மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.19

Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?


Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர். அவரின் 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.

கேள்வி இதுதான் இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 6-10-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம்

    என்ன தான் ரகசியமோ இந்த ஜாதகத்திலே ....

    1 இந்த ஜாதகி ரிஷப லக்கினம், துலா ராசி, ஸ்வாதி நக்ஷத்திரம் , பொதுவாக மனம் சம்பந்த பட்ட நடத்தைக்கு , மன ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் , மனோகாரகன் சந்திரன் நிலையையும் பார்க்க வேண்டும்

    2 இந்த ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் குரு சனி சேர்க்கை பெற்று குரு சண்டாள யோகத்தில் உள்ளது. மேலும் இந்த ஐந்தாம் இடத்தின் அதிபதி புதனும் பதினொன்றில் மீனத்தில் நீசமாக உள்ளார். மேலும் இவர் வர்கோத்தமம் பெற்று அந்த இடத்தில் உள்ளார். ( புதன் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் ஒரே இடத்தில் உள்ளது;) இது மேலும் மோசமான நிலை அடைய செய்தது.

    3 மேலும் மனோகாரகன் சந்திரன் ராசி கட்டத்தில் ஆறாம் இடத்திலும், நவாம்ச கட்டத்தில் பனிரெண்டாம் இடத்திலும் மறைந்து மன நோயினை உண்டாக்கினார். லக்கின காரகன் சுக்கிரன் ராசி கட்டத்தில் பனிரெண்டில் மறைந்து அதாவது உச்ச சூரியனுடன் அஸ்தங்கதம் ஆனது ஒரு வகையில் இளம் வயதில் இந்த நிலையை அடைய செய்தது. மேலும் ஐந்தாம் இடத்தை ராகு தனது மூன்றாம் பார்வையால் மோசமடைய செய்தார்.

    4 இந்த நிலையில் முதலில் வந்த ராகு தசை ஏழு ஆண்டுகளும், பின்னர் வந்த குரு தசை பதினாறு ஆண்டுகளும் , மொத்தம் 23 ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. எனென்றால் குரு சுக்கிரனுக்கு உகந்த கிரகமல்ல . மேலும் எட்டாம் அதிபதியும் ஆவார்.

    5 பின்னர் வந்த சனி தசை சனி புக்தி கைகூடவில்லை. 25 ஆம் வயதில் வந்த சனி தசை புதன் புக்தியில் நிலைமை சரியானது. எனென்றால் சுக்கிரனுக்கு சனி மற்றும் புதன் சுப கிரகங்களாகும்.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB : 8879885399

    ReplyDelete
  2. Dear Sir,

    1. The provided horoscope person's lagna lord is in 12th place.
    2. Lagna lord is with malefic mars and sun in 12th place.
    3. Swathi dasa starts with Rahu dasa. After Rahu dasa, Guru dasa started. Since Guru is 6th lord (villain) she live her life without listening to others.
    4. End of Guru dasa got married and Sani Dasa started. Since sani is 9th and 10th lord, sani period is good for her. Sani made her to live in discipline.

    Thanking you,

    Yours sincerely,
    C. Jeevanantham.

    ReplyDelete
  3. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி விரயத்தில்
    2 .மூன்றில் (தைரிய ஸ்தானத்தில் ராகு
    3 .எட்டாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் குடுபஸ்தான அதிபதி புதன்
    4 .குருதிசை முடிந்து பாக்கியாதிபதி சனிதிசை ஆரம்பமானவுடன் ஜாதகியின் வழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
    நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  4. ஜாதகர் 20 ஏப்ரல் 1981 காலை 8 மணி அளவில் பிறந்தவர் பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தது.

    குரு ஜாதகருக்கு 8ம் அதிபதி. எட்டாம் அதிபதியின் தசா நடந்தபோது , லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை கிரகமான குருவின் தசா நடந்தபோது, ஜாதகர் தலைகால் தெரியாமல் அலைந்துவந்தார். குருவின் தசா முடிந்து லக்கினத்திற்கு யோககாரகன் சனியின் தசாவில் மனம் திரும்பி திருமண வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தார்.

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா , லகினத்துக்கு 5-இல் சனி 6,12 ஆக சுக்கிரன் சந்திரன் பார்வை வேறு ,சுக்கிரன் ஜாதகி , சந்திரன் மனோ காரகன் , சனி 5இல் புத்தி மாற்றம் கூடவே ராகு தசை , புத்தி இதுதான் அதுக்கு காரணம் இருக்க கூடும் ..

    நன்றி ஸ்ரீ குமரன்
    9655819898

    ReplyDelete
  6. ரிஷப லக்கினம் துலாராசி . லக்கினாதிபதி , ராசிக்கு அதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு பனிரெண்டில் ராசிக்கு எழில் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்ததால் எடுப்பார் கை பிள்ளையாக இருந்திருப்பார். ரிஷப லக்கினத்திற்கு ஆகாத குருவின் தசை அவருக்கு அவப்பெயரை தேடி தந்திருக்கும். ராகுவின் சாரம் வாங்கிய சந்திரன் மனோகாரகன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் (ஆறாம் வீட்டு ஆதிபத்யமும் பெற்றவர்)ஆகியோரின் பார்வை பெற்றதால் மனம் அலை பாய்ந்த படி குரு தசை ராகு புக்தி முடியும் வரை அந்த நிலை நீடித்திருக்கும். குருவோடு சேர்ந்த தனித்த புதனின் பார்வை பெற்ற சனி தசை சனி புக்தி முடிவில் கோச்சார குரு ராசிக்கு இரண்டில் வரும் நிலையில் திருமணம் நடந்திருக்கும்.

    சித்திரை பௌர்ணமிக்கு அடுத்த திதியில் பிறந்து இருப்பதால், சிறப்பான சந்திராதி யோகம் வேலை செய்திருக்கும். நல்ல தாய் தந்தையரை பெற்றிருப்பர். லக்கினம் ,லக்கினாதிபதி பாக்கியாதிபதி புதன் சந்திரனுக்கு ல் 6,7,8 இல் இருப்பது சிறப்பு. 25 வயதுக்கு மேல் யோக தசையாக வருவதால் நல்ல வழியில் நல்ல வழக்கை சிறப்புற வாழ்ந்து கொண்டு இருப்பார்.

    ReplyDelete
  7. குரு தசை 16 வருடம் ராகு தசை பாக்கி இருப்பு 7 வருடம்.

    23 வயது முடிந்தவுடன் குருதசை முடிந்து விட்டது . 25 வரை திருமணம் கூடி வரவில்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். சனிதசை சனி புக்தி முடியும் நேரத்தில் திருமணம் கூடி இருக்கவேண்டும் . பெண் மிகவும் அழகான தோற்றம் கொடவராக இருப்பார்.

    நன்றி.

    ReplyDelete
  8. லக்கினாதிபதி சுக்கிரன் விரயத்தில் பாவக்கிரகங்களின் பிடியில் இருந்தாலும் பூரண சந்திரனின் பார்வையில் உள்ளார். கூடவே குடும்ப அதிபதி புதன் நீசம் (வர்க்கோத்தமம்) பெற்றது ஜாதகியை தன்னிச்சையான போக்கிற்கு இட்டுச்சென்றது. மேலாக குரு பார்வை பெற்ற லக்கினம் உரிய கோச்சார நிலையில் நல்ல மாற்றத்தினை அளித்துள்ளார்.

    ReplyDelete
  9. "Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?"

    ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகி.
    இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன?
    1) லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மேச ராசியில் மறைந்து அதன் அதிபதி இயற்கை அசுப கிரகங்களான செவ்வாய் மற்றும் உச்ச சூரியனுடன் அஸ்தமனாகி கெட்டு விட்டதே முதற்காரணம்.
    2) பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது கற்பு நிலையை குறிக்கும். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். இங்கு 4ம் வீடான சிம்மத்தில் மாந்தி அமர்வு, அதன் அதிபதி சூரியன் லக்கினத்திற்கு 12ல் மறைவு, பாபகத்திரியின் பிடியில் 4ம் இடம் போன்ற‌ காரணங்களையும் சொல்லலாம்.நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.
    ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும்.இந்த ஜாதகத்தில் 12மிடமான அயன, சயன பாவத்தில் இந்த சேர்க்கை உள்ளதால் எவரையும் மதிக்காமல். பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் பிடிவாதமாக (ராகுவுக்கு கேந்திரத்தில் புத்திகாரகன் சந்திரன்)இருத்தல்,தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுதல் போன்ற நடவடிக்கைகளினால் 25 வயது வரை அவரது வாழ்க்கை தடம் மாறக் காரணமாக இருந்தது.
    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com