மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பெருமாள் பாடல்கள். Show all posts
Showing posts with label பெருமாள் பாடல்கள். Show all posts

31.8.20

கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!


கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் இயற்றிய அந்த ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார்

ஆனால் அதற்கு பல தடங்கல்கள் எழுந்தன.

தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் ராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர்.

ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே‘ எம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் ராமாயணத்தை நாம் ஏற்போம்!’ என்று கூறினார்.

அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம், நாதமுனிகளின் முன்னிலையில், அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் அரங்கேறியது.

அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சந்நிதி முன்னால் உள்ளது.

கம்பர் தம் சடகோபர் அந்தாதியில்  ‘நம்மாழ்வாரே எனக்குக் காப்பு’ என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்…

தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இருகை வேழத்தி ராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

-இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர்.

இதன்பிறகு வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது முதலில் நம்மாழ்வாருக்குத் துதி கூறும் வழக்கம் உண்டானது.

கம்பரின் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. அதில் ஒரு சம்பவம்…

நம்மாழ்வாரின் சிறப்புகளை விருது கூறிக்கொண்டு மதுரகவியார் அவருடைய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு வீதியுலா வருவார்.

அப்போது மதுரைச் சங்கத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நம்மாழ்வாரின் பெருமையைப் பறைசாற்ற, ‘கண்ணன் கழலிணை’ என்னும் ஒரு பாசுரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மதுரை சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுடன் வாதுக்குச் சென்றார் மதுரகவியாழ்வார். அப்போது நம்மாழ்வாரின் அந்த ஒரு பாடலுக்கு சங்கப் பலகை இடம் தந்து மற்றவர்களைக் கீழே தள்ளியது (இந்த நிகழ்ச்சியை மதுரகவியாழ்வாரின் சரித்திரத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இந்த நிகழ்ச்சியை கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் சிறப்புறக் காட்டுகிறார்.

தமிழிலக்கியத்தில் மிக மிக உயர்வான கருத்துகள் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன.

நம்மாழ்வார் தனக்காகப் பாடாது, உலக மக்களின் நலனுக்காக எம்பெருமானிடம் அவர்கள் சார்பில் ஒரு விண்ணப்பம் செய்கிறார்…

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

பொருள்: பொய்யான அறிவு; தவறான ஒழுக்கங்கள்; அழுக்கான உடம்பு- இத்தகைய குணங்கள் இனி எங்களுக்கு ஏற்படாதபடியான வாழ்வினைத் தருவாய். வானவர் தலைவனே, அடியேன் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள் என்று உலக மக்களின் சார்பில் எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கிறார்.

ஆழ்வார் ஸாதிக்கிறார், "எம்பெருமான் என்னுடன் சேர்ந்து தன்னுடைய அளவில்லாத அழகைக் காட்டி என்னை வசப்படுத்தி என் மனதில் எழுந்தருளியிருக்கிறான். அந்த அழகு எப்படியிருக்கிறது என்றால், என்னைவிட்டு பிரிந்த போது அவனுடைய திருக்கண்கள் வெளுத்திருந்தன. இப்போது என்னுடன் சேர்ந்த ப்ரீத்தியாலே பெருமாளுக்கும் என்னுடைய கண்களைப் போலவே செந்தாமரை போல சிவந்து இருக்கிறதே, இது என்ன விந்தை! என்ன விந்தை!" என்று சொல்லிக்கொண்டே ஆறுமாத காலம் மோஹித்தாராம்.

குருவடி திருவடி சரணம் !
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.9.11

எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

-------------------------------------------------------------------------------
எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
1.
நாளை புரட்டாசி சனிக்கிழமை. திருமலைவாசனை நினைப்பதற்கும், வணங்குதற்கும், போற்றி மகிழ்வதற்கும் உகந்தநாள். ஏழுமைலயானைப் போற்றிபாட கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான, அர்த்தும் பொதிந்த பாடலை உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி...

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

திருப்பதி...

- பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

  “உரைத்தது கீதை என்ற தத்துவமே, அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே” என்னும் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
2

--------------------------------------------------------------------------------
பேராசிரியன் ஆனபிறகு ஆரம்பப் பள்ளிகளை அழிக்கச் சொல்வார்களா என்ன?
 

யோகா, தியான, பிராணாயாம வகுப்புக்கள் இந்நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இன்று நகரத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வகுப்புக்கள் பற்றிக் கட்டாயம் கேள்விப் பட்டிருப்பார். ஆழ்நிலை தியானம்(ட்ரான்சிடென்டல் மெடிடேஷன்),வாழும் ‌கலைப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, குண்டலினியோகம் என்று இவற்றில் பலவிதம்.

தியானத்தின் போது எந்தவிதமான குறியீடுகளையும்(சிம்பல்) மனதில் நினைக்காமல், நிர்மலமான மனதற்ற வெளியில் உலாவுதல்தான் மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. குறியீடுகள்,அடையாளங்கள்,உருவங்கள்,ஏன் தீப ஒளி போன்ற தியானத்திற்கு உதவி செய்யும் கருவிகளனைத்தும் தவிர்க்கப்பட வேண்டுமென்பது ஒரு நிலைப்பாடு.

அவ்வாறு தியானத்திற்கு உதவியாக இருக்கும் உருவம் போன்றவைகளை மனதில் இருத்தி தியானம் செய்தல் 'கீழ்நிலை' தியானம் என்றும், உருவம் தவிர்த்த தியானமே 'மேல்நிலை' என்றும் பாகுபடுத்திச் சொல்வார்கள்.

 உருவ வழிபாடு பற்றிக் கடுமையான விமர்சனக்கள் உள்ள ஆப்ரஹாமிக் மதங்களிலும் கூட, அவர்களுடைய வழிபாட்டு முறைகளைக் கூர்ந்து நோக்கினால் உருவ வழிபாட்டுச் சாயல்களைக் காண முடியும். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமான வெட்ட வெளிக்கு திக்கு திசை உண்டா? ஒரு திக்கு நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் அதுவும் குறியீடு (சிம்பல்) தானே?

18 வயது இளைஞனாக என் குருநாதரிடம் மந்திர உபதேசம் பெற்றபோது அவர் என் வயதுக்கு ஏற்றபடி ஒரு தியான முறையை உபதேசித்தார்.

அது என்ன?

"உன் வயது உனக்குக் குறியீடு இல்லாத தியானம் செய்ய‌த் தடையாக இருக்கும்.எனவே நான் சொல்லும் முறைப்படி முதலில் தியானம் செய்து வா. பின்னர் தானாகவே உருவமற்ற தியானம் உனக்குக் கை கூடும். இப்போது என் முன் வந்து இந்த தீட்சை பெற இன்று காலை முதல் நீ செய்த செயல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து இங்கே என் முன் வந்து அமர்ந்தது வரை ஒவ்வொன்றாகக் கூறு பார்க்கலாம்" என்று பணித்தார்.

நானும், பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 4.30 மணி) எழுந்தது, குளித்து முடித்து புத்தாடை அணிந்தது, பூசைக்கான பொருட்களைச் சேகரம் செய்தது, குரு காணிக்கைப் பொருட்களை எடுத்து வைத்தது, கோவிலுக்குள் நுழைந்தது, மண்டபத்தில் குருவின் வரவுக்காகக் காத்திருந்தது, குருவைக் கண்டு வணங்கியது, இப்போது அவர் முன் உபதேசம் பெற அமர்ந்து இருப்பது,என்று வரிசையாகக் கூறினேன்.

ஒவ்வொரு செயலைக் கூறியவுடனும் 'அதனை இன்னும் கொஞ்சம் விவரி' என்பார். எடுத்துக்காட்டாக,'கோவிலுக்குள் நுழைந்தேன்' என்றவுடன்,'அதனை மேலும் விவரிக்கும் முகமாக,' கோவிலில் என்ன என்ன பார்த்தாய்?' என்று தூண்டுவார். நானும் மேலும் நுணுக்கமாக விவரிப்பேன்.

"நாள் தோறும் இதேபோல வெளியில் நடந்த செயல்களில் துவங்கி மெதுவாக ஆன்மீகச் சூழலுக்கு வந்து மனதாலேயே இறைவனைத் தரிசித்து தியானம் செய்" என்று உபதேசித்தார்.

உடனே எனக்கு மனதாலேயே கோவில் புனைந்த ஒரு நாயன்மார் நினைவுக்கு வந்தார். ஒரு கோவிலைக் கட்ட நடைமுறையில் எவ்வளவு மாதங்கள்  ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் மாதங்கள் அந்த நாயன்மார் கோவில் கட்டும் நினைவாகவே இருப்பாராம் அவர்தான் திருநின்றவூர் அருகில் வாழ்ந்த பூசலார் நாயனார். அரசன் கட்டிய கோவிலுக்கு முன்னரே பூசலாரின் இதயக் கோவிலுக்கு இறைவன் எழுந்தருளினார் என்பது வரலாறு. பூசலாரின் வழியைத்தான் என் குருநாதர் எனக்குக் காட்டி அருளினார்.

உங்களுக்குப் பிடித்தமான ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு நாள் முழுதும் அங்கேயே இருங்கள்.அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீப அலங்காரம், நாகஸ்வ‌ர ஓசை, மணியோசை அர்ச்சனை தீபாராதனை அனைத்தையும் மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.நந்தவனத்தில் உலாவி என்னென மலர்கள் பூக்கின்றன என மனதில் வாங்குங்கள்.சிலைகளை யெல்லாம் உற்று நோக்கி மனதில் பதியுங்கள்.

தியானம் செய்ய மறுநாள் அமரும் சமயம், அக்கோவிலில் கண்ட காட்சிகளையெல்லாம் மனத்திரையில் சினிமாப்படம் போல ஓட்டிப் பாருங்கள் மெதுவாக ஒவ்வொரு இடமாகக் கடந்து, அதாவது கொடிமரம், பலிபீடம்,அர்த்த மண்டபம், கருவறை,என்று மனதாலேயே பயணம் செய்யுங்கள்.கருவறையில் நடைபெறும் அர்ச்ச்னை முதலியைவைகளை மனக் காதால் கேளுங்கள்.நாதஸ்வர ஓசை,மணியோசையை
உணருங்கள். பெரிய தீபாராதனை நடைபெறுவதை மனக்காட்சியாகக் காணுங்கள்.

இந்த முறையில் உங்க‌ளுக்கு தியானம் உடனடியாகக் கைகூடாவிட்டாலும், மன ஒருமைப்பாடு ஓரிரு வாரங்களில் கிட்டிவிடும்.மன ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டாலே மன அமைதியும்,நிதானமும் கைகூடிவிடும். பின்னர் தியான நிலை வெகு சீக்கிரத்திலேயே கை கூடிவிடும்.

'மேல் நிலை' தியானக்காரர்கள் இதனை ஏளனம் செய்யலாம். செய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அயர்வுறாதீர்கள்.பெரிய பேராசிரியர்கள் எல்லாம் ஆரம்பக் கல்விக்கற்றுத்தான் பேராசான்கள் ஆனார்கள். தாங்கள் முன்னேறி விட்டதால் ஆரம்பப் பள்ளிகளை பேராசிரியர்கள் அழிக்கச் சொல்லமாட்டார்கள்தானே?

எனவே இந்த எளிய  தியான முறையைக் கைக்கொண்டு இறையருள் பெறுவீர்களாக!

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!