Astrology: அலசல் பாடம் :எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த
குழந்தையின் ஜாதகம்!!!
ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம். பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது.
8வது மாத முடிவில் தன் பெற்றோர்களை துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, குழந்தை இறைவனடி சேர்ந்துவிட்டது.
எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!!
மீன லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் குரு எட்டாம் இடத்தில் மாந்தியோடு கூட்டாக அமர்ந்து கடுமையான பாலரிஷ்ட தோஷத்தை உண்டாக்கியுள்ளான்.
அத்துடன் குரு பகவான் ராகுவின் நட்சத்திர சாரத்தில் இருப்பதோடு 6ம் அதிபதி சூரியன் மற்றும் 12ம் அதிபதி சனியின் பார்வைகளையும் பெற்று வலுவிழந்து உள்ளான்.
இவைதான் குழந்தையின் இறப்பிற்கு முக்கியமான காரணம்.
அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Happy Guru Purnima to the most valuable my first astrological Guru Mr.Subbaiyah sir.
ReplyDeleteநல்லது. நன்றி நண்பரே!
Deleteகோச்சார திசை பார்க்கவேண்டாமா ஐயா.
ReplyDeleteதசா புக்திதான் முக்கியம்
Delete8th place lord Venus is exalted in Taurus. Should we take that into consideration Sir?
ReplyDeleteஅவரை விட 8ல் மாந்தியுடன் அமர்ந்துவிட்ட குருதான் முக்கியம்
Deleteஅருமையான விளக்கம்
ReplyDeleteநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்
Deleteவணக்கம் ஐயா தங்களால் நான் கற்று அறிந்த காரணங்களை தங்களின் பார்வைக்கு எழுதியுள்ளேன்.....
ReplyDeleteலக்கினாதிபதி எட்டில் பகை வீட்டில் எட்டில் மறைவு, லக்கினம் பாப கர்த்தாரி யோகத்தில், எட்டாம் அதிபதி எட்டுக்கு எட்டாம் வீடான மூன்றில் மறைவு, ஆயுள் காரகன் சனீஸ்வரன் நீசம் மற்றும் ஆறுக்குடையவனும் ஈராறுக்குடையவனும் எட்டில் உள்ள லக்கின குருவின் மேல் பார்வை....
பிழைகளை திருத்தி தவறுகளை மன்னிக்கவும் நன்றி ஐயா...