மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.20

வெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்திருந்த அதீத பக்தி!!!



வெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்திருந்த 
அதீத பக்தி!!!

நீங்க_என்ன_பெரிய_பீட்டரா...?? 

👍எப்படி வந்தது இந்த வழக்கு சொல்...???

🙏🏼தொடர்ந்து படிக்கவும்.. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மற்ற ஆலயங்கள் போலில்லாமல் மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன்தான் 
முதலில் வணங்கப்படுகிறார். 

சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து அன்புடன் அருள்பாலிக்கிறார்.

மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, 
விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேசக் கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ணப் பட்டிருக்கிறது.🏜 

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றித் தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்துப் பெரிய சபையர் (Sapphire) கற்கள் பதித்த ஒரு நீலப் பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்குக் கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனிதக் காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்ல என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்தப் பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படிப் பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்குக் காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடிக் காலணிகளைத் தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

👍யார் இந்த ரவுஸ் பீட்டர்? (நாமெல்லாம் கேட்பமே "என்ன ரவுஸ்" விடுறியான்னு அதுக்கு மூலமே இவருதாங்க)_

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.🛕🕉️🛕 

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.🏜 

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகிப் போயிருக்கும்.

பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்துப் போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்தக் கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரைப் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ("நீ என்ன பெரிய பீட்டரா" அதுக்கும் இவருதாங்க மூலம்)

சம்பவத்துக்கு வருவோம்.👍

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

👀நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்குக் கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

🔥அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்துப் போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்லத் தேடினார். சிறுமியைக் காணவில்லை. 🏜 

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்று கொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்தக் காணிக்கைக் காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன.

அத்துடன் விட்டாரா? 🏜 

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழாக் காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் 
தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சிப் பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் 
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

மதுரையின் முதல் புலம் பெயர் தொழிலாளி  திரு. பீட்டர் பாண்டியன்! உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...!!🌸🙏🙏🙏🌸💚❤️
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.20

Astrology: Quiz: புதிர்: 27-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 27-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகி சிம்ம லக்கினக்காரர். அனுஷ நட்சத்திரம். பொறியியல் பட்டப்படிப்பை தனது 22 வயதில் முடித்தவர் உயர்நிலைக் கல்வியை அமெரிக்கா சென்று படிக்க விரும்பினர். அவருடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு உண்டா? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகிக்கு அவருடைய 24வது வயதில் கேது மகா திசை ஆரம்பம். தசாநாதன் தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். அந்த ராசி அதிபதி குருபகவான் 3ல் அமர்ந்து ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்க்கின்றார். அந்த இடம் வெளிநாட்டிற்கு பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் இடம். கேது பகவான் செவ்வாய்க்குரிய பலனை வழங்குவார். இந்த ஜாதகத்தில் செவ்வாய் ஒன்பதிற்குரிய நாதன். அவர் ஜல ராசியான விருச்சிகத்தில் சந்திரனுடன் அமர்ந்துள்ளார். கடல் கடக்கும் யோகம் உள்ளது. இந்த அமைப்புக்களால் ஜாதகி தன்னுடைய விருப்பப்படி வெளிநாடு சென்று படித்துத் தேறினார்.  அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 4-12-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

(i) Mars as the ruler of fourth and ninth houses, Kendra and Tri-kona, Mars becomes raja yoga karaka for Simma Lagna. In addition, sun and Mars are also friendly planets. (ii) Sun as the Lagna lord sitting with Mercury (ucham) in second house – Higher education possible on specialized subjects. (iii) Fourth and fifth house are important houses for foreign education. Since Mars is yoga karagan for Simma Lagna who is also ninth house owner sitting in fourth house looking tenth house and eleventh house Rahu, chances of higher education in foreign land is possible. (iv) Kethu also represents foreign graha chances of higher education in foreign land is possible. (v) Moon being (12th house owner- placement for foreign land) sitting with Mars in 4th house, even though moon is Neesam in Viruchiga house (vi) Jupiter is looking at ninth house and Rahu are one of the reason for foreign trip. (vii) 12th House lord Moon and 9th House lord Mars are together in fourth house then it will support in abroad settlement.
----------------------------------------------------------------------------
2
Rajam Anand commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

5 hours ago
அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள் புதிரிற்கான விடை ஜாதகர் 23-9-1982ல் பிறந்துள்ளார். ஜாதகர் வெளிநாடு செல்லவேண்டுமாயின் அவரது 8ம் பாவகமோ, 12ம் பாவகமோ சுபத்துவமாக இருக்கவேண்டும். 8ம் பாவகம் - 8ம் பாவகாதிபதி தனது எதிரி துலாம் ராசியில் சுக்கிரனின் வீட்டிலிருக்கின்றார். 12ம் பாவகம் - விரயஸ்தானம், சந்திரன் நீச்சம், வளர்பிறை சந்திரனாக இருந்தாலும், சனியின் 3ம் பார்வையினால் கெடுக்கப்படுகின்றார். மேற் சொன்ன காரணத்திற்காக, ஜாதகரிற்கு வெளிநாட்டிற்கு போகமுடியவில்லை. அன்புடன் ராஜம் ஆனந்த்
----------------------------------------------------------------------------
3
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி சூரியன் இரண்டில் 2.ஒன்பதாம் வீட்டின் மீது சூரியன் புதனின்(காரகர்களின் ) பார்வை இல்லை,ஆகவே மேல்நாட்டு வாய்ப்பு ஜாதகருக்கு இல்லை மேலும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் அந்த இடத்திற்க்கு எட்டில் ஆகவே உள்ளுரிலே மேல்படிப்பிற்கு வாய்ப்புள்ளது நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
------------------------------------------------------------------------
4
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

வாத்தியாருக்கு வணக்கம், அம்மணியின் ஜாதகத்தில் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்காரர்கள் ஒன்றாக கேந்திரத்தில் அதுவும் நான்காம் வீட்டில். ஆகவே இவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்வி சாத்தியமாகும். மேலும் கேது ஐந்தாம் வீடான பாக்கியஸ்தானத்தில் மற்றும் ராகு பதினோராம் வீடான லாபஸ்தானத்தில். இந்த அமைப்பும் இவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். கே ரவி
-------------------------------------------------------------------------
5
தமிழ்ச்செல்வன், மாச்சம்பட்டு commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

ஐயா வணக்கம், பதில்: 1. சந்திரனுடன் 9 ஆம் அதிபதி செவ்வாய் கூட்டனியில் வெளி நாட்டு மேற் படிப்பை உறுதி செய்தார். 2. மூன்றாம் வீட்டில் அமர்ந்த குருவின் ஏழாம் பார்வை 9 ஆம் வீட்டின் மேல், வெளி நாட்டு மேற் படிப்பு ஊறுதி. 3. விரையாதிபதி சந்திரன் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் கூட்டனி
----------------------------------------------------------------------------
6
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

Dear Sir, The given horoscope person's 4th lord Mars is situated in 4th along with 12th lord Moon. Since 12th lord moon is debiliated and joint with 4th lord, she can go to foreign settlement easily. Also the mercury is exalted in 2nd place helped her during mercury dasa. 9th lord also Mars is having connection with 12th lord. Hence definitely she will go to foreign for her studies. Thanking you,.
--------------------------------------------------------------------------
7
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?"

2 days ago
ஜாதகி 23 ஸெப்டெம்பர் 1982ல் காலை 4 மணி 3 நிமிடம் போலப் பிற்ந்தவர்.பிற‌ந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன். லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாய்(யோககாரகன்) நான்காம் இடத்தில் ஆட்சியில் அமர்ந்து ,12ம் அதிபன் சந்திரனுடன் சேர்ந்த‌து;9ம் இடத்திற்கு 5ம் அதிபன் குருவின் பார்வை.குரு மேல் படிப்பிற்கானவர் அவருடைய பார்வை வெளிநாட்டிற்கான 9ல் படுவது.புதன் உச்சம், திரிகோணம் பெற்று விளங்குவது. ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும்.காலசர்பதோஷம். கேது தசா அடுத்து வருவது. இவையெல்லாம் சேர்ந்து ஜாதகியை வீட்டை விட்டு வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லும். எனவே ஜாதகி வெளிநாட்டுப் படிப்பு விருப்பம் நிறைவேறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
=================================================================





வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.20

Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?


Astrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை?

ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். சிம்ம லக்கினக்காரர். அனுஷ நட்சத்திரம். பொறியியல் பட்டப்படிப்பை தனது 22 வயதில் முடித்தவர் உயர்நிலைக் கல்வியை அமெரிக்கா சென்று படிக்க விரும்பினர். அவருடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு உண்டா? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.20

ஆர்வமும் திறமையும் ஆகிய இரண்டில் எது முக்கியம்?


ஆர்வமும் திறமையும் ஆகிய இரண்டில் எது முக்கியம்?

*"ஆர்வமும்,திறமையும்..''*

தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால்,  ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்து விடாது. 

*எனவே திறமையில் சறுக்கல்கள் வரும்போது ஆர்வத்துக்குச் சற்றே அணை போட்டு விட வேண்டும்.* 

திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக் கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதைப் முதன்மை துறையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர்வம் அதிகமாக உள்ளதை இழந்து விடாமல், பொழுது போக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக் கொள்ளலாம்.

ஆர்வம் மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே தங்களது திறமையைக் கண்டு கொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு  சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.

ஒரு சிங்கம் ஒன்று ஒரு காட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.. அதற்கு ஒரு ஆசை. தன் காட்டில் வாழ்கின்ற மிருகங்களில் எதற்கு அதிக திறமை இருக்கிறது என்று சோதிக்கப் பார்க்க விரும்பியது..

அன்று மாலை காட்டில் உள்ள எல்லா மிருகங்களை அழைத்து தான் நடத்தப் போகும்  சோதனையை விளக்கி, நாளை காலையில் எல்லா மிருகங்களும் என் கூட்டுக்கு வர  வேண்டும் என்று சொல்லியது.

அன்றிரவு மிருகங்கள் யார் அந்த திறமைசாலி என்று குழம்பிக் கொண்டே உறங்க சென்றன!!!!  காலையில் சிங்கம் நம் திறமையை எப்படி சோதனை செய்யப் போகிறதோ?  என்ற  கவலையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தின் இருப்பிடத்துக்கு வந்தன..கூண்டில்இருந்து வெளியே வந்த சிங்கம் அங்கு கூடி இருந்த மிருகங்களை பார்த்து,  "அதோ தொலைவில் தெரிகிறதே, அந்த பனை மரத்தின் உச்சிக்கு யார் முதலில் சென்று வருகிறீர்களோ,  அவரே சிறந்த திறமைசாலி என்றது.

திகைத்துபோன மிருகங்கள் மரத்தை நோக்கி ஒடி சென்றன. அதில் ஏறத் தொடங்கின. முதலில் மரத்தின் உச்சியை அணில் தொட்டது. 

மற்ற எவற்றாலும் பாதி உயரம் கூட ஏற முடிய வில்லை. வெற்றி பெற்ற அணிலோடு காட்டின் தலைவனான தான் போட்டி இடப் போவதாக அறிவித்தது சிங்கம்..

ஆனால் அந்த சிங்கத்தால் மரத்தில் ஏற முடியாமல்  தோல்வியைத் தழுவியது. 

குழம்பிப்போன சிங்கம் ஒவ்வொரு மிருகத்திடமும் அதனதன் திறமையை கேட்டு அறிந்தது. சிறுத்தை நன்றாக ஓடுவேன் என்றது. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவேன் என்றது.யானை நான் அதிக எடையை சுமப்பேன் என்றது

 இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டது சிங்கம் திறமையை சோதிக்க அனைவருக்கும் ஒரே மாதிரி போட்டி வைத்த தனது மடமையை எண்ணி வருந்திய சிங்கம்,பின்னர் தெளிவு அடைந்தது..

ஆம்.,நண்பர்களே..,

*ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான்  தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.* 

*எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது..*

*ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்து விடும்..*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.20

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்...

அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் 
உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம்...நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்.  ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை 
அவதிக்கு உள்ளாக்குகின்றன...

ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்னாகுமோ என்ற அச்ச விளைவு...

வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்...

உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை ஊழியர்களுக்கு மன இருக்க மேலாண்மை குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்...

எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்...

குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகின்றார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்...இந்த கையில் வைத்திருக்கும் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கும் என வினவினார்...? 

எல்லோரும் ஒவ்வொரு அளவைக் கூறினார்கள்...

நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றேனும் உறுதியாக இருக்கும். ஆனால்!, நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க இயலும்...

ஒரு விநாடிகள் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும். அனால்!, நாள் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என ஆலோசியுங்கள்...

நம் கவலையும் இப்படித் தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு சில மணிநேரம் என்றால் மனதை பாதித்துவிடும்...

எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் 
ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இந்த
உரையை கேட்ட அரங்கம் கரவோசைகளால் 
நிரம்பியது...

*ஆம் நண்பர்களே...!*

*கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஆகவே!, நீங்கள் ஒருபோதும் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள்...!*

🔴 *நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்...!!*

⚫ *எனவே!, மனதில் உள்ள கவலையை களைத்து எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து கொண்டாடுங்கள்...!!!*

*எதுவுமே இல்லையென்ற கவலையே வேண்டாமே...*

மகிழ்ச்சி என்ற ஒன்று இருந்தால் அனைத்துமே இங்கு சாத்தியம்.
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.20

டி.வி.சுந்தரம் அய்யங்கார் என்னும் மாமனிதர்!


டி.வி.சுந்தரம் அய்யங்கார் என்னும் மாமனிதர்!

’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.

ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.

1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) பிறந்தார். திருச்சூரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.

கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார்.தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.

25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!

அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.

வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.

சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.

புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாகனங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பாகங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.

1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.

முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?

குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.

புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.

இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!

ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.

தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.

பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.

குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!

ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.

‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்! ஐடியாவுக்குப் பரிசு!

சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனைகொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா
காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்துள்ளார்.

 தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில்தன்னைஈடுபடுத்திக் கொண்டார். இந்திய அரசு தி.சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது .

வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக்
கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார்  .ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில்கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல்
அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

T.V சுந்தரம் ஐயங்கார் அவர்கள் பிறந்துவளர்ந்த ஊர் திருநெல்வேலி திருக்குறங்குடி.இவரது பெயரில் . பள்ளிக்கூடங்கள் , ஸ்பின்னிங் மில்கள் இன்றளவும் இயங்கிகொண்டிருக்கிறது.

வாத்தியார் படித்ததில் பிடித்தது சரி.... அந்தப் புராணம் இங்கே எதற்கு?
கண்ணா...அந்த நிறுவனத்தில் அடியவன் 15 ஆண்டுகள் பணி செய்துள்ளேன். அந்த விசுவாசம்தான் ....வேறென்ன?
பணி செய்த காலம் ஆகஸ்ட் 1966 முதல் ஜூன் 1980 வரை (15 ஆண்டுகள்)
----------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.11.20

அறிவின் முதிர்ச்சி! - Maturity of knowledge!



அறிவின் முதிர்ச்சி! - Maturity of knowledge!

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன் என்று...!!

இதுதான் அறிவின் முதிர்ச்சி...!!

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுது கூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்.. மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....!!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.20

Astrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, சுவாதி நட்சத்திரக்காரர். அத்துடன் மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அவருடைய 55 வயதில் இருந்து, மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவர் அவதிப்பட்டார்!!! அந்த வயதிற்குப் பிறகு அவ்வாறு அவதிப்பட அதாவது துன்பப்பட் ஜாதகப்படி என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: தசா நாதன் கேது 12ல் இருப்பதோடு, லக்கினாதிபதி கேதுவையும் அணைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வையையும் பெறுகின்றார். செவ்வாய் ஆறாம் வீட்டில் வலிமையாக உள்ளார். 8ஆம் வீட்டுக்காரர் சனீஷ்வரனும், 7ம் அதிபதி (மாரக அதிபதி) குருபகவானும் 12ம் வீட்டிலுள்ள கேதுவையும் லக்கினநாதனையும்  பார்க்கின்றார்கள். இதுவே உடல் நலக்குறைவிற்கும் மற்ற துன்பங்களுக்கும் முக்கிய காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 27-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
jaga.gm commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
குருவிற்கு வணக்கம்! மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு காரணம் 1) 54 வயது கேது தசை படுத்தி எடுத்து இருக்கும் 7 வருடம் மன அழுத்தம்.தந்து இருக்கும்.., லக்கினாதிபதி புதன் 12 இல் 3) 2 இம் அதிபதி சூரியன் அம்சத்தில் தன் வீட்டற்கு 12 இல், ராசியில் சூரியன் ஆட்சி, இரு புறம் சனி கேது , பணம் தடை பட்டு இருக்கும் 3) 6 இல் ராகு செவ்வாய் தோல் சம்பந்த நோயி வந்து இருக்கலாம் , அம்சத்தில் செவ்வாய் தன் வீட்டற்கு 12 இல், யோககாரகன் சுக்கிர தசை வந்த பிறகு நல்ல இருந்து இருக்கும் சுக்கிரன் வர்கோத்தமம் உச்சம் . நன்றி ஜெகதீசன்
----------------------------------------------------
2
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
1. ருன ரோக சத்ரு ஸ்தானாதிபதி செவ்வாய் 6ம் இடத்தில் இருந்து 7 ம் பார்வை லக்னாதிபதி மேல். மேலும் நீச ராகு பார்வை நீச கேது மற்றும் புதன் மேல். சனியின் பார்வை புதன் & கேது மேல். 2. செவ்வாயின் 8ம் பார்வை லக்னத்தின் மேல். 3. லக்னாதிபதி 12 ல் மறைவு மற்றும் கேது கூட்டணி. கேது தசையில் பாடாய் படுத்தி உள்ளது. இந்த துன்பம் புதன் தசை கேது புத்தியில் ஆரம்பம் ஆகி இருக்கலாம். 4.பின் வரும் சுக்கிரன் மற்றும் சூரிய தசையில் நிலைமை சிறிது மாறலாம். 5. ஜாதகத்தில் குரு நீசம், 6. சூரியன் மற்றும் சுக்கிரன் உச்சம் ஆறுதலான அமைப்பு பிற் காலம் ஓடி விடும் அந்தந்த தசையில்.
-----------------------------------------------------
3
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஜாதகர் 26 எப்ரல் 1937 காலை 10 மணி 11 நிமிடம் போல் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன். 1. லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் லக்கினத்திற்கு நோய் ஸ்தான 6ம் அதிபதியான செவ்வாயின் பார்வை. ஆட்சி பெற்ற செவ்வாயின் பார்வை பகைவனான புதன் மீது. 2.லக்கினாதிபதி புதனும், தன ஸ்தானாதிபதி சந்திரனும் 6 க்கு 8 என்ற நிலையில். 3.54 வயதுக்கு கேதுதசா துவங்கிவிட்டது. சனி, செவ்வாய் பார்வை பெற்ற கேது 12ல்.மற்றும் லக்கினாதிபதி புதன் 12ல் மறைந்து செவ்வாய் சனி பார்வை பெற்றது. 4. எனவே 55 வயது போல கேது தசாவில் உடல், மன, தன கோளாறுகள் தோன்றி ஜாதகரை அலைக்கழித்தது.
--------------------------------------------------------------------------
4
தமிழ்ச்செல்வன், மாச்சம்பட்டு commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா, வணக்கம், பதில்: 1. லக்னாதிபதி புதன் 12 ல் மறைவு பெற்று, 52 வயதுக்கு மெல் வந்த லக்னாதிபதியின் தசையில் ஜாதகரை படுத்தி எடுத்தி விட்டார். 2. மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று சந்திரனை ஏழாம் பார்வையாக பார்த்து மன நிம்மதியை கெடுத்தார். 3. ஆட்சி பெற்ற 6 ஆம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் கூட்டு சேர்ந்து ல்க்னாதிபதியுடன் சேர்ந்த கேதுவின் மீது பார்வை, ஜாதகருடைய உடல் நலனை கெடுத்தார்.
---------------------------------------------------------------------------
5
Unknown commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா ஜாதகரின் லக்னாதிபதி புதன் 12ல் உடன் கேது, இந்த அமைப்பின் பலன் அவரின் கேது தசையில் நடந்தது. பணம் மற்றும் உடல் மற்றும் பண பிரச்சினைக்கு காரணம் 11-ம் அதிபதி செவ்வாய் 6-ல் அமர்ந்தது. நன்றி.
------------------------------------------------------------------------
6
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்.கேது தசையில் பிரச்சினை. 6 ஆம் அதிபதி செவ்வாயின் பார்வை மற்றும் சாரம். ஏழரைச்சனி வேறு.
------------------------------------------------------------------
7
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி புதன் விரயத்தில் நீச கேதுவுடன் ஆறாம் அதிபதி செவ்வாயின் நேரடி பார்வையில் 3 .ஜாதகரின் இரண்டாம் அதிபதியும் மனகரகனும் சந்திரன் 4 .ஐம்பத்தி ஐந்தாவது வயதில் கேது திசை சந்திர புத்தியில் பண தட்டுப்பாடு மனஅழுத்தம் ஆறாம் இடத்தானின் பார்வையால் ஏற்பட்டுஉள்ளது நன்றி, தங்களின் பதிலை ஆவலுடன்
--------------------------------------------------------
8
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
20/11/20 புதிருக்கு பதில். ஜாதகர் சுவாதி நட்சத்திரம் மிதுன லக்னம். ஜாதகரின் 55 வயதில் ஆரம்பித்த கேது தசையில் கேது ஆறுக்குடைய ஆட்சி பெற்ற செவ்வாயின் பார்வை பெற்று உள்ளார். மேலும் பாதகாதிபதி குரு பகவான் நீசம் பெற்றாலும் அவரின் பார்வை நன்மை செய்ய இயலாமல் போய்விட்டது. எட்டுக்குடைய சனிஷ்வரனார் விரயாதிபதியுடன் இணைந்து பார்க்கிறார். சந்திரன் பெளர்ணமி தினத்தில் இருப்பதும் தனக்கு எதிரான நட்சத்திர காலில் இருப்பதும் ஜாதகரின் பொருளாதார மற்றும் மனரீதியான சிரமத்திற்கு காரணம்.
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.20

Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!


Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். சுவாதி நட்சத்திரக்காரர். அத்துடன் மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அவருடைய 55 வயதில் இருந்து, மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவர் அவதிப்பட்டார்!!! அந்த வயதிற்குப் பிறகு அவ்வாறு அவதிப்பட அதாவது துன்பப்பட் ஜாதகப்படி என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.20

இழப்பின் மறுபக்கம்!!!



இழப்பின் மறுபக்கம்!!!

*🦀🦀இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்🦀*

*🦀🦀இழந்தது எவை என இறைவன் கேட்டான்🦀*

*🦀🦀பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀*

*🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀*

🦀🦀கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்🦀

🦀🦀கோலம் மாறி *அழகையும்* இழந்தேன்🦀

🦀🦀வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்🦀

🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀

🦀🦀இறைவன் கேட்கையில்🦀

🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀

🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀

*🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀*

🦀🦀கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய்🦀

🦀🦀உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய்🦀

🦀"உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்"🦀

🦀🦀"நல்ல பண்புகளால் *எதிரிகளை* இழந்தாய்"🦀

🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀

*🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀*

*🦀திகைத்தேன் 🦀*

🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀

🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀

*🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀*

*🦀🦀இறைவன் மறைந்தான்..*🦀🦀

*🦀படித்ததில் பிடித்தது
-------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.20

முருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள்


முருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள் 

🙏ஒளவையாருக்கும் வள்ளலாருக்கும் என்ன.   ஒற்றுமை ?என்ன வேற்றுமை ? 🙏*

இருவரும்  இயற்றிய செய்யுள்களிலிருந்து இதை பதிவிடுகின்றேன்.

ஔவையார் இயற்றிய உலக நீதி செய்யுள். 

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் 
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதா¨வை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம் 

நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் 
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் 
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம் 
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் 

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் 
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் 
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம் 
சினந் திருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் 

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் 
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் 
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம் 
முற் கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த  ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார் பெருமானுக்கு வேண்டாம் என்ற எதிர்மறையான வார்த்தைகளை கூற விரும்பாமல் 'வேண்டும்','வேண்டும்' என ஒரு நேர்மறையான கருத்துக்களை கூறும் பாடலை பாடினார்

இது நடந்தது மிகவும் பழைய காலமல்ல,150 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம்  

பத்து வயது கூட நிறைவடையாமல்   ஒரு சிறிய மாணவனாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வள்ளலார் பெருமானுக்கு பிறவியிலேயே  ஞானம் மிகுதியாக இருந்தது.

ஒரு முறை அவரது ஆசிரியர் மாணவர்களுக்கு  ஔவையாரின் ஆத்திச்சூடியை சொல்லிக்கொடுக்கிறார் 

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"

மாணவனாக இருந்த வள்ளலார் மட்டும் ஆத்தி சூடியை சொல்ல வில்லை. 

ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது 

"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குற" 

"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா" என்கிறார் வள்ளலார்

ஆசிரியர் திகைத்தார்,அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே, 
சின்னஞ்சிறு பிள்ளையான வள்ளலார் கீழ்கண்டவாறு பாடுகிறார்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் 

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வமணியே. 

ஔவையார் 'வேண்டாம்' என எதிர்மறையாகவும்,வள்ளலார் 'வேண்டும்' என நேர்மறையாகவும் என நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள வேற்றுமை!

ஔவையாரும் வள்ளலாரும் நல்ல நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள ஒற்றுமை.

அதைவிட இருவருமே தமிழ்ஞான கடவுளான முருகனைப் போற்றிப் பாடியவர்கள்  என்பது இருவருக்குமுள்ள பெரிய ஒற்றுமை.

ஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?எனக்கேட்டு முருகப்பெருமான் தரிசனம் கொடுத்தார்.

வள்ளலார் முருகப்பெருமானை கண்ணாடியில் கண்டு வணங்கினார். 

ஔவையார், வள்ளலார் இருவருமே சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முருகப்பெருமானிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது மறுக்க முடியாத ஒற்றுமை!
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.20

மனதை நெகிழ வைத்த தீர்ப்பு!!!!


மனதை நெகிழ வைத்த தீர்ப்பு!!!!

அமெரிக்காவிலுள்ள  ஒரு  நீதிபீடம்.
---------
பதினைந்து வயதான சிறுவன் குற்றவாளி .!

ஒரு கடையிலிருந்து ஆகாரம் திருடியதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது.

குற்றம் செய்த குழந்தையோடு நீதிபதி வினவினாா்..

நீ  உண்மையாகவே  திருடினாயா ?

ஆம் ! .Bread  chess  pocket .அந்த குழந்தை கீழே பாா்த்து பதில் சொன்னது.

நீதிபதி :  நீ எதற்காக திருடினாய் ?

குழந்தை :  எனக்கு அது தேவைப் - பட்டது ..

நீதிபதி :  பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..

குழந்தை :  கையில் பணம் இல்லை ..

நீதிபதி :  வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..                

குழந்தை :  வீட்டில் அம்மா மட்டும உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் ..ஒரு வேலையுமில்லை அவருக்காக திருடினேன் ..

நீதிபதி :  நீ வேலை ஒன்றும் பாா்க்க வில்லையா ?

குழந்தை :  நான் ஒரு காா் கழுவும் இடத்தில் வேலைப் பாா்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் என் தாயாரை கவனிப்பதற்காக நான் விடுமுறை எடுத்ததால் என்னை 
அந்த வேலையிலிருந்து நீக்கி விட்டனா்.

நீதிபதி : நீ யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாமல்லவா ?

குழந்தை : நான் காலையில் வீட்டை விட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம் ஆளுகளிடம் நடந்துசென்று வேலை கேட்டேன் யாரும் எனக்கு வேலை தரவில்லை. நான் நம்பிக்கை 
வைத்தது எல்லாம் அஸ்த்தமித்தது.இறுதியில் இதை செய்யவேண்டிய சூழ்நிலையில் ஆளாக்கப்பட்டேன்.

பிறகு வழக்கின் வாக்கு வாதம்  முடிந்தது. நீதிபதி தீர்ப்பு அறிவிக்க தொடங்கினாா்.  இது மிகவும் உணா்ச்சிபூர்வமான திருட்டு. ரொட்டி திருடிய குற்றம் என்பதில்
சந்தேகமில்லை. இந்த குற்றத்திற்கு நாம்தான் பொருப்பு ஏற்கவேண்டும் என்னையும் சோ்த்துதான். நீதி மன்றத்திலுள்ள அனைவரும் குற்றவாளியே ! 

அதனால் நீதி மன்றத்திலுள்ள ஒவ்வொருவரும் நான் உள்பட அனைவரிடத்திலிருந்தும் பத்து டாலா் வசூலிக்கப்படவேண்டும் . இதை கொடுக்காமல் இங்கிருந்து
வெளியே செல்லக்கூடாது.

இதை  கூறிய நீதிபதி பத்து டாலரை எடுத்து மேசை மீது வைத்தாா். பிறகு பேனாவை எடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தாா்.

பட்டினியால் திருடிய அந்த குழந்தை மீது மனித சினேகம் இல்லாத விதத்தில் நடந்தும், குற்றம் சுமந்தி போலீஸில் ஒப்படைத்து கொடுத்த கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா்
அபராதம் விதிக்கப்பட்டது. 24 மணிக்குா்குள்ளில் அபராத தொகை கட்டவில்லை என்றால் கடை முத்திரை போடப்பட்டு நிரந்தரமாக மூடப்படும் என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம் வழங்கியது.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி மன்றத்தில் ஆஜா் ஆன அனைவரும் திகைத்து நின்றனா்.ஆனந்தக் கண்ணீா் வடித்தனா்.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பாா்த்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.

நீதிபதி தன்னில் மறைத்து வைத்த கண்ணீர் அவரை அறியாமல் கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.

நேர்மையும், நியாயமும் நிறைந்த மனித சினேகித நீதிமான்கள் நீதி பிடத்தின் துலாசை துல்லியமாக்கி நாம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள்.
------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.11.20

Astrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் சதய நட்சத்திரக்காரர். அத்துடன் மீன லக்கினக்காரர்.14 வயதில் இருந்து 24 வயதுவரை, தன் தாய் வீட்டில் இருந்த காலத்தில் அனைவரிடமும் எரிச்சலோடு எதற்கெடுத்தாலும் வாக்கு வாதம் செய்வார். அத்துடன் கடுமையான வாய்ச்சண்டையும் போடுவார். மாட்டுபவர்களை கடைசிவரை விடமாட்டார். என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் வில்லன் ஆறாம் வீட்டு அதிபதி சூரியன் உச்ச பலத்துடன். அத்துடன் அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். மனகாரகன் சந்திரன் 12ல் கேதுவுடன் கூட்டணி.மேலும் சனீஷ்வரன் மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையுடன். அம்மணியின் குணக்கேட்டிற்கு இதுதான் முக்கிய காரணம். அத்துடன் ராகு திசை வேறு நடந்தது. இவைதான் முக்கிய காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

பிறகு குரு திசையின்  மத்தியில் அம்மணி குணவதியாக மாறிவிட்டார். குரு பகவான் லக்கினாதிபதி. அத்துடன் உச்சம் பெற்று 5ல் அமர்ந்துள்ளார். அவர் அம்மணியின் குணத்தை சீராக்கினார். அதைக் கவனியுங்கள்
.
இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 20-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
jaga.gm commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

9 hours ago
குருவிற்க்கு வணக்கம்! விடை 1) 2 ம் அதிபதி செவ்வாய் அவர் வீட்டுற்கு 12 இல் , லக்கண செவ்வாய் , வாய் திறந்தாள் சண்டைத்தான் , பிடிவாதம் , 12 இல் சந்திரன் மனம் தடுமாறட்டம் , 7இம் அதிபதி புதன் நீச்சம் எதிர் ஆள் பிடிக்கவிளை , 4 அதிபதி புதன் நீச்சம் படிப்பு பார்தி பேசினால் கோபம் . குரு , சந்திரன் 6/8 பார்வை. நன்றி ஜெகதீசன்
------------------------------------------------------------------
2
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

14 hours ago
ஜாதகி 22 ஏப்ரல் 1979 அன்று காலை 5 மணிபோல பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன். ஜாதகிக்கு இரண்டாம் இடத்தில் உச்ச சூரியன் சூரியன் ஜாதகிக்கு 6ம் இடத்துக்கு உரியவர்.பகை வீட்டுக்காரர் சூரியன். 6க்குடையவர் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சமும் பெற்றதால் சூடான சொற்கள் வாயில் இருந்து வரும்.அந்த 6ம் இடத்தில் ராகுவும் சனைச்சரனும்.ராகுதசாவும் 17.5 வயதுவரை. எனவே எல்லோருடனும் சண்டை. வாக்கு ஸ்தானதிபதியும் செவ்வாய். அவரும் சூடானவர். அவர் தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது 8ம் அதிபனுடன் சேர்ந்தது எல்லாமும் சண்டக்கோழியாக ஜாதகியை மாற்றியது.5ம் வீட்டுக்காரரான சந்திரன் தன் வீட்டுக்கு 8ல் அமர்ந்து கேது சம்பந்தப்பட்டதும் மனம் ஒரு நிதானம் இல்லாமலிருக்க வைத்தன‌.ராகுதசா சூரிய புக்தியில் துவங்கி குரு தசா கேது புக்தி வரை 10 ஆண்டுகள் இந்த நிலை இருந்தது.
--------------------------------------------------------------
3
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

14 hours ago
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி குரு ஐந்தில் 2 /இரண்டில் செவ்வாய் 3 .ஐந்தாம் அதிபதி மனோகாரகன் சந்திரன் சனி மற்றும் ராகுவின் நேரடி பார்வையில் தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி
-----------------------------------------------------------------------
4
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

17 hours ago
23/11/20 புதிருக்கு பதில். ஜாதகர் வாக்கு ஸ்தானத்தில் இயற்கை பாபரனா ஆறாம் அதிபதியாக உள்ள சூரியன் சுபபலமின்றி உள்ளார். மனோகாரகனான சந்திரன் கேதுவுடன் கிரகண தோஷம் பெற்று சனி பார்வையில் உள்ளார் . எனவே ஜாதகர் வரட்டு பிடிவாதம் உள்ளவராக இருப்பார்.
--------------------------------------------------------------------------------------
5
Jaichandhran commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

17 hours ago
ஜாதகர் இரண்டம் இடத்தில் ஆறுக்குடைய சூரியன் உச்சம் ஆகிறார். அவருடைய 10 வயது முதல் 14 வயது வரை குரு தசை சுக்ர, சூர்ய புக்திகள் இருக்கும். ஜாதகர் அஷ்டமாதிபதி சுக்கிரன் மூன்ருகுடையார் ஆகிறார் எனவே பிடிவாத குணம் உச்ச சூரியன் பிடிவாத பேச்சு. மனோகாரகன் கேது பிடியில் சனியின் பார்வை மட்டும் புத்தி காரகன் நீச்சம் மற்றவரின் பேச்சை கேட்காமல் இருக்க காரணம்
-----------------------------------------------------------------
6
arun commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Yesterday
வணக்கம் வாத்தியார் ஐயா, 2ஆம் இடம் வாக்கு ,பேச்சு  ஸ்தானம் , 2க்குடைய செவ்வாய் லக்கினத்தில் , 6ஆம் அதிபதி சூரியன் 2இல் , 6இல் தசா நாயகன் ராகு , சனி பகவான் சேர்க்கை .  சனி பகவான் வர்கோத்தம் , 8ஆம் அதிபதி சாரம்.இந்த அமைப்பில் பிரச்சனை. மிக்க நன்றி  ஐயா. 
--------------------------------------------------------------------
7
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Yesterday
6th house belong to quarrel or fighting or dispute. When 6th house sun placed in 2nd house then person will not have good relationship with his family or friends. 2nd house belong to wealth and 6th house belong to enemy, disease, legal problems etc. When 6th house lord in 2nd house than native may loss his money through his enemy. 2nd house belongs to speech. When 6th house lord in 2nd house then the person may be false speaker. 6th house belong to argument, so native may be argumentative 2nd house owner is placed in 12th from second house These may be the main reasons. Guru in good place ucham in 5th house Mercury being 7th lord neesa Banga Raja yogam along with sukran may get changed her behaviour after her marriage during kethu/ or sukran bukthi.
-------------------------------------------
8
Selvaraj commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

2 days ago
ஐய்யா வணக்கம் 1)வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் ஆகிறார், 2)மனோகாரகன் சந்திரன் 12ல் மறைந்து கேதுவோடு இனைந்து உள்ளார், 3) 6ம் இடத்து அதிபதி (சூரியன்) 2ல் உள்ளார், 4)14வயது-24வயது வரை (ராகு திசை ஈற்றுக்காலம்-குரு திசை பாதி ஆறம்பகாலம்), ராகு சனியோடு இனைந்து 6ல் மறைந்து உள்ளார், 5)ராகு திசை ஈற்றுக்காலம் சிறமமாக இறுக்கும் என்ற என்னமும் உள்ளது, இவை அனைத்தும் காரணமாக இறுக்கலாம் நன்றி
---------------------------------------------------------
9
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Nov 13, 2020
வாத்தியாருக்கு வணக்கம் ஜாதகருக்கு 14 வயதில் ராகு தசையில் சூரிய புக்தி ஆரம்பமாகிறது. அடுத்து சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் இரண்டாம் இடத்தில் ஆறாம் வீட்டதிபதி சூரியன் உச்சம். இரண்டாம் வீட்டதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு பண்ணரண்டில் மனக்காரகன் சந்திரன் லக்னத்திற்கு பண்ணிரண்டில். ஆக மொத்தம் ராகு தசையில் கடைசி நான்கு வருடங்கள் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு. இரண்டாம் வீடு, பண்ணிரண்டாம் வீடு மற்றும் ஆறாம் வீடு கெட்டிருக்கிறது. இவையே ஜாதகரின் கடுமையான வாக்குவாதத்திற்கு காரணங்கள். .
---------------------------------------------------------
10
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!"

Nov 13, 2020
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: லக்னத்தில் செவ்வாய். 2 ஆம் இடத்தில் 6 ஆம் அதிபதி சூரியன் உச்சம். ராசிக்கு 2ல் செவ்வாய். ராகு தசை சூர்ய புக்தியிலிருந்து அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

ஓமந்தூரார் என்னும் மாமனிதர்


ஓமந்தூரார் என்னும் மாமனிதர்

*ஓமந்தூரார்* பற்றி பலருக்கும்  தெரியாது!

வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு...பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையே ...

தெரிந்து கொள்ளுவோம், இனியாவது ...

அரசியல் தலைமைக்கு அவர் ஆகாது போனது ஒரு காரணமென்றால் மீதிக் காரணம் முழுக்கவே அவராகவே இருந்தார்!

பதவி ஏற்ற அன்றைக்கே விளம்பரப் பிரிவை அழைத்து "நானும் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ஆகி விட்டேன்! ஒரு அரசு ஊழியனுக்கு என்ன செய்வீர்களோ அதை மட்டும்தான் எனக்கு செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டார்! அதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஒன்றோ இரண்டோதான் இருக்கிறது!

விளம்பரப் பிரிவுக்கு அவர் சம்பந்தபட்ட படங்களை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற பயம்! 

பாராட்டு விழா, சைரன் வைத்த கார், போலிஸ் அணிவகுப்பு, விளம்பரங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை!  மாலை மரியாதை, அன்பளிப்புகள், பொன்னாடைகள் எல்லாவற்றுக்கும் தடா!

பார்வையாளர்களுடன்  போட்டோவுக்கு போஸ் தருவது கிடையாது! அவ்வளவு ஏன், தட்டச்சர் சுருக்கெழுத்தில் எழுத உதவியாளர் எழுத இருக்கும் போது மட்டுமே தேவையிருந்தால் சந்திக்க அனுமதி! தனிமையாக சந்திக்க அனுமதியில்லை!

அவ்வளவு பெரிய மெட்ராஸ் மாகாண முதல்வருக்கு (தற்போது உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளடக்கிய ஆனால் திருவனந்தபுரம், ஹைதராபாத் இல்லாத இடம்) ஒரே போன்! அவர் அனுமதியோடே பேச வேண்டும்!

மாகாண முதல்வருக்கு ஒரே கார்! அதற்கான பெட்ரோல் அலவன்ஸை ஏற்க மறுத்து தன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வைத்தார்! 
   
கல்கி, சின்னஅண்ணாமலை உள்ளிட்ட நாற்பது பிரபலங்கள் அவரை சந்தித்து அந்த ஒரு  பாராட்டு விழாவிற்காவது ஒப்புக் கொள்ள கெஞ்சினர்!

"அரசு வீட்டில் குடியிருந்து கொண்டு, அரசு தரும் சம்பளத்தில் ஜீவிதம் செய்யும் அரசு ஊழியன் நான்! நான் பதவி விலகும் போது வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டார்! பதவி விலகியதும் கேட்டதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை!

இத்தனை எளிமையான மனிதர் அந்தப் பதவிக்கான மரியாதையை விட்டுக் கொடுத்தாரா? அதுதான் இல்லை!

மாகாண முதல்வர் என்பதாலே மாகாணங்களிலேயே முதன்முறையாக விமானம் வாங்கி "ஹனுமன்" என்றப் பெயர் சூட்டி டெல்லி பறப்பார்!
அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கும் நேரத்தில் பார்க்காமல் காலதாமதித்தால் எழுந்து வந்து விடுவார்!  ஒரு முறை மவுன்ட்பேட்டன் பிரபு "பத்து நிமிட காலதாமதத்துக்கு கோபித்துக் கொள்ளலாமா?" என்றார்!

"கோபம் ஓமந்தாரார் ராமசாமிக்கு, இல்லை சென்னை மாகாண முதல்வருக்கு" என்றார்! அடுத்த முறையிலிருந்து அங்கே அவருக்கு ராஜ உபச்சாரம்!

பதவியின் மாண்பை காப்பாற்றியதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமென்று நினைக்கிறேன்!
  
500 நாட்களில் அவர் பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளில் சில!

இனி உண்டா இத்தனை சாதனை?

1) கோபுர சின்னத்தோடான வாய்மையே வெல்லும்  இலட்ச்சினை!
2) பாரதியார் பாடல்கள் நாட்டுடமை!
3) தமிழ் கலைக்களஞ்சியம் வடிக்க ஏற்பாடு!
4) பள்ளிகளில் திருக்குறள் பாடம்!
5) எல்லா பள்ளிகளிலும் காய்கறி தோட்டம்
6) முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கியது!
7) பூரண மது விலக்கு!
8) ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் (இந்தியாவுக்கே முன் மாதிரி! விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்)
9) மடாதிபதிகள் திருத்த சட்டம் (பதவியை விட்டுப்போக இந்த இரு சட்டங்களும் காரணமாயிற்று)
10) தேவதாசி முறை ஒழிப்பு!
11) இந்து சமய அறநிலைத்துறை சட்டம்!
12) ஹரிசன நல வாரியம்!
13) ஹரிசன ஆலயப்பிரவேசம்!
14) ஒரு லட்சம் கிணறுகள் தோண்ட மானியம்!
15) ஏரி, குளங்கள் ஆழப்படுத்தி, பயன் கொண்டு வர 1947ல்,19கோடியில் திட்டம்!
16) அரசியல் தலையீடற்ற சுதந்திர நிர்வாகம்!
17) வருவாய்துறை சீரமைப்பு!
18) நிலவரி பாக்கி வைத்துள்ள ஜமீன்தார் ஜப்தி நடவடிக்கை சட்டம்!
19) வீடூர் அனைக்கட்டு, பெரியாறு நீர் மின்திட்டம், துங்கபத்ரா திட்டம் என இன்னும் நிறைய!
20) முதன்முறையாக அரசுக்கு பொருளாதார ஆலோசகர் நியமனம்!

சொல்லிக்கொண்டே போகலாம்! இடம்தான் போதாது!

ஐதராபாத்  நிஜாம் ஆளுமை கீழ் ரஜாக்கர்கள் என்றால் யார்.
  
அன்றைய ஹைதராபாத் சமஸ்தானம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து சேரும் அளவு நிலப்பரப்பு கொண்ட நாடு!

ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் தொகை! இதில் 86 சதவீதம் இந்துக்கள்! தனி நாணயம், தனி ராணுவம், தனி அரசாங்கம் என ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி விட்டு தன்னிச்சையாக ஆண்டார் நிஜாம் மன்னர்...

1937 யிலேயே, உலகின் புகழ்பெற்ற 'டைம்' அட்டைப் படத்தில் உலகின் பெரிய ஐந்தாவது பணக்காரர் என்று இடம் பெற்றார்!

86 மனைவிகள், 216 மக்கட் செல்வங்கள்! 1948ல் தோல்வியுற்று, இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க வானொலியில் பேசிய போது "என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ரஜாக்கர் தலைவன் காசிம் ரஜ்வியின் கைப்பாவை ஆகிப் போனேன்!" என்று சொல்லி, இரண்டு லட்சம் அப்பாவி மக்களின் உயிர் பலியிலிருந்து தப்பித்துக் கொண்டார்!

மத்திய அரசு அவருக்கு "ராஜ்யமுக்" என்ற விருதளித்தது!
    
ரஜாக்கர்களும், தெலுங்கானா கம்யூனிஸ்ட்டுகளும் சென்னை மாகாணத்தின் எல்லையை தாக்கப்போவதாக 1948 ஒருநாள் இரவு பத்துமணிக்கு ஓமந்தூராருக்கு தகவல் வந்தது!

ஓமந்தூரார் துளியும் யோசிக்கவில்லை, அடுத்த ஒரே மணி நேரத்தில் எட்டு இராணுவ விமானங்களை எல்லைப்பகுதிக்கு அனுப்பினார்!

ஆடிப்போனார்கள் ரஜாக்கர்கள்! நிஜாம் உடனடியாக மத்திய அரசுக்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினார்!

யாருடைய உத்தரவில் விமானங்கள் போனதென அமைச்சரவைக் கூடி கவலையோடு விவாதித்தது!

பட்டேலுக்கு முழு உண்மை தெரியும்! நேருவுக்கும் புரிந்திருந்தது! ஆக்ரோஷமான விவாதத்தில் பட்டேல், ரஜாக்கர் சதிச் செயலை சொல்லி தாம்தான் இராணுவ விமானங்களை அனுப்பியதாக சமயோசிதமாக சொன்னார்! நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!

கொலைகளும், கொள்ளைகளுமாக சமஸ்தானம் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது!

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவையும் காந்தியையும் எப்போதும் பிடிக்காத வின்ஸ்டன் சர்ச்சில், ஹைதராபாத் மக்கள் படுகொலையையும், நிஜாமின் செயல்பாடுகளையும் ஆதரித்து பேசினார்!

வெகுண்டெழுந்த ஓமந்தூரார் அண்டை மாகாண முதல்வர் என்ற முறையில் நீண்ட கண்டனக் கடிதம் எழுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டனுக்கு அனுப்பினார்!

மவுன்ட்பேட்டன் குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பினார்! முதல் இந்திய கவர்னர் ஜென்ட்ரலாக பதவியேற்ற பெருமை தமிழர் ராஜாஜிக்கு கிடைத்தது!

 ராஜாஜி பொறுப்புக்கு வந்தது ஓமந்தூராருக்கு யானை பலம் தந்தது!

1948 பிப்ரவரியிலிருந்தே உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஓமந்தூரார் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தார்!

கர்நாடக பெல்லாரி மாவட்ட ஹாஸ்பட் ரயில்வே பாலத்தை ரஜாக்கர்கள் தகர்க்கப் போகிறார்கள் என்றத் தகவல் ஓமந்தூராருக்கு கிடைக்கவே தீவிரமாக பாடுபட்டார்!

அந்தப் பாலம் தகர்க்கப்பட்டால் சமஸ்தானம் தனித் தீவாகி விடும்!

சென்னை அரசாங்க ரிசர்வ் படையும் மைசூர் காலாட்படையும் இரவுபகலாக ஓமந்தூரார் ஆனைக்கிணங்க காவல் காத்தது! 

இந்தியாவின் நாணயத்தை சமஸ்தானம் தடை செய்தது, தேசியக்கொடி பறக்க தடை விதிக்கப்பட்டது! 

இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லையென்றாலும், மைசூர், பம்பாய் மாகாணங்களையும் சேர்த்துக்கொண்டு சமஸ்தானத்தின் மேல் படையெடுக்க ஓமந்தூரார் முடிவெடுத்தார்!

அப்போதுதான் எல்லை பாதுகாப்புப் பணியிலிருந்த சென்னை அரசாங்க போலிசார், ரஜாக்கர்களிடம் இருப்பது போன்ற நவீன ஆயுதங்கள் தங்களிடம் இல்லாமல் எப்படி தாக்க முடியும் என்றார்கள்!

நிஜாம் ஆஸ்திரேலியாவிலிருந்து நவீன ஆயுதங்களை தருவித்திருந்தார்! அதை ஓமந்தூராரும் உளவறிந்து மத்திய அரசுக்கு தகவல் சொல்லியிருந்தார்! வழக்கம் போல் மத்தியஅரசு கண்டு கொள்ளவில்லை!

ஆயுதம் இல்லாமல் எப்படி போரிடுவது என்று யோசித்த ஓமந்தூரார் செயல்கள்தான் அவரை நிஜ ஹீரோ ஆக்குகிறது!

தன் யோசனைக்கு மத்திய அரசு தடைதான் விதிக்கும் என்பதை அறிந்திருந்த அவர், பட்டேலிடம் கூட மூச்சு விடவில்லை!

பெரம்பூரில் அப்போது ஒரு சாதாரண ரயில்வே தொழிற்கூடம் இருந்தது! அங்கு பணியாற்றிய நடராஜன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி செய்வதில் பயிற்சி பெற்றவர்!

அவரை அழைத்தார் முதல்வர்! அவரிடம் ஆஸ்திரேலிய துப்பாக்கியை தந்தார்! ஒரே நாளில் அதன் நுட்பங்களை நடராஜன் பிரித்து மேய்ந்து கண்டு வந்தார்!

துணிச்சலாக ஓமந்தூரார், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒதுக்குகிறேன், இரவுபகலாக துப்பாக்கிகள் தயாரியுங்கள் என்று உத்தரவு போட்டார்!

1945ல் டெக்ஸ்டூல் ஆலைக்கதிர் தொழிற்சாலை கோயம்புத்தூரில் செயல்பட ஆரம்பித்திருந்தது! அதன் உரிமையாளர் சுந்தரம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்! அவரிடம் பேசி, அந்த ஆலைக்கு அனுமதி தந்து இயந்திர துப்பாக்கிகள் செய்ய வைத்தார்! 

பாரதியாரின் கவிதைகளை நாட்டுடமை ஆக்கியவர் அல்லவா! தேசிய மகாகவியின் "வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்" பாடல் அவருக்கு மனப்பாடம்! அதில் வரும் "ஆயுதம் செய்யோம், கல்விச்சாலைகள் செய்வோம்" அவர் நினைவிலிருந்தாலும் சூழ்நிலை ஆயுதமும் செய்வோம் ஆக்கியது! 

செய்தியறிந்த நேரு, உடனே ஓமந்தூராரை கூப்பிட்டார்! ஆயுதங்கள் செய்ய யார் அனுமதியளித்தது என்று ஆவேசப்பட்டார்!

இம்முறை ஓமந்தூரார் கோபப்படவில்லை! "என் மாகாண மக்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை! அப்பாவிகள் உயிர்பலியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! இப்போது நான் உங்களிடத்தில் வந்திருப்பது ஆயுதம் தயாரிக்கும் அனுமதிக்காக அல்ல! ஆயுதம் தயாரிக்கும் நிதியுதவிக்காக! விரைந்து தந்தால் நலமாகயிருக்கும்!"

பண்டிட்ஜிக்கு கோபம் மறைந்து போனது! ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதராக ஓமந்தூராரின் யதார்த்த பேச்சைக்கேட்டு புன்னகைதான் வந்தது!
   
அப்படி ஒன்றும் உடனடியாக ஹைதராபாத் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடவில்லை! 

ஓமந்தூரார் வற்புறுத்தலிணங்க ராஜாக்கர்கள் படையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு எச்சரிக்கை தரவே 1948 ஏப்ரல் மாதத்திற்கு மேலாகியிருந்தது!

இதற்குள் ஒரு லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர்! பல்லாயிரம் கோடி சொத்துகள் சூறையாடப்பட்டிருந்தது!

இந்திய அரசின் எச்சரிக்கைக்குப்பிறகு இன்னும் நிலைமை மோசமானது! ஐம்பது லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் சமஸ்தானத்தை விட்டு வெளியேறி இருந்தனர்! 

நிலைமை மோசமாவதைப்பார்த்த நேரு, ஹைதராபாத் மேட்டரையும், காஷ்மீர் சங்கதி போல் ஐ.நா.சபைக்கு கொண்டு போய் விடலாம் என்றார்!
வெகுண்டெழுந்தார் பட்டேல்! நேருக்கு நேராக நேருவிடம் சண்டைக்குப் போனார்! இந்திய அரசாங்கத்தையே ஐ.நா.சபையிடம் ஒப்படைத்து விடலாமே என்றார்! கோபம் கொண்ட பிரதமர், 'நீங்கள் மதவாதி! அப்படித்தான் பேசுவீர்கள்' என்றாராம்!

கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் நேருவின் யோசனைக்கு ஒப்புக் கொள்ளாததோடு, இருவரையும் சமாதானப்படுத்தினார்!
மாதங்கள் ஓடியது! இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சம் ஆனது! 

பாகிஸ்தானிலிருந்து விமானங்களில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதை ஓமந்தூரார் சொல்லிக் கொண்டேயிருந்தார்!

சமஸ்தான நிர்வாகக் குழுவிலிருந்த ஜோஷி அதை உறுதி செய்த பிறகே நேருவுக்கு பயம் வந்து போர் தொடுக்க ஒப்புக்கொண்டார்!

நேரு ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணமும் சொல்கிறார்கள்!
காஷ்மீரைப் போலவே, கன்னியாஸ்திரிகளை சூறையாடிய சம்பவமும் ஹைதராபாத்தில் நடந்தது! அதில் 70வயது மூதாட்டியும் ஒருவர்! அந்த மூதாட்டியின் தாய்நாட்டு தூதர் நேருவுக்கு எழுதிய கடுமையான கண்டனக் கடிதமே நேருவை படையெடுப்புக்கு சம்மதிக்க வைத்ததாக சொல்கிறார்கள்!

போர்!

ஓமந்தூரார், ஆயுதங்கள் தயாரித்ததை பட்டேல் மென்மையாக சொல்லி தவிர்த்தார்!

தயாரித்திருந்த ஆயிரம் துப்பாக்கிகளை இந்திய அரசுக்கு தந்து விட்டு ஓமந்தூரார், "புற்று நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து" என்று கசப்போடு சொன்னார்!

1948 செப்டம்பர் மாதம்13ந் தேதி பம்பாய் மாகாண சோலாப்பூரிலிருந்தும், சென்னை மாகாண கர்நூலிலிருந்தும், விஜயவாடாவிலிருந்தும் இந்தியப் படைகள் சமஸ்தானத்தை தாக்கத் துவங்கின!

இதுதான் ஏற்கெனவே ஓமந்தூரார் வகுத்துத் தந்திருந்த திட்டம்! 

17ந் தேதியே சமஸ்தானப் படைகள் சரணடைந்து விட்டன! 32 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டாலும், 490 நிஜாம் வீரர்களும், 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டனர்!

*ஆபரேசன் போலோ*  ஐந்தே நாட்களில் சக்சஸ்! தற்காலிக கவர்னராக ஜெனரல் செளத்திரி பொறுப்பேற்றுக்கொண்டார்!

வலிமையான பாரதம் மட்டும் உருவாகவில்லை, நிஜாமின் திரண்ட சொத்துகளும் இந்தியாவுக்கு சேர்ந்தது!

அண்மையில் கூட லண்டன் வங்கியிலிருக்கும் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து இந்திய அரசுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்  தீர்ப்பு சொன்னது!

டெல்லி ரிசர்வ் வங்கி காப்பகத்திலிருக்கும் நிஜாமின் நகைகள் மதிப்பு ஐம்பதாயிரம் கோடி!

கோல்கொண்டா கோட்டை, கிருஷ்ணா கோதவரி நதிகள் என எல்லாமே இந்தியாவுக்கு சொந்தம்! 

சொத்துக்களும் நிலங்களும் கிடக்கட்டும்! இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையும், சமாதானமும், வளர்ச்சியும் தேசம் ஒன்றுபட்டதாலே கிடைத்தது! 

ஓமந்தூர் ராமசாமி மட்டும் இல்லையென்றால் இந்திய வரைப்படம் மாறியிருக்கும்,

எல்லாப்புகழும் அந்த ஒற்றை நாடி மனிதரையே சேரும்! கதர் தொள தொளா ஜிப்பா, நாலு முழ வேட்டி, கதர் அங்கவஸ்திரம், இரண்டு இட்லி, கப்அளவு சாதம், கொஞ்சூண்டு துவையல், மோர் என்று வாழ்ந்த மனிதனின் புகழை என் ஆயுள் உள்ளவரை சொல்லலாம்!

பட்டேல்தான் வெற்றிக்குப் பிறகு, ' _புற்று நோயை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தவர் *ஓமந்தூரார்*_' என்று புகழ்ந்தார்!

தனது தேச வரலாற்றை அறியாதவனை குடிமகனாக கொண்ட நாடு தலைநிமிர்ந்து நிற்ப்பதில்லை.

*அறிந்து கொள்வோம்*
--------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.20

அச்சாகி வந்து விட்ட வாத்தியாரின் அடுத்த புத்தகம்!


அச்சாகி வந்து விட்ட வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் ஜோதிடத் தொகுப்பு புத்தக வரிசையில் அடுத்த புத்தகம் அச்சாகி வந்து விட்டது.

தனி இணைய தளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த பாடங்கள் நீங்கள் படிப்பதற்கு ஏதுவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.

அதன் விபரம்

புத்தகத்தின் தலைப்பு: வகுப்பறை ஜோதிடம் தொகுதி 3 -  அஷ்டகவர்க்கப் பாடங்கள்

Lessons on Ashtakavarga

அஷ்டகவர்க்கம் தெரிந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம்

வாத்தியார் அடிக்கடி சொல்லும் அம்பானிக்கும் 337 பரல்கள் உங்களுக்கும் 337 பரல்கள் – நினைவிருக்கிறதா?

பக்கங்கள்: 224
அளவு : 1/8 டெமி
விலை: ரூ.250:00 (Digital Printing) கூரியர் தமிழ் நாட்டிற்கு ரூ.60:00 பெங்களூருக்கு ரூ.70:00 மும்பை மற்றும் டில்லி போன்ற தூரப் பிரதேசங்களுக்கு ரூ.100:00

குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் அச்சிடப்பெற்றுள்ளது. டிஜிட்டல் பிரிண்டிங்கில் அந்த வசதி உண்டு. முன்பு போல 1,000 பிரதிகள் அடித்து சுமக்க வேண்டாம். 50 பிரதிகள் வேண்டுமென்றாலும் அடித்துத் தருவார்கள். என்ன அச்சுக்கூலி இரண்டு மடங்காகும். 

காரணம் முன்பு போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போது இல்லை! குறைந்துவிட்டது. வாட்ஸப் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கம்

முன் பதிவு செய்திருந்தவர்களுக்கெல்லாம் புத்தகம் அனுப்பப்பட்டுவிட்டது

ஆகவே உங்கள் பிரதிக்கு நீங்கள் உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை எழுதி பதிப்பகத்தாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்
 பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

பதிப்பகத்தாரின் விலாசம்: 
Umayal Pathippagam
572- B Cross Cut Road
Near North Coimbatore Fly Over 
Coimbatore - 641 012
Phone No: 97877 71225
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும், வகுப்பறைக்கு வந்து செல்பவர்களுக்கும், சக பதிவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழத்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------------------
2. அறிவிப்பு

இன்று முதல் வகுப்பறையின் வாட்ஸாப் க்ரூப் செயல் படத்துவங்கியுள்ளது. முதல் நாளில் சுமார் 60 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். 250 பேர்களுக்கு மட்டும்தான் இடம் . உங்களுக்கான இடத்தை உடனே பிடியுங்கள். வாட்ஸாப் எண் 94430 56624 classroom2007 Group  என்பது அதன் பெயர்
வருக! வருக!

அதில் தினமும் ஒரு ஜோதிடக் குறிப்பு பதிவாகும்!


-------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.11.20

Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் அம்மணியின் ஜாதகம்!!!

ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். சதய நட்சத்திரக்காரர். அத்துடன் மீன லக்கினக்காரர்.14 வயதில் இருந்து 24 வயதுவரை, தன் தாய் வீட்டில் இருந்த காலத்தில் அனைவரிடமும் எரிச்சலோடு எதற்கெடுத்தாலும் வாக்கு வாதம் செய்வார். அத்துடன் கடுமையான வாய்ச்சண்டையும் போடுவார். மாட்டுபவர்களை கடைசிவரை விடமாட்டார். என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 15-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:



=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.11.20

30 வயதிற்குப் பிறகு என்ன ஆகும்?


30 வயதிற்குப் பிறகு என்ன ஆகும்?

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். 

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

 (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

 (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

 (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

 (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

 (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

 (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

 (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...

 நண்பர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்கள். 🙏🏻🙏🏻🙏🏻
=================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.20

என்ன நடந்தது அங்கே?


என்ன நடந்தது அங்கே?

சர்ச்சில் திருமணம்  ஒன்று நடக்க விருந்தது. 

பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். 

கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார்.

"இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன்.

இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்."

கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். 

கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கூட்டத்தில் ஒரே கசமுசா. 

அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?).

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள்.  

மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மகனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?).

கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. 

பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார்,

"மகளே! உனது ஆட்சேபனை என்ன?"

அந்தப் பெண் சொன்னாள், 

" ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"

படித்ததில் சிரித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.20

உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!


உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**

👽மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல்  & இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🍒வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
🍅கல்லீரல் & மண்ணீரல்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🍓மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

அதாவது நீங்கள் முயன்றால் உணவையே மருந்தாக்கலாம்
-------------------------------------------------------------
படித்ததில் தெளிந்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!