மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.10.13

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி பத்தொன்பது!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். நடிகை அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.




அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++========

36 comments:

  1. Lagnam:
    Laknathipathyi Uccam, but in 8th place.
    Parivarthaini with 8th lort which is not good (forgot the name of the parivarthanai, is it dhaithanya?).
    Sani is in Lagna, that is bad too. Also sagada yogam, good and bad comes in cycles.
    Since chandran is there beautiful.

    2nd house:
    2nd lord si in 12 place from itelf. but Uccha Guru looks at it. Guru parvai will remove kodi papam. So Good Family.

    5th House:
    Even though 5th lord is at 12th house (own house), Uccha Guru looks at it. More over Vipareethe raja yogam is also there as it is 12th lord and 6th lord Sukra is there with him.
    So she must have kids.

    7th House:
    Even though 7th lord is in 12th place, Uccha Guru looks at it.
    Vipareethe Raja yogam is there. Valar Pirai Chanran is also looks at 7th house. so she should have got married.
    Sani looks at it, so late marriage.

    ReplyDelete
  2. Dear Sir,
    Lagna bhava- The lady could be short and old looking because of presence of saturn in lagna. As chandra is also present, skin colour is average. There is parivartana between 1st and 8th lord dainya parivartana. The lady could have health related issues and the lady is of serious nature because of saturn in lagna.
    Second bhava-Guru lagnaditpathi and sugastanadipathi is aspecting 12th,second and fourth. Her family heritage is good. She has a soft and sweet voice.
    Fifth bhava- As 5th lord is in 12th in conjunction with 6th lord with gurus aspect, She might have got kids after lot of prayers. 12th house and planets in 12th is also under papa kartari yog
    Seventh bhava - As both 7th lord and sukra is with two other planets, there are chances of two marriages. First one could have been a love marriage because of 5th and 7th lord combination with sukra, which could have got broke up. Second marriage would have continued because of gurus aspect. sukra + chevvai combinatation in 12th house indicate she is a very passionate woman.

    Note: Becuase of suriyan neecham in 11th house caught in papa kartari yog either her father could have died at a early stage of life or she might not have good relation with her father.



    ReplyDelete
  3. லக்கினத்தில் சந்திரன், எனவே அழகானவர். லக்கினாதிபதி குரு உச்சம் ஆனால் 8‍ல் மறைவு. 2‍ ம் அதிபதி 12‍ல் மறைவு; 5‍ம் அதிபதி 12ல் மறைவு; ஆனால் ஆட்சி.
    7‍ம் அதிபதி 12‍ல்மறைவு; மேலும் சுக்கிரன் 12ல் மறைவு

    ஜாதகர் திருமணமாகி இருந்தாலும் குடும்ப வாழ்க்கை தோல்வி அல்லது விவாகரத்தில் முடிந்திருக்க வேண்டும்.

    5‍ம் அதிபதி 12ல் மறைந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும், குரு உச்சம் ஆனதனாலும் குழந்தை பாக்கியம் உண்டு.

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை என்பதற்கேற்ப 6‍ம் அதிபதி 12‍ம் அதிபதியுடன் 12‍ல் மறைந்ததால் புகழ் செல்வத்திற்கு குறைவிருக்காது.

    மொத்தத்தில் ஜாதகர் புகழ் மிக்கவராக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை சுகமில்லை; தனி மரமாகத்தான் இருக்க வேண்டும்.

    AMG

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,

    1) ஜாதகி அழகானவர்; பாரம்பரிய வழக்கங்களில் பிடிப்புள்ளவர்; மதக்கோட்பாடுகளில் ஈடுபாடுள்ளவர். நீண்ட ஆயுள் கொண்டவர் ( லக்னத்தில் நிற்கும் எட்டாம் அதிபதி சந்திரனும் உச்சம் பெற்ற லக்னாதிபதியும் பரிவர்த்தனை. மேலும் லக்னத்தில் ஒழுக்க/ ஆயுள் காரகன் சனி )

    2) திருமணம் ஆகியிருக்காது. (குரு எட்டில் மறைவு; பாக்கியஸ்தானாதிபதி சூரியன் நீச்சம். களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் ஸ்தானாதிபதி புதன் பன்னிரண்டில் மறைவு. சுபர்களின் பார்வை இல்லாத சந்திரன் மற்றும் பன்னிரண்டில் மறைந்த செவ்வாய் ஆகியோரின் தசைகள் திருமணம் ஆக வேண்டிய வயதில் வந்ததாலும். மேலும் லக்னத்திலேயே புனர்பூ தோஷம் இருப்பதாலும்)

    3) ஐந்தாம் அதிபன் பன்னிரண்டில் மறைந்து பகைவர்களுடன் நின்றாலும் நீச்சமாகிவிட்ட பாக்யாதிபதி சூரியனின் (6 பரல்கள்) பார்வையினால் தத்துப் பிள்ளை எடுத்து வளர்த்திருப்பார்.

    4) பாரம்பரியமாக வந்த தனம் மிகப் படைத்தவர். குடும்ப வாழ்க்கை என்பது நல்ல உறவினர்களுடன் வாழும் வாழ்க்கையாகத்தான் இருக்கும். (லாபஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைந்தாலும், உச்சமான தனகாரகன் தனஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்ப்பதாலும், பாக்கியஸ்தானாதிபதி லாபஸ்தானத்தில் நிற்பதாலும் தன-பாக்கியம் உண்டு. குரு குடும்பஸ்தானத்தைப் பார்ப்பதாலும், ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பதாலும், நெருங்கிய உறவினர்களுடன் வாழும் வாழ்க்கை)

    சனைஸ்சரனின் பத்தாம் பார்வை கேது மேல் விழுவதாலும், எட்டில் உச்சம் பெற்ற குருவாலும் இவர் மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாட்டுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்.

    நன்றியுடன்,
    ஸ்ரீனிவாஸ ராஜுலு

    ReplyDelete
  5. Dear Ayya,

    The individual is not married.
    she is a saintly person.
    she is highly educated.
    she is involved in social work.

    br
    gopinath

    ReplyDelete
  6. 1. 14.11.1931 காலை 9.07 மணிக்கு பிறந்த பெண் ஜாதகத்தில், லக்னத்தில் சந்திரன், லக்னாதிபதி வியாழன் உச்சம், அம்சத்தில் ஆட்சி. எனவே பெண் அழகானவர். லக்னாதிபதி 8ல் மறைந்தனால் பிரச்சனைகள் மிகுந்தவர் ஆனால் அதனை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்.

    2. 2ம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல். 2ம் வீட்டிற்கு லக்னாதிபதி வியாழன் பார்வை. குடும்பம் உண்டு. தனகாரகன் வியாழன் 2ம் வீட்டிற்கு 7ல் இருப்பதால் பணக்கார பெண்.

    3. 7ம் அதிபதி புதன் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைவு. இருவருக்கும் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி. 7ம் வீட்டிற்கு சனி பார்வை. திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியிருக்கும்.

    4. 5ம் அதிபதி ஆட்சி, ஆனால் 5ம் வீட்டிற்கு நீச சூரியன் பார்வை. எனவே தாமத குழந்தை பாக்கியம்.

    5. பாக்யாதிபதி சூரியன் நீசம். சிறப்பான யோகங்கள் அமையவில்லை. பிரச்சனைகள் மிகுந்த வாழ்க்கை.

    ReplyDelete
  7. வணக்கம்
    பதில்கள்.

    1. ஜாதகி மிகவும் அழகானவர்.
    தீர்க்காயுள்.
    2. பணகஷ்டம் உடையவர்.
    3. திருமனமானவர். கஷ்டத்துடன்
    கூடிய குடும்ப வாழ்க்கை
    அமைந்தது.
    4. ஜாத‌கிக்கு குழ‌ந்தை உள்ளது.
    குழ‌ந்தையினால் பிரச்சனைகள்
    உண்டு.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
    1. தனுர் லக்கன ஜாதகி. லக்கினத்தில்
    சந்திரன் இருப்பதால் அழகான
    தோற்றத்தை பெற்றார்.
    2. லக்கானதிபதி குரு 8ம் வீட்டில் கடக
    ராசியில் உச்சம் அடைந்துள்ளார்.
    மேலும், குரு, சந்திரன்
    பரிவர்த்தனை அடைந்து நீண்ட
    ஆயுளையும்,மனதில்
    மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார்.
    பரிவர்தனையான கிரகம் 100%
    பலனை கொடுதுள்ளது.


    3. இரண்டாம் வீட்டில் (24 பரல்கள்
    உள்ளன‍‍,2ம் வீடு பலமாக இல்லை)
    இரண்டாம் வீட்டு அதிபதி சனி 2ம்
    வீட்டுக்கு 12ல் நஷ்ட்டமான வீட்டில்
    அமர்ந்துள்ளதாலும், 9ம் வீட்டு
    பாக்கியசஸ்தான அதிபதி சூரியன்
    11ல் பாபகர்தாரி தோஷ்த்தில்
    இருப்பதாலும் ஜாதகிக்கு பண
    கஷ்ட்டம்
    உண்டாயின.ஆகையினால், முழு
    பலனை அடைய முடியாமல்
    போய்விட்டன.12ல் மாந்தி
    ஜாதிகிக்கு எழ்மை
    நிலையயும் பண விரயத்தையும்
    கொடுத்து, குருவின் 5ம்
    பார்வையால் அதை சமாளிக்கும்
    திறமையையும் கொடுத்துள்ளார்.

    4. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் (1
    பரல்) 12ம் வீட்டில் சுக்கிரனுடன்
    சேர்ந்துள்ளார். குருவின் சுப
    பார்வை 5ம் பார்வை 12ம் வீட்டை
    பார்பதாலும், 5ம் வீட்டில்
    அஷ்ட்டவர்க பரல்கள் 29 நன்றாக
    உள்ளதாலும், ஜாதகிக்கு குழ்ந்தை
    பாக்கியம் கிடைத்தது. 5ம் விட்டு
    அதிபதி செவ்வாயும்
    மாந்தியும் சேர்ந்து 12ம் விட்டில்
    இருப்பதால் குழ‌ந்தையினால்
    பிரச்சனைகள் உண்டாயின.

    5. 7ம் விட்டில் களத்திர தோஷம்
    உள்ளது. 7ம் வீட்டில் அஷ்ட்டவர்க
    பரல்கள் 22 உள்ளன. சந்திரனும்
    சனியும் லக்கினதில் சேர்ந்து புனர்ப்பு
    தோஷத்தினால் 7ம் பார்வையாக
    மிதுனத்தை பார்ப்பதால் திருமணம்
    தாமதமாயின.7ம் விட்டு அதிபதி
    புதன்(3) 12ம் வீட்டிலும்,
    சுக்கிரனுடன்(3) சேர்ந்துகுருவின்
    5ம் சுப பார்வை பெற்று ஜாதகிக்கு
    32 வயதில் தாமதமாக திருமணம்
    நடந்தது. நவாம்சத்திலும் சுக்கிரன்
    விருச்சிக ராசியில் இருப்பதால்
    சுக்கிரன் வர்கோத்தமும்
    அடைந்துள்ளார்

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  8. நவம்பர் 14, 1931 காலை 9.06 அன்று பிறந்தவரின் ஜாதகம்.
    லக்னத்தில் சந்திரன் (8ஆம் அதிபதி) + சனி (2,3) லக்னாதிபதி பரிவர்த்தனை அடைந்து 8ஆம் வீட்டில் உச்சம். அழகான தோற்றம்+நீண்ட ஆயுள் பெற்று ஆனால் தீராத பிணிகளுடன் வாழ்ந்தவர்.
    2ஆம் அதிபதி சனி லக்னத்தில் 2ஆம் வீட்டை குரு பார்க்கிறார். தனகாரகன் குரு 8ல் இருப்பதால் கணவன் மூலம் செல்வந்தர் ஆகியிருப்பார். ஆனால் சுகக்கேடு (4ல் ராகு, லக்னத்தில் சனி)
    5ஆம் அதிபதி 12ல் மறைவு ஆனால் ஆட்சி பலம் + குரு பார்வை. ஆகவே குழந்தைகள் இருந்திருக்கும். ஆனால் உடன் 6ஆம் அதிபதி +மாந்தி இருப்பதால் குழந்தைகளால் சுகமில்லை
    7ஆம் வீட்டு அதிபதி 12ல் மறைவு ஆனால் குரு பார்வை. 7ஆம் வீட்டின் மேல் செவ்வாயின் 8ஆம் பார்வை. திருமணம் ஆகியிருக்கும் ஆனால் மணவாழ்வில் சுகமில்லை. சச்சரவுகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பார்.

    ReplyDelete
  9. இலக்கினத்தில் சந்திரன். ஆனால் கூடவே சனி. ஆகையால் களையான முகமும் கருத்த நிறமும் இருக்கும்.

    இலக்கினாதிபதி குரு உச்சம். ஆனால் 8ம் இடமான மறைவிடத்தில். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

    2ம் வீட்டுக்காரர் சனி இலக்கினத்தில், 2ம் வீட்டிற்கு 12ல். ஆனால், தனகாரகன் மற்றும் குடும்பகாரகன் குரு உச்சம். அதோடு இரண்டாம் வீட்டை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கிறார். ஆகையால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். செல்வத்திற்கு குறைவில்லை.

    5ம் வீட்டுக்காரர் செவ்வாய் தனது மற்றொரு வீடான விருச்சிகத்தில் இலக்கினத்திற்கு 12ல். ஆனால் 5ம் வீட்டுக்கு 8ல். கூட சுப கிரகங்களான சுக்கிரனும் புதனும். புத்திர காரகனான உச்ச குருவின் பார்வை 5ம் வீட்டதிபதிக்கு உண்டு. ஆனால் கூடவே மாந்தியும். குழந்தை சற்று தாமதமாக பிறந்திருக்கலாம். அல்லது ஏதாவது சிறு குறை இருந்திருக்கலாம்.

    7ம் வீட்டுக்காரர் புதன் அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு 12ல். களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டுக்காரரோடு இருக்கிறார். சனி தனது நேரடி பார்வையில் 7ம் வீட்டை வைத்திருக்கிறார். ஆனால் குரு பார்வை 7ம் வீட்டுக்காரருக்கும் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் உண்டு. தனுசு இலக்கினத்திற்கு செவ்வாய் தசை நன்றாக இருக்கும். புதன் செவ்வாயோடு கூட்டணியில் உள்ளார். செவ்வாய் தசையில் இவருக்கு திருமணம் சில தடங்கல்களை கடந்து நட‌ந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்,

    கொடுக்கப்பட்ட ஜாதகி தனுசு லக்னம்,தனுசு ராசி.

    1.லக்னாதிபதி குரு 8 இல் உச்சம் பெற்று மறைவு மேலும் 8மதிபதியோடு பரிவர்த்தனை,இது நல்ல பரிவர்த்தனை இல்லை.
    லக்னத்தில் சந்திரன் அழகான தோற்றத்தை கொண்டவர்,
    கூடவே சனி கருமி தனத்தையும் கொண்டவர்.

    2.இரண்டாம் வீட்டதிபதி சனி லக்னத்தில், அந்த வீட்டிற்க்கு 12இல், 2ம் வீட்டிற்க்கு உச்சம் பெற்ற குருவின் பார்வை மற்றும் செவ்வாய் பார்வை.
    தன காரகன் குரு இரண்டாம் வீட்டிற்க்கு 7லிருந்து 2ம் வீட்டை தனது நேரடி பார்வையில் வைத்திருப்பதால், இரண்டாம் வீட்டின் 3செயல்பாடுகளில் ஒனறான தனச் சேர்க்கை சுமாராகத்தான் இருக்கும் ஏனெனில் 11மதிபதி சுக்கிரன் விரையத்தில் சென்று அமர்ந்ததால் வந்த வழி தெரியாமல் செலவாகிவிடும்.குடும்பம் உண்டு.

    3.7மதிபதி புதனும்,களத்திர காரகன் சுக்கிரனும் 12இல் மறைந்தாலும் இவர்களின் சேர்க்கையாலும், இவர்களோடு பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் சேர்ந்திருப்பதாலும் தாமதமாக திருமணம் செவ்வாய் திசையில் நடந்திருக்கும்.

    4.5மதிபதி செவ்வாய் 12இல் ஆட்சி பெற்று மறைவு. புத்திர காரகன் குரு லக்னத்திற்க்கு 8இல் மறைந்தாலும், 5ம் வீட்டிற்க்கு 4 இல் அமர்ந்து உச்சம் பெற்றதாலும் புத்திர பாக்கியம் உண்டு


    ReplyDelete
  11. Respected Sir,

    Migavum swarasyamana jadhagamdhan idhu..

    Mootha maanavargalin alasalinalum, Ungalin alasalinalum, niraya visayangalai naan indha jadhagam moolamaga karkamudium..

    Ennudaya arivirku ethiya alasalgal idho:

    1.) Dhanusu Lagnam & Dhanusu Raasi, Lagnadibathy 8il uccham (Dhanusu lagnathirku Guru 8il dhaey uccham adayamudium.?) Lagnathil chandiran, Sani. Chandiranum, uccham petra guruvum parivardhanai. Jaadhagi azhagana penmani (Migavum azhagu, Perazhagu endru solvadharku sukranin sambandham illai).

    2.) Kudumbasthana adhibathy sani Lagnathil & Avar sondhaveetirku 12-il. Kudumbasthanathirku Uccha guruvin paarvai irupadhal nalla kudumbam amayum.

    3.) 5-m adhibathy chevvai avar 12-il aatchi. Guruvin Paarvai avarukku ulladhalum, Karagan uccham petradhalum Kulandhai bagyam Undu.

    4.) 7-m veethu adhibathy budhan 12-il sukranudan amarvu and guruvin paarvai adhanal thirumanam undu. Sukranuku, guruvin paarvai irupadhal kaadhal thirumanam. 1931-il eppadi kaadhal thirumanam..? Andraya soolnilayil Maaman maganai manadhil kaadalithu, periyavargal andha maaman maganayae thirumanam seidhu vaithu iruppargal.

    12-il 3-gragangal and maandhi irundhalum, 12 veetai uccham petra guru parkiraar.

    4 thirudargalai oru DSP kankanithal enna nadakkum..? 4 perumey, DSP thangalai kankaanikirar endru olungaga iruppargal.

    Ovvoru thiraipadathil anaithu kadhapathirangalum kadhayai sumandhu selvaargal aanal oru sila thiraipadangalil kadhanayagan mattum muzhu thiraipadhathaium sumandhu selvaar.

    Ingu Guru mattum uccham petru anaithu velaigalaium jaadhagiku positive-aga seidhar.

    Guru paarka kodhi nanmai enbadharku oru sirandha eduthukataga indha jaadhagam vilangugiradhu.

    Kadaysi benchil amarndhirukkum maanavanin badhilgal ivai.

    Thavarugalai naalaya Padhivin moolamaga thiruthikolgiraen.

    Thank You.

    ReplyDelete

  12. 1) Personal is not good looking . There could be possibility that mental stability of the person is very bad
    2) Person first marriage ended in short duration but he settled in life after some time
    3) The person blessed with kids.

    For Lagna
    1) 1 and 8 lord exchange - bad
    2) 2&3 lord in lagna and it is sani - Bad
    3) moon & sani conjunction -Bad
    4) From langna & moon guru in 8 th house - Bad
    5) sakada yoga - Bad
    6) Personality planet sun in debilation - Bad
    7) attration planet sukra with bad conjunction-Bad

    For 2 and 7th house
    1)The lord of second house in 1st house(i.e) 12th house- Bad
    2) Langana lord guru aspects 2 house

    For 5 the house
    2)5th lord Mars in his own hose and karaka(Guru) in exalted.

    ReplyDelete

  13. லக்கினதில் சந்திரன் இருக்கும் இந்த அழகான பெண்மணிக்கு , லக்கினதில் சனி அதன் பார்வை களத்திரச்தன தில் மேலும் 7இம் அதிபதி புதன் களத்திரகாரன் சுக்கிரன் 12 இல் மறைவு அதனால் திருமணம் இல்லை

    இரண்டாம் வீடு அதிபதி 2இம் வீட்டிற்கு 12இல் மறிவு குடும்பம் வாழ்கை இல்லை

    12 இல் ஆட்சி பெற்ற 5 இம் அதிபதி மறைவு - பெரிய பலன் இல்லை

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 19 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 14.11.1931 அன்று பிறந்த இந்த ஜாதகி, வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளையும் சந்தித்திருப்பார். காரணம் லக்கினத்தில் சனி, அதுவும் தன்னுடைய சொந்த வீட்டுக்குப் பன்னிரண்டில். ஆரம்பமே கோணலாகி விட்டது. ஒரே ஆறுதல் லக்கினத்தில் உள்ள சந்திரன் ஜாதகிக்கு அழகைக் கொடுத்திருப்பார். சந்திரனும் குருவும் பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் குரு எட்டில் மறைந்து விட்டதால் பிரயோஜனப் படவில்லை.

    இரண்டாம் வீட்டை உச்ச குரு பார்க்கிறார். இது பொதுவாக நல்ல பலனைக் கொடுக்கும் என்றாலும், இரண்டாம் வீட்டு அதிபதி சனி பன்னிரண்டில் மறைந்து விட்டதால் குடும்ப வாழ்க்கையும் கெட்டு விட்டது. வேறு நல்ல கிரகங்களின் பார்வையும் இல்லை. எனவே குடும்பம் அமைந்தாலும் பாதியில் ஊற்றிக் கொண்டு விடும். ஆனாலும் ஆயுள்காரகன் சனி எட்டாம் அதிபதியான சந்திரனுடன் சேர்ந்திருப்பதால் தீர்க்கமான ஆயுள் உண்டு.

    ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் பன்னிரண்டில் மறைந்து விட்டார். மேலும் அந்த வீட்டை நீச்சமடைந்த சூரியன் துலாமிலிருந்து பார்க்கிறார். ம்ம்.... எல்லாம் கர்ம வினையின் பலன். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன் மட்டுமே இந்த ஜாதகிக்கு நன்மை செய்ய முடியும். வேறு என்ன? நல்ல உடல் நலத்தைக் கொடுப்பார். புத்திர தோஷம் இல்லை. எனவே குழந்தை உணடு.

    ஏழாம் வீட்டை சனி பார்ப்பதாலும், ஏழாம் வீட்டு அதிபதி புதன், களத்திரகாரகன் சுக்கிரனுடன் பன்னிரண்டில் மறைந்து விட்டதாலும் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழ்வதிலும் சிக்கல்தான். காரணம் பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமிடத்துக்கு எட்டாமிடம் கணவனின் ஆயுளைக் குறிக்கும். இங்கு அதற்குரிய சனியும் பன்னிரண்டில் மறைந்து விட்டதால் கணவனுக்கு ஆயுள் குறைவு, விதவைக் கோலம்தான்.

    தந்தை ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்துக்கு அதிபதி பதினொன்றில் இருப்பதால் தன்னுடைய தாய் வீட்டில் இருக்கும் வரையில் வசதியாக இருந்திருப்பார். திருமணமான பிறகு எல்லாமே சோதனை மயம்தான். சுகஸ்தானமான நான்கில் ராகு வேறு. எந்தவிதமான சுகமும் இல்லாமல் போய்விடும். கடவுளே! இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது.

    ReplyDelete
  15. Ayya,

    Please find my analysis.

    Lagna: Lagna owner sitting in 8th house & 8th house owner sitting in lagna, so she has to struggle in life to achieve everything. This parivarthanai is not so good. Eventhough both are planets are auspicious(Guru, Moon), so she will have good standing power.
    - Person must be lazy person due to Shani sitting in lagna.

    2nd House: 2nd house owner(shani) sitting in his 12th house, so most of the income will be spent. But income will be good due to lagna & 4ht house owner Guru is looking(7th) that house.

    5ht House: 5th House owner(Mars) in his own house(Acchi), but he is sitting in 8th house from 5th house. So she must not having kids. Other reason is Mandhi with Mars & Neecha Suriyan looking 5th house.

    7th House: Since 7th house owner sitting with Sukra(Kalathira Karakan) house & Second house owner(Shani) is aspecting 7th house, so she must married and got married life.
    But She must be undergone divorce as well due to 7th house owner & Sukra(Kalathira Karakan) sitting in 12th house. If sukra sitting in 12th house, then marriage life won't be good.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  16. வணக்கம் !

    ஜாதகி நற்குணம் படைத்தவர். வளர்பிறை சந்திரன் எனில் தெய்வீகக்களை நிரம்பி இருக்கும். ஆனால் தாய் தந்தையின் ஆதரவு இளமையிலே இழந்தவராக இருப்பார். சுகம் இல்லை.பாக்கியங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆன்மீக சிந்தை உடையவர்.

    ஏதேனும் இழப்பீடுகளின்/உயில்/பிறர் சொத்து மூலம் வருமானம் பெற்று ஜீவனம் நடத்துபவர். தத்துவம் பேசக்கூடியவர். குடும்பம் என்று தனியாக இருப்பதற்கில்லை.

    ஐந்தாம் அதிபதி , ஏழாம் அதிபதி மற்றும் களத்திர காரகன் விரயத்தில் மாந்தியுடன் .
    எனவே திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணத்தில் விருப்பம் இல்லாதவராக இருக்கலாம்.

    மொத்தத்தில் 8-ம் இடமும் , 12-ம் இடமும் வலுத்த ஜாதகம். சுகஸ்தானமும் , பாக்கியஸ் தானமும் கெட்டு இருக்கிறது. மோட்சத்தை விரும்பும் ஜாதகம்.

    ReplyDelete
  17. Dear Sir,

    1. Lagna lord in 8th exalted. Long life. She is beautiful since chandra in lagna.

    2.Second lord in lagna aspected by 8th lord exalted guru. She get enough money and family due to the power of guru.

    3. 5th lord in 12th and it is aspected by 8th lord exalted guru. 5th lord is aspected by neecha sun. She will have a child with some decease.

    4.7th lord in 12th with mandhi. even though guru aspects, mandhi spoiled the 7th lord. She divorced the husband and live alone.

    Thanking you.

    ReplyDelete
  18. தனுசு லக்னம் . லக்னாதிபதி குரு உச்சம் . ஆனால் எட்டாம் வீட்டில்.
    புராட நட்சத்திரம். சுக்கிர நட்சத்திரம். தனுசு ராசி. ராசி அதிபதி குரு எட்டாம் வீட்டில்.
    லக்னத்தில் சனி சந்திரன். புனர்பூ தோஷம். நட்சத்திர அதிபதி சுக்ரன் 12-ம் வீட்டில்
    (1). லக்னத்தில் சனி இருப்பதே நல்லதல்ல !. அதுவும் தன்னுடைய வீட்டிற்கு 12-ம் இடத்தில் இருக்கிறார்.
    சந்திரனோடு. பகை கிரகம். .வாழ்க்கை போராட்டம் தான் !. திடீர் திடீர் என கோபம் வரும். எப்போதும் சஞ்சலத்தோடு இருப்பவர்.
    (2) இரண்டாம் வீடு அதிபதி சனி லக்னத்தில் இருக்கிறார். இரண்டாம் வீட்டை உச்ச குரு பார்க்கிறார் !. இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இல்லை !. அதனால் குடும்பம் உண்டு !
    (3) ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சி. விரய ஸ்தானம். குரு பார்வை உள்ள செவ்வாய் !.அதனால் ஒரு குழந்தை இருக்கும் !. அந்த குழந்தை இனால் பிரச்னை ஏற்பட்டு இருக்கும் !.
    குழந்தை தங்கி இருக்காது அல்லது ஊனமான குழந்தை !.
    (4) ஏழாம் வீட்டில் கிரகங்கள் இல்லை !. ஏழாம் வீட்டு அதிபதி புதன் 12-ம் விரய ஸ்தானத்தில். சுக்கிரனுடன். கால ஸ்ர்பா தோஷம் உள்ள ஜாதகம். சனி செவ்வாய் பார்வை ஏழாம் வீட்டிற்கு. புனர்பூ தோஷம் வேறு !. திருமண தடை. அதனால் தாமத திருமணம் !. இளம் வயதில் விதவை அல்லது விவாகரத்து !.
    ரொம்பவும் கடினமான புதிராக இருக்கிறது !. மிக்க நன்றி !. விடையை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அய்யா !.

    ReplyDelete
  19. Respected Sir,
    1. The native of the horoscope will be good-looking as moon in 1st house but it is with sani and lagna lord hidden in 8th house so the native will be sluggish and can't have big success in life. Also lagna is in bad parivarthna yogam i.e., with 8th house. Her talent due to mercury and venus combo (nibuna yogam) will not be useful because the yogam hidden in 12th house.
    2. 2nd lord saturn in lagnam but with the combo of 8th lord(moon) will not leads to a happy family life.Kutti sukra dasa also will not favor the native which will make her to face more struggle. Ucha Guru(also the lagna lord) parvai for 2nd house will satisfy the native as for as the money is concern.
    3. Though 7th lord in 12 th house guru parvai is for mercury so the native will be married but she will not live with her husband as both sani and sevai parvai for 7th house. And no chances for second marriage too.
    4. The native cannot be a mother as bhagiya sathanam lord sun is neecham in 11th house. And 5th lord in 12 house also in pabakarthari yogam.

    ReplyDelete
  20. ஐயா அவர்களக்கு,
    வணக்கம்...
    ஜாதகரின் லக்னம் , பூர்வபுண்ணியம் ,களச்த்ரதிபதி ஆகிய மூன்றும் மறைந்து உள்ளது.

    லகனத்தில் சந்திரனும் சனியும் இருப்பது கருமையான நிறத்தில் அழகான தோற்றம் கொண்டவராக இருப்பார்.
    லகனதிபதி 8இல் உச்சம் . போராட்டமான காலங்கள் பின் வெற்றி பெறுவார்.

    தனமும் வாக்கை காப்ப்ற்றுவராக இருப்பார். குருவின் பார்வை 2ம் இடத்தின் மேல் விழுவதன் பலன்.

    ஆண் புத்திரம் இல்லை ....

    1 க்கு மேற்பட்ட திருமணம் நடக்கும் ... கடைசியாக நடந்த திருமணம் நிலைக்க வாய்ப்பு உண்டு.

    மன நிம்மதி இல்லாத வாழ்வு வாழுவார் ...

    நன்றி
    சத்திய நாராயணன்
    திருப்பூர்

    ReplyDelete
  21. GOOD EVENING SIR,

    QUIZ NO: 19
    ===========
    1.LAGANAM DHANUSH , LORD LAGNA GURU UCHAM @ KADAGAM BUT PLACE 8 TH HOUSE NOT USE IN THE GIRL , USE OTHERS, APPEARENCE DARK & DULL FACE.
    2.SECOND HOUSE: SECOND LORD PLACED @ LAGNAM GURU LOOK AT SECOND HOUSE FREE FLOW OF MONEY ,
    3.FIFTHE HOUSE:
    ===============
    FIFTH LORD MARS ACCHI AT 12 THE HOUSE ASSOCIATED WITH 6 TH LORD

    4. 7 TH HOUSE:
    ================
    7 TH LORD ASSOCIATE WITH 6TH & 5 TH LORD NOT POSSIBLE TO MARRIAGE LIFE
    POONAR POO DOSHAM ( SATURN & MOON ASSOCIATE LAGANAM LOOK AT 7TH HOUSE)

    ReplyDelete
  22. Vanakkam Aiya,

    Koduthulla jadhagathaipatriya kanippu:

    Lagnathil chandiran,sani;lagnadhibadhi guru 8il utcham petrirukirar...thotram azhagai irukum...thayaruku kedu..sramamana vazhkai..angaheenum adaindavar.

    2m veetuku uriyavar lagnathil irupadal,vaaku vanmai padaithavar;selvam,selvakku,arivali,nalla kudumbam amayum.


    5m veedukuriya sevvai,Viraya sthanathil(atchi),sukiran,budhan matrum mandhiyodu..puthirakaragan guruvo(ucham) 8il...thathupillai dan irukum.

    7m veedukuriya budhan,viraya sthanathil,kalathirakaragan sukiranodu,sevvai matrum mandhiyodu...thamadha thirumanam...anal manavazhvu virayamagidum....

    Sukiran,budhan,sevvai kootani enbadal natiyam nadagam pondra thuraigalil prasidhi petravaro jadhagi?

    Nalaiya padhivil alasal sariya endru therindukolla avaludan...

    Nandri Aiya.

    ReplyDelete
  23. மதிப்பிற்குரிய ஐயா,
    1.லக்னாதிபதி 8ல் இருப்பதால் ஆயுள் தீர்க்கம்.
    2.2ம் அதிபதி சனி 8ம் அதிபதி சந்திரனுடன் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் இருக்கும்.
    3.ஏழாம் அதிபதி புதனை குரு பார்ப்பதால் திருமணமாகி இருக்கும். நல்ல தொழில் உள்ள மாப்பிளை அமைந்திருக்கும்.ஆனால் புதன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளதால் விவாகம் ரத்தாகி இருக்கும்.
    4.குழந்தை பாக்கியம் உண்டு, காரணம் 5 ஆம் இடத்து அதிபதி செவ்வாய்க்கு குரு பார்வை உள்ளது.

    ReplyDelete
  24. Hi Sir,
    DOB : Nov 13, 1931 around 9AM.

    Lagna: Person will be beautiful Since moon is placed in lagna
    and lazy in nature Since Saturn is placed in lagna. Will be long lived and Life will have troubles since 8th place owner-moon is placed in lagna.

    2nd House: Person will be rich Since 2nd house owner is placed in lagna and Authority for money-Jupiter in exalted position sees the 2nd house. But family life will have troubles since saturn is placed 12th to 2nd house.

    5th house: Will not have children since Sun in debilated state-very weak sees 5th house and 5th place is owner is situated in 12th place to lagna and 8th place from its own. Authority for child-Jupiter is situated 8th to lagna. No vision of good planets in 5th house.

    7th house: Native will get married since Authority for Marriage-Venus is in Vargotama-double strong and 7th place owner Mercury[friend of Venus] is along with Venus. Also moon-benefic planet sees 7th position.

    ReplyDelete
  25. இந்த ஜாதகி 14 நவம்பர் 1931ல் காலை 9மணி எட்டு நிமிடங்களுக்குப் பிற‌ந்து இருக்கக்கூடும்.

    இவரும் வெளிநாட்டுக்காரராக இருக்க வாய்ப்புள்ளது.

    லக்கின பாவத்தில் எட்டாம் அதிபனான சந்திரன், 2,3 அதிபன் சனியும் இருப்பதால் லக்கினம் சிறிது வலிமையில்லை. அழகிய தோற்றம் உடையவர். ஆனால் சனி இவரை எப்போதும் கவலை படிந்து முகத்துடன் வைத்து இருப்பார். லக்னாதிபதி குருவும், எட்டாம் அதிபதி குருவும் பரிவர்தனை என்பதால் ஓரளவு சீரான வாழ்க்கை இருந்திருக்கும்.

    இரண்டாம் இடத்துக்கார சனைச்சரன் லக்கினம் ஏறி சுக்கிரனின் நட்சத்திரமான
    பூராடத்திலேயே நின்றார். சந்திரனும் பூராடத்திலேயே உள்ளார். எனவே களத்திரகாரகன் சுக்கிரன் போலவே சந்திரனும், சனைச்சரனும் வேலை செய்வார்கள். இரண்டாம் இடத்திற்கு உச்சம் பெற்ற குரு(லக்னாதிபதி,ராசியதிபதி)பார்வை கிடக்கிறது.குரு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் இருப்பதால் 7ம் அதிபதியான புதனின் வேலையைச் செய்ய வேண்டும்.குரு எட்டில் ஏறினாலும்உச்சத்தை அடைந்தார். லக்னாதிபதி எங்கிருந்தாலும் நன்மையைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இவருடைய குடும்ப வாழ்வு நன்றாக அமைந்து இருக்கும்.

    ஐந்தாம் இடத்துக்கு 9ம் இட பாகியாதிபதி சூரியனின் பார்வைகிடைக்கிறது.
    ஐந்தாம் இடத்து அதிபதியான செவ்வாயுக்கு குருவின் பார்வை.குருவே புத்திரகார‌கன் ஆனதால் குழந்தைப்பேறு உண்டு.மாந்தியால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், 5ம் அதிபதி 12ல் மறைந்த‌தாலும் குழந்தைகளால்
    மனநிறைவு இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை உண்டு.

    ஏழாம் அதிபன் புதன் 12ல் மறந்தாலும் சுக்கிரன், செவ்வாயின் கூட்டணி
    குருவின் பார்வை ஆகியவை திருமணத்தை நடத்திவைத்துஇருப்பார். சிறிது தாமதித்த திருமணம்.27,28 வயதில் திருமணம் நடந்திருக்கும் திருமணம்
    நீண்ட காலம் நீடித்து இருக்கும்.மாந்தியின் பாதிப்பு சலனங்களை ஏற்படுத்தி இருக்கும் ஆனாலும் சமாளித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  26. வணக்கம்.

    1ம் பாவம்

    லக்கினாதிபதி, 8ம் அதிபதி பரிவர்த்தனை. சகட யோகம். 8ம் அதிபதி லக்கினத்தில் உள்ளதால் ஆரோக்ய பிரச்னை இருக்கும். லக்கினத்தில் சனி உள்ளதால் கோபம், பிடிவாதம் இருக்கும்.

    2ம் பாவம்

    2ம் அதிபதி அவ்வீட்டிற்கு 12ல். குருவின் 7ம் பார்வை. வாக்கு, தன ஸ்தானம் பாதி பலத்துடன் உள்ளது.

    5ம் பாவம்
    5ம் அதிபதி, 7,11ம் அதிபதிகளுடன் 12ம் வீட்டில், மாந்தியுடன். குருவின் 5ம் பார்வை நல்ல விஷயம். 5ம் அதிபதி தன் வீட்டிற்கு 8ல்.பூர்வ புண்ணியம் சுமார்.

    7ம் அதிபதி, 12ம் அதிபதி, மாந்தியுடன் 12ல். 7ஐ சனி , 8ம் அதிபதி பார்வை. திருமணம் இருக்காது.

    அன்புடன்,

    ராதா --

    ReplyDelete
  27. Respected Sir,

    My answer for our today's Quiz No.19:-

    The given Native was born on 14.11.1931 at 11:00am

    1. She was black beauty, looks like matured and having bad character.

    2. Has money to run the life.(Neither rich nor poor)

    3. Her marriage had denied.

    4. She has not blessed child because of third point.

    FIRST HOUSE: In langna, Moon is sitting along with saturn. Hence she is beauty with black complexion and looks like matured. Her character is bad due to moon as eighth house authority alongwith saturn. Her life will be struggling due to Jupiter and moon exchanged since moon is eighth house lord (inimical place authority) and getting more power than Jupiter. This is because of Thainya Exchange (Thainya parivarthani). Jupiter (lagna lord) is sitting in eighth house lonely and not getting any good planet aspects. This horoscope is in kala sarpa dhosa and Rahu is leading the front.Second part of her life will be under trouble since all planets are hemmed between rahu and kethu from 10th to 1st house. She has long life since life authority Saturn is sitting in Lagna alongwith eighth house lord and lagna lord is sitting in eighth house as exalted position.

    2. SECOND HOUSE: She has completed her schooling due to Jupiter aspects Mercury and second house, also has sufficient money since Jupiter aspects second house as its seventh house and second house lord sitting in langna.

    3. SEVENTH HOUSE: Her marriage had denied because of seventh house lord and kalathrakaraga is sitting in Twelfth house alongwith twelfth house lord, Mandhi and seventh house receives eighth house lord (moon) and Saturn (Third house lord) aspects. Her character also bad due to Rahu is sitting in fourth place, Twelfth house lord aspects forth house as its forth aspect, Mars and Venus cojoined along with seventh lord. Hence she is weak in sex. This leads to have many boy friends. Dhasa periods (1/12 and 6/8 position) are also not supported for her marriage. The authority of House of benefit also debilitated in eleventh house and eleventh house authority is in Twelfth house ( house of loss) Seventh house authority(Mercury) and Kalathra karaga (venus)are in Baba kathri yoga (bad sign). lagna lord, seventh house lord, Ninth house lord are not in good position.Moon doesn't get Jupiter's aspect.

    FIFTH HOUSE: She has not blessed for child due to not married. Fith house authority is sitting in Twelfth house in Baba kathri yoga(bad sign)alongwith Mandi.

    In short, in this horoscope, Thainya exchange of Moon and Jupiter gave trouble to the native. On the other hand, The Same Jupiter is in exalted position and aspects Mars, Mercury, Venus and Mandhi as its Fifth aspect and Second house as its seventh aspect and Fourth house as its ninth aspect. It gave withstanding power to the native.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  28. லக்னாதிபதி உச்சம், 8-மிடத்தில் மறைவு . மறைமுக யோகம்.

    லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி லக்னத்தில்.(குரு சந்திரன் பரிவர்த்தனை 6-8 பரிவர்த்தனை) சுப பரிவர்த்தனை அல்ல.

    லக்னத்தில் சனி சந்திரன். அழகான தோற்றமுடையவர். சற்று குள்ளமானவர். தெளிவான சிந்தனை இல்லாதவர் .

    2-மதிபதி 8-மாதிபதி சேர்க்கை லக்னத்தில். 2-மிடத்தை குரு பார்க்கிறார். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    5-மாதிபதி 12-ல் மறைவு. புதன் -சுக்கிரன் சேர்க்கை, குரு பார்வை காரணமாக குழந்தை உண்டு.

    7-ம் அதிபதி 12-ல் ,காதல் திருமணம் தோல்வியில் முடிந்து விவாகரத்து ஆகி இருப்பார்.

    சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கை காதல் திருமணத்திற்கு உகந்த சேர்க்கை.

    ReplyDelete
  29. ஜாதகி 14.11.1931 சுமார் காலை 10.00 மணி அளவில் பிறந்திருப்பார்.


    1. இலக்கினம் சந்திரன் / சனி

    அழகானவர், மாநிறம் உடையவர்,லக்கினாதிபதி குரு என்பதால் ஆசிரியர்,10ல் கேது இருப்பதால் இசை துறை ஆசிரியர் அல்லது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தொழில்.

    சனி தலமை தாங்கும் தகுதியை கொடுக்கும், சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கை
    வறுமையில் உழல்வார், கஉஷ்ட ஜீவனம்.

    இலக்கினாதிபதி குரு உச்சமாக இருந்தாலும் 8மிடம் மறைவு ஸ்தானம் என்பதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு,சொகுசாக இருக்க முடியாது.


    2. 2மிடம் சனி பணம் கொடுத்தாலும் அது இழக்கக்கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்துவார், ஏனெனில் 11மிடம் அமர்ந்துள்ள கிரகம் .சூரியன் நீசம். அதனால் வரும் பணம் ஏதாவது வழியில் செலவு ஆகி விடும்.

    3. 5மிடம் அதிபதி 12ல் மறைவு, புத்திரகாரகன் 8ல் மறைவு மேலும் லக்கினாதிபதி 8ல் இருப்பதால் அங்கக்குறைபாடு இருக்கலாம். குழந்தை இருக்காது.(திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை) தத்து பிள்ளை இருக்கும்.

    5. 7மிடம் புதன் 12ல் மறைவு,குரு,சுக்கிரன் மறைவு 3 சுப கிரகங்கள் மறைவு இடங்களில் இவை திருமணத்திற்கு எதிரான அமைப்பு. எனவே திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பலருடன் பழகும் குணம். வாழ்க்கை பிரச்சனை நிறைந்தது.
    சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள்.

    12 th place maandhi
    மொத்தத்தில்
    இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.


    Regards
    J.Dhanalakshmi

    ReplyDelete
  30. அன்புடன்
    வாத்தியார் அய்யா வணக்கம் '

    1.லக்னம் தனுசு அதிபதி குரு 8இல் உச்சம் ..ஆகவே உடல் &உயிர் நலமுடன் இருக்கும்.

    2, 2மிடம் மகரம் சனி அதிபதி அவன் 12 இல் மறந்து போனான் ஆனாலும் உச்சம் பெற்ற குரு 7ம் பார்வை பார்ப்பதால் குடும்பம் கண்டிப்பாக உண்டு ..
    3.7ம் வீடு அதிபதி புதன் 12ல் விரயம் ஆனாலும் சுபரான சந்திரன் பார்வை.. ஆகவே திருமண வாழ்க்கை உண்டு திருமணம் ஆகி இருக்கும்.
    4...5 மிடம் மேஷம் அதிபதி செவ்வாய் .12 இல் விரயம் 5ம் வீட்டை
    சுபர்கள் யாரும் பார்கவில்லை ...ஆகவே குழந்தை பாக்கியம் இல்லை..

    ReplyDelete
  31. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம் 1.துரதிர்ஷ்டம் உள்ள ந‌ற்குணமில்லாத சராசரி தோற்றம் பார்வை கோளாறு உள்ளவர்.
    2.ஏழ்மை வறுமையில் உழலக்கூடியவர் குடும்பம் பிரச்சனை உள்ள ஜாதகர்
    3.புத்திர பக்கியம் அற்றவர்
    4.கணவருடன் சுமூகமான உறவினை ஏற்படுத்தி கொள்ளமுடியாமல் கசந்த‌ வாழ்க்கையினை அனுபவித்தவர்
    அ. லக்னாதிபதி 8க்கு உரியவனுடன் பரிவர்தனையடைந்த‌துடன் லக்னத்தில் சனியின் அமர்வு துர்பலனை கொடுத்தது. லக்னம் சுபர் பார்வையற்று உள்ளது.
    ஆ.2க்கு 12 ல் அதன் அதிபதி அமர்ந்த்துடன் பாக்யாதிபதி நீச்சம் பெற்றார்.
    11 ம் அதிபதி விரைய ஸ்தானத்தில் மறைந்தார்.கை இருப்பும் கரையும்.
    இ.புத்திரகாரகன் 8ல் மறைந்து 8க்கு உரியவனின் சாரத்தில் நின்றதால் ப‌த்திர‌
    பாக்கியம் இல்லை
    ஈ.களத்திரகாரகனும் களத்திரஸ்தானாதிபதியும் 12ல்மறைந்த‌து. சுபர் பார்வயினால் தாமத‌ திருமணம் ஆனாலும் அது நீடித்திருக்காது பிரிவினை ஏற்படுத்தியது
    கெடு பலன் நிறைந்த ஜாதகம் என்று உணர முடிகிறது. எனினும் என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்திருக்கிறேன் ஐயா. நன்றி ரகுபதி.ல‌

    ReplyDelete
  32. நானும் சரியான விடைக்காக காத்திருக்கிறேன் ஐயா... எனக்கு ஜாதகம் பற்றி தெரியாது...

    ReplyDelete
  33. குருவிற்கு வணக்கம்,
    லக்கினம்,
    ஜாதகர் அழகானவ்ர் ஏனெனில் லக்னத்தில் சந்திரன், தனித்து நிற்கும் திறம் படைத்தவர் ஏனெனில் லக்னாதிபதி குரு எட்டில் இருந்தாலும் உச்சமாக உள்ளார் இருப்பினும் சுயநலமிக்கவர். ஏனெனில் லக்னத்தில் சந்திரன் சனியுடன் சேர்ந்துல்லான்.
    இரண்டாம் வீடு,
    நல்ல குடும்ப வாழ்க்கை இருக்கும் மற்றும் சுயமாக சம்பாதித்து முன்னேரகூடியவர் ஏனெனில் 2க்குடைய சனி லக்னத்தில் அத்தோடு இரண்டாம் வீடு குருவின் பார்வையில். நல்ல பணம் வரவு இருக்கும்.
    ஐந்தாம் வீடு,
    தாமதமாக இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு ஏனெனில் 5க்குடைய செவ்வாய் 12ல் இருந்தாலும் அவர் ஆட்சி பலம் பெற்றுள்ளார் காரகன் குரு எட்டில் இருந்தாலும் உச்சமாக உள்ளார். இருப்பினும் மன சஞ்சலம் உள்ளவர் ஏனெனில் 5க்குடைய செவ்வாய் மாந்தியுடனும் காரகன் சந்திரன் சனியுடனும் சேர்ந்து உள்ளார்கள்
    ஏழாம் வீடு,
    7க்குடைய புதன் 12ல் மற்றும் காரகன் சுக்கிரன் 12ல் தாமதமாக திருமணம் நடந்திருக்கும் ஏனெனில் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம் நன்றாக உள்ளது மற்றும் திருமணதிற்கு பிறகு வெளிநாட்டில் வசிப்பவர் ஏனெனில் 7க்குடைய புதன் 12ல்.

    ReplyDelete
  34. அழகான நன்கு படித்த பெண்.திருமணம் நடந்திருக்காது.ஆனால் வயது குறைந்த ஆணுடன் உறவு இருந்திருக்கலாம்.இப்போது முறிந்து இருக்கும்.

    ReplyDelete
  35. சரியான விடைகள் - அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:

    சரியான பதில்கள்:
    1. ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்
    2. பணக் கஷ்டம் உடையவர்.
    3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.
    4. திருமணமானவர்.
    5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.
    6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு!

    ஓரளவு 4 அல்லது 5 விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:

    1. திரு.சந்திரசேகரன்.
    2. Redfort, Tirupur
    3. திரு.ஜி.முரளி கிருஷ்ணா
    4. திரு, பழனிசண்முகம்
    5. திருமதி சுசீலா கந்தசாமி
    6. திரு.Kmr.Krishnan, Lalgudi

    இவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

    அதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!!!

    அன்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete
  36. சரியான விடைகள் - அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:

    சரியான பதில்கள்:
    1. ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்
    2. பணக் கஷ்டம் உடையவர்.
    3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.
    4. திருமணமானவர்.
    5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.
    6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு!

    ஓரளவு 4 அல்லது 5 விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:

    1. திரு.சந்திரசேகரன்.
    2. Redfort, Tirupur
    3. திரு.ஜி.முரளி கிருஷ்ணா
    4. திரு, பழனிசண்முகம்
    5. திருமதி சுசீலா கந்தசாமி
    6. திரு.Kmr.Krishnan, Lalgudi

    இவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

    அதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!!!

    அன்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com