+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.25
திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
வணக்கம் அய்யா
கேள்விகள் எல்லாம் என்னுடைய சொந்த கற்பனையே!
யாரோ ஒருவர் மண்டபத்தில் உருவாக்கி கொடுத்து கேட்கப்பட்டது
அல்ல! சுத்த அக்மார்க் திருநாராயணனால் கேட்கப்பட்டது.
நன்றி அய்யா!
அதையெல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுபோகட்டும், மண்டபத்தில் எழுதிக்கொடுக்கிற ஆட்கள் உங்கள் ஊரில் உள்ளதுபோல் தெரிகிறது. கேள்விகளை மட்டும்தான் எழுதித் தருவார்களா? கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தருவார்களா? கேட்டுச் சொல்லுங்கள்:-))))
1. “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?
திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகச்
சொல்லப்படும் சொல்லடை அது! இப்போது எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள். பத்துப் பொய்களைக்கூடச் சொல்ல முடியாது.
சொன்னால், பிறகு மகளிர் காவல்நிலைத்தில் நிற்க வேண்டிய
நிலைமை ஏற்படலாம். அதையும் யோசித்துப் பொய்களைச்
சொல்வது நல்லது.
2. குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
மூன்று பேர்கள் ஒரே ராசியாக இருந்தால் கோச்சாரத்தில் கிரகங்கள்
மூன்று பேரையும் ஒரே சமயத்தில் படுத்தி எடுக்கும். ஏழரைசனி,
அஷ்டமச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்து உலகக்கோப்பை
ரேஞ்சிற்கு விளையாடும்.ராசிநாதனாக உள்ள கிரகத்தின் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வணங்கிவிட்டு வரலாம். உதாரணம் சிம்ம ராசியாக இருந்தால் சூரியனார் கோவில். மகரம் அல்லது கும்ப ராசியாக இருந்தால் திருநள்ளாறு. அல்லது தனித்தனியாக அவரவர்களுக்கு நடக்கும்
தசையை வைத்து, தசாநாதனின் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம். வசதியில்லாதவர்கள், தங்களின் ஜென்மநட்சத்திரத்தன்று
உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழி பட்டு
விட்டு வரலாம். அர்ச்சனை செய்துவிட்டு வரலாம். நல்ல பலன்
கிடைக்கும். நம்பிக்கையுடன் வணங்குவது முக்கியம்.
3. ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை
மாற்ற முடியுமா?
மாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் (மனிதப் பிறவிகளால்) அதை மாற்ற முடியாது!
4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?
பெற்றவர்களின் ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருக்கும்.
அதன் காரணமாக அவர்கள் ஒரே நாளில் ஒரே பாதக நிகழ்வில் தங்கள் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடலாம். 12ஆம் வீட்டில் மாந்தி
இருந்தாலும்ஜாதகனுக்கு இதுபோன்ற திடீர் இழப்புக்கள் ஏற்படும்! அது குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பொன், பொருள், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று எதுவாக வேண்டுமென்றாலும்
இருக்கலாம்!It is called as sudden loss to the native
5. ஒருவர் செய்யும் செயல்களை வைத்து அவர்களுக்கு கற்பனையான
ஜாதகம் உருவாக்க முடியுமா?(உதாரணம்_ பூவரசி)
குணங்களை வைத்து லக்கினத்தை உருவாக்கலாம். ஆனால் செயல்கள் எனும்போது கஷ்டம். முழு ஜாதகத்தையும் கற்பனையாக உருவாக்க முடியாது. பிறப்பு விவரங்களை ஜாதகத்துடன் இணக்க முடியாது. அல்லது உருவாக்கிய ஜாதகத்துடன் அவற்றைக் கொண்டுவர முடியாது. ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.26
C.குமரேசன்
/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தினால் பலன்கள் மாறாதா? நாம் கோள்சாரத்தில் நவீன அறிவியலைப் பயன்படுத்துகிறோம் என்றால் பலன்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? அவர்கள் உடலுக்குத் தகுந்த சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள். இப்பொழுது நமக்கு?//////
திருக்கணிதத்தை வகுத்த மேதைகளையே அதையும் மாற்றி எழுதித் தரச்சொல்லலாமே!
எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். அம்மாவும் தன் தாய்ப்பாசத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார்.
ஆடுமாடுகள் எல்லாம் அதே நான்கு கால்களுடன்தான் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளும் பத்து வயதுவரை குழந்தைகளாகத்தான் இருக்கின்றன.
இயற்கையில் மாற்றம் இல்லை.பருவங்களில் மாற்றம் இல்லை. கிரகங்களின் சுழற்சியிலும் மாற்றம் இல்லை. சுழற்சிப் பாதையிலும் மாற்றம் இல்லை. சுழற்சி வேகத்திலும் மாற்றமில்லை.
ஹோண்டா சிட்டி கார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதைப்போல அல்லது புல்லட் ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் போவதைப்போல (அதாவது வாகனங்கள் வேகத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் இருப்பதைப்போல) கிரகங்களில் எந்தத்தாக்கமும் இல்லை. சூரியன் தன்னுடைய சுற்றை முடிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்தைத்தான்
எடுத்துக்கொள்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆறு
மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ தன்சுற்றை முடித்துக்கொள்வதில்லை. முடித்துக்கொண்டால் என்ன ஆகும்?
சூரியனுக்கு செமஸ்டர் சிஸ்டம் எல்லாம்கிடையாது. அரியர்ஸ்
எல்லாம் வைக்க முடியாது. தனக்குப் பதிலாக ஃப்ராக்ஸி எல்லாம்
கொடுக்க முடியாது.
அதுபோல சந்திரன் 27 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. (27 நட்சத்திரங்கள். 27 நாட்கள்). சந்திரனும் எந்த பம்மாத்து வேலையும் செய்வதில்லை.
புரிகிறதா?
அதுபோல ரிஷிகள் கணித்துவைத்துவிட்டுப்போயிருக்கும், கிரகங்கள் அவற்றின் வீடுகள். அதனதன் பலன்களிலெல்லாம் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்படுத்த முடியாது. நீங்கள் குழப்ப நினைக்கும், அல்லது குழம்பி நிற்கும், திருக்கணித ஜாதகத்திலும், 9 கிரகங்கள் 12 வீடுகள்தானே இருக்கின்றன?
திருக்கணித ஜாதகத்திற்கும் வாக்கிய ஜாதகத்திற்கும் சுமார் 2 பாகைகள் வித்தியாசம் உள்ளது உண்மை. அதனால் லக்கின சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மட்டும் நட்சத்திர பாகையில் வித்தியாசம் ஏற்படும்.
சிலருக்குதிருக்கணிதத்தில் ஒரு லக்கினமும், வாக்கியத்தில் ஒரு
லக்கினமும் வரும்.
நான் காலசந்திப்பில் பிறந்தவன். திருக்கணிதத்தின்படி என்னுடைய
லக்கினம் கடகம்! வாக்கியத்தின்படி சிம்ம லக்கினம். அதேபோல ராமன் அயனாம்சத்தின்படியும் சிம்ம லக்கினம்தான். என் பாட்டனார் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிபிட்டுள்ளார். சிம்மலக்கினத்தைவைத்துப் பார்க்கையில்
மட்டுமே என்ஜாதகப் பலன்கள் சரியாக வருகின்றன. ஆகவே நான் திருக்கணிதத்துடன் டூ விட்டுவிட்டேன்.
இதை வைத்து ஒருவருக்கு அருள் வந்து என்னுடன் கும்மி ஆடினார்.
நீங்கள் துவக்க காலத்தில் திருக்கணிதத்தை ஆதரித்தது ஏன் என்று கேட்டு என்னை மடக்கினார். அஷ்டகவர்க்கம் இல்லாதவர்களுக்கான கணினி ஜாதகத்தைச்சிபாரிசு செய்தேன். துவக்கத்தில் (எனக்குத் தெரிந்து) திருக்கணிதம் மட்டுமே program செய்யப்பட்டிருந்தது. இப்போது கணினி ஜாதகத்தில் எல்லா முறைகளுக்குமே option வந்து விட்டது.
சிலருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவர்கள்
வீட்டுக் குழந்தைகளைக்கேட்டால், இந்த இருதாரக் குடும்பங்களில்
உள்ள அவலங்கள் தெரியும். அதுபோல காலசந்திப்பில் பிறந்தவர்
களுக்கு சில அவலங்கள் உண்டு. முக்கியமான அவலம். ஜோதிடன்
சொல்லும் பலன்களில் பாதி சரியாக இருக்காது. பலன்கள் சரியாக
இருக்க வேண்டும் என்றால், வாக்கியத்தை வைத்து ஜாதகத்தைக்
கணித்துப் பலன்களைப் பார்க்க வேண்டியதுதான் ஒரே வழி! அப்பா எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது
முக்கியம்.
இல்லை, விஞ்ஞானம், நாகரீகம், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு
அவருக்கு (காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு) அந்த இரண்டு
லக்கினங்களின் குணாதியம்சங்களும் இருக்கும்.
திருக்கணிதம் பிடித்திருந்தால், அதுதான் நாகரீக, விஞ்ஞான
வளர்ச்சியின் சாதனை என்று நினைப்பவர்கள், அதையே கடைப்
பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பெண்
சேலை கட்டிக்கொள்ளலாம்,சுடிதார் போட்டுக்கொள்ளலாம்.
2 piece dressஆக Top & Midi போட்டுக்கொள்ளலாம். எல்லாம்
அவளது விருப்பம். அதுபோல நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் (கடைப்பிடியுங்கள்) அது உங்கள் விருப்பம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.27
V.சுந்தரேசன்
புனைப்பெயர்: சுந்தர் வேலவன்
துபாய்
வயது 30
Dear sir,
I have two Doubts
1. Reshba lakanthirku 9 and 10 owner same planets(saturns) intha jathakathuku Dharmakarma athipathi Yogam unda?
ஏன் இல்லை. 9 & 10ஆம் இடங்கள் இரண்டிற்கும் சனீஷ்வரனே அதிபதியாகிவிடுவதால், ஜாதகத்தில் அவர் திரிகோண வீடுகளில் அல்லது கேந்திரங்களில் இருந்தால் அந்த யோகம் உண்டு.
2. Guru vin VAKRA parviku pallan unda?
குருவின் வக்கிர பார்வைக்குப் பலன் உண்டு!
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும். குரு எப்படி இருந்தாலும் நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார். குறைந்த அளவு என்றவுடன், எத்தனை சதவிகிதம் குறையும் என்று ஒருவர் கேட்டார். அதை
அளந்து சொல்ல டிஜிட்டல் தராசு இல்லை.
அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
அழகுடன் இருப்பாள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?
கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
தமன்னாவும் அழகுதான!
அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.
தேவையும் மாறுபடும்.ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் இருந்தால்
போதும். ஒருவருக்கு இருபது லட்சம் கிடைத்தாலும் பத்தாது.
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுக்கு அதுவே ஆயிரம்
கோடியென விரிவடையும்.
அதுபோல வக்கிர பலன் என்பது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.
ஒரு நாளில் 12 வித்தியாசமான லக்கினங்களில் பிறக்கும் 12 விதமான லக்கினங்களுக்கும் அது மாறுபடும். அதன் பலன்களும் மாறுபடும்.
ரேசன்கடையில் உள்ள மேலாளரை, அளவு குறைத்தால், சட்டையைப் பிடித்துக்கொண்டு அல்லது கழுத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதைப்
போல கிரகங்களைக் கேட்க முடியாது.
ஆகவே கிடைத்தவரை சரி என்று சந்தோஷமாகப் போய்விட
வேண்டியது தான்!
ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அடுத்து வருவது சுக்கிர தசை.
அதில் உங்களுக்கு செல்வம் சேரும் என்று ஒரு ஜோதிடர் சொன்னால், எவ்வளவு செல்வம் வரும்? எந்த வழியில் வரும்? வருவது தங்குமா?
எந்த அளவு தங்கும்? என்று நீங்கள் கேள்வியை அடுக்கினால்,
அதற்கெல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாது. செல்வம் வரும்
என்று பொதுவான சந்தோசத்துடன் இருங்கள். எவ்வளவு வரும்?
அதை எப்படி ஒளித்து வைப்பது? எப்படி இன்கம்டாக்ஸில் இருந்து
தப்பிப்பது போன்ற கவலைகளை எல்லாம் விட்டொழியுங்கள்.
வருகின்ற அன்றைக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
எதற்கும் அளவு கிடையாது!
ஆசைக்கு அளவு உண்டா?
தேவைக்கு அளவு உண்டா?
ஆனால் ஒன்றிற்கும் மட்டும் அளவு உண்டு.
அனைவருக்கும் அது ஒரே அளவுதான்!
அதுதான் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்
அதன் அளவு அனைவருக்கும் 337 மட்டுமே!
-----------------------------------------------
மின்னஞ்சல் எண்.28
ராஜா,
மும்பை.
வயது 45
(நான் உங்கள் பதிவேட்டில் இருக்கிறேன்)
ஐயா வணக்கம்,
ரிஷப லக்கினத்திற்கு சனி 9 -ம் மற்றும் 10 -ம் இடத்திற்கு அதிபதியாகிறான். எனவே, சனி 9 -ம் இடத்திலோ அல்லது 10 -ம் இடத்திலோ இருந்தால் 'தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகுமா ?.
இன்றையப் பதிவில் மின்னஞ்சல் எண் 27லிலும் இதே கேள்வி. அதற்கான பதில்தான் உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்.
===========================================================
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.25
திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
வணக்கம் அய்யா
கேள்விகள் எல்லாம் என்னுடைய சொந்த கற்பனையே!
யாரோ ஒருவர் மண்டபத்தில் உருவாக்கி கொடுத்து கேட்கப்பட்டது
அல்ல! சுத்த அக்மார்க் திருநாராயணனால் கேட்கப்பட்டது.
நன்றி அய்யா!
அதையெல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுபோகட்டும், மண்டபத்தில் எழுதிக்கொடுக்கிற ஆட்கள் உங்கள் ஊரில் உள்ளதுபோல் தெரிகிறது. கேள்விகளை மட்டும்தான் எழுதித் தருவார்களா? கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தருவார்களா? கேட்டுச் சொல்லுங்கள்:-))))
1. “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?
திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகச்
சொல்லப்படும் சொல்லடை அது! இப்போது எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள். பத்துப் பொய்களைக்கூடச் சொல்ல முடியாது.
சொன்னால், பிறகு மகளிர் காவல்நிலைத்தில் நிற்க வேண்டிய
நிலைமை ஏற்படலாம். அதையும் யோசித்துப் பொய்களைச்
சொல்வது நல்லது.
2. குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
மூன்று பேர்கள் ஒரே ராசியாக இருந்தால் கோச்சாரத்தில் கிரகங்கள்
மூன்று பேரையும் ஒரே சமயத்தில் படுத்தி எடுக்கும். ஏழரைசனி,
அஷ்டமச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்து உலகக்கோப்பை
ரேஞ்சிற்கு விளையாடும்.ராசிநாதனாக உள்ள கிரகத்தின் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வணங்கிவிட்டு வரலாம். உதாரணம் சிம்ம ராசியாக இருந்தால் சூரியனார் கோவில். மகரம் அல்லது கும்ப ராசியாக இருந்தால் திருநள்ளாறு. அல்லது தனித்தனியாக அவரவர்களுக்கு நடக்கும்
தசையை வைத்து, தசாநாதனின் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம். வசதியில்லாதவர்கள், தங்களின் ஜென்மநட்சத்திரத்தன்று
உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழி பட்டு
விட்டு வரலாம். அர்ச்சனை செய்துவிட்டு வரலாம். நல்ல பலன்
கிடைக்கும். நம்பிக்கையுடன் வணங்குவது முக்கியம்.
3. ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை
மாற்ற முடியுமா?
மாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் (மனிதப் பிறவிகளால்) அதை மாற்ற முடியாது!
4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?
பெற்றவர்களின் ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருக்கும்.
அதன் காரணமாக அவர்கள் ஒரே நாளில் ஒரே பாதக நிகழ்வில் தங்கள் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடலாம். 12ஆம் வீட்டில் மாந்தி
இருந்தாலும்ஜாதகனுக்கு இதுபோன்ற திடீர் இழப்புக்கள் ஏற்படும்! அது குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பொன், பொருள், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று எதுவாக வேண்டுமென்றாலும்
இருக்கலாம்!It is called as sudden loss to the native
5. ஒருவர் செய்யும் செயல்களை வைத்து அவர்களுக்கு கற்பனையான
ஜாதகம் உருவாக்க முடியுமா?(உதாரணம்_ பூவரசி)
குணங்களை வைத்து லக்கினத்தை உருவாக்கலாம். ஆனால் செயல்கள் எனும்போது கஷ்டம். முழு ஜாதகத்தையும் கற்பனையாக உருவாக்க முடியாது. பிறப்பு விவரங்களை ஜாதகத்துடன் இணக்க முடியாது. அல்லது உருவாக்கிய ஜாதகத்துடன் அவற்றைக் கொண்டுவர முடியாது. ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.26
C.குமரேசன்
/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே இருக்க முடியும். இப்பொழுது நாம் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தினால் பலன்கள் மாறாதா? நாம் கோள்சாரத்தில் நவீன அறிவியலைப் பயன்படுத்துகிறோம் என்றால் பலன்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? அவர்கள் உடலுக்குத் தகுந்த சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள். இப்பொழுது நமக்கு?//////
திருக்கணிதத்தை வகுத்த மேதைகளையே அதையும் மாற்றி எழுதித் தரச்சொல்லலாமே!
எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். அம்மாவும் தன் தாய்ப்பாசத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார்.
ஆடுமாடுகள் எல்லாம் அதே நான்கு கால்களுடன்தான் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளும் பத்து வயதுவரை குழந்தைகளாகத்தான் இருக்கின்றன.
இயற்கையில் மாற்றம் இல்லை.பருவங்களில் மாற்றம் இல்லை. கிரகங்களின் சுழற்சியிலும் மாற்றம் இல்லை. சுழற்சிப் பாதையிலும் மாற்றம் இல்லை. சுழற்சி வேகத்திலும் மாற்றமில்லை.
ஹோண்டா சிட்டி கார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதைப்போல அல்லது புல்லட் ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் போவதைப்போல (அதாவது வாகனங்கள் வேகத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் இருப்பதைப்போல) கிரகங்களில் எந்தத்தாக்கமும் இல்லை. சூரியன் தன்னுடைய சுற்றை முடிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்தைத்தான்
எடுத்துக்கொள்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆறு
மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ தன்சுற்றை முடித்துக்கொள்வதில்லை. முடித்துக்கொண்டால் என்ன ஆகும்?
சூரியனுக்கு செமஸ்டர் சிஸ்டம் எல்லாம்கிடையாது. அரியர்ஸ்
எல்லாம் வைக்க முடியாது. தனக்குப் பதிலாக ஃப்ராக்ஸி எல்லாம்
கொடுக்க முடியாது.
அதுபோல சந்திரன் 27 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. (27 நட்சத்திரங்கள். 27 நாட்கள்). சந்திரனும் எந்த பம்மாத்து வேலையும் செய்வதில்லை.
புரிகிறதா?
அதுபோல ரிஷிகள் கணித்துவைத்துவிட்டுப்போயிருக்கும், கிரகங்கள் அவற்றின் வீடுகள். அதனதன் பலன்களிலெல்லாம் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்படுத்த முடியாது. நீங்கள் குழப்ப நினைக்கும், அல்லது குழம்பி நிற்கும், திருக்கணித ஜாதகத்திலும், 9 கிரகங்கள் 12 வீடுகள்தானே இருக்கின்றன?
திருக்கணித ஜாதகத்திற்கும் வாக்கிய ஜாதகத்திற்கும் சுமார் 2 பாகைகள் வித்தியாசம் உள்ளது உண்மை. அதனால் லக்கின சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மட்டும் நட்சத்திர பாகையில் வித்தியாசம் ஏற்படும்.
சிலருக்குதிருக்கணிதத்தில் ஒரு லக்கினமும், வாக்கியத்தில் ஒரு
லக்கினமும் வரும்.
நான் காலசந்திப்பில் பிறந்தவன். திருக்கணிதத்தின்படி என்னுடைய
லக்கினம் கடகம்! வாக்கியத்தின்படி சிம்ம லக்கினம். அதேபோல ராமன் அயனாம்சத்தின்படியும் சிம்ம லக்கினம்தான். என் பாட்டனார் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிபிட்டுள்ளார். சிம்மலக்கினத்தைவைத்துப் பார்க்கையில்
மட்டுமே என்ஜாதகப் பலன்கள் சரியாக வருகின்றன. ஆகவே நான் திருக்கணிதத்துடன் டூ விட்டுவிட்டேன்.
இதை வைத்து ஒருவருக்கு அருள் வந்து என்னுடன் கும்மி ஆடினார்.
நீங்கள் துவக்க காலத்தில் திருக்கணிதத்தை ஆதரித்தது ஏன் என்று கேட்டு என்னை மடக்கினார். அஷ்டகவர்க்கம் இல்லாதவர்களுக்கான கணினி ஜாதகத்தைச்சிபாரிசு செய்தேன். துவக்கத்தில் (எனக்குத் தெரிந்து) திருக்கணிதம் மட்டுமே program செய்யப்பட்டிருந்தது. இப்போது கணினி ஜாதகத்தில் எல்லா முறைகளுக்குமே option வந்து விட்டது.
சிலருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவர்கள்
வீட்டுக் குழந்தைகளைக்கேட்டால், இந்த இருதாரக் குடும்பங்களில்
உள்ள அவலங்கள் தெரியும். அதுபோல காலசந்திப்பில் பிறந்தவர்
களுக்கு சில அவலங்கள் உண்டு. முக்கியமான அவலம். ஜோதிடன்
சொல்லும் பலன்களில் பாதி சரியாக இருக்காது. பலன்கள் சரியாக
இருக்க வேண்டும் என்றால், வாக்கியத்தை வைத்து ஜாதகத்தைக்
கணித்துப் பலன்களைப் பார்க்க வேண்டியதுதான் ஒரே வழி! அப்பா எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது
முக்கியம்.
இல்லை, விஞ்ஞானம், நாகரீகம், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு
வக்காலத்து என்று ஏங்குபவர்கள் எல்லாம், வாக்கியத்தை மறந்து
விட்டு அல்லது வாக்கியத்தின் நம்பகத்தன்மையைக் கேள்வி
கேட்பதை விட்டு விட்டுத் திருக்கணிதத்தின்படி தங்கள் ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் மண்டையைப் பிய்த்துக் கொண்டுஅலைய வேண்டிய திருக்கும்
அவருக்கு (காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு) அந்த இரண்டு
லக்கினங்களின் குணாதியம்சங்களும் இருக்கும்.
திருக்கணிதம் பிடித்திருந்தால், அதுதான் நாகரீக, விஞ்ஞான
வளர்ச்சியின் சாதனை என்று நினைப்பவர்கள், அதையே கடைப்
பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பெண்
சேலை கட்டிக்கொள்ளலாம்,சுடிதார் போட்டுக்கொள்ளலாம்.
2 piece dressஆக Top & Midi போட்டுக்கொள்ளலாம். எல்லாம்
அவளது விருப்பம். அதுபோல நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் (கடைப்பிடியுங்கள்) அது உங்கள் விருப்பம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.27
V.சுந்தரேசன்
புனைப்பெயர்: சுந்தர் வேலவன்
துபாய்
வயது 30
Dear sir,
I have two Doubts
1. Reshba lakanthirku 9 and 10 owner same planets(saturns) intha jathakathuku Dharmakarma athipathi Yogam unda?
ஏன் இல்லை. 9 & 10ஆம் இடங்கள் இரண்டிற்கும் சனீஷ்வரனே அதிபதியாகிவிடுவதால், ஜாதகத்தில் அவர் திரிகோண வீடுகளில் அல்லது கேந்திரங்களில் இருந்தால் அந்த யோகம் உண்டு.
2. Guru vin VAKRA parviku pallan unda?
குருவின் வக்கிர பார்வைக்குப் பலன் உண்டு!
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும். குரு எப்படி இருந்தாலும் நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார். குறைந்த அளவு என்றவுடன், எத்தனை சதவிகிதம் குறையும் என்று ஒருவர் கேட்டார். அதை
அளந்து சொல்ல டிஜிட்டல் தராசு இல்லை.
அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
அழகுடன் இருப்பாள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?
கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
தமன்னாவும் அழகுதான!
அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு மாறுபடும்.
தேவையும் மாறுபடும்.ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் இருந்தால்
போதும். ஒருவருக்கு இருபது லட்சம் கிடைத்தாலும் பத்தாது.
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுக்கு அதுவே ஆயிரம்
கோடியென விரிவடையும்.
அதுபோல வக்கிர பலன் என்பது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.
ஒரு நாளில் 12 வித்தியாசமான லக்கினங்களில் பிறக்கும் 12 விதமான லக்கினங்களுக்கும் அது மாறுபடும். அதன் பலன்களும் மாறுபடும்.
ரேசன்கடையில் உள்ள மேலாளரை, அளவு குறைத்தால், சட்டையைப் பிடித்துக்கொண்டு அல்லது கழுத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதைப்
போல கிரகங்களைக் கேட்க முடியாது.
ஆகவே கிடைத்தவரை சரி என்று சந்தோஷமாகப் போய்விட
வேண்டியது தான்!
ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அடுத்து வருவது சுக்கிர தசை.
அதில் உங்களுக்கு செல்வம் சேரும் என்று ஒரு ஜோதிடர் சொன்னால், எவ்வளவு செல்வம் வரும்? எந்த வழியில் வரும்? வருவது தங்குமா?
எந்த அளவு தங்கும்? என்று நீங்கள் கேள்வியை அடுக்கினால்,
அதற்கெல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாது. செல்வம் வரும்
என்று பொதுவான சந்தோசத்துடன் இருங்கள். எவ்வளவு வரும்?
அதை எப்படி ஒளித்து வைப்பது? எப்படி இன்கம்டாக்ஸில் இருந்து
தப்பிப்பது போன்ற கவலைகளை எல்லாம் விட்டொழியுங்கள்.
வருகின்ற அன்றைக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
எதற்கும் அளவு கிடையாது!
ஆசைக்கு அளவு உண்டா?
தேவைக்கு அளவு உண்டா?
ஆனால் ஒன்றிற்கும் மட்டும் அளவு உண்டு.
அனைவருக்கும் அது ஒரே அளவுதான்!
அதுதான் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்
அதன் அளவு அனைவருக்கும் 337 மட்டுமே!
-----------------------------------------------
மின்னஞ்சல் எண்.28
ராஜா,
மும்பை.
வயது 45
(நான் உங்கள் பதிவேட்டில் இருக்கிறேன்)
ஐயா வணக்கம்,
ரிஷப லக்கினத்திற்கு சனி 9 -ம் மற்றும் 10 -ம் இடத்திற்கு அதிபதியாகிறான். எனவே, சனி 9 -ம் இடத்திலோ அல்லது 10 -ம் இடத்திலோ இருந்தால் 'தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகுமா ?.
இன்றையப் பதிவில் மின்னஞ்சல் எண் 27லிலும் இதே கேள்வி. அதற்கான பதில்தான் உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்.
===========================================================
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!