மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.15

Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!


Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!

Quiz 92  பதில் 

26.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகருக்கு மிகுந்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) என்றும், பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று அவர் கலங்காத நாள் இல்லை என்றும் எழுதியிருந்தேன். அத்துடன் ஜாதகத்தைப் பார்த்து, அவர் கடன் சுமையில் இருந்து மீண்டு வந்தாரா என்று கணித்து, காரணத்துடன் எழுதுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சரியான பதில்: ராகுதிசையில் கடனில் சிக்கி சீரழிந்த ஜாதகர், ராகு திசை முடிந்து, குரு மகா திசை துவங்கியவன், படிப்படியாக கடன்கள் தீர்ந்து வெளியில் வந்து சுகப்பட்டார்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


சிம்ம லக்கின ஜாதகம்.
குரு பகவானின் நேரடிப் பார்வையில் பத்தாம் வீடு உள்ளது.
பத்தாம் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்.
சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய்  இரண்டாம் வீட்டில் இருப்பதோடு, நவாம்சத்திலும் அதே கன்னி வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்ரு வலிமையாக உள்ளார்.
அத்துடன் குரு பகவானுக்குப் பதினொன்றில் அவர் இருக்கிறார்.

ராகு மகா திசையில் கடன் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. அதுவும் கடைசி புத்தியில் (செவ்வாய் புத்தி) அதிகப் பணம் விரயம் ஏற்பட்டு ஜாதகர் சிக்கும்படி ஆகிவிட்டது. அதுதான் கடன் சுமை ஏற்படக் காரணம்.

அடுத்து வந்த குரு மகா திசை ஜாதகருக்குக் கை கொடுத்தது. கடனிலிருந்து அவர் மீள வைத்தது. யோககாரகன் செவ்வாயின் வீட்டில் குரு பகவான் இருப்பதைப் பாருங்கள். செவ்வாய் லக்கினத்திற்கு 2ல் இருப்பதுடன், குரு பகவானுக்குப் பதினொன்றில் இருப்பதாலும் மீள்வது சாத்தியமாயிற்று.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 31 பேர்கள் அவர்களில் 25. பேர்கள் மட்டுமே ஜாதகர் கடன் சுமையில் இருந்து மீண்டு வருவார் என்று எழுதியுள்ளார்கள்.

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
1
//////Blogger sundinesh1 said...
விடுபட்டார் . தனது 43-44 வயதில் விடுபட்டார். அதாவது குரு தசையில் புதன் புக்தியில்/////
------------------------------------------
2
/////Blogger Govindasamy said...
1. 12 க்கு உரிய சந்திரன் ஆறில். இது விபரீத ராஜ யோகம் என்றாலும் கடனை ஏற்படுத்தும்
2. 2 க்கு உரிய புதன் 3ல் நீச்சம். எனவே விரயத்திற்கு தகுந்த வருமானம் இல்லை.
3. 9 க்கு உடைய செவ்வாய் ராகுவோடும், லக்கினாதிபதியோடும் இரண்டாமிடத்தில். இது நல்ல யோகம்.
4. ஜாதகர் தான் சம்பாத்தியமல்லாத பரம்பரைச் சொத்தைக் கொண்டு கடனிலிருந்து மீண்டிருப்பார். இது செவ்வாய் தசை குரு புத்தியில்
நடந்திருக்கும்.//////
-----------------------------------------
3
///////Blogger Goutham Mylsamy said...
Yes they will come out of dept
Malefics in second houses especially rahu weaken the yogathipathi chevvai and lagnathipathi sun,
apart from sukran all planets hemmed between rahu and kethu from 2nd to 8th house,kulik kalasarpam dosham created financial & business 

problems
but guru in 4th house aspecting 8th,10th and 12th houses will overcome all difficulties,guru parthal kodi nanmai,guruvay sarnam//////
----------------------------------------------
4
////Blogger selvaspk said...
Jadagam came out of his debt after 38 years.
2nd house and 11th house is in malefic control without house/lagna lord aspect. Lagnathipathi is not helping, yogakaraga is combusted, 2,5,7,9,11 

arent much helpful until Jupiter pitch in with Mercury dasa. He survive all his debt with Mars special aspect, after mid age he prosper with 

Business.
Friday, July 24, 2015 9:42:00 AM //////
----------------------------------------------
5
/////Blogger KJ said...
Respected Sir,
Sure, He could have come out from his Debt problems. 
Sevvai (9th house owner aspects 6th house owner Saniwaran). In Ragu dasa, slowly he could have released form his problems. 
Thanks,
Sathishkumar GS
Friday, July 24, 2015 10:02:00 AM //////
------------------------------------------
6
////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.92
கடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டு இருப்பார்.
1. 10ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பதாலும் குரு 10ஆம் அதிபதியை பர்ப்பதாலும், நல்ல வேலை அல்லது தொழில் முலமாக குரு தசையில்
மீண்டு இருப்பார்.
2. லக்கனாதிபதி இரண்டில் இருப்பதால் கடன் ஒழிவதர்க்கு உதவி இருப்பார்.
நன்றி
தங்கள் மாணவி,
மு.சாந்தி
Friday, July 24, 2015 10:04:00 AM //////
---------------------------------------------------
7
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz92 ற்கான பதில்.
வணக்கம் வாத்தியாரே!
ஜாதகர் பிறந்த நேரம் 10/Oct/1959 அதிகாலை 4:30 உத்திராட நட்சத்திரம்.
கடனிலிருந்து மீண்டார். எல்லோரும் வியக்கும் விதத்தில்.
12ம் வீடு விரையாதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்தது. லக்கினாதிபதி சூரியனும் ராகுவுடன் ஒரே வீட்டில் இருந்து பலம் இழந்துள்ளார். இருந்தாலும் தன

ஸ்தானத்தில் 30 பரல். 11ம் இடத்தில் யாருக்கும் கிடைக்க அறிதான 41 பரல் கை கொடுத்திருக்கும்.
6ம் அதிபதி வில்லன் சனி பார்வையில் நடந்த ராகு திசையில் ஜாதகர் கடனாளி ஆகியிருப்பார். அடுத்து வந்த தன காரகன் குருவின் திசையில்
எல்லோரும் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார். இங்கே குரு 5,8ம் இடதிற்குரியவர், மேலும் அவர் ரகசிய உறைவிட ராசியான
விருச்சிகத்தில் இருந்து 8,10,12ம் இடங்களை பார்வையிட்டு ஜாதகரை மீட்டு கொண்டு வந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 24, 2015 10:12:00 AM /////
---------------------------------------------------
8
///////Blogger Suresh Kumar said...
குரு திசை சனி புத்தியில் கடன் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது, அதன் பிறகு அவர் கடனில் இருந்து விடுபட்டிருப்பார்
Friday, July 24, 2015 11:14:00 AM //////
------------------------------------------------
9
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
12ம் அதிபதி சந்திரன் 6 ஆறில் நிற்க்கிறார்,
12ல் மாந்தி மேலும் வியாபார அமைப்பில் சுக்கிர புத அமைப்பால் பண விரையபட்டிருக்கும்.
5ந்து அல்லது 9ம் ஆட்சியரின் தசா புக்தியில் கடன் வலையில் இருந்து தப்பியிருப்பார்.
நன்றி
Friday, July 24, 2015 11:24:00 AM //////
------------------------------------------------
10
/////Blogger Sundararajan Rajaraghavan said...
During Guru Dasa In the year 1998 his debts released . Sundararajan
Friday, July 24, 2015 1:02:00 PM ///////
----------------------------------------------
11
//////Blogger Fact Coimbatore said...
மதிப்பிற்குரிய ஐயா !!
புதிர் எண்: 92 இற்கான பதில் !!
ஜாதகரின் ஆறாம் வீடு கெட்டுவிட்டது. பரல்:21, ஆறாம்வீட்டில் விரயாதிபதி சந்திரன் வர்கோதமம். ஆறாமதிபதி சனி அந்த வீட்டிற்கு
பன்னிரெண்டில். 21 முதல் 38 வரை நடந்ததோ ராகு திசை. ராகு இருப்பதோ தன வீட்டில். அதனால் கையில் காசு தங்கவில்லை. 38 வயதுக்கு மேல்
வந்த குரு பலமாக(6 பரல்) (தன காரகன்) இருப்பதால், 40 வயதுக்கு மேல் கடனில் இருந்து மீண்டு வர இவரால் முடியும்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, July 24, 2015 3:21:00 PM //////
----------------------------------------
12
/////Blogger Gajapathi Sha said...
Vanakkam sir i am of opiniin Due to pathagathi at second house these constraints . All will got relief during guru maha dasha
Friday, July 24, 2015 4:50:00 PM //////
---------------------------------------
13
/////Blogger Jaya Prakash said...
சிம்ம லக்ன ஜாதகம்..ராகு தசை 12ம் அதிபதி சாரம்,.அவர் 6ஆம் வீட்டில்..இதனால் கடன்,.பின்னர் வந்த குரு தசை சுய புத்தியில் கடன்
பிரச்சினையிலிருந்து வெளியேறி இருப்பார்,.காரணம் :6க்கு அதிபதி 6க்கு 12ல் மறைந்து அவருக்கு 12ல் 5,8க்கு அதிபதி 6க்கு உடையவன்
சாரம்..இதனால் கடன் நிவர்த்தி
Friday, July 24, 2015 5:00:00 PM //////
-------------------------------------------
14
/////Blogger Ravichandran said...
Ayya,
He should have escaped from that issue during his Guru dasa after Rahu dasa. The main reason for undergone issue is 6th house owner(Shani) is 
sitting in 12th house from 6th house.
Your Student,
Trichy Ravi
Friday, July 24, 2015 5:14:00 PM //////
-----------------------------------------------------
15
///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1959 காலை 4மணி 30 நிமிட்ம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
இவர் வாழ்க்கையத் துவங்கும் போது, 21 வயதில் ராகு தசாவில் சிக்கிக்கொண்டு 39 வயது வரை மீளமுடியாமல் அவதிப்பட்டார்.
எட்டாம் இடக் கேது அவருக்கு எப்படியாவது தலை குனிவை ஏற்படுத்த வேண்டும்.அது கடன் வடிவத்தில் வந்தது. இரண்டாம் இட கன்னி ராகு&
செவ்வாய், 'கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்' என்பதை நிரூபித்தது. விரய ஸ்தானாதிபதி சந்திரன் ஆறில் வந்து அமர்ந்து கடன் கிடைக்க வழி
செய்தார். ஆனால் அதனை அடைக்க வழி செய்யவில்லை.இரண்டாம் முறை ஏழரைச்சனி வந்தபோது ராகுதசா கேதுபுக்தியில் மாட்டிக்கொண்டு
விழிபிதுங்கினார்.
சுமார் நாற்பது வயதுக்குப் பின்னர் குரு தசா துவங்கிய பின்னர் சிறிது சிறிதாகக் கடன் தொல்லையிலிருந்து மீண்டார்.
Friday, July 24, 2015 5:53:00 PM //////
--------------------------------------------------------------------
16
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The person relieved during his guru dasa period. 
After end of Rahu dasa in his 45 years old, his Guru Dasa started and he became relieved.
Thanking you,
Yours sincerely,
C.Jeevanantham.
Friday, July 24, 2015 6:08:00 PM //////
-----------------------------------------------------
17
/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 92.
லக்கணம் சிம்மம் .லக்னாதிபதி 2ல் ..4& 9 க்குடையவன்.செவ்வாய் அவனும் 2ல் .
12ல் மாந்தி ..வறுமையில் வாடகூடிய ஜாதகர் ஆனாலும் . 4மிடத்தில் உள்ள குரு தனது திசையில்
ஜாதகரை கடன் நிவர்த்தி செய்து சற்று நிமிர வைத்திருப்பார் ..
1ல் சுக்கிரனும் 7ல் சந்திரனும் சம சப்தம பார்வை . சுபர்களுக்குள் மற்ற 6 கிரகங்களும் ..ஒரு மாதிரி சுப கர்த்தரி யோகம் போல ..{என்ன இது புதுசா
இருக்கே ..???]
**ஜாதகரை கடன் நிவர்த்தி ஆகி இருக்கும் **...
Friday, July 24, 2015 8:26:00 PM //////
--------------------------------------------------
18
/////Blogger Chandrasekharan said...
Respected Sir,
54 vayadhil vandha sani dhasavil kadanil irundhu veliyae vandhiruppar.. 6-m adhibathy sani avar veetirku 12-il (lagnathirkku 5-il).
Regards,
Chandrasekharan.A
Friday, July 24, 2015 8:38:00 PM /////
-----------------------------------------------------
19
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
கடனிலிருந்து மீண்டிருப்பார்.
ஜாதகர் ராகு தசை சந்திர புக்தியில் கடனாளியாகியிருப்பார்.
காரணங்கள்,
விரயாதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து ருன, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், தன் நேரடி பார்வையால் தன் வீடான விரய ஸ்தானத்தையும் வலுபடுத்தினார்.
வீடு கொடுத்த சனி பகவானோ திரிகோணத்தில் அமர்ந்து வலுவாக உள்ளார். அதே நேரம் ஏழரை சனி வேறு நடப்பில் இருந்தது. பின்னர் வந்த குரு
தசையில் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பார். ஏனெனில் குரு ஆராமிடத்திர்க்கு 11ல் அமர்ந்துள்ளார். அத்துடன் அவர் 6மிடத்திர்க்கு 12மிட
அதிபதியுமாவார்(6மிடத்திர்க்கு எதிர் பலனை தருமிடம் 5மிடம்).
நன்றி
செல்வம்
Friday, July 24, 2015 9:52:00 PM //////
--------------------------------------------------------------
20
////////Blogger thozhar pandian said...
கடனுக்கு உரிய‌ 6ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 6ல். சுகத்திற்கு உரிய 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் இலக்கினத்தில். 4ம் வீட்டில் வியாழன்.
6ம் வீட்டில் சந்திரன். 6ம் வீட்டுக்கோ சனிக்கோ சுபர் பார்வை இல்லை. 4ம் வீட்டுக்காரரும் சிம்ம இலக்கினத்திற்கு யோகாதிபதியுமான செவ்வாய்
இலக்கினாதிபதி சூரியனுடன் 2ம் வீட்டில் இராகுவோடு உள்ளார். 20 வயதுக்கு மேல் ஆரம்பித்த இராகு தசையில் கடன் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
அது 18 ஆண்டுகள் ஜாதகரை பாடாய் படுத்தி இருக்கும். ஜாதகருக்கு விடிவு வியாழ தசையில் உண்டு. அப்போது அவர் கடனிலிருந்து மீண்டு
சுகப்பட்டிருப்பார்.
Saturday, July 25, 2015 3:59:00 AM /////
---------------------------------------------------
21
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 92 வணக்கம்.
10/10/1959 ஆம் ஆண்டு சனி கிழமை காலை 4.30.18 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
சிம்ம லக்கினம் : யோககாரர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
ராஜ யோகம் : செவ்வாய் லக்கினத்தில் இருந்தால்.
பதில் : கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
சுப கிரங்கள் குரு, சந்திரன், சுக்கிரன் நன்றாக இருந்தால் கடனிலிருந்து சுலபமாக தப்பி வரலாம்.
குருவின்(6 பரல்) 9ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதாலும், 12ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து 12ம் வீட்டை தன்னுடைய 7ம் பார்வையால்
பார்பதாலும்,
குரு தசை சந்திர புக்தியில் ஜாதகரின் 48 வயதில் கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
12ம் வீடு (31பரல்) அயனம், சயனம், போகம். 4ம் வீட்டில் குரு சுகஸ்தானம். லக்கினத்தில் சுக்கிரன் (8 பரல்)
11ம் வீடு & 2ம் வீட்டு அதிபதி புதன் (6 பரல்) 3ம் வீட்டில் அமர்ந்து 7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். பாக்கியஸ்தானமான 9ம் வீட்டு அதிபதி செவ்வாய் யோககாரன் இந்த ஜாதகருக்கு. 11ம் வீட்டில் 41 பரல்கள்
நிதி நிலைமை மோசமானதிற்க்கு காரணம்.
2ம் வீடு, 5ம் வீடு, 11ம் வீடு தீய கிரங்களால் சூழ பட்டுள்ளது.
2ம் வீட்டில் 2 தீய கிரங்கள் இருந்தால் செல்வம் இருக்காது. நிலைக்காது.
2ல் சூரியன் பொருள் நாசம், 2ல் ராகு தீராத பிரச்சனை செல்வம் இருக்காது, 2ல் செவ்வாய் குறைந்தளவு செல்வம்.கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்
மீது. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது. 2ம் வீட்டின் மீது சுப கிரங்களின் பார்வை இல்லை.
5ம் வீட்டு அதிபதி குரு 4ம் வீட்டில் அந்த வீட்டிற்க்கு 12ல், 5ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி சனி (1பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 11ம் வீட்டை
பார்க்கிறார்.சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது.
Saturday, July 25, 2015 8:19:00 AM ///////
----------------------------------------------------
22
/////Blogger asbvsri said...
Quiz No 92 Answer: ஜாதகர் குரு தசையில் 40 வயதிற்க்கு மேல் (ஜூன் 1999 க்கு மேல்) குரு பகவான் கோள்ச்சாரத்தில் மேஷத்திலிருந்து லக்னத்தை
பார்ப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டிருப்பார். அதுவரை நடந்த தசைகளான 12ஆம் அதிபதி சந்த்ரனும், ராஹுவின் பிடியிலிருக்கும்
யோகாதிபதி கன்னிச்செவ்வாயும், ராஹுவும் உதவியிருக்கமாட்டார்கள்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, July 25, 2015 11:55:00 AM //////
-----------------------------------------------
23
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
விடை
சுகப்பட்டார்.
தன் குரு மகாதிசையில் சுகப்பட்டார்.
கடன் வலையில் சிக்க காரணங்கள்
விரையாதிபதி 6 ல் உட்கார்ந்து தன் வீடான விரையஸ்தானத்தை பார்வையில் வைத்திருக்கிறார்
6 ம் அதிபதி தன் வீட்டுக்கு 12 ல் மறைந்து உள்ளார்
தனஸ் தான அதிபதி 3 ல் மறைவு
நன்றி
கண்ணன்.
Saturday, July 25, 2015 12:36:00 PM //////
--------------------------------------------------------------
24
/////Blogger venkatesh r said...
பாதி புதிர் விடை:
ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பித்த பிறகு, புதன் புக்தியில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டார்.
காரணங்கள் :
தனஸ்தானத்தில் ராகு. லக்கினாதிபதி சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் 2ல் ராகுவின் பிடியில் உள்ளனர்.சனியின் 10ம் பார்வை வேறு 2மிடத்தின்
மேலுள்ளது. லாபாதிபதியும், தனாதிபதியுமான புதன் 3ல் சென்று அமர்ந்து விட்டார். ஜாதகருக்கு 21 வயதில் ஆரம்பித்த ராகு தசை 39 வயது வரை
அவரை கடன் தொல்லையில் படாத பாடு படுத்தி விட்டது. அதற்கு பிறகு வந்த குரு தசை,புதன் புக்தியில் அவரை எல்லா கடன் தொல்லயில்
இருந்தும் விடிவித்தது.
Saturday, July 25, 2015 12:59:00 PM /////
------------------------------------------------------
25
//////Blogger Rajam Anand said...
Dear Sir
The native will be in debt because
• If Sun and Rahu are in the same house it is not very good. The native will acquire wealth in bad ways.
• If Mars is in the 2nd house then the native will be spending a lot and he will not be able to save any money. 
• If Rahu in the 2nd house, the native will be in debt.
Saturn is aspecting Mars (10th) and Mars is aspecting Saturn (4th). Jupiter in Kendra and 12th place to his own house Sagittarius. Saturn is in 5th house (Kendra) again 12th to his own house Capricorn. The ashtagavarga for Sagittarius and Scorpio is 25 and for Capricorn is 21.
However, Ashtagavarga for the 11th house is 41 which is Mercury’s house. His debt problem will be solved during Mercury Sub dasa.
Thanks
Rajam Anand
Sunday, July 26, 2015 2:40:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1 comment:

  1. என்னுடய பெயர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை
    என்னுடய பதில் சரிதானே அதை சொன்னால் போதும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com