மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
20.4.22
வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!
19.4.22
பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!
13.4.22
மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!!!
12.4.22
பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்
11.4.22
கவன ஈர்ப்பின் முக்கியத்துவம்
28.3.22
இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்துவர....!!!!
21.3.22
இதல்லவோ சிறந்த நிர்வாகம்!
4.3.22
நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் நல்லது!!!
30.4.21
எது உங்கள் கையில்?
16.4.21
வலிகளே நல்ல வழிகாட்டி...!
2.2.21
அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு..??*
அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு..??*
*சிந்தனை கதை...*
*அறிவுக்கும் புத்திசாலித்* *தனத்துக்கும் என்ன வேறுபாடு..??*
சாக்ரடீஸின் சீடர் ஒருவர்,
"ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார்.
உடனே அவர், "அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார்.
சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார்.
அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை.
கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர்.
உடனே கிழவர் அவரை அழைத்து, "நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார்.
"நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.
"நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.
சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும்...
சாக்ரடீஸ், "அதற்குப் பெயர் தான் புத்திசாலித்தனம்!'' என்றார்..!!
படித்ததில்
பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================
8.1.21
30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!!
30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!!
முப்பது வருஷத்துக்கு முன்னால நாம்ம ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா...
♥ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.
♥சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
ஊர்க்கத முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.
♥ இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.
♥எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.
இவர்கள் இழந்தது எத்தனையோ?.
இழக்க போவது எத்தனையோ?
அடுத்த தலைமுறை இழந்ததை மீட்கலாம்.
இந்த மொபைல் அடிமைத்தனத்திலுருந்து வாருங்கள்.
உங்கள் அடுத்த தலைமுறையோடு..
அன்புடன்
வாத்தியார்
6.1.21
சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!!
சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!!
'' சினத்தை தவிர்ப்போம்..''
..................................
நாம் ஒரு செயலை சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்து இருப்போம். அந்த செயலை மற்றொருவர் மீறும் போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது சினம் வருவதற்கான முதல் படி ஆகும்.
உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்யமுடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்.
ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை.
ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்..
அவர் மன்னனிடம்,'
' என்னிடம் அதியமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது..அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்.
"உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி; பிறகு சினமே வராது" என்று கூறிவிட்டு சென்றார்.
அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.
பல வருடங்கள் சென்றன.அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்.
அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.
"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை. அது அதிசயமான குவளை அல்ல,. சாதாரணமான. குவளைதான்...
''சினம்'' வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்..
தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.
ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறினார்.
ஆம்.,நண்பர்களே..,
மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும், அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது.
எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.
எனவே, சினத்தை தணித்து அனைவரிடத்திலும்,அன்பு செலுத்தி, நற்புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.🙏🏻🌺💐
அன்புடன்
வாத்தியார்
==========================






