மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.4.19

Astrology: ஜோதிடம்: 5-4-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 5-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகி பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்றார். பிறகு ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பினார். அதிலும் சுலபமாகத் தேர்வாகி, படித்துப் பட்டம் பெற்றார். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு நல்ல இடத்தில் (மாவட்டத்தில்) வேலை கிடைத்து, அமர்ந்தார். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!’’’ என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
ஜாதகி துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரனுடன் செவ்வாயும் (2 & 7ற்கு உரியவர்) சேர்ந்து லக்கினத்தை வலிமை மிக்கதாக்கினார்கள். 10ம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவானின் ஆதிக்கம், அந்த வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ல் 9ம் வீட்டுக்காரர் புதன் மற்றும் 11ம் வீட்டுக்காரர் சூரியனுடன் சேர்க்கை. அத்துடன் ராகுவும் கூட்டாகச் சேர்ந்துள்ளார்  நடப்பு தசா நாதன் ராகு உச்சமான புதனுடன் கூட்டாகச் சேர்ந்து நல்ல பலன்களைக் கொடுக்கும் நிலையில் உள்ளார்
இக்காரணங்களால் ஜாதகிக்கு வெற்றி மீது வெற்றி தொடர்ந்து கிடைத்தது!!!!!

இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் .ஜாதகி கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம்

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 12-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
படிப்புக்கு உரிய 4 ம் இடத்துக்காரனும் லக்கினத்திற்கு யோக காரகனுமான சனைச்சரன் வர்கோத்தம்ம் பெற்று வலுப்பெற்றார்; 4 ம் இடத்திற்கு உச்ச குருவின் பார் வை. படிப்புக்கான புதன் உச்சம் மூலத்திரிகோணம்; லகனாதிபதி சுக்ரன் ஆட்சி; பூர்வ புண்ணிய ஸ்தானத்தின்கு யோக காரகன் பார்வை . வெற்றிக்கான காரணங்கள் இவையே!
Friday, April 05, 2019 1:15:00 PM
---------------------------------------------------
2
Blogger Surya said...
லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி 2ம் அதிபதி செவ்வாய் உடன் இருக்கிறார். 2ம் இடத்தையும் 4ம் இடத்தையும் உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் கல்வியில் சிறப்பு. 6ம் இடத்தில் உள்ள கேதுவிற்கு சூரியன் சந்திரன் உச்சம் பெற்ற புதன் குரு பார்வை இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி. 10ம் இடத்தில் உள்ள உச்சம் பெற்ற குருவினால் உயர்ந்த IAS வேலை
Friday, April 05, 2019 2:01:00 PM
--------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் கேந்திரத்தில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளார்
2 .நாலாம் அதிபதி சனி லாபஸ்தானமான பதினொன்றில்
3 .கல்விக்கு அதிபதி புதன் உச்சம் பெற்று மூலதிரிகோணத்தில் லாபதிபதியுடன் புத ஆதித்ய யோகம் பெற்று உள்ளார்
4 .வெற்றிக்கு அதிபதியான குரு பத்தில் அமர்ந்து உச்சம் பெற்று நாலாம் இடத்தை தன பார்வையில் வைத்துள்ளார்
5 .மனகாரகன் சந்திரன் தன் சுயச்சாரம் பெற்றது சிறப்பு
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, April 05, 2019 2:01:00 PM
----------------------------------------------------------
4
Blogger Ram Venkat said...
ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!!!!
வணக்கம்.
துலாம் லக்கினம், கன்னி ராசி ஜாதகி. அவர் பட்டப்படிப்பை முடித்து ஐஏஎஸ் தேர்வு பெற்று மாவட்ட ஆட்சியாராகப் பொறுப்பேற்றார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அமர்வு மற்றும் 2,7ம் அதிபதி செவ்வாயுடன் கூட்டு. லக்கினத்திற்கு யோகாதிபதியான‌ வர்கோத்தம சனியின் 3ம் தனிப்பார்வையுள்ளது.
2) பட்டப்படிப்பிற்கான 4ம் இடத்தை கடகத்தில் அமர்ந்த பவர்ஃபுல் குரு (8 பரல்) தன் நேர் பார்வையிலிருத்தி ஜாதகியின் பட்டப் படிப்பிற்கு தடங்கலின்றி உதவினார்.
3) பட்ட மேற்படிப்பிற்கான 5மிடத்தை அதன் அதிபதி வர்கோத்தம சனி சிம்மத்தில் அமர்ந்து தன் நேரடிப்பார்வையில் ஜாதகியின் ஐஏஎஸ் ஆசையை நிறைவேற்றினார்.
4) புத்தி காரகன் புதன் 12ல் மறைவு, 10ம் அதிபதி சந்திரன் 12ல் மறைவு போன்ற அவயோகங்களை ஜாதகத்தில் ஹம்ச யோகம், மாளவ்ய யோகம் போன்ற ராஜ யோகங்கள் ஈடு கட்டின. மாவட்ட ஆட்சிப் பொறுப்பாளராக பணியேற்றபோது வந்த நடப்பிலுள்ள‌ குரு மகாதசை வெற்றி மேல் வெற்றி பெற உதவிற்று.
-இரா.வெங்கடேஷ்
Friday, April 05, 2019 2:57:00 PM
---------------------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில் , வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் :
1 . படிப்பு மற்றும் வேலைக்கான இடம் நான்கு மற்றும் பத்தாம் இடமாகும் . இந்த ஜாதகருக்கு நான்காம் இடத்து அதிபதி சனி பதினொன்றில் நின்று படிப்பின்னால் மிகுந்த லாபத்தை , அதாவது வெற்றியை தந்தார் . ஏனென்றால் துலா லக்கின ஜாதகருக்கு சனி மிகுந்த நன்மை செய்யும் கிரகமாகும் .
2 மேலும் வெற்றி ஸ்தான அதிபதி குரு பத்தாம் இடத்தில் உச்சமாக நின்று பல வெற்றிகளை தந்த தோடு மட்டுமல்லாமல் நல்ல அரசாங்க உயர் பதவியையும் தந்தார் .
3 நான்காம் இடத்தில் மாந்தி இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் அது வேலை செய்யாமல் போனது .
4 . மேலும் லக்கின அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்ததும் , சூரியன் சுக்கிரன் புதன் நவாம்ச கட்டத்தில் வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொடர் வெற்றியை தந்தார் .
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399.
Friday, April 05, 2019 4:29:00 PM
----------------------------------------------------------
6
Blogger Thanga Mouly said...
லக்கினம், லக்கினாதிபதி கூடவே 2ம், 10ம் வீடுகள் வலுப்பெற்ற ஜாதகம். குருவின் 5ம் பார்வையை 2ம் வீடு பெறுகின்றது. பூர்வ புண்ணியாதிபதி லாபஸ்தானத்தில்,
தொடர்ந்து வந்த செவ்வாய், ராகு மற்றும் குரு தசைகள் நன்மையே செய்துள்ளன.
ஏழரை ஆண்டுகால சனியின் தாக்கம் 30 வயதுவரை வராது, ஏறிய ஏணி வலுவுடன் அவரை இலக்கு நோக்கி பயணிக்க வைத்துள்ளது.
Friday, April 05, 2019 5:53:00 PM
--------------------------------------------------------
7
Blogger Unknown said...
Guru I s 10 th place, puthan is uccham
Saturday, April 06, 2019 12:40:00 AM
-----------------------------------------------------------
8
Blogger Shanmugasundaram said...
Good morning sir the celebrity was born on 02/10/1978 8.15am lagna lord in lagna makes Malvya yoga Yogakaran Saturn in 11th house in vargottama Jupiter also in exalted makes Hamsa yoga 9th lord in exaltation,Dharmakarmathipathy yoga, Amasavasa yoga,Nipuna yoga, Amala yoga,Bheri yoga and Mridanga yoga was present She might have passed her IAS during Rahu dasa venus bukthi and in Astavarga tenth house having 39paral all the above makes her success
Saturday, April 06, 2019 10:23:00 AM
----------------------------------------------------------
9
Blogger TRB. Sanjai Kumarr said...
1. Budha is exalted & own house in rasi chart. Association of Sun & budha both in
rasi & navamsa chart
2. Sun & moon in same rasi gives, authority and wealth. Further association of Budha
gave the native qualify in IAS exam
3. 10th house is occupied by guru, which gave success in profession. Though mandhi
is there in 4th house, it is aspected by guru. Hence the native got good
education.
4. Further, in 11th house occupied by Saturn, who is lord of profession. Hence
success came in the profession. Also saturn got vargottamam. Hence saturn
becomes powerful and gave good success in the carrier.
Thanks & Regards,
TRB. Sanjai Kumarr
Saturday, April 06, 2019 6:02:00 PM
-----------------------------------------------------------
10
Blogger classroom2007 said...
Horoscope lesson- 04-05-2019
வணக்கம்.
02 அக்டோபர் மாதம் 1978, காலை 8.15 மணிக்கு, ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி துலா லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகி பிறந்தார்.
1. லக்கினாதிபதி சுக்கிரன் (4 பரல்) லக்கினத்தில் - அழகான கண்களை உடையவர். புன்சிரிப்பால் எல்லோரையும் ஈர்க்கும் கவர்ச்சி உடையவர் . மேலும் செவ்வாயுடன் கூட்டு. தைரியம் மிக்கவர்.
2. இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் . ஷட்பலத்தில் 145% குரு பலம் பொருந்தியவர் . கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம்
3. உச்சமான குருவின் 5ம் பார்வை 2ம் வீட்டை பார்ப்பதால் இரண்டாம் வீடு (31 பரல்) பெற்று நல்ல குடும்பம், நல்ல செல்வ நிலை பெற்று சிறப்பாக அமைந்துள்ளது .
4. உச்சமான குரு 10ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவார். 10ம் வீடு (39 பரல்) பெற்று மிக பலமானதாக உள்ளது.
5. 11ம் வீட்டில் சனி (4 பரல்) இருப்பதால் அரசாங்க வேலை கிடைத்தது 11ம் வீடு 31 பரல்.
6. 6ம் வீட்டில் கேது இருப்பதால் எதிரிகளை வெல்லும் திறமை உடையவர்.
7. இந்த ஜாதகத்தில் நிறைய யோகங்கள் உள்ளன . சுக்கிரன் செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் ராஜ யோகம் உடையவர் (கல்யாண வர்மா சரவள்ளி )
8. 33 வயதில் 2011-2017 வரை குரு மகா தசை - வாழ்க்கையில் சிறந்து பல வெற்றிகளை பெற கூடிய காலம்.
9. ஜாதகத்தில் சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 12-ம் வீட்டில் இருப்பதால் ஜாதகி அனைத்து சௌபாக்கியம்/சௌகரியத்தையும் அனுபவித்தும், மகிழ்வான குடும்ப வாழ்க்கை வாழ்வதோடு மற்றவர்களும் நன்கு வாழவைப்பார்
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, April 07, 2019 12:01:00 AM
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com