Astrology Pick up and Drop Post No.2 யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் ?
பிக்கப் அண்ட் டிராப் பதிவு எண் 2
சனியின் பாதிப்புகளுக்கு ஜாதகத்தில் உள்ள இயற்கையான கவசம் (shield) சனி வந்து அமரும் இடத்தில் அஷ்டவர்க்கப் பரல்கள் 30 இருந்தால் கவலைப்பட வேண்டாம். தீங்கு எதுவும் இருக்காது.
அவ்வாறு இல்லை என்றால் சனிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று சனீஷ்வரனைப் பிரார்த்தித்து வந்தால் உபத்திரவம் குறையும்.
------------------------------------------------------------------------------------
அடுத்த பாடம்
சனி, ராகு மற்றும் கேது இவர்களில் யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் ?
அவர்கள் மூவரையும் விட அதிகமாக பயப்பட வேண்டியது மாந்திக்குத்தான் சாமிகளா!!!
மாந்தி 12ல் அமர்ந்தால் தொல்லைதான். தேவையில்லாத விரையங்கள் (Losses) ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்
அதேபோல மாந்தி 2ம் வீட்டில் அமர்ந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஒரு வீட்டிற்கு மூன்று பாவங்கள் இல்லையா?
இரண்டாம் வீட்டில் வந்தமரும் மாந்தி கையில் காசைச் சேரவிடாது. ஒரு வேளை சேர்ந்தாலும் கையில் காசைத் தங்க விடாது. குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை உண்டு பண்னும்
அதுபோல 9ம் வீட்டில் அமரும் மாந்தி பூர்வீகச் சொத்துக்களைக் கிடைக்க விடாது.
இன்றைய பிக்கப் அப் இவ்வளவுதான் சாமிகளா!!!
நாளை சந்திப்போம்
அன்புடன்
வாத்தியார்
==============================================
நல்ல தகவல்.
ReplyDeleteநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்
Delete