மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.18

தாமிரபரணி புஷ்கர் விழா!


தாமிரபரணி புஷ்கர் விழா!

சிருங்கேரி ஆச்சார்யர்கள் மஹா தாமிரபரணி புஷ்கர் விழாவிற்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  அனைத்து படித்துறைகளையும் பல கோடி ரூபாய் செலவு செய்து மிக பிரமாண்டமாக ஏற்பாட்டை இரவு  பகலாக ஆச்சார்யாள் தலைமையில் ஒரு குழு அசுர வேகத்தில் வேளைகளில் செய்து கொண்டு  இருக்கிறார்கள்.

அனைத்து படித்துறைகளையும் சுத்தம் செய்து பக்தர்கள்
ஸ்நானம் செய்து விட்டு போக  மிக சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பல இடங்களில் அன்னதானம், வஸ்திர விநியோகம்,
சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு என களைகட்ட ஆரம்பித்து விட்டது
என்றே சொல்ல  வேண்டும்.

அவ்வளவு சிறப்பாக கடந்த ஐந்து, ஆறுமாதமாக சிறப்பாக
தங்களது பணிகளை  செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அலங்காரம், இரண்டு பெரியவர்களின் புகைப்பட பேனர்கள்
என்று  பட்டையை கிளப்பறார்கள் சிருங்கேரி பெராயவர்களின் பக்தர்கள் மிகவும் அருமையான ஏற்பாட்டை  செய்து வருகிறார்கள்.

இப்போது பார்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறதென்றால் விழா நெருங்க நெருங்க இன்னும்
பிரமிப்பாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இவை  அனைத்தும் சிருங்கேரி பெராயவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம்  இப்படி இருக்க
மறுபுறம் நாம் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த புஷ்கரத்தில்
நாம் இதுவரை என்ன செய்தோம்? இனி என்ன செய்ய
போகிறோம்?  என்று தெரியவில்லை.

கர்நாடகாவில் இருந்து சிருங்கேரி  பெரியவர்கள் மற்றும் அவாளோட பக்தர்கள் நம் தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தாமிரபரணி புஷ்கரில்  இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு
செய்கிறார்கள் நாம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கிறோம்.

வெட்கமும், வேதனையையும் பட வேண்டும்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்  மஹா தாமிரபரணி
புஷ்கர் அழைப்பிதழ். அனைவரும் இந்த ஆண்டு அக்டோபர்
பதினொன்றாம் தேதி  முதல் இருபத்தி மூன்றாம் வேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் மஹா புஷ்கர விழாவில் கலந்து 
கொள்வோம்.

இந்த தாமிரபரணி புஷ்கரில் ஏராளமான சாதுக்கள்,
ஆச்சார்யர்கள், மஹான்கள், துறவிகள், ஆதீன மடாதிபதிகள் போன்ற ஏராளமானவர்கள் ஸ்நானம் செய்ய உள்ளனர். இதில் நாமும் கலந்து  கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு புனித
நீராடி நம் பாபங்களை போக்கி புண்ணியத்தை அடைய  தாமிரபரணியில் ஸ்நானம் செய்ய வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    மிக நல்ல செய்தி! சிருங்கேரி
    மடாதிபதி அவர்களின் சிறப்பான
    செயல்களுக்கு நாம் அனைவரும்
    கடமைப்பட்டிருக்கின்றோம்!
    அவர்களுக்கு நம் வந்தனங்கள்!
    தாமிரபரணி புஷ்கர் வைபவத்தில்
    கலந்து கொள்ள முயல்வோம்!
    இவ்வரிய தகவலைத் தந்த
    வாத்தியாரையாவுக்கு நமது
    நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Very very informative post...

    Thanks for sharing...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக நல்ல செய்தி! சிருங்கேரி
    மடாதிபதி அவர்களின் சிறப்பான
    செயல்களுக்கு நாம் அனைவரும்
    கடமைப்பட்டிருக்கின்றோம்!
    அவர்களுக்கு நம் வந்தனங்கள்!
    தாமிரபரணி புஷ்கர் வைபவத்தில்
    கலந்து கொள்ள முயல்வோம்!
    இவ்வரிய தகவலைத் தந்த
    வாத்தியாரையாவுக்கு நமது
    நெஞ்சார்ந்த நன்றிகள்!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very very informative post...
    Thanks for sharing...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com