மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.12.09

வந்தவழி: 1. ஜோதிடமும் நானும்!

................................................................................................................
வந்தவழி: 1. ஜோதிடமும் நானும்!

இளம் வயதில் நானும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவன்தான். அது அறியாமை நிறைந்த காலம். அலங்கார மேடைப் பேச்சுக்களைக் கேட்டு மயங்கிய காலம்.

“தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும்
பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ” என்று மேடையில் முழங்குவார்கள்.
சஞ்சிகைகளில் எழுதுவார்கள்.

“ஏரோட்டம் இன்றி மக்கள்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் உனக்கேன் தியாகராஜா?” என்று திருவாரூர் தியாகராஜப் பெருமானின் தேரைப் பழுது பார்த்து மீண்டும் வெள்ளோட்டமிடப் பக்தர்கள் பெரும் பணம் திரட்டியபோது கேட்டார்கள்.

நியாயந்தானே? என்று நினைத்த காலம் உண்டு!

என் பெற்றோர்களும், உறவினர்களும் தீவிர இறை பக்தர்கள். அவர்களுடைய பக்தியும், பிரார்த்தனையும் வீண் போகவில்லை. நானும் தடம் மாறிப் போகவில்லை. அவர்களுடன், பழநி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். பல சமயங்களில் மறுப்பின்றி முடிக்காணிக்கை செலுத்தியுமிருக்கிறேன்.

அந்தக் காலக் கட்டத்திலும் 50% இறை நம்பிக்கை இருந்தது. 50% இல்லாமல் இருந்தது.

பிறகு காலச்சுழல், என்னை அடித்துத் துவைத்துக் காயப்போட்டு, இறைவனை
உணரவைத்தது.

ஆமாம், இறைவனை உணரவைத்தது. யாரும் அவனை உணர்ந்துதான் அறிந்து கொள்ள முடியும். நேரில் பார்த்தவர்கள் எவரும் இல்லை.

God is to be felt, since he is not an object to see!

அருணகிரி நாதரும், குமரகுருபரரும் நேரில் பார்த்ததாக வரலாறுகள் உண்டு. வீடியோ சான்றுகள் இல்லை. சான்று இல்லாத எதையுமே இன்றைய இளைஞர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே அதைப் பற்றி இங்கே விவரமாக எழுதவிலை!

வாரியார் சுவாமிகளின் உரைகளும், கவியரசரின் பாடல்களும், நூல்களும் மனதை நெறிப்படுத்தின. தொடர்ந்து ஓஷோ, தயானந்த சரஸ்வதி அவர்களின் உரைகளும் நூல்களும் என்னைத் துல்லியமாக நெறிப்படுத்தின.
உங்கள் மொழியில் சொன்னால் என்னைப் fine tuning செய்தன!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
அதே போல என் தந்தையாரும், அவருடைய நண்பர் ஆசான் என்னும் அற்புத மலையாள ஜோதிடரும் எனக்கு ஜோதிடத்தில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தினார்கள். அவர்களுடைய உரையாடல்களையும், நடப்பையும் பார்த்து எனக்கு ஜோதிடத்தில் ஒரு ஆர்வம் உண்டாயிற்று.

இதில் ஏதோ இருக்கிறது. என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஜோதிட நூல்களை வாங்கித் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க ஜோதிடம் என்னைப் பிரமிக்க வைத்தது. அது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அது பற்றி

என்னுடைய பழைய பதிவுகளில் விவரமாக எழுதியுள்ளேன்.

ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம்.

இறையருளால், எனக்கு வேறு நல்ல தொழில் அமைந்துள்ளது. ஆகவே ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளவில்லை. ஜோதிடத்தை வைத்து இன்றுவரை ஒரு ரூபாய் கூட (பைசாவிற்கு மதிப்பில்லை, ஆகவே ரூபாயில் சொல்லியிருக்கிறேன்) நான் சம்பாதித்ததில்லை. உங்கள் மொழியில் சொன்னால் கல்லாக் கட்டியதில்லை.

நான் அறிந்த ஜோதிடம் பிறருக்குப் பயன் பட வேண்டும். அடுத்த தலைமுறை யினரைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில்தான் பதிவில் மூன்று ஆண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்

துவக்க காலத்தில் 100 எண்ணிக்கைக்கும் குறைவான வாசகர்களே வந்தார்கள். அது இன்று அசுர வளர்ச்சி பெற்றுத் தினமும் சுமார் 2,000 வாசகர்கள் எனும் எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

அது என் எழுத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.
அது இறையருள்! அவ்வளவுதான்!

It is very simple; It is God's grace!

கவியரசர் சொல்வார்:
இறைவன் இரண்டு இடத்தில் சிரிப்பானாம்.
1. இதை நான் செய்தேன் என்று சாதனையாளன் ஒருவன் சொல்லும்போது!
2. உன் உயிரை நான்தான் காப்பாற்றினேன் என்று மருத்துவர் ஒருவர் சொல்லும்போது!

இறையருள் இன்றி எதுவும் நடக்காது. அதைத்தான் அவனன்றி ஓர் அனுவும் அசையாது என்பார்கள்!
-----------------------------------------------------------------------------------
இன்றையப் பாடம்:

1.
மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின் ஆதிக்கம்:
ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும்,அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்!
.....................................................

2
பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்:
புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது
....................................................

3
இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம்
காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்!
.....................................................

4
முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின் ஆதிக்கம்:
முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான்.
-------------------------------------

5
நாற்பது வயதுவரை சூரியனின் ஆதிக்கம்:
பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார்.
................................................................
++++++++++++++++++++++++++++++++
இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். உணருகிறவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உணராதவர்களுக்குக் காலம் உணர்த்தட்டும்

6.
50 to 60 வயது வரை சனியின் ஆதிக்கம்:
தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (balance sheetஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (housing loan) வாகனக் கடன் (car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்!
-----------------------------------------------

7.
60 to 70 5 வயது வரை ராகுவின் ஆதிக்கம்:
ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு
கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்
...................................................................

8
70ற்குப் பிறகு கேதுவின் ஆதிக்கம்:
மனிதன் ஞானம் பெறும் காலம். இந்த ஞானத்தைப் பற்றிப் பத்துப் பக்கங்கள் எழுதலாம். இப்போது நேரமில்லை. பின்னால் தனிக்க் கட்டுரையாக அதை எழுதுகிறேன்!

கவியரசர் கண்ணதாசன் அதை 4 வரிகளில் அற்புதமாக எழுதியுள்ளார். அதை மட்டும் இங்கே கொடுக்கிறேன்

“வீடுவரை உரவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ!”
...................................................................
எண்ணிக்கையில் எட்டுதான் வந்துள்ளது. ஒன்று விடுபட்டுள்ளது.
அது குரு பகவான்.
அவர் உதவி தவிர்க்க முடியாதது. அவருக்கு எந்தக் கணக்கும் கிடையாது. அவர் நம்பர் ஒன் சுபக்ககிரகம் பிறப்பு முதல் இறப்புவரை அவர் வருவார். எந்த சூழ்நிலையிலும் தாக்குப் பிடிக்கும் தன்மையை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார்!

Yes, he will give standing power to the native to face/handle any situation!

சரி, ஜாதகத்தில் அவர் கேட்டிருந்தால், கஷ்டம்தான். வாழ்க்கை போராட்டம்தான்.

யாராவது ஜாதகனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் அல்லது அவன் ஜாதகத்தில் உள்ள மற்ற நல்ல அமைப்புக்கள் தாங்கிப் பிடிக்கும்! ஏனென்றால் அனைவருக்கும் பிறக்கும்போது கிடைக்கும் மொத்தத் தொகை 337தான்.
அதை மனதில் வையுங்கள்

இது எந்தப் புத்தகத்தில் உள்ளது என்று யாரும் கேட்காதீர்கள். என் தந்தையின் ஜோதிட நண்பர் ஒருவர் சொன்னது. என் மனதில் உள்ள Hard Discல் இருந்து copy and paste உங்களுக்குக் கொடுத்துள்ளேன்:-)))

அன்புடன்
வாத்தியார்

.......................................................

பயந்து விடாதீர்கள். வாத்தியாரின் படம்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பெற்றது. அழகனிடம் (பழநி அப்பனிடம்) அழகைக் (முடியைக்) காணிக்கையாக்கி விட்டுத் திரும்பியவுடன் எடுத்த படம்
---------------------------------------------------------------------
கவியரசர் ஆன்மீகத்திற்கு முழுதாகத் திரும்பியவுடன் அசத்தலாக எழுதிய பல
பாடல்களில் மூன்று பாடல்களை நீங்கள் அறியக் கீழே தந்துள்ளேன்:
1
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
படம் - பாலும் பழமும்
பாடியவர் - பி. சுசீலா

2
வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!

(வெள்ளிமலை)

படம் - கந்தன் கருணை - வருடம் 1967
இந்தப் பாடல் ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்!
ஆமாம்! இயக்குனர் திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கு கவியரசர் எழுதிக் கொடுத்த சிறந்த பாடல்களில் ஒன்று!

இந்தப் பாடல் திருமதி எஸ்.வரலெட்சுமி அவர்கள் தன்னுடைய கணீர்க் குரலால்,
உணர்வுபூர்வமாகப் பாடிகவியரசரின் வரிகளாலும் படத்தில் இடம் பெற்ற காட்சி அமைப்புக்களாலும், தமிழ் நாட்டையே ஒரு
கலக்குக் கலக்கிய பாடல் என்றால் அது மிகையல்ல!
++++++++++++++++++++++++++++++++++++
3
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்

கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க


இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்!

படம் - சாந்தி நிலையம்
பாடியவர் - பி சுசீலா குழுவினர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

81 comments:

  1. காலை வணக்கம் ஐயா!

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு நல்ல மனிதர் ...
    வந்த வழி - அடுத்தடுத்த பாகங்களையும் எதிர்பார்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  3. எழுதுவது, நம்முடையஅனுபவங்களை, நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்காகவே என்றிருக்கும் வரை எந்தப்பிரச்சினையுமே இல்லை! அடுத்தவருடைய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைப் பற்றி விமரிசனமாக எழும்போது தான் உரசல்கள் ஆரம்பிக்கின்றன!

    நடப்பதெல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  4. ஐயா,

    இன்று உங்கள் கட்டுரையை படிக்கும் போதும் என்னையே அறியாமல் கண்கள் கலங்கி விட்டது. உங்கள் சேவை என்றும் தொடர , அதற்கான உடல் பலமும், மன பலமும் என்றும் உங்களிடம் நிலைத்திருக்க குருராஜர் ராகவேந்திரரை வேண்டுகிறேன் . நன்றி ஐயா .

    குமார்.S

    ReplyDelete
  5. நடப்பு வாழ்க்கைக்கு ஏற்ற கட்டுரை.ஒரு
    மனிதனின் வாழ்வு உயர என்னவெல்லாம் தேவை
    என்பதை எமக்கு அறிய தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. Good morning sir,

    It's good to see, hear about your experiences with jothidam. Thanks for sharing ur young photo with us!!! I don't know if jothidam could be genetic, becoz my dad's father used to write குறிப்பு & thanks to you sir I know the basics of jothidam.

    Same time my grandfather used to remove posion from snake bites, to save people, and he lost 6 of his own children becoz of that!!! This was in Sri Lanka, but still a lot of people respects him for his occult knowledge!!!Just wanted to share this becoz முதல் ஜோதிடம் பற்றி ஒனும் தெரியாது, இப்போ நான் அம்மாக்கு சொல்லுவேன் எனக்கு தெரிஞ்சத , அப்பிடித்தான் எனக்கு தெரியும், அப்பப்பாவை பற்றி.

    Thanks
    Thanuja

    ReplyDelete
  7. Good morning sir,

    Everything is god grace.

    The above expressions are beautiful truth.

    I heard the songs but now only I understand the in-depth meaning of that.

    Thanks for the lesson with songs.

    ReplyDelete
  8. //Followers (1111) More »//

    அருமையான எண்ணாக இருக்கு !

    வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. Sir,
    It's true.... whatever you said about life.
    Picture..... super vaathiare

    ReplyDelete
  10. அய்யா இனிய காலை வணக்கம் ,

    நீங்கள் வந்த வழி சாதித்த விதம் ஆகியவை எங்களை போன்ற இளைஞர்களை நெறிபடுத்தும் என்பத்தில் அய்யம் இல்லை .எனக்கு சிறு வயது முதலே இறை நம்பிக்கை ஜோதிடத்தின் மீது நாட்டம் வந்தது எனக்கு 16 வயதில் 11 ம் வகுப்பு சேர்ந்த உடன் அதற்க்கு காரணம் என் தமிழ் ஆசிரியர் தமிழக அளவில் நல்லாசிரியர் விருது பெற்றவர் அவர் ஜோதிடதில் வித்தகர் ....அசாத்திய அறிவு உள்ளவர் ...அவர் எனக்கு ஜோதிடம் கற்று தர மருத்து விட்டார் காரணம் கேட்ட போது உனக்கு இது வாழ்வின் முக்கியமான திருப்பு முனை காலம்(12 வகுப்பு படிப்பு) உன் கவனம் சிதற கூடாது என்றார் .ஒரு 25 வயதில் வா கற்று தருகிறேன் என்றார் .அதற்க்குள்ளாக இறை அருள் (22 வயது தற்பொது )எனக்கு சிறந்த ஆசான் ஒரு 1000 மாணவர்களுடன் படிக்கும் 3 ம் கல்லூரி எல்லாம் இறை அருள் அன்றி வேறில்லை ...இந்த வகுப்பிலே வயது குறைந்தவன் நானாக தான் இருப்பேன் என்று எண்ணுகின்றேன் ,,,,,,உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றேன்

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    தாங்கள் ஒரு ஜாதகனுடைய வயதில் எந்த எந்த கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற விளக்கம் அருமை. அப்படியே வாழ்க்கையில் ஒத்து வருகிறது.

    //... காலச்சுழல் என்னை அடித்து துவைத்து காயப்போட்டு இறைவனை உணரவைத்தது ....//

    ஒருவன் கடவுளை எப்போது உணர்கிறான் என்பதை தங்கள் வரிகளில் எழுதியிருப்பது அருமை. எல்லோருக்கும் காலச்சுழல் அடித்து காயப்போட்டல்தான் இறைவனை உணர்கிற பண்பு வரும் போலும். ஆனால் எனக்கு பக்தி இறை நம்பிக்கை எல்லாம் சிறுவயதிலேயே வர காரணம் எனது பெற்றோர்கள் தான். என்னையும் காலச்சுழல் அடித்து துவைத்து காயப்போட்டது. நல்ல வேலையாக நிழலில் காயப்போட்டது.

    மேலும் தாங்கள் எழுதிய பாடல் வரிகளை கேட்டிருந்தாலும் இப்போது படிக்கும் போதுதான் அந்த பாடல்களின் முழுமையான அர்த்தம் புரிகிறது.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்,

    அருமை அருமை தங்களின் ஜோதிடமும் நானும் கட்டுரை!
    அய்யா இறை நம்பிக்கை என்பது இரண்டு விதத்தில் வரும் ஒன்று பிறவியிலே மற்றொன்று பகுத்தரியமுர்ப்பட்டு பட்டறிவால் பக்குவப்பட்டு கடைசியில் நம்மைப் படைத்த இறைவனால் ஆட்க்கொள்ளப் படுவது. இந்த இரண்டு வகையினரின் இரத்தத்தின் ஒவ்வரு அணுக்களிலும் இறை உணர்வு எழுதப் பட்டு இருக்கும். (நிச்சயமாக ஒரு நாள் இதை மரபியல் கூறில் அறிவியல் கண்டு பிடிக்கும்).

    மேலே கூறிய இரண்டாவது வழியில் வந்தவர்களில் நீங்கள் என்பதைப் போல நானும் என்று சொல்லிக்கொள்கிறேன். சிறுவயதில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டும், என்னை வாழ்வில் நடந்து வந்தப் பாதையும் (அதனாலே காலசர்ப்ப தோஷம் எனக்கு அவனால் விதிக்கப் பட்டிருந்த்தாகவே நான் உணர்கிறேன்), நான் காதல் கொண்டுள்ளத் தமிழும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவனின் அருள் இல்லை ஆணையும் என்னை சரியானப பாதைக்கு திருப்பி விட்டுள்ளது என நம்புகிறேன்.

    புத்தி வந்தது எங்கே? எப்போது? எப்படி? எச் சூழ்நிலையில்?
    இடம்: சபரிமலை பெரியப் பாதையில்.
    சுற்றுலா என்று மனதில் எண்ணிக்கொண்டு தெய்வ அவநம்பிக்கையில் (கல்லூரியில் படிக்கும் பொது) சரியான கருப்பு உடையில் சென்ற பொது (நபிக்கை இல்லை என்றாலும் அந்த சட்ட திட்டகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது தானே வகுப்பாசிரியர் சொல்லித் தந்தது).
    மலையில் ஏற ஏற அகங்காரமும், திமிரும், ஆணவமும் வியர்வையாய் வெளியேறியது. அவநம்பிக்கை மட்டும் குடியிருந்தது.

    வறுமை என்னைப் பக்குவப் படுத்தித் தானே என்னை அங்கு விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளது. குழந்தைகள், வயோதிககர்கள், ஏழை, பணக்காரர்கள் (அவர்களின் உடலும், அவர்கள் அணிந்து இருக்கும் மாலையில் பூட்டப் பட்டுள்ள தங்க, வெள்ளிப் பூணும் அதைச் சொல்லும்) உடல் ஊனமுற்றோர் எனப் பழக காட்சிகள். விண்ணை பிளக்கும் இல்லை கைலாயமும், வைகுண்டமும் சென்றுச் சேரும் சரக் கோசங்களும், அம்மலையில் இருக்கும் அதிர்வுகளும். என் உடல் தளர்ந்தது பயணத்தால், அகந்தையும் அழிந்தது. இவை அனைத்தும் சேர்ந்து என் அவநம்பிக்கையை என் கண்களில் வரும் கண்ணீரைக் கரைத்தது. நானும், ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! என்றேன். புத்தி வந்தது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ஆண்டவைக் காண துடித்தேன், நீலி மலை அடைந்த போது, அந்த சொர்க்கத்தைக் முதன் முதலில் கண்டேன். ஆம் அய்யனின் சந்நிதானம் நான் முதன் முதலில். நான் பறக்க முடியாதா என்று ஆசைப் பட்டேன். விரைந்தேன், கடவுளைக் கண்டேன், அந்த உணர்வை விளக்கத் தெரிய வில்லை என் கண்களில் வழியும் கண்ணீர் மட்டும் இன்றும் நிற்ப்பதில்லை அவன் சந்நிதிக்குச் செல்லும் போதெல்லாம்.

    கவியரசு கண்ணதாசன், மாற்றமே மனிதத் தத்துவம் என்றார். அப்படி பலரின் வாழ்வும், இறை அருளால் மாறியது, மாறுகிறது இன்னும் மாறும்.

    பெரிய ஆம் மிகப் பெரிய பின்னூட்டம் மன்னிக்கவும்.
    நன்றிகள் குருவே.

    தங்களின் படத்தை பார்க்கும் போது அப்பரடிகள் சட்டை அணித்து வந்துள்ளது போல் தோன்றுகிறது. அதிலும உங்கள் இரு காதுகள் அப்படியே சிவனடியார்களுக்கே உரியது.

    ReplyDelete
  13. Sir,
    Fine words. We are always with you, continue your journey.

    Regards

    ReplyDelete
  14. /////DHANA said...
    காலை வணக்கம் ஐயா!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ////யூர்கன் க்ருகியர் said...
    நீங்கள் ஒரு நல்ல மனிதர் ...
    வந்த வழி - அடுத்தடுத்த பாகங்களையும் எதிர்பார்கிறேன்
    நன்றி////

    சற்று இடைவெளியுடன் அடுத்த பாகம் வரும். நன்றி!

    ReplyDelete
  16. ////கிருஷ்ணமூர்த்தி said...
    எழுதுவது, நம்முடையஅனுபவங்களை, நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்காகவே என்றிருக்கும் வரை எந்தப்பிரச்சினையுமே இல்லை! அடுத்தவருடைய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைப் பற்றி விமரிசனமாக எழும்போது தான் உரசல்கள் ஆரம்பிக்கின்றன!
    நடப்பதெல்லாம் நன்மைக்கே!/////

    உண்மைதான். புரிதலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ///kumar.S said...
    ஐயா,
    இன்று உங்கள் கட்டுரையை படிக்கும் போதும் என்னையே அறியாமல் கண்கள் கலங்கி விட்டது. உங்கள் சேவை என்றும் தொடர , அதற்கான உடல் பலமும், மன பலமும் என்றும் உங்களிடம் நிலைத்திருக்க குருராஜர் ராகவேந்திரரை வேண்டுகிறேன் . நன்றி ஐயா .
    குமார்.S///

    உங்கள் அன்பிற்கும், வேண்டுதலுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////thirunarayanan said...
    நடப்பு வாழ்க்கைக்கு ஏற்ற கட்டுரை.ஒரு
    மனிதனின் வாழ்வு உயர என்னவெல்லாம் தேவை
    என்பதை எமக்கு அறிய தந்தமைக்கு நன்றி./////

    எல்லாம் உங்களுக்காகத்தான் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  19. ////Thanuja said...
    Good morning sir,
    It's good to see, hear about your experiences with jothidam. Thanks for sharing ur young photo with us!!! I don't know if jothidam could be genetic, becoz my dad's father used to write குறிப்பு & thanks to you sir I know the basics of jothidam.
    Same time my grandfather used to remove posion from snake bites, to save people, and he lost 6 of his own children becoz of that!!! This was in Sri Lanka, but still a lot of people respects him for his occult knowledge!!!Just wanted to share this becoz முதல் ஜோதிடம் பற்றி ஒன்னும் தெரியாது, இப்போ நான் அம்மாக்கு சொல்லுவேன் எனக்கு தெரிஞ்சதை , அப்படித்தான் எனக்கு தெரியும், அப்பாவை பற்றி.
    Thanks
    Thanuja////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////rama said...
    Good morning sir,
    Everything is god grace.
    The above expressions are beautiful truth.
    I heard the songs but now only I understand the in-depth meaning of that.
    Thanks for the lesson with songs.////

    கவியரசர் அவர்களின் பாடல்கள் அனைத்திலுமே பல்லவியை விட சரணவரிகள் அனைத்தும் அசத்தலாக இருக்கும்!

    ReplyDelete
  21. /////கோவி.கண்ணன் said...
    //Followers (1111) More »//
    அருமையான எண்ணாக இருக்கு !
    வாழ்த்துகள் !////

    உங்கள் வருகைக்கு நன்றி கோவியாரே! அந்த எண்னில் ஒரு டிஜிட்டை நீக்கினால் பட்டை நாமம் என்றாகும். இதைப் பெரிய பட்டை நாமம் என்று கொள்ளலாமா கோவியாரே? (சும்மா, வேடிக்கைக்குக் கேட்டேன்)

    ReplyDelete
  22. ////dhilse said...
    Sir,
    It's true.... whatever you said about life.
    Picture..... super vaathiare////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  23. ////dhilse said...
    Sir,
    It's nice////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  24. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ,
    நீங்கள் வந்த வழி சாதித்த விதம் ஆகியவை எங்களை போன்ற இளைஞர்களை நெறிபடுத்தும் என்பத்தில் அய்யம் இல்லை .எனக்கு சிறு வயது முதலே இறை நம்பிக்கை ஜோதிடத்தின் மீது நாட்டம் வந்தது எனக்கு 16 வயதில் 11 ம் வகுப்பு சேர்ந்த உடன் அதற்க்கு காரணம் என் தமிழ் ஆசிரியர் தமிழக அளவில் நல்லாசிரியர் விருது பெற்றவர் அவர் ஜோதிடதில் வித்தகர் ....அசாத்திய அறிவு உள்ளவர் ...அவர் எனக்கு ஜோதிடம் கற்று தர மருத்து விட்டார் காரணம் கேட்ட போது உனக்கு இது வாழ்வின் முக்கியமான திருப்பு முனை காலம்(12 வகுப்பு படிப்பு) உன் கவனம் சிதற கூடாது என்றார் .ஒரு 25 வயதில் வா கற்று தருகிறேன் என்றார் .அதற்க்குள்ளாக இறை அருள் (22 வயது தற்பொது )எனக்கு சிறந்த ஆசான் ஒரு 1000 மாணவர்களுடன் படிக்கும் 3 ம் கல்லூரி எல்லாம் இறை அருள் அன்றி வேறில்லை ...இந்த வகுப்பிலே வயது குறைந்தவன் நானாக தான் இருப்பேன் என்று எண்ணுகின்றேன் ,,,,,,உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றேன்
    நன்றி வணக்கம்////

    இல்லை! இருபது வயதுப் பெண்மணி ஒருவர் இருக்கிறார். அவர்தான் வயதில் சிறியவர்!
    உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  25. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    தாங்கள் ஒரு ஜாதகனுடைய வயதில் எந்த எந்த கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற விளக்கம் அருமை. அப்படியே வாழ்க்கையில் ஒத்து வருகிறது.
    //... காலச்சுழல் என்னை அடித்து துவைத்து காயப்போட்டு இறைவனை உணரவைத்தது ....//
    ஒருவன் கடவுளை எப்போது உணர்கிறான் என்பதை தங்கள் வரிகளில் எழுதியிருப்பது அருமை. எல்லோருக்கும் காலச்சுழல் அடித்து காயப்போட்டல்தான் இறைவனை உணர்கிற பண்பு வரும் போலும். ஆனால் எனக்கு பக்தி இறை நம்பிக்கை எல்லாம் சிறுவயதிலேயே வர காரணம் எனது பெற்றோர்கள் தான். என்னையும் காலச்சுழல் அடித்து துவைத்து காயப்போட்டது. நல்ல வேலையாக நிழலில் காயப்போட்டது.
    மேலும் தாங்கள் எழுதிய பாடல் வரிகளை கேட்டிருந்தாலும் இப்போது படிக்கும் போதுதான் அந்த பாடல்களின் முழுமையான அர்த்தம் புரிகிறது.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நீங்கள் அனைவரும் ரசித்து மகிழ வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பாடல்வரிகளை பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. Dear Sir,

    Thanks for the lessons,

    Balakumaran.

    ReplyDelete
  27. அனுபவமே இறைவன்.. அனுபவத்தால் இறைவனை உணர்பவன்தான் ஆத்திகன்..

    நானும் உங்களைப் போலத்தான் வாத்தியாரே.. 25 வயது வரையிலும் ரெண்டுங்கெட்டானாக தண்டத்திற்கு வாழ்ந்து கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம்தான் என்னை ஆன்மீகம் பக்கம் திசை திருப்பியது.. அடியேன் அந்த தாசனுக்கே தாசனானேன்..!

    ReplyDelete
  28. அய்யா இனிய காலை வணக்கம்

    அடுத்தடுத்த பாகங்களையும் எதிர்பார்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா. எனக்கு இன்னும் மேல்நிலை பாடங்கள் வந்து சேரவில்லை. ப்ளீஸ் ஐயா

    ReplyDelete
  30. பாடல்களும் பிரமாதம்.
    ஜோதிடமும் அற்புதம்.
    மு.மாதேஸ்வரனின் ஜோதிட புத்தகங்கள் வாங்கினேன்.
    மிகவும் அருமை. அதேபோல் வ VK CHOUDHRY யின் புததகமும் அருமை.
    ஜோதிட ஆர்வலர்களுக்கு
    அதை பற்றி சொல்லுங்களேன்.ஜோதிடர்களுக்கு
    மிகவும் பலனுள்ளதாக இருக்கும்
    ஜோதிடம் போலவே கண்ணதாசன் பாடல்கள் பற்றியும்,
    MSV யின் இசை பற்றியும் தனியாக ஒரு பகுதி
    ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே

    ReplyDelete
  31. வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு என்பதை நீங்கள் எழுதியதிலிருந்து உணர்ந்தேன். அதை நீங்கள் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடருங்கள் உங்கள் சேவையை. நன்றி.

    ReplyDelete
  32. உண்டு என்றால் அவன் உண்டு
    இல்லை என்றால் அவன் இல்லை.
    சில மனிதருக்கு இறைஉணர்வு இல்லை என்றாலும் நெறி உணர்வாகவாவது இருக்க நாம் இறைவனை வேண்டுவோம்.

    கிரகங்களின் உச்சம் நட்பு பகை நீசம் சந்தர்பங்களில் பலம் என்ன என்று சொல்லி இருக்கறீர்கள். நீச்சபங்கமான கிரகங்களின் பலம் என்ன என்று அறியலாமா?

    நீங்கள் ஏற்கனவே சொல்லி மறுபடியும் கேட்கிறோனோ?

    ReplyDelete
  33. /////Raju said...
    Sir,
    Fine words. We are always with you, continue your journey.
    Regards
    வாழ்த்துக்கள்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  34. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமை அருமை தங்களின் ஜோதிடமும் நானும் கட்டுரை!
    அய்யா இறை நம்பிக்கை என்பது இரண்டு விதத்தில் வரும் ஒன்று பிறவியிலே மற்றொன்று பகுத்தரியமுர்ப்பட்டு பட்டறிவால் பக்குவப்பட்டு கடைசியில் நம்மைப் படைத்த இறைவனால் ஆட்க்கொள்ளப் படுவது. இந்த இரண்டு வகையினரின் இரத்தத்தின் ஒவ்வரு அணுக்களிலும் இறை உணர்வு எழுதப் பட்டு இருக்கும். (நிச்சயமாக ஒரு நாள் இதை மரபியல் கூறில் அறிவியல் கண்டு பிடிக்கும்).
    மேலே கூறிய இரண்டாவது வழியில் வந்தவர்களில் நீங்கள் என்பதைப் போல நானும் என்று சொல்லிக்கொள்கிறேன். சிறுவயதில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டும், என்னை வாழ்வில் நடந்து வந்தப் பாதையும் (அதனாலே காலசர்ப்ப தோஷம் எனக்கு அவனால் விதிக்கப் பட்டிருந்த்தாகவே நான் உணர்கிறேன்), நான் காதல் கொண்டுள்ளத் தமிழும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவனின் அருள் இல்லை ஆணையும் என்னை சரியானப பாதைக்கு திருப்பி விட்டுள்ளது என நம்புகிறேன்.
    புத்தி வந்தது எங்கே? எப்போது? எப்படி? எச் சூழ்நிலையில்?
    இடம்: சபரிமலை பெரியப் பாதையில்.
    சுற்றுலா என்று மனதில் எண்ணிக்கொண்டு தெய்வ அவநம்பிக்கையில் (கல்லூரியில் படிக்கும் பொது) சரியான கருப்பு உடையில் சென்ற பொது (நபிக்கை இல்லை என்றாலும் அந்த சட்ட திட்டகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது தானே வகுப்பாசிரியர் சொல்லித் தந்தது).
    மலையில் ஏற ஏற அகங்காரமும், திமிரும், ஆணவமும் வியர்வையாய் வெளியேறியது. அவநம்பிக்கை மட்டும் குடியிருந்தது.
    வறுமை என்னைப் பக்குவப் படுத்தித் தானே என்னை அங்கு விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளது. குழந்தைகள், வயோதிககர்கள், ஏழை, பணக்காரர்கள் (அவர்களின் உடலும், அவர்கள் அணிந்து இருக்கும் மாலையில் பூட்டப் பட்டுள்ள தங்க, வெள்ளிப் பூணும் அதைச் சொல்லும்) உடல் ஊனமுற்றோர் எனப் பழக காட்சிகள். விண்ணை பிளக்கும் இல்லை கைலாயமும், வைகுண்டமும் சென்றுச் சேரும் சரக் கோசங்களும், அம்மலையில் இருக்கும் அதிர்வுகளும். என் உடல் தளர்ந்தது பயணத்தால், அகந்தையும் அழிந்தது. இவை அனைத்தும் சேர்ந்து என் அவநம்பிக்கையை என் கண்களில் வரும் கண்ணீரைக் கரைத்தது. நானும், ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! என்றேன். புத்தி வந்தது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    ஆண்டவைக் காண துடித்தேன், நீலி மலை அடைந்த போது, அந்த சொர்க்கத்தைக் முதன் முதலில் கண்டேன். ஆம் அய்யனின் சந்நிதானம் நான் முதன் முதலில். நான் பறக்க முடியாதா என்று ஆசைப் பட்டேன். விரைந்தேன், கடவுளைக் கண்டேன், அந்த உணர்வை விளக்கத் தெரிய வில்லை என் கண்களில் வழியும் கண்ணீர் மட்டும் இன்றும் நிற்ப்பதில்லை அவன் சந்நிதிக்குச் செல்லும் போதெல்லாம்.
    கவியரசு கண்ணதாசன், மாற்றமே மனிதத் தத்துவம் என்றார். அப்படி பலரின் வாழ்வும், இறை அருளால் மாறியது, மாறுகிறது இன்னும் மாறும்.
    பெரிய ஆம் மிகப் பெரிய பின்னூட்டம் மன்னிக்கவும்.
    நன்றிகள் குருவே.
    தங்களின் படத்தை பார்க்கும் போது அப்பரடிகள் சட்டை அணித்து வந்துள்ளது போல் தோன்றுகிறது. அதிலும உங்கள் இரு காதுகள் அப்படியே சிவனடியார்களுக்கே உரியது./////

    அப்பரடிகளா? அவர் எத்தனை பெரிய மகான்! சிவபக்தர். அவருக்கு நிகர் அவரேதான்!
    உங்கள் அன்பிற்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி!

    ReplyDelete
  35. /////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons,
    Balakumaran./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  36. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அனுபவமே இறைவன்.. அனுபவத்தால் இறைவனை உணர்பவன்தான் ஆத்திகன்..
    நானும் உங்களைப் போலத்தான் வாத்தியாரே.. 25 வயது வரையிலும் ரெண்டுங்கெட்டானாக தண்டத்திற்கு வாழ்ந்து கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம்தான் என்னை ஆன்மீகம் பக்கம் திசை திருப்பியது.. அடியேன் அந்த தாசனுக்கே தாசனானேன்..!/////

    உங்களைப்போல பலரையும் மாற்றியது அவருடைய எழுத்துக்கள். என்றும் அவர் நினைவைப் போற்றுவோம்.
    நன்றி உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  37. ////jadam said...
    அய்யா இனிய காலை வணக்கம்
    அடுத்தடுத்த பாகங்களையும் எதிர்பார்கிறேன்
    நன்றி////

    அடுத்த பகுதி சற்று இடைவெளிவிட்டு வரும்! பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  38. /////tamil temples said...
    வணக்கம் ஐயா. எனக்கு இன்னும் மேல்நிலை பாடங்கள் வந்து சேரவில்லை. ப்ளீஸ் ஐயா!

    எழுதித் தட்டச்சி விட்டேன். செதுக்க வேண்டும் இரண்டொரு நாளில் அனைவருக்கும் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  39. /////balaji said...
    பாடல்களும் பிரமாதம். ஜோதிடமும் அற்புதம்.
    மு.மாதேஸ்வரனின் ஜோதிட புத்தகங்கள் வாங்கினேன். மிகவும் அருமை. அதேபோல் வ VK CHOUDHRY யின் புததகமும் அருமை. ஜோதிட ஆர்வலர்களுக்கு அதை பற்றி சொல்லுங்களேன்.ஜோதிடர்களுக்கு
    மிகவும் பலனுள்ளதாக இருக்கும். ஜோதிடம் போலவே கண்ணதாசன் பாடல்கள் பற்றியும், MSV யின் இசை பற்றியும் தனியாக ஒரு பகுதி ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே/////

    எனது பல்சுவைப் பதிவைப் படியுங்கள். கவியரசரைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். அதன் சுட்டி:
    http://devakottai.blogspot.com

    ReplyDelete
  40. /////Subbramaniabalaji said...
    PRESENT SIR./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  41. தங்கள் அனுபவங்களை இங்கே பல்வேறு சமயங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறீகள். இப்போதும் பகிர்ந்து கொண்டீகள். இதில் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் என்னால் அறிய முடிகிறது. என்னை ஜோதிடம் எப்படி பிடித்துக் கொண்டது அல்லது அணைத்துக் கொண்டது என்பதை பின்னாளில் சொல்கிறேன்.

    பாடல்கள் பல தடவை கேட்டதுதான் என்றாலும் அதை எழுதி படிக்கும் போதுதான் அதன் அர்த்தங்களை முழுமையாக உணர முடிகிறது.

    வேலை கிடைக்க வேண்டுமானால் கர்ம காரகன் சனி உதவ வேண்டும், அதில் ஆற்றல்/திறமையை வெளிப்படுத்த செவ்வாயின் அனுக்கிரகம் வேண்டும். சரிதானே.

    இறுதியாக, ஜோதிடத்தில் எது எதை அடிப்படையாக கொண்டது என்று ஆராய்ந்தால்தான் இதை நாம் கண்மூடித்தனமாக நம்பவில்லை அல்லது ஏற்று கொள்ளவில்லை என்பதை பிறருக்கு உணர வைக்க முடியும். நேற்று காலசர்ப யோகத்திற்கு சொன்னது இதற்காகத்தான்.

    ReplyDelete
  42. சனாதன தர்மத்தில்(இந்து) நாத்திகமும் ஒரு தத்துவமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த நாத்திக ரிஷியின் பெயர் சார்வாகர்.
    அவருடைய நிரீஸ்வர வாதம், வேதம் படிப்பவர்களுடைய பாடத்திட்டத்தில்
    முக்கிய இடம் பெற்று இருந்துள்ளது.எனவே வேதம் முழங்கும்"அறிவு எல்லாத் திசைகளிருந்தும் எங்க‌ளை வந்து சேரட்டும்" என்பது நாத்திக வாதத்தையும் சேர்த்தே எடுத்துக்கொள்ளப்படுகிறது.என்ன‌! நாத்திக‌த்தை ச‌ரியாக‌ப்ப‌டித்து, ஆர‌வார‌ம் த‌விர்த்து, அர‌சிய‌ல் த‌விர்த்து,ச‌ம்வாத‌ம் செய்ய முன் வ‌ந்தால் ம‌கிழ்வுட‌ன் வ‌ர‌வேற்று அவ‌ர்க‌ள் சொல்வ‌தில் உள்ள‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ஏற்க‌லாம்.வாதத்‌தில் வெற்றி பெற‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌
    திரிபு வாத‌ம் செய்யாம‌ல்,ந‌‌ல்ல‌து கெட்ட‌தை அல‌சி ஆராய்ந்து மாற்ற‌‌ம் கொண‌ர‌ ந‌ல்லெண்ண‌ம் கொண்ட‌ நாத்திக‌ர்க‌ள் எப்போதும் ம‌திப்பாக‌வே ந‌ட‌த்த‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.
    பிள்ளையார் பூஜையில் ப‌ல்வேறு தாவ‌ர‌ங்க‌ள், இலை, பூக்க‌ள், காய், க‌னிக‌ள்
    தேவைப் ப‌டுகின்ற‌ன‌.அந்த‌ ப‌ட்டிய‌ல் பூஜை முறையில் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.'பாடனி' பாட‌மாக‌ப் பார்க்கக் க‌ற்றுக் கொண்டால் மூட‌ந‌ம்பிக்கை க‌ண்ணில் ப‌டாது.குழந்தைக‌ளை அழை‌த்துச் சென்று சேக‌ர‌ம்
    செய்யும் போது தாவ‌ர‌ இய‌ல் செய‌ல்முறை வ‌குப்புத்தானே!தீப‌த்தை
    வைத்துக்கொண்டு திருக்குற‌ளும் ப‌டிக்க‌லாம்.கூரையையும் எரிக்க‌லாம்.
    எல்லாம் அவ‌ர‌வ‌ர் க‌ண்ணோட்ட‌ந்தான்.த‌ங‌க‌ள் க‌ட்டுரை அருமை.

    ReplyDelete
  43. அப்பனே!!!

    வணக்கம்

    இறைபக்தி @ ஜோதிட நம்பிக்கை என்பது அவரவர் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் வருவது என்பது அடியேனின் கருத்து ஐயா
    சான்றுகள் உள்ளன அதற்க்கு அடியேனே சாட்சி

    எனது தந்தையார் கூறியது

    என்தந்தை, என்தாத்தா , தந்தையின் ஆச்சி உட்பட வழி வழியாக ஜோதிடம் ( தொழில் முறை ஜோதிடர்கள் ஒருவரும் அல்ல !) அறித்தவர்கள் ஐயா

    1 . எனது தந்தையார் ராணுவத்தில் தான் பணிபுரிவார் என்றும் ஆண் குழந்தைக்கு
    மந்தம் என்று எனது தாத்தா சொல்லியும் நம்பாத என்தந்தை 6 - வது ஆக என்னை பெற்ற பின்னர்தான் தெய்வம் @ ஜோதிடத்தில் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வந்தது என்பார் .

    இராமேஸ்வரம் சென்று மாயகண்ணா என்று பெயர் இடும் அளவிற்கு நம்பினார் ஐயா

    2 எனது நண்பர்கள் எனக்கு இட்டுள்ள பெயர் சாமியார் ( இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமை தன் காரணம் )
    3 ஜோதிடம் , பரதம் , சங்கீதம் , சாஸ்த்ரம் , ஆயகலைகள் 64 - க்கும் நமது முன்னோர்கள் நமக்கு தந்த பொக்கிஷம் அல்லவா ஐயா

    4 தாய் தந்தையருக்கு மேல் தான் தெய்வம் என்று நம்பும் அல்லது நம்பாத இந்த கலி உலகத்தில் ஐயா எவ்வளவு சொல்லியும் ஒன்றும் மாறபோவது இல்லை ஐயா
    5 தாங்கள் சொன்னது போல் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம் அது அவரவர் வாங்கி வந்த வரத்தை வைத்தது அல்லவா ஐயா!!!!!!!!!

    ReplyDelete
  44. ஏரோட்டும் தோழர்களெல்லாம் ஏங்கி தவிக்கையில் தியாகேசா தேரோட்டம் உனக்கு ஒரு கேடா என்று எழுதியவர் முயற்சியால் 1970ல் பல ஆண்டுகள் கழித்து தேர் மீண்டும் ஓடியது. தியாகேசனின் திருவிளையாடல்தான்.

    ReplyDelete
  45. ////krish said...
    வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு என்பதை நீங்கள் எழுதியதிலிருந்து உணர்ந்தேன். அதை நீங்கள் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடருங்கள் உங்கள் சேவையை. நன்றி./////

    அனுபவங்கள் மட்டுமே ஒருவனை மேன்மைப் படுத்தும். நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  46. /////Sekar said...
    உண்டு என்றால் அவன் உண்டு
    இல்லை என்றால் அவன் இல்லை.
    சில மனிதருக்கு இறைஉணர்வு இல்லை என்றாலும் நெறி உணர்வாகவாவது இருக்க நாம் இறைவனை வேண்டுவோம்.
    கிரகங்களின் உச்சம் நட்பு பகை நீசம் சந்தர்பங்களில் பலம் என்ன என்று சொல்லி இருக்கறீர்கள். நீச்சபங்கமான கிரகங்களின் பலம் என்ன என்று அறியலாமா?
    நீங்கள் ஏற்கனவே சொல்லி மறுபடியும் கேட்கிறோனோ?////

    அது பற்றி பழைய பாடங்களில் நிறைய உள்ளன. தேடிப்படிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  47. //////ananth said...
    தங்கள் அனுபவங்களை இங்கே பல்வேறு சமயங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறீகள். இப்போதும் பகிர்ந்து கொண்டீகள். இதில் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் என்னால் அறிய முடிகிறது. என்னை ஜோதிடம் எப்படி பிடித்துக் கொண்டது அல்லது அணைத்துக் கொண்டது என்பதை பின்னாளில் சொல்கிறேன்.
    பாடல்கள் பல தடவை கேட்டதுதான் என்றாலும் அதை எழுதி படிக்கும் போதுதான் அதன் அர்த்தங்களை முழுமையாக உணர முடிகிறது.
    வேலை கிடைக்க வேண்டுமானால் கர்ம காரகன் சனி உதவ வேண்டும், அதில் ஆற்றல்/திறமையை வெளிப்படுத்த செவ்வாயின் அனுக்கிரகம் வேண்டும். சரிதானே.////

    சரிதான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இறுதியாக, ஜோதிடத்தில் எது எதை அடிப்படையாக கொண்டது என்று ஆராய்ந்தால்தான் இதை நாம் கண்மூடித்தனமாக நம்பவில்லை அல்லது ஏற்று கொள்ளவில்லை என்பதை பிறருக்கு உணர வைக்க முடியும். நேற்று காலசர்ப யோகத்திற்கு சொன்னது இதற்காகத்தான்.//////

    உண்மைதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  48. /////kmr.krishnan said...
    சனாதன தர்மத்தில்(இந்து) நாத்திகமும் ஒரு தத்துவமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த நாத்திக ரிஷியின் பெயர் சார்வாகர்.
    அவருடைய நிரீஸ்வர வாதம், வேதம் படிப்பவர்களுடைய பாடத்திட்டத்தில்
    முக்கிய இடம் பெற்று இருந்துள்ளது.எனவே வேதம் முழங்கும்"அறிவு எல்லாத் திசைகளிருந்தும் எங்க‌ளை வந்து சேரட்டும்" என்பது நாத்திக வாதத்தையும் சேர்த்தே எடுத்துக்கொள்ளப்படுகிறது.என்ன‌! நாத்திக‌த்தை ச‌ரியாக‌ப்ப‌டித்து, ஆர‌வார‌ம் த‌விர்த்து, அர‌சிய‌ல் த‌விர்த்து,ச‌ம்வாத‌ம் செய்ய முன் வ‌ந்தால் ம‌கிழ்வுட‌ன் வ‌ர‌வேற்று அவ‌ர்க‌ள் சொல்வ‌தில் உள்ள‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ஏற்க‌லாம்.வாதத்‌தில் வெற்றி பெற‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌
    திரிபு வாத‌ம் செய்யாம‌ல்,ந‌‌ல்ல‌து கெட்ட‌தை அல‌சி ஆராய்ந்து மாற்ற‌‌ம் கொண‌ர‌ ந‌ல்லெண்ண‌ம் கொண்ட‌ நாத்திக‌ர்க‌ள் எப்போதும் ம‌திப்பாக‌வே ந‌ட‌த்த‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.
    பிள்ளையார் பூஜையில் ப‌ல்வேறு தாவ‌ர‌ங்க‌ள், இலை, பூக்க‌ள், காய், க‌னிக‌ள்
    தேவைப் ப‌டுகின்ற‌ன‌.அந்த‌ ப‌ட்டிய‌ல் பூஜை முறையில் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.'பாடனி' பாட‌மாக‌ப் பார்க்கக் க‌ற்றுக் கொண்டால் மூட‌ந‌ம்பிக்கை க‌ண்ணில் ப‌டாது.குழந்தைக‌ளை அழை‌த்துச் சென்று சேக‌ர‌ம்
    செய்யும் போது தாவ‌ர‌ இய‌ல் செய‌ல்முறை வ‌குப்புத்தானே!தீப‌த்தை
    வைத்துக்கொண்டு திருக்குற‌ளும் ப‌டிக்க‌லாம்.கூரையையும் எரிக்க‌லாம்.
    எல்லாம் அவ‌ர‌வ‌ர் க‌ண்ணோட்ட‌ந்தான்.த‌ங‌க‌ள் க‌ட்டுரை அருமை./////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்1

    ReplyDelete
  49. /////kannan said...
    அப்பனே!!!
    வணக்கம்
    இறைபக்தி @ ஜோதிட நம்பிக்கை என்பது அவரவர் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் வருவது என்பது அடியேனின் கருத்து ஐயா
    சான்றுகள் உள்ளன அதற்க்கு அடியேனே சாட்சி
    எனது தந்தையார் கூறியது
    என்தந்தை, என்தாத்தா , தந்தையின் ஆச்சி உட்பட வழி வழியாக ஜோதிடம் ( தொழில் முறை ஜோதிடர்கள் ஒருவரும் அல்ல !) அறித்தவர்கள் ஐயா
    1 . எனது தந்தையார் ராணுவத்தில் தான் பணிபுரிவார் என்றும் ஆண் குழந்தைக்கு
    மந்தம் என்று எனது தாத்தா சொல்லியும் நம்பாத என்தந்தை 6 - வது ஆக என்னை பெற்ற பின்னர்தான் தெய்வம் @ ஜோதிடத்தில் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வந்தது என்பார் .
    இராமேஸ்வரம் சென்று மாயகண்ணா என்று பெயர் இடும் அளவிற்கு நம்பினார் ஐயா
    2 எனது நண்பர்கள் எனக்கு இட்டுள்ள பெயர் சாமியார் ( இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமை தன் காரணம் )
    3 ஜோதிடம் , பரதம் , சங்கீதம் , சாஸ்த்ரம் , ஆயகலைகள் 64 - க்கும் நமது முன்னோர்கள் நமக்கு தந்த பொக்கிஷம் அல்லவா ஐயா
    4 தாய் தந்தையருக்கு மேல் தான் தெய்வம் என்று நம்பும் அல்லது நம்பாத இந்த கலி உலகத்தில் ஐயா எவ்வளவு சொல்லியும் ஒன்றும் மாறபோவது இல்லை ஐயா
    5 தாங்கள் சொன்னது போல் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம் அது அவரவர் வாங்கி வந்த வரத்தை வைத்தது அல்லவா ஐயா!!!!!!!!!/////

    நல்லது ஐயனே, நன்றி!

    ReplyDelete
  50. /////krish said...
    ஏரோட்டும் தோழர்களெல்லாம் ஏங்கி தவிக்கையில் தியாகேசா தேரோட்டம் உனக்கு ஒரு கேடா என்று எழுதியவர் முயற்சியால் 1970ல் பல ஆண்டுகள் கழித்து தேர் மீண்டும் ஓடியது. தியாகேசனின் திருவிளையாடல்தான்.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. Present Sir...

    Till now I didn't get the email lesson regarding 10th house...If you forgot,send it today please...please...Every time I only get delay in receiving email lesson...May be because of saturn in 10th according to my lagna...

    Kindly send the lesson...please.

    ReplyDelete
  52. தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்

    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை


    இறை உணர்வு இல்லை என்றாலும் நெறி உணர்வாவது வேண்டும் அல்லவா.

    கிரகங்களின் உச்ச, நீச, நட்பு,பகை பலம் பல முறை சொல்லி இருக்கறீர்கள். நீசபங்க நிலையில் கிரகங்கள் பலம் சொல்வீர்களா.

    நன்றி

    ReplyDelete
  53. Thanks for your answer. I have wrongly sent my comment twice.Pl ignore the second. Sorry.

    ReplyDelete
  54. மாசே !!!!!!!!!

    தாங்கள் சொல்லி உள்ளதில்
    முதல் 10 வருட (சந்திரன் ) பலன் 100 % சரியாக உள்ளது ஆசானே!!!!!!

    இரண்டாவதில் (புதன்) 60 % சரி

    3 - வதில் கழித்தல் (100 % நெகடிவ் பலன் ஐயா ) 100 % சரி

    4 - வது மற்றும் அதற்க்கு மேல் உள்ளதை எதிர் நோக்கி உள்ளேன்

    இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா !!!!

    கும்ப லக்னம், 10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் ஆட்சி ( நீசபங்க ராஜயோகம் அல்லவா?) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை நல்லது அப்படி தானே? இந்த அமைப்பு ( செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹா ய்த்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள யோகத்தில் வருமா ஐய!!!

    தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய குழப்பம் ஐயா!!!1

    ஐயா தயவ் பதில் சொல்ல வேண்டும் குருவே!!!

    ReplyDelete
  55. வணக்கம் ஐயா

    I am out of my home so unable to attend class for the past two days. I dint get the lessons regards 10th house kindly send me the lesson. Eagerly waiting for the lesson.

    (I would like to write lot about today's review, but I dont have the Tamil Typing since I am outside. )

    Thank You.

    ReplyDelete
  56. ஐயா வணக்கம்,
    தேவ குருவே நேரில் காட்சி தந்த மாதரி உங்க புகைப்படம் எனக்கு சந்தோஷததை தந்தது. மேலும் பாலும் பழமும் பாட்டு நல்லாயிருந்தது
    மேலும் ஆன்மிகம்,சிறுவர்களின் மனநிலை,ஜோதிடம் எல்லாவற்றையும் சேர்த்து நானும் ஜோதிடமும் என்ற தலைப்பில் மிகவும் நல்ல பதிவை தந்திங்க அது மூக்கனியை போல எனக்கு இனித்தது. சந்திரன் நல்லாயிருந்தது நல்லா அம்மாவை தந்தது, புதன் நல்லாயிருந்தது பட்ட்ங்களையும் diploma எல்லா ரொம்ப தந்தது இந்தியிலும் நிறைய பட்டங்களை கொடுத்தது. சுக்கிரன் கேதுவுடன் கெட்டுவிட்டார் என்னால் குடும்ப வாழ்க்கை அமைத்து கொளள இயலவில்லை உங்கள் ஜாதக பதிவு எனக்கு பொறுத்தமாயிருக்கிறது.
    சுந்தரி.

    ReplyDelete
  57. அன்பு ஆசிரியருக்கு,வணக்கம்.நல்ல உருக்கமான பதிவு.மனிதத்தன்மை உள்ளவர்களுக்குப் புரிகின்ற பதிவு..
    7அரைச்சனியின் முதல் சுற்று முடிந்தால் சற்று நமது முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தி இருப்பது புலப்பட்டு விடும்.எனக்கும் அப்போதிலிருந்துதான் புலப்பட்டது.
    பின்னர் சிற்சில புத்தகங்களின் வாயிலாக விஷயங்களின் கோர்வையையும் விளைவுகளையும் பொருத்திப்பார்த்து
    பொருந்திப்போவதை உணர்ந்தேன்.
    உண்மையில் எங்கள் குடும்பம் ஒரு பகுத்தறிவு வழியில் வந்தது.
    என் தாய் தந்தையரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர்
    அய்யா பெரியார் இ.வே.ரா.அவர்களேதான்.
    முதல் முறையாக எங்கள் தாலுகாவிற்கு அய்யா வந்ததே இந்த திருமண விழாவிற்குத்தான்.
    என் தாத்தாதான் எங்கள் பகுதியின் அப்போதைய தி.க.தலைவராக இருந்தார்.
    அதனால் இன்னமும் என்னால் மூடப்பழக்கவழக்கங்களை சற்றும் ஏற்க முடிவதில்லை.
    பல்வேறு முரண்பாட்டுடன் கூடிய கேள்விகள் பலப்பல எழுகின்ற விஷயமாகத்தான் நமது உருவவழிபாடு இன்னமும் எனக்கு புரியாத புதிராகவே விளங்குகிறது.
    உங்கள் பாடங்களில் உள்ள சுவையுடன் கூடிய தனிநடை உணர்வுகளை மனப்படமாக்கி காட்டும் தன்மை மிக அலாதியானது..
    ஆழ்ந்த தீர்கமான ஆன்மிகவாதியாக உங்களை உங்களின் இந்த போட்டோ காண்பித்திருக்கிறது.
    மீண்டும் வணக்கங்கள்..

    ReplyDelete
  58. Good morning sir,
    It's good to see, hear about your experiences with jothidam. Thanks for sharing ur young photo with us!!! I don't know if jothidam could be genetic, becoz my dad's father used to write குறிப்பு & thanks to you sir I know the basics of jothidam.
    Same time my grandfather used to remove posion from snake bites, to save people, and he lost 6 of his own children becoz of that!!! This was in Sri Lanka, but still a lot of people respects him for his occult knowledge!!!Just wanted to share this becoz முதல் ஜோதிடம் பற்றி ஒன்னும் தெரியாது, இப்போ நான் அம்மாக்கு சொல்லுவேன் எனக்கு தெரிஞ்சதை , அப்படித்தான் எனக்கு தெரியும், அப்பாவை பற்றி.
    Thanks
    Thanuja////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~
    In Ceylon, அப்பாவுடைய அப்பாவை அப்பப்பா என்றும், அம்மாவுடைய அப்பாவை அம்மப்பா என்று சொல்லுறனாங்க. என்னுடைய அப்பா இருக்குறார், என்னுடைய அப்பப்பாவின் முதல் ஆறு பிள்ளைகள் தான் இறந்துவிடினும். Just wanted to clear that out sir!!!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  59. Ayya your photo is good..Please keep on posting your life experiences..Thank you..

    ReplyDelete
  60. //ஆமாம், இறைவனை உணரவைத்தது. யாரும் அவனை உணர்ந்துதான் அறிந்து கொள்ள முடியும். நேரில் பார்த்தவர்கள் எவரும் இல்லை.//

    இதுதான் அறியாமைன்னு சொல்வது !

    அது எப்படி யாரும் இல்லைன்னு உறுதியாகச் சொல்கிறீர்கள் ? நமக்கு தெரிந்தவர்கள் நாம் வாழும் காலத்தில் வாழுபவர்கள் ஒரு நூற்றாண்டினர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னால் உள்ளவர்களில் பார்த்திருப்பவர்கள் இருக்கலாம் இல்லையா ?

    இராம கிருஷ்ண பரமஹம்சர் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே !
    :)

    ReplyDelete
  61. ஆசிரியருக்கு வணக்கப்பூக்கள்!

    வாழ்வியலை பலபேர் வகுத்து தங்கள் கருத்துக்களை கொடுத்துள்ளனர் (கவியரசிலிருந்து முத்துக்கவிஞர் ஈராய் சூப்பர் ஸ்டார்வரை). பத்து பத்தாய் நீங்கள் பிரித்து விளாசிவிட்டீர்கள்!

    அத்தனையும் உண்மை!
    அனுபவப் பெருமை!

    நன்றி மலர்கள்!

    -அன்புடன்,
    லலித்.

    ==================================
    //அது எப்படி யாரும் இல்லைன்னு உறுதியாகச் சொல்கிறீர்கள் ? நமக்கு தெரிந்தவர்கள் நாம் வாழும் காலத்தில் வாழுபவர்கள் ஒரு நூற்றாண்டினர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னால் உள்ளவர்களில் பார்த்திருப்பவர்கள் இருக்கலாம் இல்லையா ?//


    நண்பர் கோவி கண்ணன் அவர்களுக்கு:

    "விண்டவர் கண்டிலர்
    கண்டவர் விண்டிலர்"

    என்று கண்டவரும், விண்டவரும் விண்டிருக்க, காண முயற்சிக்கும் நாம் விண்டியவரை கிண்டினால் சரியா? எப்படியோ, உங்கள் போன்றவர்களின் கருத்துக்களால் வகுப்பறை சற்று கலகலக்கும்.
    ஹி... ஹி......

    தவறிருந்தால் பொறுத்தருள்க!

    =================================

    ReplyDelete
  62. வணக்கம் ஐயா,
    தங்களின் அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்திற்கும், அதைச் செயல் படுத்த இணையத்தைத் தேர்ந்தெடுத்த அறிவாற்றலுக்கும் தலை வணங்குகிறேன் ...இறையின் மேல் 50% நம்பிக்கை நிலையை இப்பொழுது தான் தொட்டுக் கொண்டிருக்கிறேன் ..

    ReplyDelete
  63. ஐயா பதிவை பார்த்ததும் மனது எனவோ செயித்தது ..... என்னுடைய ஜாதகத்தில் சந்திரன் நீசம்.. அம்மாவை விட்டு பாட்டி வீட்டில் தான் 13 வயசு வரை வளர்ந்தேன் .

    கடவுளை பல இடங்களில் உணர்ந்து இருகிறேன் ... பூமி பிளந்து போக போகிறேன் எண்டு கவலை வரும் பொது எதோ ஒரு சக்தி
    என்னை காப்பதும்.இதோ இந்த நிமிடமும் ஒரு சக்தி கூட ஏறுகிறது ... sugar இனிப்பு என்று எப்படி சாபிட்டால் தெரியுமோ அதுபோல் உணர்தவனுக்கு தான் அதன் சுகம் , இனிமை அல்லாம் தெரியும்.

    சின்ன வயதில் அப்பா LFC போட்டு கோவில் கோவில் அக அழைத்து கொண்டு போகும் பொது காடவுளை உணர ஒரு பதை கேடைதது ....உலகத்தில் பெரிய சுகம் அது அண்டு உணர்தவனுக்கு தான் தெரியும்....

    இபோதும் பெரிய கவலை இல்லை எண்டாலும் பிரச்சனை இல்லாத நாள் இல்லை .தங்கும் மனது அவன் தந்து இருக்கிறான், அது போதும் ....அவனை உணர வைத்து அவனுக்கு பல கோடி நன்றி .

    ஜோதிடம் படிக்க இங்கே வந்தேன் அனல் ஓங்கல் தன்நம்பிக்கை எழுதுக்க வருகிறேன் .... ஒரு வரம் லீவ் விட்டால் misssing some thing....

    Thanks a lot sir....Now feel like you are a family member in my house... வீட்டுக்கு வந்து குழந்தைகளை வீட்டில் ஒள்ள members பார்க்கும் எண்ணம் this பிளாக் வந்தால் வருகிறது...

    again thanks a lot.Praying god to give you good health..

    ReplyDelete
  64. கோவி.கண்ணன் அவர்களுக்கு!இராமகிருஷ்ணரின் உரையாடல்களை அவருடைய அநுமதி பெற்று எழுதி வைத்தவர் மஹேந்திரநாத குப்தர்‍என்னும்
    மாஸ்டர் மகாசயர்.அமுதமொழிகளில் 'ம'என்று குறிப்பிடப்படுபவர்.
    'ம'ஒரு நாள் பரமஹம்ஸரை நேரடியாகவே கேட்டார்:"இறைவன் எப்படித்
    தோற்றமளிக்கிறார்?" பரமஹம்ஸர் நீண்டநேரம் மெளனமாக இருந்துவிட்டு
    ஏதோ சிறிது விளக்கினார்.என்ன விளக்கம் என்பதை 'ம'ப‌திவு செய்யவில்லை
    "உப்பு பொம்மை ஒன்று க‌ட‌லில் ஆழ‌த்திற்குச் செலுத்த‌ப்ப‌ட்டு க‌ட‌லின் அள‌வு
    காண‌ முய‌ற்சித்தால் யார் மீண்டு வ‌ந்து விடை சொல்ல முடியும்?" என்பார்
    ப‌ர‌ம‌ஹம்ச‌ர்.உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான் பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.அவர் மூலமாக இறைக் காட்சி பெற்ற‌
    சுவாமி விவேகானதரும்,"ஒரு உயிரற்ற உடல், மயானம் ஆகியகாட்சிகளைக்
    கண்டேன்"என்றார்.என்ன பொருள்? வாழ்க்கை நிலையாமை அவருக்கு உணர்த்தப்பட்டது."இறைவன் ஒருவனே இன்னும் எச்சில் படாதவன்" என்பார்
    பரமஹம்சர்.என்ன பொருள்?வாய் மூலம் முழுமையாகக் கூறப்படாதவன்
    என்பது பொருள். "பார்க்கும் இட‌ம் எங்கும் ஒரு நீக்க‌ம் அற‌ நிறைகின்ற‌
    ப‌ரிபூர‌ண‌ ஆனந்த‌ம், சுக‌வாரி,அமிர்த‌ம்,........"

    ReplyDelete
  65. பாடம் அருமை, உங்கள் புகைப்பட்த்தில் ஒரு ஞானசெருபியாய் காட்சியளிக்கிறிர்கள், Nice.

    ReplyDelete
  66. Paramahamsar told Swami Vivekananda "Yes I see God as I see you and Others" That bold assertion impressed Vivekananda.He might have lived in some other dimention which we may not be in.Ramana Maharishi had the spiritual experience all of a sudden without his trying for it. Ehcart Tolle in his book "The Power of Now" and talks explains how his experience was like. We can see some similarities in the experiences of all Spiritually enlightened people.

    ReplyDelete
  67. ////Sekar said...
    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை
    இறை உணர்வு இல்லை என்றாலும் நெறி உணர்வாவது வேண்டும் அல்லவா.
    கிரகங்களின் உச்ச, நீச, நட்பு,பகை பலம் பல முறை சொல்லி இருக்கறீர்கள். நீசபங்க நிலையில் கிரகங்கள் பலம் சொல்வீர்களா.
    நன்றி//////

    பலமுறை சொல்லியிருக்கிறேனே சாமி. பழைய பாடங்களைப் படியுங்கள்!

    ReplyDelete
  68. /////kannan said...
    மாசே !!!!!!!!!
    தாங்கள் சொல்லி உள்ளதில்
    முதல் 10 வருட (சந்திரன் ) பலன் 100 % சரியாக உள்ளது ஆசானே!!!!!!
    இரண்டாவதில் (புதன்) 60 % சரி
    3 - வதில் கழித்தல் (100 % நெகடிவ் பலன் ஐயா ) 100 % சரி
    4 - வது மற்றும் அதற்க்கு மேல் உள்ளதை எதிர் நோக்கி உள்ளேன்
    இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக

    உள்ளேன் ஐயா !!!!
    கும்ப லக்னம், 10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன்

    ஆட்சி ( நீசபங்க ராஜயோகம் அல்லவா?) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை நல்லது அப்படி தானே?

    இந்த அமைப்பு ( செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹயுத்ததில் வருமா அல்லது சந்திரமங்கள யோகத்தில் வருமா

    ஐய!!! தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய

    குழப்பம் ஐயா!!!1
    ஐயா தயவு பதில் சொல்ல வேண்டும் குருவே!!!/////

    அந்த மூன்று கிரகங்களும், ஒருவருக்கொருவர் எததனை பாகைகள் இடைவெளியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துப் பலன்கள் மாறும்! பழைய பாடங்களைப் படியுங்கள். சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்க வேண்டாம்!

    சந்திரமங்கள யோகத்தைப் பற்றிய பாடம் செப்டம்பர் 10தேதிப் பதிவில் உள்ளது. விவரமாக உள்ளது படித்துப் பாருங்கள்

    ReplyDelete
  69. /////Success said...
    வணக்கம் ஐயா
    I am out of my home so unable to attend class for the past two days. I dint get the lessons regards 10th

    house kindly send me the lesson. Eagerly waiting for the lesson.
    (I would like to write lot about today's review, but I dont have the Tamil Typing since I am outside. )
    Thank You.

    அது நீண்ட பாடம். எழுதும் வேலை இன்னும் நிறைவு பெறவில்லை. முடிந்தவுடன் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  70. /////sundari said...
    ஐயா வணக்கம்,
    தேவ குருவே நேரில் காட்சி தந்த மாதரி உங்க புகைப்படம் எனக்கு சந்தோஷததை தந்தது. மேலும் பாலும் பழமும் பாட்டு நல்லாயிருந்தது
    மேலும் ஆன்மிகம்,சிறுவர்களின் மனநிலை,ஜோதிடம்எல்லாவற்றையும் சேர்த்து நானும் ஜோதிடமும் என்ற தலைப்பில் மிகவும் நல்ல பதிவை தந்திங்க அது மூக்கனியை போல எனக்கு இனித்தது. சந்திரன் நல்லாயிருந்தது நல்லா அம்மாவை தந்தது, புதன் நல்லாயிருந்தது பட்ட்ங்களையும் diploma எல்லா ரொம்ப தந்தது இந்தியிலும் நிறைய பட்டங்களை கொடுத்தது. சுக்கிரன் கேதுவுடன் கெட்டுவிட்டார் என்னால் குடும்ப வாழ்க்கை அமைத்து கொளள இயலவில்லை உங்கள் ஜாதக பதிவு எனக்கு பொறுத்தமாயிருக்கிறது.
    சுந்தரி./////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  71. /////minorwall said...
    அன்பு ஆசிரியருக்கு,வணக்கம்.நல்ல உருக்கமான பதிவு.மனிதத்தன்மை உள்ளவர்களுக்குப் புரிகின்ற

    பதிவு..
    7அரைச்சனியின் முதல் சுற்று முடிந்தால் சற்று நமது முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தி இருப்பது

    புலப்பட்டு விடும்.எனக்கும் அப்போதிலிருந்துதான் புலப்பட்டது.
    பின்னர் சிற்சில புத்தகங்களின் வாயிலாக விஷயங்களின் கோர்வையையும் விளைவுகளையும்

    பொருத்திப்பார்த்து பொருந்திப்போவதை உணர்ந்தேன்.
    உண்மையில் எங்கள் குடும்பம் ஒரு பகுத்தறிவு வழியில் வந்தது.
    என் தாய் தந்தையரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர்
    அய்யா பெரியார் இ.வே.ரா.அவர்களேதான். முதல் முறையாக எங்கள் தாலுகாவிற்கு அய்யா வந்ததே இந்த
    திருமண விழாவிற்குத்தான். என் தாத்தாதான் எங்கள் பகுதியின் அப்போதைய தி.க.தலைவராக இருந்தார். அதனால் இன்னமும் என்னால் மூடப்பழக்கவழக்கங்களை சற்றும் ஏற்க முடிவதில்லை.
    பல்வேறு முரண்பாட்டுடன் கூடிய கேள்விகள் பலப்பல எழுகின்ற விஷயமாகத்தான் நமது உருவவழிபாடு இன்னமும் எனக்கு புரியாத புதிராகவே விளங்குகிறது.
    உங்கள் பாடங்களில் உள்ள சுவையுடன் கூடிய தனிநடை உணர்வுகளை மனப்படமாக்கி காட்டும் தன்மை மிக அலாதியானது..
    ஆழ்ந்த தீர்கமான ஆன்மிகவாதியாக உங்களை உங்களின் இந்த போட்டோ காண்பித்திருக்கிறது.
    மீண்டும் வணக்கங்கள்..//////

    நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் மைனர்வாள்! நன்றி!

    ReplyDelete
  72. //////Self Realization said...
    Ayya your photo is good..Please keep on posting your life experiences..Thank you..

    எழுதுகிறேன். நன்றி!

    ReplyDelete
  73. //////கோவி.கண்ணன் said...
    //ஆமாம், இறைவனை உணரவைத்தது. யாரும் அவனை உணர்ந்துதான் அறிந்து கொள்ள முடியும். நேரில்

    பார்த்தவர்கள் எவரும் இல்லை.//
    இதுதான் அறியாமைன்னு சொல்வது !
    அது எப்படி யாரும் இல்லைன்னு உறுதியாகச் சொல்கிறீர்கள் ? நமக்கு தெரிந்தவர்கள் நாம் வாழும்

    காலத்தில் வாழுபவர்கள் ஒரு நூற்றாண்டினர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னால்

    உள்ளவர்களில் பார்த்திருப்பவர்கள் இருக்கலாம் இல்லையா ?
    இராம கிருஷ்ண பரமஹம்சர் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே ! :)////

    உங்களுக்கு அறியாமை இல்லாதவர்கள் யாராவது வந்து பதில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  74. //////கோவி.கண்ணன் said...
    //ஆமாம், இறைவனை உணரவைத்தது. யாரும் அவனை உணர்ந்துதான் அறிந்து கொள்ள முடியும். நேரில்

    பார்த்தவர்கள் எவரும் இல்லை.//
    இதுதான் அறியாமைன்னு சொல்வது !
    அது எப்படி யாரும் இல்லைன்னு உறுதியாகச் சொல்கிறீர்கள் ? நமக்கு தெரிந்தவர்கள் நாம் வாழும்

    காலத்தில் வாழுபவர்கள் ஒரு நூற்றாண்டினர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னால்

    உள்ளவர்களில் பார்த்திருப்பவர்கள் இருக்கலாம் இல்லையா ?
    இராம கிருஷ்ண பரமஹம்சர் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே ! :)////

    உங்களுக்கு அறியாமை இல்லாதவர்கள் யாராவது வந்து பதில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  75. /////லலித் said...
    ஆசிரியருக்கு வணக்கப்பூக்கள்!
    வாழ்வியலை பலபேர் வகுத்து தங்கள் கருத்துக்களை கொடுத்துள்ளனர் (கவியரசிலிருந்து முத்துக்கவிஞர்

    ஈராய் சூப்பர் ஸ்டார்வரை). பத்து பத்தாய் நீங்கள் பிரித்து விளாசிவிட்டீர்கள்!
    அத்தனையும் உண்மை! அனுபவப் பெருமை!
    நன்றி மலர்கள்!
    -அன்புடன்,
    லலித்.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  76. /////மதி வேங்கை said...
    வணக்கம் ஐயா,
    தங்களின் அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்னும் உயரிய
    எண்ணத்திற்கும், அதைச் செயல் படுத்த இணையத்தைத் தேர்ந்தெடுத்த அறிவாற்றலுக்கும் தலை
    வணங்குகிறேன் ...இறையின் மேல் 50% நம்பிக்கை நிலையை இப்பொழுது தான் தொட்டுக்
    கொண்டிருக்கிறேன் ..////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  77. /////Priya said...
    ஐயா பதிவை பார்த்ததும் மனது என்னவோ செய்தது ..... என்னுடைய ஜாதகத்தில் சந்திரன் நீசம்.. அம்மாவை விட்டுப் பாட்டி வீட்டில் தான் 13 வயசு வரை வளர்ந்தேன் .
    கடவுளைப் பல இடங்களில் உணர்ந்து இருகிறேன் ... பூமி பிளந்து போகப் போகிறேன் என்று கவலை வரும் போது எதோ ஒரு சக்தி என்னைக் காப்பதும்.இதோ இந்த நிமிடமும் ஒரு சக்தி கூட ஏறுகிறது ... sugar
    இனிப்பு என்று எப்படி சாபிட்டால் தெரியுமோ அதுபோல் உணர்தவனுக்கு தான் அதன் சுகம் , இனிமை எல்லாம் தெரியும்.
    சின்ன வயதில் அப்பா LFC போட்டு கோவில் கோவிலாக அழைத்துக் கொண்டு போகும் பொது கடவுளை உணர ஒரு பாதை கேடைதது ....உலகத்தில் பெரிய சுகம் அது என்று உணர்தவனுக்குத்தான் அது தெரியும்....
    இபோதும் பெரிய கவலை இல்லை என்றாலும் பிரச்சனை இல்லாத நாள் இல்லை .தாங்கும் மனதை அவன் தந்து இருக்கிறான், அது போதும் ....அவனை உணர வைத்து அவனுக்கு பல கோடி நன்றி .
    ஜோதிடம் படிக்க இங்கே வந்தேன் ஆனல் உங்கள் தன்நம்பிக்கை எழுதுக்கும் வருகிறேன் .... ஒரு வாரம் லீவ் விட்டால் misssing some thing....
    Thanks a lot sir....Now feel like you are a family member in my house... வீட்டுக்கு வந்து குழந்தைகளை வீட்டில் உள்ள members பார்க்கும் எண்ணம் this பிளாக் வந்தால் வருகிறது...
    again thanks a lot.Praying god to give you good health..////

    உங்களுடைய அன்பிற்கும், பரிவிற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  78. /////kmr.krishnan said...
    கோவி.கண்ணன் அவர்களுக்கு!இராமகிருஷ்ணரின் உரையாடல்களை அவருடைய அநுமதி பெற்று எழுதி வைத்தவர் மஹேந்திரநாத குப்தர்‍என்னும்
    மாஸ்டர் மகாசயர்.அமுதமொழிகளில் 'ம'என்று குறிப்பிடப்படுபவர்.
    'ம'ஒரு நாள் பரமஹம்ஸரை நேரடியாகவே கேட்டார்:"இறைவன் எப்படித் தோற்றமளிக்கிறார்?" பரமஹம்ஸர் நீண்டநேரம் மெளனமாக இருந்துவிட்டு
    ஏதோ சிறிது விளக்கினார்.என்ன விளக்கம் என்பதை 'ம'ப‌திவு செய்யவில்லை
    "உப்பு பொம்மை ஒன்று க‌ட‌லில் ஆழ‌த்திற்குச் செலுத்த‌ப்ப‌ட்டு க‌ட‌லின் அள‌வு காண‌ முய‌ற்சித்தால் யார் மீண்டு வ‌ந்து விடை சொல்ல முடியும்?" என்பார்
    ப‌ர‌ம‌ஹம்ச‌ர்.உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான்
    பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.அவர் மூலமாக இறைக் காட்சி பெற்ற‌
    சுவாமி விவேகானதரும்,"ஒரு உயிரற்ற உடல், மயானம் ஆகியகாட்சிகளைக் கண்டேன்"என்றார்.என்ன பொருள்? வாழ்க்கை நிலையாமை அவருக்கு உணர்த்தப்பட்டது."இறைவன்
    ஒருவனே இன்னும் எச்சில் படாதவன்" என்பார் பரமஹம்சர்.என்ன பொருள்?வாய் மூலம் முழுமையாகக்
    கூறப்படாதவன் என்பது பொருள். "பார்க்கும் இட‌ம் எங்கும் ஒரு நீக்க‌ம் அற‌ நிறைகின்ற‌
    ப‌ரிபூர‌ண‌ ஆனந்த‌ம், சுக‌வாரி,அமிர்த‌ம்,........"//////

    விரிவான உங்கள் பதிலுக்கும், என்னுடைய வேலையை எளிதாக்கிவிட்ட உங்கள் உதவிக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com