மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.12.09

Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

-----------------------------------------------------------------
Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் நான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.15
சுபஸ்ரீ கண்ணன்

Sir,
My doubt is,
Will our natalchart/horoscope reflect out previous jenma karma? i mean based on our previous jenma karma only our natal birth chart will appear?
Thanking you sir,
Sincerely yours,
K.Subhashree

எல்லாக் குழந்தைகளுமே தாயின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. அதில் வித்தியாசமில்லை. ஆனால் பிறப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள். ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ரஜினி வீட்டில் அல்லது அம்பானி வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை கூலிவேலை செய்யும் தொழிலாளி வீட்டில் பிறக்கிறது.ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எல்லாம் இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எதுவும் இல்லை.(பெற்றவள் குப்பைத் தொட்டியில்
வீசிவிட்டுப் போய் விடுகிறாள்) ஒரு குழந்தை அழகோடு பிறக்கிறது. ஒரு குழந்தை அழகில்லாமல் பிறக்கிறது. ஒரு குழந்தை புஷ்டியான தோற்றத்துடன், பார்ப்பவர்களை மயக்கும் விதமாகப் பிறக்கிறது. ஒரு குழந்தை சற்று
ஊனத்துடன் பிறந்து பெற்றவர்களைத் துயரப்பட வைக்கிறது. இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? முன் வினைப்பயன்தான் காரணம்!

முன் வினைப்பயனைத்தான் பூர்வ புண்ணியம் என்று ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டைக் காட்டுவார்கள். அதில் ஒன் லைன் ஸ்டோரிதான் தெரியும். முழுப்படமும் தெரியாது. அதாவது ஜாதகனின் சென்ற பிறவி வரலாறு
22 ரீல்களில் படமாகத் தெரியாது.

ஏன் தெரியாது? தெரிந்தால் ஜாதகன் தன் போன ஜென்மத்து உறவுகளைத் தேடிப்போய்விடுவான். பழைய சேட்டைகளை மீண்டும் தொடர்வான்:-))))

ஒரு பிறவித் தொடர்புகளே தாங்க முடியவைல்லை. இரண்டு பிறவித் தொடர்புகளும் மனிதனுக்கு இருந்தால் என்ன ஆகும்? கடவுள் கருணை மிக்கவர். அதனால் தான் அதைக் காட்டாமல் மனிதனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளார்.

இப்போது சொல்லுங்கள். பிறவியே முன் வினைப் பயனை வைத்துத்தான் எனும்போது, ஜாதகமும் அதைவைத்துத்தானே அமையும்?
--------------------------------------------------------
email No.16
பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்

1. Can you please let me know what is Vargothama Yogam? Am I right in this question. Is there any such yog. If so , what are the effects of the same please. Is it something related to moon in seventh house from lagna or viceversa. I have already studied your lesson on Vargotham which has something to do with Navamsam..

குழப்புகிறீர்களே? வர்கோத்தமம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கடைசிவரியில் வர்கோத்தமம் பாடத்தைப் படித்தேன் என்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? ஏன் இந்தக் குழப்பம்? பாடத்தை மீண்டும் படியுங்கள்.

2. I note the lessons on House 10 etc are reproduction from Lessons in 111 to 120. Is that right?

அதில் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. இரண்டையும் பிரின்ட் அவுட் எடுத்து ஒத்துப் பாருங்கள். தெளிவாகும்!

3. My wife is just house wife, but has 35 parals in tenth house (Rishaba). and her 10th house lord (venus) has 7 parals. But she is just housewife and of average I Q. Saturn has 5 parals. Does that mean will she shine in profession, if she goes for job or if she does any business or if she does share trade by herself. (DOB 14.08.1973 at 7.15 am chennai.)

உங்கள் மனைவி சிம்ம லக்கினம். பத்தாம் வீட்டின் இருபுறமும் செவ்வாய், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுத்துள்ளன. அதனால்தான் 36 வயதாகியும், ஜாதகத்தில் பத்தாம் வீடு வேறு மேட்டர்களில் நன்றாக இருந்தும் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை! அதோடு பத்தாம் அதிபதி சுக்கிரன் நீசமடைந்துள்ளார். அதிபதியும் முக்கியம்.

இது பொதுக்கேள்விக் கணக்கில் வராது. இருந்தாலும் பதில் அளித்துள்ளேன்

4. I have written this query in my earlier email also, but not received any reply and is reproduced below.You had described benefits or results of Sun being in various houses. You have also described benefits of lord of each house from lagna, placed in various houses.

To quote an example, when sun in 5th house, you have listed some items.

For a person with Midhuna Lagna, Sun being Lord of 3rd house, positionined in 5th house(alone), you have described certain items.

They go in contradiction. In former, it says the person will have small family. In the latter, it is mentioned that the person will have big family. I find the former one was matching in all items with the sample jathakam(It is mine with Guru in Lagna and also in Navamsa) I have chosen. If I adopt the former, can I reject it latter completely or will the latter also become true at some other point of time. Please explain which narration is predominant.

நீங்கள் படித்த அந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கான பாட எண் அல்லது சுட்டியைக் (Link) கொடுங்கள். படித்துப்பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்

I find this may be the case with other planets also. I will be glad if you can teach me how to interpret, when we find or come across contradictions. Kindly excuse me if it is primitive or if I have missed your explanations if any in other parts of the lessons.

ஜாதகத்தை அலசுவது எப்படி (how to interpret) என்பது மேல் நிலைப் பாடம். பின்னால் அது வரும். பொறுத்திருந்து படியுங்கள்

5. I am going through the lessons only and do not read the comments posted for each lesson. Is there any way to give summary of important points given by you in the comment of portion of each lesson. Otherwise I have to go through comments portion separately.

பின்னூட்டங்களைப் படிப்பதில்லை என்கிறீர்கள். அதை (முக்கியமான பகுதிகளாக) தொகுத்துத்தர வழி உண்டா என்று கேட்கிறீர்கள். உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

6. Would also appreciate if you can give the date on which your books will be released.

புத்தகத் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. பாடங்களை ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டு உள்ளது. அது முடிந்தவுடன், அச்சாகி வரும். அச்சான பிறகு முறையான அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள்

Hope I will have answers to the above questions. I am still going through the lessons on second round. It may require few more rounds to understand.

தெளிவதற்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஒன்றும் குறையாது!

With best regards.
BALASUBRAMANIAN PULICAT
RIYADH.
---------------------------------------
email No.17
மா. திருவேல் முருகன், புது தில்லி.
ஐயா வணக்கம்!

1. ஒரு ஜாதகத்தில் 5ஆமிடத்தில், மாந்தியும் 6ஆமிடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் மன நோய் வரும் என்று நமது வகுப்பறை பதிவில் படித்தேன். அதேபோல், ஒரு ஜாதகனுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வருவதற்கு என்ன காரணம்? அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும்? அல்லது தீரவே தீரதா? (தயவு செய்து இந்த கேள்விக்கும் பதில் தரவேண்டுகிறேன், குருதேவா...Please...)

Epilepsy can be cured. Since Epilepsy is a disoreder related with head & according to Vedic Astrology Moon governs head.A chronic functonal disease of the nervous system or impairment of consciousness with foaming in the mouth.This problem generally happens to many people in India. According to medical astrology this can be judged when moon, venus, rahu is badly placed conjuncted or delibilated or saturn & ketu aspected.(one of the reasons). நல்ல வைத்தியரிடம் காட்டச்சொல்லுங்கள். அதோடு முழுமனதுடன், நம்பிக்கையுடன் வைத்தீஸ்வரன் கோவிலில் உறையும் வைத்தியநாதனைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள். குணமாகும்!

2. மாந்திக்கும் பார்வைகள் உண்டா? உண்டென்றால், எந்தெந்த இடங்கள்?

மாந்திக்குப் பார்வை கிடையாது. வேறு கிரகங்களின் பார்வைகளையும் அது ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் உள்ள சில ஜோதிடர்கள் மாந்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை! கேரள ஜொதிடர்கள் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாந்தி தான் இருக்கும் வீட்டின் பலன்களைக் கெடுத்துவிடும். Mandhi is supposed to cause flop results in the house it is residing in

3. ஒரு ஜாதகத்தின் நவாம்சத்தில், 7ஆமிடம், சுக்கிரன் இரண்டுமே கெட்டிருந்தால் எந்த மாதிரியான மனைவி அமைவாள்?

உங்களின் மனமும், குணமும் நன்றாக இருந்தால், எந்த மனைவி வந்தாலும் அது ஒன்றுதான். வருகிறவள் தேவதையாக (angel) இருந்தாலும் சரி, அல்லது பிசாசாக (devil) இருந்தாலும் சரி நீங்கள் அவளை வித்தியாசமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஏழாம் இடமும், சுக்கிரனும் கெட்டிருந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது திருமணமே ஆகாமல் போகலாம்.

ஏழாம் இடத்து அதிபதி, அவருடன் சேர்ந்திருப்பவர்கள், அவர் பெறும் பார்வையை வைத்துத்தான் மனைவி அமைவாள். ஆகவே அவற்றைப் பாருங்கள்.

ஒரு ஞானி சொன்னான்:

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.

4. லக்கினத்திலிருந்து 7ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெரும்போது "ருச்சக யோகம்" உண்டாகிறது. இந்த ஜாதகன்/ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக்கு உண்டா? இல்லையா?

ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு, செவ்வாய் தோஷம் கிடையாது. சில ஜோதிடர்கள் 7 & 8ல் செவ்வாய் இருந்தால், அது எவ்வளவு உயர்வான அமைப்பில் இருந்தாலும் தோஷம் உண்டு என்பார்கள். அவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்வார்கள். ஆகவே ரிஸ்க் எடுக்காமல் இருக்க நினைப்பவர்கள், அதற்குத்
தகுந்தாற்போல செவ்வாயைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்!

தங்களின் மேலான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன், புது தில்லி.

விளக்கங்கள் போதுமா திருவேல் முருகன்?
---------------------------------------------------------
email No.18
மதி

இது என் கேள்விகள்,

1. லக்கினத்தில் குரு இருந்தால் மிக நன்மை என்று கூறி உள்ளீர்கள் ஆனால் அதே
குரு(சுயபரல் 5 )வக்கிரமாக இருந்தால் குரு (4,7க்கு உடையவன்) ,உடன்
வக்கிர பெற்ற சனி( சுயபரல் 2), வீட்டின் பரல் 29, சனி (5,6க்கு உடையவன்).
குருவால் நன்மை அதிகமா அல்லது சனியால் தீமைதான் மிஞ்சுமா...?

பாதாம் அல்வாவையும், மிளகாய் பஜ்ஜியையும் கையில் வைத்துக்கொண்டு, இரண்டையும் சாப்பிட்டால் எதன் சுவை மிஞ்சும் என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி. குருவின் தசா/புத்தியில் அதன் காரகத்துவம் என்னவோ அதன்படி பலன் நடக்கும். சனிக்கும் அப்படித்தான். ஒரு சமயத்தில் ஒரு சானல்தான் ஓடும். ஆகவே பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பாருங்கள். படம் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி எழுந்து போக முடியாது. ஆகவே பொறுமையாகப் பாருங்கள் (எதிர்கொள்ளுங்கள்). மிளகாய் பஜ்ஜி சாப்பிடும்
போது விக்கல் வந்தால், மினரல் வாட்டர் 337ல் ஒரு தம்ளர் குடியுங்கள்! எல்லாம் சரியாகிவிடும்!

2 திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம் திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின்
வாழ்கையில் தாக்கத்தை எற்படுத்துமா? (உதாரணம் 5 ராகு: புத்திரபாக்கிய தடை)
காரணம் மணப்பத்திரிக்கையில் லக்கினம் (முக்கியத்துவம் கொடுக்கபட்டு)
உள்ளதே.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதானே நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் பார்த்துத் திருமணத்தை நடத்துகிறார்கள். பிறகு அதையும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அப்புறம் உங்களுடைய பிறப்பு ஜாதகத்திற்கு என்ன மதிப்பு?

திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவே குழம்பாதீர்கள். உங்கள் Birth Chart ஒன்று போதும். மற்றதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்.

Okayயா?
-------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

43 comments:

  1. பதில்கள் செம்மையாகவும் சிற‌ப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கின்றன‌. அந்தக்காலத்தில் வாரப்பத்திரிகையில் தொடர்கதையைக் காத்திருந்து படித்ததைப் போலவும், இந்தக்காலத்தில் மகளிர் மெகா சீரியலுக்குக் காத்திருப்பதை போலவும், காலை 4 மணியில் இருந்து காத்திருந்து வாசித்தேன். அருமை.அருமை!
    என் வயதினால் ஏற்பட்ட உரிமையில் சொல்கிறேன். மன்னிக்க வேண்டும்.
    நகைச்சுவைக்குப்பின்னால் கொஞ்சம் சலிப்பு,பொறுமை இழப்பு, எரிச்சல்
    தலை தூக்குகிறது.இது உங்கள் இயல்பு அல்லவே! கூடுதல் பணிச் சுமையா?
    வேறு ஏதேனும் கவனத்தைச் செலுத்த வேண்டிய முக்கியப் பணிகளா?

    ReplyDelete
  2. வணக்கம்..

    உங்களுக்கு தலைப்பு வைப்பதற்கு சுலபமாகவே நண்பர்கள் கேள்விகளை கேட்டுவிடுகின்றனர், என்னசொல்வது

    கலக்குங்க...

    வாழ்கவளமுடன்

    ReplyDelete
  3. அய்யா இனிய காலை வணக்கம்,

    இந்த கேள்வி பதில் பாகம் பிரமாதம் ..அதிலும் பாதம் அல்வா ,மிளகாய் பஜ்ஜி ...337 பிசிலரி வாட்டர் எல்லாம் அருமை .....நன்றி வணக்கம்,,,,

    ReplyDelete
  4. பப்பா!!!

    நமஸ்காரம்!!!!!!!!!!!!!!!!!!

    " காக்கைக்கும் தன் குஞ்சு,

    பொன் குஞ்சு போல !" என்று

    முத்தமிழ் ! அறிந்த சான்றோர் அன்றே சொல்லி உள்ளார்களே மாஷ்சே !!!

    ஆகையால் !

    உற்ற தாயும் நீயே!

    உற்ற தந்தையும் நீயே!

    உற்ற மாமியும் நீயே!

    உற்ற மாமனும் நீ(ங்களே )யே!

    தான் !!!

    ReplyDelete
  5. இன்று முகர்ரம் நாள். இது ஒரு தியாகத் திருநாள்.ந‌மது சீராளன் கதை போல‌
    தந்தை தன் மகனயே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்த நாள்..இஸ்லாமியச்
    சிறுவர்கள்/சிறுமியருக்கு இம்மையைக் காட்டிலும் மறுமை என்ற சொர்கபுரியில் கிடைக்கப்போகும் இன்பஙளைச் சொல்லிச் சொல்லி உயிரைத் திரணம் என நினைக்கும் ம்னப்பாங்குக்கு வலுசேர்க்கும் நாள் முகர்ரம்.


    பாரதீயர்களைப் போலவே அராபியர்களும் வானவியலில் பல நூற்றாண்டுகளாகவே ஈடுபாடு கொண்டு இருந்தனர்.மெக்காவே உலகின் மையம் என்பது அவர்கள் நம்பிக்கை.(பந்து போன்ற உலக அமைப்பில் எல்லாப் புள்ளிகளுமே மையம் தான் என்பது வேறு விஷ‌யம்)
    மெக்காவில் உள்ள காபா அமைப்பைச் சுற்றி 360 தெய்வ உருவஙகளின்
    சிலைகள் இருந்தனவாம்.சிலை வழிபாட்டைத் தீவரமாகக் கண்டித்த இஸ்லாம்
    இறைத்தூதர் மகமது(அவர் மீது சாந்தி நிலவட்டும்)தலைமையில் மெக்கா மீது படை எடுத்துச் சென்று சிலை வழிபாட்டுக்கார‌ர்களைப் பணிய வைத்து
    359 சிலைகளை உடைத்து எறிந்தார்கள்.நிற்க.


    சொல்ல வந்த செய்தி என்னவென்றால் அங்கே இருந்த சிலைகள் எண்ணிக்கை 360. காபா என்ற செவ்வக கனபரிமாண‌முள்ள புனித அறையைச் சுற்றி வட்ட வடிவம் உள்ளது. வானவியல் ஆய்வு நிலையமாக அந்த இடம் இருந்து இருக்கலமோ?ஒரு நாளைக்கு ஒரு சிலை அல்லது ஒரு டிகிரிக்கு ஒரு சிலை கணக்கில் அமைக்கப்பட்டிருக்கலாமோ? அல்லாவுக்கே வெளிச்சம்!
    இன்ஷா அல்லா! மாஷா அல்லா!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

    ReplyDelete
  6. ////kmr.krishnan said...
    பதில்கள் செம்மையாகவும் சிற‌ப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கின்றன‌. அந்தக்காலத்தில் வாரப்பத்திரிகையில் தொடர்கதையைக் காத்திருந்து படித்ததைப் போலவும், இந்தக்காலத்தில் மகளிர் மெகா சீரியலுக்குக் காத்திருப்பதை போலவும், காலை 4 மணியில் இருந்து காத்திருந்து வாசித்தேன். அருமை.அருமை!
    என் வயதினால் ஏற்பட்ட உரிமையில் சொல்கிறேன். மன்னிக்க வேண்டும்.
    நகைச்சுவைக்குப்பின்னால் கொஞ்சம் சலிப்பு,பொறுமை இழப்பு, எரிச்சல்
    தலை தூக்குகிறது.இது உங்கள் இயல்பு அல்லவே! கூடுதல் பணிச் சுமையா?
    வேறு ஏதேனும் கவனத்தைச் செலுத்த வேண்டிய முக்கியப் பணிகளா?//////

    பதிவை வலை ஏற்றிய நேரத்தைப் பாருங்கள். காலை மணி 3:56. பாடங்களைச் சிலர் சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறார்களே என்று சில சமயங்களில் வருத்த உணர்வு மேலிடுவது உண்டு. மற்ற உணர்வுகள் வராது. ஏனென்றால், இந்த வாத்தியார் பணியை நானாக விரும்பி ஏற்றுச் செய்கிறேன் கிருஷ்ணன் சார்.
    அப்படி ஏதாவது தெரிந்தால் எழுத்து வீச்சில் உள்ள குறைபாடு. மன்னிக்கவும்!

    ReplyDelete
  7. ////Blogger Success said...
    வணக்கம்..
    உங்களுக்கு தலைப்பு வைப்பதற்கு சுலபமாகவே நண்பர்கள் கேள்விகளை கேட்டுவிடுகின்றனர், என்னசொல்வது? கலக்குங்க...
    வாழ்கவளமுடன்/////

    தலைப்புக்கள்தான் புதியவர்கள் பலரையும் இங்கே இழுத்துக்கொண்டு வந்துள்ளது.வருகிறது.

    ”தலைப்பை நன்றாகப்போடு
    தானாக வருவார்கள்”

    என்று துவக்கத்தில் நான் ஒரு பாட்டு எழுதினேன். அதை நானே கடைபிடிக்காவிட்டல் எப்படி?

    ReplyDelete
  8. ////Blogger astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    இந்த கேள்வி பதில் பாகம் பிரமாதம் ..அதிலும் பாதம் அல்வா ,மிளகாய் பஜ்ஜி ...337 பிசிலரி வாட்டர் எல்லாம் அருமை .....நன்றி வணக்கம்,,,,////

    உதரணங்கள் எல்லாம் உங்களுக்காகத்தான். அப்போதுதானே படிப்பதற்கு சுவையாக இருக்கும்!

    ReplyDelete
  9. ////Blogger kannan said...
    பப்பா!!! நமஸ்காரம்!!!!!!!!!!!!!!!!!!
    " காக்கைக்கும் தன் குஞ்சு,
    பொன் குஞ்சு போல !" என்று
    முத்தமிழ் ! அறிந்த சான்றோர் அன்றே சொல்லி உள்ளார்களே மாஷ்சே !!!
    ஆகையால் !
    உற்ற தாயும் நீயே!
    உற்ற தந்தையும் நீயே!
    உற்ற மாமியும் நீயே!
    உற்ற மாமனும் நீ(ங்களே )யே!
    தான் !!!////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  10. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    நன்று அய்யா, நீங்கள்ச் செய்யும் இப்பணி,
    இனியப் பணி: பழனியப்பனின் அருளால்
    தங்களிடம் இருந்து
    தினமும் கிடைக்கிறது
    சுவையான முக்கனி.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர். 1121


    வள்ளுவர் சொன்ன அந்தச் சுவை
    (வாய்த்தது எதுவானாலும்)
    " மனமும் குணமும் கொண்டவருக்கே"
    என்ற உங்கள் விளக்கம் அருமை.
    மி-அஞ்சல் 17 கேள்வி எண் 4 எனக்கு உபயோகம்.
    அதேபோல்
    மி-அஞ்சல் 18 கேள்வி எண் 1 எனக்கு உபயோகம்

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  11. /////kmr.krishnan said...
    இன்று முகர்ரம் நாள். இது ஒரு தியாகத் திருநாள்.ந‌மது சீராளன் கதை போல‌
    தந்தை தன் மகனயே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்த நாள்..இஸ்லாமியச்
    சிறுவர்கள்/சிறுமியருக்கு இம்மையைக் காட்டிலும் மறுமை என்ற சொர்கபுரியில் கிடைக்கப்போகும் இன்பஙளைச் சொல்லிச் சொல்லி உயிரைத் திரணம் என நினைக்கும் ம்னப்பாங்குக்கு வலுசேர்க்கும் நாள் முகர்ரம்.
    பாரதீயர்களைப் போலவே அராபியர்களும் வானவியலில் பல நூற்றாண்டுகளாகவே ஈடுபாடு கொண்டு இருந்தனர்.மெக்காவே உலகின் மையம் என்பது அவர்கள் நம்பிக்கை.(பந்து போன்ற உலக அமைப்பில் எல்லாப் புள்ளிகளுமே மையம் தான் என்பது வேறு விஷ‌யம்)
    மெக்காவில் உள்ள காபா அமைப்பைச் சுற்றி 360 தெய்வ உருவஙகளின்
    சிலைகள் இருந்தனவாம்.சிலை வழிபாட்டைத் தீவரமாகக் கண்டித்த இஸ்லாம்
    இறைத்தூதர் மகமது(அவர் மீது சாந்தி நிலவட்டும்)தலைமையில் மெக்கா மீது படை எடுத்துச் சென்று சிலை வழிபாட்டுக்கார‌ர்களைப் பணிய வைத்து
    359 சிலைகளை உடைத்து எறிந்தார்கள்.நிற்க.
    சொல்ல வந்த செய்தி என்னவென்றால் அங்கே இருந்த சிலைகள் எண்ணிக்கை 360. காபா என்ற செவ்வக கனபரிமாண‌முள்ள புனித அறையைச் சுற்றி வட்ட வடிவம் உள்ளது. வானவியல் ஆய்வு நிலையமாக அந்த இடம் இருந்து இருக்கலமோ?ஒரு நாளைக்கு ஒரு சிலை அல்லது ஒரு டிகிரிக்கு ஒரு சிலை கணக்கில் அமைக்கப்பட்டிருக்கலாமோ? அல்லாவுக்கே வெளிச்சம்!
    இன்ஷா அல்லா! மாஷா அல்லா!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!////

    எனக்கு இந்த செய்தி புதியது. நன்றி.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதில் ஒரு சந்தேகமில்லை.நன்றி!

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், நன்று அய்யா, நீங்கள்ச் செய்யும் இப்பணி,
    இனியப் பணி: பழனியப்பனின் அருளால் தங்களிடம் இருந்து தினமும் கிடைக்கிறது
    சுவையான முக்கனி.
    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர். 1121
    வள்ளுவர் சொன்ன அந்தச் சுவை (வாய்த்தது எதுவானாலும்)
    " மனமும் குணமும் கொண்டவருக்கே" என்ற உங்கள் விளக்கம் அருமை.
    மி-அஞ்சல் 17 கேள்வி எண் 4 எனக்கு உபயோகம். அதேபோல்
    மி-அஞ்சல் 18 கேள்வி எண் 1 எனக்கு உபயோகம்
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    பதில்கள் பலருடைய மனதில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உற்சாகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. //திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
    பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
    மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
    மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
    வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
    டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
    என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.
    //

    :) :)

    ReplyDelete
  14. உள்ளேன் ஐயா.
    இன்றைய கேள்விகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. (மன்னிக்க வேண்டும் ஐயா)
    சேர்மராஜ்

    ReplyDelete
  15. இன்று வைகுண்ட ஏகாத‌சியும் கூட. அதை நினைவாவது படுத்தலாமே எனறு
    மீண்டும் வந்தேன். திரு ஆதிரை, வைகுண்ட ஏகாதசி, கிரிஸ்துமஸ், முகர்ரம்
    எல்லம் இந்தக் குளிர்காலத்திலேயே வருகிறதே!

    ReplyDelete
  16. Good morning sir,
    நல்ல கேள்வி, பதில்கள்!!! நகைச்சுவையாகவும் இருந்தது சார்!!! (especially the பாதாம் அல்வா, மிளகாய் பஜ்ஜி, & மினரல் வாட்டர்) !!! உங்கள் பாடங்களை காத்திருந்து படிகிரனான் சார், ஒரு முறை படிக்காவிட்டால், திருப்பி போய் பாத்து படித்து விடுவேன். நீங்கள் எழுதிய ஊர்வசி பாட்டை படிசிவிட்டு, சிரி சிரி என்று சிரிசிட்டன் அப்புறம், மத்த கேள்வி, பதில் நான் கவனமா படிக்கவில்லை. அதுதான் சார் நடந்தது, (sorry again sir) keep up your good work sir, you don't teach us only astrology, but also confidence, and most importantly take it easy policy :-))))))

    ReplyDelete
  17. /////புருனோ Bruno said...
    //திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
    பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
    மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
    மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
    வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
    டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
    என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.
    //
    :) :)////

    வாருங்கள் டாக்டர். உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  18. /////tamiltemples said...
    உள்ளேன் ஐயா.
    இன்றைய கேள்விகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. (மன்னிக்க வேண்டும் ஐயா)
    சேர்மராஜ்///////

    சரி, சிறப்பான, திணறவைக்கும் கேள்விகளை நீங்கள் எழுதி அனுப்பங்கள் சேர்மராஜ்!

    ReplyDelete
  19. /////kmr.krishnan said...
    இன்று வைகுண்ட ஏகாத‌சியும் கூட. அதை நினைவாவது படுத்தலாமே எனறு
    மீண்டும் வந்தேன். திரு ஆதிரை, வைகுண்ட ஏகாதசி, கிரிஸ்துமஸ், முகர்ரம்
    எல்லம் இந்தக் குளிர்காலத்திலேயே வருகிறதே!/////

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று இறைவன் சொல்வாராம். அதனால் எல்லாம் மார்கழியிலேயே வருகின்றன போலும்!

    ReplyDelete
  20. /////Thanuja said...
    Good morning sir,
    நல்ல கேள்வி, பதில்கள்!!! நகைச்சுவையாகவும் இருந்தது சார்!!! (especially the பாதாம் அல்வா, மிளகாய் பஜ்ஜி, & மினரல் வாட்டர்) !!! உங்கள் பாடங்களை காத்திருந்து படிக்கிறேன் சார், ஒரு முறை படிக்காவிட்டால், திருப்பி போய் பாத்து படித்து விடுவேன். நீங்கள் எழுதிய ஊர்வசி பாட்டை படிச்சிவிட்டு, சிரி சிரி என்று சிரிசிட்டேன் அப்புறம், மத்த கேள்வி, பதில் நான் கவனமா படிக்கவில்லை. அதுதான் சார் நடந்தது, (sorry again sir) keep up your good work sir, you don't teach us only astrology, but also confidence, and most importantly take it easy policy :-))))))/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்

    இன்று ஒரே எதுகை மோனை தான்.
    அம்பானி - கூலி வேலைக்காரன் குழந்தை ;
    தேவதை - பிசாசு;
    நல்ல மருமகள் - தத்துவ ஞானி; .
    பாடம் அல்வா - மிளகாய் பஜ்ஜி

    ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரே சமன்பாடு 337 டானிக். அருமை அருமை.

    நம் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. சில கேள்விகள் அவரது பொறுமையை சோதிக்கிறது. ஆசான் பொறுத்து அருளவேண்டும்.
    எல்லோருக்கும் உபயோகமான பதில் வரும் கேள்விகளை தேர்ந்தெடுத்து தான் பதிவிடுகிறார் என்று நினைக்கிறேன்.

    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  22. Dear Sir,

    Thanks for the clarifications.

    Balakumaran

    ReplyDelete
  23. Presents Sir, Thansk for your patient replys

    ReplyDelete
  24. தலைப்பை பார்த்தவுடன் 7மிடத்து பாடம் என்று நினைத்து ஓடோடி வந்தேன் (கொஞ்சம் லேட்டானாலும்...)
    என்றாலும் சுவையே..

    நன்றி ஐயா...

    -கதிரவன்

    ReplyDelete
  25. Vanakkam Ayya,
    your answer for the questions are very nice ayya and in between you have given some parigaram or Viratham to come out of problems or to get more energy to face the problems(not only problems,ANDAVAN Meethulla Bakkthiinal) are pretty nice.in past lessons you told about TUESDAY Viratham for MURUGAP PERUMAN is ultimate.i did it and i got such type of peace (manna amaithi). i kindly request you sir.please teach us more on this ( i Hope you understand this, i don't know how to explain to you.) and pls teach us some mantras to chant, while pooja. hope you will respond for my request.Thank you sir...

    ReplyDelete
  26. உள்ளேன் ஐயா. தேவதையோ பிசாசோ முடிந்தால் அடக்கப் பாருங்கள், முடியாவிட்டால் அடங்கிப் போங்கள். என்ன ஐயா, நான் சொல்வது சரிதானே.

    ReplyDelete
  27. பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  28. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்று ஒரே எதுகை மோனை தான்.
    அம்பானி - கூலி வேலைக்காரன் குழந்தை ;
    தேவதை - பிசாசு;
    நல்ல மருமகள் - தத்துவ ஞானி; .
    பாடம் அல்வா - மிளகாய் பஜ்ஜி
    ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரே சமன்பாடு 337 டானிக். அருமை அருமை.
    நம் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. சில கேள்விகள் அவரது பொறுமையை சோதிக்கிறது. ஆசான் பொறுத்து அருளவேண்டும்.
    எல்லோருக்கும் உபயோகமான பதில் வரும் கேள்விகளை தேர்ந்தெடுத்து தான் பதிவிடுகிறார் என்று நினைக்கிறேன்.
    நன்றி
    வணக்கம்/////

    சிலர் முழுக்க முழுக்க சொந்த ஜாதகத்தை வைத்துப் பல கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அதைத் தவிர்த்து விட்டு, பொதுவாக உள்ள கேள்விகள் அனைத்திற்கும் பதில் எழுதுவதாக உள்ளேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the clarifications.
    Balakumaran

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  30. /////Ram said...
    Presents Sir, Thansk for your patient replys/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  31. //////SUNRAYS said...
    தலைப்பை பார்த்தவுடன் 7மிடத்து பாடம் என்று நினைத்து ஓடோடி வந்தேன் (கொஞ்சம் லேட்டானாலும்...)
    என்றாலும் சுவையே..
    நன்றி ஐயா...
    -கதிரவன்/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  32. /////Arun A. said...
    Vanakkam Ayya,
    your answer for the questions are very nice ayya and in between you have given some parigaram or Viratham to come out of problems or to get more energy to face the problems(not only problems,ANDAVAN Meethulla Bakkthiinal) are pretty nice.in past lessons you told about TUESDAY Viratham for MURUGAP PERUMAN is ultimate.i did it and i got such type of peace (manna amaithi). i kindly request you sir.please teach us more on this ( i Hope you understand this, i don't know how to explain to you.) and pls teach us some mantras to chant, while pooja. hope you will respond for my request.Thank you sir.../////

    சரி, நேரம் கிடைக்கும்போது, மீண்டும் எழுதுகிறேன். நன்றி!

    ReplyDelete
  33. ////ananth said...
    உள்ளேன் ஐயா. தேவதையோ பிசாசோ முடிந்தால் அடக்கப் பாருங்கள், முடியாவிட்டால் அடங்கிப் போங்கள். என்ன ஐயா, நான் சொல்வது சரிதானே.//////

    வேறு வழி?

    ReplyDelete
  34. //////மதி said...
    பதிலுக்கு நன்றி./////

    நல்லது. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  35. நமது சகோதரிகள் யாரும் 7 ம் வீட்டை அலசி தங்கள் துணையை பற்றி கேட்பதில்லை. நல்ல கணவரை இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கைதான். சகோதரர்களே நீங்களும் நமது வாத்தியார் கூறியது போல் இறைவனை நம்பி நிம்மதியாக வாழுங்கள்.

    ReplyDelete
  36. Respected Sir!

    First of all thanks a lot...!

    You are teaching us not only astralogy, but also self-confidence, sincerity, religiosity, dedication, hardwork, optimism and so much... And one more request to you... Please tell us how do you manage your precious time? And what is the secret behind your time compound management? If you don't mind... எத்தனையோ பிரபலங்களின் ஜாதகத்தைப் பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய தாங்கள், தங்கள் ஜாதகத்தைப் பார்க்கும் பாக்கியத்தையும் தருவீர்களா...? என் ஆசை தவறாயிருப்பின் மன்னித்தருள வேண்டுகிறேன்.
    Once again thankyou so much for clarifying my doubts very soon.

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்
    புது தில்லி

    ReplyDelete
  37. ***எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.***

    :-)

    ReplyDelete
  38. /////krish said...
    நமது சகோதரிகள் யாரும் 7 ம் வீட்டை அலசி தங்கள் துணையை பற்றி கேட்பதில்லை. நல்ல கணவரை

    இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கைதான். சகோதரர்களே நீங்களும் நமது வாத்தியார் கூறியது போல்

    இறைவனை நம்பி நிம்மதியாக வாழுங்கள்./////

    ஆமாம். மொத்தமாக நம்பினால், ஜோதிடமே வேண்டாம்!

    ReplyDelete
  39. /////M. Thiruvel Murugan said...
    Respected Sir!
    First of all thanks a lot...!
    You are teaching us not only astralogy, but also self-confidence, sincerity, religiosity, dedication,

    hardwork, optimism and so much... And one more request to you... Please tell us how do you manage your

    precious time? And what is the secret behind your time compound management? If you don't mind...

    எத்தனையோ பிரபலங்களின் ஜாதகத்தைப் பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய தாங்கள், தங்கள்

    ஜாதகத்தைப் பார்க்கும் பாக்கியத்தையும் தருவீர்களா...? என் ஆசை தவறாயிருப்பின் மன்னித்தருள

    வேண்டுகிறேன். Once again thankyou so much for clarifying my doubts very soon.
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்
    புது தில்லி//////

    நேரத்தை வசப்படுத்துவது பற்றி நேரம் இருக்கும்போது தனிக் கட்டுரை எழுதுகிறேன். பொறுத்திருங்கள்.
    நான் எளியவன். என்னுடைய ஜாதகமும் சாதாரணமானது. 337 பரல்களுடன் இருப்பது மட்டுமே உள்ள ஒரே சிறப்பு:-)))) சமயம் வரும்போது நானே பதிவில் ஏற்றுகிறேன். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  40. /////மாயாவி said...
    ***எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது

    நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.*** :-)/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  41. Dear Sir

    Arumayana Kelvi Padhilgal. Enakku Ingae Vidai Kidaikkum ena nambukindrean.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  42. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumayana Kelvi Padhilgal. Enakku Ingae Vidai Kidaikkum ena nambukindrean.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  43. Dear Sir,

    In your Question and Answer section, for Question No: 16. You Answered,

    “Since the said house is under papa kartari yogam that house benefits was obstructed. Moreover the house lord is also debilitated.” So that house factors were denied.

    My question if a house suffering from papa kartari yogam receives Guru Paarvai then will the yogam be thwarted.

    Else if the kaaragan of that house is in good position (means with 5 suyavargam parals) will the yogam be foiled? Will the ascendant receive the benefits of the concerned house?

    One more Question if maandhi in navamsa receives the aspect of Guru, will the effect of maandi be mitigated or that concerned house will be relieved by the effects of maandhi?

    If an ascendant will do agriculture work or will be a land lord means which planet should be strong.
    (Means, planet with suyaparal 5 and more)

    With regards
    Ezhil

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com