மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.4.20

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*
 
இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. மிக நல்ல விளக்கம்
    உடல் நிலை நன்கு முன்னேறி வருகிறதா?

    ReplyDelete
  2. //////Blogger kmr.krishnan said...
    மிக நல்ல விளக்கம்
    உடல் நிலை நன்கு முன்னேறி வருகிறதா?//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்! உடல் நிலை இப்போது தேறி வருகிறது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  3. Good morning sir excellent post now I'm in age 34 last 15 years I'm not taking Non vegetarian I'm following Jeevakaarinyam thanks sir vazhga valamudan

    ReplyDelete
  4. வணக்கம்.
    தங்கள் உடல் நிலை விரைவில் பரிபூரணமாக குணமடைந்து வழக்கம் போல் உற்சாகமாக பணி புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்ககிறேன்.
    உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு.அதன் விளைவாக இந்தியன் சாத்வீக குணம் மற்றும் அறிவாற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான்.
    ஊர்வன,பறப்பன,நடப்பன, இப்படி அனைத்தையும் சாப்பிடும் மூர்க்க குணம் கொண்டவனாக இல்லை.
    ஐயப்பனுக்கு மாலை போடும்,கார்த்திகை,மார்கழி ஆகிய மாதங்களில் குற்றங்கள் மிக குறைந்து உள்ளன என்று காவல்துறையும் ஒப்பு கொள்கிறது. இப்படி ஆன்மிகமும்,சைவ உணவும் மனிதனை பண்படுத்தும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.
    இது இந்தியாவை தவிர வேறு எங்குமில்லை .
    இப்படி உணவு சாத்வீகமாக இருப்பதால் உணர்வுகள் சாத்வீகமாக இருக்கிறது.உணர்வுகள் சாந்தமாக இருப்பதால் உறவுகள் நீடிக்கிறது. உடைந்த குடும்பங்களும்,விவாகரத்தும் பிற நாடுகளில் இருக்கிற அளவு இங்கே இல்லை.
    படித்ததில் பிடித்தது. நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent post now I'm in age 34 last 15 years I'm not taking Non vegetarian I'm following Jeevakaarinyam thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ///////Blogger Ram Venkat said...
    வணக்கம்.
    தங்கள் உடல் நிலை விரைவில் பரிபூரணமாக குணமடைந்து வழக்கம் போல் உற்சாகமாக பணி புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்ககிறேன்.
    உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு.அதன் விளைவாக இந்தியன் சாத்வீக குணம் மற்றும் அறிவாற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான்.
    ஊர்வன,பறப்பன,நடப்பன, இப்படி அனைத்தையும் சாப்பிடும் மூர்க்க குணம் கொண்டவனாக இல்லை.
    ஐயப்பனுக்கு மாலை போடும்,கார்த்திகை,மார்கழி ஆகிய மாதங்களில் குற்றங்கள் மிக குறைந்து உள்ளன என்று காவல்துறையும் ஒப்பு கொள்கிறது. இப்படி ஆன்மிகமும்,சைவ உணவும் மனிதனை பண்படுத்தும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.
    இது இந்தியாவை தவிர வேறு எங்குமில்லை .
    இப்படி உணவு சாத்வீகமாக இருப்பதால் உணர்வுகள் சாத்வீகமாக இருக்கிறது.உணர்வுகள் சாந்தமாக இருப்பதால் உறவுகள் நீடிக்கிறது. உடைந்த குடும்பங்களும்,விவாகரத்தும் பிற நாடுகளில் இருக்கிற அளவு இங்கே இல்லை.
    படித்ததில் பிடித்தது. நன்றி.///////

    உண்மை. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Respected sir,

    Good morning sir. A good Message in respect of Non-veg, which is totally avoidable for our good health and good mind. Thank you for your good message. Take care of your health.

    regards,

    N VISVANATHAN

    ReplyDelete
  9. /////Blogger Visvanathan said...
    Respected sir,
    Good morning sir. A good Message in respect of Non-veg, which is totally avoidable for our good health and good mind. Thank you for your good message. Take care of your health.
    regards,
    N VISVANATHAN//////

    உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com