மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.6.20

Astrology: Quiz: புதிர்: 12-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!



Astrology: Quiz: புதிர்: 12-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, அம்மணி பூச நட்சத்திரக்காரர். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் தினசரி அவருடன் கருத்து வேறுபாடு வாய்த்தகராறு வம்புச்சண்டை என்று போட்டுவிட்டு பிரிந்து வந்து விட்டார் அம்மணி. பெற்றோர்களுக்கு ஒரே கவலை. இருக்காதா பின்னே? அம்மணி கணவனுடன் ஒத்துப் போகாமைக்குக் காரணம் என்ன? ஜாதகப்படிஅதற்கு என்ன காரணம்? அம்மணி மனம் மாறி திரும்பவும் கணவனுடன் சேர்ந்துவிடுவாரா அல்லது மாட்டாரா? ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது இல்லையா? ஜாதகத்தை அலசி அவைகள் இரண்டிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: அம்மணி தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்று உள்ளார். ஆனால் எட்டாம் வீட்டில் உள்ளார், ஏழாம் அதிபதி புதன் லக்கினாதிபதிக்கு எட்டில் உள்ளார். அதாவது லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக்காரரும் அஷ்டம சஷ்டமத்தில் உள்ளார்கள் (8/6 நிலைப்பாட்டில் உள்ளார்கள்) ஆகவே வம்ப்ச்சண்டை வாய்த்தகறாரு, பிரிவு. சந்திர ராசியில் இருந்து பார்த்தால் குருவும் சந்திரனும் ஒன்றாக உள்ளார்கள். சந்திரனுக்கு ஏழாம் அதிபதி சனீஷ்வரனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் நல்ல நிலைமையில் உள்ளார்கள். ஆகவே அடுத்து சனியின் கோள்சாரம் மாறும்போது நிலைமை மாறி தம்பதிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அம்மணிக்கு தாம்பத்திய வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 19-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .ஜாதகத்தில் குடும்பஸ்தானமாகிய இரண்டாம் வீட்டின் மேல் எட்டாம் அதிபதியின் பார்வையும் ,விரயாதிபதி செவ்வாயின் பார்வையும் உள்ளது எனினும்
2. லக்கினாதிபதி குரு எட்டில் அமர்ந்தாலும் உச்சம் பெற்று எட்டாம் அதிபதி சந்திரனுடன் அமர்ந்து இரண்டாம் இடத்தை பல படுத்தியுள்ளார்
3.மேலும் செவ்வாயின் மீது சுபகிரகமாகிய சுக்கிரனின் பார்வை உள்ளதால் திருமண வாழ்வில் ஜாதகி கணவனுடன் இணைத்து சுக வாழ்வு பெறுவார்
நன்றி
தங்களின் விடையை ஆவலுடன்
Friday, June 12, 2020 2:20:00 PM
------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
தனுசு லக்கினம், பூச நக்ஷத்திரம், கடக ராசி ஜாதகி கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக பிரிய காரணங்கள்
நிலையான திருமண வாழ்விற்கு இரண்டாம் இடம், ஏழாம் இடம் ஒன்பதாம் இடம் மாற்றும் ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும்
இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி நான்கில் சூரியனுடன் அஸ்தங்கதம் ஆகி திருமண வாழ்வை கெடுத்தது . மேலும் நவாம்சத்தில் நான்கில் சூரியனுடன் இணைவு. மேலும் ஏழாம் அதிபதி புதன் ராசி கட்டத்தில் மூன்றில் மறைவு , அதுவும் ராகுவின் சதய நக்ஷத்திர சாரத்தில் உள்ளார். மேலும் நவாம்ச கட்டத்திலும் எட்டில் மறைவு. இது திருமண வாழ்வை கெடுத்தது.
ஒன்பதாம் அதிபதி சந்திரனும் ஒன்பதாம் இடத்திற்கு பனிரெண்டில் மறைந்ததும் , லக்கினத்தில் இருந்து எட்டில் மறைந்ததும் பாக்கிய ஸ்தானத்தை கெடுத்தது.
மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு நின்று அதை கெடுக்கும் வேலையை செய்தார். மற்றும் திருமண வாழ்விற்கு உகந்த சுக்கிரன் ஆறில் ராகு வுடன் இணைந்து இல்லற சுகத்தை இல்லாமல் செய்தார்.
உச்ச குருவின் பார்வையால் திருமணம் நடந்தது . ஆனால் மீண்டும் இணைய வைக்க லக்கின அதிபதி குருவினாலும் இயலவில்லை. ஏனென்றால் ஜாதகிக்கு குரு தசையே வாழ்வில் வராமல் போனது.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி 8879885399
Friday, June 12, 2020 3:00:00 PM
--------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The native's lagna lord jupiter is in 8th place with moon.
2. Sukran is with Rahu in 5th place. Both sukran and jupiter is spoiled.
3. 8th house lord aspects 2nd house. (2nd house is for family)
4. 2nd house lord is with sun (enemy).
Due to these above reasons the native always fight with the partner and could not live with the husband.
When sukra dasa start, at that time there is a chance for the native to join with the husband. Since sukran and Mars are exchanging their sign there is a chance to rejoin in sukra dasa or Mars dasa.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, June 12, 2020 3:51:00 PM
-------------------------------------------------------
4
Blogger jeya Laxmi. said...
பாதகாதிபதி புதன் சுபக்கிரக பார்வையினறி மூன்றாவது வீட்டில் இருந்து பாதகம் பாதகாதிபதி உண்டாக்கினார். எனவே தம்பதிகள் சேர்ந்து வாழ வாய்ப்பு குறைவு.
Friday, June 12, 2020 11:32:00 PM
--------------------------------------------
5
Blogger seethalrajan said...
🙏கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இருவரும் ராகு, கேது பிடியில், 7ம் அதிபதி புதன், ராகு சாரம், 2ம் அதிபதி சனி அஸ்தமனம், லக்கின அதிபதி உச்ச வர்கோத்தமம், ஆனாலும் சேர்ந்து வாழ்வார் ஏனெனில் செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை, 2ம் வீட்டுக்கு சுபர் பார்வை, 7ம் அதிபதி தனித்த புதன் சுபராகி 7க்கு திரிகோணத்தில் ஆதலால் சேர்ந்து இருப்பார். நன்றி.
Saturday, June 13, 2020 3:29:00 AM
--------------------------------------
6
Blogger hemalatha ramesh said...
sir, answer to your quiz.
1. second house sani is in the fourth house which is the maathru sthana.
2 this sani the lord of the second house is aspected by mandi.
3.Mandi is in kanni and the Seventh house Lord is mercury
4 Most importantly in navamsam lagna has mandi and sukran and in the
seventh house mars is there aspecting each other.
considering all these facts the chances of living together are remote.
regards
hema
Saturday, June 13, 2020 1:06:00 PM
------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
1. ராசி லக்கினம் இரண்டிலும் லக்கினாதிபதி 8ம் இடத்தில் மறைந்தது.
2.ராசி லக்கினம் இரண்டிலும் லக்கினத்திற்கு சனியின் பார்வை.
3.லக்கினம் ராசி இரண்டிலும் சூரியனும் சனியும் 4ம் இடத்தில்.4ம் இடம் தாயாரைத்தவிர குடும்பத்தில் அனைத்து உறவுகளையும் குறிக்கும்.. எனவே ஜாதகி குடும்பம் நடத்தமுடியாமல் சண்டைபிடித்துக்கொண்டு விலகினார்.
4. ராசி லக்கினம் இரண்டிலும் 6ம் இடத்திற்கு சனியின் பார்வை. ஆகவே பகை ஏற்படுத்திக்கொள்வதில் அக்கா நிறைய சமர்த்து உடையவர்.
5.லக்கினம் ராசி இரண்டிலும் சுக்கிரன் செவ்வாய் இரு பகைவர்கள் எதிரும் புதிருமாக உள்ளனர்.இதுவும் சண்டை பிடிக்க ஒரு காரணம்.
சுக்கிர தசா நடக்கும் போது ஜாதகி மீண்டும் ஒன்று சேர ஒரு வாய்ப்பு ஏற்படலாம்.
Saturday, June 13, 2020 4:52:00 PM
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com