மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Example Horoscopes. Show all posts
Showing posts with label Example Horoscopes. Show all posts

21.10.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று


Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகக் கொளாறுதான் காரணம்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

அது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதககிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து 10ல் உள்ளார். ஆகவே ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று

ஜாதகத்தில் ஒரு நல்லவனும், ஒரு கெட்டவனும் சேர்ந்திருந்தால் என்ன ஆகும்? அதை இன்று அலசுவோம்!

Association of Moon & Rahu

சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்

சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று விரிவாக விளக்குகிறேன்

சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருப்பது நன்மையானதல்ல!.

அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.

கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.

ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்துவிட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.

என்ன காரணம்?

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மையும் மிகுந்திருந்தது.

அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?

இல்லை!

லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.

12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்

விளக்கம் போதுமா?

ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.12

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர் சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின் துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 33 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 39 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம் இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர் எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும், அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்ததால் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால் கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும். ஆனால் சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 24 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள் என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 4 பரல்கள் குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது. ஓட்டை அண்டா.
11ஆம் வீட்டில் இருந்த 39 பரல்கள் அவருக்குப் பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப் நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின் மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. 12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும் பத்தாம் வீட்டில் (முக்கிய கேந்திரம்) இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது. அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர். மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் சராசரி கீழான நிலைமையில் இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதைவிடக் கெட்டதே அதிகமாக இருந்தது. பல சமயங்களில் அவர் தன் மனைவி, மக்களைப் பிரிந்தே இருக்கும்படியானது. அரசை எதிர்த்துப் போராட்டம்,  சிறை வாழ்க்கை, பொது மக்களைச் சந்திப்பதற்காக அதிகமான பயணம் என்று அவருக்கு வெளியுலகத் தொடர்பும், பொது வாழ்க்கையும்தான் மிகுந்திருந்தது.

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும் (லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது.

11. சந்திர ராசியில் ராகு சென்று டென்ட் அடித்து அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது. பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம் என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுத உள்ளேன். அவைகள் பிறகு புத்தகமாக வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.6.12

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

ஜாதக அலசல் பாடம்!

பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர்தான்!

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன்

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர்.

வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.

1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.

பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.

அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி,  இன்று அதைச் செய்திருக்கிறேன்.

கருத்து வேறுபாடு உடையவர்கள் பதிவை விட்டு விலகவும்.

கருத்து வேறுபாடு உடைய பின்னூட்டங்களுக்கும் அனுமதியில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன் படுத்துங்கள். தேமொழியின் அக்கா விக்கி காமாட்சி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த நமது வகுப்பறை மாணவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அன்பர் புவனேஷ்வர் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிறப்பு விவரம்
பிறந்த தேதி: 20.5.1894
பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
பிறந்த ஊர்: விழுப்புரம்
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: சிம்ம லக்கினம்
ராசி: விருச்சிக ராசி

இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்
படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!
----------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

337 வகுத்தல் 12 = 28 இது சராசரி பரல் கணக்கு
சுவாமிகளின் ஜாதகத்தில்
2ல் 30 பரல்கள் (வாக்கு ஸ்தானம்)
4ல் 28 பரல்கள்
5ல் 30 பரல்கள்
6ல் 33 பரல்கள்
8ல் 35 பரல்கள்
10ல் 28 பரல்கள்
---------------------------------------------------
சுயவர்க்கப் பரல்கள்:

சூரியன் 4 பரல்கள்
சந்திரன் 7 பரல்கள்
செவ்வாய் 4 பரல்கள்
புதன் 5 பரல்கள்
குரு 6 பரல்கள்
சுக்கிரன் 6 பரல்கள்
சனி 2 பரல்கள்

ஒரு கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 8 பரல்கள். 4 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும்.சுவாமிகளுக்கு 4 கிரகங்கள் அதிக பரல்களுடன் வலிமையோடு உள்ளன.
-----------------------------------------------------------
திரிகோண வீடுகள், கேந்திர வீடுகள், மறைவிடங்களுக்கான் பரல்கள்



திரிகோண்ங்கள் (1,5,9) = 79 பரல்கள்
கேந்திரங்கள் (4,7,10) =  83 பரல்கள்
இந்த 6 வீடுகளுக்கும் சராசரி 27 பரல்கள்

மறைவிடங்கள் (Inimical Houses)
3,6,8, 12 =  121 = சராசரி 30 பரல்கள்
லெள்கீக வாழ்க்கைக்கான அமைப்பில்லாமல் ஞான வாழ்க்கைக்கான அமைப்புத்தான் ஜாதகத்தில் உள்ளது
--------------------------------------------------------
 1. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.

2. சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.

3. அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு
6 பரல்கள்.

4. வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள் மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.

5. சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

6. சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச்  சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.

7. லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு

8. லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு

9. கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை  அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.

10. புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.  புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம், பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும்,  புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்

11. ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே  சந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.

12. சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள்,
மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்

13. தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.

14. ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.

15. விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்

16. ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்

17. ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்

சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
1
முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள்.  இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
2.
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின்
வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது - மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
3.
லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய  கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக்காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை  இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத்  துறவியாக்கிவிட்டான்

ஆயுள்
1
ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு  அஷ்டகவர்க்கத்தில் 35 பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
2
மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு  அவற்றிலிருந்து 12ம் வீடு - அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும்,
7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன்  அதிபதிகள் தான்
மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது
(அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி
அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
3
சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக்  கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.

------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

1.3.12

Astorology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்



Astrology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்

அலசல் பாடம்
1.3.2012

சுவாமி விவேகானந்தா அவர்கள் spiritual gaint of India என்ற பெரும் புகழைப் பெற்றவர்  இந்தியாவில் எத்தனையோ மகான்கள் தோன்றி/அவதரித்து, வாழ்ந்து, இறையடி சேர்ந்துள்ளார்கள். யாருக்கும் அந்தப் புகழ் கிடைக்கவில்லை. உலக மக்களால் நன்கு அறியப்பெற்றவர் ஒருவர் உண்டு என்றால், அது விவேகானந்தர் மட்டுமே!

1893 ஆம் ஆண்டு மதங்களுக்காக நடைபெற்ற மாபெரும் உலக மாநாட்டில் கலந்துகொண்டு, இந்து மதத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் அவர்.

அவரைப் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவல்ல!

இன்று அந்த மகானின் ஜாதகத்தை அலசுவோம்!

விவேகானந்தரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் விக்கி காமாட்சி அக்காவிடம் உள்ளது. கேட்டு வாங்கிப் படியுங்கள். அதற்கான தொடர்பு சுட்டி
http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
-----------------------------------
பிறப்பு விவரம்
12.1.1863ல் காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்
தனுசு லக்கினம்
ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசிக்காரர்
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 4 வருடம் 5 மாதங்கள் 1 நாள்

இயற்பெயர்: நரேந்திரநாத த்த்தா
ராமகிருஷ்ண மடங்களின் நிறுவனர்
ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் , ஜனன யோகம் என்று பல தலைப்புக்களில் அரிய நூல்களை எழுதியுள்ளார்.
1902ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் தேதி - தனது 39ஆம் வயதில் அவர் முக்தியடைந்தார்
-----------------------------------------------------------------------


தனுசு லக்கினம் + லக்கினத்தில் சூரியன்
2ல் புதன் + சுக்கிரன்
5ல் செவ்வாய்
6ல் கேது
10ல் சனி & சந்திரன்
11ல் குரு
12ல் ராகு

ல்க்கினாதிபதி குரு 11ல்
பாக்கியஸ்தான அதிபதி சூரியன் 1ல் (திரிகோணத்தில்)
பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் தன் ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டில் கொடிபிடித்துக்கொண்டு உள்ளார்


1
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.If lagna lord is placed in the eleventh, the native will get maximum benefits for all his efforts பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை அவர் சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டுப்போனார் fulfillment of his mission towards his birth. 

2
பாக்கிய ஸ்தான (9ஆம் வீட்டு அதிபதி) லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகனைத் தேடி வரும். If the lord of gains is in the lagna, the native will get all the gains in his life

3
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான்.செயல்களை முடிக்கும் உத்வேகம் (killing instinct) இருக்கும்

4
லக்கினத்தில் சூரியன் அமர்ந்ததால், நல்ல உடற்கட்டையும், தோற்றத்தையும், உடல் வலிமையையும் கொடுத்தான். சூரியன் அரசகிரகம், லக்கினத்தில் அமர்ந்த அவன் சுவாமிஜிக்கு மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்கினான். Sun in lagna blessed him with good physical vitality, will-power, honour & dignity.

5.
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகனை ஒரு நாளாவது சிறையில் இருக்கும்படி செய்துவிடுவான் என்பார்கள். சாதாரண பிறவிகளுக்கு வேண்டு மென்றால் அது மெய்ப்படலாம். ஆனால் 10 ஆம் இடத்து சனி, ஜாதகனை அவன் நுழையும் துறையில் உச்சத்திற்குக் கொண்டுபோய் விடுவார். விவேகானந்தர் வாழ்க்கையில் அதைச் செயல் படுத்திக்காட்டினான் சனீஷ்வரன். ஆன்மீகத்தில் நுழைந்து உலகப் புகழ்பெறும்படி செய்ததில் சனீஷ்வரனுக்கும் பங்கு உண்டு!

6.
சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு& கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். சுவாமிஜிக்கு சூரியனுக்கு இரண்டில், சுக்கிரனும், புதனும் உள்ளார்கள். அந்த யோகத்தினால் அவர் அனைவரையும் நேசிக்கும் மனதைப் பெற்றார். உண்மைக்கு மட்டும் துணை போனார். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்.

7.
அதுபோல சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு & கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.சுவாமிஜியின் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் குரு பகவான் உள்ளார். அதன் காரணமாக அதீத புத்திசாலித்தனம், புகழ், செல்வம் எல்லாம் அவருக்குக் கிடைத்தது அல்லது அமைந்தது. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

8.
குருவும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழில் அமர்ந்து இருந்தாலும் அதற்குப் பெயர் - அந்த மைப்பிற்குப் பெயர் குரு மங்கள யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய். அவருக்கு ஏழில் துலாமில் குரு பகவான். அந்த அமைப்பு ஜாதகருக்கு தர்ம சிந்தனை, அற்ச் செயல்கள், எதையும் முனைப்போடு செய்யும் ஆற்றல் ஆகியவற்றைக் கொடுத்தன

9.
தவ யோகம் அல்லது தவ வாழ்க்கை: சுக்கிரன், கேது, சனி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் இருக்கும் அமைப்பிற்குப் பெயர் தவ யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் அநத அமைப்பு உள்ளது. அதானல் சுவாமிஜியின் வாழ்க்கை சுய நலமில்லாத தியாக வாழ்க்கையாக அமைந்த்து. மக்களின் மேன்மைக்காக - அவர்களை நல் வ்ழியில் செலுத்துவதற்காக பாடுபட்டார். இறைப் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்டார்.

10.
பத்தாம் வீட்டிற்குரிய புதன் இரண்டில் வந்து அமர்ந்தது. இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வந்தமர்ந்த புதன் அவருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுத்தான். எவரையும் கிறங்க அடிக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்த்து.

11.
பன்னிரெண்டில் அமர்ந்த ராகுவால் அவர் தேசம் முழுவதும் பயணித்தார். பல உலக நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பை ராகு வழங்கினான்.

12.
இரண்டாம் வீட்டுக்காரன் சனி பத்தில் அமர்ந்தான். அது இரண்டிற்கு ஒன்பதாம் வீடு. அவருடைய வாழ்க்கை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் படியாக அமைந்த்து. இறைப்பணியுடன், மனித நேய சேவையையும் அவர் செய்தார்.

13.
சாது யோகம் என்ற சந்நியாச யோகம். மாந்திக்கு மூன்றிலும் ஆறிலும் சுபக்கிரக்ங்கள் இருக்கும் அமைப்பு. இங்கே மாந்திக்கு மூன்றில் குருவும், ஆறில் சுக்கிரனும் இருப்பதைப் பாருங்கள். ஜாதகன் துறவறம் பூணும் அமைப்பு. சுவாமிஜியும் முழுத் துறவியாக வாழ்ந்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.

14.
ராஜ யோகம். கேந்திர அல்லது கோண அதிபதிகள் இருவர், சேர்க்கை, அல்லது பரிவர்த்தனை அல்லது பார்வையால் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் அப்படி உள்ளனர். குரு ஒன்று மற்றும் நான்காம் வீடுகளுக்கு அதிபதி. செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில். ராஜ யோகத்தைக் கொடுத்தார்கள்

ராஜ யோகம் என்றால் பென்ஸ் காரில் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவதா? இல்லை! எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது. சாதனைகளைச் செய்வது. அதுதான் ராஜ யோகம்

15. ராஜ சம்பந்த யோகம். ஆத்ம் காரகன் சூரியனும், மனகாரகன் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் சூரியனுக்குப் பத்தில் சந்திரன். சந்திரனுக்கு நான்கில் சூரியன். பலன்: பல அரசர்களின் நட்புக் கிடைக்கும் அமைப்பு. சுவாமிஜிக்கு பரோடா மன்னர், ராமநாதபுரம் ராஜா போன்றவர்களின் நட்பு தேடி வந்த்து.

சுவாமிஜி முக்தி அடைந்தார் என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டேன். அவதார புருஷர்களுக்கெல்லாம் மரணம் கிடையாது. ஆகவே அவருடைய ஆயுள் ஸ்தானத்தைப் பற்றி நான் எழுதவில்லை.ஆனால் உங்களுடைய குறுகுறுப்பைப் போக்குவத்ற்காக அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தியை இப்ப்திவின் கடைசியில் கொடுத்துள்ளேன்
-----------------------------------------
சுவாமி ஜாதகத்தைப் பற்றி அஷ்டகவர்க்கம் என்ன சொல்கிறது.
(நமக்குப் பிடித்த, நாம் புகுந்து விளையாடக்கூடிய பகுதி)
அதையும் பார்ப்போம்!



கிரகங்களின் சுயவர்க்கம்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சனி - 5 பரல்கள்

சூரியன் 5 பரல்களுடன் உள்ளார். சந்திரனும் 5 பரல்களுடன் உள்ளார். இந்த அரச கிரகங்கள் இரண்டுமே வலுவாக உள்ளன. சுவாமிஜிக்கு நல்ல தாய் தந்தையர் கிடைத்தனர். செல்வந்த்ர் வீட்டில் பிறந்தார். அன்பான் தாய். சிறுவயது வாழ்க்கை அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது. நல்ல உடற்கட்டையும், தெளிவான மனதையும் அந்த இரண்டு கிரகங்களும் வழங்கின. Sun is the authority for body and Moon is the authority for Mind

அது போல அதி முக்கிய கிரகங்களான குரு 7 பரல்களுடனும், சனி 5 பரல்கள் உள்ளார்கள். புதன், சுக்கிரன், இருவரும் 4 பரல்களுடன் சராசரியாக் உள்ளார்கள். செவ்வாயைத் தவிர மற்ற அத்த்னை கிரகங்களும் நல்ல நிலைமையில் உள்ளன.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளின் மொத்த பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 1,5,9,4,7,10 = 24+21+21+27+27+31 = 151
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 2 = 169
18 பரல்கள் குறைவாக உள்ளன
--------------------------------
மறைவிடங்களில் (தீய விடுகள்) உள்ள பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 3,6,8,12 = 30+35+32+31 = 128
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 3 = 112
16 பரல்கள் அதிகமாக உள்ளன

தீய வீடுகளில் பரல்கள் அதிகமாக இருந்தால், சாதாரணப் பிறவியாக இருந்தால், சரக்கடித்துவிட்டு டாஸ்மாக் கடை வாசலில் விழுந்து கிடப்பான்.
உயர் பிறவிகள் ஞானிகளாகி விடுவார்கள். துறவிகளாகி விடுவார்கள். சுவாமிஜி துறவியானார்.
-----------------------------------
சராசரி எண்ணான 28 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகள்:
3ல் - 30 பரல்கள்
6ல் - 35 பரல்கள்
8ல் - 32 பரல்கள்
12ல் - 31 பரல்கள்

10ல் - 31 பரல்கள்
11ல் - 33 பரல்கள்

குடும்ப வாழ்க்கைக்கு உரிய 2, 5, 9 ஆம் வீடுகளில் 25, 21, 21 (மூன்றுமே பரல்கள் குறைவாக உள்ளன) மனைவி எப்படியிருந்தாலும் பரவாயில்லை. வ்ருகிறவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் குடும்ப வாழ்க்கை. அதனால் 7ஆம் வீட்டை இக்கண்க்கில் சேர்க்கவில்லை.

அவரை மகான் ஆக்க வேண்டிய, துறவியாக்க வேண்டிய கட்டாயம் காலதேவனுக்கு இருந்ததால், ஜாதகமும் அவ்வாறே ஆமைந்தது. லெளகீக வாழ்க்கைக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடிபட்டுப்போய் விட்டன, ஞான வாழ்க்கைக்கு, யோக வாழ்க்கைக்கு, சந்நியாச வாழ்க்கைக்கு உரிய அம்சங்களே ஜாதகத்தில் மேலோங்கி இருக்கிறது / இருந்திருக்கின்றது.

அவரும் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டுப் போயிருக்கின்றார்.

தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.
----------------------------------------------------
குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்

நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி முக்தி கிடைக்கும்?

சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

கற்றுக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்

Death of Swamiji


His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac.
(பஞ்சாங்கம்) Three days before his death he pointed out the spot for this cremation—the one at which a temple in his memory stands today. He had remarked to several persons that he would not live to be forty.


On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda, a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math.


Vivekananda died at ten minutes past nine p.m. on 4 July 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi. Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes.The doctors remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra — the aperture in the crown of the head — must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had fulfilled his own prophecy of not living to be forty years old.
---------------------------------------------

வாழ்க வளமுடன்!

22.2.12

Astrology அரசனா அல்லது ஆண்டியா?



Astrology அரசனா அல்லது ஆண்டியா?

பயிற்சிப் பாடம்

அரசனா அல்லது ஆண்டியா? இப்படிக்கூடச் சொல்லலாம்: சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா? ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் அந்த இரண்டில் ஒன்று கிடைக்கும்.

உங்களுக்கு அதுபோல உள்ளதா?

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் - அப்படி இருந்தால் நீங்கள் எதை விரும்புவீர்கள்? 99% சதவிகிதம் பேர்கள் சாம்ராஜ்யத்தைத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில் இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுதான். சொல்லப்போனால் சந்நியாசம் சற்று மேன்மையானது.

"ஆடு, மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா
பிள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா" 

என்று கிராமங்களில் சொல்வார்கள். என்ன மழை, புயல் அடித்தாலும் அல்லது வற்ட்சி, பஞ்சம் எனறு என்ன அவல் நிலை நாட்டில் ஏற்பட்டாலும் அது சநநியாசியை ஒருபோதும் பாதிக்காது. அவருடைய நிம்மதியைக் குலைக்காது. பத்து நாட்கள் கூட அவரால் உணவு இன்றி தாக்குப் பிடிக்க முடியும். அந்த மன வலிமை சந்நியாசிகளுக்கு மட்டுமே உரியது.

அரச்னுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும்.

"அரண்மனை மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், அரச மரத்தடிக்கு வந்துவிடு. அது உனக்கு மகிழ்ச்சியைத் தரும்" என்பார் கவியரசர் கண்ணதாசன்.

ஆனால் பதவியில் இருக்கும் எவனும் அதைச் செய்ய மாட்டான்.

இரண்டிற்கு நான்காக கட்டிங் சரக்கை (சோமபானம், உற்சாகபானம் ) அடித்துவிட்டு, அந்தப்புரத்திற்குபோய் அங்கே மகிழ்ச்சியைத் தேடுவான். நிம்மதி முன் வாயில் வழியாக வெளியே போய்விடும். பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து பூதகரமாகி ஒரு நாள் அவனைக் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும். அப்போதுதான் அவனுக்கு ஞானம் வரும்!

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். ஐந்தில் கேது இருக்கும் ஜாதகம் ஒன்றை உங்களின் பார்வைக்காக/ ப்யிற்சிக்காக இன்று அலசுகிறேன்
--------------------------------------------------------
மகான் ராமானுஜரின் ஜாதகம்
மகான் ராமானுஜர்!

ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இருந்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு விக்கி மகாராஜாவின் தொகுப்பில் இருக்கும் செய்திகளுக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான சுட்டி!
http://en.wikipedia.org/wiki/Ramanuja
---------------------------------------------------------
அவருடைய காலம்: 1017ம் ஆண்டு முதல் 1137ம் ஆண்டுவரை
ஆமாம் அபூர்வமாக 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவர். அதுதான் அவருடைய ஜாதகத்தின் சிறப்பு! 120 ஆண்டு காலம் வாழ்ந்து மொத்தம் உள்ள ஒன்பது தசா/புத்திக் காலங்களையும் பார்த்துவிட்டுச் செல்வது என்பது லேசான செயலா? அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்குமா என்ன?
இன்று அதைக் கையில் எடுத்து, அலசி, உங்களுக்காகக் கொடுக்கின்றேன்
--------------------------------------------------------------------------------------------------

1. கடக லக்கினக்காரர். தலைமைப் பதவி வகிக்கக்கூடிய (லக்கினத்துடன் உள்ள) ஜாதகம். ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பதவி கிடைத்ததல்லவா? ரெங்கநாதப் பெருமாளின் புகழைப் பாடியவர்களில் முதன்மையானவர் என்ற பட்டம் கிடைத்ததல்லவா? அதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்?

2. லக்கினாதிபதி சந்திரன் 12ல். விரையத்தில். அதனால் அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. இறைப் பணி செய்து மேன்மையுற்றார். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவருடைய ஆக்கங்கள் பயன்பட்டன. படுகின்றன.

3. லக்கினாதிபதி சந்திரன் 12ல் அமர்ந்தாலும், உடன் பாக்கியாதிபதி குருவும் இருப்பதால், குருச்சந்திர யோகம் இருப்பதால், நல்ல வழியில் அவருடைய வாழ்க்கை அமைந்தது.

4. கடக லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் இரண்டில் - நட்பு வீட்டில் அமர்ந்து, அவருக்கு அனைத்து யோகங்களையும் பெற்றுத்தந்தான்.

5. ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில், ராகு திசையில் பிறந்த ராமானுஜர், ராகு திசை திரும்பவும் வரும் காலம்வரை வாழ்ந்து, ராகு திசையில் இயற்கை எய்தினார்.

6. ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதியும், காரகனுமான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்ததுடன், அமர்ந்த இடத்திற்கு அதிபதியான குருபகவானின் பார்வையைப் பெற்றதோடு, லக்கினாதிபதி சந்திரனின் பார்வையையும் பெற்றார். அதனால்தான் அவர் நீண்ட ஆயுளைப் பெற்றார். 120 ஆண்டு காலம் வாந்தவர் என்பதை நினைவில் கொள்ளவும்.

7. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் அவருக்கு மெய்ஞானம் வசப்பட்டது. பாகவதத்தை எளிமைப் படுத்திச் சொன்னவர் ராமானுஜர். ஆதி சங்கரரின் கோட்பாடுகளை, எளிமைப் படுத்தி எழுதியவர் ராமானுஜர்.

8. ஐந்தில் அமர்ந்த கேதுவும், பதினொன்றில் அமர்ந்த ராகுவும், ராமானுஜரின் உயர் அறிவை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர, புகழ்பெற அவருக்கு உதவி செய்தன!

9. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் ராகு அமர்ந்தால் ஜாதகனுக்கு மகாசக்தி யோகம் உண்டாகும். அவருக்கு மகாசக்தியும், இறையருளும் முழுமையாகக் கிடைத்தது.

10. ஐந்தில் கேது அமர்ந்தால் ஒன்று சாம்ராஜ்ய யோகம் அல்லது சந்நியாச யோகம் என்பது விதி. அவர் சந்நியாசியாகிப் புகழ் பெற்றார்.

11. பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான் அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.

12. நான்காம் வீட்டிற்கு (இந்த ஜாதகரின் கல்விக்கு) அதிபதியான சுக்கிரன், புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனுடன் சேர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், இந்த ஜாதகத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (வாக்கு ஸ்தானம்) அதிபதியாகவும், உச்சமாகவும் உள்ள சூரியனோடு சேர்ந்து 4ஆம் வீட்டைப் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான் அவர் அறிவு ஜீவியாகவும் விளங்கினார்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

19.1.12

Astrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா?

விக்டோரியா மகாராணி
Astrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா?
அதனால் அவரை மேதகு விக்டோரியா மகாராணி என்று அழைத்ததில் தவறில்லை!


பயிற்சிப் பாடம் 27
Practical Lesson No.27
----------------------------
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.

யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!

ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?

அதை இன்று அலசுவோம்!

அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++

விக்டோரியா மகாராணியின் ஜாதகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்:  24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1838 (தனது 20வது வயதில்)

பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.

2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன்  ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு

4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்

5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.

6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.

7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.

8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். புதன் உச்சம்.

9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:

1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.

2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.

அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.

3. 5ஆம் வீடு,  ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி புதன் தன்னுடைய வீட்டில் இருந்து லாபஸ்தானத்தில் உள்ளார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)

யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.

2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.

4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.

5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.

6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான்  (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.

ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!

ஏழாம் அதிபதி செவ்வாயும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!