மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.8.20

ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!


ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!

29.10.1950 அன்று வெளியான கல்கி வார இதழில் ஒரு புதிய தொடர்கதை ஆரம்பமானது. பெரிய அளவில் எந்த விதமான முன் அறிவிப்போ,மிகைப்படுத்தலோ இல்லாமல் இராஜராஜரின் இளவயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு தொடர்கதை என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொன்னியின் செல்வனின் பயணம் இவ்வாறு எளிமையாகவே தொடங்கியது.

மூன்று ஆண்டுகள் கல்கி வார இதழில் கதை தொடராக வந்தது,அதன் பின்னர் பலமுறை கல்கி வார இதழில் தொடராகவும்,முழுப்புத்தகமும் வெளிவந்தது.

இந்த கதையின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும்  இருக்கும் என்பதை கல்கியே எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

கதையின் தலைப்பு அருள்மொழிவர்மரை குறிப்பிட்டாலும்,நிஜத்தில் நாயகன் வந்தியத்தேவன் தான்.

யார் இந்த வந்தியத்தேவன்? எந்த அரச பரம்பரையில் வந்தவர்?
வாணர் குலம்,கீழைச்சாளுக்கியம்,வேங்கி,இராஷ்டிரகூடம் என பல்வேறு (குழப்பத்தோடு கூடிய) கருத்துக்கள் உள்ளது. ஏதாவது போரில் ஈடுபட்டரா? சோழர் படை பிரிவில் தளபதியா அல்லது சோழர் துணையோடு  எதாவது ஒரு  நிலப்பரப்பை ஆட்சி செய்தாரா? இதற்கான பதில் இன்னும் ஆதாரத்தோடு தெரியவில்லை. ஆனாலும் 1950 ல்ஆரம்பித்த வந்தியத்தேவனின்  பயணம் இன்னும் உற்சாகம் குறையாமல் தொடர்கிறது.

நட்பு,காதல்,குறும்புத்தனம்,சமயோஜித புத்தி என  பல்வேறு குணங்களால் பலபேரின் (குறிப்பாக பெண்கள்) ஆதர்ச நாயகனாக இன்றும் வலம் வருவதற்கு காரணம் கல்கியின் மந்திர எழுத்துக்கள்.

குந்தவையின் காதல் கணவனாக நாம் அறிந்த வந்தியத்தேவனுக்கு நிஜத்தில் ஐந்து மனைவிகள் என்று குழுவில் ஒரு முறை கல்வெட்டு புகைப்படத்தோடு பதிவிட்ட போது, இல்லை நீங்கள் சொல்வது பொய்,வந்தியத்தேவன் அப்படிபட்டவர் இல்லை என பொங்கியவர்கள் ஏராளம்.கல்கியின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி அது.

 வந்தியத்தேவன் ஆடி பெருக்கு அன்று வீரநாராயண ஏரிக்கரையில் இருந்து மீண்டும் ஒரு முறை தனது சோழ தேசத்து பயணத்தை தொடங்குகிறார்.அன்போடு வரவேற்போம் நமது வந்தியத்தேவனை!!!!!!

(ஆண்டவர் கனி முகநூல் பதிவு) நன்றி
--------------------------------------------
படிதத்தில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. Sir, My favourite novel from kalki. I was buying kalki weekly just to read this novel.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com