மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.21

ஆன்மீகம்: அறுபடை வீடுகள்


ஆன்மீகம்: அறுபடை வீடுகள்

இன்று செவ்வாய்க் கிழமை: முருகனுக்கு உகந்த நாள். முருகனை வழிபட்டால் நமது கஷ்டங்கள் யாவும் தீரும். ஆகவே வழிபடுவோம் வாருங்கள்1111

அறுபடை வீடுகள் என்பவை தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனை வழிபடும் சிறப்பு வழிபாட்டு இடங்கள் ஆகும்.

முருகனின் திருவருளைப் பெற எங்கு சென்று வழிபட வேண்டும் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தி (வழிகாட்டியுள்ளார்) உள்ளார்.

நக்கீரரால் முன்வைக்கப்பட்ட ஆறுதிருத்தலங்கள் ஆற்றுப் படை வீடுகள் என அழைப்பட்டு பின் அறுபடை வீடுகள் என மருவி விட்டன. அறுபடை வீடுகளாவன

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழநி

4. சுவாமி மலை

5. திருத்தணி

6. பழமுதிர்ச்சோலை 

இன்று முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் என்னும் ஸ்தலத்தைப் பார்ப்போம்!!!!



இவ்விடம் முதலாவது படைவீடாகும். இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டுக்கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ்விடம் சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றியதற்காக தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மகள் தேவயானையை முருகப் பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்த இடம் எனக் கருதப்படுகிறது.

ஆறுபடை வீடுகளில் இவ்விடத்தில் தான் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகனுக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அபிசேகங்கள் முருகனின் வேலுக்கு நடத்தப்படுகிறது.

சிவனை நோக்கி தவமிருந்த முருகனுக்கு சிவன் தை பூசத்தில் காட்சியருளினார். எனவே இங்கு தைப்பூசமும், வைகாசி விசாகமும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.21

Astrology: அலசல் பாடம்: விவாகரத்தாகி மறுமணம் செய்துகொண்ட அன்பரின் ஜாதகம்


Astrology: அலசல் பாடம்: விவாகரத்தாகி மறுமணம் செய்துகொண்ட அன்பரின் ஜாதகம் 

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். 

அன்பருக்கு முதல் திருமணம் பிர்ச்சினையாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஆனாலும் இறையருளால் அனபருக்கு மறுமணம் நடந்து ம்கிழ்ச்சியாக இருக்கிறார். 

முதல் மணம் மூறிந்த்தற்கும், இரண்டாவது திருமணம் உடனே ஆனதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்? 

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம் 

அன்பர் துலா லக்கின ஜாதகர். ஏழில் ஆட்சி பலத்துடன் உள்ள செவ்வாயால் முதல் திருமணம் பிரச்சினையில் முடிந்து விவாகம் ரத்தும் ஆகிவிட்டது. 

ஆனால் களத்திரகாரகன் சுக்கிரன் 9ம் வீட்டில்திரிகோணத்தில் இருப்பதுடன், குரு பகவானின் பார்வையையும் பெற்றிருப்பதால் இரண்டாவது திருமணம் கூடி வந்தது! 

அதை மட்டும் கூறியுள்ளேன்.


அன்புடன்

வாத்தியார்

---------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.8.21

Astrology கோள்களும் அவற்றின் சாரமும்! பகுதி 2




Astrology கோள்களும் அவற்றின் சாரமும்!  பகுதி 2 

கோள் என்றால் கிரகம் (planet) என்று பொருள்படும். சாரம் என்றால் தாவரம், இலை, மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பெறும் சாறு.essence. அதாவது  எடுக்கபெற்ற சாரம். 

கட்டட வேலைகளுக்கு, உயரமான இடத்தில் இருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டிக் கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பும் சாரம் என்றுதான் சொல்லப்படும் ஆங்கிலத்தில் scaffolding என்பார்கள். 

சஞ்சாரம்  என்றால் நடமாட்டம் என்று பொருள்படும். (of human beings) movement. for animals roaming 

சரி, கோள்சாரம் (கோச்சாரம்) என்றால் என்ன? கோள்களைப் பிழிந்து எடுக்கும் சாறா? அல்லது சாரமா? கோள்களைப் பிழிந்து எடுப்பதா? அதெப்படி முடியும்? இங்கே அதன் பொருள் கோள்களின் நடமாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

கோள்களின் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொள்வதால் என்ன பயன்? அதை சற்று விரிவாக, உங்களுக்குப் புரியும்படி   சொல்லித் தருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 

இன்றைய கோள்கள் எங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன?  

உங்களுக்குப் பலமுறை சொல்லிக்கொடுத்துள்ளேன். அதன்படி எந்த நாளுக்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திற்கும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.26-8-2021 அன்று மாலை 5 :00 மணிக்கு சிங்காரச் சென்னையில் இருந்து பார்த்தால் கோள்களின் நிலவரம் கீழே உள்ளபடி இருக்கும்


 

சூரியன், சிம்மத்தில் செவ்வாயும் சிம்மத்தில் சந்திரன், மீனத்தில் புதன் கன்னியில் சுக்கிரனும் கன்னியில் குரு கும்பத்தில் சனி மகரத்தில்  ராகு ரிஷபத்தில் கேது விருச்சிகத்தில்  உள்ளன. 

என்ன பலன்? ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறும். ஏன் மாறும்? 

சனியை எடுத்துக்கொள்வோம்.மகர ராசிக்காரர்களுக்கு ராசியில் சனி

கடக ராசிக்கார்ர்களுக்கு ஏழில் சனி

கும்ப ராசிக்காரகளுக்கு பன்னிரெண்டில் சனி

இப்படி பல விதமான அமைப்புக்கள். அவற்றிற்குத் தகுந்தமாதிரி கோச்சாரப் பலன்கள் மாறுபடும்

அவற்றை எல்லாம் ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்

பிக் அப் அண்ட் டிராப்பிற்கு இவ்வளவுதான் பாடம் 

அன்புடன்

வாத்தியார்

 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.21

Astrology Pick up and drop Post: கோள்களும் அவற்றின் சாரமும்!


Astrology Pick up and drop Post: கோள்களும் அவற்றின் சாரமும்!

கோள் என்றால் கிரகம் (planet) என்று பொருள்படும். சாரம் என்றால் தாவரம், இலை, மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பெறும் சாறு.essence. அதாவது  எடுக்கபெற்ற சாரம்.

கட்டட வேலைகளுக்கு, உயரமான இடத்தில் இருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டிக் கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பும் சாரம் என்றுதான் சொல்லப்படும் ஆங்கிலத்தில் scaffolding என்பார்கள்.

சஞ்சாரம்  என்றால் நடமாட்டம் என்று பொருள்படும். (of human beings) movement. for animals roaming

சரி, கோள்சாரம் (கோச்சாரம்) என்றால் என்ன? கோள்களைப் பிழிந்து எடுக்கும் சாறா? அல்லது சாரமா? கோள்களைப் பிழிந்து எடுப்பதா? அதெப்படி முடியும்? இங்கே அதன் பொருள் கோள்களின் நடமாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோள்களின் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொள்வதால் என்ன பயன்? அதை சற்று விரிவாக, உங்களுக்குப் புரியும்படி   சொல்லித் தருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இன்றைய கோள்கள் எங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன? 

உங்களுக்குப் பலமுறை சொல்லிக்கொடுத்துள்ளேன். அதன்படி எந்த நாளுக்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திற்கும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.26.8.2011 அன்று மாலை 5:00 மணிக்கு சிங்காரச் சென்னையில் இருந்து பார்த்தால் கோள்களின் நிலவரம் கீழே உள்ளபடி இருக்கும் 




இதை வைத்து எப்படி பலனைப் பார்ப்பது?

அது நாளைக்கு உரிய பாடம்!

இன்றைய பிக் அண்ட் டிராப் போஸ்ட் இவ்வளவுதான் சாமிகளா!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.21

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!!!


ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!!!


மேலே உள்ள ஜாதகம் கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதகம். என்ன, பகவானுக்குக் கூட ஜாதகமா என்று கருதாதீர்கள். ஜாதகம் என்பது ஜோதிட சாஸ்திரம். ஜோதிடம் என்பது வேத சாஸ்திரத்தின் அங்கம் என்பதால், சாஸ்திரத்தைக் கொடுத்த பகவானே, அதனை ஏற்றுக் கொள்கின்றான் என்பதற்காகத்தான், தனக்கும் ஒரு ஜாதகத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவதரித்து, செயலை முடித்துக் கொள்கின்றான். சரி, நமக்கும் ஜாதகம், பகவானுக்கும் ஜாதகம் என்ன வேறுபாடு? என்று கேட்கலாம்.

வேறுபாடு இருக்கிறது. நம் ஜாதகம் நமக்கு உரிய வினைகளின் அடிப்படையில் நன்மை, தீமை களைத் தர கிரகங்கள் விதிப்படி நிற்கின்றன. ஆனால், பகவான் தன்னுடைய செயல்களைத் தீர்மானித்துக் கொண்டு, அதற்குத் துணையாக இந்த கிரகங்களை ஆணையிட்டு நிற்க வைக்கிறார். கிரகத்தின் வசத்தில் நாம். பகவானின் வசத்தில் கிரகங்கள். இதுவே நுட்பமான வேறுபாடு. ஆன்மிக பக்குவம் உள்ளவர் விஷயத்திலே கிரகங்களின் விளையாட்டு எடுபடுவதில்லை. கிரகங்கள் அவர்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாதை அவர்களுக்கே தெரியும்.

இதோ, கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. பெரியவர்கள் சொல்லுவார்கள். இந்த கிருஷ்ணர் ஜாதகத்தை ஒரு முறை நாம் தியானித்தால், பூஜை அறையில் வைத்து வழிபட்டால், நாம் இனி பிறந்து, நமக்கு ஒரு ஜாதகம் எழுத வேண்டிய அவசியமே ஏற்படாது. இரண்டாவதாக பாண்டவர்களுக்கு எப்படிக் கண்ணன் துணையாக இருந்து காப்பாற்றினானோ, அப்படி நம் ஜாதக தோஷங்களை, கிருஷ்ணர் ஜாதகம் காப்பாற்றித் தரும் என்பதால், அந்த ஜாதகத்தைத் தந்திருக்கிறேன்

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.21

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு பாரமாக இருந்தார்.

அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!

14 வயதில் ராகு திசை ஆரம்பித்தது. லக்கினமும் ஏழாம் வீடும் கேது மற்றும் ராகுவின் பிடியில் உள்ளது,

அந்த அமைப்பு சின்ன வயதில் நிலையில்லாத வாழ்க்கையைத்தான் கொடுக்கும். ராகு திசை முடியும்போது - அதாவது ஜாதகரின் 31வது வயது வரை நிலைமை அப்படித்தான் நீடித்தது.

அதற்குப் பிறகு குரு மகா திசை துவங்கியவுடன் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.3 & 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் குரு பகவானின் சேர்க்கை நல்ல மாற்றங்களை உண்டாக்கியது. அத்துடன் 2ல் இருக்கும் லக்கினாதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ள 2 & 11ம் அதிபதி புதன் ஜாதகனுக்கு நல்ல பணவரவையும் உண்டாக்கினார். ஜாதகன் மேன்மையுற்றான். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.21


Astrology:ஜோதிடம் : மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்!!!

 ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ரேவதி நட்சத்திரம். தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார் அன்பர். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில்  பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார். 

இப்போது இரண்டு கேள்விகள்:

1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம் என்ன?

2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்காக காரணம் என்ன? 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!! 

1. லக்கினத்தில் எட்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனும் ராகுவும் டெண்ட் அடித்து அமர்ந்திருக்கிறார்கள். அது நன்மையான அமைப்பு அல்ல!

2. ஆறாம் வீடும் பன்னிரெண்டாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் 6ற்கு ஒரு பக்கத்தில்செவ்வாய் மறுபக்கம் கேது. அதேபோல் 12ற்கு ஒரு பக்கம் சனி மறுபக்கம் ராகு

3. எட்டாம் வீட்டின் மேல் சனி மற்றும் செவ்வாயின் பார்வை.

4. 1 & 7ல் ராகு & கேது அமர்வு!

எல்லா தீய வீடுகளும் மேலும் கெட்டிருக்கின்றன

வழக்குகளுக்கு இதுதான் காரணம்!

-----------------------------------------

அதே போல் ஜாதகருக்கு கை கொடுக்கும் சூப்பரான அமைப்பும் ஜாதகத்தில் உள்ளது. அதனால்தான் அவர் போராடி வெற்றி பெற்று வழக்குகளை உதறிவிட்டு விடுதலையாகி வெளியே வந்தார்.

1. 8 மற்றும் 12ம் வீடுகளின் மேல் லக்கினாதிபதி மற்றும் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் பார்வை!

2. ஆறாம் வீட்டுக்காரர் சூரியன் சுப கர்த்தாரி யோகத்தில் - வழக்குகளை உதறுவதற்கு இவர் பெரும்பங்காற்றினார்

3. எட்டாம் வீட்டுக்காரர் சுக்கிரன் உச்சம் பெற்று லக்கின கேந்திரத்தில் அமர்ந்துள்ளது நன்மையான அமைப்பு

4. பன்னிரெண்டாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன்சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார்

----------------------------------------------

இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.21

Astrology: ஜோதிடம் திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!



Astrology: ஜோதிடம் திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!! 

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரம். திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார், எத்தனையோ சிபாரிசுகள் வைத்தும் தன் பெற்றோர்களை விட்டு வந்து தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். கணவனின் மனநிலைமையை எண்ணிப் பாருங்கள்! 

அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!! 

திருமண வாழ்விற்கு அமைப்பில்லாத ஜாதகம். ஏழாம் வீடு மொத்தமாகக் கெட்டுள்ளது, 7ம் அதிபதி புதன் லக்கினத்திற்கு 12ல் - விரைய ஸ்தானத்தில் (House of Loss). அத்துடன் செவ்வாயின் பார்வையுடன்,

லக்கினமும் சந்திர லக்கினமும் தனுசுதான். அந்த வீட்டிற்கு 7ல் சனீஷ்வரனும் கேதுவும் இருக்கிறார்கள். அந்த அமைப்பும் கெட்டுள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்தில். ஆனால் ராகுவுடன் கூட்டணி. மேலும் சனியின் பார்வையுடன். அந்த அமைப்பும் கெட்டுள்ளது. ஜாதகிக்கு திருமண வாழ்வு மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தவில்லை. 

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.21

Astrology: ஞோதிடம் மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!




Astrology: ஞோதிடம் மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர். அவருடைய 42வது வயதில் அவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிவிட்டார். அதிலிருந்து இவர் தனியாக அவதிப்படுகின்றார். குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் நிலைமையில் இல்லை. ஜாதகப்படி இந்தப் பிரிவினைக்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!! 

அன்பர் தனுசு லக்கினக்காரர். 10ம் வீட்டில் உள்ள சனீஷ்வரன் 7ம் வீட்டைப் பார்ப்பதோடு (10ம் பார்வை), ஏழாம் வீட்டுக்காரனனா புதனையும் பார்க்கிறார் (7ம் பார்வை). அத்துடன் சந்திரனுக்கு 7ம் வீட்டையும் பார்க்கிறார் (3ம் பார்வை), அவருடைய மகா திசை துவங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தனது வேலையைக் காட்டி பாதகங்களைச் செய்துவிட்டார், குடும்பம் பிரிந்தமைக்கு அதுவே காரணம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.21

Astrology: Pick up and  Drop post  13 யோகங்கள் {Luck} 

யோகங்கள்

ஒரு கிரகமோ அல்லது ஒரு ராசியோ பார்வையினாலோ அல்லது சேர்க்கையினாலோ மற்றொரு கிரகத்துடன் சம்பந்தப்படும்போது யோகங்கள் ஏற்படுகின்றன. 

ஒரு ஜாதகம் எப்படிப்பட்டது என்பதை தீர்மானிப்பதற்கு இந்த யோகங்கள் பயன்படும் 

யோகங்கள் பலவகைப்படும். 

கஜகேசரி யோகம், சரஸ்வதி யோகம் லெட்சுமி யோகம், ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் என்று பல யோகங்கள் உள்ளனஅவற்றைப் பற்ரி விரிவாக எனது வலைப் பதிவுகளில் எழுதியுள்ளேன். மேலும் புத்தகமும் வெளியிட்டுள்ளேன் 

அவற்ரைப் படித்து பயன் பெறுங்கள் 

சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் யோகங்கள் உரிய பலனை உங்களுக்கு வழங்கும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது

அன்புடன்

வாத்தியார்

=======================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.21

Astrology:இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!


Astrology:இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் (அதாவது செவ்வாயின் நட்சத்திரக்காரர்) அந்த இளைஞன் அவனுடைய 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?
 
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!

 விருச்சிக லக்கின ஜாதகம். 12ம் வீட்டில் ராகு. நடப்பு ராகு மகா திசை. 6ம் வீட்டுக்காரனான செவ்வாயின் அந்தரத்தில் விபத்து நடந்துள்ளது. சுக்கிர புத்தி அப்போது (sub period). துலா ராசியில் ராகு. அதுவும் அவர் செவ்வாயின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். அதனால் கடுகையான விபத்தும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


------------------------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.21

Astrology: ஜோதிடம் அலசல் பாடம்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: ஜோதிடம் அலசல் பாடம்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாக படித்து கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? 

ஜாதகத்தை அலசிப் பார்ப்போம் வாருங்கள்!!! 

கடக லக்கின ஜாதகம். 10ம் வீட்டில் வர்கோத்தம ராகு. 10ம் வீட்டுக்காரன் செவ்வாய் உச்சம் பெற்று 7ல் அமர்ந்ததோடு 10ம் வீடான மேஷத்தையும் தன்னுடைய விஷேச பார்வையில் வைத்திருக்கிறான். மேலும் 10ம் வீட்டுக்காரன் செவ்வாய் லக்கினகாரகன் சந்திரனுடன் சேர்ந்திருப்பது பிற மொழி ஆளுமையை வழங்கியுள்ளான். அத்துடன் குரு பகவானின் பார்வையும் 10ம் வீட்டின் மேல். இந்த அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து ஜாதகனுக்கு பிற மொழி ஆளுமையைக் கொடுத்தன. வாத்தியார் வேலையையும் கொடுத்தன!!!! 

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.21

Astrology: Pick up and Drop post 12 சுக்கிர மகா தசை பலன்கள்


Astrology: Pick up and  Drop post  12 சுக்கிர மகா தசை பலன்கள் 

முன்பாக கேது மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று சுக்கிர மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம்

சுக்கிர மகா தசை – 20 ஆண்டுகள் 

பொதுவாக சுக்கிரன் எப்போதும் நன்மையான பலன்களையே வழங்குவதாகவும், சனி எப்போதும் தீமையான பலன்களையே வழங்குவதாகவும் மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறாகும் 

எந்த கிரகமும் முழு நன்மையையோ அல்லது முழு தீமையையோ வழங்குவதில்லை. எந்த கிரகமும் மற்ற கிரகங்கள், மற்றும் சம்பந்தப்பட்ட வீடுகளைப் பொறுத்தே நன்மை தீமைகளை வழங்குகின்றன அதை மனதில் கொள்க!!! 

சுக்கிரன் ரிஷபத்தில் {சொந்த வீட்டில்} இருப்பின், அவருடைய மகா திசையில் சுகமான வாழ்க்கையை நல்குவார்.

துலாத்தில் இருப்பின் அவர் தன்னுடைய மகா திசையில் ஜாதகருக்கு அரசாங்க ஆதரவு, செல்வம், கீர்த்தி முதலியவற்ரை வழங்குவார். 

பகை வீடுகளில் இருப்பின், மனைவி குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, வைத்தியச் செலவு. உறவினர் நண்பர்களுடன் பகை ஆகியவை உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.21

வாத்தியாரின் புத்தகங்கள்


வாத்தியாரின் புத்தகங்கள்

 இதுவரை வெளிவநத வாத்தியாரின் புத்தகங்கள் மொத்தம் 6 தொகுப்பு நூல்கள் 

அவற்றில் தொகுப்பு இரடைத் தவிர மற்ற நூல்கள் தீரும் நிலையில் உளன. அதாவது அவைகள் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே பிரதிகள் உள்ளன. இதுவரை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்வது நல்லது. 

உடனே அதைச் செய்யுங்கள் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.21

Astrology ஒரே கல்லில் மூன்று மாங்காய்!


Astrology ஒரே கல்லில் மூன்று மாங்காய்! 

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துப் பறித்தால் எப்படி இருக்கும்? 

வாருங்கள் பார்ப்போம்! 

வாத்தியார் புதிதாக வாங்கியிருக்கும் மென்பொருட்களால் Combo Softwares for Astrology  அது சாத்தியப்படும்! 

எப்படி? 

அந்த் மென்பொருள் ஒரு தொகுப்பு மென்பொருளாகும். 

8 விதமான மென்பொருட்கள் அதில் உள்ளன. அதில்  மூன்று மென் பொருட்கள் உங்களுக்குப் பயன்படும் 

முதல் மென்பொருள்: 

உங்கள் ஜாதகத்தை முழுவிவ்ரங்களுடன் கணித்துக் கொடுப்பதுடன், அதில் உள்ள தோஷங்களுக்கு பரிகாரங்களையும் அது சொல்லும்1 

அதில் உள்ல விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்: 

1. உங்கள் பிறந்த தேதிக்கு உரிய நட்சத்திரம், திதி, லக்கினம் மற்றும் ராசி இருக்கும்

2.உப நட்சத்திரங்கள் இருக்கும்

3. ராசி கட்டம், நவாம்ச கட்டம், பாவ கட்டம் முதலியன இருக்கும்

4. வர்க்க அட்டவணைகள் இருக்கும்

5. அஷ்டகவர்க்க அட்டவணைகள் இருக்கும்

6. தசா, புத்திகள் முழுமையாக இருக்கும்

7. தசா அந்தரங்கள் இருக்கும்

8. கிரக நிலைகள் விபரம் இருக்கும் - சேர்க்கைகள், பார்வைகள் போன்றவை இருக்கும்

9 அஸ்தமனம், கிரக யுத்தம் விபரங்கள் இருக்கும்

10.கிரகங்களின் மொத்த பலம் விபரம் இருக்கும்

11.யோகங்கள் (Luck) விபரம் இருக்கும்

12. பாவங்களுக்கான (வீடுகளுக்கான) பலன்கள் இருக்கும்

13. நடப்பு மற்றும் அடுத்த திசைகளுக்கான பலன்கள் இருக்கும்

14.கிரக தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள் இருக்கும்

15. நட்சத்திற்கான பரிகாரம் இருக்கும்

16. திசைகளுக்கான பரிகாரம் இருக்கும்

17.கோச்சார பலன்கள் இருக்கும்

18. தொழில் அல்லது வியாபாரம் அல்லது வேலையில் உண்டாகும்  முன்னேற்றங்களுக்கான உகந்த காலங்கள் இருக்கும்

19. வீடு கட்டுவதற்கான உகந்த காலம் இருக்கும்

20.அஷ்டகவர்க்கத்திற்கான பலன்கள் இருக்கும் 

இவை அனைத்தும் 55 பக்கங்கள் (4 சைஸ்) என்ற அளவில் இருக்கும்

===========================================================

மாங்காய் 2

டிஜிட்டல் நூமராலஜி )Numerology)- எண் கணிதபடி உங்கள் பிந்த தேதிக்கான பலன்கள் 6 பக்கம் அளவில் இருக்கும்

============================================================

மாங்காய் 3

உங்களுக்கேற்ற ராசிக் கற்கள் விபரங்கள் 4 பக்க அளவில் இருக்கும் 

Total 65 Pages report in Tamil in PDF format

================================================

இவற்றை எப்படிப் பெறுவது? 

விருப்பம் இருப்பவர்கள் மட்டும் எழுதுங்கள்: வாத்தியார் உங்களுக்கு பதில் அளிப்பார்! 

அதற்கான மின்னஞ்சல் முகவரி: இந்த முகவரிக்கு மட்டும் எழுதுங்கள். Subject box – metion as 3 Mangos

spvrsubbiah@gmail.com 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------------- 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!