மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.21

Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 5



Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 5

முன்பொரு தினம் ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.

அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.




க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!

ஜாதகர் அகில இந்திய பிரபலம். வட இந்தியர்! திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்

முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!

சரியான விடை 1-10-2021 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.21

Astrology:ஜோதிடம்: புதிர் 3 : 27-9-2021 புதிருக்கான விடை!!!!



Astrology:ஜோதிடம்: புதிர் 3 : 27-9-2021  புதிருக்கான விடை!!!!

அந்த புதிரில் கேட்டிருந்த கேள்வி இதுதான்: ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? 

The Moon as well as Rahu have karakattwa over intoxicating drinks

அன்பரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதோடு செவ்வாயின் வலுவான பார்வையையும் பெறுகிறது. லக்கினாதிபதி சுக்கிரன் நீசமானதோடு 12ம் வீட்டில் (விரையத்தில்) இருக்கிறார், லக்கினத்தைக் கவனிக்க வேண்டிய வேலை சந்திரன் தலையில் விழுந்துவிட்டது. ராகுவின்சாரத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிட்டார். ஜாதகன் குடிமகனானதற்குக் காரணம் அதுதான்!!!!!

அடுத்த் வாரம் மீண்டும் நீங்கள் அலசுவதற்கான புதிர் ஒன்றுடன் நாம் சந்திப்போம்!!!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.9.21

Devotional திருத்தணி முருகன் வழித்துணை வருவான்!


Devotional திருத்தணி முருகன் வழித்துணை வருவான்!

இன்று முருகப்பெருமனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை. வாருங்கள் முருகனை வணங்கி வருவோம்!!!!

திருத்தணி முருகன் கோயில், (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

திருத்தணி முருகன் கோயில்

சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்

வரலாறு

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.

தல வரலாறு

தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கோயில் அமைப்பு

இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

திறக்கும் நேரம்

வழக்கமாக காலை 5:45 மணி முதல் இரவு 09:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில், கோயில் முழு நாளிலும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து, திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.

திருவிழாக்கள்
டிசம்பர் 31 - படித்திருவிழா
ஆடிக்கிருத்திகை
கந்தசஷ்டி
பங்குனி உத்திரம்
தைப்பூசம்
ஆடித் தெப்பத் திருவிழா

ஒருமுறை திருத்தணி சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.21

Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!


Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!

ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக் குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!



29-9-2021 புதன்கிழமையன்று சரியான பதில் வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.21

Astrology: ஜோதிடம்: நீங்களாகவே அலசுங்கள் பகுதி 2 புதிருக்கான விடை!!!

Astrology: ஜோதிடம்: நீங்களாகவே அலசுங்கள் பகுதி 2 புதிருக்கான விடை!!!

புதிரில் கேட்டிருந்த கேள்வி இதுதான். ஜாதகியின் திருமணம் அதீதமாக தாமதமானதற்கு  ஜாதகப்படி என்ன காரணம்? 

ஏழாம் வீட்டுக்காரன் சுக்கிரன் நீசம். சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் மட்டுமல்ல களத்திரகாரனும் கூட. அத்துடன் செவ்வாயின் பார்வையுடன் உள்ளான். மேலும் சனீஷ்வரனின் பார்வையும் உள்ளது. இவை எல்லாமாகச் சேர்ந்து ஜாதகியின் திருமணத்தை தாமதப்படுத்தி அவரை வாட வைத்துவிட்டன!!!! கோள்சாரக் குரு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தவுடன்  ஜாதகியின் திருமணத்தை நடத்தி வைத்தான்.

அதை மட்டும் கூறியுள்ளேன்

மீண்டும் வேறு ஒரு புதிருடன் மறுபடியும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.21

Astrology Quiz 22-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை


Astrology Quiz 22-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை

கொடுத்திருந்த ஜாதகம் L.K அத்வானி அவர்களின் ஜாதகம்!

அதை சரியாகக் கண்டு பிடித்துச் சொன்ன அன்பர்கள் மூவர்

1.சி.சுப்பிரமணியன்
2.ஹரிபிரசாந்த்
3. பி.ஜ

அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்/

மீண்டும் ஒரு புதிருடன் திங்கட்கிழமை {27-9-2021} அன்று சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.9.21

Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு - Part 2


Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு -  Part 2

கீழே ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அந்தப் பெண்னிற்கு 36 வயதுவரை திருமணம் கூடி வரவில்லை

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? 

அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு

அதிகமான கேள்விகள் இல்லை. ஒரே ஒரு கேள்விதான்

அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.21

Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 1


Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 4 

முன்தினம் ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.

 அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். 


க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!! 

ஜாதகர் அகில இந்திய பிரபலம். வட இந்தியர்! அரசியல்வாதி

முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்! 

சரியான விடை 24-9-2021 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் 

அன்புடன்

வாத்தியார்

------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.21

Devotional Post சுவாமிமலை திருக்கோவில்!


சுவாமிமலை திருக்கோவில்!

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப்பெருமானுக்கு உகநத நாள்

இன்று சுவாமிமலை கோவிலின் மகிமையைப் பார்ப்போம்!

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் இக்கோயிலை சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.

பெயர்க்காரணம்

முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன.

கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் (சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.

21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. இவ்விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

அருகில் உள்ள மற்றொரு முருகன் கோயில்

இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.

குடமுழுக்கு

2015 செப்டம்பர் 9 அன்று காலையில், இக்கோயிலில் இராஜகோபுரம், மூலவர் விமானம், சுவாமி அம்பாள் விமானம், மற்றும் பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.

அன்பர்களே, ஒருமுறை சுவாமிமலைக்குச் சென்று சுவாமிநாதனை தரிசித்து வாருங்கள். வாழ்வில். அனைத்து செல்வங்களும் அவன் அருளால் உங்களுக்குக் கிடைக்கும்

அன்புடன் 
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.9.21

Astrology ஜோதிடம்: அலசல் பாடம் பாரதியாரின் ஜாதகமும் எனது கேள்விகளும்!



Astrology ஜோதிடம்: அலசல் பாடம் பாரதியாரின் ஜாதகமும் எனது கேள்விகளும்!

நேற்று சுப்பிரமணிய பாரதியாரின் ஜாதகத்தைக் கொடுத்து உங்களிடம் 
2 கேள்விகள் கேட்டிருந்தேன்.

அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தேன்

அந்த இரண்டு கேள்விகள் இவைதான்

1. பாரதியார் ஏன் இறுதிவரை வறுமையில் வாடினார்?
2. அதிக நாள் உயிர் வாழாமல் 39 வயதிலேயே ஏன் மரணமடைந்தார்?

இவைகளுக்கு ஜாதகப்படி என்ன காரணம் அதை மட்டும் சொல்லுங்கள் என்றிருந்தேன்.

பலரும் அவருடைய ஜாதகத்தில் தனகாரகன் குரு பகவான் 12ம் வீட்டில் இருப்பதுதான் காரணம் என்று சொல்லியுள்ளார்கள்

அது பாதிதான் சரி!

முதன்மையான காரணம்: 4ம் வீட்டில் ராகு, மேலும் அந்த வீட்டின் மேல் சனியின் பார்வை. இரண்டு கிரகங்களுமாகச் சேர்ந்து அவருடைய வாழ்க்கையை சுகமில்லாமல் செய்துவிட்டன. வறுமையில் வாடவைத்துவிட்டன.

அவருடைய 39 வயது மரணத்திற்குக் காரணம். எட்டாம் இடத்துக்காரன் சனீஷ்வரன் அவனே ஆயுள்காரகனுமாவான் - அவன் நீசமடைந்திருப்பதால் நீண்ட் ஆயுளைக் கொடுக்கவில்லை. அவருடைய மரணத்திற்கு அதுதான் முக்கிய காரணம்

லக்கினாதிபதி 6ம் வீட்டில் அமர்ந்து அவருக்கு போராட்டமான வாழ்க்கையைக் கொடுத்துவிட்டான்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.21

Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!


Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!

கீழே சுப்பிரமணிய பாரதியாரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்


அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு

அதிகமான கேள்விகள் இல்லை. இரண்டே இரண்டு கேள்விகள்தான்

1. பாரதியார் ஏன் இறுதிவரை வறுமையில் வாடினார்?
2. அதிக நாள் உயிர் வாழாமல் 39 வயதிலேயே ஏன் மரணமடைந்தார்?

இவைகளுக்கு ஜாதகப்படி என்ன காரணம் அதை மட்டும் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.21

மனவளக் கட்டுரை: மருத்துவப் படிப்பு!


மனவளக் கட்டுரை: மருத்துவப் படிப்பு!

"உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி  குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு.* 

நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம். 
 
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? 

அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR  செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். 
நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது. 

1ST YEAR -1 ஆண்டு
2ND YEAR -1½ ஆண்டுகள்
3RD YEAR -1 ஆண்டு
FINAL YEAR -1 ஆண்டு
HOUSE SURGEON -1 ஆண்டு , 

 FAIL ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே ஆக மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். நடுவுல FAIL ஆனா, 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும்.

ஒரு MBBS மாணவன் 3RD YEAR படிக்கும் போது, அவனோடு 12படித்த நண்பன் TIER 1 கல்லூரிகளில் B.E , B. TECH இல் சேர்ந்தவன் "மச்சி நா கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டேன். மாசம் 50,000 சம்பளம் " என்று போன் பண்ணி சொல்லி depression ஆக்கி விடுவான். " நாம தப்பா MBBS எடுத்துட்டோமோனோ "நினைக்க வைத்து விடுவான். 

ஒரு வழியா MBBS முடிச்சு degree வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது ?
பெரிய மருத்துவமனைகளில் duty doctor ஆக பணியில் சேரலாம். மாசம் 25,000-30,000 கிடைக்கும். 
கிளினிக் ஆரமிச்சா "அவன் வெறும் MBBS டாக்டர், அவன்கிட்ட போவாத. MD டாக்டர் கிட்ட போ" னு ஒரு கேசும் வராது. 

சரி. MD படிக்கணும்னா, அதுக்கும் NEET நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு  2-3 வருஷம் PREPARE பண்ணனும். அதுக்கப்புறம் MD  சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். ( அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் rare) 

அதுக்குள்ள அந்த கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆன என்ஜினீயரிங் நண்பன், 10 வருஷம் நல்லா சம்பாரிச்சு, EMI ல கார் வாங்கிருப்பான். HOME LOAN போட்டு வீடு கட்டிருப்பான். இல்லனா USA/AUSTRALIA ல செட்டில் ஆயிருப்பான். 

சரி பரவால்ல, லேட் ஆனா என்ன ? அதான் MD முடிச்சாச்சே இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கும் னு நீங்க நினைக்கலாம். அங்க தான் ட்விஸ்ட். 

1.அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசு பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, " அதான் கிளினிக் ல நல்லா சம்பாரிக்கிராங்களே. இவனுங்க பாக்குற  வேலைக்கு இந்த சமபளம் போதாதா ?" என்று மருத்துவர்களை  திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்

2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால் அங்கே நாம் 12ஆவது முடித்தவுடன் குடுக்கும் பேட்டியில் செய்வதாக சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. HOSPITAL  POLICIES மற்றும் PROTOCOL களுக்கு கட்டுப்பட்டு தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது. 

3.இன்றைய கால கட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, கிளினிக் கட்டுவது ரொம்ப சிரமம். அப்படியே புதுசா கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒன்னு அரசு மருத்துவமனைக்கு போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள்.  கிளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5-10 வருடங்கள் ஆகி விடும் .

கிளினிக்கில் வெற்றி பெற,  புத்தக அறிவு மட்டும் போதாது, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செஞ்சாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி" 
அது இல்லைனு முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். கிளினிக் ல ஒக்காந்து ஈ தான் ஓட்டனும்.

அவ்வளவு ஏன் ? சாதாரண மக்களுக்கு கொரோனா இறப்பு சதவீதம் 2% . டாக்டர்களின் இறப்பு சதவீதம் 15%

எனவே பெற்றோர்களே,  நீங்கள் நினைப்பது போல மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது தினிக்காதீர்கள். " என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேணா என்று தெரியவில்லை " என்று NEET தேர்வுக்கு முதல் நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவச்செல்வங்கள்  இறப்பது மிகவும் வேதனையான விஷயம். 
வீட்டிலேயே உட்கார்ந்து 2 ஆண்டுகளாக NEET தேர்வுக்கு படிப்பதெல்லாம் மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்க கூடியவை. MBBS கிடைக்கலைனா, Genetic engineering, Robotics, Microbiology, Embryology, Agri போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிரகாலத்தில் மிகவும் most wanted படிப்புகளாக இருக்கப்போகிறது. 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, வானத்தை போல பிரபுதேவா போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள்.  ஆதித்ய வர்மா/அர்ஜுன் ரெட்டிய  நினைச்சுகோங்க. அதான் இன்றைய நிலை.

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS, MD
மன்னார்குடி🦚🔥🦚🔥🦚🔥🦚🔥
படித்ததில் பிடித்தது

--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.21

Astrology Quiz 14-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை


Astrology Quiz 14-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை 

கொடுத்திருந்த ஜாதகம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ஜாதகம்! 

அதை சரியாகக் கண்டு பிடித்துச் சொன்ன அன்பர்கள் நால்வர் 

1. மோகனசுந்தரம், திருநெல்வேலி

2 தேசி ஜெயகுமார்

3. ஹரிபிரசாத்

4.சுப்பிரமணியம்

அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்/ 

மீண்டும் ஒரு புதிருடன் வெள்ளிக் கிழமை {17-9-2021} அன்று சந்திப்போம் 

அன்புடன்

வாத்தியார்

================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.21

பழநியாண்டவர் திருக்கோவில்!

பழநியாண்டவர் திருக்கோவில்!

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப்பெருமானுக்கு உகநத நாள்

இன்று பழநியாண்டவர் கோவிலின் மகிமையைப் பார்ப்போம்!

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரக்கூடிய கோயிலாக இது உள்ளது. 

ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித் தருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற திருவிழாக்களின்போது 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். சாதாரண நாள்களில் 25,000 பேருக்குக் குறையாமல் வருகை தரக்கூடிய கோயிலாக பழநி உள்ளது. 

இதனால் சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், அன்னதான நன்கொடை அளித்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.


பக்தர்களின் இந்த அவதியைப் போக்குவதற்காக, ஆன்லைன் மூலமாக சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், வின்ச் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்காக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனால் பலமணி  நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்தத் திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றது. 
ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை தாராபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், மேற்படி நிறுவனம் ஆன்லைன் மூலமாக பக்தர்களிடம் பெறப்பட்ட தொகையில் ரூபாய் 25 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த இணையதளத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் வேறு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சுவாமி தரிசனம், தங்கரதம் இழுத்தல், வின்ச் டிக்கெட், அன்னதான நன்கொடை, தங்கத்தொட்டில் போன்றவற்றுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்துகொள்ளலாம். மீண்டும் ஆன்லைன் புக்கிங் தொடங்கியிருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை பழநிக்குச் சென்று பழநியாண்டவரை தரிசித்து வாருங்கள்!

வாழ்வின் எல்லா நன்மைகளும் அவர் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.21

Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 3


Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 3

முன்னதாக ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.

அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.




க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!

ஜாதகர் அகில இந்திய பிரபலம். தமிழ்நாட்டுக்காரர்

முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!

சரியான விடை 15-9-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.21

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின்  வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.21

Astrology Quiz 8-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை



Astrology Quiz 8-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை 

கொடுத்திருந்த ஜாதகம் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் ச்ச்சின் டெண்டூல்கர் அவர்களின் ஜாதகம்! 



அதை சரியாகக் கண்டு பிடித்துச் சொன்ன அன்பர்கள் ஏழுபேர்கள் 

1. மோகனசுந்தரம், திருநெல்வேலி

2 சந்திரசேகர் ஆசாத்

3. சுதேசி ஜெயகுமார்

4. சுப்பிரமணியம்

5. உமா கணேஷ்

6. ஹரி பிரசாத்

7. கே,ஜி

அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்/ 

மீண்டும் ஒரு புதிருடன் திங்கட்கிழமை {13-9-2021} அன்று சந்திப்போம் 

அன்புடன்

வாத்தியார்

================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.9.21

Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 2


Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 2

முன்தினம் ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.

அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.


க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!

ஜாதகர் அகில இந்திய பிரபலம். 
வட இந்தியர் 
விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்

முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!

சரியான விடை 9-9-2021 வியாழக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.9.21

Devotional: இன்று செவ்வாய்க் கிழமை- முருகப்பெருமானுக்கு உகந்த நாள்!


Devotional: இன்று செவ்வாய்க் கிழமை- முருகப்பெருமானுக்கு உகந்த நாள்!

அவரை வணங்குவோம்!!

சென்ற வாரம் முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தைப் பார்த்தோம்!

இந்த வாரம் அடுத்த படைவீடான திருச்செந்தூரைப் பார்த்து வணங்குவோம்!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். 

ஒருவருடைய ஜாதகத்தில் குருபலன் சரியாக இல்லையென்றால் அவர்களுக்கு திருமண தடை, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை போன்ற பல தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். 

இவ்வாறான தடைகள் நீங்கி, குரு பலன் கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இவ்வாறான சிறப்பு மிக்க திருச்செந்தூர் கோவிலின் முக்கிய குறிப்புகள் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்ளப் போகிறோம். 

அறுபடைவீடுகளில் திருச்செந்தூரை தவிர மற்ற 5 கோவில்களும் குன்றுகளின் மேல் அமைந்துள்ளன என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் திருச்செந்தூர் கோவிலும் ஒரு சிறிய குன்றின் மீது தான் அமைந்துள்ளது. 

இதற்கு உதாரணமாக அங்குள்ள வள்ளி குகையினை ஒட்டி மணல் மேடுகள் இருப்பதைக் காண முடியும். இந்த மணல் குன்றுகளின் மீது தான் திருச்செந்தூர் கோவில் அமைந்துள்ளது. 

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முருகரை மட்டுமே தரிசித்து வந்திருப்பார்கள். ஆனால் முருகனது கருவறைக்குப் பின்னால் முருகப்பெருமானே வழிபட்ட பஞ்சலிங்க சன்னதி உள்ளது. பஞ்சலிங்க சன்னதிக்கு சென்று பஞ்சலிங்கங்களை தொழுது விட்டு வந்தால் முருகப்பெருமானின் திருவருள் நிறைவாகக் கிடைக்கும். 

பொதுவாகவே கடற்கரைக்கு அருகில் இருக்கும் கட்டிடங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமாகவே கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருச்செந்தூர் முருகர் கோவிலின் கருவறை கடல் மட்டத்தில் இருந்து 10 அடி தாழ்வாகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கடற்பரப்பில் இருந்து 220 அடிகளுக்கு அருகாமையிலேயே இந்த கோவில் உள்ளது. 

எவ்வளவு பெரிய இயற்கை சீற்றங்கள் வந்த பொழுதும் இதுவரை எந்த ஒரு இயற்கை சீற்றமும் இந்த கோவிலை பாதித்ததில்லை. இதுவே முருகப்பெருமானின் மகிமையாகும்.

முருகப்பெருமானின் கோவிலுக்கு அருகில் இருக்கும் நாழிக்கிணறு எப்பொழுதும் வற்றாமல் நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதிசயமான ஒரு இடமாகும். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இந்த கிணற்றில் மட்டும் குடிக்கும் அளவிற்கு நல்ல நீர் சுரப்பது அதிசயத்திலும் அதிசயம். முருகப்பெருமான் அவருடைய படை வீரர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பு எய்தி, ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அதுவே இந்த நாழிக்கிணறாகும். 

திருச்செந்தூர் கோவிலை கட்டும் பொழுது அதற்கு பெரிதளவில் துணைபுரிந்த மூன்று அடியார்களின் சமாதி, முருகன் கோவிலுக்கு சிறிது தூரத்தில் உள்ளது. இந்த மூன்று அடியார்களின் சமாதியும் மூவர் சமாதி என்று அழைக்கப்படுகிறது. இவர்களை சென்று தொழுது வருவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

திருச்செந்தூர் முருகனின் மற்றுமொரு பெருமை என்னவென்றால் டச்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்த பொழுது முருகர் சிலையை கடத்தி அவர்களது நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்பொழுது கடலுக்கு நடுவே செல்லும் பொழுது அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு சூறாவளி அடிக்க தொடங்கியது. அப்பொழுது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, முருகர் சிலையை கடலில் போட்ட பின்னரே சூறாவளி நின்றது. 

சில காலங்கள் கழித்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி வெளியே எடுக்க சொன்னார். அப்படி கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையும் திருச்செந்தூர் கோவிலினுள்ளே தான் இருக்கிறது. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் நிறைந்த திருச்செந்தூர் முருகனை மீண்டும் ஒருமுறை சந்திக்கச் சென்றால், இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, தவறாமல் தொழுது விட்டு வாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
==============================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.9.21

Astrology Quiz 4-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை



Astrology Quiz 4-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை

கொடுத்திருந்த ஜாதகம் முன்னாள் பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களின் ஜாதகம்!



அதை சரியாகக் கண்டு பிடித்துச் சொன்ன அன்பர்கள் நால்வர்

1. மோகனசுந்தரம், திருநெல்வேலி
2 தேசி ஜெயகுமார்
3.அரவிந்தசாமி
4.சுப்பிரமணியம்
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்/

மீண்டும் ஒரு புதிருடன் புதன் கிழமை {8-9-2021} அன்று சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.21

Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 1


Astrology Quiz: கண்டுபிடிங்க சாமிகளா, கண்டுபிடிங்க - பகுதி 1

முன்தினம் ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியையும், ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடிக்கும் வழிமுறையையும் சொல்லிக் கொடுத்துள்ளேன்.

அதன்படி கீழே உள்ள ஜாதகம் யாருடையது என்பதைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.



க்ளூ வேண்டுமா? அது இல்லாமலா!!!

ஜாதகர் அகில இந்திய பிரபலம். வட இந்தியர்!

முயற்சி செய்து கண்டு பிடித்து எழுதுங்கள்!

சரியான விடை 6-9-2021 திங்கட்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.21

Astrology ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வித்தை!!!!


Astrology ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வித்தை!!!!

Old Lesson Posted again for your use From Classroom2012 Posted on 29.2.2012

Lesson No.1

பழைய பாடம். உங்கள் பயன் பாட்டிற்காக மீண்டும் பதிவிடப் பெறுகிறது
பயிற்சிப் பாடம் எண் ஒன்று! (Practical Lesson No.1)

ஒரு ஜாதகத்தை அதன் பிறப்பு விவரம் இல்லாமல் கொடுக்கப்படும்போது, கிரகங்களை வைத்து, ஜாதகனின் பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதுதான் முதல் பயிற்சி

சமயங்களில் பிறந்ததேதியுடன் பொய்யான ஜாதகத்தை அல்லது தவறான ஜாதகத்தை ஒருவர் கொடுத்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த உபாயம் உதவும்

கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகரின் பிறந்த தேதி என்ன?

1. ஜாதகத்தில், சனி, ராகு, குரு ஆகிய மூன்று கோள்களின் நிலையை வைத்து ஒரு ஜாதகரின் பிறந்த வருடத்தைச் சொல்லிவிடலாம். 2. சூரியன் இருக்கும் இடத்தைவைத்து பிறந்த மாதத்தையும், சந்திரனின் நிலையை வைத்து பிறந்த நாளையும் சொல்லிவிடலாம்.(ஜாதகரின் நட்சத்திரம் தெரிந்தால் சரியான தேதி கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் வித்தியாசப்படும்)

அதற்கு அக்கோள்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும்.

ஒரு உதாரணத் தேதியில் - அதாவது 3.3.2010 அன்று  முக்கியமான 3 கிரகங்களின் நிலை:

சனி கன்னி ராசியில் (158.37 பாகைகளில்)
ராகு தனுசில் (264.23 பாகைகளில்)
குரு கும்பத்தில் (316. 23 பாகைகளில்)

பாகைகள் முக்கியமில்லை. ராசிகள் மட்டும் தெரிந்தால் போதும்.

நீங்கள் அனைவருக்கும் ஜோதிட மென்பொருள் ஒன்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான விவரங்களை அதில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலே உள்ள கிரக நிலையை நானும் அவ்வாறு எடுத்துத்தான் உங்களுக்கு அளித்துள்ளேன்
---------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்கிறது. இன்றையத்தேதியில் கன்னி ராசியில் இருக்கும் சனி கடகராசியின் எல்லையான 120 பாகைகளை விட்டு 40 பாகைகள் கடந்து வந்துள்ளது. சனி மதம் ஒரு பாகையைக் கடக்கும் (30 வருடம் x 12 மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 பாகைகள் = மாதம் ஒரு பாகை. அதாவது ஒரு degree)

அன்றையத் தேதியில் இருந்து (உத்தேசமாக) கடந்துவந்த 40 பாகைகளுக்கு 40 மாதங்களைக் கழித்துக்கொள்ளுங்கள். சனி கடகத்தில் இருந்த வருடம் கிடைக்கும். 4.3.2010 கழித்தால் 40 மாதங்கள் = 4.11.2006. அத்துடன் குரு நிலையைப் பாருங்கள். குரு கும்பத்திற்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது அதற்கும் இந்த 40 மாதக்கணக்கில் கழித்தால் மூன்று ராசிகளைப் பின் தள்ளிவிட்டு குரு துலா ராசியில் வந்து நிற்கும்
ஆகவே ஜாதகர் அதற்கு 30 ஆண்டுகள் முன்பாகப் பிறந்தவர். 

அதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் குருவின் நிலைமை சரியாக வராது ( இரண்டரை சுற்றில் அவர் ரிஷபத்தில் இருப்பார்) ஆகவே ஜாதகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். 

குரு வருடத்திற்கு ஒரு ராசி அதை மனதில் வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட ஜாதகத்தில், உத்தேசக்கணக்கிலேயே ஜாதகர் 1948ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது தெரிய வரும். 

ராகு பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றை முடிக்கும் என்பதால், ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலை ஜாதகரின் பிறந்த வருடத்தைக் கண்டு பிடிக்க சனியுடன் சேர்ந்து உதவும்.

சூரியனின் நிலையை வைத்து மாசி மாதத்தில் ( பிப்ரவரி 14 முதல் மார்ச் 14ற்குள் பிறந்தவர்) என்பது தெரியும்.
சூரியன் மேஷத்தில் சித்திரை மாதத்தை வைத்து தன்னுடைய ஓட்டத்தைத் துவக்குவதால் மாதம் ஒரு ராசி வீதம் கும்பராசிக்கு மாசி மாதம் வந்து சேரும். இந்தக் கணக்கெல்லாம் பழக்கத்தில் மனதில் நிற்கும் பார்த்தவுடன் சொல்லத் தோன்றும்.
----------------------------------------------------------
சனி:
2010ல் - கன்னிராசி
1980ல் - கன்னி ராசி
1951ல் -  கன்னி ராசி
1921ல் -  கன்னி ராசி

நவம்பர் 2006ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1976ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1947ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1917ல்  சனி - கடக ராசியில்

சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 29.5  ஆண்டுகள். ஆகவே இரண்டு சுழற்சிகளுக்கு 59 ஆண்டுகளைத்தான் கழிக்க வேண்டும்

குரு
2010ல் - கும்ப ராசி:  2008ல் தனூர் ராசி
1998ல் - கும்ப ராசி;  1996ல் தனூர் ராசி             
1986ல் - கும்ப ராசி;  1984ல் தனூர் ராசி
1974ல் - கும்ப ராசி;  1972ல் தனூர் ராசி
1962ல் - கும்ப ராசி;  1960ல் தனூர் ராசி
1950ல் - கும்ப ராசி;  1948ல் தனூர் ராசி

மேற்கண்டவாறு ஒரு காகிதத்தில் குறித்துப்பார்த்தால் ஜாதகர் 1948ல் பிறந்தவர் என்பது தெரியவரும்
----------------------------------------------------------------
இன்னொரு குறுக்கு வழி உள்ளது. நமக்குத்தான் குறுக்குவழி என்றால் மிகவும் பிடிக்குமே:-)))

கணினி மென்பொருளில் உத்தேசமாக இன்றையத்தேதிக்கு ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதிக்கு ஒன்று, அதற்கு 29 ஆண்டுகளுக்கு  முன்பாக இதே தேதிக்கு ஒன்று, என்று மூன்று ஜாதகப் பிரதிகளை எடுத்துப்பார்த்தால், சனி மற்றும், குருவின் நிலையை வைத்து ஜாதகரின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்துடனனான கிரகநிலை (ஜாதகம்) கிடைத்துவிடும். ஜாதகரின் நட்சத்திரத்தைவைத்து ஃபைன் டியூனிங் செய்தால் தேதியும் கிடைத்துவிடும்.

இதுதான் ஜாதகத்தைவைத்து, பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்!
-----------------------------------------------------------------
எனக்கு இன்னும் ஒரு சுலபமான வழி உள்ளது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்கள் உள்ளன 1926  முதல் 2000 வரை உள்ள ஆண்டுகளுக்கானது அதுபோல திரு ராமன் அவர்களின் 100 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கப் புத்தகமும் உள்ளது. 

சனியை வைத்து வருடத்தையும், சூரியனை வைத்து மாதத்தையும் கண்டுபிடித்த அடுத்த நொடி, பஞ்சாங்கத்தில் உள்ள அதற்கான பக்கத்தைப் பார்த்தால் போதும். (மாதம் ஒரு பக்கம்) எல்லாம் துள்ளியமாகத் தெரியவரும். என் சேகரிப்பில் அவை அனைத்தும் உள்ளன!

மற்றவை அடுத்த பாடத்தில்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.21

Astrology: ஜோதிடம்: ஆத்ம தோழி {Soul Mate} கிடைத்ததா?


Astrology: ஜோதிடம்: ஆத்ம தோழி {Soul Mate} கிடைத்ததா?

உங்களுக்கு பொருத்தமானவர் தான் துணையாகக் கிடைத்தாரா அல்லது கிடைக்க வேண்டுமா?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டுமா? பெண்ணின் பிறப்பு விபரங்களையும் வரனின் பிறப்பு விபரங்களையும் கொடுத்தால் போதும்,
அதற்கென்று உள்ள மென் பொருள் எல்லாவற்றையும் அலசி விவாகத்தை சிபாரிசு செய்யும் அல்லது பொருத்தம் இல்லை வேண்டாம் என்று சொல்லி விடும். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில்.

நட்சத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், பாவ சாம்யம். தசா சந்திப்பு, என்று எல்லாவற்றையும் அலசி பதில் கொடுத்துவிடும்.

நீங்கள் திருமணம் ஆக வேண்டியவராக இருந்தாலும் சரி அல்லது திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி இந்த மென்பொருள் கொடுக்கும் ரிப்போர் {7 பக்கங்கள்} பயனுள்ளதாக இருக்கும்.

திருமணம் ஆனவருக்கு எப்படி பயன்படும் என்று கேட்கிறீர்களா?

பொருத்தமானவர்தான் உங்கள் துணை என்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம். பொருத்தமில்லாதவர் என்றால் மனதைத் தேற்றிக் கொண்டு துணையுடன் அனுசரித்துப் போகலாம். என்ன நான் சொல்வது சரிதானே?

விருப்பமிருந்தால் எழுதுங்கள்!

வாத்தியாரின் மின்னஜ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வாத்தியார்
----------------------------------



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.21

Astrology ஜோதிடம் அலசல் பாடம்: அதீத தாமதமான திருமணம்


Astrology ஜோதிடம் அலசல் பாடம்: அதீத தாமதமான திருமணம்

ஒரு அம்மணியின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அம்மணிக்கு வெகு காலம் ஆகியும் திருமணம் கூடி வரவில்லை. பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தம் 

இருக்காதா பின்னே?

திருமணம் ஆகுமா அல்லது ஆகாதா?
வாருங்கள் ஜாதகத்தை அலசிப் பார்ப்போம்



அம்மணி துலா லக்கின ஜாதகி/

2ம் வீடு மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இரண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் வலுவாக உள்ளார். அவர்தான் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் அவருடைய திசை 37 வயதிற்கு மேல்தான் துவங்குகிறது. அத்துடன் 11ம் வீட்டின் அதிபதியான சூரியனின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் விழுகிறது. ஆகவே திருமணம் நடைபெற வேண்டிய ஜாதகம்தான்!

களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் 9ம் அதிபதி புதனின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் விழுகிறது. 38வது வயதில் திருமணமாகி ஜாதகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!