மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.22

இலவசம் !!!




இலவசம் !!!

அன்புடையீர்
புது வருடம் வருகிறது. புதுவருடத்தில் உங்களுக்கு இலவசமாக கீழ்கண்ட 3 விதமான ஜோதிட ரிப்போர்ட்களும் கிடைக்கும்

அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 
வாத்தியாருக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
வாத்தியாரின் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அது என்ன உதவி என்பதை வாத்தியார் உங்களுக்கு தெரியப்படுத்துவார்.
அது மிகவும் சுலபமானதுதான்

கிடைக்கும் ரிப்போர்ட்டுகள்
1. 60 பக்கம் உள்ள உங்களின் ஜாதகம். அதில் அஷ்டகவர்க்கம், தசா பீரியடுகள் யோகங்கள் (Lucks) என்று எல்லாம் இருக்கும். அதுவும் தமிழில் இருக்கும்
2. உங்களுக்கு உங்கள் ஜாதகப்படி நீங்கள் அணிய வேண்டிய நவரத்தினங்களைப் பற்றிய 4 பக்கம் ரிப்போர்ட்
3. எண் கணிதப்படி உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து 7 பக்கம் ரிப்போர்ட்

இது ஒரு குறிப்பிட்ட .எண்ணிக்கையில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே
உங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் உடனே வாத்தியாருக்கு எழுதுங்கள்
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.22

Humour BLACK (TEA) DAY



BLACK (TEA) DAY
அன்றொரு நாள்....

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்..
முறுக்கு...நெய் பிஸ்கெட்டு
...முட்டை பிஸ்கட்.

இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட்...
பருப்புவடை ...பழபஜ்ஜி...!!!

குடிக்க காப்பியா டீயா...ன்னு அவங்க கேட்க...
எல்லாரும் டீ காப்பி ன்னு ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு  கடி கடித்து
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்ன்னு,"மாமா.... 
சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..

rest is history.....

*ப்ளாக்_டீயும்_
ப்ளாக்கான_
திருமணமும்*
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.22

பணம் - சுஜாதா கட்டுரை




பணம் - சுஜாதா கட்டுரை

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில்  படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில்  காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’  வாங்கிச் சாப்பிடு என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.  ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே  வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு  பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு  ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது.  அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும்  விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே  கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி  செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி  டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.  லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில்  சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில  நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி  சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி  படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு  செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை  ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று  ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங்  படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது  ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கான் (Aga Khan)  போல உணர்ந்தேன்.  அத்தனை பணத்தை  அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச்  செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர்,  ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு  ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின்  வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.  அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும்  வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம்  பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து  அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி.,  பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்?  மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு  அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன  போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி  பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல்  முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட்ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம்  ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க  மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம்  இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக  எதிர்பார்த்து கடன் கேட்டால், வேஷ்டியை அவிழ்த்து....... ஸாரி......பாங்க்  பாஸ் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம்  சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...

இன்று  பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய்,  அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள்.  புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை  பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என்  அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு  வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும்  அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.  இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு  பணம் வருகிறது என்பதே.

இன்று  பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை  நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும்  பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து  நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள்  என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம்  தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும்  மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று  புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே  வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று  ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

- சுஜாதா.
-------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

19.12.22

God என்றால் என்ன?


God என்றால் என்ன?_* 

In monotheistic thought, God is usually viewed as the supreme being, creator, and principal object of faith.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.

Danger -அபாயம்
Death- மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression - சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு

மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன்(Go-போ) தான் இறைவன் (God).

எனவே இறைவனை அனுதினமும்
வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்.

படித்தேன்.
பகிர்ந்தேன்.
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.22

*புளியோதரை புராணம்* Write up by சுஜாதா_



*புளியோதரை புராணம்*
_- சுஜாதா_

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது.. 

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு,  அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.! 

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்.. 

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி,  மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

✍️
எழுத்தாளர் சுஜாதா
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.22

நம்முடைய காலக் கணக்கு


நம்முடைய காலக் கணக்கு

மகாபாரத வருடம் சனாதன தர்ம இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்*

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
*உண்மை இதுதான்*
 
ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி 
தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

இன்னும் இது 
போன்ற எத்தனையோ கட்டிடகலை..

தொியாமல் கட்ட முடியாது.!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 

* கலாச்சாரமும், ஞானமும்.*

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 🙏
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.22

Lesson 79 Lesson on Money

Star Lessons

Lesson no 79

New Lessons

பாடம் எண் 79

பாடம்  Holding Money 

வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காதுஎன்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு 

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!

-------------------------------------------------

இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால்

அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும். 

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். 

பணத்திற்கான இடம் அது (House of finance)

குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது(House of Family)

அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech) 

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும் 

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா? 

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம் 

பணத்திற்குக் காரகன் குரு

மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்

அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!

-------------------------------------------------------

ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் 

இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர். 

நிலைமை மாறியதற்கு என்ன காரணம்? 

அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக் கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது! 

ஜாதகர் யார் தெரிகிறதா?

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுடைய ஜாதகம் இது!

--------------------------------------------------------------

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.22

Lesson No.78 Arishta Yoga

Star Lessons

Lesson no 78

Date 10-10-2022

New Lessons

பாடம் எண் 78

பாடம் அரிஷ்ட யோகம்

(படுக்கவைக்கும் யோகம்) 

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்

அதன் பொருள் வேறு. 

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது. 

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய

ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே

பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!

----------------------------------------------------------

அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். 

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். 

உதாரணத்திற்குப் பாலஅரிஷ்டம்என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

+++++++++++++++++++++++++++++++++++++++++

அரிஷ்ட யோகம் 1

(அவயோகம்தான்)

தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 

1

லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில்

இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. 

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

2.

எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. 

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!