மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.1.19

உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!!


உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!! 

உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!!

உப்பில் இருப்பது அசுர குணம்...
தேனில் இருப்பது தேவர் குணம்...

சித்த மருத்துவம்...

உப்பின் தன்மை என்ன ?
************************

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்.
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதப்படுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

தேன்....
********

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் .
சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .
இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் .
 மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊறப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்...

மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-

1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும் நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....

ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம்

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. தேனே என காதலியை வர்ணிக்கும் யாரும்..
    உப்பே என அழைப்பதில்லை..

    தேன்மொழி என பெயர் உண்டு..ஆனால்
    உப்புக்கு அந்த பெயர் இல்லை..

    தேன் தேனீக்கள் தருவது
    உப்பு மனிதன் தருவது.

    என்னமோ தெரியவில்லை.. 30 வருடங்களாக
    எப்போதுமே உப்பு எனது உணவில் துளியும் இல்லை

    சுத்தமான தேன் கிடைப்பதில்லை என்றாலும்
    சுவையானது கிடைக்கும் போது விடுவதில்லை.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    உப்பை உணவில் சேர்ப்பது பற்றி
    பல்வேறு விளக்கங்கள் படித்துள்ளேன். அலோபதிக்கு எதிராக உள்ளது போல ஹீலர் பாஸ்கர் அவர்கள் அளவோடு சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
    ஆனால் இன்றைய சித்த மருத்துவத்தில் அதன் விளக்கம் தெரிந்தவர் யாரும் அதை உணவில் சேர்ப்பதைப் பற்றி தெளிவாக இருப்பர்!
    தேன் பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளவை.
    இன்றைய பதிவு ஜோர் ஐயா!👍

    ReplyDelete
  3. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Nice info...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. /////Blogger வேப்பிலை said...
    தேனே என காதலியை வர்ணிக்கும் யாரும்..
    உப்பே என அழைப்பதில்லை..
    தேன்மொழி என பெயர் உண்டு..ஆனால்
    உப்புக்கு அந்த பெயர் இல்லை..
    தேன் தேனீக்கள் தருவது
    உப்பு மனிதன் தருவது.
    என்னமோ தெரியவில்லை.. 30 வருடங்களாக
    எப்போதுமே உப்பு எனது உணவில் துளியும் இல்லை
    சுத்தமான தேன் கிடைப்பதில்லை என்றாலும்
    சுவையானது கிடைக்கும் போது விடுவதில்லை.//////

    30 வருடங்களாக உப்பில்லாத வாழ்க்கையா? மிக்க ஆச்சரியம்தான்! நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்து சிறக்க முருகப்பெருமான் அருள் புரியட்டும்!!!!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    உப்பை உணவில் சேர்ப்பது பற்றி
    பல்வேறு விளக்கங்கள் படித்துள்ளேன். அலோபதிக்கு எதிராக உள்ளது போல ஹீலர் பாஸ்கர் அவர்கள் அளவோடு சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
    ஆனால் இன்றைய சித்த மருத்துவத்தில் அதன் விளக்கம் தெரிந்தவர் யாரும் அதை உணவில் சேர்ப்பதைப் பற்றி தெளிவாக இருப்பர்!
    தேன் பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளவை.
    இன்றைய பதிவு ஜோர் ஐயா!👍/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice info...
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  9. Salt is main source for Sodium which is very much needed for heart beat. Sp, limited salt is very much mandatory

    ReplyDelete
  10. //////Blogger Karthikraja K said...
    Salt is main source for Sodium which is very much needed for heart beat. Sp, limited salt is very much mandatory/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com