மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.10.24

Astrology - பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?


Astrology -  பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?

புரட்சித் தலைவரின் பழைய படப் பாடல் ஒன்று உள்ளது: “ஹலோ...ஹலோ சுகமா? இப்போ நீங்க நலமா?” என்ற பல்லவியுடன் துவங்கும். படம் ‘தர்மம் தலை காக்கும்’

நான்காம் வீடுதான் சுக ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால் இந்தப் பல்லவிக்கு வேலையே இல்லை. ஆசாமி எப்போதும், எந்த சூழ்நிலையிலும் சுகமாக இருப்பான்.

அந்த வீடு நன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? சுகக்கேடுதான்.
சுகககேடு மட்டுமா? வேறு சில கேடுகளும் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
   கெடுதி செய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா செனித்த மனை சுத்தபாழாம்
   சென்மனுக்கு கிரகமுண்டு விதியும் கூறு
கூளப்பா குளிகனுமே சேர்ந்து நிற்க
   குடியிருக்க குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
   அத்திடலில் அரவுக்கு சாந்தி செய்க!
          - புலிப்பாணி முனிவர்

நான்காம் வீட்டில் சனி, ராகு, அல்லது கேது போன்ற தீமையான கிரகங்கள் இருப்பது சுகக்கேடு.

நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். தாய், கல்வி, சுகம் (வீடு, வண்டி வாகனங்கள்). சரி, நான்காம் வீடு அடிபட்டுப்போயிருந்தால் இந்த இலாக்காக்கள் மூன்றுக்குமே கேடா?

அது பொது விதி! தாய்க்கு சந்திரனும், கல்விக்கு புதனும், சுகத்திற்கு சுக்கிரனும் மந்திரிகள் (authorities) அவர்களுடைய நிலைமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் (உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கப் பரல்களில் 5ம் அல்லது 5ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு கொடுத்து விடுவார்கள்) அவன் தப்பித்துவிடுவான்.

இல்லை என்றால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதாயிருக்கும்.

அந்த வீட்டில் கேது வந்து அமர்ந்திருந்தால், அது கேடானது என்று முனுசாமி (அதாங்க முனிவர்) அடித்துச் சொல்கிறார். அது பொதுப் பலன் என்றாலும் கொஞ்சமாவது வேலை செய்யும்.

என்னென்ன கேடு என்கிறார்? ஜாதகன் பிறந்த வீடு பாழாகிப் போகும் என்கிறார். அதாவது அடையாளமின்றிப் போகலாம். அதுவும் கேதுவுடன் மாந்தியும் சேர்ந்திருந்தால், கேட்கவே வேண்டாம், ஜாதகனுக்கு குடியிருக்க வீடு இருக்காது. வீட்டில் மாடு, கன்று இருக்காது.
முனுசாமி காலத்தில் மாடு கன்றுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அத்துடன் ஜாதகனுடைய தாய்க்கும் அது கெடுதியானது என்கிறார்.

அரவுக்கு சாந்தி செய்க என்கிறார். அதுதான் பரிகாரம் என்கிறார். பாம்பை வளர்த்து வணங்கவும் முடியாது. பாம்புப் புற்றில் தினமும் பால் வார்க்கவும் முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.

ஆகவே எல்லாம் வல்ல இறைவனைத் தினமும் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அத்துடன்  ஜென்ம நட்சத்திரத்தன்று கேது ஸ்தலத்திற்கும் சென்று கேது பகவானை வழிபட்டு வரலாம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.24

Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?


Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?

செவ்வாயின் இரட்டை வேடம்.

ஒரு படத்தின் நாயகனுக்குப் படத்தில் இரட்டை வேடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் கதாநாயகனும் அவரே, வில்லனும் அவரே என்றால், எந்த வேடத்தில் அதிகமாகக் காட்சி கொடுப்பார்?

காட்சி கொடுப்பது முக்கியமில்லை. எந்த வேடத்தில், படத்தின் முடிவில் அவர் வெற்றி பெறுவார்? வில்லன் வேடமே வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

செவ்வாய்க்கு அந்த நிலைமை உண்டு!

விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்திற்கும் உரியவன், ஆறாம் வீடான மேஷத்திற்கும் உரியவன் அவன்.

ஆறாம் வீடு வில்லங்கமான வீடு என்பது நமக்குத் தெரியும். ஆகவே நாம் விருச்சிக லக்கினக்காரர்கள் என்றால் அதிகமாகக் கவலை கொள்வோம்.

செவ்வாய் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால், அதாவது உச்சம் பெற்றோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலோ அல்லது அஷ்டகவர்க்க சுயபரல்களில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ,  ஜாதகனுக்கு மொத்தமாக நாயகன் வேலையை மட்டுமே செய்வார். தவறி வலிமையின்றி இருந்தால், அதாவது ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தாலும் அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் நீமைகளையே செய்வார்.

எப்போது செய்வார்? தனது தசா புத்திகளில் செய்வார். அப்படிப்பட்ட நிலைமை உடைய ஜாதகர்கள், சம்பந்தப்பட்ட புத்திக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இறைவழிபாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும்

செவ்வாய்க்கு மேஷம்தான் மூலத்திரிகோண வீடாகும். ஆகவே அவர் வலிமையுடன் இருந்தால், லக்கினத்துடன் இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து இரட்டிப்பு நன்மைகளைச் செய்வார்.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.24

Astrology - வம்பும், வழக்கும்!


Astrology -  வம்பும், வழக்கும்!

வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!

ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும். 

பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.

ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்

ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.

பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!

கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும். 

இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!