மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.5.20

சனீஸ்வரனின் அருமையும் பெருமையும்!!


சனீஸ்வரனின் அருமையும் பெருமையும்!!

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான்.

அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.

அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.

சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா. விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.

ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாழிகை கடந்தது. சிவபெருமான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.

சனீஸ்வரனை நோக்கி, பார்த்தாயா சனீஸ்வரா. உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே? என்றார்.

இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள் என்றார்.

சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.

ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.

எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன்.

ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.

சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.

இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,

அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.

ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார். பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து

மங்குசனி,
தங்குசனி,
பொங்குசனி

என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very useful information about sani baghavan and his impact during sade sati and remedy for that thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம்.
    சூர்ய பகவானுக்கும், தக்ஷனின் மகள் சந்தியா தேவிக்கும், வைவஸ்வத மனு, யமதர்மன், யமுனா ஆகியவர்கள் பிறந்தார்கள். நாளுக்கு நாள், சூரியனின் உக்கிரம் அதிகமாகிக் கொண்டே வந்ததால், அந்த உஷ்ணத்தை சந்தியா தேவியால் தாங்க முடியவில்லை. அதனால், சந்தியா தேவி, தன்னைப் போலவே ஒரு நிழல் உருவத்தை உண்டாக்கி, ஜீவன் கொடுத்து, அதற்கு சாயா எனப்பெயரும் சூட்டினாள். தான் பெற்ற குழந்தைகளை, சாயாவிடம் ஒப்படைத்துவிட்டு, சிவ தியானத்தில் ஈடுபட, கானகம் சென்றாள், சந்தியா. தன் மனைவியானவள், சந்தியா அல்ல நிழல் உருவினள் என்பதை அறிந்திராத சூரியன், சாயாவுடன் சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்கலானான்.

    சாயா,சிவபெருமான் மேல் அதீதமான பக்தி கொண்டவளாக விளங்கினாள். அதிகமான சூரிய உஷ்ணத்தில் தன்னை வருத்திக்கொண்டு, சிவ தியானத்தில் மூழ்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். கருவுற்றிருந்த சமயத்திலும் அவ்வழக்கத்தை, அவள் கை விடவில்லை. (அதனால்தான், கருவிலிருந்த சிசு கருத்த நிறத்தில் பிறந்தது என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன). சூரியனுக்கும், சாயா தேவிக்கும், வைகாசி மாதம், அமாவாசையன்று, மூத்த புதல்வனாக, சனைச்சரன் பிறந்தார். இரண்டாவதாக தப்தி (நதி ரூபம்) பிறந்தாள். சனைச்சரன் பிறந்த அன்றைய தினமே, சனைச்சர ஜெயந்தி ஆகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில், இந்நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், வட இந்தியாவில், இந்நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம், பக்தர்கள், பகல் முழுவதும் உபவாசம் இருந்து, சனி பகவானை தரிசனம் செய்துவிட்டுதான் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உட்கொள்கிறார்கள்.

    மகராஷ்டிரா மாநிலத்தில், அகமத் நகர் மாவட்டத்திலிருந்து, முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில், 'சனி சிங்கனாப்பூர்’ என்னும் இடத்தில், சனைச்சரனுக்கு பிரம்மாண்ட கோயில் இருக்கின்றது. இங்கு பகவான், கருப்பு நிற ஸ்வயம்பு கல்லாக ,கலியுகம் தொடங்கிய நாளிலிருந்து,எழுந்தருளி, அருள் பாலித்து வருகிறார். அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.
    சனைச்சரனுக்கு, கருப்பு வஸ்திரம், கருப்பு எள், கருப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஆகியவை உகந்தது, ஆகையால், அவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

    இக்கோயில், 'ஜாக்ருத் தேவஸ்தான்’ என்று வழங்கப்படுகிறது. அதாவது, சனைச்சரன், நித்ய ஜீவனுள்ள ஸ்வரூபியாகப் போற்றப்படுகிறார்.

    தவறு செய்பவர்களுக்கு, தண்டனையை அளிக்க தவறுவதில்லை என நம்புகிறார்கள். அவ்வூரில் எந்த வீட்டிற்கும் தாழ்ப்பாள் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் திருட்டு பயமும் கிடையாது. தப்பு செய்பவர்கள் ஊர் எல்லையைக்கூடத்
    தாண்டமுடியாது என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அன்றைய தினத்தில், அனுமான் கோயிலிலும் மக்கள் க்யூ வரிசையில் தரிசனத்திற்கு நிற்பதைக் காண முடிகிறது.

    எந்த வெளியிடங்களுக்கு சென்றிருந்தாலும், சனைச்சரனுக்கு, உகந்த நாளான, சனிக்கிழமையன்று வீடு திரும்புதல் மிகுந்த சுபிட்சத்தைத் தரும். சூரிய பகவானின் புத்திரர், சனைச்சரன். சூரிய பகவானின் மாணாக்கர், அனுமான். வருகின்ற மே 22ம் தேதியன்று வைகாசி அமாவாசை சனைச்சர ஜெயந்தி. இருவரையுமே இந்நன்னாளில், நமஸ்கரித்து, வேண்டிய அனுகூலங்களைப் பெறுவோம்.

    படித்ததில் பிடித்தது.
    நன்றி.

    ReplyDelete
  3. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very useful information about sani baghavan and his impact during sade sati and remedy for that thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger Ram Venkat said...
    வணக்கம்.
    சூர்ய பகவானுக்கும், தக்ஷனின் மகள் சந்தியா தேவிக்கும், வைவஸ்வத மனு, யமதர்மன், யமுனா ஆகியவர்கள் பிறந்தார்கள். நாளுக்கு நாள், சூரியனின் உக்கிரம் அதிகமாகிக் கொண்டே வந்ததால், அந்த உஷ்ணத்தை சந்தியா தேவியால் தாங்க முடியவில்லை. அதனால், சந்தியா தேவி, தன்னைப் போலவே ஒரு நிழல் உருவத்தை உண்டாக்கி, ஜீவன் கொடுத்து, அதற்கு சாயா எனப்பெயரும் சூட்டினாள். தான் பெற்ற குழந்தைகளை, சாயாவிடம் ஒப்படைத்துவிட்டு, சிவ தியானத்தில் ஈடுபட, கானகம் சென்றாள், சந்தியா. தன் மனைவியானவள், சந்தியா அல்ல நிழல் உருவினள் என்பதை அறிந்திராத சூரியன், சாயாவுடன் சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்கலானான்.
    சாயா,சிவபெருமான் மேல் அதீதமான பக்தி கொண்டவளாக விளங்கினாள். அதிகமான சூரிய உஷ்ணத்தில் தன்னை வருத்திக்கொண்டு, சிவ தியானத்தில் மூழ்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். கருவுற்றிருந்த சமயத்திலும் அவ்வழக்கத்தை, அவள் கை விடவில்லை. (அதனால்தான், கருவிலிருந்த சிசு கருத்த நிறத்தில் பிறந்தது என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன). சூரியனுக்கும், சாயா தேவிக்கும், வைகாசி மாதம், அமாவாசையன்று, மூத்த புதல்வனாக, சனைச்சரன் பிறந்தார். இரண்டாவதாக தப்தி (நதி ரூபம்) பிறந்தாள். சனைச்சரன் பிறந்த அன்றைய தினமே, சனைச்சர ஜெயந்தி ஆகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில், இந்நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், வட இந்தியாவில், இந்நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம், பக்தர்கள், பகல் முழுவதும் உபவாசம் இருந்து, சனி பகவானை தரிசனம் செய்துவிட்டுதான் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உட்கொள்கிறார்கள்.
    மகராஷ்டிரா மாநிலத்தில், அகமத் நகர் மாவட்டத்திலிருந்து, முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில், 'சனி சிங்கனாப்பூர்’ என்னும் இடத்தில், சனைச்சரனுக்கு பிரம்மாண்ட கோயில் இருக்கின்றது. இங்கு பகவான், கருப்பு நிற ஸ்வயம்பு கல்லாக ,கலியுகம் தொடங்கிய நாளிலிருந்து,எழுந்தருளி, அருள் பாலித்து வருகிறார். அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.
    சனைச்சரனுக்கு, கருப்பு வஸ்திரம், கருப்பு எள், கருப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஆகியவை உகந்தது, ஆகையால், அவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
    இக்கோயில், 'ஜாக்ருத் தேவஸ்தான்’ என்று வழங்கப்படுகிறது. அதாவது, சனைச்சரன், நித்ய ஜீவனுள்ள ஸ்வரூபியாகப் போற்றப்படுகிறார்.
    தவறு செய்பவர்களுக்கு, தண்டனையை அளிக்க தவறுவதில்லை என நம்புகிறார்கள். அவ்வூரில் எந்த வீட்டிற்கும் தாழ்ப்பாள் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் திருட்டு பயமும் கிடையாது. தப்பு செய்பவர்கள் ஊர் எல்லையைக்கூடத்
    தாண்டமுடியாது என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அன்றைய தினத்தில், அனுமான் கோயிலிலும் மக்கள் க்யூ வரிசையில் தரிசனத்திற்கு நிற்பதைக் காண முடிகிறது.
    எந்த வெளியிடங்களுக்கு சென்றிருந்தாலும், சனைச்சரனுக்கு, உகந்த நாளான, சனிக்கிழமையன்று வீடு திரும்புதல் மிகுந்த சுபிட்சத்தைத் தரும். சூரிய பகவானின் புத்திரர், சனைச்சரன். சூரிய பகவானின் மாணாக்கர், அனுமான். வருகின்ற மே 22ம் தேதியன்று வைகாசி அமாவாசை சனைச்சர ஜெயந்தி. இருவரையுமே இந்நன்னாளில், நமஸ்கரித்து, வேண்டிய அனுகூலங்களைப் பெறுவோம்.
    படித்ததில் பிடித்தது.
    நன்றி.//////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. ////Blogger sundari said...
    Vannakkam sir,////

    வணக்கம் சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com