மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.8.20

Astrology: Quiz: புதிர்: 28-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!



Astrology: Quiz: புதிர்: 28-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் திருவாதிரை நட்சத்திரம். துலா லக்கினக்காரர். அன்பர் குணக்கேடானவர். எதையும் யார் பேச்சையும் கேட்க மாட்டார். எல்லாவற்றையும் எதிர்பார்ப்பிற்கு மாறாகச் செய்வார். அத்துடன் Moody, short tempered மனநிலை பிறன்றவர், குறுகிய மனநிலை உடையவர். குடும்பத்திலுள்ள பெற்றோர்களுக்கும் உடன் பிறப்புக்களுக்கும் தொல்லையாக இருந்தார். ஜாதக்கப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: புத்திநாதன் புதன் கேதுவோடு சேர்ந்து கெட்டிருக்கிறார். நல்ல மன நிலைமைக்கு புதனும், மனகாரகன் சந்திரனும் முக்கியம் இங்கே சந்திரனும் செவ்வாயின் பார்வையால் கெட்டிருக்கிறார். அத்துடன் குணத்திற்கு லக்கினமும் முக்கியம். லக்கினம் பாபகர்த்தாரி அமைப்பில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் சூரியன் மறுபக்கம் செவ்வாய் . குணக்கேட்டிற்கு இவைதான் காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 4-9-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த குண கேடான ஜாதக அமைப்பிற்கான காரணங்கள்
துலா லக்கின திருவாதிரை நக்ஷத்திர மிதுன ராசி ஜாதகரின் லக்கினத்திலேயே கேது அமர்ந்து ராகுவின் பார்வை யில் உள்ளது . மேலும் மனோகாரகன் சந்திரன் ராகுவின் நேரடி பார்வையில் உள்ளது. இது நிலையற்ற மனோ நிலையை குறிக்கும்.
மேலும் ஜாதகரின் லக்கினத்தின் பகை கிரகமான செவ்வாயின் எட்டாம் பார்வை சந்திரனின் மேல் உள்ளதால் ஜாதகர் எவரின் பேச்சையும் கேட்காமல் கட்டுக்கடங்காமல் இருந்தார்.
இதற்கு ஜாதகரின் இளம் வயதில் வந்த ஆறாம் அதிபதி குரு தசை மேலும் இந்த தன்மையை அதிக படுத்தியது. ஏனென்றால் குருவும் ஜாதகருக்கு பகை கிரகமாக உள்ளது...
குருவின் தசைக்கு பின் வந்த சனி தசையில் ஜாதகரின் கோப தன்மை குறைந்த பாடில்லை. ஏனென்றால் ஜாதகரின் பாதகாதிபதி சூரியனின் நேரடி பார்வையில் சனி உள்ளதால் அதிக கோபத்தையும் அடங்க தன்மையும் ஏற்படுத்தியது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, August 28, 2020 10:18:00 AM
---------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1.லக்கினாதிபதி சுக்ரன் லாபஸ்தானத்தில் குருவுடன் நல்ல நிலையில்
2 . லக்கினத்தில் விரயாதிபதி புதனுடன் கேது
3 .இரண்டில் செவ்வாய் (ஜாதகன் அதிரடியாக பேசுபவன் மேலும் செவ்வாயின் எட்டாம் பார்வை மனோகாரகன் சந்திரனின் மீது
மேலும் மாந்தியுடன் சேர்ந்ததால் மனநிலை பாதிக்க பட்டிருக்கிறார்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, August 28, 2020 12:32:00 PM
---------------------------------------------
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
இன்று வகுப்பறை ஜோதிடம் புத்தகம் அஞ்சலில் வந்தது.
வலைத்தளத்தில் படிப்பதை விட புத்தக வடிவில் படிப்பது மனதில் எளிதில் நிற்கிறது.
மிக்க நன்றி ஐயா
கண்ணன்
Friday, August 28, 2020 12:36:00 PM
---------------------------------------------------
3
Blogger K. Ravi said...
ஐயா,
லக்கினம் பாவகர்தாரி தோஷத்தில் உள்ளது'. ராகுவின் பார்வை.
ராகு மற்றும் கேதுவால் பாதிப்பு. லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாம் அதிபதி குருசுடன் சேர்க்கை. மேலும் எட்டாம் அதிபதியும் அவரே. எனவே லக்கினம் அவுட்.
மனோகாரகன் சந்திரன் அவனுடைய வீட்டிற்கு 12 இல் மேலும் செவ்வாயின் பார்வையில்.
இரண்டாம் வீடான வாக்குஸ்தாதி செவ்வாய் காட்சியுடன் இருந்தும் மாந்தியுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார்.
லக்கினத்திற்கும் சந்திரனுக்கும் சுபர் பார்வையில்லை
லாபாதிபதி சூரியன் விரயஸ்தானத்தில் சனியின் பார்வையில்
மேலும்
தசை புக்திகளும் சரியில்லை.
கே. ரவி
Friday, August 28, 2020 12:50:00 PM
------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 27 செப்டமபர் 1967 ல் காலை 8.56 மணிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்
1.லக்கினம் பாபகர்தாரியில் மாட்டியுள்ளது.
2.இரண்டாம் இடத்தில் செவ்வாய் தடித்த கோபமான வார்த்தைகளைப் பேச வைத்தது.
3. சூரியன் சனி பகைவர்கள் எதிர் எதிரே நின்றது
4. 4 தாய் ஸ்தானாதிபதி சனி 6ல் நின்றதால் தாயுடன் இணக்கம் இல்லை.
5. 9ம் அதிபதி புதன் லக்கினத்தில் கேதுவுடன் இணைந்தது மற்றும் பாபகர்தாரியில் மாட்டியது தந்தையினுறவை பாதித்தது.
6. 3க்கு உரிய குரு 11ல் அமர்ந்தாலும் எட்டாம் அதிபதியுடன் நின்றது சகோதர உறவை பாதித்தது.
7.மனோகாரகனான சந்திரன் தன் வீட்டுக்கு 12 ல் அமர்ந்து செவ்வாய் பார்வை பட்டதால் மனப்பிறழ்வு, கோபதாபங்கள் எல்லாம் வந்தன.
8.சனியும் சுகரன் குருவும் 6க்கு8ஆக நின்றது பல கோளாறுகளை உண்டாக்கியது.
Friday, August 28, 2020 1:16:00 PM
-----------------------------------------------
5
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா 28/8/20 புதிருக்கு பதில்.ஜாதகர் துலா லக்னம் மிதுன ராசி. லக்ன பாவம் ராசி பாபகத்தரி யோகத்தில் இருப்பதும் மன ஸ்தானாதிபதி சனி ஆறில் அமர்ந்து சூரியன் பார்வை பெற்றதும் மனோகாரகன் சந்திரன் பாப வலு பெற்ற செவ்வாய் பகவானின் எட்டாம் பார்வையில் இருப்பதும் அம்சத்தில் பாபர் வீட்டில் இருப்பதும் ஜாதகர் குணக் கேட்டுக்கு காரணமாகும் .ஜாதகர் வாக்கு ஸ்தானம் கெட்டதால் இவர் பேச்சால் எல்லோரையும் பகைத்து கொள்வார்.
Friday, August 28, 2020 9:20:00 PM
--------------------------------------------
6
Blogger Haripriya Sathish said...
சார், இந்த பகுதிக்கு நான் புதியவள். வகுப்பில் சேர்ந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது, இதுவரை 40 படங்கள் தான் படித்துள்ளேன், இருந்தாலும் ஆர்வக்கோளாறால் , எனக்கு தெரிந்த அரைகுறை ஞானத்தில் எனது பதிலை பதிவிடுகிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். .
லக்கினத்தில் கேது உள்ளதால், ஜாதகர் மூடியாக இருப்பர். இரண்டாம் இடத்தில மந்தி உள்ளதால், குடும்பத்தினருடன் ஒத்துப்போகவில்லை, மற்றும் ஆட்சிபெற்ற செவ்வாயால் கோபக்காரராக இருப்பர். மூன்றாம் இடத்தை சனி பார்ப்பதால் சகோதரர்களுடன் ஒத்துப்போகாது, மற்றும் ராகு தசை நடப்பதால் தீய குணங்கள் பழக்க வழக்கங்கள் ஏற்பட்டிருக்கும்.
Saturday, August 29, 2020 1:18:00 PM
-----------------------------------------------------
7
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், லக்னம் பாபகத்திரி தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, லக்னாதிபதி தனது பகை வீட்டில் இன்னொரு ஜென்ம பகைவரும், லக்னத்திற்கு 6ஆம் இட அதிபதியுமான குருவுடன் இணைந்து பலவீனமாக உள்ளார். லக்னத்தில் திக்பலம் பெற்று அமர்ந்துள்ள புதன், கேதுவின் பிடியிலும், பாபகத்திரி தோஷத்தினாலும் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்துள்ளார். ஆக லக்னம், லக்னாதிபதி, லக்னத்தில் அமர்ந்த கிரகம் அனைத்தும் பலவீனம் அடைந்துள்ளது.
வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடனும், மாந்தியுடனும் கூடி அமர்ந்துள்ள அங்காரகன் தனது 8வது சிறப்புப் பார்வையால், தன் வீட்டுக்கு 12ல் மறைந்துள்ள மனோகாரகனான தேய்பிறைச் சந்திரனை பார்ப்பதால் மனோகாரகன் சந்திரன் மிகவும் பலவீனமடைந்துள்ளார்.
லக்ன கேந்திரம் தவிர்த்து, பிற கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் ஒரு சுப கிரகமும் இடம் பெறவில்லை.
மாதுர் காரகனான சந்திரன் தன் வீட்டுக்கு 12லும், பிதுர் காரகரான சூரியன் லக்னத்திற்கு 12லும் மறைந்துள்ள நிலையில், சனி பகவான் சமசப்தமாக சூரியனை பார்ப்பதால் தாய், தந்தையருடன் ஜாதகருக்கு இணக்கமான உறவு இல்லாத நிலை.
இக்காரணங்களால் ஜாதகர் குணக்கேடானவராக செயல்பட்டுள்ளார்.
நன் மதிப்புக்களுடன்,
இராம. சீனிவாசு,
திருச்செங்கோடு.
Saturday, August 29, 2020 7:57:00 PM
----------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
வணக்கம்.
துலாம் இலக்கினம்,மிதுன ராசி ஜாதகர்.அவரின் குணக் கேடான நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) இலக்கினம் கத்திரியின் பிடியிலுள்ளது. அதிபதி சுக்கிரன் 11ல் சிம்ம ராசியில் அமர்ந்தாலும், அது அவரின் பகை வீடு. கூடவே அவரின் எதிரி ஆறாம் அதிபதி தேவகுரு, மேலும் வலுவற்ற நிலையை உண்டாக்கினார்.
2) நல்ல புத்தி மற்றும் பண்புகளை கொடுக்கும் காரகன் புதன், இலக்கினத்தில் அமர்வு நல்லதுதான் என்றாலும், கேது பகவானின் கூட்டணியில், பாப கர்த்தாரி தோசத்திலகப்பட்டு கெட்டுள்ளார். ஏழிலுள்ள ராகுவும் தன் பார்வையால் நிலைமையை மேலும் கெடுத்தார்.
3) மனோகாரகன் சந்திரன் ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். அவரின் மேல் குடும்ப ஸ்தானாதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வை விழுவது நல்லதல்ல.
4) குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் மாந்தி + அதனதிபதி செவ்வாயின் கூட்டணி.
இப்படி இலக்கினம், இரண்டாமிடம், புத்தி+ மனோகாரகர்கள் கெட்டதனால் ஜாதகருக்கு இந்த நிலைமை உண்டாயிற்று.
Saturday, August 29, 2020 9:13:00 PM
------------------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
The following are the main reasons for the person is not having good behaviour
1.in the Lagnam bhuthan kethu serkai affects mind
2.Sevvai in Irandam idanam makes person speaking harsh words and always angry.
3.Lagnathipathy sukran also in simmam( pagai veetil).so less help from him
4.Sani looks sooriyan 7th paarvai affects son father relationship.
5.brothers sthanam (3rd house ) athipathi guru is with sukran In 12th place
6. Manakkaragan Chandran having Mars paarvai
Saturday, August 29, 2020 10:36:00 PM
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com