மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.5.19

Astrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை!

ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?” என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை: லக்கினத்தில் விரையாதிபதி (12th Lord) செவ்வாயின் ஆதிக்கம். அத்துடன் லக்கினாதிபதி குருவின் மேலும் அவருடைய பார்வை உள்ளது.
ஆறு வயது வரை கேது திசை..அதற்குப் பிறகு சுக்கிர திசை. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து பையனின் இளம் வயது வாழ்க்கையைக் கெடுத்தன.
ஆனால் லக்கினாதிபதி குரு பகவான் உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்காரன் புதனின் மேல் பார்வையைச் செலுத்துவதாலும், பின் வாழ்க்கை சரியானது. புதன் வர்கோத்தமம் பெற்றிருப்பதைப் பாருங்கள்.  பையனின் வாழ்க்கை ஒளி மயமானது, தாமதமாக ஒளி கிடைத்தது. out door activities களில் பையன் முனைப்பாக இருந்ததால் யோகா வாத்தியாராக மாறி நன்கு சம்பாதிக்கத்துவங்கினான்.

புதிருக்கான பதிலை 6 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 10-5-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------.
1
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி உச்சம் பெற்று எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார்
2 .அவரின் பார்வை நாலாம் இடத்தின் மேல் உள்ளது
3 .புதன் பனிரெண்டில் அமர்த்ததால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை
4 .ஆயினும்பத்தாம் இடத்து புதன் ஒன்பதாம் அதிபதி சூரியனுடன் அமர்ந்ததால் செல்வாக்கு மிக்கவராய் ஆக்குகிறது
5 .மேலும் குருவின் பார்வை நாளில்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, May 04, 2019 2:07:00 PM
-----------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 டிசம்பர் 1978 அன்று காலை 7 மணி 50 நிமிடம் போல பிறந்த‌வர். பிறந்த‌ இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
1.ல‌க்கினாதிபதி குரு 8ல் மறைவு.உச்ச்மடைந்த குரு 8ல் அமர்ந்து வக்கிரமும் அடைந்தார்.
2.8ம் அதிபன் சந்திரன் 5ல் அமர்ந்தது பூர்வ புண்ணியம் சுமார்தான் என்பதைக் குறிக்கிறது.
3.9ம் அதிபன் சூர்யன் 12ல் மறைந்தது.
4.7ம் அதிபனும் 10ம் அதிபனும் ஆன புதன் 12ல் மறைந்தது.புதன் அஸ்தங்கதம் அடைந்தது.வக்கிரம் அடைந்தது.
5.12ம் அதிபனும் 5ம் அதிபனுமான செவ்வாய் லக்கின பாவத்திலேயே அமர்ந்தது.செவ்வாய் அஸ்தங்கதம் அடைந்தது
6.கேது தசாவில் துவங்கிய வாழ்வு, முதல் ஆறுவருடம் கேது தசா. அடுத்து 20 ஆண்டுகள், 26 வயதுவரை சுக்கிரதசா. ஜாலியான வாழ்வு மற்றவர்கள் சம்பாத்தியத்தில் நடத்தியிருப்பார்.அடுத்து 6 ஆண்டுகள் சூரிய தசா 12ல் மறைந்த சூரியனால் பலன் ஒன்றும் இல்லை.அடுத்து 10 ஆண்டுகள் 8ம் அதிபன் சந்திரனின் தசா. செப் 2020 வரை சந்திர தசா. பலனில்லை.42 வயதுவரை முன்னேற்றத் தடை.அடுத்த 7 ஆண்டுகள் செவ்வாய் தசாவும் பலன் இல்லை. 49 வயதில் வரும் குருதசா பலன் அளிக்க வாய்ப்பு
உண்டு.
Saturday, May 04, 2019 6:16:00 PM
----------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
தங்கள் கேள்விக்கான ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா?
### எனது பதில் : ஒளிமயமான எதிர்காலம் எனது உள்ளத்தில் இந்த ஜாதகருக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால்
1. தனுசு லக்கினத்திற்கு அதிபதி குரு உச்சமாக இருந்தாலும் எட்டில் மறைந்து , ஜாதகருக்கு ஓரளவு நன்மையே தந்தது. குருவாக இருப்பதால் தான் ஓரளவு நன்மை வந்தது.
2. மேலும் கல்வி ஸ்தானமான குரு எட்டில் மறைந்து இருந்து சுமாரான படிப்பையையும் , மேலும் வித்யா காரகன் புதன் பன்னிரண்டில் மறைந்து சரியான முறையான படிப்பை தரவில்லை.
3. மற்ற யோகாதிபதியான சூரியனும் பன்னிரண்டில் மறைந்து முறையான பலன்களை தரவில்லை. செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்தாலும் ஓரளவு நல்ல பலன்களையே தர முடிந்தது.
4. ஆறாம் அதிபதி சுக்கிரன் பனிரொன்றில் வலு பெற்று நல்ல பலன்களை தரவில்லை.
5. மேலும் ஜாதகருக்கு இருப்பது வயது வரை சுக்கிரன் தசை இருந்து நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்து வந்த சூரியன் தசை பனிரெண்டில் மறைந்ததால் ஓரளவு நல்ல பலன்களே கிடைத்தது.
6. சந்திரா தசையில் சர்விஸ் சம்பந்தமான வேலை கிடைத்தாலும் சரியாக அமையவில்லை.
7. அதற்கு அடுத்து வந்த செவ்வாய் தசை நல்ல பலன்களை கொடுத்து , கொஞ்சம் வாழ்வை சரி செய்தது.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Saturday, May 04, 2019 7:00:00 PM
-------------------------------------------
4
Blogger Deepika said...
11ல் ஆட்சி பெற்ற சுக்கிரனால் ஜாதகர்க்கு அதீத நண்பர்கள். கல்விக்குரிய 2ஆம் அதிபதி அந்த இடத்திற்கு அஷ்டம ஸ்தானமான 9ல். ராகு சேர்க்கை வேறு. புதனும் லக்னத்திற்கு 12ல் மறைந்து கல்வியை தடை செய்தார்.
ஆனால் 10 அதிபதியான புதன் சூரியன் சேர்க்கை பெற்று உச்சம் பெற்ற லக்ன அதிபதி பார்வை பெற்றதால் நல்ல சம்பாதிக்கும் அமைப்பு இந்த ஜாதகத்தில் உண்டு.
Sunday, May 05, 2019 12:04:00 AM
----------------------------------------
5
Blogger Ramanathan said...
Lagna lord Guru is exalted
11th house lord Sukran in 11th house. Sukran Dasa during childhood gave all luxury and did not allow him to concentrate on studies
9th house and 10th house lord in 12th house aspected by Guru, negating negative effect
10th house lord is varthagomam.
Rahu in 9th house will give benefit during all of rahu dasa
following guru dasa is also good due to guru being lagna lord
2nd house lord saturn aspecting 11th house and 11th house lord from being in 9th house.
Good chances to become a successful business man.
Due to saturn/sukran combination, he would shine in any art form
Sunday, May 05, 2019 7:06:00 PM
-------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
தனுர் லக்னம். ஒளிமயமான எதிர்காலம் உண்டு. கேது தசை சுக்கிர தசை முடிந்து சூரிய தசை வரும்போது...
Sunday, May 05, 2019 10:36:00 PM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com