மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.11.19

Astrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, பரணி நட்சத்திரக்காரர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். சொந்தத் தொழில் துவங்கி நஷ்டப்பட்டு அதையும் ஊற்றி மூடிவிட்டு வந்துவிட்டார், பிறகு அரபு தேசத்தில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவர், அதையும் உதறித்தள்ளி விட்டு ஊருக்குத்
திரும்பி விட்டார், எல்லாம் அவருடைய 28 வயதிற்குள் அரங்கேறியவை. கேள்விகள் இதுதான்:
1, அவருக்கு ஏன் இந்த நிலைமை? 2.நிரந்தமான வேலை எப்போது கிடைக்கும்? ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மிதுன லக்கினக்காரர். பத்தாம் வீட்டில் சனி மற்றும் ராகு.பத்தாம் வீட்டைச் சுற்றி  இரண்டு சுப கிரகங்கள், ஒரு பக்கம் சுக்கிரன்
 மறு பக்கம் சந்திரன்,சுபகர்த்தாரி யோகம். 10ம் வீட்டின் மேல் குரு பகவானின் நேரடிப் பார்வை. பத்தாம் வீட்டில் ராகுவும் சனியும் இருப்பது அமைதியற்ற தன்மையைக் கொடுப்பார்கள் (restlessness) ஆனால்  குரு பகவானின்
பார்வை 10ன் மேல் இருப்பதால் அவர் அதைத் தனது தசா புத்தியில் சீராக்குவார்.ராகு திசை குரு  புத்தியில் எல்லாம் சீரானது. ஜாதகருக்கு
நல்ல வேலை கிடைத்தது!!! அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 22-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே .. படிப்பு சம்பந்தம் கொண்ட 4-இல் கேது வேறு , சனியின் பார்வையில் ,4-க்கு உடையவன் 8-இல்
மறைவு பெற்று சூரியன் சேர்க்கை அஸ்தங்கம் ஆகி விட்டார் .. படிப்பு
காரகன் புதன் வலு இழந்து உள்ளார் . 10-க்கு உடையவன் கேது கூட்டணி
வேறு அது மட்டும் இல்லாமல் 10-இல் சனி ராகு சேர்க்கை வேறு .. சூரியன் தசை யில் ஜாதகர் படிப்பு பாதியில் நிறுத்தி இருப்பார் காரணம் சூரியன்
8-இல் புதன் சேர்க்கை வேறு ..அடுத்து வந்த சந்திரன் தசை ஜாதகர்
வெளிநாடு சென்றார் .. ஆனால் 10 க்கு உடைவான் பலம் இழுத்து
நிலையில் உள்ளார் .. சந்திரா தசை முடிவில்  நிரந்தர வேலை அமையும் .. கூடவே குரு பார்வை 10-அம் வீட்டின் மேல் இருப்பதால் வாழ்கை போய் கொண்டு இருக்கும்
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 15, 2019 8:36:00 AM
------------------------------------------------------------
2
Blogger Shanmugasundaram said...
The person was born on 26/01/1969 time 3.15pm .Lagnathipathy mercury is in 8th house.Dasa
bukthi was not favourable  until 28years.tenth house lord is in 4th with ketu Tenth house having saturn and rahu combination. Moreover at early age
sun dasa moon dasa and mars dasa was running hence it was not suitable for profession at
rahu dasa guru bukthi he may get good profession.thanks sir vazhga valamudan
Friday, November 15, 2019 9:25:00 AM
------------------------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 26 ஜன்வரி 1969 அன்று மாலை 3 மணி 18 நிமிடங்களுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகருக்கு 8ம் இடத்துக்காரனான சனி 10ம் இடமான வேலைக்கான
இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அவரோடு கூட ராகுவும் சேர்ந்துள்ளார்.
10 இடத்துக்கான குரு பகவான் கேதுவுடன் கூட்டணி.
எனவே அடிக்கடி வேலை மாற்றம். நிலையான வேலை சந்தேகம்.
லக்கினாதிபதி 8ல் மறைந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டார்.லக்கினத்திலேயே மாந்தி.
படிப்புக்கான இடம் 4ன் அதிபதியும் கல்விக்கான காரகன் புதன் 8ல் மறந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டதால் படிப்பு பாதியில் நின்றது
சுய தொழில் வியாபாரத்திற்கான 3ம் இடத்துக்காரன் சூரியன் 8ல் மறைந்து
தன் வீட்டிற்கு 6ல் நின்றார். எனவே சுய தொழில் நட்டம் ஏற்பட்டது.
செவ்வாயும் சனியும் 6 8 ஆக நின்றது. பாக்கிய ஸ்தனமான 9ம் இடம்
சனி ராகு, சூரியன் ஆகியவர்களால் சூழப்பட்டு 12ம்
அதிபதியால் நிறந்துள்ளது. எனவே மிகவும் பாக்கியக்குறைவு.
ராகு தசா ராகு புக்தி நவ்ம்பர் 1997 வரை,,28 வயதுவரை, நீடித்தது.அதுவரை சிரமமதான். ராகு 10ல் நின்றதால் அதன் பின்னர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டார். குரு தசா 2013ல் வந்தபோது 44 வயதில் நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.
kmrk1949@gmail.com
Friday, November 15, 2019 2:04:00 PM
-----------------------------------------------------
4
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி எட்டில்
2 .பத்தாம் வீட்டில் சனியும் ராகுவும்
3 .புதன் எட்டில் அமர்ந்ததால் படிப்பை பாதியில் விட்டுஇருக்கிறார்
4 தன 19 வயதில் 2ஆம் வீடு அதிபதி சந்திரனின் தொழில் துவங்கியவர் ஆறாம் அதிபதி செவ்வாயின் parvayal தொழிலை கைவிட்டுருக்கிறார் அடுத்து வந்த செவ்வாய் திசை சுக்கிர புத்தியில் வெளிநாடு சென்ரிய்ந்தாலும் 6-ம் இடத்தானின்திசை பலன் அளிக்க வில்லை
அடுத்துவரும் ராகு திசை குரு புத்தியில் அவருக்கு நல்ல வேலை
கிடைத்து அமோக இருப்பார் ஏனனில் பத்தாம் அதிபதி
குரு சண்டாள யோகத்துடன் பத்தாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும்
தன பார்வையில் வைத்துள்ளார்
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, November 15, 2019 6:17:00 PM
--------------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
மிதுன லக்கினம் , பரணி நக்ஷத்திரம் மேஷ ராசி ஜாதகர் வேளையில் பிரச்சினை ஏற்பட்டதிற்கான காரணங்கள்
1 பொதுவாக வேலை பற்றிய நிலை அறிய பத்தாம் இடத்தையும் பத்தாம் இடத்தின் அதிபதி நிலையையும் , பத்தாம் இடத்து மீது உள்ள கிரகங்களின் பார்வையையும் பார்க்க வேண்டும்.
2 இந்த ஜாதகருக்கு பத்தாம் இடத்தில் சனியுடன் ராகு சேர்ந்து நிலையை மோசமடைய செய்தது. மேலும் பத்தாம் இடத்தின் மேல் கேதுவின்
பார்வை வரும் நிலைமை மோசமடைய காரணமாகும்.
3 இவருக்கு 24 வயதில் ராகு தசை வேறு வந்து வேலையையே நாசம்
செய்து , ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டது.
4 பத்தாம் இடத்து அதிபதி குருவின் பார்வை பத்தாம் இடத்தின் மேல் விழுவதால் , குரு அசுப கிரகமாக இருந்தாலும் குரு
தசையில் இருந்து நிலைமை சரியாகி நல்ல நிலை அடைந்தார்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, November 15, 2019 6:53:00 PM
------------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. மிதுன இலக்கினம், மேச இராசி ஜாதகம்.
2. அவரின் இந்த நிலைமைக்கு ஆறாம் அதிபதியின் பார்வையில் உள்ள சந்திரதசை, அடுத்து வந்த ஆறாம் அதிபதியான
செவ்வாயின் தசை நடந்ததே காரணம் ஆகும்.
தொழில் தானமாகிய பத்தாமிடம் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு
உள்ளதுடன் கர்மகாரகன் சனி மற்றும் கருமகாரகாதிபதி
குரு ஆகியோர்களும் ராகு கேதுவின் பிடியில் அகப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே அவருக்கு இந்த குறிப்பிட்ட வயது வரை
தொழில் நிலையில் போராட்டம் ஏற்பட்டது.
3. அதன்பின் வந்த ராகு மகா தசையில் சனி புத்தியில் அவருக்கு
நிரந்தரமான வேலை கிடைக்கும். ஏனெனில் பத்தாமிட
ராகு, பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதி சனி, இவர்கள்
மேல் பத்தாமிட அதிபதி குருவின் பார்வை
ஆகியவற்றால் பலன் கிடைக்கும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, November 16, 2019 9:18:00 AM
---------------------------------------------------
7
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம், கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 19 வயது முதல்
26 வயது வரை மிதுன லக்னத்திற்கு வரவே கூடாத
செவ்வாய் தசை நடை பெற்றது அதலால் செவ்வாய் எல்லாவற்றையும் கெடுத்தார். (செவ்வாய் திரிகோணம் ஏறியது மிகவும்
கேட்டது) பிறகு வந்த ராகுவும் சனியுடன் சேர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே ராகு தசையும் அவருக்கு
கைகொடுக்கவில்லை. நன்றி
Saturday, November 16, 2019 1:38:00 PM
-----------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
ஜாதகர் ஜனவரி 26 1969 ல் மிதுன லக்கினத்தில் பிறந்தவர். யோகாதிபதி சுக்கிரன் தசையில் பிறநது 3 வருடங்கள்
குழந்தை பருவத்துடன் முடிந்தது. நண்மைகளை அளிக்க முடியாத
சூரிய தசை 6 + 10 வருட சந்திர தசை + தீமை
மட்டுமே செய்யும் செவ்வாய் தசை 7 வருடம் என 26 வருடங்கள். 10ல் இருக்கும் ராகு தசை சுய புத்தி 3 வருடங்கள் என
29 வருடங்கள் கழிந்தது.10ம் அதிபதி 10ல் உள்ள தன் வீட்டை தானே பார்ப்பதாலும் தொழில் காரகன் சனி 10ல்
இருப்பதாலும் லக்கினாதிபதி புதன் 8ல் அமர்ந்து 2ம் வீட்டை
பார்த்ததாலும் 30 வயதிற்க்கு மேல் வந்த ராகு தசை குரு
புத்தி புதன் அந்தரத்தில் வேலை கிடைத்திருக்கும். காரகன் சனி 10ல்
இருந்து விரய வீட்டை பார்ப்பதாலும் ஸ்தானாதிபதி
குரு(பாதகாதிபதியும் ஆகியதால்) 12ம் வீட்டை பார்ப்பதாலும்
ஜாதகருக்கு நிரந்தர வேலை என்பதற்க்கு வாய்ப்பில்லை.
அன்புடன்
-பொன்னுசாமி.
Saturday, November 16, 2019 10:15:00 PM
-----------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
வணக்கம்,
மிதுன லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.
அவருடைய 28 வயதிற்குள் படிப்பு ஏறவில்லை... செய்தொழிலில்
நஷ்டம்... கிடைத்த வேலை வாய்ப்பிலும் நிலையாமை
போன்ற ஏமாற்றங்கள்.. ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்னாதிபதி புதன் 8ல் மறைவு.
2) தொழில் ஸ்தானத்தில் காரகன் சனி மற்றும் ராகுவின் கூட்டமைப்பு. காரகோ பாவ நாசய: என்பதற்கு ஏற்றாற்போல்
தொழில் நிலையாமை..
3) தொழில் ஸ்தானாதிபதி குரு நாலில் கன்னியில் அமர்ந்து கேதுவுடன்
கூட்டு, சனியின் நேர் பார்வையில் உள்ளார்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
நிரந்தர வேலை, ராகு தசை, குரு புத்தியில் அமைய வாய்ப்புள்ளது.
-இரா.வெங்கடேஷ்.
Saturday, November 16, 2019 10:35:00 PM
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com