மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.16

Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்

நேற்றைய புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன கையோடு விவாகமும் ரத்தானது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி கடக லக்கினக்காரர்.
காலசர்ப்ப தோஷ ஜாதகம்.
லக்கினத்தில் மாந்தி - குணக்கேடானவர்.
பாக்கியாதிபதி குரு 12ல், விரையத்தில் மறைந்துவிட்டார். பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி முக்கியம். இந்த ஜாதகிக்கு அது இல்லை.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 6ல் மறைந்து விட்டார். யோகங்களும் அடிபட்டுவிட்டது.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில், 4ல் அமர்ந்தாலும் சனியின் பிடியில் சிக்கியுள்ளார். கிரகயுத்தம்
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகியை அதிர்ஷ்டமில்லாதவராகச் செய்துவிட்டன.
----------------------------------------
குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள்.

இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

ஜாதகத்தில் கடுமையான புனர்பூ தோஷம் இருக்கிறது. புனர்பூ தோஷம் தன்னுடைய வேலையைக் காட்டியது. ஜாதகி, திருமணமான மூன்றாவது மாதமே கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். கணவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். அத்துடன் ஜாதகியின் திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது.

குடும்ப ஸ்தானத்தில் விரையாதிபதி புதனின் ஆதிக்கமும் சேர்ந்து ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் செய்து விட்டது.
ஜாதகியின் பூர்வபுண்ணிய மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான 5ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கெட்டுள்ளது. ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு. அதனால் ஜாதகிக்குக் குழந்தையும் இல்லை. குணக்கேட்டால் மறுமணமும் செய்து கொள்ளவில்லை.

விளக்கம் போதுமா?
--------------------------------
புதிர்ப் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையையோ அல்லது அதை ஒட்டிய விடையையோ 7 பேர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

அவர்களின் பதில்கள் கீழே உள்ளன.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
02-செப்டம்பர்-1954 அன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் - கடக லக்னம்.
சுக்ரன் ஆட்சி பலத்துடனும், களத்திர ஸ்தானாதிபதி உச்சமாகவும் இருப்பதால் திருமணம் நடைபெற்றது.
ஆனாலும், லக்ன-மாந்தியால் பிடிவாத குணம்; சயனபோக ஸ்தானத்தில் ஆறாம் அதிபன் கேதுவுடன்; யோககாரகன் ராஹுவுடன் ஆறில் மறைவு,
பாக்கியஸ்தானாதிபதி மறைவு, புத்திர-பூர்வ புண்ணிய ஸ்தானம் கத்தரியில் மற்றும் புனர்பூ தோஷம் ஆகியவற்றால் 35 வயதில் விவாக ரத்து ஆகியிருக்கும்.
Friday, June 10, 2016 9:24:00 AM /.////////
------------------------------------------
2
///Blogger KJ said...
Sir,
In Native Horoscope, There is Punarpoosa Dosam (Saniswaran + Chandran). So Marraige Life will be troubled. Also Delay marraige is possible, Still problem in Marriage life.
Thanks,
Sathishkumar GS
Friday, June 10, 2016 5:11:00 PM/////
--------------------------------------
////Blogger mohan said...
ஐயா, தலைப்பிற்கான படம் அருமை. எங்கிருந்தையா இவ்வளவு ரசனையோடு எடுக்கின்றீர்கள்./////

கூகுள் அண்டவரிடம் இருந்துதான் சாமி!
-----------------------------------------------
3
///////Blogger கலையரசி said...
திருமணம் குரு திசையில் நடந்து இருக்கும் .
குழந்தை இல்லாமை தெரிகிறது .
கணவனுடன் பிரிந்து வாழ்வார் .
கடல் கடந்து , வெளி நாட்டில் வாழ வாய்ப்பு உள்ளது.
பொருளாதரத்திற்கு குறைவு இருக்காது.
நிறைய ஆன்மீக பணியில் செய்பவர் . முக்கியமாக குழந்தைகள் நலனையொட்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்வார்.
தந்தை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பார் .
Saturday, June 11, 2016 2:21:00 AM////
------------------------------------------
4
///////Blogger Raja C said...
கடக லக்னம் , துலா ராசி , சுவாதி நட்சத்திரம். சூரியன் சிம்மத்தில், செவ்வாய் ராஹு ஆறாம் வீட்டில். எதற்கும் பயபடாதவர், அதிகார எண்ணம் உடையவர் ! சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் ! லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி .

சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் ! 12இல் கேது , மீண்டும் இல்லற வாழ்கை அமையாமல் , கடைசி காலத்தில் , இறைவனை நினைத்து வாழ்ந்து இருப்பார் !
Saturday, June 11, 2016 9:24:00 AM //////
-----------------------------------------------
5
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 111
02-09-1954 ஆம் அண்டு காலை 4.50 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் கடக லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. (எடுத்து கொண்ட இடம்: சென்னை)
கடக லக்கினம்: யோகக்காரர்கள் - குரு சந்திரன் செவ்வாய் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன் புதன்.
சனி உச்சம் புதன் அஸ்தங்க்கம். வர்கோத்தமம் : சூரியன் சுக்கிரன் குரு
லக்கினம்:
ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. இன்னொரு பக்கம் சூரியன். சங்கடமான அமைப்பு. லக்கினம் (26 பரல்) அடிக்கடி நோய்வாய்ப்படுவார். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.லக்கினத்தில் மாந்தி இருப்பதால்

முரட்டு குணம் உள்ளவர்.பிடிவாதக்காரர்.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு. 4ம் வீட்டு அதிபதி 4ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன் துலா ராசியில்
கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
7ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டில் துலா ராசியில் உச்சம்.
ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் கேந்திரத்தில். அத்துடன் அவர் லக்கின வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
பாக்கியஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து 5ம் பார்வை சனி சந்திரன் மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சந்திரனுடன் கை கோர்த்து ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார். குரு தசை சந்திர புக்தியில் 29 வயதில் திருமணம் நடைபெற்றது இந்த கடக லக்கினத்தில் ஜாதகத்திற்கு சந்திரனும் குருவும் யோகக்காரர்கள்.
2ம் வீடு: (குடும்பஸ்தானம்) :
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
12ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகி பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவாள். கடன் தொல்லைகள்

ஏற்பட்டு அவதிப்படுவாள். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
6ம் வீட்டு அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகியினால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த அமைப்பு நல்ல பார்வை பெறாமல் தீய பார்வைகள் பெற்றிருப்பதால் வாழ்க்கை அவலமாகவும் கடினமாகவும் இருக்கும். செவ்வாய் ராகுவின் 7ம் பார்வை, 12ம் வீட்டின் மீது இருப்பதாலும் 12ம் வீட்டில் குருவுடன் கேது கூட்டு இருப்பதாலும் 12ம் வீடு
பாதிக்க பட்டுள்ளது.
சனியும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம் ஏற்படும் . சனி தசை சந்திர புக்தியில் 45 வயதில் திருமணம் பிரிவில் முடியும்.
குழந்தை பாக்கியம்: (ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை)
5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு செவ்வாய் .5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூட்டு மேலும் கேதுவின் 7ம் பார்வையில் உள்ளார் . ஆகையால் 5ம் வீடு கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. ஆகையினால் ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
சந்திர ராசியிலிருந்து 7ம் வீடு 10ம் வீடு ஆகும். அதன் அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் .தீய கிரங்க்களினால் பாதிக்க பட்டுள்ளார்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி
உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்.
எட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகினுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான
பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.
Sunday, June 12, 2016 7:06:00 AM//////
-----------------------------------------
6
////Blogger asbvsri said...
Answer for Puthir 111:
Vanakkam.
Kadaga lagnam, Lagnathipathi Chandran in 4th house kendrathil. 7th house owner Sani in 4th house - Kendrathil Ucham. Kudumbasthanathipathi
Suriyan in 2nd house - atchi, 9th house owner Gurn in 12th house - bogastanathil. All these helped her to get a family life.
But Sani, Chandran, plus Sukran kootu Nallathalla. Also they are affecting the Aruda Lagnam. Sani, Sevvai parvai to Lagnam. Lganam is in Papa
Karthari yogathil. Navamsathil lagnam is aflicted by Ketu with Rahu, sani parvai. Rasiyil Virayathipathi Budan in kudumbasthanathil.
She could have had a decent family life till Guru Dasa i.e till the age of 34. During Sani dasa at the age of 35 problems would have started and
she might have lived like a saint.
Thanks,
K R Ananthakrishnan - Chennai
Sunday, June 12, 2016 12:39:00 PM//////
--------------------------------------------
7
//////Blogger ambharish said...
வணக்கம் தங்கள் வினாவினை கண்டேன். இந்த ஜாதகிக்கு 33வது வயது முதல் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை .பொருளாதாரம் மற்றும் அசையும் அசைய சொத்துக்கள் அபரிமிதமாக சேரும் ஆனால் அவைகள் இவர்களுக்கு பிரயாஜநம் அற்றுபோகும் 42வது வயதில் கணவருக்கு ஒருகண்டமும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருப்பார்கள். அனைவரோடும் சேர்ந்து இருந்தாலும் இந்தப்பெண் ஒரு சந்நியாசி போலவே வாழ்வாள்.
காரணம்.
7குடையவன் சனி 4ல் உச்சஸ்தானத்தில் சச யோகத்துடன் உள்ளார் .33வது வயதில் தனது திசையை ஆரம்பித்து உள்ளார் .7குடையவன்
உச்சமானால் திருமண வாழ்க்கை கிடையாது. சிலருக்கு திருமணமே ஆகாது . வீடு கொடுத்த சுக்கிரன் தன பாவத்திலேயே இருப்பதால் திருமணம் நடந்தே தீரும் .ஆனால் சனியானவர் 7குடையவர் மட்டுமின்றி 8குடையவராகவும் உள்ளார். ஆகவே அவர் தனது திசை காலத்தில் இல்லறத்தை கெடுதலும் பொருளாதாரத்தை அதிகம் கெடுக்காமல் தனிமையில் வாழவைக்கிறார்.
அம்பரீஷ் சாஸ்திரிகள்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. நன்றி ஐயா. நானும் தேர்வில் பங்கு பெற்றேன் என்ற மன நிறைவு.

    கேது கொடிப் பிடிக்கும் காலசர்ப்ப தோசம் என்று லால்குடியார் சொல்லி உள்ளார்.

    அது சரியா ஐயா.

    என் ஐயம் தெளிவுறவே கேட்கின்றேன்.
    நன்றி.
    ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி

    ReplyDelete
  2. வர்கோத்தமம் என்றால் 200% நன்மை அளிக்கும் என்று கூறினீர்கள். இங்கு குரு வர்கோத்தமம் ஆயிட்றே. ஆனாலும் 12ல் மறைவு. அப்போ mixed results இருக்குமா ஐயா.

    sudharsan,
    kamchipuram

    ReplyDelete
  3. Good morning sir.thangaludaya ezhuthu nadai arumsiyaga ullathu

    ReplyDelete
  4. /////Blogger mohan said...
    நன்றி ஐயா. நானும் தேர்வில் பங்கு பெற்றேன் என்ற மன நிறைவு.
    கேது கொடிப் பிடிக்கும் காலசர்ப்ப தோசம் என்று லால்குடியார் சொல்லி உள்ளார்.
    அது சரியா ஐயா.
    என் ஐயம் தெளிவுறவே கேட்கின்றேன்.
    நன்றி.
    ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி/////

    7 கிரகங்கள் கேது & ராகுவிற்குள் மாட்டிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அவைகள் கடிகாரச் சுற்றில் சுற்றும்போது முதலில் இருப்பது ராகுதான். ஆகவே இது ராகு கொடிபிடிக்கும் ஜாதகம். கேது அல்ல!

    ReplyDelete
  5. ////Blogger Sudharsan Dhamu said...
    வர்கோத்தமம் என்றால் 200% நன்மை அளிக்கும் என்று கூறினீர்கள். இங்கு குரு வர்கோத்தமம் ஆயிட்றே. ஆனாலும் 12ல் மறைவு. அப்போ mixed results இருக்குமா ஐயா.
    sudharsan,
    kamchipuram/////

    விரையத்தில் அமர்ந்தபிறகு சதவிகிதக் கணக்கு ஏது? எல்லாம் விரையமாகிவிடாதா?

    ReplyDelete
  6. ////Blogger Subathra Suba said...
    Good morning sir.thangaludaya ezhuthu nadai arumiyaga ullathu//////

    நல்லது. உங்களுடைய பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com