Astrology: ஐந்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்
5th House and placement benefit of its lord
கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!
இப்போது ஐந்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!
கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!
1.
ஐந்தாம் வீட்டு அதிபதி இலக்கினத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகன் கூர்மையான புத்தியை உடையவன். அதிபுத்திசாலியாக இருப்பான். கல்விமானாக இருப்பான். புத்திர பாக்கியம் உடையவனாக இருப்பான். பிரபுக்களைப் போன்று நன்மையான வாழ்க்கையை உடையவனாக இருப்பான். தூய்மையான எண்ணம் உடையவனாக இருப்பான்.
2
ஐந்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில், அதாவது இலக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், தன் பிள்ளைகளால் பல நன்மைகள் (குறிப்பாக தனவரவு) உடையவனாக இருப்பான். கல்விமானாக இருப்பான். சுகபோகம், நல்ல குடும்ப வாழ்க்கை உடையவனாக இருப்பான்.
3
ஐந்திற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால், புத்திர தோஷம் உடையவன். புத்திரர்களால் நன்மை இல்லாத நிலை உண்டாகும். தெய்வீக வழிகளில் பற்று உடையவனாக இருப்பான்.
4
ஐந்திற்கு உடையவன், நான்கில் இருந்தால், புத்திர பாக்கியம், குடும்ப கெளரவம் உடையனாக ஜாதகன் இருப்பான். ராஜபோக வாழ்வு, அரசு ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5.
ஐந்திற்கு உடையவன், ஐந்தில் ஆட்சி பெற்று நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்குப் புத்திக்கூர்மை, புத்திர பாக்கியம், அதிகாரம், வெகுமானம், பெரியவர்களின் அனுகூலம், கல்வி, பதவி, விசுவாசம், செல்வம், செல்வாக்கு என்று அனைத்தும் இருக்கும்!
6
ஐந்தாம் வீட்டுக்காரன் ஆறில் இருந்தால், புத்திர தோஷம், புத்திர விரோதம், புத்திக்குறைவு,ஞாபகசக்திக் குறைவு,ரோகம், விரோதங்கள் நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான். இந்த ஆறாம் வீடு புதனின் வீடாக இருந்தால் புத்திரர் இல்லை.
7
ஐந்திற்கு உரியவன் ஏழில் இருந்தால், புத்திர பாக்கியம், பலவித செளகர்யங்களை உடையவனாக ஜாதகன் இருப்பான். கல்விமானாக இருப்பான்.
8
ஐந்திற்கு உரியவன் எட்டில் இருந்தால், புத்திர, சந்தான, உறவினர் தோஷம் உண்டு. பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால், அங்க ஹீனமான குழந்தைகள் இருக்கும்.
9.
ஐந்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், புத்திரர்களால் உதவி,பிரபுக்களால் அனுகூலம், சுக செளகர்யங்கள், ராஜ ஜீவனம் உடையவனாக ஜாதகன் விளங்குவான்.
10
ஐந்திற்கு உரியவன் பத்தில் இருந்தால், இராஜ சன்மானம், புத்திர பாக்கியம், பிரபுக்கள் தயவு, ஆத்மஞானம், தெய்வ வழிபாடு நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
ஐந்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், புத்திர, சந்தானங்களால் நலம் உண்டகும். குடும்ப அமைதியும், பிரபுக்கள் தயவும், செல்வம், செல்வாக்கு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஐந்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல! தனசேதமும், மனைவிக்கு கர்ப்ப சேதமும், ஆரோக்கியக் குறைவும், புத்திர தோஷமும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அமைதி இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com