
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!
225 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)
அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக்
காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த ரட்சகனாக தன்னை எண்ணிக்
கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.
பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்
அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.
தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப் பட்டான்.
தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.
77 ஆண்டுகள் என்று தெரிந்தது!
மரண தண்டனை கிடைக்கும்படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால் ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.
இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.
நடந்தது என்ன?
படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்
இது நடந்த கதை.
அந்த இளைஞனின் பெயர் நாராயணன் இளையத். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மச்சத் என்னும் ஊரில் பிறந்தவன் அவன். பிறந்த ஆண்டு 1765. எடக்காடு நம்பூதிரி என்னும் பிரபலமான ஜோதிட விற்ப்பன்னர் அவனுக்கு குருவாக அமைந்தார். அவருடைய குருகுலத்தில் இவனும் கற்றுத் தேறினான்.
அவனுக்கு இருபது வயதாகும்போது, ஒரு ஆர்வத்தில், தனது ஆயுள் ஸ்தானத்தைக் கணக்குப்பண்ணிப் பார்த்தான். தனது விதிப்படி தனக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று தெரிந்துகொண்டான். அதை சோதித்துப்பார்க்கவும் விரும்பினான்.
அதற்கு அவன் தேர்வு செய்த இடம், அந்தக் காலக்கட்டத்தில் கொச்சிப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சதன் தம்புரான் என்னும் அரசனின் மாளிகை. அந்த அரசன் கோலோச்சிய காலம். (1781 - 1805)
அரசனின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நம் நாயகன்,கருவறை வரை சென்று, அங்கிருந்த ஏராளமான பொக்கிஷங்களில், தங்கத்தால் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றான். இரவு நேரம் என்றாலும் காவல் பலமாக இருந்ததால் மாட்டிக்கொண்டு விட்டான். கையும் களவுமாக அவனைப் பிடித்த காவலர்கள்,
அவனை அரசனின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
அரசன் யோசிக்கவேயில்லை. கடுங்கோபத்துடன், அவனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினான்.
விதி எப்போதுமே அதற்கென்று ஒரு வழி வைத்திருக்கும். அந்த வழியை அது திறந்துவிட்டது.
அரண்மனையில் இருந்த பண்டிதர்களில் சிலர் அவனை அறிந்திருந்தார்கள். அவனுக்குத் தண்டனையளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், இரக்கத்துடன் வந்து அவனிடம் பேசலுற்றார்கள். அத்தகைய கொடிய தண்டனை பெறும் அளவிற்கு அவன் செய்த குற்றம் என்ன?
நமது நாயகன் தான் வந்த நோக்கத்தை அவர்களிடம் முழுமையாக சொன்னான். விரைந்து சென்ற அவர்கள், மன்னனிடம் முழு விவரத்தையும் சொல்ல, மன்னன், ஒருவிதக் குறுகுறுப்புடன், நமது நாயகனைத் திரும்ப அழைத்துப் பேசலுற்றான்.
மன்னன் எல்லாக் கலைகளுடனும், ஜோதிடத்தையும் ஓரளவிற்குக் கற்றவன் என்பதால், நமது நாயகனிடம் பேசப் பேசப் பிரமிப்பிற்கு ஆளானான். அவனை மன்னித்ததோடு, விடுதலை செய்தும் அனுப்பிவைத்தான்.
ஜோதிடம் என்னும் ஒரு தெய்வீகக் கலையை சோதிக்க முயன்றது மாபெரும் தவறு என்று மன்னன் அவனை எச்சரித்தபோது, நமது நாயகன் மன்னனிடம் இவ்வாறு சொன்னான்.”அரசே ஜோதிடத்தின் மீதும், தெய்வத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என் ஜாதகப்படி நான் சாக மாட்டேன், தண்டனைக்குள்ளாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இச்செயலில் ஈடுபட்டேன். இக்கலையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்”
அவனின் வார்த்தைகளில் மயங்கிய மன்னன், தன் காலம்வரை அவனையே தனது ஆஸ்தான ஜோதிடராக வைத்துக் கொண்டார்.
பிரசன்ன ஜோதிடத்தில் மிகவும் தேர்ந்தவனான நமது நாயகன், பல அசரடிக்கும் பலன்களைக்கூறி, அவை அவ்வாறே நடந்தேறியபோது, அவனைப் பார்த்துப் பிரம்மித்தவர்களே அதிகம்.
பிரசன்ன ஜோதிடம் என்பது கேள்வியையும், கேள்வி கேட்கும் நேரத்தையும் வைத்துப் பலன் சொல்வதாகும்.
ஒரு வாழைக்கன்று வைக்கப்படும் நேரத்தை வைத்து, அந்தக் கன்று வளர்ந்து கனி தருமா? தராதா? வைத்தவன் அதைச்சாப்பிடுவானா? அல்லது மாட்டானா? அல்லது அந்தக் கனி என்னவாகும் என்பது வரை சொல்லும் ஆற்றல்
பிரசனன ஜோதிடத்திற்கு உண்டு என்பார்கள்.
ஒரு சமயம் நமது நாயகன், தம்புராக்கள் என்னும் பெரிய பண்டிதரைப் பார்த்துவரச் சென்றான். இவன் சென்ற நேரம், பண்டிதர், முடிதிருத்தத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். இவனைக் கணடதும், அவர் விளையாட்டாகச் சொன்னார்:
“என்னப்பா நான் முடிவெட்டக் கிளம்பும்போது, நீ வந்திருக்கிறாயே, உன்னோடு இப்போது எப்படிப் பேசுவது? சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா? அல்லது மாட்டேனா?”
“சட்டென்று தன் மனதிற்குள் கணக்கிட்ட நமது நாயகன் சொன்னான், “இல்லை, இப்போது நீங்கள் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கவும் வேண்டும்”
”நாவிதன் எங்கள் தோட்டத்தில் எனக்காகக் காத்திருக்கிறான். உன் பிரசன்னம் பொய்யாகப் போகிறது. என்னுடன் வா, காட்டுகிறேன்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.
ஆனால் அது பொய்யாகவில்லை. உண்மையாகிப்போனது.
எப்படி?
அது சமயம், அங்கே வந்த பண்டிதரின் தாய், தன் மருமகளுக்கு (அதாவது பண்டிதரின் மனைவிக்கு) நாள் தள்ளிப்போய்விட்டதையும், அவள் கருவுற்றிருப்பதையும் சொல்ல, முடி திருத்தம் தள்ளிவைக்கப்பட்டது.
கேரள அந்தனர்களின் முறைப்படி மனைவி கருவுற்றிருக்கும்போது,
கணவன் தாடி வளர்க்கும் அந்தக்கால வழக்கத்திற்கு அவரும்
ஆட்படுத்தப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து, அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகே, அவர் முடிதிருத்தம் செய்துகொள்ள முடிந்தது.
நமது நாயகனின் பிரசன்ன ஜோதிட மகிமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?
(V S. கல்யாணராமன் என்னும் கணிதம் மற்றும் ஜோதிட மேதை எழுதிய செய்திகளின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. அவருக்கு நமது நன்றி உரித்தாகுக!)
சதன் தம்புரானைப் பற்றிய மேல் விவரங்கள் விக்கி மகராசாவிடம் கிடைக்கும்.
இங்கே சொடுக்கிப் பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
V S. கல்யாணராமனைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
V S KALYANRAMAN A mathematician and amateur astronomer by training, a bureaucrat by profession and a student of astrology by passion, the author had his traditional training in astrology in his teens, under a couple of doyens of Gurus of yester years, with a vow not to
turn a professional. Commencing his career as a teacher in Kerala completed it as a
Senior Class I officer of the Government of India. After a stint of story writing in Tamil in the fifties, turned to serious study of Saiva Siddhanta, Philosophy, Psychology, Vedic Mathematics, Bharateeya Ganitha Sastra, Jyothisha (astronomy), the various astrological systems, Vastu Sastra, Vedic Numerology and allied disciplines, under various masters of repute.
As a freelancer, though was contributing on varied topics, occasionally to various magazines in English, Tamil and Malayalam, mostly under disguise, for decades and has received many awards and accolades, would prefer to remain, anonymous and a student, till his last breath
பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
Prasna Marga is an ancient branch of horoscopic astrology by which an astrologer attempts to answer a question by constructing a horoscope for the exact time and place at which the question was received and understood by the astrologer. A common misconception is that the horoscope must be constructed for the place and time the querent establishes the question. In the previous centuries this issue did not create any problems as the astrologer would consult with the querent face to face. These days the querent could be in Africa and send an email with the question to an
astrologer in Australia. Hence, it is necessary to emphasize the point.
The answer might be a simple yes or no, but is generally more complex with insights into, for example, the motives of the questioner, the motives of others involved in the matter, and the options available to him. History Prasna Marga has been practiced for centuries in India known as Prasna Shastra (Sanskrit prasna = question). It is a branch of Vedic astrology which is still widely used across the Indian subcontinent. The more advanced form is the Astamangalam Prasna and Deva Prasna methods of Kerala. The state of Kerala, in India, is famous even today for its traditional use of Prasna Marga.
++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்

சதன் த்ம்பூரான் மன்னரின் அரண்மனை
வாழ்க வளமுடன்!