மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.22

ஆங்கில மருத்துவம் எப்படி செயல்படுகின்றது அவசியம் படியுங்கள்*



ஆங்கில  மருத்துவம்  எப்படி செயல்படுகின்றது அவசியம் படியுங்கள்*

*இத தவறாம படிக்க*

*🎯நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

*🎯உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.*

*🎯ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.*

*🎯கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*

*🎯பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.*

*🎯சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.*

*🎯கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.*

*🎯ஆங்கில மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்....*

*🎯நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.* 

**அவர்களும் அதற்கு எலிகாய்ச்சல்,  கோழிகாய்ச்சல், பன்றிகாய்ச்சல்,  நாய்காய்ச்சல்  என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்.* 

**வரும் காலங்களில் சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல் என்று வைப்பார்கள்  போல?*

  **எனவே எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தை புறக்கணியுங்கள்.*

*🍓 ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா , நேட்சுரபதி, ஹோமியோபதி, யுனானி,சித்த மருத்துவம்,இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.*

**நீங்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது மாற்றமே மானுட தத்துவம்*.


குறிப்பு  :-
கார்ப்பரேட் ரசாயன உணவு பொருட்கள் மற்றும் அரசியல் உட்பட மக்கள் தான் நல்லதை முன்னெடுக்க வேண்டும்.....
-----------------------------------
படித்த்தில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.3.22

உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!




உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!

அமெரிக்கா       :   32.1 கோடி 
ரஷ்யா                  :   14.6 கோடி 
ஜெர்மனி             :     8.5 கோடி 
துருக்கி                 :     8.4 கோடி 
யூ:கே                      :    6.8 கோடி
பிரான்ஸ்              :    6.5 கோடி 
இத்தாலி               :    6.1 கோடி 
ஸ்பெயின்            :    4.7 கோடி 
போலந்து             :    3.8 கோடி 
ருமேனியா          :    1.9 கோடி 
நெதர்லாந்து       :    1.7 கோடி
கிரீஸ் டப்பா         :   1.7 கோடி 
பெல்ஜியம்           :  1.2 கோடி 
செக் குடியரசு      :   1.1 கோடி 
போர்ச்சுகல்         :   1.1 கோடி 
சுவீடன்                   :      1 கோடி 
ஹங்கேரி              :      1 கோடி 
சுவிட்சர்லாந்து    : 0.9 கோடி பல்கேரியா            : 0.7 கோடி 
டென்மார்க்           :   0.6 கோடி 
பிரேசில்                :  21.2கோடி 
அர்ஜென்டினா  :   4.45 கோடி 
-------------------- 
மொத்தம் 22 நாடு : 130.95 கோடி 
=============
ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் : 6 கோடி 

130.95 + 6.    = 136.95 கோடி! 

*மொத்தம் 66 நாட்டு மக்கள் தொகை 137 கோடி*

*இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி*!

இப்போது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த
*ஐரோப்பா*        *+* *அமெரிக்கா*    ➕
*பிரேசில்*            ➕
*அர்ஜென்டினா* எவ்வளவு வேலை செய்கின்றனவோ இதை 
*இந்தியா தனி நாடாக செய்கிறது…*

கேலி பேசுவது, ஒப்பிடுவது என்பது பொறுப்பற்ற வீனர்களின் வேலை.
 பாரத மாதாவின் பிள்ளைகளுக்கு  இல்லை..

என்ன கடினமான சவால்.??

*நாம் நாட்டின் நிலைமையை புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல்படுவதே  நம் அனைவரின் கடமையாகும்.*

ஒற்றுமையே பலம்
*ஒன்றுபடுவோம் உயர்வடையும்*
      
          *ஜெய்ஹிந்த் 🙏🇮🇳*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.22

ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?



ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?

*இரண்டிற்கும் வித்தியாசம்,*
*வயது மட்டுமே...*

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர். 
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த  பிள்ளை.  
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து , 
குளித்துக் கொண்டிருந்தேன். 

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை.  கண்ணை திறக்க முடியாமல், 
இரண்டு கையாலும், 
என்னை சுற்றி , சுற்றி, 
சொம்பை, தேடினேன். 

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.  

எனக்கு புரிந்து விட்டது. 

 சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. 

 எனக்கு , கண் எரிகிறது 
என்று அவளுக்கு தெரியவில்லை. 

 நான் , சொம்பை தேடுவதில்,
 அவளுக்கு ஒரு ஆனந்தம். 

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் , 
ஒரு தூசி  விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.  

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை , 
மறைத்து வைத்து... 
அவர்கள் தேடுவதை கண்டு 
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக  மாறும் போது.... 

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து, 
அவள் மானத்தைக் காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன்  சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். 
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என , 
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது , 
என  கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

*அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு.* 
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.22

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்துவர....!!!!



இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்துவர....!!!!

#இனியாவதுபின்பற்றுங்கள்.

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ..
இது சொந்த வீடா ..வாடகை வீடா ... 
வாடகை எவ்வளவு.... என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் ..
(அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் .
(அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. 
காபியா டீயா என்றால் .. 
கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள்.
இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது ..
அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை
அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க ... ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8. சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட "சாப்பிடுறீங்களா" என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள். மாறாக "சாப்பிடுங்க "என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
உறவுகளை வளர்க்க அதுவே உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்... 
வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்.. 
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10. friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு ...பொதுவுல ...அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் ... பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் ...இப்படி சொல்றவங்க கிட்ட ../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.
அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌.... 
வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்..
இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்.... 
இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்..
மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் ... என்று...
பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்..
அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.மிக முக்கியமான இன்னொன்று பிள்ளைக்கு கல்யாணமாயிடுச்சா?
குழந்தை எதுவும் ?
எத்தனை வருஷமாச்சு?
டாக்டரை எதுவும் பார்த்தீங்களா?
இது ஒரு கேவலமான உரையாடல்

17.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.
மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.
--------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.22

தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*  


தேசத்தை ஈர்த்த தமிழன் - கண்ணதாசன்*
 
*ஊராண்டு நாடாண்டு*
* உயர்வான மேதைகளின்*
* உள்ளத்தை ஆண்ட மனிதன்*
 
*உடலாண்டு மனம் ஆண்டு*
* ஒரு தொண்ணூற்றைந்தாண்டு*
* உலகத்தில் வாழ்ந்த அறிஞன்*
 
*சீராண்டு வேதாந்த*
* சித்தாந்த மெய்ஞானம்*
* சேர்த்தாண்ட ஞானமுனிவன்*
 
*தெளிவோடு பலவாண்டு*
* தென்னாட்டு மாந்தர்க்குத்*
* தெய்வத்தை சொன்ன கலைஞன்*
 
*நூறாண்டு வாழாது*
* ஐந்தாண்டு குறைவாகி*
* நோயாண்டு மாண்ட தெனவோ?*
 
*நுவலரிய பொருள்கள் தரும்*
* வலிமைமிகு கீதையெனும்*
* நூலாண்ட பரந்தா மனே !*
 
*ஊராட்சி என்றாலும்*
* நகராட்சி என்றாலும்*
* ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்*
 
*ஒருபோதும் தன் கட்சி*
* நிருவாகத் தலையீட்டை*
* ஒப்புக் கொள்ளாத தலைவன்*
 
*சீரான அரசாட்சி*
* சிலகாலம் செய்தாலும்*
* திறமாகச் செய்த புனிதன்*
 
*தென்னாட்டு மாந்தர்தம்*
* திறமைக்கு சான்றாகி*
* தேசத்தை ஈர்த்த தமிழன்*
 
*தேராத நூலில்லை*
* தெளியாத பொருளில்லை*
* சென்றோடி விட்ட தெனவோ?*
 
*செழுமை மிகு பொருள்கள்தரும்*
* அழகு மிகுகீதையெனும்*
* தேர்தந்த பரந்தா மனே !*
 
*வாழ்வாங்கு வாழ்வாரைத்*
* தெய்வத்துள் வைக்குமொரு*
* வையத்து வாழு மனிதா*
 
*வையத்துள் இராஜாஜி*
*வாழ்வுக்குச் சான்றாக*
* வாழ்வொன்று எங்கும் உளதா?*
 
*ஊழோங்கி உயிர்வாங்கி*
* உடல்கூடென் றானாலும்*
* உள்ளத்தைக் காலம் வெலுமோ?*
 
*ஒருகோடி வருடங்கள்*
* ஓடட்டும்; அவர்சொன்ன*
* உரைகூட ஓடிவிடுமோ?*
 
*தாழாத பணியென்றும்*
* தமதென்ற இராஜாஜி*
* தருமங்கள் வாழும் தினமே !*
 
*தனது நிகர் இல்லாத*
* இனியதொரு கீதையெனும்*
* தாய்தந்த பரந்தா மனே !*
 
*மாபார தத்தினிலும்*
* இராமாயணத்தினிலும்*
* மனமார மூழ்கி நீந்தி*
 
*மனநீதி பொய்யாது*
* மறைநீதி அகலாது*
* வாழ்ந்தார்க்கு ஆத்ம சாந்தி*
 
*பூபாரம் ஏற்றானை*
* புகழ்ப்பாரம் கொண்டானை*
*பொழுதென்றும் வாழ்த்து மனமே!*
 
*பொய்யாத மானிடர்கள்*
* இவர்போல சிறிதேனும்*
* பொன்னாட்டில் வருக தினமே !*
 
*கோபாலன் ஆவிக்கு*
* மாறாத அமைவொன்று*
* குறையாது தருக வரமே !*
 
*குணமுடைய பொருள்கள் தரும்*
* நலமுடைய கீதையெனும்*
* கொடைதந்த பரந்தா மனே !*
 
*- கண்ணதாசன்*
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்’
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.22

எண் ஏழின் சிறப்புக்கள்:



எண் ஏழின் சிறப்புக்கள்:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்

4. மொத்தம் ஏழு பிறவி

5. ஏழு சொர்க்கம்(குரான்)

6. ஏழு கடல்கள்

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)

8. ஏழு வானங்கள். (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி) 11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்

31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை, பேரிளம் பெண்)
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.22

இதல்லவோ சிறந்த நிர்வாகம்!

இதல்லவோ சிறந்த நிர்வாகம்!

 டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

 ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.

 தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.

 அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று தலைவர் தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.

 அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.

 சேர்மன், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.

 அடுத்த நாள், தச்சன் வந்தபோது, ​​*அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.

 தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.

 தலைவர் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.

 இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.

 *தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**

 ஒழுக்கம்:
 *_பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை_*
 **ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை_*

 இது கதையல்ல உண்மை சம்பவம்...
-----------------------------------------------------------
 படித்ததில் பிடித்தது...
 அன்புடன்.
வாத்தியார்
===========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.22

சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!


சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!

90 களில் நடிகர் சிவக்குமாரை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் தேவராஜ் & மோகன் .

இருவரும் இயக்குநர் பி.மாதவனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

பி.மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாயினர்..

தேவராஜ் முன்பே  இறந்து விட்டார். இயக்குநர் மோகன் சில வருடங்களுக்கு முன்னால் 2012 இல் அவரது வீட்டுக் குளியலறையில் வழுக்கி விழுந்து காலமானார்.

0
  
தேவராஜ் & மோகன் இயக்கிய படங்கள் அன்னக்கிளி , ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது , சிட்டுக்குருவி , ரோசாப்பூரவிக்கைக் காரி  , இசை பாடும் தென்றல், கண்ணில் தெரியும் கதைகள் ,கவிக்குயில் , சக்களத்தி , அன்பு ரோஜா , பாலூட்டி வளர்த்த கிளி, பூந்தளிர் , சாய்ந்தடம்மா சாய்ந்தாடு , உறவாடும் நெஞ்சம், வாழ நினைத்தால் வாழலாம் , உங்களில் ஒருத்தி , உறவு சொல்ல ஒருவன் , கண்மணி ராஜா 

0

தேவராஜ் & மோகன் இயக்கிய படங்களின் வெற்றிக்குப் பாடல்களின் பங்களிப்பு அதிகமிருக்கும்.

மோகனப் புன்னகை ஊர்வலமே - உறவு சொல்ல ஒருவன்

பால் நிலவு நேரம்  - அன்பு ரோஜா

ஒரு காதல் தேவதை - சாய்ந்தடம்மா சாய்ந்தாடு

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்

சாமத்தில் பூத்த - உங்களில் ஒருத்தி

காதல் விளையாட  - கண்மணி ராஜா

வாட வாட்டுது போர்வை கேட்குது - சக்களத்தி

எந்தன் கைக்குட்டையை - இசை பாடும் தென்றல்

நான் பேச வந்தேண் - பாலூட்டி வளர்த்த கிளி

இயற்கை ரதங்களே- வாழ நினைத்தால் வாழலாம்

0

பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராகப் பணிபுரிந்தார்.

இப்படத்திற்காக கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியதை அருகிலிருந்து பார்த்த இளையராஜா விளக்குகிறார்..

நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது முதன் முதலாக கண்ணதாசனைச்
சந்தித்தேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசையமைத்த ஒரு மெட்டைத் தமிழில் இசையமைக்கத் தீர்மானித்துப் பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்தப் பாடல் எழுதிய பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது, ஓரளவு கடினமான மெட்டுதான்.

கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். டைரக்டர் சூழலைச் சொல்லச் சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..

புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் 
பிடித்து கொண்டே இருக்கார் .. 
எனக்கோ எரிச்சல் வந்தது..

டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷைப்
பார்த்து, " சரி டியூன் என்ன ? " என்றார்.

ஜி.கே.வி: தானானனே னா னா
டியூன் கேப் விடாம போய்ட்டே இருந்தது , இன்னொரு வாட்டி கேட்டுக் கொண்டார்

தானானனே னா னா

தேன் சிந்துதே வானம்..

அப்புறம் என்ன ?

தனா தனா தானானனா

உனை எனை தாலாட்டுதே

இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே தரும் ராகங்களே
என்று கூறிக் கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்துப் பாடிப் பார்த்தால், அந்த மெட்டுக்கு அந்தப் பாடல் அவ்வளவு அற்புதமாகப் பொருந்தியது, மெய் சிலிர்த்துப் போனேன் …
09/03/2022, 11:26 - +91 98412 76254: இயக்குனர் தேவராஜ் ஆராவயலில் தெ. நா. சி. நா. சோம. வீட்டில் பிறந்தவர். மாத்தூர் உறையூர் பிரிவை சார்ந்தவர். இயக்குனர் மாதவனிடம் 15 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 
20 படங்கள் இயக்கியுள்ளார். 
அவரது மகன் வீட்டில் சௌகரியமாக வாழ்ந்து வந்தார். மகன் சீனியர்  டெக்னீசியனாக ராஜன் ஐ காரில் பணியாற்றினார். தேவராஜ் மாரடைப்பால் காலமானார். அவரது பிள்ளைகள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.22

தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?


தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?

 "வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்"

சமீப காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.
  
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் .... கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ..... முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக .... வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டே விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது, 

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலுப் படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.                                     

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.
--------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.22

Humour நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்


நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்

Crazy Mohan jokes 

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

“சாத்திட்டா”

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்j இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.3.22

நகைச்சுவை பட்டயக் கணக்காய்வாளரும் அனுமனும்




நகைச்சுவை பட்டயக் கணக்காய்வாளரும் அனுமனும்

ஒரு நகைச்சுவைப் பதிவு

ஓரு விழாவிற்கு ஒரு ஆடிட்டர் வந்திருந்தார். அவரது வேடிக்கையான
பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.
அவர் சொன்ன வேடிக்கை கதை. 

“…. எங்க ஆடிட்டர் புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால்
ஆக்கவும் முடியும்! அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக
எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக்
கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி
மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்
படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி
சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.
யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு
திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை
கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.
ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது.
காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு
முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு
வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage.
Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்
படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்
படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை
தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி
அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை
சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில்
அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி
உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction
ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை
பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே
clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்
பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்
காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான
வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான
பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்
படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல
கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.
ராமா! 
இந்த ஆடிட்டர்/அக்கவுன்டன்ட் இம்ச தாங்க முடியலப்பா!
சிரிப்பதற்கு மட்டுமே யாருமே வருத்தப்பட வேண்டாம். !

-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.3.22

பணத்தைப் பற்றி சுஜாதா அன்று சொன்னது!!!!


பணத்தைப் பற்றி சுஜாதா அன்று சொன்னது!!!!

பணம் - சுஜாதா கட்டுரை

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில்  படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில்  காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’  வாங்கிச் சாப்பிடு என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.  ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே  வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு  பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு  ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது.  அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும்  விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே  கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி  செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி  டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.  லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில்  சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில  நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி  சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி  படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு  செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை  ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று  ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங்  படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது  ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கான் (Aga Khan)  போல உணர்ந்தேன்.  அத்தனை பணத்தை  அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச்  செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர்,  ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு  ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின்  வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.  அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும்  வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம்  பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து  அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி.,  பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்?  மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு  அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன  போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி  பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல்  முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட்ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம்  ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க  மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம்  இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக  எதிர்பார்த்து கடன் கேட்டால், வேஷ்டியை அவிழ்த்து....... ஸாரி......பாங்க்  பாஸ் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம்  சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...

இன்று  பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய்,  அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள்.  புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை  பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என்  அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு  வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும்  அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.  இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு  பணம் வருகிறது என்பதே.

இன்று  பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை  நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும்  பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து  நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள்  என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம்  தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும்  மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று  புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே  வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று  ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.
- சுஜாதா.
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.22

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?


கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து 
வருவது ஏன்?

க்ருஹம் என்றால் வீடு அல்லது வசிப்பிடம். கிரகம் என்றால் வானில் சுற்றும் கோள். க்ருஹப்ரவேசம் என்பதே சரியான வார்த்தை. புதுமனைப் புகுவிழாவின்போது வாசலில் கன்றுடன் கூடிய பசுமாட்டிற்கு பூஜை செய்து அதனை வீட்டிற்குள் அழைத்து வருவதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கிறோம். பசுமாட்டிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கோமாதா என்றழைக்கப்படும் பசு மகாலட்சுமியின் அம்சம். அக்காலத்தில் ஒருவருடைய சொத்து மதிப்பீடு செய்யும்போது எத்தனை பசுமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை கணக்கில் கொள்வார்கள். போரில் வெற்றி பெறும் அரசர்கள் கூட அண்டை நாட்டில் இருந்து பசுமாடுகளை தனது நாட்டிற்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவருவர். 

ஆக பசுமாடு என்பது செல்வத்தைத் தர வல்லது என்பது வரலாற்று உண்மை. அது மட்டுமல்லாது பசு என்பது சுத்தத்தின் அடையாளம். குறிப்பாக, கோமயம் என்றழைக்கப்படும் பசுவின் சிறுநீர் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது.  தீயசக்திகளை விரட்டும் வலிமை பசுமாட்டிற்கு உண்டு. அதனால்தான் புதுமனைப் புகுவிழாவின்போது முதலில் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம். 
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.22

தேங்காயின் சிறப்பு என்ன?



தேங்காயின் சிறப்பு என்ன?

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

தேள் கொட்டிவிட்டாலோ, வேறு விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டாலோ ஒரு அரை மூடி தேங்காயைத் தின்றுவிட்டால் விஷம் முறிந்துவிடும். இதை இன்றும் பல கிராமங்களில் உயிரைக் காப்பாற்ற, வழக்கமாக வைத்துள்ளார்கள். 
அவ்வளவு விஷ முறிவு சக்தியுள்ளது தேங்காய்.இப்படிப்பட்ட தேங்காய் இயற்கையான வடிவத்திலேயே சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நஞ்சுக்கள் நீங்கி உடல் பல்லாண்டு காலம் நோயின்றி வாழும்.

---------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.22

இவரைத் தெரியுமா உங்களுக்கு?


இவரைத் தெரியுமா உங்களுக்கு?

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி...!?

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். 

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். 

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திரு விளையாடல்...! 

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள். 

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. 

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார். 

அதுவும் எப்படி? அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்!

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. 

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். 

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டு கொள்ளவே மாட்டார். 

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. 

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... 

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின் போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? 

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதே மேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். 

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர் போல மீண்டும் தனது அடகுக் கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். 

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? 

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை! 

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... 

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்...! 

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். 

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 

 புரந்தரதாசர்  ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். 

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். 

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். 

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். 

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.3.22

மிகவும் கடினமான படிப்பு எது?


மிகவும் கடினமான படிப்பு எது?

வேத பாடசாலைகளில் படிப்பதுதான் கடினமான படிப்பு ஆகும்! என்ன கடினம் என்றுன் வாருங்கள் பார்ப்போம்!!!!

"வேத பாடசாலைகள்”

காலையில் பழையது,அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு..மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.. இரவு மதியம் வடித்த அதே சாதம்.. உப்புமா.. காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது..

வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.. ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்.. சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்..

மிக மிக கடினமான படிப்பு..கண்டிப்பு மிக அதிகம்..

நீங்க நினைத்த உடை உடுத்த முடியாது..

இந்த பால வயதில் அவங்க உடையை அவங்களே துவைத்து கொள்ள வேண்டும்.
.
விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம..சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, இப்படி எல்லோரையும் விட்டுட்டு...

ஒரு டிவி உண்டா?

சினிமா உண்டா?

பொழுது போக்கு உண்டா?

ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா?

இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு.. வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு..

தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்.. கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்..

விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை.. அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்..

தவ வாழ்க்கை அல்லவா இது..!!

எழுதாக்கிளவியான அதாவது எழுத்து வடிவில் இல்லாத, வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.

எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக..

இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்..உரமிட வேண்டும்.. இவர்களைக் காக்க வேண்டும்..

தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்.. இரண்டுமே தியாகம் தான்..

நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்...

பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...

ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்....!!

மனதை நனைத்த பதிவு
--------------------------------------
படித்ததில் மனதில் பதிந்த பதிவு; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.22

Devotional: எது வைகுண்டம்?


எது வைகுண்டம்?

பூலோகம் தான் #வைகுண்டம்.

ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லட்சுமணன் தன் இருப்பிடம் சேர்ந்துவிட்டான்.

 சீதா தேவியாக பிறவி எடுத்த லட்சுமி தேவியோ , ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள்.

 ஆனால் ஸ்ரீ ராமரால்  காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ஸ்ரீராமருடன் புறப்பட தயாரானார்கள்.

 ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. என்ன காரணம்???

 சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான்.

 பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார்.

 ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக்கொண்டிருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது.

 உடனே இராமன் அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார்.

 அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார்.

 ஆனாலும் மோதிரமோ கழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.

 இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தில் கதவும் மூடிக்கொண்டது.

 மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.

 அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான்.

அப்படியா என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை #எடுத்துச்_செல் என்று அனுமனிடம் கூறினான்.

 அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந்தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

 ஆம் அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான்.

 காலதேவன் கூறினான். அனுமனே இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.

 அப்போது பிரம்மா விஷ்ணு லட்சுமி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.

 அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றுவார்கள் பின் மறைவார்கள் அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன் செல்லவோ முடியாது.

 அனுமனே நீ ராமருடன் இருக்கிறார் ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோதிரத்தை தவற விட்டார். #காலசுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் #இருப்பிடம் #செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான்.

 #பிறப்பு_இறப்பின்_மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான்.

 இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.

 ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனுமனை உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியிலிருந்து செல்லும்போது நீ #என்னுடன்_வரலாம். என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

 அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் #யோசித்தான்.

 பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள்.

 ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் #ராமனாக - என் பிரபுவாக #இருப்பீர்களா ? இல்லை அவதார புருஷன் #விஷ்ணுவாக இருப்பீர்களா ? என அனுமன் #கேட்டான்.

 ஒரு நிமிடம் திகைத்தார் ராமர்.

 என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் #விஷ்ணுவாகவும், சீதை #லட்சுமி தேவியாகவும், #லட்சுமணன் ஆதிசேஷனாகவும், #பரதன்__சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் #அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர்.

 அனுமனோ தயக்கமின்றி பிரபு, 

#எனக்கு_ஸ்ரீராமன்போதும் 
உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியாகவும் , மற்றவர்களை இப்புவியில் எடுத்த #அவதாரங்களாவே #வணங்க விரும்புகிறேன்.

 நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் 
#உங்கள்_நாமத்தை 
#பிறர்_சொல்வதை #கேட்டபடியே_இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் #அருளினால் #போதும் என்றான் அனுமன்.           
       💚 ஸ்ரீராமஜயம்💚
----------------------------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.3.22

நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் நல்லது!!!

நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் நல்லது!!!

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.3.22

காமராஜரின் கருணை!



காமராஜரின் கருணை!

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
-------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.3.22

யாருடைய தியாகம் சிறந்தது?



யாருடைய தியாகம் சிறந்தது?

தாயா? தந்தையா ? தியாகத்தில் யாருடைய தியாகம் சிறந்தது?       
                           
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கடினப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? 
அல்லது  அப்பாவா...? அம்மா ! 

அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கடினமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்து கொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீங்கள் ஒவ்வொருவர்களாக பிறந்த பின்னர் 
தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக,  உணவு, உடை, நலம் மற்றும் உங்கள் உயர்வுக்கு கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வையால் கடின உழைப்பால் உருவானவர்கள்.

மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.

அவரின் பதில்:
இந்த மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு துயர்அடைந்தாள் என்றுகூட 
எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் ஒயாத உழைப்பு தான் இந்த குடும்பத்தை/உங்களை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. 
என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காகத்தான் என்னுடன் அடிக்கடி வாதம் செய்திருக்கிறாள். 

அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை நான் எப்படியோ பரவாயில்லை அவளின் நிறைவு காலத்திலாவது அவளுக்கு ஏதாவது விருப்பம் ஆனால் என்னிடம் கூட கேட்டது கிடையாது நீங்கள் எல்லோரும் நிறை வேற்றுவீர்கள் என நம்புகிறேன் என்றார்.

மகன் தனது சகோதர/சகோதரிகளிடம் சொன்னான்.  நம்மைவிட இந்த உலகில் பாக்கியசாலிகள் யாரும் இருக்க முடியாது. 

தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.

பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்,
இப்பவும் நாம், நீ பார் அடுத்த மாதம் நான் பார்க்கிறேன் என்று பந்தாட வேண்டாம் யாருக்கு கொடுப்பினை இருக்கோ அந்த பாக்கியத்தை தவற விட்டுவிட்டுப் பின்
புகைப் படத்துக்கு மாலையும் சேலையும் பலகாரங்களும் வைத்து வழிபாடு பண்ணுவதில் எந்த பேருமில்லை புகழுமில்லை

நன்றி 
🌹வாழ்த்துகள்🌹
வாழ்க வளமுடன்

இந்த பதிவு அனைத்து தாய் தந்தைக்கும் சமர்ப்பனம்
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!