மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.1.20

Astrology: Quiz: புதிர்: 10-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 10-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தை கொடுத்து, “ அன்பர் நீண்ட ஆயுளுடன் செளக்கியமாக வாழ்ந்தார். அன்பரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச்
சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ரிஷப லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் சுக்கிரன் 11ம் வீட்டில். அத்துடன் ஆயுள்காரகன் சனீஷ்வரன் சச யோகத்தில். இந்த இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தன!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 17-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஏப்ரல் மாதம் 1934ல் காலை 7 மணி 47 நிமிடம் போலப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
லக்கினாதிபதி சுக்கிரன் உச்சம் அடைந்து எட்டாம் அதிபதியான குருவின் பார்வை பெற்றார்.எட்டம் அதிபதி குரு திரிகோணம் ஏறி 5ல் அமர்ந்து லக்கினம் லக்கினாதிப்தி இருவரையும் தன் பார்வையில் வைத்தார். 10ம் அதிபதி மற்றும்
கர்மகாரகன் ஆயுள் காரகன் சனைச்சரன் தன் வீட்டிலேயே அமர்ந்டு 12ம் இடத்தினை தன் பார்வையில் வைத்தார். இவையெல்லாம் ஆயுள் கெட்டிக்குக் காரணம்.
Friday, January 10, 2020 5:04:00 AM
---------------------------------------------------------
2
Blogger அடியேன் யுவராஜ் said...
என் குருநாதர் அவர்களுக்கு வணக்கம் !
என் குருநாதரே தாங்கள் இப்பொழுது பதிவு செய்து இருக்கும் ஜாதகம் 27/12/2019 அன்று பதிவு செய்து உள்ளீர்கள்.
இப்படிக்கு அடியேன்
யுவராஜ்
Friday, January 10, 2020 7:36:00 AM

உண்மைதான். கவனக்குறைவு. மன்னிக்கவும். பொறுத்துக்கொள்ளவும்!!!!
----------------------------------------------------------------
3
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகர் ஏப்ரல் 30ம் தேதி 1934ம் ஆண்டு காலை 8-45 மணியளவில் பிறந்தவர்.நீண்ட ஆயுளுக்கு காரணம் ரிஷப லக்கினம். லக்கினாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் முழு சுபரான குரு வீட்டில் உச்சமாக அமர்ந்துள்ளார்.8ம் வீட்டுக்கும் அதிபதியான குரு 5ம் வீடான கன்னியில் சுபர் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சுக்கிரனையும் லக்கினத்தையும் பார்த்து வலுப்படுத்தியுள்ளார்.ஆயுள் காரகன் சனி பகவான் லக்கினத்திற்க்கு பாக்கியாதிபதியாகி 10ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்து தர்மகர்மாதிபதி யோகத்தை பலப்படுத்தியுள்ளார்.
நன்றியுடன்
-பொன்னுசாமி.
Friday, January 10, 2020 10:12:00 AM
-----------------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த நீண்ட ஆயுள் ஜாதகரின் காரணங்கள்
ரிஷப லக்கின துலா ராசி ஜாதகரின் நீண்ட ஆயுள் அமைந்தது பின்வரும் காரணங்களினால் உண்டானது .
பொதுவாக நீண்ட ஆயுள் பற்றிய விவரம் அறிய ஜாதகரின் லக்கினம் அதிபதி நிலை , லக்கினத்தில் அமர்ந்த கிரகங்கள் மற்றும் எட்டாம் இடத்து அதிபதி நிலை மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் நிலை, ஆயுள் காரகன்
சனியின் நிலையை அறிய வேண்டும்.
இவரின் லக்கின அதிபதி ராசி அதிபதி சுக்கிரன் ஆவர் . இவரின் சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் உச்சமாக குருவின் நேரடி பார்வையில் உள்ளது. குருவானவர் இவரின் எட்டாம் இடத்து அதிபதி ஆவர்.
மேலும் எட்டாம் இடத்து அதிபதி குரு ஐந்தில் லக்கின அதிபதி சுக்கிரனின் உச்ச நேரடி பார்வையில் உள்ளார். இதுவே இவரின் நீண்ட ஆயுளிற்கான முக்கிய காரணமாகும்
மேலும் ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில் உள்ளார் . மேலும் சனி நவாம்ச கட்டத்தில் எட்டாம் இடத்தில் அதாவது ஆயுள் ஸ்தானத்தில் உள்ளார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, January 10, 2020 11:47:00 AM Delete
-------------------------------------------------------------------
5
Blogger Hari Krishna said...
The 8th lord Guru is at Kendra and the ayul kaarakan Sani is at trikonam - 10th - own house.
Saturday, January 11, 2020 11:39:00 AM
---------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்னதிபதி உச்சம் ஆகி உள்ளார் குருவின் பார்வையுடன்
2 .கர்மகாரகன் சனி பத்தில் ஆட்சி பலத்துடன்
3 .இரண்டு ஏழாம் வீட்டதிபதிகள் விரய வீட்டில் அமர்ந்து வலுவிழந்து உள்ளனர்
4 .3 ,6 ,8,12 மறைவிட அதிபதிகள் வலுவிழத்துள்ளனர்
ஆகவே ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிட்டிற்று
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, January 11, 2020 1:15:00 PM
------------------------------------------------
7
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
பொதுவாக ஒரு ஜாதகரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மூன்று காரணிகளை ஆய்வு செய்யவேண்டும். (1) லக்கினாதிபதியின் நிலை, (2) ஆயுள் பாவகமான 8ம் பாவகாதிபதியின் நிலை, (3) ஆயுள் காரகரான சனீஸ்வர பகவானின் நிலை.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் (1) ஸ்திர ராசியான ரிஷபம் லக்கினமாக அமைந்து, லக்கினம் குரு பகவானால் 9ம் பார்வையாக பார்க்கப்படுவதுடன், லக்கினாதிபதி சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்து குரு பகவானால் 7ம் பார்வையாக பார்க்கப்படுகிறார். ஆக லக்கினம் வலுப் பெற்றுள்ளது. (2) தனுசு ராசி 8ம் பாவகமாக அமைந்து, 8ம் பாவகாதிபதியான குரு பகவான் 5ம் திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்துள்ள நிலையில், உச்சம் பெற்ற சுக்கிரனால் பார்க்கப்படுகிறார். எனவே 8ம் பாவகம் வலுப் பெற்றுள்ளது. (3) ஆயுள் காரகரான சனீஸ்வர பகவான் தனது மூலத்திரிகோண வீடான கும்பத்தில்
ஆட்சி பெற்ற நிலையில் வலுவாக உள்ளார். எனவே இந்த ஜாதகர் தீர்க்காயுள் உடையவராகிறார்.
இராம. சீனிவாசு / 9843520977
Saturday, January 11, 2020 4:22:00 PM
------------------------------------------------------
8
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
இரிசப இலக்கினம், துலாம் இராசி ஜாதகம்.
இரிசப லக்கின அதிபதியான சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளார். லாபஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதி சுக்கிரனை, குரு தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். மேலும் லக்னத்தையும் குரு தனது 9-ம் பார்வையால் பார்க்கிறார்.
ஆயுள் ஸ்தானாதிபதியான குரு ஐந்தாம் திரிகோணத்தில் அமர்ந்துள்ளார். ஆயுள் காரகனான சனீஸ்வரனும் பத்தாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் கேந்திர பலத்துடன் அமர்ந்துள்ளார்.
இதுவே அன்பரின் நீண்ட ஆயுளுக்கு காரணமாகும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, January 11, 2020 9:19:00 PM
------------------------------------------------
9
Blogger Sridhar said...
1) அஷ்டமாதிபதி குரு 5வது இடத்தில், லக்னத்தை தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார்
2) ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில்
3) மாரகாதிபதி புதன் 12இல் மறைவு
4) மாரகாதிபதி சுக்ரன் குருவின் நேரடி பார்வையில்
எனவே தீர்க்க ஆயுள்
Saturday, January 11, 2020 11:23:00 PM
------------------------------------------------------
10
Blogger Sridhar said...
Correction
மாரகதிபதி செவ்வாய் 12இல் மறைவு
சுக்ரன் என்று தவறாக கணக்கிட்டு விட்டேன்
Saturday, January 11, 2020 11:29:00 PM
-----------------------------------------------------------
11
Blogger Ram Venkat said...
பதிமூன்றாம் ஆண்டு நிறைவடைந்து 14ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வகுப்பறைக்கும், வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.
ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகர்.
அன்பரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
லக்கினாதிபதியும், ருண, ரோக,சத்துரு ஸ்தானாதிபதியுமான‌ சுக்கிர பகவான், 11மிடமான தன் உச்ச ராசியில் அமர்ந்துள்ளார். சுக்கிரனும், கன்னி ராசியில் அமர்ந்துள்ள அட்டமாதிபதி வக்கிர குரு பகவானும் பரஸ்பர நேர்
பார்வையிலுள்ளனர். லக்கினத்தை நவாம்சத்தில் உச்சமடைந்துள்ள குரு பகவான் தன் 9ம் தனிப் பார்வை கொண்டு பார்க்கிறார்.
ஆயுள்காரகனும், யோகாதிபதியுமான‌ சனி பகவான் தன் சொந்த வீடு மற்றும் மூலத்திரிகோண ஸ்தானமான கும்ப ராசியில் அமர்ந்து வலுவாக உள்ளார்.(சுய பரல் 6).ராசி மற்றும் நவாம்சத்தை சேர்த்து 5 கிரகங்கள் உச்ச நிலையிலுள்ளன.
மேற்கண்ட கிரகங்களின் ஆசிர்வாதமுடன் ஜாதகர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்.
Sunday, January 12, 2020 2:23:00 PM
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com