மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.4.21

மூன்று வகை மனிதர்கள்!


மூன்று வகை மனிதர்கள்!
.................................................

உலகில் மூவகை நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பைக்கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒருவகை, அவர்கள் புழுவை விடக் கேவலமானவர்கள்...

மற்றவர்களைப் பற்றி கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர் அடுத்த வகை, இவர் தன்நலவாதி. மிருகத்தைப் போன்றவர்...

மிருகங்கள் பொதுவாக எதற்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும்போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்ற நேரத்தில் அது உங்களை எதிரியாக கூடப் பார்க்காது...

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் கேட்காமலேயே, தாமாகவே முன் வந்து,அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை...

இவர்கள்தாம் மனிதன் என்ற சொல்வதற்கு அருகதை உள்ளவர்கள்...
ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார்...

அவரது அறைக் கதவு தட்டப்பட்ட போது, சட்டென்று தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். நிறுவனத்தின் முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார்.

பிறகுதான் உள்ளே வந்தவரை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, "சொல் தம்பி, உனக்கு உனக்கு என்ன வேண்டும்...?” என்றார்...

அவரோ!,  மென்சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னார், ஐயா!, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வந்திருக்கிறேன் என்றார்...

மற்றவர்களிடத்தில் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்கு உடைபடுவார்கள்...

*ஆம் நண்பர்களே...!*

🟡 *பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைகள்தான் வந்து சேரும்...!*

🔴 *தன்நலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தாதீர்கள். மரம் உதவுகிறது நிழல் தந்து. புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து, ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட...!!*

⚫ *ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் இயன்றவரை பிறருக்கு, அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவை உணர்ந்து உதவி செய்யவேண்டும். நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் நியதி. இயன்றவரை உதவுவோம்...!!!*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com