மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.23

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

Astrology:கேடு செய்யும் கேது மகா திசை!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.23

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

Astrology: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.23

Astrology திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் 
அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். 
எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் 
செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற 
அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. 
பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை 
வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய 
வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து 
பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. 
வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். 
அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான். 

நேரம் வராவிட்டால் என்ன செய்வது? 

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
2. ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்
4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.
5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்
6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!