மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.09

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

பதிவர்களில் சிலர், "சார், பின்னிப் பெடல் எடுத்து விட்டீர்கள்!" என்று
எழுதுவார்கள். அது என்னவென்பது இன்றுவரை எனக்கு முழுமையாகத்
தெரியவில்லை.

ஏனென்றால் அதை பாராட்டுவதற்கும் உபயோகிக்கிறார்கள். அதேபோல
ஒரு விஷயத்தைக் குடைவதற்கும் உபயோகிக்கிறார்கள்

அதைப் பற்றித் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

ஜோதிடரை ஒருவன் எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

கீழே எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்
----------------------------------------------------------------------------------------------

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், ஒரு ஜோதிடர் செய்ய வேண்டிய
சில முக்கியவேலைகளைக் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.

1. ஜாதகம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஜாதகனின் பிறந்த நாள்
நேரத்துடன் கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக அமைப்புக்கள் சரியாக
உள்ளதா என்றும் பிறப்பு திசையின் இருப்பும் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா
என்று சோதித்துப் பார்க்க ('Check Up' செய்ய) வேண்டும்.

தன்னிடம் உள்ள பஞ்சாங்கங்களை வைத்து அதைப் பார்ப்பார். இப்போது
அதற்கு வேலை இல்லை. கணினி ஜாதகம் என்றால் துல்லியமாக இருக்கும்

2. லக்கின பாவம், பூர்வ புண்ணிய பாவம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம்
ஆகியவைகள் (That is the first house, fifth house, ninth house and eleventh
house) நன்றாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். They are the primary
houses for the prosperity of the native of the horoscope

3. ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன. எத்தனை கிரகங்கள்
ஆட்சியில் உள்ளன. எத்தனை கிரகங்கள் நீசமாகி உள்ளன என்றும் அவைகள்
ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு சம்பந்தப்பட்டவை என்றும் குறித்துக் கொள்ள
வேண்டும்

4. அஷ்கவர்க்கம் தெரிந்த ஜோதிடராக இருந்தால், வீடுகளின் பரல்களையும்
கிரகங்களின் சுய வர்க்கப் பரல்களையும் குறித்துக் கொள்ள வேண்டும்

5. நடப்பு திசையையும், நடப்பு புத்தியையும் குறித்துக் கொள்ள வேண்டும்
(The detail of the present Dasa and present sub period in that dasa)

6. நடப்பு கோள்சாரம். இன்றைய கோள்சாரம் ஜாதகனின் சந்திர ராசியில்
இருந்து எந்தெந்த பாவங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்னும் விவரம்
அதாவது ஜாதகனுக்கு ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி நடக்கிறதா?
குரு 1 அல்லது 3 ல் இருந்து தொல்லை கொடுக்கிறாரா என்பது போன்ற
விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

7. ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்று குறித்துக் கொள்ள
வேண்டும்.

இதையெல்லாம் குறித்துக் கொண்ட பிறகுதான் அவர் ஜாதகனுடன் பேசவே
செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் பிரபல ஜோதிடர்கள் தங்கள் உடன்
இருக்கும் சிஷ்யனை வைத்து, அல்லது அதற்கென்று அமர்த்தியிருக்கும்
பணியாளரை வைத்து இதையெல்லாம் செய்து கொள்வார்கள்

இப்போது அப்படி யாரும் செய்வதாகத் தெரியவில்லை. அதுதான் சோகம்

யாருக்கும் நேரமில்லை. பார்ப்பவருக்கும் நேரமில்லை. பார்க்க வருபவனுக்கும்
நேரமில்லை. எல்லாம் அவசரகதி அல்லது ஓட்டம்!
------------------------------------------------------------------------------------------------------
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

அதுதான் ஆயுள் பாவம்!

ஆயுள் பாவத்தைப் பார்க்காமல், பலன் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு மாதத்தில் விபத்தில் இறக்க இருப்பவனுக்கு, ஆறு மாதங்களில் திருமணம்
நடக்கும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

ஜாதகத்தைக் கொண்டு வந்தவன் (அதாவது இறந்து போனவனின் நண்பன்)
இரண்டாவது மாதமே வந்து ஜோதிடரைச் செம்மி விட மாட்டானா?
அல்லது பின்னிப் பெடல் எடுத்து விடமாட்டானா?

அந்தக் காலத்தில் ஜோதிடர்கள், ஜாதகத்தைக் கொண்டு வந்தவனுடன் பேசும்
முன்பாக, இது யாருடைய ஜாதகம் என்று கொண்டு வந்தவனையே கேட்டுத்
தெரிந்து கொள்வார்கள். அவன் தன்னுடையது என்று சொன்னால், சில
விஷயங்களை, குறிப்பாக ஆயுள் பாவத்தைப் பற்றி அவனுடன் பேச
மாட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டுப் பாடத்தின் அடுத்த பகுதி

நான்காம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்

1. சூரியன்

நன்மையல்ல! ஜாதகன் மனக்கவலைகள் மிகுந்தவன். மகிழ்ச்சி இராது.
ஒரு இடத்தில் இருக்க மாட்டான். சிலர் தத்துவங்கள், சாஸ்திரங்களில்
ஈடுபட்டுத் தங்களை மறந்திருப்பார்கள்.

இந்த அமைப்புள்ளவன் அரசியலில் ஈடுபட்டல் வெற்றி பெற முடியாது.
இங்கே இருக்கும் சூரியன், சனி அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால்
ஜாதகன் பல இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.

Sun: mental anxiety, enmity with relatives and bad effects to mother
--------------------------------------------------------------
2. சந்திரன்.

ஜாதகனுக்கு சொந்த வீடு இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இருக்கும்.
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன்னிறைவுடன் இருப்பான்.
சிலர் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் சிறு
வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். அல்லது இழக்க நேரிடும்.

இங்கே இருக்கும் சந்திரனைச் சுக்கிரன் பார்த்தால், ஜாதகன் தன்னுடைய
மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்வான். எதையும் என்பதற்குப் பல
அர்த்தங்கள் உண்டு. புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைக் குரு பார்த்தால், ஜாதகன் மிகவும்
நேர்மையானவன். தன்னுடைய செயல்களால் பலரது பாராட்டையும்
பெறுவான்.
----------------------------------------------------------------
3. செவ்வாய்

இது மோசமான நிலை. விரும்பத்தக்கது அல்ல! ஜாதகனுக்கு அவனது
அன்னை, உற்வினர்கள், மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி இராது.

அரசியலுக்குச் சென்றால் வெற்றி பெறுவான். தாயாருடனும் மற்றும்
குடும்ப உறவினர்களுடனும் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட நேரிடும்.

ஜாதகனுக்கு வீடு வாசல் இருக்கும். ஆனால் அவற்றால் மகிழ்ச்சி
இருக்காது.

செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளும் எண்ணத்துடன் இருப்பார்கள்.

Mars - bad for mother but acquisition of property and vehicles
will be there.
-----------------------------------------------------------------
4. புதன்

ஜாதகன் சிறந்த கல்வியாளனாக இருப்பான். சிலருக்குக் கெளரவப் பதவிகள்
வந்து சேரும். பலராலும் போற்றப்படுவான். பாராட்டப்படுவான். நல்ல
சொத்துக்கள் வாகன வசதிகளை உடையவனாக இருப்பான். அல்லது அவைகள்
வந்து சேரும்.

சிலர் இசையில் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் இசையில்
ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும்
அதன் காரணமாக பல நாடுகளுக்கும் அல்லது பல இடங்களுக்கும் சென்றுவரும்
வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். வாழ்த்தெரிந்தவர்கள்

Mercury - Intelligent, clever in speech, good education
and acquisition of property.
-----------------------------------------------------------------------------
5. குரு

அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின்
நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்
ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள்
எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட
மாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும்.

மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள்

Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.
----------------------------------------------------------------------------------
6. சுக்கிரன்

யோகமான அமைப்பு. தாயின் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள்.
சொத்து, சுகங்கள் இருக்கும் அல்லது வந்து சேரும். நல்ல குணமுடையவர்கள்
ஏராளமான நண்பர்களை உடையவர்கள். சிலர் இசையில் நாட்டமுடையவர்
களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

இவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Venus - Good for mother, Wealth, property, acquisition of jewels, vehicles etc.
If in his own house or the house of exaltation he causes Maalavya yoga
which is one of the Pancha Maha purusha yogas in astrology.
-----------------------------------------------------------------------------------
7. சனி

இளம் வயதில் நோஞ்சானக அல்லது நோயுற்றவனாக இருப்பார்கள்.
இளம் வயதில், தாய் மற்றும் தாயன்பு இல்லாமல் போயிருக்கும்.
கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது.
இருந்தாலும் அது கையில் கிடைப்பதற்கு பல அவஸ்தைகளைச்
சந்திக்க நேரிடும்.

சிலர் சுற்றத்தாரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கை
தனிமைப் பட்டுப் போகும். மகிழ்ச்சி இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இல்லையென்றால் மேற்கூறியவைகள்
அனைத்தும் நடக்கும்

Saturn: Saturn in 4th other than his good houses is not good.
Will be interrupted or prolonged beyond reasonable age of completion.
Bad for mother also.
----------------------------------------------------------------------------------
8. ராகு

மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.
சிலரின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கும்.

மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் மோசடிகளைச் செய்து
விட்டு அதனால் மன நிம்மதியில்லாமல் இருப்பார்கள்

Rahu - bad on the whole except when Rahu is exalted
---------------------------------------------------------------------------------
9. கேது

தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை.
சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும்.

வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச்
சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும்,
பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.

பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல!

Ketu: good for education but Mother will suffer great anxiety on account
of one child
---------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டைப் பற்றிய பாடம் முற்றிற்று!

அடுத்த பாடம் மூன்றாம் வீட்டைப் பற்றியது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

63 comments:

  1. Dear Sir

    Unmai than. Neengal Koorvadhu Atthanayum unmai. Ippoludhu Yaar ippadi piruchi menchi sollugirargal --(Sir thavira)..

    4th Lesson is very nice..Sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. Thanks for Today lesson. Entru naanthan muthal bench manavan.
    4th(mesham) place no graha but sukran and chandran 7 m parvai parkirarkal. viruchakathil erukum 4m athibathiyai guru 5m parvaiyaga kadakathil erunthu parkirar.. Palan enna sir?

    ReplyDelete
  3. ஐயா,
    எனக்கு நான்கில் சந்திரன். பலன் அருமை. ஆனால் உடன் ராகு உள்ளார். அதுதான் வருத்தமாக உள்ளது.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. ஐயா,
    நான் எனது பிளாக்கில் பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை கணக்கிட பதிவிட்டுள்ளேன். ஜோதிட சம்பந்தமாதலால் தாங்களும் நமது வகுப்பறை மாணவர்களும் அந்த தளம் சென்று பார்த்து அவர்களுடைய வயது,மாதம்.நாள் அறிந்துகொள்ள வேண்டுகின்றேன். தளமுகவரி:-

    http://velang.blogspot.com/

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. ஒரு ஸ்தானத்தில் கிரக பார்வையை வைத்து அதில் அக்கிரகம் இருப்பதாக வைத்து கொள்ளலாமா? 4ல் சுபக்கிரகம் இருந்தால் நன்மை, இல்லாவிட்டால் தீமை. இதற்கு ஏதும் விதிவிலக்கு உண்டா?

    ReplyDelete
  6. ஆமாம் ஐயா, ஆயுள் பாவம் , 90% சோதிடர்கள் முறையாக சொல்லுவதில்லை.எல்லோருக்கும் ஆயுள் நன்றாக உள்ளது என்பர்.

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா,

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள். ஜாதகம் (கணினி மூலமோ, கணக்குப் பண்ணியோ) சரியாக கணிப்பதற்கு, பிறப்பு நேரம், இடம் இவை மிகவும் முக்கியம். கையில் ஒரு (ஏற்கனவே மண்டபத்தில் யாராவது கொடுத்த) ஜாதகம் எடுத்தால், அந்த ஜாதகர் இப்போது இருக்கிறாரா (அல்லது 200 வருடத்துக்கு முந்தைய ஜாதகமா) என்று கூட அறிந்து கொள்ளாமல் பலன் சொல்ல ஆரம்பித்து விடும் போலி சோதிடர்களால், வேதாங்கமான சோதிட சாத்திரத்துக்கு அவப்பெயர். அதுபோலவே, பலன் சொல்வதற்கு முன்பு, ஜாதகம் யாருடையது என்றும், ஆயுள் சமாச்சாரங்களையும் நன்கு பரிசீலித்தும், தாங்கள் குறிப்பிட்டுள்ள அம்சங்களை நன்கு ஆராய்ந்த பிறகும்தான் நாடியவர்களுக்கு, ஜோதிட மூல வழி காட்ட வேண்டும்.
    மிக அழகான சோதிடக் கட்டுரை. நான்காம் வீடு பற்றிய தகவல்களும் மிக உபயோகமானவை.
    -அன்புடன்
    சீனு

    ReplyDelete
  8. ஐயா
    எனக்கு நான்கில் குருவும் (பரல் 6) கேதுவும் கூட்டணி போட்டு உள்ளனர். நாலாம் வீட்டின் பரல் 36.நாலாம் வீட்டில் குருவின் பலன்கள் சூப்பர். ஆனால் கேதுவின் பலன்கள் சரிஇல்லையே .இதில் எதை எடுத்து கொள்வது?

    ReplyDelete
  9. அய்யா எனக்கு நான்கில் (லக்னாதிபதி) சனி பார்வையுள்ள சூரியன் :-(((

    கடவுள் தான் நிம்மதியை தர வேண்டும்

    ReplyDelete
  10. நான்காம் வீடு காலியாக இருந்தால் - அதற்கும் ஏதாவது பலன் உண்டா?

    ReplyDelete
  11. ஐயா என் ஜாதகத்தில் 4ல் சனி, நீங்கள் கூறியது போல் தாயன்பு இல்லாமல் வளர்ந்தவன் இத்தனைக்கும் என் தாய் உயிருடன் உள்ளார். வாழ்க்கையும் தனிமை பட்டு போய் விட்டது. ஐயா ஆனால் எனது 4ம் வீட்டில் 32 பரல்கள் உள்ளதே?

    ReplyDelete
  12. ஐயா ,
    உங்கள் பாடங்களின் பக்கங்களை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்து உள்ளேன் , மிக மிக அருமை , ஒரு சிறு சந்தேகம் , தங்கள் ஜாதகம் கணிக்க கொடுத்து உள்ள சுட்டி [http://www.planetarypositions.com/birthchart.html ] எந்த முறையில் ஜாதகத்தை கணிக்கிறது , திருக்கணிதம அல்லது வாக்கிய பஞ்சாங்கமா ?

    ReplyDelete
  13. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Unmai than. Neengal Koorvadhu Atthanayum unmai. Ippoludhu Yaar ippadi piruchi menchi sollugirargal --(Sir thavira).
    4th Lesson is very nice..Sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////////Blogger krish said...
    Thanks for the lesson./////////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  15. ////////////Blogger VA P RAJAGOPAL said...
    Thanks for Today lesson. Entru naanthan muthal bench manavan.
    4th(mesham) place no graha but sukran and chandran 7 m parvai parkirarkal. viruchakathil erukum 4m athibathiyai guru 5m parvaiyaga kadakathil erunthu parkirar.. Palan enna sir?/////////////

    பல கிரகங்களின் பார்வையால் mixed result!

    ReplyDelete
  16. /////////Blogger வேலன். said...
    ஐயா,
    எனக்கு நான்கில் சந்திரன். பலன் அருமை. ஆனால் உடன் ராகு உள்ளார். அதுதான் வருத்தமாக உள்ளது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.///////////

    வருத்தப் படுவதற்காக அவர் விலகிப் போவாரா என்ன? வருத்தத்தை விடுங்கள். ஜாதகத்தில் உள்ள மற்ற அம்சங்களை நினைத்து தைரியமாக இருங்கள்!

    ReplyDelete
  17. ///////////Blogger வேலன். said...
    ஐயா,
    நான் எனது பிளாக்கில் பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை கணக்கிட பதிவிட்டுள்ளேன். ஜோதிட சம்பந்தமாதலால் தாங்களும் நமது வகுப்பறை மாணவர்களும் அந்த தளம் சென்று பார்த்து அவர்களுடைய வயது,மாதம்.நாள் அறிந்துகொள்ள வேண்டுகின்றேன். தளமுகவரி:-
    http://velang.blogspot.com/
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////////////

    சொல்லிவிட்டீர்கள் அல்லவா? அனைவரும் பார்ப்பார்கள்!

    ReplyDelete
  18. //////////Blogger ananth said...
    ஒரு ஸ்தானத்தில் கிரக பார்வையை வைத்து அதில் அக்கிரகம் இருப்பதாக வைத்து கொள்ளலாமா? 4ல் சுபக்கிரகம் இருந்தால் நன்மை, இல்லாவிட்டால் தீமை. இதற்கு ஏதும் விதிவிலக்கு உண்டா?///////////

    சுபக்கிரகங்களின் பார்வை அந்த ஸ்தானத்தில் நன்மைகளை அதிகப் படுத்தும். தீயகிரகங்கள் நன்மைகளைக் குறைக்கும் அல்லது இல்லாமல் செய்துவிடும். அவ்வளவுதான். விதிவிலக்கு கிடையாது.

    ReplyDelete
  19. ////////Blogger KaveriGanesh said...
    ஆமாம் ஐயா, ஆயுள் பாவம் , 90% சோதிடர்கள் முறையாக சொல்லுவதில்லை.எல்லோருக்கும் ஆயுள் நன்றாக உள்ளது என்பர்.////////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////////////Blogger Cheenu said...
    அன்புள்ள ஐயா,
    மிகவும் சரியாகச் சொன்னீர்கள். ஜாதகம் (கணினி மூலமோ, கணக்குப் பண்ணியோ) சரியாக கணிப்பதற்கு, பிறப்பு நேரம், இடம் இவை மிகவும் முக்கியம். கையில் ஒரு (ஏற்கனவே மண்டபத்தில் யாராவது கொடுத்த) ஜாதகம் எடுத்தால், அந்த ஜாதகர் இப்போது இருக்கிறாரா (அல்லது 200 வருடத்துக்கு முந்தைய ஜாதகமா) என்று கூட அறிந்து கொள்ளாமல் பலன் சொல்ல ஆரம்பித்து விடும் போலி சோதிடர்களால், வேதாங்கமான சோதிட சாத்திரத்துக்கு அவப்பெயர். அதுபோலவே, பலன் சொல்வதற்கு முன்பு, ஜாதகம் யாருடையது என்றும், ஆயுள் சமாச்சாரங்களையும் நன்கு பரிசீலித்தும், தாங்கள் குறிப்பிட்டுள்ள அம்சங்களை நன்கு ஆராய்ந்த பிறகும்தான் நாடியவர்களுக்கு, ஜோதிட மூல வழி காட்ட வேண்டும்.
    மிக அழகான சோதிடக் கட்டுரை. நான்காம் வீடு பற்றிய தகவல்களும் மிக உபயோகமானவை.
    -அன்புடன்
    சீனு//////////

    நன்றி சீனு!

    ReplyDelete
  21. ////////////Blogger உங்கள் மாணவி said...
    ஐயா
    எனக்கு நான்கில் குருவும் (பரல் 6) கேதுவும் கூட்டணி போட்டு உள்ளனர். நாலாம் வீட்டின் பரல் 36.நாலாம் வீட்டில் குருவின் பலன்கள் சூப்பர். ஆனால் கேதுவின் பலன்கள் சரிஇல்லையே .இதில் எதை எடுத்து கொள்வது?/////////

    கேது இருக்கும்போதும் கூட 36 பரல்கள் வருகிறது என்றால் அந்த வீடு நல்ல அமைப்புடன் இருக்கிறது என்று பொருள்.
    இல்லாவிட்டால் 36 பரல்கள் எப்படி வரும்? ஆகவே நன்மைகள் அதிகம். அதை மனதில் வையுங்கள் சகோதரி!

    ReplyDelete
  22. ////////////Blogger dubai saravanan said...
    அய்யா எனக்கு நான்கில் (லக்னாதிபதி) சனி பார்வையுள்ள சூரியன் :-(((
    கடவுள் தான் நிம்மதியை தர வேண்டும்///////////

    அதெல்லாம் கிடைக்கும். நாம்தான் குழ்ப்பம்கொள்ளாமல் ஜாதகத்தில் உள்ள மற்ற சிறப்புக்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 தானே?

    ReplyDelete
  23. ////////////Blogger Sai said...
    நான்காம் வீடு காலியாக இருந்தால் - அதற்கும் ஏதாவது பலன் உண்டா?//////////

    நீங்கள் பாடங்களை வரிசையாகப் படியுங்கள். உங்கள் கேள்வியில் இருந்து படிக்காதது தெரிகிறது. நான்காம் வீட்டு அதிபதி எங்கே போய் உட்கர்ந்திருக்கிறார் என்றும் நான்காம் வீட்டை யார் யார் பார்க்கிறார்கள் என்றும் பாருங்கள். பலன் தெரியும்!

    ReplyDelete
  24. /////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா என் ஜாதகத்தில் 4ல் சனி, நீங்கள் கூறியது போல் தாயன்பு இல்லாமல் வளர்ந்தவன் இத்தனைக்கும் என் தாய் உயிருடன் உள்ளார். வாழ்க்கையும் தனிமை பட்டு போய் விட்டது. ஐயா ஆனால் எனது 4ம் வீட்டில் 32 பரல்கள் உள்ளதே?/////

    4ற்கு தாய், கல்வி, சொத்துசுகம் என்று 3 இலாக்காக்கள் உண்டு. இந்த அதிகப்படியான பரல்கள் மற்றவற்றைப் பெற்றுத்தரும்!

    ReplyDelete
  25. ///////////Blogger கனவு பையன் said...
    ஐயா ,
    உங்கள் பாடங்களின் பக்கங்களை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்து உள்ளேன் , மிக மிக அருமை , ஒரு சிறு சந்தேகம் , தங்கள் ஜாதகம் கணிக்க கொடுத்து உள்ள சுட்டி [http://www.planetarypositions.com/birthchart.html ] எந்த முறையில் ஜாதகத்தை கணிக்கிறது , திருக்கணிதமா அல்லது வாக்கிய பஞ்சாங்கமா ?//////

    கணினிக்கு கணிதம்தான். வாக்கியமெல்லாம் அதற்குத் தெரியாது.

    ReplyDelete
  26. /////Blogger Geekay said...
    Present Sir,////

    வருகைப்பதிவு மட்டுமா ஜீக்கே!

    ReplyDelete
  27. Very nice and lucid explanations sir.....Take a Bow Sir !!!!

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா

    எனக்கு 4 ல் சந்திரன், மாந்தி 12 ல் இருக்கும் குரு பார்க்கிறார்.
    மகர லகிநம். சந்திரன் செவ்வாய் வீட்டில் இருந்தால்,சந்திர திசையிலும்
    சுக்கிறன் சனி வீட்டில் இருந்தால் ,சுக்கிற திசையிலும் பலன் அவ்வளவு
    சிறப்பாக இருக்காது,அதுவே சுப கிரகங்கள் வீட்டில் இருந்தால் பலன்
    நன்றாக இருக்கும் என்று ஒரு ஜோதிடர் tvல் சொல்லிக்கொண்டிருந்தார்.
    அது உண்மையா?

    ReplyDelete
  29. ஜோதிடம் சொல்வதை பற்றிய விளக்கம் உண்மை மற்றும் அருமை

    இப்பொழுது இரண்டு கேள்வி:

    //
    5. குரு

    அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின்
    நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்
    ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள்
    எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட
    மாட்டார்கள்.

    இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும்.

    மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள்

    Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.//

    1. எனது நண்பருக்கு 4ல் குரு, Good for mother (not sure), good education (nope). Good home and vehicles (yes).
    ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள் (இன்றைய தேதி வரை இல்லை), மகிழ்ச்சி நிரம்பியவர்கள் (இருப்பதாக தெரிய வில்லை), அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும் (இதுவும் இல்லை).

    தயை கூர்ந்து விளக்கம் தாருங்கள்

    //9. கேது

    தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை.
    சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும்.

    வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச்
    சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும்,
    பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.

    பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல!

    Ketu: good for education but Mother will suffer great anxiety on account of one child//

    2. இது என்னுடைய அமைப்பு (4ல் கேது நீசம்).
    தாயன்பு - உண்டு.
    சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை - உண்மை.
    பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும் - உண்மை.
    good for education - True.
    Mother will suffer great anxiety on account of one child - Explain this part please?

    ReplyDelete
  30. sir

    my laknathipathi sukran
    he is in 4th house(sani) with sevvai.
    is it good for me, when i will relieve from my prob
    DOB:05-01-1966
    PLACE BIRTH : THANJAVUR
    TIME : 01.45 AM (WED)

    ReplyDelete
  31. ////Blogger Ragu Sivanmalai said...
    Very nice and lucid explanations sir.....Take a Bow Sir !!!!////

    நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  32. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    எனக்கு 4 ல் சந்திரன், மாந்தி 12 ல் இருக்கும் குரு பார்க்கிறார்.
    மகர லக்கினம். சந்திரன் செவ்வாய் வீட்டில் இருந்தால்,சந்திர திசையிலும்
    சுக்கிரன் சனி வீட்டில் இருந்தால் ,சுக்கிர திசையிலும் பலன் அவ்வளவு
    சிறப்பாக இருக்காது,அதுவே சுப கிரகங்கள் வீட்டில் இருந்தால் பலன்
    நன்றாக இருக்கும் என்று ஒரு ஜோதிடர் tvல் சொல்லிக்கொண்டிருந்தார்.
    அது உண்மையா?//////

    ஆமாம். அவர் அனுபவத்தில் இருந்து சொல்லியிருக்கிறார். இன்னும் பல விதிமுறைகள் இருக்கின்றன
    நடப்பு திசைக்கான கிரகம், 6, 8, அல்லது 12ஆம் வீட்டில் இருந்தாலும் பலன் நன்றாக இருக்காது.

    ReplyDelete
  33. Blogger SP Sanjay said...
    ஜோதிடம் சொல்வதை பற்றிய விளக்கம் உண்மை மற்றும் அருமை
    இப்பொழுது இரண்டு கேள்வி:
    //
    5. குரு
    அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின்
    நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்
    ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள்
    எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட
    மாட்டார்கள்.
    இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும்.
    மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள்
    Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.//
    1. எனது நண்பருக்கு 4ல் குரு, Good for mother (not sure), good education (nope). Good home and vehicles (yes).
    ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள் (இன்றைய தேதி வரை இல்லை), மகிழ்ச்சி நிரம்பியவர்கள் (இருப்பதாக தெரிய வில்லை), அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும் (இதுவும் இல்லை).
    தயை கூர்ந்து விளக்கம் தாருங்கள்//////

    அது பொது விதி. அதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மொத்தமும் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வீட்டிற்கான இலாக்க்களைச் சேர்ந்த கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். அந்த 4காம் வீட்டிற்கு என்னென்ன இலாக்காக்கள்
    அதற்கு உரியவர்கள் யார் யார் என்று முன் பதிவில் எழுதியிருக்கிறேன். அதைப்படித்துப்பாருங்கள் சஞ்சய்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //9. கேது
    தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை.
    சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும்.
    வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச்
    சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும்,
    பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.
    பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல!
    Ketu: good for education but Mother will suffer great anxiety on account of one child//
    2. இது என்னுடைய அமைப்பு (4ல் கேது நீசம்).
    தாயன்பு - உண்டு.
    சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை - உண்மை.
    பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும் - உண்மை.
    good for education - True.
    Mother will suffer great anxiety on account of one child - Explain this part please?/////
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    அது பொது விதி. அதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மொத்தமும் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வீட்டிற்கான இலாக்க்களைச் சேர்ந்த கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். தாயைப் பற்றி அறிய வேண்டும் போது, நான்காம் வீட்டுடன் சந்திரனின் (தாய்க்கான கிரகம்) அமைப்பு மற்றும் அதன் வலு, மற்றும் பார்வைகள், சேர்க்கைகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  34. Dear sir,
    I have a very small request to you,just spend 10 minutes for me.write on paper on my chart.and give solution for me.computer software may do some small mistake.so consider my request sir,,

    my date of birth 25/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,alayam star,,cancer rasi,Venus dasa,mars puthi,,, place
    mecheri,,,(near mettur 20km)
    mesham lagana
    > 1st house bhuthan,rahu
    > 2nd house sun,mars,
    > 4th moon,
    > 7th kethu,
    > 8th sani,
    > 10th guru,
    > 12th venus,//////
    i have 2 question sir,
    1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
    venus,and your entire property will going to zero.(now iam zero)so is
    it happen in my life?
    2.when i earn single rupee in my life.////

    ReplyDelete
  35. ///கேது இருக்கும்போதும் கூட 36 பரல்கள் வருகிறது என்றால் அந்த வீடு நல்ல அமைப்புடன் இருக்கிறது என்று பொருள்.
    இல்லாவிட்டால் 36 பரல்கள் எப்படி வரும்? ஆகவே நன்மைகள் அதிகம்///
    Pothuvakave theya gragam erunthal paralgal kuraivaga varuma?
    sir yenakku Makara lagnam, 8 il Sani(5 paral) & Raghu. 8th place paral 35. Is it 8th place or lagnathibathi Sani in good ?
    Pls Clarify me sir.

    ReplyDelete
  36. ////////////Blogger anandanm said...
    Dear sir,
    I have a very small request to you,just spend 10 minutes for me.write on paper on my chart.and give solution for me.computer software may do some small mistake.so consider my request sir,,
    my date of birth 25/05/1985(tamil vikasi12),,,time 5.15am,,,,alayam star,,cancer rasi,Venus dasa,mars puthi,,, place
    mecheri,,,(near mettur 20km)
    mesham lagana
    > 1st house bhuthan,rahu
    > 2nd house sun,mars,
    > 4th moon,
    > 7th kethu,
    > 8th sani,
    > 10th guru,
    > 12th venus,//////
    i have 2 question sir,
    1.i lost around 7 lacks for share trading,somebody said 12th house
    venus,and your entire property will going to zero.(now iam zero)so is
    it happen in my life?
    2.when i earn single rupee in my life.////

    உங்களுக்கு ரிஷப லக்கினம். லக்கினாதிபதி சுக்கிரன் உச்சமாகி 11ல் இருக்கிறார். நல்ல நிலைமையில் இருக்கிறார். அதோடு அவருடைய திசையும் நடைபெறுகிறது. ஆகவே கவலை வேண்டாம்.

    தற்சமயம் நடக்கும் ஏழரைச் சனியால் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தனகாரகன் புதன் 12ல் அதுவும் ஒரு காரணம்.
    26.9.2009ல் சனிப் பெயர்ச்சி உள்ளது. அதற்குப் பிறகு குழப்பங்கள் தீரும். அதுவரை பொறுமை காக்கவும்

    1.5.2013 வரை நேரமும் தசாபுத்திகளும் சரியில்லை. அதுவரை பங்கு வணிகத்தில் ஈடுபட வேண்டாம்.

    ReplyDelete
  37. ஜோதிடத்தில் நிறைய விதிகள் இருக்கிறது. சில விதிகளுக்கு (விதி) விலக்குகளும் இருக்கிறது. பாடத்தை நன்றாக நிதானமாக படித்து விளங்கிக் கொண்டு சொல்லியிருக்கும் பலன்களை சீர்தூக்கி பார்த்து இறுதி முடிவுக்கு வர வேண்டும். ஆளுக்கு ஆள் அரை குறையாக படித்து விட்டு சொல்லியிருக்கும் பலன்கள் ஏன் நடக்கவில்லை என்றால் ஆசிரியர் பாவம் என்ன செய்வார். வார்த்தைகள் சற்று கடுமையாக இருப்பதாக நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete
  38. Blogger VA P RAJAGOPAL said...
    ///கேது இருக்கும்போதும் கூட 36 பரல்கள் வருகிறது என்றால் அந்த வீடு நல்ல அமைப்புடன் இருக்கிறது என்று பொருள்.
    இல்லாவிட்டால் 36 பரல்கள் எப்படி வரும்? ஆகவே நன்மைகள் அதிகம்///
    Pothuvakave theya gragam erunthal paralgal kuraivaga varuma?
    sir yenakku Makara lagnam, 8 il Sani(5 paral) & Raghu. 8th place paral 35. Is it 8th place or lagnathibathi Sani in good ? Pls Clarify me sir.//////

    ஏட்டாம் வீட்டைப் பற்ரிய பாடம் பின்னால் வர இருக்கிறது. பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  39. வணக்கம் ஐயா
    பாடங்கள் அருமை ,எனக்கு தாயன்பு சுமாராக தான் கிடைக்கிறது ,மற்றவையல்லாம் ஓகே . எனக்கும் என் தாய்க்கும் புரிந்துணர்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  40. //அது பொது விதி. அதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மொத்தமும் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வீட்டிற்கான இலாக்க்களைச் சேர்ந்த கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். தாயைப் பற்றி அறிய வேண்டும் போது, நான்காம் வீட்டுடன் சந்திரனின் (தாய்க்கான கிரகம்) அமைப்பு மற்றும் அதன் வலு, மற்றும் பார்வைகள், சேர்க்கைகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்//

    ஜோதிடம் ஒரு கடல் என்பதை ஒத்துகொள்கிறேன்.

    ஒரு கிரகம் (அதன் பார்வை, சேர்க்கை, பரல், வலு) எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் என்பதை மறுபடியும் கூறியமைக்கு நன்றி

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  41. ராசி தனுசு
    லக்னம் கன்னி
    நட்சத்திரம் மூலம்

    1 ல் ராகு
    4 ல் சந்திரன்
    7 ல் புதன்+கேது
    8 ல் சூரியன்
    9 ல் சுக்கிரன்
    10 ல் குரு+மாந்தி,
    11 ல் செவ்வாய்
    12 ல் சனி

    ஐயா!!!உங்களது வைர வரிகளுக்காக காத்திருக்கிறேன்!!!

    ReplyDelete
  42. //////Blogger ananth said...
    ஜோதிடத்தில் நிறைய விதிகள் இருக்கிறது. சில விதிகளுக்கு (விதி) விலக்குகளும் இருக்கிறது. பாடத்தை நன்றாக நிதானமாக படித்து விளங்கிக் கொண்டு சொல்லியிருக்கும் பலன்களை சீர்தூக்கி பார்த்து இறுதி முடிவுக்கு வர வேண்டும். ஆளுக்கு ஆள் அரை குறையாக படித்து விட்டு சொல்லியிருக்கும் பலன்கள் ஏன் நடக்கவில்லை என்றால் ஆசிரியர் பாவம் என்ன செய்வார். வார்த்தைகள் சற்று கடுமையாக இருப்பதாக நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
    இருக்கிறது. பொறுத்திருந்து படியுங்கள்!/////

    ஆமாம். பாடத்தை முழுமையாகப் படியுங்கள். பொறுமையாக அலசுங்கள்!

    ReplyDelete
  43. /////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    பாடங்கள் அருமை ,எனக்கு தாயன்பு சுமாராக தான் கிடைக்கிறது ,மற்றவையல்லாம் ஓகே . எனக்கும் என் தாய்க்கும் புரிந்துணர்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .
    நன்றி
    கணேசன்////////
    வருத்தம்தான். என்ன செய்வது? சிலவற்றைத் தவிர்க்க முடியாது. விதிக்கப்பட்டிருக்கும் பாதையில் பயணித்தே ஆகவேண்டும்!

    ReplyDelete
  44. Blogger SP Sanjay said...
    //அது பொது விதி. அதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மொத்தமும் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த வீட்டிற்கான இலாக்க்களைச் சேர்ந்த கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். தாயைப் பற்றி அறிய வேண்டும் போது, நான்காம் வீட்டுடன் சந்திரனின் (தாய்க்கான கிரகம்) அமைப்பு மற்றும் அதன் வலு, மற்றும் பார்வைகள், சேர்க்கைகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்//
    ஜோதிடம் ஒரு கடல் என்பதை ஒத்துகொள்கிறேன்.
    ஒரு கிரகம் (அதன் பார்வை, சேர்க்கை, பரல், வலு) எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் என்பதை மறுபடியும் கூறியமைக்கு நன்றி
    என்றும் அன்புடன்/////

    புரிந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  45. Blogger பரமார்த்த குரு said...
    ராசி தனுசு
    லக்னம் கன்னி
    நட்சத்திரம் மூலம்
    1 ல் ராகு
    4 ல் சந்திரன்
    7 ல் புதன்+கேது
    8 ல் சூரியன்
    9 ல் சுக்கிரன்
    10 ல் குரு+மாந்தி,
    11 ல் செவ்வாய்
    12 ல் சனி
    ஐயா!!!உங்களது வைர வரிகளுக்காக காத்திருக்கிறேன்!!!

    லக்கினாதிபதி 7லில் இருக்கிறார். அவர் standing power கொடுப்பார்.

    ReplyDelete
  46. /////Blogger YOGANANDAM M said...
    4 il manthi iruntha enna plan?//////

    தாய், கல்வி, சுகம் ஆகிய மூன்றில் ஒன்று வந்தமரும் மாந்தியால் கிடைக்காமல் போய்விடும். மாந்தி இருப்பதால் தீமையே அதிகம்.

    ReplyDelete
  47. வாத்தியாரே..

    சந்தேகமே இல்லை..

    எனக்குத் தெளிவா இருக்கு..

    உங்களோட ஒவ்வொரு பாடமும் என்னை படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டிருக்கு..

    எங்கன போய் முடியப் போகுதோ..?

    முருகா..!

    ReplyDelete
  48. வாத்தியாரையா, பாடம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  49. Dear Sir,

    Simply superb!! not alone for the lessons but also for the comments which were left and answered by you....This is good class for people who really wants to understand this predictive science...
    Hats off to you Sir.

    -Shankar

    ReplyDelete
  50. ///////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    சந்தேகமே இல்லை..
    எனக்குத் தெளிவா இருக்கு..
    உங்களோட ஒவ்வொரு பாடமும் என்னை படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டிருக்கு..
    எங்கன போய் முடியப் போகுதோ..?
    முருகா..!////////

    எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள் உண்மைத்தமிழரே! முருகன் இருக்கையில் கவலை எதற்கு?

    ReplyDelete
  51. //////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா, பாடம் நன்றாக இருந்தது./////

    நன்றி அமரபாரதி!

    ReplyDelete
  52. /////Blogger hotcat said...
    Dear Sir,
    Simply superb!! not alone for the lessons but also for the comments which were left and answered by you....This is good class for people who really wants to understand this predictive science...
    Hats off to you Sir.
    -Shankar

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சங்கர்!

    ReplyDelete
  53. தெளிவான விளக்கம் ஐயா, மிக்க நன்றி...

    ReplyDelete
  54. hello sir how are you ? got tied up with work so couldnt post. nice lesson sir. is it true that a father and his son shouldnt be going thru same dasha and if so is it advisable to stay in diff places.

    ReplyDelete
  55. Dear sir,
    my son's
    Date of birth :12.6.1983
    Birth place:madurai
    Time of birth:1.48pm
    midhuna rasi,kanniga lagnum, thiruvathirai star,the plannets are
    2.sani
    3.guru
    4.kedhu
    9.bhudhan,suriyan,sevvai
    10.moon,ragu
    11.sukiran
    now guru thisai,ragu bhukthi
    sir,now my son is working in small software company,when will he get good job and settle in life.
    please reply sir...

    ReplyDelete
  56. Dear sir,
    my son's
    Date of birth :12.6.1983
    Birth place:madurai
    Time of birth:1.48pm
    midhuna rasi,kanniga lagnum, thiruvathirai star,the plannets are
    2.sani
    3.guru
    4.kedhu
    9.bhudhan,suriyan,sevvai
    10.moon,ragu
    11.sukiran
    now guru thisai,ragu bhukthi
    sir,now my son is working in small software company,when will he get good job and settle in life.
    please reply sir...

    ReplyDelete
  57. நல்லா பிந்திவிட்டன் போல இருக்கு. சற்று வேலை நிமித்தம் busy. எப்படி ஜயா இருக்கிறியல். 4ம் வீட்டை பின்னி பெடல் எடுத்திட்டியல் . இனி 3ம் வீட்டு விவரத்தின் எதிர்பார்ப்போடு .நன்றி கலந்த வணக்கம் ! :)

    ReplyDelete
  58. Blogger mike said...
    hello sir how are you ? got tied up with work so couldnt post. nice lesson sir. is it true that a father and his son shouldnt be going thru same dasha and if so is it advisable to stay in diff places.//////

    இருவருக்கும் ஒரே திசை என்றால் சிரமம்தான். தீய கிரகங்களின் திசை என்றால் மட்டுமே சிரமம்! அதற்காக மகன் தன்னுடைய 21 வயதுவரை எப்படித் தந்தையைப் பிரிந்து வாழ்வது சாத்தியம்? அதுவும் இன்றையப் பொருளாதாரச் சிக்கலில்!

    ReplyDelete
  59. Blogger uma said...
    Dear sir,
    my son's
    Date of birth :12.6.1983
    Birth place:madurai
    Time of birth:1.48pm
    midhuna rasi,kanniga lagnum, thiruvathirai star,the plannets are
    2.sani
    3.guru
    4.kedhu
    9.bhudhan,suriyan,sevvai
    10.moon,ragu
    11.sukiran
    now guru thisai,ragu bhukthi
    sir,now my son is working in small software company,when will he get good job and settle in life.
    please reply sir.../////

    உங்கள் மகனின் நட்சத்திரம் திருவாதிரை. கன்னி லக்கினம்.
    கர்மகாரகன் சனி உச்சம். ஆகவே கவலைப் படாதீர்கள்.
    18.12.2008 முதல் நடப்பது சனி திசை.
    சனி திசையில் சுய புத்தி அதாவது சனியின் own period 22.12.2011 வரை உள்ளது.
    அதற்குப் பிறகு வரும் சனி திசை புதன் புத்தியில் நல்ல வேலை கிடைக்கும்.
    புதன் லக்கினாதிபதி அதை நினைவில் வையுங்கள். நம்பிக்கையோடு இருங்கள் சகோதரி!

    ReplyDelete
  60. Blogger Emmanuel Arul Gobinath said...
    நல்லா பிந்திவிட்டன் போல இருக்கு. சற்று வேலை நிமித்தம் busy. எப்படி ஜயா இருக்கிறியல். 4ம் வீட்டை பின்னி பெடல் எடுத்திட்டியல் . இனி 3ம் வீட்டு விவரத்தின் எதிர்பார்ப்போடு .நன்றி கலந்த வணக்கம் ! :)

    உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது கோபிநாத்! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com