மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.11.19

Astrology: Quiz: புதிர்: 22-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 22-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மகம் நட்சத்திரக்காரர். 23வது வயதில் வேலைக்குச் சேர்வதற்காக அவர்  எழுதிய போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதாவது அவர் பாஸாக வில்லை,நொந்து போய்விட்டார். அவருடைய பெற்றோர்களும் மனம் நொந்து போய் விட்டார்கள்,

ஏன் இந்த நிலைமை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மிதுன லக்கினக்காரர். 20வயதிற்கு மேல் அவருக்கு சூரிய மகா திசை துவங்கியது, சூரியன் 12ல் உள்ளார்.  அது விரைய ஸ்தானம்.
தசாநாதன் பலன்களைக் கொடுப்பவர். அவரே விரையத்தில் ஏறி
அமர்ந்ததால், ஜாதகருக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.
அதுவும் 23வது வயதில் ஜாதகர் போட்டித் தேர்வுகள் எழுதிய சமயத்தில்
சூரிய மகா திசையில் சனி புக்தி நடந்து கொண்டிருந்தது, தசாநாதனும்
புக்தி நாதனும் 2/12 நிலைப்பாட்டில் அதுவும் கேடானது.

சனியின் மேல் செவ்வாயின் பார்வை. ஆகவே ஜாதகருக்கு வெற்றி கிட்டவில்லை, அடுத்து வந்த புதன் புத்தி ஜாதகருக்கு  நன்மையாக அமைந்தது. ஜாதகர் மீண்டும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று
வேலையில் சேர்ந்தார், சூரியனும் புதனும் யோக சேர்க்கையில் உள்ளன. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 29-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே ... கொடுக்க பட்டு உள்ள ஜாதகத்தில் மிதுன லக்கனம் ..அதிபதி புதன் 12-இல் மறைவு .புத்தி கூர்மை காரகன் புதன் லகினத்துக்கு 12-இல் மறைவு .எண்ணம் எழுத்து 3-அம் இடம் 3-க்கு உடையவன் கூடவே
கூட்டு சேர்த்து கேடு விளைவிக்கும் கேது கூட சேர்க்கை பெற்று 12-இல் மறைவு . சலன புத்தி காரகன் 12-இல் சுக்கிரன் ,புதன் பரிவர்த்தனை பெற்று உள்ளார் .ஆனாலும் சுக்கிரன் எதிரி சூரியன் கூடவே அடுத்தத வீட்டில் வேறு .மனம் காரகன் சந்திரன் பகை பெற்று வேறு தனித்து சனியின் பார்வை
பெற்று உள்ளார் சனி,சந்திரன் பார்வை மனசஞ்சலம்
ஏற்படுத்தும்...அதேபோல் தொழில் காக 10-இல் செவ்வாய் ,குரு இருந்தாலும் சனி தன்னோடு கட்டு பாட்டுக்குள் செவ்வாய் வைத்து கொண்டு உள்ளதால் இந்த அமைப்பு எற்பட்டு உள்ளது ..அதேபோல் குட்டி சுக்கிரன் ஆட்டம் கண்டு விட்டான் .. ஆதலால் இளமை காலத்தில் அவரால் தேர்ச்சி பெற
முடியவில்லை ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 22, 2019 8:40:00 AM
---------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 19 மே 1975 அனறு காலை 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறந்தவர்.
பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகருக்கு 20 வயது முதல் 26 வயதுவரை சூரியதசா நடந்தது.
சூரியனே அரசாங்க வேலைகளைக் கொடுக்க வேண்டிய
கிரகம். படிப்புக்கான புதன் மற்றும் நான்காம் இடமான படிப்புக்கான இடத்திற்கும் உரிய புதன் 12ம் இடத்தில் மறைந்தார்.சூரியனும் 12ல் மறைந்தார். கேதுவின் சம்பந்தம்.ராகுவின் பார்வை.லக்கினத்தில் 8ம் அதைபன் சனி மற்றும் 12ம் அதிபன் சுக்ரன். படிப்புக்கான 4ம் இடத்தில் மாந்தி.பெரும்பாலும் சூரிய தசா சனி புக்தியில் தேர்வுகள் நடந்து தேர்வு
முடிவுகளும் வெளிவந்திருக்கும். இவையே அவருக்குப் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்காததற்குக்காரணங்கள்.
நவாம்சத்தில்4ம் இட அதிபதி செவ்வாய் 8ல் மறைவு.எதிரியான புதனுடன் கூட்டணி.நான்காம் இடத்தில் சனி அமர்ந்து நீசம் அடைந்து நின்றது.
பாவ பல அட்டவணையில் கல்விக்கான 4ம் இடத்திற்கு 9 வது இடம்
அதாவது 9/12 ரேங்க்.நாங்காம் அதிபதியும் கல்விக்கான காரகன் புதனுக்கு சுயவர்கத்தில் 2 பரல் மட்டுமே.அதாவது 2/8.
Friday, November 22, 2019 1:10:00 PM
-------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
யா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி 12 ல் மேலும் அவரே கல்விக்கும் அதிபதி
ஆகிறார்
2. 4 ல் மாந்தி
௩.நான்காம் இடத்தின் மேலும் இளம் வயதில் வந்த தசை காரகன் சுக்ரனின் மீது ஆறு எட்டு அதிபதி செவ்வாய் சனியின் பார்வை
3. சூரியனும் லக்கினத்திற்கு12 ல்
ஆகவே தன 27 வயதிற்கு மேல் செவ்வாய் திசை குரு புத்தியில் அவருக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, November 22, 2019 6:39:00 PM
------------------------------------------------------
4
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. மிதுன இலக்கினம், சிம்ம இராசி ஜாதகம்.
2. 23 வயதில் அந்த இளைஞருக்கு மூன்றாம் அதிபதியான சூரியன் தசை நடைபெற்றது. சூரியன் விரய ஸ்தானத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு உள்ளார் மேலும் வித்தியா பதியும் 1,4 அதிபதியுமான புதனும் விரய ஸ்தானத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு வலிமை இழந்து உள்ளார்.
3. தொழில் ஸ்தானாதிபதி குரு ஆறாம் அதிபதியுடன் சேர்க்கை அம்சத்தில் நீசம் மற்றும் கர்மகாரகன் சனி ஆறாம்
அதிபதியின் பார்வையிலும் அம்சத்தில் நீசமமாகியும் உள்ளார். கர்மாதிபதி களின் இந்த நிலையும் கூடுதல் காரணங்களாக அமைந்துள்ளது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, November 23, 2019 1:20:00 AM
-------------------------------------------------------
5
Blogger classroom2007 said...
வணக்கம்
19.05.1975 ஆம் தேதி காலை 08.22. மணிக்கு மிதுன லக்கினம், சிம்ம ராசியில் மகா நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகர். (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
மிதுன லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (4 பரல்)
யோகமில்லாதவர்கள் : சூரியன், செவ்வாய், குரு
ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனியும், குருவும் ஓன்று சேர்ந்து கேந்திர / திரிகோணத்தில் இருந்தால் ஒரு தீய சனி கிரகம் லக்கினத்தில் வந்து அமர்ந்ததால் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எதிரானது. இவர் பாக்கியஸ்தான அதிபதியும் ஆவார்.
சனியின் (3 பரல்) 10ம் பார்வை 10ம் வீட்டில் அமர்ந்துள்ள குரு , செவ்வாய் மீது. செவ்வாய் 6ம் வீட்டிற்கும், 11ம் வீட்டிற்கும்
அதிபதி. தாமதமான காரியங்கள் ஏற்படும்
லக்கினாதிபதி புதன் (2 பரல்) 12ல் மறைந்ததால் ஜாதகன் போராட பிறந்தவன்.
23 வயதில் ஜாதகருக்கு சூரிய மகா தசை. சூரியன் 12ல் லக்கினாதிபதியுடன் சேர்ந்துள்ளார்.கேதுவுடன் கூட்டு, ராகுவின்
பார்வை எல்லாம் சேர்ந்து நேரத்தை வீணாக்கி செலவு செய்ய வைப்பதும் இதுவே காரணம்.
2001-2011 - சந்திர மகா திசையில் எல்லா வித நல்ல மாற்றங்களும் ஏற்படும். சந்திரன் (6 பரல்).சந்திர ராசியிலிருந்து 10ம் வீடு தான் 12ம் வீடு. லக்கினாதிபதி புதன் அமர்த்துள்ளார்.
சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 12-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகர் அனைத்து சௌபாக்கியம்/சௌகரியத்தையும் அனுபவித்தும், மகிழ்வான குடும்ப வாழ்க்கை வாழ்வதோடு மற்றவர்களும் நன்கு வாழ
வழிவகை செய்தும்.
10ம் விட்டு 35 பரல். 10ம் வீட்டு அதிபதி குரு (6 பரல்) 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பதால் நல்ல வருமானம் கிடைக்க வழி செய்வார். 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்ப்பதால் சொத்துக்கள், வாகன வசதிகளை செய்து கொடுப்பார்.
(2004- 2012) 29 வயது முதல் 37 வயது வரை ஏழரை சனி காலம்.போராட்ட வேண்டிய காலம் தான்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, November 23, 2019 5:03:00 AM
---------------------------------------------------
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் :
மிதுன லக்கினம், சிம்ம ராசி , மகம் நக்ஷத்திர ஜாதகர் போட்டி தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்
1. பொதுவாக படிப்பு ஸ்தானம் படிப்பு அறிவு போன்று நிலை அறிய நான்காம் இடத்தையும் , வித்யா காரகன் நிலையையும் அறிய வேண்டும்
2. இவரின் நான்காம் இடத்து அதிபதி மற்றும் வித்யா காரகன் இரண்டும் புதன் ஆவார். இவரின் புதன் அஸ்தங்கதம் ஆகி கேது வுடன் சேர்ந்து பனிரெண்டில் அமர்ந்து விரயம் செய்தது. இது படிப்பினால் ஏற்படும் பயனை இல்லாமல் விரயம் செய்தது. மேலும் நான்காம் இடத்தில் அமர்ந்த மாந்தி நிலையை மோசம் அடைய செய்தது.
3. நவாம்சத்திலும் புதன் எட்டில் ஆறாம் அதிபதியுடன் அதாவது செவ்வாயுடன் சேர்ந்து மறைந்து அதிக கஷ்டத்தை தந்தது.
4. மேலும் போட்டி தேர்வு எழுதும் போது இவரின் வெற்றி ஸ்தானாதிபதி சூரியன் தசை நடந்தது . இவரின் சூரியன் பனிரெண்டில் மறைந்து
வெற்றியை விரயம் செய்தது.
5. பின்னர் வந்த சந்திரா தசைக்கு அடுத்து வந்த குரு தசை வந்தவுடன் நிலையான வேலை அமைந்தது. ஏனென்றால்
பத்தாம் இடத்து அதிபதி குரு மிதுன லக்கினத்திற்கு அசுப கிரகமாக இருந்தாலும் பத்தில் அமர்ந்து அதாவது சொந்த
வீட்டில் அமர்ந்து நன்மை செய்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, November 23, 2019 8:08:00 AM
----------------------------------------------------
7
Blogger Ram Venkat said...
வணக்கம்.
மிதுன லக்கினம், சிம்ம ராசி ஜாதகர்.
அவர் தன் 23வது வயதில் வேலைக்குச் சேர்வதற்காக எழுதிய போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அவருக்கு வெற்றி
கிடைக்கவில்லை. ஜாதகப்படி ஏன் இந்த நிலைமை?
1) லக்கினாதிபதியும், புத்தி காரகனுமான புதன் 12ல் மறைந்து, சூரியன்
மற்றும் கேதுவுடன் கூட்டணியிலுள்ளார்.
2)23 வயதில் சூரியனின் தசை, சனி புக்தி நடந்துள்ளது.தசா நாதனும், புத்தி நாதனும் 1, 12 நிலைமையிலுள்ளனர்.
3) போட்டித்தேர்வுகள் பெறும்பாலும் அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்க நடத்தப் படுவது. அதில் வெற்றி பெற ராஜ
கிரகமான சூரியன் நல்ல நிலையிலும், அறிவாற்றலும் வேண்டும். ஆனால் சூரியன், புதன் சேர்க்கையில் ஏற்பட்ட நிபுணத்துவ யோகம் 12மிடமான மறைவு ஸ்தானத்தில் கேதுவின் கூட்டால் செயல்படவில்லை.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகரின் வேலைக்கு சேர்வதற்கான தேர்வுகளில் வெற்றி கிட்டவில்லை. ஆனால் 10மிடமான
தொழில் ஸ்தானத்தை காரகன் சனி பகவான் தன் 10ம் தனிப்பார்வையில் வைத்து இருப்பதாலும், தொழில் ஸ்தானம்
வலுவாக இருப்பதாலும், ஜாதகருக்கு தனியார் துறையில் ஒரு நல்ல பணியில் அமரும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
Saturday, November 23, 2019 1:50:00 PM
----------------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!கொடுக்கப்பட்ட அன்பர் மே மாதம் 19ம் தேதி 1975ல் பிறந்தவர் மிதுன லக்கினம்.லக்கின யோகாதிபதிகள் சுக்கிரன் 20 வயது வரை நடந்து முடிந்துவிட்டது.சூரியன் 6+ சந் 10 + செவ் 7 = 13 வருடங்கள் நண்மை
செய்யாத தசைகள். ஆக 43 வருடங்கள் நிலையற்ற தண்மை. 10ல் ஆட்சி பெற்ற குரு பாதகாதிபதியாகி 6ம் பதி செவ்வாயுடன் கூட்டணி போட்டு ஸ்தமில்லாத வேலை, தொழில். நடப்பு ராகு தசை செவ்வாய் வீட்டில் அமர்ந்து சனியின்
அனுசம் நட்சத்திரத்தில் இருந்து தசை நடப்பதால் வேலை இல்லை. சுக்கிரன் புதன் பரிவர்த்தனையால் வியாபாரத்தில் செழித்திருப்பார்.
அன்புடன்
- பொன்னுசாமி.
Saturday, November 23, 2019 8:53:00 PM
--------------------------------------------------------
9
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம், இந்த ஜாதகத்தில் சனியின் பார்வை 10ம் வீட்டின் மேல், அதோடு 20 முதல் 26 வயது வரை சூரிய தசை, அவர் 12ல் வெற்றியை தரவேண்டியவர் விரயத்தில். ஆதலால் வெற்றி பெற முடியவில்லை.
Saturday, November 23, 2019 11:23:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com