மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.18

Astrology: ஜோதிடம்: 23-11-2018 புதிருக்கான விடை!!!



Astrology: ஜோதிடம்: 23-11-2018 புதிருக்கான விடை!!!

கேட்கப்பெற்ற கேள்வி ஒரே கேள்விதான்.
ஜாதகருக்கு ஏன் எப்போதும் வரவைவிட  செலவே அதிகமாக உள்ளது?

பதில்
2ம் வீட்டுக்காரர் புதன் 12ல் அமர்ந்துள்ளார்.
அதாவது பண வரவிற்கான வீட்டுக்காரர் 12ம் வீடான விரைய வீட்டில் அமர்ந்துள்ளார். வரவைவிட  எப்போதும் அதிகமான செலவுகளுக்கு அதுவே முக்கியமான காரணம்!
தனகாரகன் குரு பகவான், ராகுவின் பிடியில் உள்ளார் என்பதைப் போன்ற வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானகாரணம்
2ம் வீட்டதிபதி 12ல் அமர்ந்ததுதான்

இந்தவாரம் 11 அன்பர்கள் நன்றாகப் பதில் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னைய பாராட்டுக்கள்! அவர்களின்
பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஒரு புதிருடன் மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
=========================================
1
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
23-11-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் ரிஷப லக்ன ஜாதகம். லக்னத்தில் சுக்கிரன், சூரியன், குரு, ராகு ஆகியோர் உள்ளனர்.
தன ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் உள்ளார். லாபஸ்தானாதிபதி குரு சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகியுள்ளார்.
லக்னம் ராகுவின் பிடியில் உள்ளது.ஆகவே வரவைவிட செலவு அதிகமாக ஜாதகருக்கு உள்ளது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, November 23, 2018 2:02:00 PM
-----------------------------------------------------
2
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கம்!
கொடுக்கப் பட்டுள்ள அன்பரின் ஜாதகத்தின் அம்சங்கள்
ரிஷப லக்னம். பகை கிரகங்கள் சூரியனும் குருவும் ராகுவுடன் இணந்து லக்கினத்தில் அமர்ந்ததால் லக்கினமும் லக்கினாதிபதி
சுக்கிரனும் கெட்டுள்ளது. குரு 8ம் பதி லக்கினத்தில் கேடு விளைவிக்கும் அமைப்பு.
வருமானத்தைக் குறிக்கும் 2ம் பதி புதன் 12 வது வீடான விரய ஸ்தானத்தில்.
எவ்வளவு வருமானம் வந்தாலும் விரயமாகிக் கொண்டு இருக்கும் அமைப்பு.
9ம் பதி சனி யோகாதிபதியாகி 10ல் அமர்ந்தாலும் தனது 3ம் பார்வையால் 12மிடமான விரய ஸ்தானத்தை பார்த்து
பலப்படுத்துகிறது.விரையாதிபதி செவ்வாயின் பார்வையால் யோகாதிபதி சனியும் 10மிடமும்,லாப ஸ்தானமான 11மிடமும்
கெட்டுள்ளது.
குருவின் பார்வையால் 9மிட பலத்தால் பணம் வந்தாலும் 12மிடம் அதிக பலம் பெற்றுள்ளதால் எப்போதும் பற்றாக்குறையே மிஞ்சும்.
அன்புடன்
-பொன்னுசாமி.
Friday, November 23, 2018 2:09:00 PM
---------------------------------------------------------
3
Blogger J Murugan said...
தனாதிபதி+பூர்வபுண்யாதிபதி ஆகிய புதன் விரயம் சென்றது மற்றும் அந்த புதன் மீது பாதகாதிபதியின் பார்வை.
பாக்கியாதிபதி அஷ்டமாதிபதி குரு சாரம் பெற்றது.
பொதுவான தனகாரகன் இராகுவின் பிடியில் இருப்பதும்
ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளைத் தந்தது.
Friday, November 23, 2018 2:17:00 PM
---------------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, Above person born on29/05/1965 time 6.30am 2nd lord mercury in 12th house and Jupiter is in Graha yutti and combustion with sun hence he spend more money than earning
Friday, November 23, 2018 3:17:00 PM
--------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 29 மே 1965 அன்று காலை 6 மணி 32 நிமிடஙகளுக்குப் பிறந்தவர்.
லக்கின‌த்திற்குப் பன்னிரண்டாம் இடத்தில், விரயத்தில், தன‌ ஸ்தானதிபதி புதன் மறைந்தது.தனகாரகன் குரு லக்கினத்திற்கு
8க்கும் உரியவர்,அவர் லக்கினத்தில்
ராகு, கேது, சூரியனால் பாதிக்கப்பட்டவர். சூரியனால் குரு அஸ்தங்கதம்.
இக்காரணங்கள் விரயத்தைக் கொடுத்தது.
Friday, November 23, 2018 8:31:00 PM
-----------------------------------------------------
6
Blogger Sanjai said...
2 க்கு உடைய தனஸ்தானாதிபதி (புதன்) 12 ல் (மறைவு ஸ்தானத்தில்). ஆகவே வரவுக்கு மீறிய செலவு.
Friday, November 23, 2018 9:37:00 PM
--------------------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answar for quiz 23.11.2018
Dob for the horoscope person on 29.05.1965 time 6.10am
1-Second lard in 12th house
2.Second lard in enemy house
3.Saturn saw second lard
4.Saturn saw moon (punarpu thosam)
Above all reasons for economically problem for him
Saturday, November 24, 2018 12:17:00 PM
--------------------------------------------------------------
8
Blogger adithan said...
வணக்கம் ஐயா,லக்னத்தில் சூரியன் மட்டுமே சுபர்.சுக்ரன் லக்னாதிபதி என்பதால் சமம்.குரு,ராகு மற்றும் மாந்தி பாப
கிரகங்கள்.சுபரான 2ம் அதிபதி,12ல் லக்ன பாபரான சந்திரனுடன் சேர்ந்து மறைவு.அடுத்து வருமானம் வரும் 10 ம் இடத்தில்
பாக்யாதிபதியும் யோககாரனும் ஆன சனி ஆட்சி.அதே சனி அம்சத்தில் நீசம்.வருமானமே அதிகம் வர வாய்பில்லை.4ம் இடத்தில்
அமர்ந்த சுபாரான செவ்வாய்க்கும் அதே சனியின் பார்வையால்,4ம் இடத்தின் சுகங்களை அனுபவிக்க முடியவில்லை.வருமானம்
வரும் 10ம் இடமும் சேமிக்கும் இரண்டாம் இடமும்,சுகங்களை அனுபவிக்கும் நாலாமிடமும் கெட்டதே காரணம்.ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி அம்சத்தில் கெட்டது நன்மையே ஆனாலும்,நன்மைகளை அனுபவிக்க பாதகாதிபதி தசா வரை காத்திருக்க வேண்டும்.நன்றி
Saturday, November 24, 2018 12:50:00 PM
----------------------------------------------------------
9
Blogger P. CHANDRASEKARA AZAD said...
Dear sir
THE FOLLOWING REASONS FOR VARAVU ETTANA AND SELAVU PATHU ANA
1. 2nd house Head Mercury - Lagna thirku 12im veetil - viraya sthanam
2. Dhana Karagan and 11th House House Head Jupiter has spoiled or collapsed by Mandhi and Rahu successfuly.
3. Ascendant lord Venus also spoiled and collapsed by Rahu and Maandhi
thanks & regards
P.CHANDRASEKARA AZAD
Saturday, November 24, 2018 7:42:00 PM
---------------------------------------------------------------
10
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
லக்னாதிபதி சுக்கிரன்ஆட்சி, ராகு மாந்திகூட்டு
நவாம்சத்தில் சுக்கிரன் பகை மற்றும் மாந்தி வீட்டில்...
2ஆம் வீட்டு அதிபதி 12 ல் விரையத்தில் .....
மற்றும் சனி
பார்வை
11ஆம் வீட்டு அதிபதி மாந்தி, ராகு உடன் கூட்டு...
நன்றி
கண்ணன்
Saturday, November 24, 2018 8:01:00 PM
------------------------------------------------------------
11
Blogger Chandrasekaran Suryanarayana said...
ஜாதகர் 29 மே மாதம், 1965 காலை 6.05 மணிக்கு சனி கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்
1. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்தில், குரு (8ம் வீட்டு அதிபதி) ராகு , 6ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. கேதுவின்
7ம் பார்வை லக்கினத்தின் மீது.
2. 2ம் வீட்டு அதிபதி புதன் 12ல் இருந்தால் பணம் தங்காது . 11ற்கு உரிய குரு லக்கினத்தில் ராகு கேது பிடியில் . பைப்பும்
அடைபட்டிருக்கிறது.
3. 2 & 11 கெட்டால் பணம் எப்படி வரும்? செல்வம் எப்படி சேரும். ஆகவேதான் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.
4. பத்தாம் வீட்டுக்காரன் சனி (39 பரல்) அந்த வீட்டில். கடுமையாக உழைக்க கூடியவர். அரசாங்க உத்தியோகத்தில் இருக்க

கூடியவர்.
5. முக்கியவில்லன்களான 6ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனும் , எட்டாம் அதிபதி குருவும் லக்கினத்தில் சென்று அடிதடி சண்டையில்
ஈடு பட்டிருக்கிறார்கள்.
6. சுபக்கிரகங்கள் 3ல் ஒன்றுகூட தப்பிக்காமல் கெட்டுப் போயிருக்கின்றன. சுபக்கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை ஒளிமயமாகஇருக்கும்
7. சனியின் 7ம் பார்வையில் 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் , 7ல் கேது இருந்தால் மனைவி வியாதியில் இருக்க கூடியவர்
அதனால் தான் செலவு அதிகம்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, November 25, 2018 2:29:00 AM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com