மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 16


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 16

ஜோதிடத் தொடர் - பகுதி 16

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
உத்திர நட்சத்திரம் 2,3, மற்றும் 4ஆம் பாதங்கள் மட்டும் (கன்னி ராசி)

இது சூரியனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் சதய நட்சத்திரம் கும்ப ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் கும்பத்திற்கு எட்டாம் இடம் கன்னி ஆகவே அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மேஷ ராசிக்கு உரிய அஸ்விணி, பரணி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மகம், பூரம் இரண்டும் சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஏக நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் (average) உண்டு.  என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை, அவிட்டம் பொருந்தாது!

ஏக நட்சத்திரமான உத்திரத்தைத் தவிர வேறு எந்த நட்சத்திரத்திற்கும் மத்திம பொருத்தம் என்பது இல்லை!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++=

8 comments:

  1. குருவிற்கு வணக்கம்,
    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    புதிய வகுப்பிலும் த்மிழ் எழுதியை சைடுபாரில் வைத்தீர்களானால் தமிழில் எழுத‌ எங்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வருகை பதிவுடன்
    வழக்கம் போல்

    வரவு வைத்துக் கொள்ள..
    வலமாக சுழலவிடுகிறோம்
    ....
    மாலை சூடும் மணநாள்
    இள மங்கையின் வாழ்வினில் திருநாள்

    சுகம் மேவிடும் காதலின் எல்லை
    வேறொரு திருநாள் இனி இல்லை

    காதல் கார்த்திகைத் திருநாள்
    மனம்கலந்தால் மார்கழித்திருநாள்

    சேர்வது பங்குனித்திருநாள்
    நாம் சிரிக்கும்நாளே திருநாள்

    மங்கலக்குங்குமம் போதும்
    திருமலரும் மணமும் போதும்

    பொங்கிடும் புன்னகை போதும்
    மனம் புதுமணத்திருநாள் காணும்..

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    Thank you Sir. Present Sir////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நன்றி////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,
    புதிய வகுப்பிலும் த்மிழ் எழுதியை சைடுபாரில் வைத்தீர்களானால் தமிழில் எழுத‌ எங்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி ஐயா.////

    அந்தத் தளத்தின் வடிவமைப்பாளரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் சகோதரி!

    ReplyDelete
  7. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவுடன்
    வழக்கம் போல்
    வரவு வைத்துக் கொள்ள..
    வலமாக சுழலவிடுகிறோம்
    ....
    மாலை சூடும் மணநாள்
    இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
    சுகம் மேவிடும் காதலின் எல்லை
    வேறொரு திருநாள் இனி இல்லை
    காதல் கார்த்திகைத் திருநாள்
    மனம்கலந்தால் மார்கழித்திருநாள்
    சேர்வது பங்குனித்திருநாள்
    நாம் சிரிக்கும்நாளே திருநாள்
    மங்கலக்குங்குமம் போதும்
    திருமலரும் மணமும் போதும்
    பொங்கிடும் புன்னகை போதும்
    மனம் புதுமணத்திருநாள் காணும்../////

    உங்களுடைய வருகைப் பதிவிற்கும், பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com