மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.12.18

Astrology: quiz: 21-12-2018 புதிருக்கான விடை!!!


Astrology: quiz: 21-12-2018 புதிருக்கான விடை!!!

லக்கினம் வலுவாக அதாவது நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் நினைத்ததை அடைய முடியும். அனுபவிக்க முடியும்!
ஜாதகர் துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே உள்ளார், உடன் பாக்கியாதிபதி புதனும் கூட்டாக உள்ளார். அத்துடன் வர்கோத்தமம் பெற்ற குரு பகவானும் லக்கினத்திலேயே உள்ளார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த துலா லக்கினத்திற்கு யோக காரகனான சனீஷ்வரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.

பத்தாம் வீட்டின் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 7ல் அமர்ந்து அந்த வீட்டைத் தன் பார்வையில் வைத்துள்ளார். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வையும் பத்தாம் வீட்டில் மேல் உள்ளது. அத்துடன் செவ்வாய் கர்மகாரகன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது.

இந்த அமைப்பெல்லாம் சேர்ந்து ஜாதகரை நல்ல உத்தியோகத்தில்  அமர்த்தின!!!!!

ஜாதகருக்கு அவருடைய  30ஆவது வயதில் ராகு மகாதிசையில் சுக்கிர புத்தியில் எல்லாம் ஈடேறியது. நடந்தது!!!
ராகு 5ஆம் வீட்டில் உள்ளார். அவர் தான் இருக்கும் வீட்டின் அதிபதி சனியின் பலன்களைக் கொடுக்க வேண்டும். சனி 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். அத்துடன் 3 சுபக்கிரகங்கள் - சுக்கிரனையும் சேர்த்து அவரைப் பார்க்கின்ரன. அதைக் கவனியுங்கள்!!!! ஆகவே அந்த புத்தியில் எல்லாம் நடந்தன!!!!

புதிருக்கான பதிலை 12 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 28-12-2018 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger csubramoniam said...
ஐயா கேளிவிக்கான பதில்
1 .லக்கினாதிபதி சுக்ரன் லக்கினத்தில் அமர்ந்துள்ளார்
2 கூடவே லாபாதிபதி சூரியனுடன் கூட்டு
3 பூத ஆதித்ய +நிபுண யோகம்
4 .ஒன்பதாம் அதிபதி புதன் லக்கினத்தில் (கடல்கடக்கும் யோகம்)
௫.பத்தாம் அதிபதி சந்திரனும் செய்வாய் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் இடத்தை நேரடிப்பார்வையில் வைத்திருப்பதால் தொழிலில் நல்ல முனேற்றம் ஏற்பட்டுள்ளது
ராகு திசை சுக்ர புத்தியில் வெளிநாட்டு யோகம் அமைய்ந்துள்ளது
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி .
Friday, December 21, 2018 1:13:00 PM
--------------------------------------------------------
2
Blogger Sanjai said...
சுக்கிரனுக்கு, (லக்கினாதிபதிக்கு) 9ஆம் (புதன்) அதிபதி மற்றும் 12 ஆம் அதிபதியுடன் (புதன்) தொடர்பு உண்டு . ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் உண்டு.
10 க்கு உடைய சந்திரன் 4 ல் இருந்து தன் வீடான கடகத்தை 7 ம் பார்வையாக 10 ம் இடத்தை செவ்வாயுடன் சேர்ந்து பார்க்கிறார்.
9 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்து தீய கிரகத்தின் பார்வை பாராமல் இருந்தால் வெளிநாடு செல்ல முடியும்.
5th & 7th அதிபதி பரிவர்த்தனை (சனி, செவ்வாய்) வெளிநாடு போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்
Friday, December 21, 2018 8:24:00 PM
------------------------------------------------
3
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
புதிர்: என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?
துலா லக்கினம், மகர ராசி ஜாதகர்.
யோக காரகன் சனி ஏழில்.... பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.
வாத்தியாரின் பழைய பாடம் இது....கீழே!
Quote:
(துலா லக்கினத்திற்கு சனி யோக காரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவர். அந்த லக்கின ஜாதகருக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவராவார். அந்த இரண்டு இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவர் அவர். ஆனால் ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டார். பங்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பார். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)
ஆனால் அதே துலா லக்கின ஜாதகத்தில் சனி, பரிவர்த்தனை பெற்றிருந்தால், குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளுக்கான பலன்களை அள்ளி அள்ளிக் கொடுப்பார். அவர் இரட்டைச் சனியாகிவிடுவார் . நன்மைகள் இரண்டு மடங்காகிவிடும். சனியின் சுயவர்க்கப்பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் (அதாவது அந்த ஜாதகத்தில்) பலன்கள் நான்கு மடங்காகக்கூட ஆகிவிடும்!
அதே சனி பரிவர்த்தனை பெற்றும் பலமின்றி இருந்தால், அவஸ்தைகளும், சிரமங்களும் இரண்டு மடங்காகிவிடும். பலன்கள் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் காலதாமதமாகி, நமது பொறுமையை சோதித்து, கடைசி நிமிடத்தில் கிடைப்பதாக இருக்கும்.}
Un-Quote:
ஜாதகத்தில் மாளவ்ய யோகம், ரூசக யோகம், கஜ கேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. மேற்கண்ட காரணங்களால், ஜாதகருக்கு 30 வயதிற்குள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைத்து வெளி நாட்டில் நல்ல உத்தியோகம்;கை நிறைய சம்பளம் போன்ற ஆசைகள் நிறைவேறின.
இரா.வெங்கடேஷ்.
Friday, December 21, 2018 8:42:00 PM
--------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொண்டு காரணம் சொல்லப்படுகிறது.
2,7க்கு உடைய செவ்வாய் 4ம் இடம் கேந்திரம் ஏறி உச்சம் அடைந்தார்.ஆகவே தனமும்,பொதுவாழ்க்கை, மனைவி ஆகியவை நன்றாக அமைதல் வேண்டும்.செயலாற்றல் அதிகம் இருக்கும்.
வலுப்பெற்ற செவ்வாயுடன் 10ம் அதிபதியான சந்திரன் இணைந்து, வேலைக்கான 10ம் இடத்தினையே பார்த்தனர். எனவே வேலை கிடைப்பதில் தடை இல்லை.
வேலை கார‌கனான சனி பகவான், (லக்கினத்திற்கு யோககாரகன், ராசி அதிபதி) 7ல் அமர்ந்து நீச பங்கம் ஆகி சுக்கிரன்,குரு, புதன் ஆகிய சுபர் பார்வையப் பெற்று வேலைக்கான அதிர்ஷ்டத்தைக் கொடுத்தார்.
லாப ஸ்தானதிபதி சூரியன் லக்கினத்தில் அமர்ந்து நீசபங்கம் ஆனது அதிர்ஷ்டமானது.
ராகு கேதுவைத் தவிர மற்ற ஆறு கிர‌கங்களும் குருவின் பார்வைய, சம்பந்ததைப் பெற்றனர்.இது மிகுந்த அதிர்ஷ்டம் அளித்தது.குரு ஒன்பதாம் இடத்தைப் பார்த்தது, ஒன்பதாம் அதிப‌னுடன் கூட்டணி ஆகியவை மிகுந்த அதிர்ஷ்டம் அளித்தது.
ஜாதகரின் 18 வயதுமுதல் 36 வயதுவரை ராகுதசா. சாதாரணமாக மகர ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டுப்பயணம் உண்டு.மேஷம் கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகள். இவர்களுக்கு வெளிநாட்டு வாசம் சகஜம். இவர் துலாம் லக்கினம் மகர ராசி.ராகுதசாவில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டானது.9,12 அதிபதியான புதன் லக்கினத்தில், சரராசியில் அமர்ந்து குரு சம்பந்ஹ்தம் பெற்றது வெளிநாட்டுப்பயணம் ,வேலை ஆகியவை அமைந்தன.
kmrk1949@gmail.com
Saturday, December 22, 2018 4:27:00 AM
----------------------------------------------
5
Blogger Ramanathan said...
All favourite planets positioned in Lagna
**Lagna Lord Sukran, 2nd house lord Guru(in same place in navamsa), 11th house lord Suryan, 9th house lord Budhan
3rd house(of victory) is very strong
**Mars and Moon together in 3rd house.
**3rd house lord Saturn and 7th house lord Mars interchanged
**10th house lord moon in 3rd house aspecting 10th house
The drawbacks nullified
**Saturn(neecham) in 7th house
The most important reason for achieving success in less than 30 years
**Rahu is alone in 5th house. The dasa of Rahu would have ensured success
The real drawbacks. They are milder given the strength of other planets
**Mandhi in 2nd house
**12th house lord Budhan in lagnam
**6th house lord Guru in lagnam
**Ketu in 11th house
Saturday, December 22, 2018 10:05:00 AM
---------------------------------------------------------------
6
Blogger ponnusamy gowda said...
அய்யா வணக்கம்!
என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?-யா . என்னதான் இல்லே ஜாதகத்திலே? என்னென்னவோ அதிசயங்கள் இருக்கு ஜாதகத்திலே!
ரிஷப லக்கினம் லக்கினாதிபதி லக்கினத்திலேயே ஆட்சி.கூடவே பாக்கியாதிபதி புதனும் லாபாதிபதி சூரியனும் கூடவே முழு சுபரான குரு பகவானும் அமர்ந்து லக்கினமே யோகர் என நிரூபித்துள்ளது.முழு யோகரான சனி பகவான் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார். 7ல் சனி பகவான் திக் பலம். தான் அமர்ந்த வீட்டு அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை. நீச்ச சனிபகவானை நீச்சமான சூரிய பகவான் பார்வை செகிறார். அதிசயம் என்னவெனில் சூரிய பகவானும் சனீஸ்வர பகவானும் இருவருமே நீச்ச பங்கம் அடைந்தது சிறப்பு. லக்கினத்தில் அமர்ந்த குருவும் புதனும் திக் பலம் அடைந்து ஜாதகரை அதிபுத்திசாலியாக ஆக்கியுள்ளனர். குரு வர்க்கோத்தமும் அடைந்துள்ளார். 8,12 அதிபதிகள் லக்கினத்திலேயே பலமடந்ததால் வெளிநாடு வாசம்.ராஜ கிரகமான 10மதிபதி சந்திரனும் சுக ஸ்தானாதிபதி செவ்வாயும் 4ல் அமர்ந்து ( 4ல் சந்திரன் திக் பலம் ) சொந்தவீட்டை பார்த்து பலப்படுத்தியுள்ளார்!
நடப்பு குரு திசை 2021 ல் முடிந்து சனி திசையில் ஜாதகரின் யோகம் இன்னும் பலப்படும்!
அதிசய ஜாதகம் - வாழ்த்துக்கள் ஜாதகருக்கும் குருவிற்க்கும்!!!
-பொன்னுசாமி.
Saturday, December 22, 2018 11:17:00 AM
------------------------------------------------------
7
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
21-12-2018 அன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் துலா லக்ன ஜாதகமாகும். வெளிநாட்டு பயணத்திற்கு 9, 12 ஆம் வீடுகள் பலம் பெற்றிருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 9, 12 ஆம் வீடுகள் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.9, 12 ஆம் வீடுகளின் அதிபதியான புதன் கிரகம் லக்னத்தில் லக்னாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். அவருடன் குருவும் லாபாதிபதியான சூரியனும் சேர்ந்துள்ளனர். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளார். ஆகவே, அவருக்கு வெளிநாட்டு வேலை, வசதி வாய்ப்பு எல்லாம் சுலபமாகக் கிடைத்தது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Saturday, December 22, 2018 11:25:00 AM
-----------------------------------------------------------
8
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
என்ன தான் அதிசயமோ புதிருக்கான பதில்
1 ஜாதகத்தில் 10 - இம் இடத்து அதிபதி சந்திரன் உச்ச செவ்வாய் யோடு இணைந்து சந்திர - மங்கள யோகம் பெற்று உள்ளது. மேலும் 4 மற்றும் 7 இம் இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகம் பெற்று நீச பங்க ராஜா யோகத்தில் உள்ளது.
2 11 இம் இடத்து அதிபதி மற்றும் 9 இம் இடத்து அதிபதி கூட்டாக இணைந்து லக்கினத்தில் குரு பார்வை பலம் பெற்று புத ஆதித்ய யோகம் பெற்று கல்வி மூலம் முன்னேற்றம் பெற்று நிறைய சம்பாத்தியம் பெற்றார்.
3 சுக்கிரன் வெளி நாடு செல்லும் அமைப்பை மேம்படுத்தி அதை பெற்றோர் மூலம் நிறைவு செய்தார் . இவர் லக்கின அதிபதி ஆதலால் இவர் தசை வரும் போது எல்லாம் நடந்தது .
நன்றி
சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Saturday, December 22, 2018 12:00:00 PM
----------------------------------------------------
9
Blogger sundari said...
வணக்கம் சார்
18 வயதிலிருந்து ராகு தசை தொடங்கியது ராகு 5 இருக்குது பொதுவா ராகு வெளிநாடு அதாவது அந்நிய தேசத்திலிருந்து பணம் பெரும் கிரகம் அந்த
திசையில் அவர் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்தார் மேலும் அது குருவின் லட்சுமி ஸாதனம் அந்த யிடம் குருபார்வை பெற்றுஇருக்குது
மேலும் சந்திரன் மகரத்தில் இருக்குது அது நீரை குறிக்கும் இடம் தண்ணி ராசியிலிருந்தால் வெளிநாடு செல்லுவார்கள் மேலும் வெளிநாட்டை குறிக்கும் 9 அதில் சனி குரு பார்வை பெற்றுஇருக்குது 11 கேது நினைத்தது நடக்கும் மாளவியா புத ஆதித்ய ருச்சகய சந்திரா மங்களம் அம்ச யோகம் இருக்குது துலா லக்கனம் எல்லா சந்தோசம் கிடைக்கும்
Saturday, December 22, 2018 1:35:00 PM
-----------------------------------------------------------
10
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)லக்னம் சர லக்னமாகி,லக்னாதிபதி லக்னத்தில்.அவரே 8க்கும் அதிபதியாகி வெளி நாட்டு பயணத்தை கொடுக்கிறார்2)நீண்ட பயணத்திற்க்கு காரணமான பாக்யாதிபதி புதன் லக்னத்தில்.அவரே 12க்கும் அதிபதியாகி,லக்னத்துடன் சம்மந்தப்பட்டு வெளிநாட்டில் பிழைக்கும் தன்மையை தருகிறார்3)லாபாதிபதி சூரியன்,நீசபங்கமாகி லக்னத்தில் அமர்ந்து 8,9,12அதிபதிகளுடன் இணைவு.4)3,6க்கு உடையவரான குரு லக்ன பாபர் என்றாலும்,இயற்க்கை சுபராதலால்,அவர் சேர்க்கை உத்யோகம் பார்க்கும் அமைப்பை கொடுத்தது5)யோககாரன் சனி 7ல் அமர்ந்து லக்னத்தை பார்ப்பது.சந்திர கேந்திரத்தில் இருப்பதால் நீச்ச பங்கமாகி வலுவாகிறார்.6)10ம் இடமும் சரம் மற்றும் நீர் ராசியாகி,அதன் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து வளர்பிறை சந்திரனாகி 10ம் இடத்தை பார்ப்பதும்7)மேல்படிப்பிற்க்கான 5 ம் இடத்தில் அமர்ந்த ராகு தசா ராகு புத்தியில்(ராகுக்கு வீடு கொடுத்தவர் சனி ஆதலால்)வெளி நாட்டிற்க்கு படிக்க சென்றவர் அங்கேயே வேலைபார்க்கும் வாய்ப்பை பெற்றார்.நன்றி.
ஐயா ஒரு சந்தேகம்.
11ம் அதிபதி எல்லா
லக்னங்களுக்கும் பாபர் என்கிறார்கள்.அவரே லாபாதிபதியாகிறார்அவர் பார்த்த அமர்ந்த சேர்ந்த பலன்களை எப்படி கணிப்பது
Saturday, December 22, 2018 9:26:00 PM
--------------------------------------------------------
11
Blogger guru said...
Birth date:15-Nov-1969 : 6 am
strong lagna. sukran in own house.
guru aspects rahu in 5th place.
uccha sevvaai in 4th place with moon(chandra mangala yoga)
all gave good higher education.
uccha sevvaai(second house god) aspects 10th & 11th place
10th god chandran conjuncts sevvaai, both aspects 10th place.
so houses 2 & 10&11 strongly related.
. yogakaragan sani aspects 9th house and 12th god budhan.
All these gave foreign job and good money in rahu dasa.
After age 18, rahu dasa started.
Rahu gave good yoga from the starting of the dasa.
Person achieved all the yoga within 30 yrs.
Saturday, December 22, 2018 10:40:00 PM
-------------------------------------------------------------------
12
Blogger திலக் ஜெ.பாலமுருகன் said...
வாத்தியார் அய்விற்கு வணக்கம்.
எமது ஜாதக ஆய்வை முழுமையாக பின்னூட்டத்தில் பதிவிட இயலவில்லை.
தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு Classroom2007@gmail.com க்கு அனுப்பியுள்ளேன்.
தாங்கள் அடியேனின் ஆய்வில் தவறேதும் இருப்பின் சுட்டி காட்டுமாறு பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.
ஸ்ரீ உச்சிஷ்ட மஹகணபதி போற்றி!
வாத்தியார் அய்யாவிற்கு பணிவான வணக்கம்.
ஜாதகர் பிறந்த தேதி: 15-11-1969
பிறந்த நேரம்: 04:30:40Am (தோராயம்)
லக்னம் : துலாம்
இராசி/ஜென்ம நட்சத்திரம்: மகரம்/உத்திராடம் 3ம் பாதம்.
தற்போது வயது: 49வ 1மா.
சித்த யோகம், வளர்பிறையில், புதன் ஹோரையில் ஜனித்த ஜாதகம்.
லக்னம் 05° 10' பாகையில் துலாத்தில். லக்ன பாவமுனை உபாதிபதி சூரியன். சூரியன் 11ம் வீடான சிம்ம வீட்டோன். காரகத்தில் சம்பாத்திய காரகன். லக்கன பாவமுனைக்கு உபாதிபதியாக வீற்றிருப்பது சிறப்பு. மேலும் சூரியன் குரு நட்சத்திரத்திலும், சூரியனே உபநட்சத்திரமாக சுயவலு பெற்றதும் ஜாதகர் கவுரவம் மிகுந்த பாரம்பரியமிக்க குடும்பத்தில் ஜனித்திருப்பார்.
ஜாதகர் பருமனற்ற உயரமான தோற்றம் உடையவர். திடமான ஆரோக்கியம் உடையவர்..
லக்ன பாவமுனை 1,3,9 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஆழ்ந்த நுண்ணறிவும், திடமான முடிவுகளையும் எடுக்க கூடியவர்.
ஆராய்ச்சி சிந்தனையும், புதியனவற்றில் மிகுந்த ஈடுபாடும் உடையவர்.
தன ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவமுனை செவ்வாய் வீடான விருச்சிகத்தில் 4° 47' பாகையில் சனியின் உப நட்சத்திரத்தில் விழுந்துள்ளது. கர்ம காரகன் சனி நின்ற நட்சத்திரம் வித்தியாகாரகன் புதன், உப நட்சத்திரம் ஞான காரகன் கேது. சனி -> புதன் | கேது.
மேலும் சனி (2,4,8,10) நிலையான பாவங்கள் என்று சொல்ல கூடிய 2,4,10ற்கும், இரட்டைபடை பாவங்களை இணைத்து இயக்க கூடிய 8யையும் வைத்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பு. கேந்திர பாவங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது 10ம் இடம். அதை சனியே முன்னின்று இயக்குவதால் கர்ம காரகன் நல்ல யோகத்தை வழங்குவான். மேலும் இரண்டாம் பாவம் தனஸ்தானம் வலுவாக 2,4,6,8,10 தொடர்பு பெற்றது செல்வ சேர்க்கைகக்கு அதி சிறப்பான அமைப்பு.
ஜாதகரின் அறிவாற்றல், புதிய சிந்தனை, முயற்சி, புதியன நாடுதல், நரம்பு மண்டல பலமறிதல் போன்ற காரகங்களை உணர்த்தும் 3ம் பாவத்திற்கு சந்திரன் உபாதிபதியாக அமைந்து 1,3,9,11 ஆகிய இயற்கை பேரறிவை வழங்கும் பாவங்களுடன் நல்லுறவு பூண்டது பிறப்பிலே நல்ல அறிவை விதிவகையில் வழங்கி உள்ளது.
இருப்பினும் சந்திரன் ஒரு மாறும் நிலை கிரகம். தசா புக்திக்கு தகுந்தார் போல் சிந்தனை மாற்றம் தருபவர். ஆகையால் ஜாதகரின் என்ன ஓட்டம் சனி மற்றும் புதன் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலகட்டத்தில் சற்று தாருமாறாக இருக்கும்.
நான்காம் பாவம் இரட்டை படை தொடர்பு. பொறியியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்காகூடிய ஜாதகம்.
6,7ம் பாவ அடிப்படையில் சுய தொழிலைவிட அடிமை தொழிலே சிறப்பு.
உள்நாட்டில் அரசாங்க உத்தியோகம் சற்று கடினமே.
தொலைதூர வகையில் வருமானத்தை குறிக்க கூடிய 9ம் பாவத்திற்கு சுபிட்ச காரகன் சுக்கிரன் அமைந்து, மேலும் தொடர்பு கொண்ட பாவங்கள் 2,4,6,8,10. ஆக ஜாதகருக்கு வெளிநாட்டு வருவாய் 100% உறுதி.
ஜாதகர் உள் நாட்டில் தங்கி ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருவாய் ஈட்டுவாரா அல்லது வெளிநாட்டில் வேலை செய்து வருவாய் ஈட்டுவாரா?
ஜாதகரின் வேலையை குறிக்கும் ஆறாம் பாவம் உபய மற்றும் நீர் ராசியான மீனம்.  இந்த பாவத்திற்கு உபாதிபதி புதன். மேலும் வெளிநாட்டு வாழ்க்கையை குறிக்க கூடிய 12ம் பாவத்திற்கும் உபாதிபதியாக அமைந்தது மிக சிறப்பாக அமைந்துள்ளது.
12ம் பாவம் 1,3,5,9 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் வெளிதேச வாழ்க்கையால் பெரிய அனுகூலம் அடைவார்.
பெரும்பாலான பாவங்கள் 10ம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் நல்ல உயர்நிலையில் பணிபுரிவார்.
இந்த ஜாதகர் தாமதமாக திருமணம் புரிந்திருப்பார். முதல் களத்திரத்தில் சற்று பிரச்சனைகளை சந்தித்திருக்க வாய்ப்புகள் உண்டு.
கடுமையான புத்திர தோஷத்தையும் காட்டுவதல் தாமதமாக பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
தனி வாழ்வில் சில எதிர்பாராத சிக்கல்கலையும் சந்தித்திருக்க வாய்ப்புகள் காணபடுகின்றது. குறிப்பாக சனி, கேது, குரு, ராகு, சுக் ஆகிய புத்திகளில் பெரும்பகுதி இல்லற வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைகள் வலுத்து இருக்கும்.
கேது, ராகு, புதன், சூரி,சந் ஆகிய புத்திகளில் புறம் சார்ந்த விஷயங்களில் பொருளாதாரம், தொழில், வேலை, முதலீடு, பொறுப்புணர்வு, அந்தஸ்த்து, மனகட்டுபாடு போன்ற அறிவு பூர்வமாண விஷயங்கள்,  குறிப்பாக பணிபுரியும் இடங்களில் எதிர்மறையான பலன்களை ஜாதகர் சந்தித்திருப்பார்.
இளம் வயதில் ஜாதகர் ஏன் வெளிநாடு சென்றார்?
ஜாதகருக்கு ராகு தசை 18வயது 06 மாதத்தில் ஆரம்பித்தது. பொதுவாக ராகு இருக்கும் நிலையில் இருந்து மாறுபட்ட நிலைக்கு மாற்றும் குணம் உடையவர். வெளிநாடு செல்ல இவர் ஆசி மிகவும் அவசியம். பொதுவாக சாயா கிரகங்கள் செயற்கை வாழ்க்கையை விரும்பவைத்திடும்.
மேலும் ராகு தசையாக முன்னின்று நடத்திய பாவங்கள் 3,6,9,12. இவை அனைத்தும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஏற்ற சிறப்பான பாவங்கள். 12 என்பது மறைந்து வாழுதல், 9 என்பது தொலைதூர பயணங்கள், 6 என்பது வேலை, 3 என்பாது சிறு தூர பயணம்.. இடம் மாறுதல்.
ஆக ராகு திசை ஜாதகர் இளம் வயதில் வெளிநாடு சென்று பொருளீட்ட பக்க பலமாக தன் தசையில் கொடி காட்டியுள்ளார்.
ஜாதகர் தனது 29 வயது நெருக்கத்தில் கேது புக்தியில் வெளிநாடு செல்லவோ அல்லது அதற்கு முந்திய புதன் புக்தியில் கேது அந்தரம் (26வ 09மா), ராகு அந்தரம் (27வ 10மா), குரு அந்தரம் (28வ 3மா) ஆகிய கால கட்டங்கள் மிகவும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு சாதகமாக உள்ளன.
மேற் குறீப்பிட்ட அமைவுகள் ஜாதகரின் பொருளாதாரம் வெளிநாட்டு வாழ்வில் சிறப்படைய விதி கொடுப்பினையும், தசா புக்திகளின் நீண்ட கொடுப்பினையும் ஒருங்கே அமைந்ததின் விளைவு ஜாதகர் இளம் வயதிலே வேளிநாடு சென்றார்.
இவருக்கு குரு தசை தற்போது நடை பெற்று வருகின்றது. சூரிய புக்தியும், சந்திர புக்தியும் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. தற்போது குடும்ப வாழ்க்கையில் சற்று அதிகமாக கவனம் செலுத்துவார். தாயாருக்கு சுகவீன குறை ஆரம்பித்திற்கும். செவ்வாய் புக்தி (01/2019 - 12/2019) மத்திம பொருளாதார வருவாய்.
ராகு புக்தியில் நிலை சற்று மாறும் (12/2019 - 05/22)
அடியேனுக்கு சிற்றவிற்கு அறிந்த வகையில் எமது ஆய்வை பகிர்ந்துள்ளேன். தவறேதும் இருப்பின் வாத்தியார் அய்யா சுட்டிகாட்டிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
இப்படிக்கு,
திலக்.ஜெ.பாலமுருகன்.
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com