மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!!


Astrology: ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!!

அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பெண்மணிக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள்
கூட கணவன் வீட்டில் வாழவில்லை. தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள். கணவன் குடும்பத்தார் தங்கமானவர்கள்.
யாருடைய சிபாரிசும் எடுபடவில்லை. எனக்குத் திருமண
வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள். 

தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!!

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 31-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:

=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. ஐயா,
    கேள்விக்கான பதில்
    1 லக்கினாதிபதி சூரியன் எட்டில்
    2 இரண்டாம் அதிபதி புதனும் நீசமாகி எட்டில் கூடவே சுக்ரனும் மாந்தியும் ,புதனும் சுக்ரனும் நீச்சபங்கமானதாலும் குருவின் பார்வை ஏழாம் இடத்திற்கு இருப்பதாலும் திருமணம் ஆனது
    3 .பாக்கியாதிபதி செவ்வாய் விரயத்தில்
    4 .திருமணத்திற்கான அனைத்து கிரகங்குலும் மறைவிடத்தில்
    5 மேலும் பெண்களுக்கு எட்டாம் இடமே மாங்கல்ய ஸ்தானமாக கருதப்படுகிறது,இரண்டில் ராகு சந்திரனுடன்
    தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  2. லக்கினம், அதன் அதிபதி(8ல் மறைவு), 7ம் வீடு, மூன்றுமே வலுவிழந்த ஜாதகம்.

    அம்சத்தில் நீசம் பெற்ற 7ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்து தனது வீட்டினை பார்த்து வலுவிழக்கச் செய்து திருமண வாழ்க்கையினை சர்வநாசம் செய்தது.

    மேலும் வாக்கு, குடும்ப தானத்தில் சந்திரனுடன் ராகு சேர்க்கை ஜாதகியின் மனநிலையில் வெறுப்பு அலட்சியம் ஏற்படுத்தியது.
    4ம் வீட்டு, சுகஸ்தான அதிபதி செவ்வாய் ஆகி, அவர் நீசமும் வர்க்கோத்தமுமாகி 12ல் விரயத்தில் வீழ்ந்து வாழ்க்கை சுகத்த்தினை விரட்டியடித்துள்ளார்.

    மொத்தத்தில் பாபக்கிரகங்கள் வலுப்பெற்று குடும்ப, மாங்கல்ய பலன்களை அடித்து விரட்டியிருக்கிறது.

    இப்படி ஒரு ஜாதகம் அமையாது அந்தநேரம் கடந்து போயிருக்கலாம் என்றுதான் சொல்வேன்.

    ReplyDelete
  3. ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!

    ஆசிரியருக்கு வணக்கம்.
    சிம்ம லக்கினம், கன்னி ராசி ஜாதகி. கால சர்ப்ப தோஷ ஜாதகம்.
    பெண்மணிக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள் கூட கணவன் வீட்டில் வாழவில்லை. தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள்.
    எனக்குத் திருமண வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள்.
    "தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!!"ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
    கன்னி ராசி என்றாலே கண்ணீர் விடும் ராசி என்று சொல்வார்கள்.

    1) லக்கினாதிபதி சூரியன் 8ல் தனுசு ராசியில் கேதுவுடன் சேர்ந்து கெட்டு விட்டார். மேலும் அம்சத்தில் நீசம் அடைந்து மாங்கல்ய தோஷத்தை உண்டாக்கினார். கூடவே மாந்தியும் சேர்ந்து குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
    2) குடும்பாதிபதி வர்கோத்தம நீச‌ புதனும் 8ல் அமர்ந்து கெட்டுள்ளார். உச்ச சுக்கிரன் கூடவே உள்ளதால் நீச பங்கம் அடைந்து திருமண பாக்கியம் கிட்டியது.
    3) குடும்ப ஸ்தானமான கன்னியில் 12ம் அதிபதி சந்திரன் ராகுவுடன் கை கோர்த்து கொண்டு ஈகோவை ஏற்படுத்தினார்.
    3)பாபகத்திரியின் பிடியிலுள்ள‌ லக்கினத்தில் 6.7ம் இட அதிபதியான சனி அமர்வு மற்றும் அம்சத்தில் நீசம்.
    4) சயன சுக ஸ்தானமான 12ல் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து நீசம் அடைந்துள்ளார். கடுமையான செவ்வாய் தோச ஜாதகம்.
    மொத்தத்தில், ஜாதகியின் லக்கினம், குடும்ப ஸ்தானம், களத்திரம்,
    8மிடமான மாங்கல்ய ஸ்தானம், 12மிடம் எல்லாம் கெட்டுள்ளது. மேற்கண்ட காரணங்கள் மற்றும் ஜாதகியின் திருமண வயதில் வந்த ராகு தசை எல்லாம் சேர்ந்து கொண்டு மண வாழ்க்கையை முறித்து அவரை தாய் வீட்டிற்கு அனுப்பியது.
    வழக்கம் போல் ஆசிரியரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  4. 1. Maandi in 7th house in Navamsa, which destroyed the family life.

    2. The lord of pleasure in this horoscope is mars, who is hidden in 12th house.
    (Sugha bhava 4th house) in rasi chart

    3. Further, bhagyadipati (lord of 9th house) also mars, hidden in 12th house. (Same
    mars is hidden in 12th house in navamsa adding the malefic effects.

    4. Rahu in 2nd house also denied family life.

    5. Lord of comfort venus is hidden in 8th house...also it is in conjuction with
    maandi...

    These things of the horoscope denied family life to the native.

    Thanks & Regards,

    TRB. Sanjai Kumarr

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா🙏

    1. சிம்ம இலக்கினம், இலக்கினாதிபதி சூரியன் எட்டில் மறைவு மற்றும் கேது பகவான் பிடியில்.

    2. களத்திர ஸ்தானம் பூர்வபுண்யாதிபதி குரு பார்வை பெற்றதால், திருமணத்தை நடத்தி வைத்தாலும்

    3. இலக்கினத்தில் அமர்ந்து ஏழாமிடத்தை நேரடியாகப் தாக்கும் ஆறாம் இடத்தானின்(சனியின்) பார்வையாலும்

    4. 2-8இல் ராகு-கேது, குடும்பாதிபதி புதன் இராசி மற்றும் அம்சத்தில் நீசம் அடைந்ததோடு அல்லாமல் எட்டாம் இட அமர்வுடன் கேதுவின் பிடி ஆகிய காரணங்களால் குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டது.

    5. பொதுவான மங்கள காரகனும் மற்றும் சிம்ம இலக்கினத்தின் சுகபாக்கியாதிபதியுமாகிய செவ்வாய் இராசி மற்றும் அம்சத்தில் நீசமடைந்தது மற்றும் விரய ஸ்தானம் சென்று இல்லற சுகம் மற்றும் குழந்தை பாக்கியத்தையும் தடை செய்தது.

    6. கட்டில் சுகத்தைக் குறிக்கும் 12ஆம் இட அதிபதி சந்திரனும் இராகுவிடம் பிடிபட்டார்.

    7. களத்திர காரகன் சுக்கிரனும் கேதுவிடம் பிடிபட்டு,

    8. மனோகாரகன் சந்திரன் ராகுவால் பாதிப்பு, மூன்றாம் இட அதிபதி சுக்கிரன் கேதுவால் பாதிப்பு மற்றும் மூன்றாம் இடத்தில் சனியின் பார்வை ஆகியவற்றால் யார் சொல்லியும் கேளாத மனநிலை ஏற்பட்டு

    இலக்கினம் பாப கர்த்தாரி யோகத்தால் பாதிப்பு என்று இல்லற வாழ்க்கைக்கு உரிய அனைத்து கதவுகளும் மூடப்பட்டதால் ஜாதகருக்கு இந்நிலை ஏற்பட்டது.


    பிழைகள் இருப்பின் பொருத்தருளுக பெரியோரே....


    முருகன் ஜெயராமன்
    புதுச்சேரி.


    ReplyDelete
  6. Horoscope lesson- 03-29-2019
    வணக்கம்.
    25 மார்ச் மாதம் 1978, மாலை 4.30 மணிக்கு, ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி சிம்ம லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகி பிறந்தார்.

    சிம்ம லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (4 & 9 பாக்கியஸ்தான வீட்டிற்கும், உரியவன்) புதன் (2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன்) ஆகவே இவர்கள் மூவரும் ஜாதகத்தில் வலிமையுடன் இருப்பது முக்கியம்.

    சிம்ம லக்கினம். அதிகாரமும் பலமும் எப்பொழுதும் பெற விரும்புவார். பார்வைக்கு கவர்ச்சியாக இருக்க கூடியவர். தைரியமிக்கவர். கோபமிக்கவர். எதிரிகளை தைரியமாக எதிர்ப்பவர். சிம்மத்தில் சனி இருந்தால் பிடிவாத குண முடையவர். எதற்கும் வளைந்து போகாதவர்.

    லக்கினத்தில் சனி(3 பரல்)இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். கீழ்த்தரமான சகவாசம் உடையவர்.

    திருமணம் முடிந்து பிரிந்து இருப்பதற்கான காரணம் :

    1. லக்கினம் (28 பரல்) பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் செவ்வாய் மறு பக்கம் ராகு) எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும். லக்கினம் வர்கோத்தமம்.

    2. லக்கினாதிபதி சூரியன் 8ம் வீட்டில் கேதுவுடன், நீசமான புதனுடன் கூட்டு சூரியன் (3 பரல்) 8ல் இருந்தால் ஜாதகி துன்பத்தில் மூழ்க நேரிடும். நவாம்சத்தில் சூரியன் துலா ராசியில் நீசம். சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 8-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகி பிடிவாத குணம் உடையவர்.

    3. 7ம் வீட்டு அதிபதி சனி (3 பரல்) நவாம்சத்தில் மேஷ ராசியில் நீசம். ஏழாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் திருமணம் பிரிவில்தான் முடியும். 43 வயதில் (2021) சனி மகா தசை ஆரம்பம்.

    4. 12ம் வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாயின் 8ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதால் திருமணம் பிரிவில்தான் முடியும். 7ம் வீட்டை தீய கிரகம் பார்த்தாலும் திருமணம் பிரிவில்தான் முடியும்.
    9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய் 12ல் கடக ராசியில் நீசம். நவாம்சத்திலும் நீசம் . வர்க்கோத்தம். பெண்களுக்கு பாக்கியஸ்தானம் சரியாக அமையவில்லை என்றால் குடும்பம் அமைவது ரொம்ப கஷ்டம்.

    5. 2ம் வீட்டு குடும்பஸ்தான அதிபதி புதன் மீன ராசியில் நீசம். நவாம்சத்திலும் நீசம் . வர்க்கோத்தம் . 2ம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வை நேராக 8ம் வீட்டு மீது உள்ளது. 9 வயது (1987) முதல் 27 வயது வரை (2005) ராகு மகா தசை.

    6. 2ம் வீடு 19 பரல். மிகவும் குறைவான பரல். பலவீனமான வீடாக அமைந்துள்ளது குடும்ப வீடு. 2ல் சந்திரன் இருந்தால் இளவயதில் திருமணம். செல்வாக்கு நிறைந்தவர். புத்திசாலித்தனம் உடையவர். 2ல் ராகு சோம்பல் உடையவர். வாயை திறந்தால் சண்டைதான். 2ல் சந்திரன் ராகு சேர்ந்து இருந்தால் கையில் காசு தங்காது.

    7. 12ஆம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

    8. சுக்கிரன் கேது சேர்ந்து 8ல் இருந்தால் ஜாதகிக்கு நிம்மதி இருக்காது.

    9.. சுக்கிரன் 8ல் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். அழகான கண்களை உடையவர். சிம்ம லக்கினத்திற்கு சுக்கிரன் மிக பெரிய நன்மைகளை செய்யமாட்டார்

    10. 11ல் அமர்த்துள்ள குருவின் 9ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது . குரு 8ம் வீட்டு அதிபதியும் ஆவார். 27 வயதில் (2005) குரு மகா தசை ஆரம்பம். 5ம் வீட்டுக்கும் அதிபதி ஆவார்

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  7. அம்மணி 25 மர்ர்ச் 1978 அன்று மாலை 4. 30 போலப் பிறந்தவ்ர். சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    சிம்ம லக்கினம், கடகலக்கினம் ராசிக்காரர்களுக்குப் பொதுவாகவே திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமைவதில்லை.காரணம் 7ம் இடம் சனைச்சரனுக்கு உரியது.அம்மணிக்கு லக்கினத்திலேயே சனி என்பது அவரை எப்போதும் முகம் தூக்கி வைத்திருப்பவர்ரக, எதிமறை விளைவுகளை எதிர்பார்ப்பவராக ஆக்குகிறது.லக்கினம் செவ்வாய் ராகுவாலும் அணைக்கப்பட்டு பாபகர்த்தாரியில் இருக்கிறது.கணவன் ஸ்தானமாகிய 7ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை, சனி பார்வை. குரு பார்வையும் உண்டு.குரு பார்வையால் திருமணம் நடந்தது. ஆனால் சனி பார்வையும், செவ்வாய் பார்வையும் வலுவாக் ஐருந்ததால் திருமணம் கெட்டது.12ம் அதிபன் சந்திரன் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் சம்பந்தம்.எனவே குடும்பம் அமைவது தடுக்கப்பட்டது.ராகு சந்திரன் கூட்டணி ஜாதகிகிக்கு இயற்கைக்கு மாறான மன நிலையை கொடுத்திருக்கும். லக்கினாதிபதி சூரியன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்தது.பெண்களுக்கு களத்திரகாரனாக எடுத்துக்கொள்ளக்கூடிய செவ்வாய் 12ல் மறைந்து நீசம் அடைந்தது.சுக்கிரன் உச்சமானாலும் 8ல் மறைந்தது. அஷ்ட வர்கத்தில் 7ம் இடம் 23 பரலே பெறுகிறது. பாவாதி பலனில் 7ம் இடம் 10 வது ரேங்க். குடும்பஸ்தனம் 11 ரேங்க். ராகுதசா சுக்கிர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
    தொடர்ந்து வந்த தசா புக்திகள் கைகொடுக்க்வில்லை.

    நவாம்சமும் உதவவில்லை. களத்திரகாரகன் களத்திர ஸ்தனத்தில் மாந்தியும் 7ம் இடத்தில்.7ம் அதிபதி சனைச்சரன் நீசம் அடைந்து ராகுவுடன் சம்பந்தம்.குடும சதனதிபதி புதன் நீசம்.

    சாமியாரிணி ஜாதகம்!
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  8. லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு, கேதுவுடன் இணைவு. அம்சத்தில் நீசம், கேதுவுடன் இணைவு..
    லக்னத்திற்கு சுபர் பார்வை இல்லை. வர்கோத்தம லக்னம் என்பது ஒரு பலம்.
    களஸ்திர ஸ்தானாதிபதி சனி பகை வீட்டில் அமர்வு, சுபர் பார்வை இல்லை. களஸ்திர ஸ்தானத்தின் மேல் அவரின் நேர் பார்வை. களஸ்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் நீசம், ராகுவுடன் இணைவு.
    யோககாரகன் செவ்வாய் விரையத்தில் அமர்வு, நீசம், அவர் பார்வை களஸ்திர ஸ்தானத்தின் மேல்.
    களஸ்திர காரகன் சுக்கிரன் உச்சமானாலும், கூட அமர்ந்த புதனின் நீசத்தை பங்கமாக்கி, பலம் குன்றியுள்ளார். அத்துடன், சுக்கிரன் 8-ல் மறைவு, பகையான சூரியன், கேதுவுடன் இணைவு.
    குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்வு. உடன், விரைய ஸ்தானதிபதி சந்திரன்.
    குடும்பாதிபதி புதன் நீசபங்கமானாலும், கேதுவுடன் இணைவு. அஷ்டமத்தில் மறைவு, விரையாதிபதியின் பார்வையில்.
    குரு பார்வை புத்திர ஸ்தானத்தின் மேலும், ராசிக்கு 2-ன மேலும் உள்ளது, ஆனால், குரு அஷ்டமாதிபதியும் ஆவார். அத்துடன், குரு தனித்து அமர்ந்துள்ளார்.
    ராசி ராகுவுடன் இணைவு.
    ராசிக்கு 7-ல் சூரியன், சுக்கிரன், கேது.
    ராசிக்கு 2-ல் விரைய நீச செவ்வாய் பார்வை.
    ராசிக்கு 5-ல் குரு பார்வை உள்ளது, ஆனால், குரு அஷ்டமாதிபதியும் தனித்த குருவும் ஆவார்.
    - ஃபெர்னாண்டோ

    ReplyDelete
  9. வாத்தியாருக்கு வந்தனங்கள், 7-ம் பாவத்தின் மேலுள்ள குரு மற்றும் களத்திர ஸ்தானாதிபதி(சனி)யின் பார்வையால் திருமணம் நடந்தது.இருப்பினும் காரகன் & லக்னாதிபதி 8ல் அமர்ந்தும் (சுக்கிரன் உச்சமானாலும்) அம்சத்தில் 7ல் அமர்ந்தும்(காரகன் பாவ நாஸ்தி) வர்க்கோத்தம செவ்வாய் 12 ல் நீசம் அடைந்து(அயன சயன தோசம்) 2ம் வீடாகீய குடும்ப ஸ்தானத்தில் ராகு மேலும் அசவ்ய கால சர்ப தோசம் வாழ்க்கையின் 2ம் பாகத்தையும் (திருமண வாழ்க்கை)கெடுத்தது.

    ReplyDelete
  10. லக்கினாதிபதி சூரியன் 8 இல் மறைவு,லக்கினம் பாபகர்தாரி யோகத்தில்
    குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு
    ஆறுக்குடைய சனி லக்கினத்தில்
    8ம் இடத்தில சூரியன் ,சுக்கிரன் , புதன் மறைவு
    யோகக்காரன் செவ்வாய் 12இல் மறைவு
    கால சர்ப்ப தோஷமுடைய ஜாதகம் . ராகு கொடி பிடிக்கிறது.
    7ம் இடத்திற்கு 7க்கு உடைய சனி மற்றும் குரு செவ்வாய் பார்வையால் திருமணம் நடந்தது .
    ஆனால் அவர்களே 6 மற்றும் 8க்கு உடையவர்கள் .

    மேற்கூறிய காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை .

    வாத்தியாருக்கு ஒரு வேண்டுகோள் : எப்போதும் நடந்து முடிந்தவற்றை பற்றியே விவாதிக்கிறோம் . ஒரு ஜாதகத்தை பதிவிட்டு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று விவாதிக்க வேண்டுகிறேன் .

    ஏனெனில் ஜோதிடம் என்பது இறந்தகாலத்தை மட்டும் விவாதிப்பது அல்லவே !!!

    எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என விவாதிக்கும்படி கேள்விகள் அமைக்கவும்

    ReplyDelete
  11. லக்கினாதிபதி (ஹீரோ) சூரியன் கேதுவுடன் எட்டாம் வீட்டில். நோய், கடன், எதிரி தரக்கூடிய ஆறாமிடத்து பாபர் சனி லக்கினத்தில்.
    களத்திர ஸ்தானாதிபதி சனி 7 க்கு 6 ஆம் வீட்டில் மறைந்தாலும், களத்திரகாரகன் சுக்ரன் உச்சமானதால் திருமணம் உண்டு. ராகு தசையில் சனி புத்தி பிற்பகுதியில் திருமணம் நடந்திருக்கலாம்.
    குடும்ப ஸ்தானாதிபதி புதன் 8 ஆம் வீட்டில் நீசமாகி, 8 ஆம் வீட்டதிபதியோடு பரிவர்த்தனை. விரயாதிபதி சந்திரன் ராகுவோடு சேர்ந்து அமர்ந்து குடும்பஸ்தானத்தை கெடுத்தார்.
    சுகம் மற்றும் பாக்கியஸ்தனாதிபதி செவ்வாய் 12 இல்.
    ஜாதகருக்கு திருமணத்திற்கு பின் வந்த ராகு, குரு தசாபுத்திகள் கரைசேர்க்க வாய்ப்பில்லை. காரணம் ராகு சந்திரனோடு இருப்பதால் சந்திரனின் ஸ்தான அதிபத்யங்களான விரய, அயன, சயன போக விஷயங்களில் பிரச்சனை கொடுத்திருப்பார். சந்திரன் மனத்துக்காரகன் என்பதல் மனப்போராட்டங்கள் மிகுந்திருக்கும் காலம். குரு அட்டமாதிபதியாய் பரிவர்த்தனை மூலம் 8 இல் ஆட்சி ஆனதாலும், 8 ஆம் இடத்தில 4 கும் மேற்பட்ட கிரஹங்கள் இருப்பதாலும், குரு தனது தசையில் 8 ஆம் வீட்டு அதிபத்யங்களான ஆயுள், கண்டம், அவமரியாதை போன்றவற்றிற்கு வலு சேர்த்திருப்பார்.
    சிபாரிசு ஈடுபடாததிற்கு காரணம் சிம்மம் லக்கினம் ஆகி அதில் அமர்ந்த சனி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com