மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.8.16

Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (5-8-2016) புதிருக்கான பதில்:

பணிச் சுமை காரணமாக நேற்று இந்தப் பதிலை வெளியிட முடியவில்லை. காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் பிறந்தது 1962ம் வருடம் என்றும், ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம் ஏற்பட்டது என்றும் ஜாதகப்படி 1.பணக் கஷ்டம் எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியையும், 2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா? என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன்.

வித்தியாசமாக ஜாதகர் பிறந்த வருடத்தையும், கஷ்டம் ஏற்பட்ட காலத்தையும் கொடுத்தன் காரணமே நீங்கள் அன்றைய தேதியில் கோள்சாரச் சனியை உற்று நோக்குவீர்கள் என்ற எண்ணத்தில்தான். ஆமாம், அது சமயம் ஜாதகருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தது. ஏழரைச் சனி தொழில், மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும். அது ஜாதகருக்கும் அத்தகைய நெருக்கடியை உண்டாக்கியது. 1996ம் ஆண்டு ஜாதகரின் ராசியில் சனி. இப்போதாவது அதைக் கவனியுங்கள். அது முக்கிய காரணம்.

1.மேஷ லக்கின ஜாதகர். லக்கினாதிபதி செவ்வாய் 11ல்
2.கஷ்டம் ஏற்பட்டபோது ஆறாம் வீட்டுக்காரன் புதனின் மகாதிசை.
3.புதன் சனி மற்றும் கேதுவோடு மாட்டிக்கொண்டு உள்ளார். அவரும் கூடுதலான கெடுதல்களைச் செய்தார்.

ஆனால்
4. 2 மற்றும் 7க்குரிய சுக்கிரன் உச்சமாகியுள்ளார். 12ல் இருந்தாலும் உச்சமானதன் பலனை அவர் தராமல் விடமாட்டார். அவருடன் இன்னொரு சுபக்கிரகமான (4ம் அதிபதி) சந்திரனும் உள்ளார். அத்துடன் இருவர் மீதும் கர்மகாரகன் சனியின் பார்வை உள்ளது (3ம் பார்வை). ஆகவே ஜாதகர் சுக்கிர திசையில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டுவந்தார். பத்து ஆண்டுகள் கழித்து ஜாதகரின் 44வது வயதில் இருந்து பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து அவரை சுக்கிர திசை மீள வைத்தது.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் எட்டு பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்களில் ஐந்து பேர்கள் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார்கள். அதாவது கோள்சார  ஏழரை
சனியின் சேட்டையையும் கவனித்து எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ****** போட்டு விஷேசமாக அவர்களைப் பாராட்டியுள்ளேன். பின்னூட்டங்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்!!!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
1
******/////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 07 – 03 – 1962
மேஷ லக்னம். திரிகோண அதிபதிகள் மூவரும் லாப ஸ்தானத்தில் உள்ள நல்ல அமைப்பு.
தனஸ்தானத்தில் மாந்தி
ஆறாம் அதிபதி புதன், கேது & பாதகாதிபதி சனி மூவரும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொழிலில் கடுமையான பிரச்னை கொடுத்து இருப்பார்கள்.
பாதகாதிபதி சனி ஆட்சி பலத்துடன் உள்ளது நல்ல அமைப்பு இல்லை.
ஜாதகருடைய 34வது வயதில் ஆறாம் அதிபதி புதன் தசை மற்றும் ஏழரைசனி நடந்தாலும் கடனில் மூழ்கி இருப்பார். கேது திசையிலும் சிரமப்பட்டு இருப்பார்.
45வது வயதில் வந்த சுக்கிர திசையில் கடனில் இருந்து மீண்டு இருப்பார். (தனஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சம்)
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு மத்திய வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.
--------------------------------------------------------------------
2
******///////Blogger Chandrasekaran Suryanarayana said...
1. ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.
2. ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர்.
மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல்
இரண்டாம் வீட்டிற்கு உரிய (தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.
11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.
ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப் போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.
Saturday, August 06, 2016 6:41:00 AM//////
-----------------------------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 113 க்கான பதில்.
கடன் தீர்ந்து, ஜாதகர் பிரச்சினையில் இருந்து சுக்கிர திசையில் மீண்டார்
ஜாதகர் பிறந்த தேதி : 07/Mar/1962 , 09.00 am
நட்சத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.
மேஷ லக்கினம், மீன ராசி.
6ம் அதிபதி புதனின் திசையில்; புதன், கேது மற்றும் சனியுடன்
கூடி 10ல் நின்று ஜாதகரை தொழிலுக்காக கடன் வாங்க வைத்தார்.
கேந்திரத்தில் இருக்கும் புதன் கடன் வாங்க வைக்கும்.
சனியுடன் கூடிய கேதுவால் பண வரவில் சிக்கல் ஏற்பட்டு கேது திசை முழுவதும் அவமான பட்டிருப்பார்.
அடுத்து வந்த சுக்கிர திசை ஆறாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, August 06, 2016 12:28:00 PM///////
--------------------------------------------------
4
******/////Blogger asbvsri said...
Astrology Quiz: 113 Answer
ஜாதகர் மேஷலக்னம். லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியுமான செவ்வாய், 12 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதியான குரு மற்றும் யோகாதிபதி சூரியனுடன் 11 ஆம் இடத்தில்.
இரண்டுக்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் உச்சமாகி அவருடய பகைவர் சந்த்ரனுடன் ( 4ஆம் அதிபதி) 12 ஆம் இடத்தில்.
சனியும் புதனும் கேதுவுடன் கூடி 10 ஆம் வீட்டில். சனி நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில்.
34 வயதில் 1996 ல் அவருக்கு புதன் தசையில் சனி புக்தி ஆரம்பமானது. இருவரும் பகைவர்களாதலால் கேதுவுடன் கூடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். கோள்சாரத்தில் சனி 1996 ல் 12 ஆம் இடத்திற்கு வந்து கேதுவுடன் மிகுந்த விரையங்களை ஏற்படுத்தினார். பின்னர் வந்த கேது தசையும் அவருக்கு நன்மை விளைவிக்கவில்லை. 1996 லிருது 2005 வரை சனி கோள்சாரத்தில் 12, லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டிலிருப்பதால் அவருடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்காது.
கேது தசை 2005 ல் முடிந்தபிறகு வந்த சுக்ர தசையில் 2 க்கும் 7க்கும் அதிபதியாதலால் உச்சமாகியிருப்பதாலும் அவருடைய தசையில் பணக்கஷ்டத்திலிருந்து மீளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார். சூரியன் புக்தியில் யோகாதிபதியாதலால் கஷ்டத்திலிருந்து முழுவதும் மீண்டுருப்பார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை
Saturday, August 06, 2016 1:10:00 PM//////
----------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
1962 - மார்ச் மாதம் 7-ஆம் தேதி பிறந்த அன்பர், நல்ல உழைப்பாளி. சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர். புத தசை சனி புக்திக்கு முன் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
1. தன ஸ்தானாதிபதி விரைய ஸ்தானத்தில் (சுக்கிரன்) என்ற ரீதியில் பார்க்கும்போது, பெரிய சொத்து ஒன்றும் கிடையாது. ருண ஸ்தானாதிபதி புதன் திசையில் வாங்கிய கடன் சனி புக்தியில் திருப்ப முடியாமல் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார். லாப ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததால் இந்த நிலைமை.
பின் தொடர்ந்து வந்த கேதுவின் ஏழு வருடங்களும் கஷ்டங்களும் தொடர்ந்தன.
௨. ஆனால் உச்சனான சுக்கிரன் தசை வந்தபோது நிலைமையில் முன்னேற்றம். சுக்கிரனுக்குப் பன்னிரண்டாம் இடம் மறைவு கிடையாது. மேலும் தனஸ்தானத்திற்குப் பதினொன்றில் சுபரான சந்திரனுடன் நிற்பது பண வரவைக் கொடுத்தது. 2012-ஆம் வருடம் வந்த லக்னாதிபன் புக்தி நல்லதாக அமைந்து இப்போது நன்றாக இருக்கிறார்.
Saturday, August 06, 2016 1:27:00 PM/////
---------------------------------------------------------
6
******/////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்,
ஜாதகர் 07-03-1962 பூரட்டாதி 4ம் பாதத்தில் மீன ராசியில் ஜனனம் ஆனார்.
தோசங்கள் – யோகங்கள்,
1. கால சர்ப்ப தோசம்
2. எல்லா சுபர்களும் பாபகார்த்திரி யோகத்தினிலுள்ளனர்
3. சனி, ஆட்சியில் 10ம் வீட்டிலுள்ளார் கேந்திரத்திலுள்ளார் – சஷ்ய யோகம்
4. ஏழரை சனி – கும்பத்தில் 5-3-93ல் தொடங்கி 6-6-2000ல் ரிசபத்தில் போகும்போது முடிவடைந்த்து. 36ம் வயது இந்தக்காலகட்டத்தில் வரும்.
5. புதன் திசை முடிய கேது திசை ஆரம்பமாகின்றது. அது 2005 ஆவணி மாதத்தில் முடியும்.
6. 2006 ஐப்பசி மாதம் குரு விருச்சிக ராசிக்கு வருகிறார், 7ல் குரு.
புதிரிற்கு விடை
பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
மேற்கொண்ட காரணங்களினால்
அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
2005ம ஆண்டிற்கு பின் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
நன்றி
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 07, 2016 2:47:00 AM//////
------------------------------------------------
7
******/////Blogger venkatesh r said...
முதலில் வாத்தியார் அவர்களுக்கு "10000" பேர்கள் தினமும் அவரின் பதிவை பார்வையிட்டதற்கான வாழ்த்துக்கள். அது மேலும் பெருகி ஒரு லட்சம், ஒரு கோடி பேர் என்று வளர‌, பழனி முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

புதிர் எண் 113க்கான அலசல்:
மேச லக்கினம், மீன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்து குருவுடன் கிரகயுத்ததிலுள்ளார். 5ம் அதிபதி சூரியனும் அவருடன் கூட்டணியில் இருக்கிறார். தனாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும் உச்சமடைந்துள்ளார்.
இப்ப வாத்தியாரின் கேள்விக்கு வருவோம். ஜாதகரின் 34 வயதில் மிகக் கடுமையான பணக்கஷ்டம் ஏன் ஏற்பட்டது? ஜாதகப்படி அதன் காரணம் என்ன?
ஜாதகரின் 34 வயதில் புதன் மகாதசை, சனி அந்தரம் நடைபெற்ற நேரம். கர்மாதிபதி சனி 6ம் அதிபதி வில்லன் புதன் மற்றும் கேதுவுடன் கூட்டணியில் 10மிடத்தில் தன் சொந்த வீட்டில் உள்ளார்.
அதே சமயம் கோச்சார ஜன்ம சனி வேறு ஜாதகரை புரட்டிப் போட்டது. ஜாதகருக்கு மேற்கண்ட காரணங்களால் இருந்த வேலையும் போய், கடுமையான பண நெருக்கடி, கடன் சுமை ஏற்பட்டது.
ஜாதகர் பணப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
புதன் மகாதசை முடிந்து, கேதுவின் தசை 7 வருடம் வரை ஜாதகருக்கு அந்த பணப்பிரச்சினை இருந்தது. பிறகு வந்த சுக்கிர தசையில் அதாவது ஜாதகரின் 46 வயதில் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மீண்டு வந்தார்.
Sunday, August 07, 2016 2:39:00 PM//////
----------------------------------------------------
8
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Mesha lagna kaarar. Pooratadhi natchathram paadham 4.
Lagnathipathi sevvai 11il + 5 aam athipathi + 9 aam athipathi guru vudan
Jaathagarin 34 aam vayathil Budhan (3&6 - Villan) dasa sukra bukthi nadai petru ullathu
Sukran 2 aam veetirku uriyavan, lagnathirku 12il + uchaam+ chandran udan graha yudhham.
11 aam veetilum graha yuddham.
Chandra rasi yil irundhu paarthalum, irandam veetiruku uriyavan (sevvai) antha veetirku 11il, aana chandra rasi ku 12il..
Ivaye jaathagarin pana kastathirku kaaranam.
Pana Prachanayil irundhu meendar. Sukra dasai chandra bukthiyil.
Sukranum chandranum sernthu kaapatrinar. sukkran (2&7 irku uriyavan, chandran 4iruku uriyavan)
nandri,
Bala
Sunday, August 07, 2016 2:47:00 PM/////
------------------------------------------
பாராட்டி வந்த கடிதங்களுக்கான பதில்

/////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
மெஞ்ஞானமும், விஞ்ஞானமும்
தங்களுக்கு ஒன்று சேர்ந்ததுடன்
எழுத்தாற்றலும், நகைச்சுவை உணர்வும்
சமவிகிதத்தில் உள்ளதாலும்
நல்ல எண்ணத்தாலும் , உழைப்பாலும்
இலவச சேவையினாலும் தினசரி பார்வையிடுவோர்
எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி உள்ளது.
வாழ்க நீ எம்மான்./////

நல்லது. உங்களின் மேலான விளக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி மோகன்!
-------------------------------------------------
/////Blogger kittuswamy palaniappan said...
Ayya vanakkam, as the viewers increased the responsibilities increase but this is not a days job, your efforts made you to have this numbers. we all pray you a better health and the best of everything,. let LORD PALANIAPPAN showers bleesings regards,/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
-------------------------------------------------
/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
இன்னும் பத்து பத்தாயிரம் பேர் படித்து பயனடையும் வண்ணம் பழனி முருகனின் அருள் தங்களை
வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு//////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. வணக்கம் ஐயா,ஜாதகத்தை பார்த்து பிறந்த தேதி,மாதம்,வருடம்,நேரம் கணிக்க பாடம் எடுத்துள்ளீர்களா ஐயா.சூரியனை வைத்து பிறந்த தமிழ் மாதத்தையும்,சனியின் இன்றைய நிலையை வைத்து உத்தேச வருடத்தையும் அறியலாம் என புரிகிறது.எனினும் வாசகர் பலர் பிறந்த தேதி,நாள்,நட்சத்திர பாதம்,நேரம் கண்டுபிடித்து,தசா மற்றும் புத்தியுடன் பலன் சொல்லுகிறார்கள்.பழைய பாடங்களில் உதாரணத்துடன் கொடுத்துள்ளீர்களா அல்லது இது மேல் நிலைப் பாடமா.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com