மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.8.10

சுக்கிரனும் பின்னணி இசையும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுக்கிரனும் பின்னணி இசையும்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 8
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.22
பெயர்: குணசேகரன்
பிறந்த ஊர் பொள்ளாச்சி
இருப்பது ஸ்வீடனில்
வயது 26  ,
தனுசு லக்கினம் ,
மகரராசி
  
////////ஐயா ,
  புதன் சுப கிரகம் அதனுடன் மாந்தி உள்ளது. அதுவும் லக்கினத்தில், புதன் 7, 10ற்கு அதிபதி .லக்குனாதிபதி 12 ல் உடன் சூரியன் ,கேது .லக்குனாதிபதி குரு. இதில்  எப்படி பலன் தெரிந்து கொள்ளுவது ?
ஒரு வீட்டின் பலன் எடுத்து கொண்டால் இப்படி கூட்டாக இருந்தால் எப்படி கணிப்பது ? இதே போல் 11 ல் சுக்கிரன் ,சனி இருவரும் இருக்கிறார்கள் .சுக்கிரன் 11 ன் அதிபதி சனி இரண்டின் அதிபதி எப்படி பலன் கொள்ளுவது .ஒருவர் சொன்னார் இரண்டாம் வீட்டிற்கு பலன் எடுக்கும் போது ஆறாம் வீட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எனக்கு  கொஞ்சம் விளக்குங்களேன் ?//////////

வீடுகள், நிலம், தோட்டங்கள், வங்கியிருப்புக்கள் என்று குடும்பச் சொத்துக்கள் பலவிதமாகக் கொள்ளையாக உள்ளது. வாரிசு ஒருவர் என்றால் பிரிக்க வேண்டாம். சொத்துக்களை மதிப்பிட்டு இன்ன தேறும் என்று சொல்லிவிடலாம். நமக்குத் தெரிந்த அழகான பெண்ணையும் அவருக்குக் கட்டி வைத்துவிடலாம்.

அதே நேரத்தில் அந்த சொத்திற்கு நான்கு பேர்கள் வாரிசுகள். அத்துடன் பெரியவனுக்குத் திருமணமாகி அவன் மாமனார் சகுனியும் (மாந்தியும்) உடன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். சொத்துக்களை எப்படிப் பிரிப்பீர்கள்? அல்லது எப்படி மதிப்பிடுவீர்கள். சமயத்தில் விவகாரம் பூதாகரமாகி கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று ஜாதகர்களின் காலத்தில் பிரித்துக்கொள்ள முடியாதபடி சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுவதும் உண்டு.
சமயத்தில் கட்டைப் பஞ்சாயத்து வைத்தும் பிரித்துக்கொள்ளலாம். சில இடங்களில் வெட்டு, குத்து விழுந்து வழக்கு வேறு விதமாகிவிடுவதும் உண்டு.

அதுபோலத்தான் ஜாதகத்தை அலசுவதும்.

உங்கள் ஜாதகத்தையே எடுத்துக்கொள்ளூங்கள் (சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? பொள்ளாச்சிக்காரார் என்பதால் விட்டு விடுகிறேன். பொள்ளாச்சி எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று அதனால் விட்டு விடுகிறேன்:-)))

தனுசு லக்கினம். லக்கினாதிபதி குரு பகவான் 12ல் போய் மெத்தை போட்டு படுத்துக்கொண்டு விட்டார். அவரை எழுப்பி விடாலாம். ஏதாவது வேலை செய்யுங்கள் சாமி என்று சொல்லலாம் என்றால், உடன் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) சூரியனும் போய் படுத்துக்கொண்டுவிட்டார், இருவரும்தான் அப்படி என்றால் உச்சம் பெற்ற கேது அய்யாவிற்கும் அது 12ஆம் இடமாக அமைந்துவிட்டது. லக்கினாதிபதியால் பெரிய பலன் இருக்காது. அவர் தூங்குவதால், நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டும். லக்கினாதிபதி 12ல் இருந்தால் அதிக முயற்சி குறைந்த பலன். ஆனால் உடன் பாக்கியாதிபதியும் சேர்ந்து இருப்பதால், வாய்ப்புக்களை அவர்களே கொண்டு வந்து தருவார்கள். (படுத்திருந்தாலும் அவர்கள் பெயர் ராசிக்கும், சேர்க்கை ராசிக்கும் நடக்கும்) இருந்தாலும் இரண்டாயிரம் டாலருக்கு நீங்கள் உழைத்தாலும், கையில் 1000 டாலர்கள்தான் சேரும். அல்லது தேறும். மற்ற இருவரும் அவரவர் தசா / புத்தியில் எழுந்து முடிந்த அளவு (முழு அளவு இல்லை) பலனைத் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்கள்.

ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெரிய நஷ்ட ஈடு இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளார். உச்சம் பெற்று லக்கினத்திற்குப் பதினொன்று, தன் வீட்டிற்குப் பத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் குடும்ப மற்றும் தன ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே கையில் காசு புரளும். 7ஆம் அதிபதி புதன் வந்து லக்கினத்தில் அமர்ந்ததோடு, தன்னுடைய வீட்டையும் நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு நல்ல சுட்டியான பெண் மனைவியாக அமைவாள். அவள் வரும்போது செல்வத்துடன் வருவாள்.அவள் வந்த பிறகு நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய நிலைமை இருக்காது. மோட்டார் மாட்டிய படகுடன் அவள் வருவாள். அவளுடன் படகில் ஏறி நீங்கள் சொகுசாகப் பயணிக்கலாம். “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே” என்று அவள் அழகாகப் பாடி உங்களை மயக்கவும் செய்வாள். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும். தன் சொந்த வீட்டில் இருக்கும் சுக்கிரன் அதற்கு BGM போடுவார். (BGM என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதுதான் பின்னணி இசை Back ground music))

ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், ஜாதகன் சுகமான பின்னணி இசையோடு வாழ்வான்!

இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சமாக உள்ளார். அதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் மனைவி உங்களை வளைய வந்து உங்களுடன் உரசல் இல்லாமல் (அதாவது சண்டை சச்சரவு இல்லாமல்) குடும்பம் நடத்துவாள்.

இப்படித்தான் ஜாதகத்தை அலச வேண்டும். அலசல் போதுமா? விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.23
அசோக்குமார்

//////Dear Sir,
Thanks a lot for giving Question and Answer opportunity.
My Questions:
1.What is the remedy if Jupiter is placed in 5th Place? Jupiter is natural benefic , but  some astrologers are telling that the person with Jupiter placed in 5th will not get a child, Why?
Regards,
Ashok///////

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற அல்லது தள்ளுபடியாக ஒரு நாடு மட்டும் ஓட்டுப்போட்டால் செல்லாது. கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகள் ஓட்டுப்போட வேண்டும்.

அதுபோல குழந்தை பாக்கியத்திற்கான காரகன் குரு ஐந்தில் இருந்தால் பயப்பட வேண்டாம். ஐந்தாம் வீட்டு அதிபதி முக்கியமானவர். ஐந்தாம் வீடும் சிறப்பாக இருக்க வேண்டும். தீய சக்திகளின் பார்வை அல்லது சேர்க்கையில்லாமல் இருக்க வேண்டும். இதே கேள்வியை வேறு ஒரு மாணவர் வேறு விதமாகக் கேட்டிருந்தார். அவருக்குப் 10.8.2010 அன்றையப் பதிவில் பதில் சொல்லியுள்ளேன். அதையும் பாருங்கள்.அதன் சுட்டி இங்கே உள்ளது.

நீங்கள் அதைத் தேடி அலைய வேண்டாம் என்று நானே அதை உறித்துக் கீழே கொடுத்துள்ளேன்

கேள்வி: 3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?
மின்னஞ்சல் எண்.15 தேதி 10.8.2010
ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்) குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும் பாருங்கள்.

காரகன் பாவ நாசம் என்பது பொதுவிதி: தந்தைக்குக் காரகன் சூரியன் தன்னுடைய ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் ஒன்றும் செய்வதில்லை. ஜாதகனுக்கு நன்மையைச் செய்வார். ஆதே போல ஆயுள்காரகன் சனீஷ்வரன் தன்னுடைய ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் கெடுதல் செய்யாமல் நீண்ட ஆயுளைத் தருவார். அதுபோல குரு பகவானும் மற்ற அமைப்புக்களை வைத்து நன்மையைச் செய்வார். நம்புங்கள். குரு ஐந்தில் இருந்தால், தன்னுடைய விஷேசப் பார்வையான ஒன்பதாம் பார்வையால் ஜாதகனின் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். அதையும் மனதில் வையுங்கள்

விளக்கம் போதுமா நண்பரே!
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.24
P. வெங்கடேசன்.
கோயம்புத்தூர்
37 வயது

  
அய்யா,
நான் உங்கள் வகுப்பறை மாணவன்.
எனது இராசி - மிதுனம்
எனது நட்சத்திரம் - புனர் பூசம்
எனது லக்கினம் - கன்னி

என்னுடைய கேள்வி ஒன்று தான்.
எனது ஜாதகத்தில் பத்தாம் இடத்தில புதன், சந்திரன், சனி, செவ்வாய் என நான்கு கிரகங்கள் உள்ளன. எனக்கு வேலையில் அடிக்கடி இடைவெளி ஏற்படுகிறது. ஒரு வேலையை விட்டால் உடனே வேலை கிடைப்பது இல்லை. எனக்கு வேலை நிலைக்க அல்லது உடனடியாக வேலை கிடைக்க என்ன வழி? எனது கேள்விக்கு எனது மின் அஞ்சல் வழியாகவே பதில் அனுப்பினால் போதும். மிக்க எதிர்பார்ப்புடன்
வெங்கடேசன்
கோவை.

சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? நானும் கோவையில் தான் வசித்து வருகிறேன் என்பதால் விட்டு விடுகிறேன்.

கன்னி லக்கினம். லக்கினாதிபதி புதன் 10ல். 11ஆம் அதிபதி சந்திரனும் உடன் உள்ளார். இருவரும் சேர்ந்து வண்டியை நன்றாக ஓட விடுவார்கள். ஆறாம் அதிபதி சனியும், எட்டாம் அதிபதி செவ்வாயும் உடன் இருப்பதால், அடிக்கடி கத்தியைக் காட்டி, மிரட்டி வண்டியின் ஓட்டத்திற்குப் பல இடைஞ்சல்களைச் செய்வார்கள். சக்கரங்களில் ஒன்றைப் பழுதாக்கிவிடுவார்கள். இது அமைப்பு. பொதுவாக ஒரு கட்டத்தில் அல்லது ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருந்தால் அது கிரக யுத்தக் கணக்கில் வரும். எந்த எந்தக் கிரகங்கள் யுத்தத்தில் அடிவாங்கி ராணுவ மருத்துவமனையில் படுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த நான்கு கிரகங்களின் தசாபுத்திகள் வரும்போது, பலன்கள் நல்லதும் கெட்டதுமாகக் கலந்துவரும். அவைகள் நான்குமே 10ஆம் வீட்டில் இருப்பதால், பத்தாம் வீட்டிற்குரிய பலன்களில்தான் அப்படி ஏற்படும்

அதெல்லாம் பெரிய வேலை. அதையெல்லாம் பார்த்துக்குழம்ப வேண்டாம். கிடைக்கும் வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். என்ன சிரமம் வந்தாலும் தாக்குப்பிடித்து அதிலேயே இருங்கள். அதற்குரிய மன வலிமையை இறைவழிபாடு கொடுக்கும்.

புனர்பூச நட்சத்திரம். பெருமாளைத் தினமும் வழிபடுங்கள். நம்பிக்கையோடு வழிபடுங்கள். அவர் நல்வழியைக் காட்டுவார்!
---------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

38 comments:

  1. சுக்கிரன் பின்னணி இசைமட்டுமில்லாமல் உலகியலில் இருக்கும் சிற்றின்ப‌
    விளையாட்டுக்களில் ஆர்வத்தைத் தூண்டி, நற்பேரை ரிப்பேர் ஆக்கவும் செய்கிறார்.சுக்கிர தசையும்,7.5 நாட்டுசனியும், கோள்சாரத்தில் எட்டில் குருவும் சேர்ந்துவிட்டால் ஊரார் கைகொட்டி சிரிக்கும் நிலை ஏற்படுகிறது.
    சுய ஜாதக விஷயத்தில் தஞ்சைக்கும் சலுகை கொடுப்பீர்களா?

    ReplyDelete
  2. ////சுய ஜாதக விஷயத்தில் தஞ்சைக்கும் சலுகை கொடுப்பீர்களா?////

    அத்துடன் மலேசியாவிற்கும் சேர்த்து ஒன்று. (சும்மா தமாஷ்). சுக்கிரன் உலகியலில் இருக்கும் சிற்றின்ப‌
    விளையாட்டுக்களில் ஆர்வத்தைத் தூண்டுகிறாரா இல்லை வேறு ஏதாவது தூண்டுகிறாரா என்பது அவர் கொண்டிருக்கும் ஆதிபத்தியத்தை வைத்துதான் முடிவு செய்ய முடியும் கிருஷ்னன் அவர்களே.

    ReplyDelete
  3. ஆஹா அருமையான பதில்கள்...
    " நமக்குத் தெரிந்த அழகான பெண்ணையும் அவருக்குக் கட்டி வைத்துவிடலாம்."
    ***அந்த பெண்ணின் சம்மதத்தோடு சார்....
    காலம் மாறிப் போச்சு
    நாங்கள் சம்பந்தியாகும் காலத்தில் இதுதான் நிலையாக இருக்கும் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்.

    இன்றைய பாடம் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது . என்டே மலையாள ஜோதிட சேட்டன் மற்றும் சேட்சி சொன்னது போல்

    வாத்தியார் ஐயாவின் பதில் உள்ளன உள்ளம்மகிழ்ந்த நன்றியுடன் வணக்கத்தை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா.

    ReplyDelete
  5. சுய ஜாதகத்திற்கு பதில் அளித்து . .
    கண்டிப்பில்லா வாத்தியாரின் வகுப்பறை என சொல்லி விட்டீர்கள் . .

    இனி எல்லாரும் சுய ஜாதகத்துடன். .

    அதைத் தான் முதலிலேயே சொன்னேன் . .

    ஒரு கேள்வி மட்டும் சுய ஜாதகத்தில் வாரம் ஒருவருக்கு என ஒதுக்கி விடுங்களேன் . .
    (எனக்கு சுய ஜாதக கேள்வி இல்லை . .-))))

    ReplyDelete
  6. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. //////kmr.krishnan said...
    சுக்கிரன் பின்னணி இசைமட்டுமில்லாமல் உலகியலில் இருக்கும் சிற்றின்ப‌ விளையாட்டுக்களில் ஆர்வத்தைத் தூண்டி, நற்பேரை ரிப்பேர் ஆக்கவும் செய்கிறார்.சுக்கிர தசையும்,7.5 நாட்டுசனியும், கோள்சாரத்தில் எட்டில் குருவும் சேர்ந்துவிட்டால் ஊரார் கைகொட்டி சிரிக்கும் நிலை ஏற்படுகிறது.
    சுய ஜாதக விஷயத்தில் தஞ்சைக்கும் சலுகை கொடுப்பீர்களா?/////

    என்ன அப்படிச் சொல்லி சுக்கிரனின் பெயரை ரிப்பேர் ஆக்குகிறிர்களே சார்! சுக்கிரன் இல்லாவிட்டால் கலைகள் ஏது? பெரியதிரை சின்னத்திரைகள் ஏது?
    தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர், மன்னார்குடி, பேரளம், எட்டுக்குடி, நாகபட்டினம் (இது கிழக்குச் சாலையில்) வடக்குச்சாலையில், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை என்று தஞ்சைத் தரணியில் இருக்கும் பல ஊர்கள் எனக்குப் பிடித்த ஊர்கள். ஆகவே ஒரு ஊருக்கும் தற்சமயம் சலுகை இல்லை!:-))))
    பின்னால் அதற்கு என ஒரு session உள்ளது.

    ReplyDelete
  8. ////ananth said...
    ////சுய ஜாதக விஷயத்தில் தஞ்சைக்கும் சலுகை கொடுப்பீர்களா?////
    அத்துடன் மலேசியாவிற்கும் சேர்த்து ஒன்று. (சும்மா தமாஷ்). சுக்கிரன் உலகியலில் இருக்கும் சிற்றின்ப‌
    விளையாட்டுக்களில் ஆர்வத்தைத் தூண்டுகிறாரா இல்லை வேறு ஏதாவது தூண்டுகிறாரா என்பது அவர் கொண்டிருக்கும் ஆதிபத்தியத்தை வைத்துதான் முடிவு செய்ய முடியும் கிருஷ்னன் அவர்களே/////.

    கரெக்ட். அவர் இல்லை என்றால் ஆய கலைகள் ஏது?

    ReplyDelete
  9. /////Alasiam G said...
    ஆஹா அருமையான பதில்கள்...
    " நமக்குத் தெரிந்த அழகான பெண்ணையும் அவருக்குக் கட்டி வைத்துவிடலாம்."
    ***அந்த பெண்ணின் சம்மதத்தோடு சார்....
    காலம் மாறிப் போச்சு
    நாங்கள் சம்பந்தியாகும் காலத்தில் இதுதான் நிலையாக இருக்கும் என நினைக்கிறேன்!/////

    வெயிட்டான பார்ட்டி என்றால் பெண்ணின் சம்மதம் கிடைக்காமலா போய்விடும்?:-)))))

    ReplyDelete
  10. ////kannan said...
    ஐயா வணக்கம்.
    இன்றைய பாடம் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது . என்டே மலையாள ஜோதிட சேட்டன் மற்றும்
    சேட்சி சொன்னது போல் வாத்தியார் ஐயாவின் பதில் உள்ளன உள்ளம் மகிழ்ந்த நன்றியுடன் வணக்கத்தை

    காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா.////

    காணிக்கை எல்லாம் வேண்டாம். உங்கள் அன்பு ஒன்று போதும்!

    ReplyDelete
  11. /////iyer said...
    சுய ஜாதகத்திற்கு பதில் அளித்து . .
    கண்டிப்பில்லா வாத்தியாரின் வகுப்பறை என சொல்லி விட்டீர்கள் . .
    இனி எல்லாரும் சுய ஜாதகத்துடன். .
    அதைத் தான் முதலிலேயே சொன்னேன் .
    ஒரு கேள்வி மட்டும் சுய ஜாதகத்தில் வாரம் ஒருவருக்கு என ஒதுக்கி விடுங்களேன் . .
    (எனக்கு சுய ஜாதக கேள்வி இல்லை . .-))))///////

    வாரம் ஒருவருக்கா? மற்றவர்கள் (1734) என்ன பாவம் செய்தார்கள்? அத்தனை பேர்களுக்கும் ஒதுக்கினால், கேள்வி பதில் பகுதி நிறைவையே எட்டாதே!

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இன்றைய கேள்வி - பதில்கள் பகுதியில்
    மிகவும் சிறப்பான. தகவல்களை அறிந்துக்
    கொள்ள முடிந்தது.

    நன்றி,வணக்கம்
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-17

    ReplyDelete
  13. ஐயா வணக்கம்...!

    கேள்வி பதில்கள் மிக அருமை..! சிலர் தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து கேள்வி கேட்டிருந்தாலும் தங்களுடைய பதில்கள் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக இருந்தன. மிக்க நன்றிகள்...

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  14. Dear Sir

    Good Morning.

    Questions and answers are good.

    Nice Sir..

    Neengal tension illamal ella questions answer panniyachu sir.

    Neengal Kovai, Pollachikarar endru Vituviteergal..

    Iam from Tirunelveli (Ambasamudram) - Nanum Sondha Kelviyai Ketgalama Sir...(Just Summa Sir..Illai Aruvalai Kamipeergala).


    Adada...Ippadi therincha Sondha Kelviye Indha Madhiri Ketgalamae(...???)?



    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. ஐயா, தங்களின் பதில்கள் அருமை.
    "காரகன் பாவ நாசம் என்பது பொதுவிதி". இப்படிப்பட்ட அமைப்பு உள்ளவர்களுக்கு அவன் சோதனையான பலன்களையே தருவான் என்று நினைக்கின்றேன். அதாவது ஆயுள் காரகன் 8 ல் இருப்பின் அவன் அந்த ஒளியை அதாவது ஜாதகனை மரணத்தின் எல்லை வரை சில முறை கொண்டு செல்வான் மேலும் நோயோடு நீண்ட காலம் வாழ வைப்பான். ஐயா தங்களுடய கருத்து?

    இன்னும் ஒரு விதி. எட்டாம் அதிபர் எந்த வீட்டில் உள்ளானோ பெரும்பாலும் அந்த வீட்டிற்கும் சோதனையான பலன் தான். மின்னஞ்சல் எண் 24 . அவருக்கு மிகப்பெரிய வில்லன் செவ்வாய். வெங்கடேசன் முருகனையும்
    சேர்த்து வழிபடுதலே நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் செவ்வாய் பாடத்தில் கூறிப்பிட்டது போல் செவ்வாய் விரதம் இவருக்கு நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன். ஐயா தங்கள் கருத்து?

    நான் இன்று விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாவில்லை. ஐயா விரதம் சரியாக இருக்க முன் நாள் சிறப்பு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டால் அடுத்த நாள் பசியைக் கட்டுப்படுத்த வழி ஏதும் உண்டா?

    இவன்
    இரா. புரட்சிமணி

    ReplyDelete
  16. சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டதுக்கு மன்னிக்கவும் .நான் துரத்தில் இருப்பதால் நண்பர்கள் ஜாதகமோ ,அல்லது தெரிந்தவர்கள் ஜாதகமோ இல்லை .அதனால் தான் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டேன் .பதில் அளித்தற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  17. //வாரம் ஒருவருக்கா? மற்றவர்கள் (1734) என்ன பாவம் செய்தார்கள்? அத்தனை பேர்களுக்கும் ஒதுக்கினால், கேள்வி பதில் பகுதி நிறைவையே எட்டாதே!///

    அய்யா
    எல்லாம் தெரிந்தவர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள் . .
    எதுவுமே தெரியாதவர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள் . .

    வாய்ப்பு கிடைத்தால் மாதத்தில் (கடைசி வாரத்தில் என) ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் online conference வைத்துவிடலாமே (Gtalk, yahoo, skypeஎன ஏதாவது ஒன்றில்) இதில் கலந்து கொள்பவர் பயன் பெறட்டும் . . 1734னால் என்ன அதற்கும் மேல் என்றால் தான் என்ன . .
    :)

    ReplyDelete
  18. சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டதுக்கு மன்னிக்கவும் .நான் துரத்தில் இருப்பதால் நண்பர்கள் ஜாதகமோ ,அல்லது தெரிந்தவர்கள் ஜாதகமோ இல்லை .அதனால் தான் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டேன் .பதில் அளித்தற்கு மிக்க நன்றி ஐயா. ///

    ச்கோத‌ரா ngs,உங்க‌ளுக்கு புரிய‌வில்லையே சொந்த,ந‌ண்ப‌ர்க‌ள்,தெரிந்த‌வ‌ர்க‌ள் யாருடைய‌ ஜாத‌க‌மாயிருந்தாலும் அந்த‌ ஜாத‌க‌த்தை ந‌ன்கு ஆய்வுச் செய்ய‌வேண்டும் இத‌ற்க்கு ரொம்ப‌ நேர‌ம் தேவைப்ப்டும் சார் த்ப்பு த‌ப்பா சொல்ல‌ மாட்ட‌ர்ர். அத‌ற்கு தான் சார் அப்ப‌டி சொல்றார் இப்போ உங்க‌ளுக்கு
    புரிந்த‌தா நீங்க‌ கேட்ட‌தில் த்ப்பில்லை. நேர‌மின்மைக்குத்தான் இந்த‌ அறிவிப்பு.
    சுந்த‌ரி.

    ReplyDelete
  19. Good evening sir,
    i am present today Thanks for ur lesson sir. sir we are going to pollachi(joke) dear brothers and sisters let us go to pollachi
    sundari

    ReplyDelete
  20. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இன்றைய கேள்வி - பதில்கள் பகுதியில் மிகவும் சிறப்பான. தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
    நன்றி,வணக்கம்
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  21. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    கேள்வி பதில்கள் மிக அருமை..! சிலர் தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து கேள்வி கேட்டிருந்தாலும் தங்களுடைய பதில்கள் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக இருந்தன. மிக்க நன்றிகள்...
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்//////

    அப்படியென்றால் சந்தோஷமே! நன்றி!

    ReplyDelete
  22. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning.
    Questions and answers are good.
    Nice Sir..
    Neengal tension illamal ella questions answer panniyachu sir.
    Neengal Kovai, Pollachikarar endru Vituviteergal..
    I am from Tirunelveli (Ambasamudram) - Nanum Sondha Kelviyai Ketgalama Sir...(Just Summa Sir..Illai Aruvalai Kamipeergala).
    Adada...Ippadi therincha Sondha Kelviye Indha Madhiri Ketgalamae(...???)?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    சொந்தக் கேள்விகளுக்கெல்லாம் தனியாக ஒரு சீரியல் உள்ளது. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  23. ////R.Puratchimani said...
    ஐயா, தங்களின் பதில்கள் அருமை.
    "காரகன் பாவ நாசம் என்பது பொதுவிதி". இப்படிப்பட்ட அமைப்பு உள்ளவர்களுக்கு அவன் சோதனையான பலன்களையே தருவான் என்று நினைக்கின்றேன். அதாவது ஆயுள் காரகன் 8 ல் இருப்பின் அவன் அந்த ஒளியை அதாவது ஜாதகனை மரணத்தின் எல்லை வரை சில முறைகொண்டு செல்வான் மேலும் நோயோடு நீண்ட காலம் வாழ வைப்பான். ஐயா தங்களுடய கருத்து?
    இன்னும் ஒரு விதி. எட்டாம் அதிபர் எந்த வீட்டில் உள்ளானோ பெரும்பாலும் அந்த வீட்டிற்கும் சோதனையான பலன் தான். மின்னஞ்சல் எண் 24 . அவருக்கு மிகப்பெரிய வில்லன் செவ்வாய். வெங்கடேசன் முருகனையும் சேர்த்து வழிபடுதலே நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் செவ்வாய் பாடத்தில் கூறிப்பிட்டது போல் செவ்வாய் விரதம் இவருக்கு நலம் பயக்கும் என்று நினைக்கின்றேன். ஐயா தங்கள் கருத்து?
    நான் இன்று விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாவில்லை. ஐயா விரதம் சரியாக இருக்க முன் நாள் சிறப்பு உணவு ஏதாவது எடுத்துக்கொண்டால் அடுத்த நாள் பசியைக் கட்டுப்படுத்த வழி ஏதும் உண்டா?
    இவன்
    இரா. புரட்சிமணி/////

    பசியைக் கட்டுப்படுத்தும் வழியா? விரத்தை எல்லாம் மறந்துவிட்டு அவ்வப்போது சாப்பிட்டுக் கொண்டு இருப்பதுதான் நல்ல வழி!:-)))) மனதில் ஒரு வைராக்கியம் வேண்டாமா? வைராக்கியம் என்றால் என்ன வென்று தெரியுமா?

    ReplyDelete
  24. /////Ram said...
    Thanks for the todays answers/////

    நல்லது. நன்றி ராம்!

    ReplyDelete
  25. /////ngs said...
    சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டதுக்கு மன்னிக்கவும் .நான் துரத்தில் இருப்பதால் நண்பர்கள் ஜாதகமோ ,அல்லது தெரிந்தவர்கள் ஜாதகமோ இல்லை .அதனால் தான் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டேன் .பதில் அளித்தற்கு மிக்க நன்றி ஐயா./////

    பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள்! பரவாயில்லை. விடுங்கள். முடிந்துபோன விஷயம்!

    ReplyDelete
  26. ////iyer said...
    //வாரம் ஒருவருக்கா? மற்றவர்கள் (1734) என்ன பாவம் செய்தார்கள்? அத்தனை பேர்களுக்கும் ஒதுக்கினால், கேள்வி பதில் பகுதி நிறைவையே எட்டாதே!///
    அய்யா
    எல்லாம் தெரிந்தவர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள் . .
    எதுவுமே தெரியாதவர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள் . .
    வாய்ப்பு கிடைத்தால் மாதத்தில் (கடைசி வாரத்தில் என) ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் online conference வைத்துவிடலாமே (Gtalk, yahoo, skypeஎன ஏதாவது ஒன்றில்) இதில் கலந்து கொள்பவர் பயன் பெறட்டும் . . 1734னால் என்ன அதற்கும் மேல் என்றால் தான் என்ன . . :)///////

    நீங்கள் சொல்வதெல்லாம் தொழில்முறை ஜோதிடர்களுக்கு மட்டுமே சாத்தியம். எனக்குத் தொழில் ஜோதிடமல்ல! வேறு தொழில் உள்ளது சாமி. எழுதுவது ஒரு ஆர்வக் கோளாறில்!

    ReplyDelete
  27. //////sundari said...
    சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டதுக்கு மன்னிக்கவும் .நான் துரத்தில் இருப்பதால் நண்பர்கள் ஜாதகமோ ,அல்லது தெரிந்தவர்கள் ஜாதகமோ இல்லை .அதனால் தான் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்டேன் .பதில் அளித்தற்கு மிக்க நன்றி ஐயா. ///
    சகோத‌ரா ngs,உங்க‌ளுக்கு புரிய‌வில்லையே சொந்த,ந‌ண்ப‌ர்க‌ள்,தெரிந்த‌வ‌ர்க‌ள் யாருடைய‌ ஜாத‌க‌மாயிருந்தாலும் அந்த‌ ஜாத‌க‌த்தை ந‌ன்கு ஆய்வுச் செய்ய‌வேண்டும் இத‌ற்க்கு ரொம்ப‌ நேர‌ம் தேவைப்படும் சார் தப்பு த‌ப்பா சொல்ல‌ மாட்டார். அத‌ற்கு தான் சார் அப்ப‌டி சொல்றார் இப்போ உங்க‌ளுக்கு
    புரிந்த‌தா நீங்க‌ கேட்ட‌தில் தப்பில்லை. நேர‌மின்மைக்குத்தான் இந்த‌ அறிவிப்பு.
    சுந்த‌ரி.//////

    நல்லது. உங்களின் உதவிக்கு நன்றி!

    ReplyDelete
  28. /////sundari said...
    Good evening sir,
    i am present today Thanks for ur lesson sir. sir we are going to pollachi(joke) dear brothers and sisters let us go to pollachi
    sundari////

    பிரச்சினையே இல்லை. நானும் பொள்ளாச்சிக்கு வந்துவிடுகிறேன். நேரில் அமர்ந்து பேசிவிடலாம்:-))))))

    ReplyDelete
  29. மிக்க நன்றி அய்யா,

    சொந்த கேள்வி கேட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில் சிறப்பாக இருந்தது. எனக்கு தெரிந்து நமது வகுப்பறை மாணவர்கள் பலரும் தத்தம் சொந்த ஜாதகங்களை அலச தான் வகுப்பறைக்கு வந்து உள்ளார்கள். எனவே நீங்கள் சொந்த கேள்விகளையும் அனுமதிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

    அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  30. நல்ல விளக்கங்கள் அய்யா

    ReplyDelete
  31. /////venkatesan.P said...
    மிக்க நன்றி அய்யா,
    சொந்த கேள்வி கேட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில் சிறப்பாக இருந்தது. எனக்கு தெரிந்து நமது வகுப்பறை மாணவர்கள் பலரும் தத்தம் சொந்த ஜாதகங்களை அலச தான் வகுப்பறைக்கு வந்து உள்ளார்கள். எனவே நீங்கள் சொந்த கேள்விகளையும் அனுமதிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
    அன்புடன்
    வெங்கடேசன்/////

    அரசல் புரசலாக அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்! உற்றுப் பாருங்கள். தெரியும்!

    ReplyDelete
  32. ////INDIA 2121 said...
    நல்ல விளக்கங்கள் அய்யா////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  33. /////////sundari said...
    Good evening sir,
    i am present today Thanks for ur lesson sir. sir we are going to pollachi(joke) dear brothers and sisters let us go to pollachi
    sundari\\\\\\\

    /////SP.VR. SUBBAIYA said...
    பிரச்சினையே இல்லை. நானும் பொள்ளாச்சிக்கு வந்துவிடுகிறேன். நேரில் அமர்ந்து பேசிவிடலாம்:-))))))

    சுந்தரி...
    வாத்தியாரை தஞ்சாவூர் பக்கத்துக்கு கடத்திகிட்டு போகலாமா என்று மாவட்டக் கவுன்சிலில் ஆலோசனை செய்துவருகிறோம்..
    அதனால் நீங்கள் பொள்ளாச்சி ட்ரிப்பை கான்செல் செய்வது நல்லது..

    ReplyDelete
  34. Brother Minor wall,
    Ok our pollachi trip will be cancelled

    ReplyDelete
  35. /////minorwall said...
    /////////sundari said...
    Good evening sir,
    i am present today Thanks for ur lesson sir. sir we are going to pollachi(joke) dear brothers and sisters let us go to pollachi
    sundari\\\\\\\
    /////SP.VR. SUBBAIYA said...
    பிரச்சினையே இல்லை. நானும் பொள்ளாச்சிக்கு வந்துவிடுகிறேன். நேரில் அமர்ந்து பேசிவிடலாம்:-))))))
    சுந்தரி...
    வாத்தியாரை தஞ்சாவூர் பக்கத்துக்கு கடத்திகிட்டு போகலாமா என்று மாவட்டக் கவுன்சிலில் ஆலோசனை செய்துவருகிறோம்..
    அதனால் நீங்கள் பொள்ளாச்சி ட்ரிப்பை கான்செல் செய்வது நல்லது..//////

    அந்தப் பாவத்தை எல்லாம் செய்ய நினைக்காதீர்கள். கூப்பிட்டால் நானே வருகிறேன் சாமி!

    ReplyDelete
  36. ungaluku sneeswaran enge ullaro ade pondru dhan enakkum ..hehehe.. ... enakku lagnathil guruvodu manthi. 7&10 budhan. andha budhan enakku 5 trikona idhathil ullaar...sani uchamagavum ..marsoda serndhu 11thil irukindranar...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com