மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.3.20

மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!


மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!

🌺🌺#மாணிக்கவாசகர்🌺🌺

மாணிக்கவாசகர் சிவபெருமானை நோக்கி #பத்துப்_பத்தாக திருவாசகத்தில் பாடுகிறார்.

அவை:

💠 பிரிவால் வருந்திய தலைவியின் தாய், அது குறித்து தோழியிடம் வினவுதல் போன்ற செய்திகள் அமைந்த பாடல்கள்

#அன்னைப்_பத்து

💠 தலைவி, குயிலை அழைத்து தலைவனிடம் தூது அனுப்பும் விதமாக, குயிலிடம் கூறுவது போன்ற பாவனையில் அமைந்த

பாடல்கள் #குயில்_பத்து

💠 சிவானுபவத்தை அனுபவித்த ஜீவன், முழுவதுமாக அதனை அனுபவிக்க ""யான் இன்னும் செத்திலனே!"" என இரங்கும் பாவத்தில் பாடியது

#செத்திலாப்_பத்து

💠 வேதநாயகனிடம் சரணாகதி புகும் கருத்தை தெரிவித்து பாடியருளியது

#அடைக்கலப்_பத்து

💠 கயிலைவாசனிடம் அருளைப் பெற்றிட ஆசைப்பட்டதை அறிவித்து பாடியது

#ஆசைப்_பத்து

💠 ஒப்பற்றவனின் அளப்பரிய பெருமையை வியந்து தனக்கு அருள்செய்த கருணையை வியந்து பாடியது

#அதிசயப்_பத்து

 💠 ஈசனுடன் இரண்டறக் கலக்கும் நாள் என்று கொலோ? என ஏங்கும் பாவனையில் அமைந்திருப்பது

 #புணர்ச்சிப்_பத்து

💠 "நான் பற்றிலேன்! இனி வாழாமையை வேண்டினேன்" என்ற பாவனையில் பாடியது

#வாழாப்_பத்து

💠 "இப்பிறப்பை விட்டு உன் திருவடி சேர்வதற்கு அன்பு கொண்டழைத்தால் என்ன?" என வினவி, ஆதரித்து அருள  விண்ணப்பித்த பாடல்கள்

#அருட்பத்து

💠 தில்லையில் மணிவாசகர் கண்ட ஆனந்தக்கூத்தை அறிவித்து பாடியருளிய பாடல்கள்

#கண்ட_பத்து

💠 எப்போதும் சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திட பாடி அருளியது

#பிரார்த்தனைப்_பத்து

💠 ஆத்மநிவேதனம் செய்தலாகிய அனைத்தையும் ஈசனிடம் ஒப்படைக்கும் பாவனையில் பாடியது

#குழைத்த_பத்து

💠 சிவானந்தம் மேலிட்ட நிலையை அறிவித்த பாடல்களாக அமைந்தவை

#உயிருண்ணிப்_பத்து

💠 சிவநெறியைச் சேராத எதனைக் கண்டாலும் அஞ்சும் நிலையை உரைப்பது

#அச்சப்_பத்து

💠 சிவனையும் சைவநெறியையும் சிக்கெனப் பிடித்த செய்தியை உரைப்பது

#பிடித்த_பத்து

💠 அனுபவ இடையீடு இல்லாமல் இன்பத்தில் இருத்திய ஈசனை புகழும் பாடல்கள்

#குலாப்_பத்து

💠 சிவானந்த மேலிட்டை சொல்லத் தெரியாது விம்மும் நிலையை உரைப்பது

#அற்புதப்_பத்து

💠 நீலகண்டனின் திருவடி தமது சென்னியில் (தலையில்) இருக்கும் சிறப்பை கூறுவது

#சென்னிப்_பத்து

💠 அடியார்களின் அழைத்துக் கொண்டு சிவபெருமான் உடைய திருவடியை நோக்கி பயணிக்கும் பாவணையில் பாடியருளியது

#யாத்திரைப்_பத்து

சிவ சிவ

#எம்பெருமானுக்கு_சமர்ப்பணம்
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Good evening sir devotional information to here in a critical time thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. திருவாசகம், மாணிக்கவாசகர் கூற இறைவன் திருக்கரங்களால் எழுதப்பட்டது என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம். மதம் மாற்ற வந்தோரை (G U Pope) மனம் மாற்ற வைத்த பெருமை உடையது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com