மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

8.10.11

Tribute to a Genius - மேதைக்கு ஓர் அஞ்சலி!

----------------------------------------------------------------------------------
Tribute to a Genius - மேதைக்கு ஓர் அஞ்சலி!
தனது அரிய கண்டுபிடிப்புக்கள் மூலம் நமது வாழ்க்கையை
மேன்மைப் படுத்திய திருவாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் (56) அவர்கள் காலமான
செய்திஉலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நாளிதழ்கள்
பலவற்றில் அதுதான் தலைப்புச் செய்தி.

அவர் ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பிலும், உங்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க அவர் புகழ்! வளர்க அவர் தந்துவிட்டுப்போன தொழில்நுட்பம்!!

An Icon who revolutionized Mobile Communications, Music, Movies And Modern Culture, Made Technology Beautiful, Ended The Region of  Personal Computers, And Changed our Lives

Jobs Takes Iway To Heaven, At 56, Loses Battle Against Cancer
- Tribute by Times of India' News Paper


நட்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
Apple founder, Steve Jobs, lost his battle with pancreatic cancer Wednesday (Oct. 5). He was 56. The Silicon Valley technological visionary reinvented the wheel with his company and, right up until his death, continued to deliver Apple products that would change the way we share and consume information.

"Steve's brilliance, passion and energy were the source of countless innovations that enrich and improve all of our lives," Apple said in a statement. "The world is immeasurably better because of Steve."

Jobs co-founded Apple Inc. in 1976 with Steve Wozniak. The pair built the Apple 1 in Jobs' parents garage. Eight years later Apple would release the Macintosh and the rest is history. However, in 1986 Jobs would eventually be fired the company he built, only to return to save the company in 1996. With Jobs back in the fold, Apple Inc. would make a major comeback and release the iPod in 2001, followed by iTunes, the iPhone, the iPhone, and Jobs' latest invention, the iPad.

Jobs was diagnosed with a rare form of pancreatic cancer in 2004. In 2009, the tech titan underwent a liver transplant. He stepped down as Apple's CEO in August stating that he could "no longer meet [his] duties and expectations
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

26.5.11

என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?

---------------------------------------------------------------------------------
என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?

இப்போது புதிதாகப் பதிவு எழுதுபவர்கள் நாளும் பொழுதுமாய்
அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக்குச் சென்று ஒரு
பாக்கெட் கடலை  உருண்டை வாங்கிக் கொண்டு வருவதைவிட
’வலைப்பூ’  (Blog) ஒன்றைத்  துவங்குவது மிகவும் சுலபமானது. யார் வேண்டுமென்றாலும் 15 நிமிடங்களுக்குள் ஒரு கூகுள் மின்னஞ்சல்  கணக்கையும், Blogger கணக்கையும் துவங்கி, வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சுயமாக எழுதலாம். அல்லது  கட் &
பேஸ்ட் செய்து எதை வேண்டுமென்றாலும் எடுத்து எழுதலாம்.

24.12.2005ல் முதன் முதலில் நான் எழுதத் துவங்கிய காலத்தில்
சுமார் 500 பேர்கள் மட்டுமே வலைப்பூக்களில்  எழுதிக்
கொண்டிருந்தார்கள்.

இப்போது எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள்?

தமிழ்மணம் என்னும் வலைப்பூக்களை ஒருங்கிணைக்கும் தளத்தின்   
(Tamil Blog Aggregator) புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும். கீழே கொடுத்துள்ளேன்.

மொத்தப் பதிவுகள் (Blogs) : 9270
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் (Posts) : 399
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் (Comments) : 3419

எழுதப்பெறும் அத்தனை பதிவுகளையும் படிக்க முடியுமா?

முடியாது. முடியவே முடியாது. வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பவனுக்குக்கூட அது சாத்தியப்படாது.

அரசியல், சினிமா, நகைச்சுவை என்னும் தலைப்பில் வரும் பதிவுகளை பலரும் விரும்பிப் படிப்பார்கள்

அப்படி எழுதப்பெறும் பதிவுகளில் அதிகமான பேர்களை இழுக்கும் பதிவு அல்லது அதிகமான பேர்களைப்  படிக்க வைக்கும் பதிவு என்றால் ‘இட்லி வடை’ வலைப் பதிவைச் சொல்லலாம் (சுட்டி உள்ளது. பாருங்கள்)

கதை, கவிதை, இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றை எழுதும்
பதிவுகளுக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும்.

நமீதாவைப் பற்றி எழுதினால் கூட்டம் அதிகமாக வந்து சேரும்
நாயன்மார்களைப் பற்றி எழுதினால் நாற்பது பேர்கள் கூட வந்து
படிக்க மாட்டார்கள்

அனுஷ்கா சர்மாவின் படத்தைப் போட்டால் அனைவரும் பார்ப்பார்கள். ஆண்டாளின் படத்தைப் போட்டால், நீங்கள் கூவி அழைப்பவர்கள்
மட்டும்தான் வந்து பார்ப்பார்கள்.

எப்படிக் கூவி அழைப்பது?

பலரது மின்னஞ்சலையும் சேர்த்துவைத்துக்கொண்டு, ஆண்டாளின்
அல்லது ஆழ்வார்களின் படத்தைப் போட்ட  பிறகு, அவர்களுக்கு
மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்து அழைக்க வேண்டும்.

எனக்கு தினமும் சில மின்னஞ்சல்கள் வரும். ”சார் நீங்கள் என்னுடைய பதிவை வந்து படித்து, உங்கள் கருத்தைச்  சொல்ல வேண்டுகிறேன்”

எதை எதைப் படிப்பது? என்ன கருத்தைச் சொல்வது? எல்லாவற்றிற்கும்
நேரம் வேண்டாமா?

இதுதான் நிலைமை
-------------------------------------------------------------------------
பதிவு எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு உந்துதல் இருக்கும். நமது
பதிவைப் பலபேர்கள் வந்து படிக்கவேண்டும்  என்ற ஆர்வம்
இருக்கும். பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு ஐம்பது பின்னூட்டமாவது விழுக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் துவக்கத்தில் அதெல்லாம் நடக்காது.

நான் ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். முதல் ஆறு மாதங்களில்
தினமும் 30 பேர்கள்கூட வந்து படிக்க  மாட்டார்கள். Static Counter
வைத்திருந்தால் வருகிறவர்களின் எண்ணிக்கை தெரியும்.

நான் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதிக் கொண்டிருந்தேன். என் சிந்தனைகளை,  கருத்துக்களை,
ஆவணப் படுத்துகிறோம் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்
எழுதத் துவங்கினேன்.

இன்றுவரை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

சிலர் வேறு ஒரு உபாயத்தைக் கடைப் பிடித்தார்கள். தினமும்
குறைந்தது ஒரு ஐம்பது பதிவுகளுக்காவது சென்று  பின்னூட்டம்
போட்டு விடுவார்கள். அடுத்த நாள் வேறு ஒரு 50 பதிவுகள். இப்படி
சுழற்சி முறையிலொரு 300 பதிவுகளைத் தொடர்பில்
வைத்திருப்பார்கள்.

அந்த 300 பேர்களில் ஒரு 200 பேர்களாவது வந்து இவருடைய  பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவார்கள். அதாவது உனக்கு நான்.
எனக்கு நீ என்னும் உபாயம். இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார்கள்.  
‘முதுகு சொறிந்து விடுதல்’ என்று பெயர். உனக்கு நான் முதுகு சொறிந்துவிடுகிறேன். எனக்கு நீ முதுகு சொறிந்துவிடு!’

நிலைமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?
----------------------------------------------------------
எழுதுகிறவர்களுக்கு யோசனை சொல்லும் முகமாக ஐந்து ஆண்டு
களுக்கு முன்பு நான் இரண்டு பதிவுகளை  எழுதினேன். அதை
உங்களுக்குத் தெரிவிக்கும் முகமாகக் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த இரண்டு பதிவுகளும் 23.8.2006 & 24.8.2006ம் தேதிகள் என்று
அடுத்தடுத்த தேதிகளில் வெளியாகின. பலரையும் அவைகள் உள்ளே அழுத்துக்கொண்டு வந்தன, அந்த வார ஆக்கங்களில் முதல் இடத்தைப் பிடித்தன.(அத்துடன் எனக்கு வாத்தியார் பட்டத்தையும் பெற்றுத் தந்தன. அத்துடன் நான் வகுப்பறை என்ற இரண்டாவது  வலைப்பூவையும்
துவக்கக் காரணமாக இருந்தன!)
==================================================
1
டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர்

(தொழில்நுட்பம் அப்படி என்னய்யா பாடு படுத்திவிடும் என்று எதிர்
மறையாக நினைப்பவர்கள் தயவு செய்து  பதிவை விட்டு விலகவும் - மற்றவர்கள் வருக! வருக!)

வருடம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.

ஞாயிற்றுக்கிழமைதான் சில பல விஷயங்களுக்குச் செளகரியம் அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை வருடத்தை மட்டும் மறக்காமல்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

இந்த வருடத்தின் பெரிய அதிசயம் -அதிசயம் என்றவுடன் 50 கிலோ கொடியிடை அதிசயத்தையெல்லாம் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
இது தொழில் நுட்ப அதிசயம். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லக்
கூடிய கைப்பெட்டிக் கணினி முன் நான்அமர்ந்திருக்கிறேன் .

என் நண்பன் சிலிக்கன் valley சிங்காரம் பரிசாகக் கொடுத்துவிட்டுப்
போனான். மூன்று பில்லியன் (எத்தனை  ஸைபர் என்று எழுத
வெல்லாம் நேரமில்லை) பிரச்சினைகள் அதில்  வகைப்படுத்தப்பட்டிருப்ப தாகவும், எந்தப் பிரச்சினைக்கும் அது நொடியில் தீர்வுசொல்லிவிடும்
என்றும் சொல்லி விட்டுப் போனான்

மெமோ அல்லது பிங்க் ஸிலிப் ஏற்பாடு செய்து விடுவேன் என்று
மிரட்டும் டீம் மானேஜரிலிருந்து, என்னை  வழியில் இறக்கி
விட்டுட்டுப் போடா என்று கலாய்க்கும் அலுவலகத்தோழி வரை,
வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழுந்தை முதல்,
பணத்தின் அருமையே இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரிய
வில்லை  என்று தொணதொணக்கும் பெரிசுகள் வரை, அது போன்ற
எந்தப் பிரச்சினையானாலும் தீர்வு சொல்லுமாம் இந்த  அதிசயம்!

நமக்கா பிரச்சினைகளுக்குப் பஞ்சம்? அடித்ததடா யோகம்! நம் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முடிவு  கட்டுவதோடு, லோக்கல் நண்பர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லி அசத்துவோம்
என்ற குதுகலத்தோடு  கணினி முன் நான் உட்கார்ந்திருக்கிறேன்

சிங்காரம் கொடுக்கும் போதே,Very Very User Friendly System. Booting
மட்டும் நீ செய். மற்றதையெல்லாம்  கழுத்தைப்பிடித்து அதுவே சொல்லிக்கொடுக்கும் என்று வேறு சொல்லி விட்டுப் போனான்

எதற்காக உட்கார்ந்திருக்கிறேன். கணினி என்னை அடையாளம்
கண்டு கொள்ள வேண்டாமா?

அதில் உள்ள Remote Sensor கருவிகள் எல்லாம் நான்தான் User என்று
தெரிந்து கொண்டவுடன் என்னுடன் பேச  ஆரம்பித்தது. 120 மொழிகள் அதற்குத் தெரியும். தமிழிலேயே, மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் என்று ஏழு வகைத் தமிழும் தெரியம்.

"உங்கள் பிரச்சினையின் வகையைச் (category) சொல்லுங்கள்" என்றது

"என்னுடைய வலைப்பூ (Blog)" என்றேன்

"Okay! அதில் என்ன பிரச்சினை?"

"நிறைய பார்வையாளர்கள் வரமாட்டேன் என்கிறார்கள்"

"ஏன்? நன்றாக எழுதுகிறிர்களல்லவா?"

"யாராவது வந்து படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்டாலல்லவா அது தெரியும்!"

"இதுவரை எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறீர்கள்?"

"சுமார் முப்பது பதிவுகள் போட்டிருக்கிறேன்"

"ஒன்றில்கூட பின்னூட்டம் இல்லையா?"

"எதிர்பார்த்த அளவு இல்லை1"

"உங்கள் URLஐச் சொல்லுங்கள் - நான் போய் தேவையான அளவு மறு
மொழிந்து (பின்னூட்டம் போட்டு) விட்டு  வருகிறேன்"

"தமிழ் மணத்தில் அதெல்லாம் நடக்காது. சாத்தி விடுவார்கள். நேர்மையான யோசனை ஒன்று தேவை!"

"சரி, தமிழ் மணத்தில் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம்
தெரியுமா?"

"நன்றாகத் தெரியும். சுமார் ஒரு லட்சம் பேர்கள் எழுதுகிறார்கள்.பத்து
லட்சம் வாசகர்கள் வந்து போகிறார்கள்.  நாளொன்றுக்குச் சராசரிப்
பதிவே சுமார் 20,000 த்தைத் தாண்டுகிறது."

"ஓஹோ!.........சரி அதில் எத்தனை பேர்கள் உங்கள் வலைப்பூவிற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"

"ஆயிரம் பேர்களாவது வந்து போனால் நல்லது!"

"வேறு ஏதாவது உப எதிர்பார்ப்பு இருக்கிறதா?"

"ஆமாம், மறந்து விட்டேன் - ஜி. கெளதம்,கில்லி, கோவி கண்ணன்,
குமரன், செல்வன், சிவமுருகன், நாமக்கல்  சிபி, சுந்தர், தம்பி, தேவ்,
ஜி. ராகவன், நாகைசிவா, வசந்த், சந்திரவதனா, மியூஸ், டால்பின், இறைனேசன், வெற்றி, வெட்டிப்பயல், விடாது கருப்பு, மாயவரத்தான், ஞானவெட்டியான், ராஜதுரை, செந்தழல்ரவி, துளசி கோபால்,  குழலி,
என்று நூறு வலைப்பதிவர்களைக் குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.
அவர்கள் எல்லாம் வந்து போனால்நல்லது"

"அவர்கள் ஏன் வர வேண்டும்?"

"அவர்களெல்லாம் முன்னணி மற்றும் மூத்த வலைப்பூ பதிவாளர்கள்
கடந்த 20 வருடங்களாக வலையில்  எழுதிக்குவிக்கும் நட்சத்திரங்கள். அவர்களுக்குத் தமிழ்மணம் நிர்வாகமே ஐந்து நட்சத்திர அந்தஸ்தைக்  கொடுத்திருக்கிறது. அவர்கள் எந்தப்பதிவில் நுழைந்து பார்த்தாலும்
அவர்கள் பெயருடன் Five Starகளும் சேர்ந்து  பதிவாகும். அவர்கள்
எல்லாம் வந்து போனால் என் வலைப்பூவிற்கும் கெளரவமாக
இருக்கும்"

"அதெல்லாம் ஒன்றும் பிர்ச்சினையில்லை. அவர்களையெல்லாம்
உங்கடைய வலைப்பூவிற்குள் சுலபமாக  வரவழைத்து விடலாம்:

"எப்படி?"

"முதலில் தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர்களை வளைத்து வரவைக்க வேண்டும். அப்படி Heavy Traffic  உங்கள் வலைப்பூவிற்குள் ஏற்படும்போது, நீங்கள் சொல்லும் அந்த 100 ஸ்டார் பதிவாளர்களும்
என்ன நடக்கிறது  என்று பார்க்கும் ஆவலில் நுழைந்து விடுவார்கள்?

"லட்சம் பேர்களையா? அது எப்படி சாத்தியம்?"

"ஏன் முடியாது? மிகப் பெரிய பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்து விடுங்கள்!"

"பரிசுத் திட்டமா - அதுவும் தினமும் ஒரு லட்சம் பேருக்கா?"

"தினமும் வந்து போகிறவர்களுக்கு மாதம் ஒரு முறை பரிசளிக்கலாம்.
வந்து போகிறவர்களைக் கணக்கெடுத்து -  அவர்கள் Blog Identification 
Number + Bank Account Number க்கெல்லாம் பணம் அனுப்புவதற்கு
Softwareஐஉங்கள் வலைப்பூவிலேயே பொருத்தி விடலாம்"

"அய்யோ சாமி..அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?"

"எங்கேயும் போகவேண்டாம். திட்டம் அறிவித்த நான்காவது நாளே
Hit Counter - Visitors Country Counter எண்ணிக்கைகளை வைத்து Sponsor
களைப் பிடித்து விடலாம்.Pepsi, Coke, Wall - Mart, Gap,Hundai, Suzuki, 
Mitsubhishi, Reliance, Atrtel, Tata, BSNL Cellular Service, Indian Oil, 
Hindusthan Lever என்று பல கம்பெனிகள்  பணத்தைக் கொட்ட
ஆரம்பித்து விடுவர்கள். அதிலிருந்து கொடுத்து விடலாம்"

"கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடக்க வேண்டுமே?"

"நடக்கும் - நம்பிக்கைதான் அடிப்படை. ஆம்னி பஸ்ஸில் போகும்
போது ஊரில் கொண்டு போய்ச் சேர்ப்பாயா  என்று உறுதி கேட்டு
விட்டா ஏறுகிறோம்? ஒரு நம்பிக்கையில் தானே ஏறுகிறோம். அதுபோலத்தான் இதுவும்!"

"வேண்டாம் - நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - வேறு நல்ல
யோசனை இல்லையா?"

"இருங்கள் வருகிறேன் - Please Wait!" என்று சொல்லிய கணினி 60 செகண்டுகளூக்குமேல் எதையோ குடைந்து  படித்து (Read) விட்டு
மீண்டும் பேச ஆம்பித்தது.

"இரண்டு இறுதியான யோசனைகள் உள்ளன - ஒன்று வலைப்பூவில் எழுதுவதை நிங்கள் நிறுத்தி விடலாம்"

"அது சாத்தியமில்லை - என் எழுத்துத் தாகத்தைக் கட்டுப்படுத்த
முடியாது - இரண்டாவது யோசனை என்ன?"

"அப்படியென்றால் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் . இவ்வளவு
பேர்கள் வந்து போகவேண்டுமென்று  ஆசைப் படாதீர்கள் - எல்லாப் பிரச்சினைகளுக்கும் - துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமென்று
புத்தர் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் தெரியமா?"

"தெரியும்!"

"அப்புறம் என்ன? அதையே தீர்வாகக் கொள்ளுங்கள் - வரட்டுமா?"

"Okay My Dear Friend - Thank You Very Much !" என்று சொல்லிவிட்டு அந்தக்
குட்டிப் பிசாசை (என்  அகராதியில் இது செல்லமான வார்த்தை ) 
Shut Down செய்தேன்.

யோசித்துப் பார்த்தால் குட்டிப் பிசாசு சொன்ன கடைசித் தீர்வுதான்
எனக்குச் சரி என்று படுகிறது. நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------------
2
தலைப்பை நன்றாகப் போடு
தானாக வருவார்கள்

-------------------------------
எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?

எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?

எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு

எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்

உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்

பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே

நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?

தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்

பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே

இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே யுகே!

---------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

14.1.11

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

நீங்கள் இன்புற்று மகிழ, வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் பொங்கல் விடுமுறை! அடுத்த வகுப்பு 17.1.2011 திங்களன்று நடைபெறும்.

அன்புடன்,
நட்புடன்,
நேசத்துடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.12.10

அடியேன் வாத்தியாரான கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடியேன் வாத்தியாரான கதை!

எழுத்து என் தொழில் அல்ல! ஜோதிடமும் என் தொழில் அல்ல! செயற்கை இழைகளைச் சந்தைப்படுத்தும் முகவர் தொழிலைச் செய்து வருகிறேன். தீவிரவாசகன். அதோடு கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதுகிறேன்.

அதுஎன்னுடைய போதாத நேரம். உங்கள் மொழியில் சொன்னால்
It is not my good time!

கல்கி, கண்ணதாசன், எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சுஜாதா, பாலகுமாரன், வாரியார் சுவாமிகள், ஓஷோ, Jeffery Archer, James Hadley Chase என்று கலக்கலாகப் பலரது நூல்களையும் படித்ததால் எப்படி எழுத வேண்டும்
என்பதைவிட எப்படி எழுதக்கூடாது என்பது எனக்குப் பிடிபட்டது.

விளையாட்டாகப் பத்திரிக்கைகளில் எழுதத் துவங்கினேன். எழுத்து மோகினி என்னப் பிடித்துக்கொண்டு விட்டாள். அவள் அழகில் மயங்கியவன், அவளின் வற்புறுத்தலுக்காக பதிவுகளில் (Blogs) எழுத ஆரம்பித்தேன்.

“எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”


என்பதுதான் எழுத்தின் தாரகமந்திரம்.

ஆன்மிகக் கட்டுரைகள், சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள், ஜோதிடக் கட்டுரைகள் என்று  எழுத்தின் எல்லாப் பரிமாணத்தையும் தொட்டு எழுதுகிறேன்.

பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகளையும் இரண்டு கட்டுரைத் தொடர்களையும் எழுதியிருக்கிறேன். 4 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதன் மூலம் எனக்கு சுமார் 20,000 வாசகர்கள் உள்ளார்கள்.

என் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் அனைவரும் என்னுடைய
எளிமையான மற்றும் சுவையான நடைக்காகத்தான்  இங்கே வந்து
படிப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்காகத்தான் ஊக்கத்துடன்
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஜோதிடத்தை எழுதுவதால்தான் இங்கே இவ்வளவு எண்ணிக்கை என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால்,  அது தவறு என்பதை மனதில் கொள்ளவும். உணராதவர்கள், அதை உணர்வார்கள்.

குடுவைகள், ரசாயனக் கலவைகள், சோதனைச் சாலைகள் என்று வைத்து ஜோதிட ஆராய்ச்சிகள்  செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தில் பட்டம் பெற்ற எனது  மாணவர்களில் சிலர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! இறையருளால்  அவர்களுடைய ஆராய்ச்சிகள் வெற்றி பெறட்டும்!

எனக்குத் தெரிந்தவற்றை, நான் கற்றவற்றை, இங்கே என் மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.  ஜோதிடம் பெரிய கடல். அதை எவருமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆயுள் பத்தாது.

நான் கற்றுக்கொண்டது கையளவுதான். இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

 “போற்றுவார் போற்றட்டும் - புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும்!”


எழுத்தைக் கையில் பிடித்தவனுக்கு உள்ள தாரக மந்திரம் இது!

நான் எழுதவில்லை. பழநிஅப்பன் என்னை எழுத வைக்கிறான். எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

தூற்றல்களையும் புழுதிகளையும் மட்டும் என் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


இது ரேசன் கார்டையும், உத்தியோக உத்தரவையும் வைத்துக்கொண்டு
நான் தேடிப்பெற்ற பட்டப் பெயரல்ல. உங்கள் மொழியில் சொன்னால் அடையாளப் பெயரல்ல! பல்சுவை என்ற பதிவில் (http://devakottai.blogspot.com/)
நான்  எழுதிக்கொண்டிருந்த காலத்தில் பதிவுலக நண்பர்களால் வழங்கப்
பெற்ற பெயர். அந்தப் பெயருக்காகவே நான் ‘வகுப்பறை’ என்ற
வலைப்பூவைத் துவங்கியது தனிக்கதை!

மனத்திருப்தி ஒன்றுதான் சமபளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  
2,049 மாணவர்கள்தான் போனசாகக் கிடைத்திருகிறார்கள்.  
அவற்ரைவிட உயர்ந்தது  எது உள்ளது?

வாழ்க வளமுடன்!

5.12.10

மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!

பாரதிராஜா  படங்களில் வரும்  ஒரு  கிராமத்தை  நினைத்துக்
கொள்ளுங்கள். அங்கே நாட்டாமைக்காரனின் வீடு.

அன்று துவாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள்.

நாட்டமைக்காரரின் மனைவி அதிகாலையிலேயே எழுந்து நன்றாக சமையல் செய்து, நாட்டாமைக்காரர் உட்பட, சொந்த பந்தங்கள் என்று மொத்தம் 20 பேர்களுக்கு சாப்பாடு பறிமாறினார்.

அற்புதம் என்று சொல்லியவாறு அனைவரும் சாப்பிட்டார்கள். துவாதசி ஆகையால் பாரம்பரியச் சமையல். கத்தரிக்காய் புளிக்குழம்பு, கருணைக் கிழங்கு கெட்டிகுழம்பு, லெட்சுமி குழம்பு (இது என்ன குழம்பு என்பதை வேறு ஒரு நாள் தனியாக எழுதுகிறேன்.) மஞ்சள் தூவி வாழைக்காய் பொரியல், பரங்கிக்காய் கூட்டு, புடலங்காய் துவட்டல், அகத்திக்கீரை பொரியல், மாங்காய் பச்சடி, வடை, பருப்பு, நெய், அப்பளம், அரிசி - வெல்லம், முந்திரி போட்டுப் பாயாசம், கெட்டித்தயிர், நெல்லிக்காய் ஊருகாய்.

சமையல் அதி ருசியாக இருந்தது. வந்திருந்த அனைவரும் ஒரு பிடிபிடித்தனர். நாட்டாமைக்காரரும் ஆனந்தமாகச் சாப்பிட்டார். வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர். நாட்டாமையின் மனைவி, தன் மகளைத் துணைக்கழைத்துக் கொண்டு, பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“மதியம் வருகிறேன். கதவைத் தாள் போட்டுக்கொள்ளுங்கள்” என்று நாட்டாமையிடம், ஒரு முறைக்கு, இரு முறைகள் சொல்லிவிட்டுத்தான் போனார்.

பகலில் எவன் வரப்பொகிறான் என்று நாட்டமையும் அதைச் செய்யவில்லை.

காலையில் வயிறுமுட்டச் சாப்பிட்டால் தூக்கம் வராதா என்ன? தூக்கம் கண்ணைச் சொருகியது. கயிற்றுக்கட்டிலை, முற்றத்துக்குச் செல்லும் நடையில் போட்டு, நாட்டாமை சற்று நேரம் கண் அயர்வோம் என்று படுத்துக்கொண்டார். தென்றல் வருட, நித்திராதேவி அணைக்க நாட்டாமை நன்றாகத் தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் மனதுக்கு இதமாக இரு கனவு!

நாட்டாமைக்கு பெரிய பதவி கிடைத்துவிடுகிறது. மத்திய அரசில் நிதி அமைச்சராகி விடுகிறார். கட்சிக்கும் அவர்தான் பொருளாளர். அவருடைய ஒரே மகளுக்கு, சென்னை ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ளது. அவருடைய நண்பர்களும், உதவியாளர்களும், கட்சித் தொண்டர்களும் திரளாகத் திரண்டு பம்பரமாக வேலை செய்கிறார்கள்.

முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்பு. அந்த விருந்தே, பதினோரு வகைப் பலகாரங்களுடன் அருமையாகப் பறிமாறப்பெற்றது. (அவைகள் என்று KMRK  கேட்டால் சொல்லலாம் என்றுள்ளேன்) மொத்தம் பத்தாயிரம் பேர்களுக்குமேல் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களில் கணிசமான அளவு பிரபலங்கள்.

பாதுகாப்பிற்காக வந்த காவல் துறையினரே 500 பேர்கள். மற்றவர்களை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

விடிந்தால் கல்யாணம்!

அப்போதுதான் அது நடந்தது.

முதுகில் பொளேர் என்று அடி விழுந்தது. எழுந்து உட்கார்ந்து விட்டார். கண்டது கனவு என்பதும், முதுகில் அடித்தது மனைவி என்றும் பத்து நொடிகளுக்குப் பிறகு புரிந்தது.

பகல் கனவு என்றால் பலிக்கும் என்பார்களே? விளங்காதவள் வந்து அடித்து எழுப்பிவிட்டாளே என்று கோபம் முட்டிக்கொண்டு வந்தது.

“ஏன்டா செல்லம் எழுப்பினே? தூங்கும்போது எழுப்பலாமா? எத்தனை பெரிய பாவம் தெரியுமா?” என்று பிரகாஷ்ராஜ் குரலில் இவர் கேட்கவும், அந்த அம்மணி அதற்குச் சற்றுக் குறையாத பாவத்துடன் பதில் சொன்னார்கள்.

“நல்லா இருக்குதே சாமி! இப்படிக்கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தூங்கினால் என்னத்தைச் சொல்வது? திருடர்கள் உள்ளே நுழைந்து இரும்பு அலமாரியை உடைத்து, உள்ளே இருந்த  வெள்ளிச் சாமான்களை
யெல்லாம் லவட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்? மொத்தம்
பத்துக்கிலோ வெள்ளிச்சாமானும் களவு போயிருக்கிறது. தங்க நகைகளெல்லாம் வங்கி லாக்கரில் இருப்பதால், தப்பிப் பிழைத்திருக்கிறது.”

நாட்டாமை கிஞ்சித்தும் கவலைப் படாமல் சொன்னார்: “ வெள்ளிச் சாமன்கள்தானே போயிருக்கிறது. கவலைப்படாதேடா செல்லம். அடுத்த வெள்ளாமையில் செய்து தருகிறேன். என் மகளின் கல்யாணத்தைப் பார்க்க விடாமல் எழுப்பிவிட்டாயே?”

“என்ன மகளின் கல்யாணமா? என்ன உளறுகிறீர்கள்” ஒன்றும் புரியாமல் அம்மணி அப்பிராணியாகக் கேட்டார்கள்.

“அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது” என்று சொன்ன நாட்டாமை, மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார் - விட்ட கனவு தொடரும் என்ற நைப்பாசையில்

உண்மைதான். மகளின் திருமணத்தைக் கண் குளிரக் காணும் அவரது மகிழ்ச்சி பெரிதா? அல்லது களவு போனதற்காக உட்கார்ந்து வருத்தப்படும் மனநிலை முக்கியமா?

நீங்களே சொல்லுங்கள்!

கிராமத்தானின் கதை என்று ஒரு பத்திரிக்கையில்முன்பு படித்த பத்து வரிக்கதை இது. ஊதிப் பெரிதாக்கி என்  நடையில் எழுதியிருக்கிறேன். 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?”

“என் நிலையும் அதேதான். வகுப்பறையில் பின் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத்தைத் தாண்டியதற்காக நான் மகிழ்ச்சி கொள்ளவா? அல்லது 4 வருட உழைப்பில் எழுதப்பெற்ற எனது பதிவுகள் திருட்டுப் போனதற்குக் கவலைப் படுவதா? எதைச் செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்!:-))))”

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

16.11.10

சுடப்பட்டது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுடப்பட்டது எப்படி?

முன்பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நன்றி!

அன்பர் கோவிந்தன் பதில் எழுதியுள்ளார். அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்.

http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அந்தத் தளத்திற்கான நுழைவு முகவரி மட்டுமே. கோப்புக்கள் உள்ள பகுதியின் சுட்டி கொடுக்கப்படவில்லை!

இரண்டாவதாக, http://gkgupthag.blog.com/ என்ற தளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளார். அந்த G.K.குப்தா  தன்னுடைய பதிவில் இப்படி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்:
-------------------------------------------------------------------------------------
 “Hello world! 
By gkgupthag

psssrf.org.in இணையதளத்தில் என் ஜாதகத்தை ஆன் லைன்னில் கணித்தேன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. அந்த இணையதள
இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும்
psssrf.org.in பலருக்கு தெரியவில்லை எனவே பல இணைய
தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து
psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம்
முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு
ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”
--------------------------------------------------------------------------------------
இணைய தளங்களில் சுடுவதுதான் அவரது பொழுதுபோக்காம். நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்?

சுடுவது என்றால் என்னெவென்று தெரியுமல்லவா?

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை.

என் வலைப் பதிவில் 1,941 பின் தொடரும் மாணவக் கண்மணிகள்
உள்ளீர்கள். திருவாளர் முகமது இஸ்மாயில்  போன்ற தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளீர்கள். உங்கள் உதவியுடன் அதைக்
கண்டுபிடிப்போம். அவரையும் எச்சரிப்போம்.

நமது வகுப்பறையில், உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை
அதிகாரி ஒருவரும் மாணவர். அத்துடன் சைபர்  க்ரைம்களில்
கைதேர்ந்த நிபுனர் ஒருவரும் எனக்குப் பரீட்சயமானவர்.
இதை நம் பதிவுகளைப் பிரதி எடுத்து படிப்பதற்கல்லாமல்  
வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துபவர்கள் மனதில்
கொள்வது, அவர்களுக்கு நல்லது!
-------------------------------------------------------------------------------------
அன்பர் கோவிந்தன் அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்:

“உங்கள் தளத்தில் 16.8.2010 அன்று 1,370 பிரிவுகளில் பதிவிடப்பெற்றுள்ள எனது ஜோதிடப்பாடங்கள் அனைத்தையும் உடனே நீக்குங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. உங்கள் மின்னஞ்சல்களுக்கு மிக்க நன்றி!”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
SP.VR.சுப்பையா

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 22:11
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com  
  
hi i am Govindan
want you want i am not use your database
data File download from http://www.4shared.com/
and http://gkgupthag.blog.com/
any information call to me Ok

thank
any information
main to me
vs2008w7@gmail.com
Gocindan
Pondicherry
++++==============================
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:08
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com
  
எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
-------------------------------------------------------------------
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:16
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com

எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
பதிப்புரிமை மீரல் இருப்பின் data base file-லில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


படத்தின் மீது கர்சரைவைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

14.11.10

இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

---------------------------------------------------------------------
 இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

அடியவன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில், என் எழுத்தாள நண்பர் ஒருவர் என்னை இப்படி எச்சரித்தார்.

“நீங்கள் பத்திரிக்கையில் செட்டிநாட்டு மண் வாசனைக்கதைகள் எழுதுவதைப்போல, ஜோதிடத்தையும் தனியாக  எழுதி, 'Copy Right’
உரிமைக்குப் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். அதுதான்
நல்லது. இணையத்தில் எழுதினால் அதைத் திருடிக் கொண்டு
போவதற்கு இணையத்தில் நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் திருட்டுப்போகும் அபாயம் உண்டு”

அதற்கு நான் சொன்னேன்:  “என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, என்னுடைய அறிவை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். எழுதிய பிறகு அதை ஆவணப் படுத்தும் முகமாக புத்தகங்களாக வெளியிடலாம் என்றுள்ளேன். என் எழுத்துக்கள் தனிதன்மை வாய்ந்தவை. நான்  என் ஸ்டைலில் எழுத உள்ளேன். அதைத் திருடுபவர்கள் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.”

ஒருபக்கம், இரு பக்கம் திருட்டுப்போனால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக வகுப்பறையில் எழுதப்பெற்ற  பாடங்கள் அனைத்தையும் ஒருவர் திருடி, தான் எழுதியதைப்போல பதிவிட்டுள்ளார். தொடர்ந்து செய்தும்  வருகிறார். அவர் பல ஜோதிட மென்பொருள்களை தான் தயார் செய்து விற்பதாகவும் தன் விலை விபரங்களையும்  எழுதியுள்ளார். அவைகளை அவர் தயார் செய்தாரா அல்லது அவைகளும் இதுபோலத் திருடப்பெற்ற  மென்பொருட்களா? கடவுளுக்கே வெளிச்சம். அவைகள் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

நம் வகுப்பறையில்  ‘பின் தொடர்பவர்கள்’ இன்றையத் தேதியில்
1,937 பேர்கள் இருக்கிறார்கள். அதுதவிர கூகுள்  ரீடர் வழியாகப்
படிப்பவர்கள் எண்ணிக்கை தெரியாது. மாதம் சராசரியாக ஒரு லட்சம்
ஹிட்ஸ் விழுகிறது. எவர் திருடி பதிவிட்டாலும், அவர்கள் 
கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.

என் பதிவுகள் திருடப்பெற்றுப் பதிவிடுவதை, நம் வகுப்பு மாணவக் கண்மணி ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு என் நன்றி

------------------------------------------------------------------------------------
from    DHANA SEKARAN
to    classroom2007@gmail.com
date    9 November 2010 17:37
subject    வகுப்பறை மாணவன்
mailed-by    gmail.com
Signed by    gmail.com

ஐயா!
    வணக்கம் தாங்கள் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள்  இந்த தளத்தில் உள்ளது. .

(psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237) நீங்கள் கவனித்து நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி!
------------------------------------------------------------------------------------
நானும் சென்று பார்த்தேன். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் சென்று பாருங்கள்


சுட்டி இங்கே!


நமது வகுப்பறையில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை பக்கங்களும் திருடப்பெற்று, அந்தத் தளத்தில் பதிவிடப்பெற்றுள்ளது. 1370 பிரிவுகளாகப் பதிவிடப்பெற்றுள்ளது. அத்தனையும் 16.8.2010 அன்று  வலையேற்றப் பெற்றுள்ளது. அத்தனை பக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றாமல், ஒட்டு மொத்தமாக பதிவில் ஏற்றப்பெற்றிருக்கிறது. அத்தனையும் copy & paste முறையில் பதிவிடப்பெற்றுள்ளது. சுமார் 2,000
பக்கங்கள் இருக்கலாம்.

நோகாமல் நொங்கு தின்பது இதுதான்!

இதைத் திருட்டு என்பதைவிடக் ‘கொள்ளை’ என்று சொல்லலாம்.

எனது எழுத்துக்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில பகுதிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவப்பு நிறத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

நீங்களும் சென்று பாருங்கள்.

கேள்வி 1: ‘திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தும் அந்தத் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு என்ன  செய்யலாம்?

கேள்வி 2: இனி எழுத உள்ள பாடங்கள் அனைத்தும் மேல் நிலைப் பாடங்கள். precise lessons அவைகள்  இதுபோல  திருடப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும் 


1

2

3


4

5

6


7

8
--------------------------------------------------------------------------------------
அததனை பதிவுகளும் 16.08.2010ல் பதிவிடப்பெற்றுள்ளதைக் கவனியுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-----------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
என் பெயர் கோவிந்தன் நேரம் கிடைக்கும்போது, இந்த முகவரிப் பக்கம் பூர்த்தியாகும் என்று குறிபிட்டுள்ளார். சுமார் 2,000 பக்கங்களைக் காப்பியடித்துப் பதிவு செய்தவர், இததனை மென்பொருட்களை விற்பவர், தன் முகவரியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை? பெயரும் உண்மைதானா? இல்லை அதுவும் பொய்யா என்பது தெரியவில்லை.

அலைபேசி எண் கொடுக்கப்பெற்றுள்ளது. 88709 - 74887 (ஏர்டெல் நம்பர்). மூன்று முறை முயன்றேன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வருகிறது. அந்த எண்ணைவைத்து அவரைப்பிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அதற்கு வழி இருக்கிறது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

31.7.10

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

   “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
    தென்றலே உனக்கேது சொந்த வீடு?
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு”


என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக எழுதினார். அவருடைய பாடல்கள்தான் எனக்கு வேதங்கள்.

இந்தப் பாடல்வரிகள்தான் என் எழுத்திற்கு அளவுகோல்!

நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது.

கமகமக்கும் குனேகா சென்ட்டுடன் வரும் அந்தக்காலக் 'குமுதம்' என்னை வாசிப்பிற்குள் இழுத்துச் சென்றது. 'பகடை பன்னிரெண்டு' என்னும் சித்திரத் தொடரை வாசிக்கத் துவங்கியவன், பிறகு அட்டை முதல் அட்டைவரை வாசிக்கும் ரசிகனானேன்.

நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவன். சிறு வயதிலேயே தமிழின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே எனது வாசிப்புப் பயணம் துவங்கி விட்டது.

தங்கள் எழுத்தால் என்னை மயக்கியவர்களைப் பட்டியல் இட்டால் மாளாது. குமுதம் ஆசிரியர் திரு.S.A.P அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள்
திருவாளர்கள் ராகி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மற்றும்
சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யன், கல்கண்டு ஆசிரியர்
தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெகச்சிற்பியன்,
விந்தன், நா.பார்த்தசாரதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று அனைவருடைய எழுத்துக்களும்
எனக்குப் பரீட்சயம்; விருப்பம்.

என்னை கவர்ந்தவர்களில் எழுத்தாளர் கல்கி அவர்களுக்குத் தனி இடம் உண்டு. அவருடைய 'பொன்னியின் செல்வன்' தொகுப்பைக்  ணக்கின்றிப்பலமுறைகள் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நாயகன் வந்தியத்தேவனுடன் நானும் குதிரையில் பயணித்திருக்கிறேன்.

அது எல்லாம் ஒரு இருபது வருட காலம். அவ்வளவுதான். பிறகு
கவிதைகளில் நாட்டம் கொண்டு பல கவிதை நூல்களைப் படிக்கத் துவங்கினேன். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்
மற்றும் அவருடைய எழுத்துக்கள் எனக்குத் தமிழில் ஒரு புதிய
பரிமாணத்தைக் காட்டின. கவிஞர். வாலி அவர்களின் கவிதைகள், பட்டுக்கோட்டையார், கவிஞர்.வைரமுத்து அவர்களின் கவிதைகள், தொடர்ந்து   செட்டிநாட்டுக்  கவிஞர்கள் திருவாளர்கள்  முனைவர்
அர.சிங்கார வடிவேலன், கவிஞர்.சோம. சிவப்பிரகாசம், ஆத்தங்குடிக்
கவிஞர் அழ.அண்ணாமலை,  கவிஞர் அரு.நாகப்பன், கவித்தென்றல் காசு.மணியன் என்று எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் முங்கி எழுந்தேன். நீந்திக் களித்தேன்.

பிறகு ஆன்மீகத்தின் பக்கம் பார்வை திரும்பியது. வாரியார் சுவாமிகளின் நூல்களும், சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களும்,ஓஷோவின் நூல்களும் மனதைப் புரட்டிப் போட்டன.

இடையில் James Hadley Chase, Jefferey Archer போன்ற பிரபலமான ஆங்கில நாவலாசிரியரின் நூல்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்தேன். அவற்றிற்கு இணை அவைதான். வேறு ஒன்றையும் இணையாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்து நடையைக் கொண்டது அவர்களின் ஆக்கங்கள்!

Jefferey Archer ரின் Twist in the tale என்னும் சிறுகதைத் தொகுப்பு அசத்தலாக இருக்கும். தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். சிறுகதை இலக்கணத்திற்கு அந்த நூலை அரிச்சுவடியாகச் சொல்லலாம்.

கதை சொல்லும் உத்தியை இந்த வாசிப்புக்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தன.எப்படி எழுத வேண்டும் என்பதைவிட, எப்படி எழுதக்கூடாது என்பதில் ஒரு பயிற்சி கிடைத்தது. அந்த  மாதிரி  நூல்களையும் படிக்க நேர்ந்தது.

சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும். எனக்கும் எழுத்து அவ்விதமே வசப்பட்டது. உண்மையைச் சொன்னால் என்னையறியாமல் எழுத்து  எனக்கு வசப்பட்டது. என்னை ஆட்கொண்டது!

இதுவரை 60 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும், சுமார் 100 குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளேன்.

எழுதியவற்றில் 60 சிறுகதைகளைத் தொகுத்து, புத்தக வடிவில் தவழ விட்டிருக்கிறேன். தொடர்ந்து மற்ற ஆக்கங்களும் புத்தகமாக வரும்!

சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து பத்தகமாக்கியுள்ளேன். கோவைக்கு பெருமை சேர்க்கும் விஜயா பதிப்பகத்தார் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

அந்தப் புத்தகத்தின் முகப்புப் பகுதியையும், பின் பகுதியையும், உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 104 பக்கங்கள் கொண்ட அந்த் நூலின் விலை ரூ.40:00. தனியாக உங்களுக்கு அனுப்பினால் கூரியர் செலவு ரூ25:00 ஆகும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள். எனது ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன் அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

பின்னூட்டத்தின் மூலம் அவர் இப்படிச் சொல்லியுள்ளார்:

////////ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத 
இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students. ////////

நான் எழுதாததைத் தேடிப்பிடித்து அவர் எழுத வேண்டாம். நான் எழுத உள்ளதற்காகக் காத்திருந்து எழுதவும் வேண்டாம். அது சாத்தியமில்லை. எழுத்திற்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. இருக்கவும் கூடாது.

அவருக்கு ஒரு வேண்டுகோள். அவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.

“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும் 
முடியாது. அது பொதுச் சொத்து.

எழுதுவதை நன்றாக எழுத முடியும் என்றால், யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நம் வகுப்பறையில் இன்றுள்ள 1685 மாணவர்களில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கும், 
ஜப்பான் மைனருக்கும் ஆர்வமும், திறமையும் இருக்கிறது. இருவரும் 
வலைப் பதிவைத் துவங்கி எழுதலாம். ஜோதிடம் என்று இல்லை. எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். எழுதுவது உபயோகமாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்!

திருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களைப் போல, தஞ்சை திரு.K.M.R.கிருஷ்ணன் அவர்களைப் போல நானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.


அன்புடன்,
வாத்தியார்                                  


வாழ்க வளமுடன்!

23.7.10

அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

அன்பிற்கு உரியவர்களே, கீழ்க்கண்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:-

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact "RED SOCIETY"
    99402 - 17816. They will help that children for their studies.

2. There is a Website: www.friendstosupport.org Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.

3. Engineering Students can register inwww.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped children..! Contact:- 9842062501 & 9894067506

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact : 045420-240668,245732, "Helping Hands are Better than Praying Lips"


6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into near by any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.

-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.   "TREES DO IT FOR FREE" "Respect them and Save them"

9. Special phone number for Eye bank and Eye donation 044 - 28281919 and 044 - 28271616 (Sankara Nethralaya Eye Bank)  For More information about how to donate eyes plz visit these sites. . .
  http://www.kannoli.com/eyebank.html
  http://ruraleye.org/

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. Contact: 99167 - 37471

11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your home in India and food gets     wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline. They will come and collect the food .Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.
-- P.Dinesh Kumar

--------------------------------------------------------------------------
நம் வகுப்பறை மாணவர் பாலமுருகன் இதை அனுப்பியிருந்தார் அவருக்கு உங்கள் சார்பில் நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வாத்தியார் அவசர வேலையாக வெளியூர்ப் பயணம், அத்துடன் ஊருக்குப் புறப்படும் முன்பாக வாத்தியாரின் அகல வரிசை இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. தகறாறு மட்டும் செய்தது. அதனால் வழக்கம்போல பதிவின் மூலம் உங்களிடம் சொல்லி விட்டுச் செல்ல முடியவில்லை! மன்னிக்கவும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

7.7.10

Hide & Seek game by blogger.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Hide & Seek game by blogger.com

ப்ளாக்கரின் கண்ணாம்பூச்சி ஆட்டம்!

ப்ளாக்கர் அமைப்பு நேற்று தன் செல்வங்களுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியது.

நம்முடைய ப்ளாக்கர் தளத்தில் இருந்து பின்னூட்டங்களை (comments) பதிவிற்கு அனுப்பினால், போகாது. நீ செய்வது தவறு என்று சொல்லும். அத்துடன் கட்டிய கண்களை அவிழ்த்தும் விடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சிரமப்பட்டு அனுப்பினால், முதலில் பின்னூட்டங்கள் பதிவிற்குச் செல்வது மாதிரிப் போய்விட்டுத் திரும்பவும் இங்கே வந்து அமர்ந்து கொண்டுவிடும். அல்லது வராது காணாமல் போய்விடும். நமது மின்னஞ்சல் பெட்டியில் போய் உட்கார்ந்து கொள்ளும். அங்கே போய் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம்

மாலையில் நமது முத்துராமகிருஷ்ணர் அவர்களும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு, ஆட்டத்தில் இருக்கிறார் என்று தெரியவந்தது. நாங்கள் எல்லாம் ஆடும் வயதைத் தாண்டி விட்டோம் என்பதும், ஆடுவதற்கு வேண்டிட தொழில்நுட்ப அறிவு எங்களுக்கு இல்லை என்பதும் ப்ளாக்கருக்குத் தெரியாது. அதுதான் சோகம்

Error approving moderated comments - error code bx-03qgph என்பது மட்டுமே தெரியவரும். சுமார் 4 மணி நேர (இரண்டு பதிவுகளை எழுதும் நேரம்) போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியில்லை என்று ப்ளாக்கர் உதவிக் குழுவிற்குச் சென்று பார்த்தால், அங்கே நூற்றுக் கணக்கான பேர்கள் நமக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் ஆண்டவர், நேரடியாக அருள் பாலிக்காமல், இதற்கென்று, ப்ளாக்கர் அரங்கம், உதவிக்குழு என்று இரண்டு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பத்து அல்லது நூறு பேர்கள் என்றால், அவரால் நேரடியாக உதவி செய்ய முடியும். இன்றையத் தேதியில் 20 கோடிப் பேர்கள் என்றால் அவரால் என்ன செய்ய முடியும்?

ஒரு புள்ளி விவரம்:
Technorati currently states it is tracking over 112.8 million blogs, a number which obviously does not include all the 72.82 million Chinese blogs as counted by The China Internet Network Information Center. Blog statistics often concern the English language blogosphere but we should not forget about the millions of other blogs that are not always included in estimations.

கடைசியாக உதவிக்குழுவிடம் என்னுடைய பிரச்சினையைப் பதிந்துவிட்டு வந்தேன். அதில் இருக்கும் யாரோ புண்ணியவான் சரி செய்து இருக்கிறார். இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை. இன்று சரியாகும் என்று நினைக்கிறேன்

ஆகவே அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த பாடம் நாளைக்கு நடைபெறும். இன்றைக்கு வகுப்பறைக்கு வந்தவர்கள் நீங்களாகவே பழைய பாடங்களைப் புரட்டிப்பார்த்துவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

======================================================
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எங்களூரில் - கோவையில் நடைபெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக மாநாடு நடைபெறும் 5 தினங்களிலும் (23.6.2010 முதல் 27.6.2010 வரை) வகுப்பறைக்கு விடுமுறை.

தொலைக்காட்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒலிபரப்பப் படவுள்ளன! பிரம்மாண்டாக ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தகவல்களுக்காக தினமலர் நாளிதழ் தனி இணைய தளம் துவங்கியுள்ளது. அதில் அத்தனை விவரங்களும் காணக்கிடைக்கும். அதன் முகவரி http://tamil.dinamalar.com/

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார். அழைப்பு வந்தது. ஏற்றுக்கொண்டுள்ளார். பேசும் நாள், பேசும் நேரம், பேசவுள்ள அரங்கத்தின் பெயர், பேசவுள்ள உரையின் தலைப்பு பற்றிய விவரங்கள் 23.6.2010 அன்று காலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். முடிந்தவர்கள் வந்து நேரில் கலந்து கொள்ளலாம்.

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

10.6.10

Social Networking Sites - ஒரு பார்வை!

-----------------------------------------------------------------------------
Social Networking Sites - ஒரு பார்வை!

சமூக ஒருங்கிணைப்பு என்னும் பெயரில் நிறைய இணைய தளங்கள் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்:

Yaari.com
Jhoos.com
Flikker
Face Book
Hi5
Linkedin
Orkut
Tagged
Twitter

இதுபோன்ற தளங்களில் உறுப்பினர்களாக உள்ள நண்பர்கள் மற்றும் நமது வகுப்பறை மாணவர்கள் பலரிடம் இருந்து என்னையும் அவர்களுடைய தளத்தில் சேரச்சொல்லி எனக்குத் தினமும் குறைந்தது 10 அழைப்புக்களாவது வருகின்றன. நான் யாருடைய அழைப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை.

எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யாரி டாட் காம் என்னும் தளத்தில் என்னையும் சேரச்சொல்லி நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன? ஏது? என்று எதையும் தெரிந்து கொள்ளாமலேயே வந்த அழைப்பை, அதில் சொல்லியிருந்த இணைப்பைக் கிளிக் செய்து அதில் சேர்ந்துவிட்டேன்.

அதற்குப் பிறகுதான் துயரமாகிவிட்டது. தொல்லையாகிவிட்டது.

நான் ஆன்லைனில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து வைத்திருந்த சமயம், எனது Contact Folderல் இருந்த அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் (அதுசமயம் சுமார் 600 முகவரிகள்) யாரி’யின் சர்வர் எனக்குத் தெரியாமலேயே - என் அனுமதியில்லாமலேயே அள்ளிக் கொண்டுபோய் விட்டது. அத்தனை பேர்களுக்கும் நான் அனுப்பியதுபோலவே தங்கள் தளத்தில் சேரச்சொல்லி அழைப்பு அனுப்பிவிட்டது. எத்தனைபேர்கள் சேர்ந்தார்களோ தெரியாது.

ஆனால், தில்லியில் மிக உயர் பதவியில் இருக்கும் ஒரு வி.வி,ஐ.பி’க்கும் அந்த அழைப்பு செல்ல, அவர்கள் அலுவலகத்தில், அவருடைய முதன்மை உதவியாளர் டென்சனாகிவிட்டார்.

”நீ யார்? இந்த யாரி தளம் யாருடையது? எதற்காக ‘இவரை’ அதில் சேரச் சொல்கிறாய்? உனக்கு இவருடைய மின்னனஞ்சல் முகவரி எப்படிக் கிடைத்தது? 24 மணி நேரத்திற்குள் தகுந்த பதில அனுப்பவும். இல்லை என்றால், இந்த அழைப்புக் குறித்து, உன் பெயரில் சைபர் க்ரைமில் புகார் செய்ய நேரிடும்” என்று நீண்டதொரு மின்னஞ்சல் எனக்கு வந்தது.

நான் அவர்களுக்கு, என்னுடைய முழு முகவரி, தொலைபேசி எண்களுடன் தகுந்த பதில் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட அந்தப் பெரியவருடன் (V.V.I.P) தொலை பேசியில் பேசி மீண்டு வந்தேன். அது பெரிய கதை.

ஆகவே, இன்றும் பல முக்கியமான முகவரிகள் என்னுடைய Contact Folderல் இருப்பதால், நான் இதுபோன்று வரும் எந்த அழைப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதேபோல அழைப்பை நினைவுறுத்தி அடுத்தடுத்து வரும் தொடர் மின்னஞ்சல்களையும் கண்டுகொள்வதில்லை!

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அனுபவமே போதும்!

ஆகவே, யாரும் எனக்கு இதுபோன்ற அனாமதேயத் தளங்களில் சேரச்சொல்லி எனக்கு அழைப்பு அனுப்பவேண்டாம். அழைப்பை நீங்கள் அனுப்பியிருந்தாலும் சரி, வாத்தியாரிடம் இருந்து பதிலைக் காணவில்லையே என்று நினைக்க வேண்டாம்.

இதை ஒரு தன்னிலை விளக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------
மேலதிகத்தகவல்கள்
Social networking sites are not only for you to communicate or interact with other people globally but, this is also one effective way for business promotion. A lot of business minded people these days are now doing business online and use these social networking sites to respond to customer queries. It isn't just a social media site used to socialize with your friends but also, represents a huge pool of information from day to day living.

A social network service focuses on building and reflecting of social networks or social relations among people, e.g., who share interests and/or activities. A social network service essentially consists of a representation of each user (often a profile), his/her social links, and a variety of additional services. Most social network services are web based and provide means for users to interact over the internet, such as e-mail and instant messaging. Although online community services are sometimes considered as a social network service in a broader sense, social network service usually means an individual-centered service whereas online community services are group-centered. Social networking sites allow users to share ideas, activities, events, and interests within their individual networks.

The main types of social networking services are those which contain category places (such as former school-year or classmates), means to connect with friends (usually with self-description pages) and a recommendation system linked to trust. Popular methods now combine many of these, with Facebook, Bebo and Twitter widely used worldwide; MySpace and LinkedIn being the most widely used in North America;[1] Nexopia (mostly in Canada);[2] Bebo,[3] Hi5, Hyves (mostly in The Netherlands), StudiVZ (mostly in Germany), iWiW (mostly in Hungary), Tuenti (mostly in Spain), Decayenne, Tagged, XING,[4] Badoo[5] and Skyrock in parts of Europe;[6] Orkut and Hi5 in South America and Central America;[7] and Friendster, Mixi, Multiply, Orkut, Wretch, renren and Cyworld in Asia and the Pacific Islands and Orkut and Facebook in India.

There have been some attempts to standardize these services to avoid the need to duplicate entries of friends and interests (see the FOAF standard and the Open Source Initiative), but this has led to some concerns about privacy.

Although some of the largest social networks were founded on the notion of digitizing real world connections, many other networks as seen in the List of social networking websites focus on categories from books and music to non-profit business to motherhood as ways to provide both services and community to individuals with shared interests.

வாழ்க வளமுடன்!

13.1.10

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!

++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைக் கண்மணிகள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

அன்புடன்
SP.VR.சுப்பையா


வாழ்க வளமுடன்!

15.12.09

பண்பு இல்லாத சில பதிவர்கள்.


+++++++++++++++++++++++++++++++++++++++++
"எவன் தன் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ
அவனுக்கு வெப்பமும், குளிர்ச்சியும் ஒன்றுதான்.
இன்பமும், துன்பமும் ஒன்றுதான்.
பெருமையும், சிறுமையும் ஒன்றுதான்.
வறுமையும், செழுமையும் ஒன்றுதான்
நல்லதும் கெட்டதும் ஒன்றுதான்!."
- பரந்தாமன்.
------------------------------------------------------------

பண்பு இல்லாத சில பதிவர்கள்.

பண்பு என்பது அடிப்படைக் குணம்.

அது இல்லாதவர்களை என்ன செய்வது?

நாம் ஒன்றும் செய்ய முடியாது!

அதோடு அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.அது நம் வேலையும் அல்ல! அவர்கள் திருந்தாமல் அப்படியே இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. நாட்டிற்கு நல்லது. கலியுகத்திற்கு நல்லது!

அடிப்படைப் பண்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை இணையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படைப் பண்பு இல்லாதவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது.

வகுப்பறைக்கும், கழிப்பறைக்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களூக்குப் பாடம் நடத்த முடியுமா என்ன?

9.12.2009 ஆம் தேதிப் பதிவில் அவர்கள் 33 பின்னூட்டங்களை இட்டார்கள். அவற்றை நீக்கி விட்டு, இது உங்களுக்கான இடமல்ல என்று எச்சரித்தேன். நேற்றையப் பதிவில் அவர்கள் மீண்டும் வந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு நீக்காமல் வைத்திருக்கிறேன்

பார்க்காதவர்கள் சென்று பாருங்கள்.

பதிவு ஒன்று 9.12.2009
பதிவு இரண்டு 14.12.2009
----------------------------------------------------
இதற்குத் தீர்வு என்ன?

கூகுள் ஆண்டவரிடம் சொல்லி வகுப்பறைக்குக் காவல் போட்டிருக்கிறேன். அதுதான் தீர்வு!
அவர்களை மறந்து விட்டு, நாம் நமது வேலையைப் பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

9.11.09

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

7.11.2009 சனிக்கிழமையன்று மதியம், கோவை, குமரகுரு பொறியியற் கல்லூரியில், தமிழ்மணம் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி பயிலரங்க வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் சென்று
வந்தேன்.

நிகழ்ச்சி மதியம் 2:30 மணிமுதல் 4:45 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

அக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர்.திரு முத்துக்குமார் அவர்களூம். பேராசியர். திரு. தங்கமணி அவர்களும் நிகழ்ச்சிக்குச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்கள் கணினியில் தமிழின் மேன்மை குறித்தும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்தும் நல்லதொரு உரை நிகழ்த்தினார். சக பதிவர்
திரு.ரவி அவர்கள் (விக்கிபீடியா ரவி) தமிழில் கிடைக்கும் மென்பொருள் பற்றியும், தமிழில் தட்டச்சுவது பற்றியும் செயல்முறை விளக்கங்களை அளித்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்.

துவக்கத்தில் திரு. காசி ஆறுமுகம் அவர்களையும், INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்களையும் வந்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ளூம் வண்ணம் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள்

தமிழ்மணத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் ஏழு பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1. திரு.காசி ஆறுமுகம்
2.திரு.லாதானந்த்,
3.திரு. சஞ்சை காந்தி,
4. மரவளம்.திரு.வின்சென்ட்,
5. ecogreenunits திரு.எஸ்.கே.பாபு,
6. திரு.ரவி
7. அடியவன்

பயிற்சி வகுப்பிற்கு, அக்கல்லூரியில் கணினி பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்கள், சுமார் 36 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன். அதை நீங்கள் கண்டு மகிழக் கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா


பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்கள்

தொப்பியுடன் அமர்ந்திருப்பவர் பதிவர் சஞ்சை காந்தி, அவருக்குப்பின்னால் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.லதானந்த். அதேவரிசையில் இடது கோடியில் மஞ்சள் சட்டையுடன் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.ரவி.

திரு.கவியரசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி!

திருவாளர்கள் காசி.ஆறுமுகம், லாதானந்த்! பின் வரிசையில் அடியவன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

8.11.09

வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.

அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 850 பிரதிகள் விற்று விட்டன.

காரைக்குடியில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்வு ஒன்றில், வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,திருமண விழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 650 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை வாங்கிக்கொண்டு விட்டார்கள்.

மீதமுள்ள 150 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறும் 50 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!

விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும். புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில் உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.
அல்லது காசோலை (AWB Cheque) அல்லது வரைவோலை (Demand Draft) அல்லது மணியார்டர் (Postal Money Order) மூலமாக பணத்தை அனுப்பலாம்.

புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.

1. திரு.SM.வீரப்பன், துணைப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சிக் கோட்டம், திருச்சி (இவர் தீவிர வாசகர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர். அதோடு திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் அவர்களின் மூத்த சகோதரர்)

2. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை நீங்கள் படிக்க முடியும்!

எனது முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.

எனது இரண்டவது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.



+++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் புத்தகம் பிரதிகள் இல்லை. இரண்டாவது புத்தகம் 20 பிரதிகள் உள்ளன. அது வேண்டுபவர்கள் எழுதினால் பதிப்பகத்தார் அதையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!