ruchaga Yogam


Astrology யோகங்கள்
ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.8.23

Astrology பத்ரா யோகம்

Astrology பத்ரா யோகம்
யோகங்கள்
பத்ரா யோகம்
Badra Yogam
-------------------------------------------------------------

புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.
அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்!
அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்!
வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான்.
செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.

இந்த யோகத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்:

Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house, the native will be intellectual, learned and rich.

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.23

Astrology ஹம்ஸ யோகம்

Lesson Dated 4-8-2023
யோகங்கள்
ஹம்ஸ யோகம்
Hamsa Yogam
------------------------------------------------------------
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் 
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.
வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.

சுருக்கமாக ஆங்கிலத்தில்:
Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house, the native will be religious minded and very fortunate.

அன்புடன்,
வாத்தியார்.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.23

Astrology எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Astrology 

எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராகுவும், கேதுவும் சொந்த வீடில்லாத கிரகங்கள். சாயா கிரகங்கள்.அவைகளுக்கு சில வினோதமான குணம் உண்டு.

ஜாதகனின் வாழ்க்கையில் பெரும்பாலும் கேடு (தீங்கு) விளைவிக்கக்கூடிய கிரகங்கள் அவைகள். சாபக் கேடான கிரகங்கள். 
இயற்கையான தீய கிரகங்கள் (Natural malefic planets) ஜாதகத்தில் இரண்டு விதமான தீய யோகங்களை  (Harmful yogas) 
கொடுக்கக்கூடியவைகள் அவைகள்.

1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.

சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் பலாபலன்கள் கெட்டுப்போகும். 
உடன் சேரும் கிரகம் தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து விடும். அதுபோல ராகுவும், கேதுவும் 
தாங்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மையையும் கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை.

ஆகவே அவர்களின் இருப்பு (presence)  வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன்.

மேலும் அவைகள் தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல தாங்கள் குடியிருக்கும் 
வீட்டையும், தாக்கி அழிக்கக்கூடியவை.

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் 
முடியலாம். மாறுபடலாம். வேறு படலாம். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

In short, these 2 planets (nodes) exhibit their own qualities modified  for good or bad depending upon the planets
 which they associate.

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6ம் வீடு, 8ம் வீடு அல்லது 12ம் வீடு போன்ற தீய இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்)
 இருக்கும் என்றால்

தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.

1. சூரிய சண்டாள யோகம்.

சூரியனோடு ராகு அல்லது கேது சேரும்போது, ஜாதகனின் தந்தைக்கு உடல் உபாதைகள் மற்றும் உடற்கோளாறுகளை 
ஏற்படுத்தும். ஜாதகனை முன் கோபக்காரனாக்கும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.

2. சந்திர சண்டாள யோகம்.

சந்திரனோடு, ராகு அல்லது கேது சேரும்போது, அவர்களுடைய சந்திர ஆதிக்கம் கேடானது ஆகும். எப்போதுமே 
விரும்பத்தகாதது ஆகும்.

ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும்  
கேடானது ஆகும்.”உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில் ஜாதகன் இருப்பான்.

ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்)
தகாத காரியங்களை ஜாதகன் செய்வான். அவைகள் செய்ய வைக்கும்.

இவைகள் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது 
கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.7.23

Astrology ஆர்யபட்டா


Astrology ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த 
நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர 
விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் 
துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் 
மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். 
பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். 
அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய 
நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் 
படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் 
உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, 
பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் 
தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று 
உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது 
என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது 
ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் 
பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

Motions of the solar system:

Aryabhata correctly insisted that the earth rotates about its axis daily, and that the apparent movement of the stars is a relative motion caused by the rotation of the earth, contrary to the then-prevailing view, that the sky rotated. This is indicated in the first chapter of the Aryabhatiya, where he gives the number of rotations of the earth in a yuga and made more explicit in his gola chapter

India\'s first satellite was named after Aryabhata

Algebra, Trigonometry என்று கணிதத்தின் பல பரிமானங்களை வடிவமைத்தவர் அவர்தான். உலகிற்குச் சொல்லித்தந்துவிட்டுப்போனது அவர்தான்

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!

http://en.wikipedia.org/wiki/Aryabhata

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.7.23

பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்

பாடம் 6 - பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்

நீங்கள் நன்றாக வாழ்வதற்கு நவக்கிரகங்கள் பாடும் பாட்டுத்தான் முக்கியம்.
லக்கினாதிபதி, ஐந்தாம் அதிபதி,ஒன்பதாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி
ஆகியவர்கள்தான் இனிமையாக, மனம் மகிழப்பாடுவார்கள்.

1. லக்கினாதிபதி (1st Lord)
2. பூர்வ புண்ணியாதிபதி (5th Lord)
3. பாக்கியாதிபதி (9th Lord - Lord for Gains)
4. லாபாதிபதி (11th Lord - Lord for Profit)
ஆகியோர்கள் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நன்றாக
இருந்தால், ஜாதகனும் நன்றாக இருப்பான்!

Lagna lord, fifth lord, ninth lord & eleventh lord ஆகியோர்கள் பாடினால்
வாழ்க்கை முழுவதும் மகிச்சியாக இருக்கும்.

ஆனால் அஷ்டகவர்க்கத்தை எழுதிய முனிவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள்
ist house, 9th house, 10th house & 11th house ஆகிய வீடுகள் நன்றாக இருந்தால்
போதும் என்கிறார்கள். நன்றாக இருப்பது என்பது என்ன?

அந்த வீடுகள் நான்கிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்
இருந்தால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். மூடி வைத்துவிடலாம். ஜாதகன்
எல்லா நலன்களையும் பெற்று, வசதியாக வாழ்வான். அவன் காதில் எப்போதும்
இளையராஜாவின் அசத்தலான பின்னணி இசை (BGM) ஒலித்துக் கொண்டிருக்கும்.
சின்னக்குயில் சித்ரா அல்லது சாதனா சர்க்கத்தின் ”லல லல லல் லல்லா”
ஒலித்துக் கொண்டு இருக்கும்.

அப்படி இல்லையென்றால் ‘அசதி’ அதிகமாக இருக்கும். அசதி அதிகமாக
இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். 
நான் எதற்காக அதை விவரிக்க வேண்டும்?

சின்ன வயதில் உன் வாழ்க்கையைப் பார்க்காதே, நாற்பது வயதில் பார்; 
வாழ்க்கையின் அர்த்தம் பிடிபடும் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.

90% மனிதர்கள் அந்த 40வது வயதில் தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில்
எடுத்துவிடுவார்கள். அதற்குக் காரணம், அடிக்கடி எட்டிப் பார்க்கும் அசதி!

அன்புடன்
வாத்தியார

-------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.6.23

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?


ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம். 

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!
--------------------------------------------------------------------
லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருக்கக்கூடாது.

12ஆம் வீடு விரைய ஸ்தானம். 12th house is the house of loss! அங்கே இருந்தால் ஜாதகனுடைய வாழ்க்கை சோபிக்காது. சின்ன வயதில் பல கஷ்டங்களை அல்லது துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 21 வயதிற்கு மேலும், இறுதிவரை அந்நிலைமை தொடரும். அவன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. ஜாதகத்தில் மற்ற வீடுகள் நன்றாக இருந்து, அவன் அதீதமாகப் பொருள் ஈட்டினாலும், அது அவனுக்குப் பயன்படாது. 

அவனைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன் படும். In short, his life will be useful to others; Not for him!

லக்கினாதிபதி 6ல் இருந்தாலும் அல்லது 8ல் இருந்தாலும் இதே பலன்தான்

6 8, 12 ஆகிய மூன்று வீடுகளும் மறைவிடங்கள் (Hidden Houses)

லக்கினாதிபதி நீசமடைந்திருந்து, சுப கிரங்களின் பார்வை அல்லது சேர்க்கை இன்றி இருந்தாலும் இதே பலன்தான்

லக்கினாதிபதி தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களையோ அல்லது அதற்குக் குறைவான பரல்களையோ பெற்றி ருந்தாலும்  இதே பலன்தான்

That is no use!
---------------------------------------------------------------------
சரி, எங்கே இருக்க வேண்டும்?

First Choice: 11ஆம் வீட்டில்!

Result: குறைந்த முயற்சி; அதிகப் பலன். Minimum efforts; Maximum benefits! அல்லது லாபாதிபதியுடன் (associated with 11th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் உத்தமம். அந்த இருவருடைய திசைகளிலும் ஜாதகனின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக்
காணும்

Second Choice: 9ஆம் வீட்டில்!

பாக்கியஸ்தானத்தில் இருக்க வேண்டும். (That is in the ninth house) He should be in the ninth house from his own house! அல்லது பாக்கியாதிபதியுடன் (associated with 9th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் மிகவும் நன்மையளிக்கக்கூடியது.

Result: ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். எல்லா பாக்கியங்களும் அவனைத் தேடி வரும். சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களின் தசா/புத்திகளில் அவைகள் தேடி வரும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை உண்டு1

லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. அது திரிகோண வீடாகும்

அதுபோல 4ல் அல்லது 7ல் இருந்தாலும் நல்லது. ஆனால் அந்த அமைப்பு மேற்சொன்ன பலன்களுக்கெல்லாம் அடுத்தபடிதான்

அதுபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது தனது சுயவர்க்கத்தில் ஆறு பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றிருந்தாலும் நன்மையான பலன்களே கிடைக்கும்
-----------------------------------------------------------------------------
ஜோதிடம் கடல். கடலின் ஒரு பகுதியை, அதாவது மெரினாவிற்கு அல்லது சாந்தோம் பீச்சிற்கு எதிரில் உள்ள கடலைக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்

மேற் சொன்ன பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். ஆகவே உங்கள் ஜாதகத்தை இந்த விதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுக் கவனமாக அலசவும். அது முக்கியம்!

நன்றாக இருந்தால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும் வேண்டாம்; கெட்டுப்போயிருந்தால் தலையில் கைவைத்துச் சாய்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் அனைவரும் சமம். ஜாதகமும் அப்படியே!

அதனால்தான் அனைவருக்குமே 337 பரல்கள். உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அது என்ன என்பதை முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுமையாகவும், கவனமாகவும் பாடங்களைப் படித்து வாருங்கள். அது ஒன்றை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் நான் இங்கே எழுதுவதன் நோக்கம் நிறைவேறும்!


அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.6.23

Star Lessons No 1


Star Lessons

Lesson No.1

 

அதுஇருந்தா இதுஇல்லே

இதுஇருந்தா அதுஇல்லே

அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா

அவனுக்கிங்கே இடமில்லே!

    - கவியரசர் கண்ணதாசன்

------------------------------------

ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

 ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ அல்லது  மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

 ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

 எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

 எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது: எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

 ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும் ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச் சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

 இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு, கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக் காரனுக்கு இருக்காது.

 இறைவனின் படைப்பு அப்படி!

 உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும்.இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

 அதற்கு உதாரணம்:  ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

 கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

 இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார்,”கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!

 நான் சொன்னேன், “கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!

 பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும். 

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை! 

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும்,

மொத்த மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும். 

மன்மோகன் சிங்கிற்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்

முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.

முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன் அவருடைய வாகன ஓட்டிதான்!

பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்

 

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில்

 தனியாக நடந்து தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும். ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது. 

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \

உ தவியாளர்களுக்கு  நான்காம் வீடும் நன்றாக இருக்கும். 

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை; உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!

அனைவரும் சமம்! அதை மனதில் வையுங்கள்!

------------------------------------------------- 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.23

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.23

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.23

Astrology திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் 
அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். 
எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் 
செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற 
அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. 
பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை 
வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய 
வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து 
பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. 
வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். 
அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான். 

நேரம் வராவிட்டால் என்ன செய்வது? 

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2. ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.23

Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?



Astrology: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம் ?

வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! 

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். 

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.23

Astrology கைக்காசு எப்போது கரையும்?



Classroom Astrology
Kalakkal Lessons
Lesson No.11
Dated 8-3-2023

Astrology கைக்காசு எப்போது கரையும்?

முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா? 

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.3.23

Astrology கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?




Classroom Astrology
Kalakkal Lessons
6-3-2023
Lesson No.11
கலக்கல் பாடம்

கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும் முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால், உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக்கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.3.23

Astrology திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?




classroom AStrology
Kalakkal Lessons 
Lesson No0.10
Dated 3-3-2023

திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் 
அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, 
பொருளாதரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் 
முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.
உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது.
திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.23

Astrology பொன்மகள் எப்போது வருவாள்?


Classroom Lessons
Kalakkal Lessons
Lesson No.10
27-2-2023
கலக்கல் பாடங்கள்
Astrology பொன்மகள் எப்போது வருவாள்?

1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”

அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”
-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்த்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்
சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான வாழ்க்கை வாழ்வான். 
அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். 
அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை 
செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3. 
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை 
செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.23

Astrology யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?





Classroom Astrology
Kalakkal Lessons

22-2-2023
கலக்கல் பாடங்கள்
பாடம் எண் 9

யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?

புதிதாகத் திரையுலகத்திற்கு வருபவர்களுக்கு Screen Test எடுத்துத்தான் நடிப்பிற்குத் தேர்வு செய்வார்கள். சிலருக்கு இயற்கையிலே வசீகரமான முகத்தோற்றம் இருக்கும். சிலருக்கு Photogenic Face இருக்கும் (A subject, generally a person is photogenic if appearing aesthetically or physically attractive or appealing in photographs. Photogenic, describes the earliest method for recording camera images)

அதை வைத்து ஆசாமி கதாநாயகனுக்கு ஏற்றவன் அல்லது வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்க லாயக்கானவன் என்று முடிவு செய்வார்கள்.

நம் முனுசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) கிரகங்களை அவ்வாறு வகைப் படுத்தியுள்ளார்கள். Screen Test எதுவும் எடுக்க வேண்டாம (எடுக்க முடியுமா என்ன?) பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் விதமாக அதைப் பாட்டாகவும் எழுதி வைத்துள்ளார்கள்,

கீழே உள்ள பாடலைப் பாருங்கள்:

“காரியைப் பிடித்துப்பார்த்துக் கடுகவேவிதியைச் சொல்வாய்
சூரியனைப் பிடித்துச்சொல்லுவாய் பலன் பிதுர்க்கு
வீரிய பாம்பைப்பற்றி விளங்கவே யோகஞ் சொல்வாய்
சோர்விலாச் சுகங்கள்றன்னாற் களத்திர பலனைச் சொல்லே”

சனீஷ்வரனை வைத்து ஜாதகனின் விதியைச் சொல்லலாம். அவன் சந்திக்க இருக்கும் கஷ்டங்களைச் சொல்லலாம். எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைச் சொல்லலாம், ஆயுளைச் சொல்லலாம்.

சூரியனை வைத்து அவனுடைய தந்தையைச் சொல்லலாம், தந்தையால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைச் சொல்லலாம். தந்தைவழி சொத்துக்கள், உறவுகளைச் சொல்லலாம்.

ராகுவை வைத்து ஜாதகனுக்கு, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்குமா அல்லது ஊற்றிக் கொண்டுவிடுமா என்பதைச் சொல்லலாம்

சோர்வு அடையாத இன்பங்களுக்கும் சுகங்களுக்கும் களத்திரகாரகனான சுக்கிரனை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்

சரி, மற்ற கிரகங்களுக்கு? அதை பின்னால் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.23

Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!


Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா? 

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.
எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!


அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.23

Astrology வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!



Astrology வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!
இன்று காதலர் தினம்! (Valentine Day)

காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. 
திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி 
சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் 
மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் 
சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது 
தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.23

Astrology யார் யார் எங்கே இருக்கக்கூடாது?


யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க

அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க

வெடியவன்காரி சேய்க்கு விண்ணரவியவரைப்பாரார்

கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!

குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது

சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது

சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது

சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது

----------------------------------------------

அடுத்த பாப்கார்ன் பொட்டலம் நாளைக்கு! அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!