மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.11.12

Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?


Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?

தலைப்பில் உள்ள ‘டா’ எனக்காக நான் எழுதிக்கொள்வது. அப்போதுதான் எழுதுவதற்கு ஒரு உற்சாகம பிறக்கிறது!

பயிற்சிப்பாடம்

ஜோதிடம் கற்றுக் கொள்வது எளிதன்று. கடுமையான முயற்சி செய்து ஜோதிடப்பாடங்களைப் படிப்பதோடு, படித்ததை மனதில் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, அதில் தேர்ச்சி பெறமுடியும்.

படிக்கின்ற அத்தனை பாடங்களையும், அத்தனை, விதிகளையும் மனதில் தக்கவைக்க முடியாது. ஆனால் முக்கியமான விதிகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது மனதில் நிறுத்திவைக்கலாம்.

முக்கியமான பாடங்கள் எது? அவற்றை எப்படித் தக்கவைப்பது எப்படி என்பதே இந்தப் பயிற்சி வகுப்பின் (மேல்நிலை வகுப்பின்) நோக்கமாகும்.

இது மேல் நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் படட்டும் என்பதற்காக இன்று  இங்கே பதிவிட்டுள்ளேன்.

பாடங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல், பல ஜாதகங்களை பரிசீலித்துப் பார்ப்பதுடன், ஜோதிடம் தெரிந்த சிலருடன் அடிக்கடி உரையாடுவதன் மூலமும் நாம் அனுபவங்களைப் பெறமுடியும். அனுபவங்கள் மனதில் தங்கிவிடும்.

கிடைக்கும் உதாரண ஜாதகங்களை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டாம். கிடைக்கின்றபோது அவற்றைச் சேகரித்துவைத்துக்கொள்ளலாம். முன்பு எல்லாம் நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்துக்கொண்டே வருவார்கள். இப்போது அந்தத் தொல்லை இல்லை. கணினியில் ஒரு Main Folder, Various Sub Folderகளை உருவாக்கி அவைகளைச் சேர்த்துக்கொண்டே வரலாம். அந்த வசதி ஒரு அற்புதமான வசதியாகும். அனைவரையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன். பல உதாரண ஜாதகங்களை நான் உங்களுக்குத் தரவுள்ளேன். அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அவைகள் வரும். பொறுத்திருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான கேள்வி உண்டு. "நான் கஷ்டப்படுகிறேன். எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?"

கஷ்டப்படாத மனிதர்களே கிடையாது. கஷ்டங்கள் பலருக்கும் பலவிதமாக இருக்கும்.

கஷ்டங்களை அல்லது துன்பங்களை அல்லது துயரங்களை அல்லது தொல்லைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.

1. நிரந்தரக் கஷ்டம். மாற்ற முடியாத நிரந்தரக் கஷ்டம்
2. தற்காலிகமான (Temporary) கஷ்டம்

இதிலும் ஒவ்வொரு வீட்டை வைத்தும், கிரகத்தைவைத்தும், கஷ்டங்கள் பலவகைப்படும். ஒவ்வொன்றாக அலசுவோம்.

முதலில் சூரியனை வைத்துப்பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சூரியன் உடல்காரகன். சூரியனை வைத்து வரும் கஷ்டங்கள் எப்படி வகைப்படும்?

1. உடல் ஊனம் இருந்தால், ஆஸ்த்துமா போன்ற நோய்கள் இருந்தால் அது நிரந்தரக் கஷ்டம்.
2. சிக்கன் குனியா காய்ச்சல், பல்வலி, மூட்டுவலி போன்றவைகள் தற்காலிகக் கஷ்டங்கள்.

அதுபோல சூரியன் தந்தைக்குக் காரகன்.

1. இளம் வயதிலேயே தந்தை இல்லாமல் இருந்தால், அல்லது தந்தையால் பலன் எதுவும் இல்லை என்றால் அது
நிரந்தரக் கஷ்டம்.
2. தந்தையோடு மனஸ்தாபம், அல்லது தந்தையாரோடு விரோதப்போக்கு என்றால் அது தற்காலிகக் கஷ்டம்

வீடுகளும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனித உடற்பகுதிகளும்:

1 ஆம் வீடு (லக்கினம்): தலை, மூளை, தலைமுடி, தோற்றம் Head, Brain, Hair, Appearance

2 ஆம் வீடு: முகம், கழுத்து, தொண்டை, கண்கள், பற்கள், நாக்கு,  மூக்கு,தைராய்ட் சுரப்பி, குரல்வளை Face, Right Eye, Neck, Throat, Teeth, Tongue, Nose, Mouth, Speech, Nails

3 ஆம் வீடு: காது,நுரையீரல், கைகள், தோள்பட்டைகள், கைகள், நரம்பு மண்டலம் Ears, Right Ear, Lungs, Shoulders, Arms, Hands, Upper part of Eusophagus, Clavicles, Mobility

4 ஆம் வீடு: மார்பு, இதயம், உணவு மற்றும் மூச்சுக்குழல்கள் Breasts, Chest, Lungs, Heart, Diaphragm

5 ஆம் வீடு: வயிறு,, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி Upper Abdomen, Stomach, Liver, Gall Bladder, Spleen, Pancreas, Duodenum

6 ஆம் வீடு: குடற்பகுதிகள்,intestines, spleen, and nervous system Intestines, Digestion, Absorption, Appendix, Lowerback, Injuries, Wounds

7. 7ஆம் வீடு: ஜீரண உறுப்புக்கள், சிறுநீரகம், Urinary Tract, Kidneys, Sexual Organs, Uterus, Ovaries, Testicles, Semen, Lower Back

8. 8ஆம் வீடு:  தோல், புஜம் External Genital Organs, Anus, Perineum

9. 9ஆம் வீடு: இடுப்பு, தொடைப்பகுதிகள், Hips, Thighs, reproductive system, sexual organs, bowels, and excretory system
 
10. 10ஆம் வீடு:  கல்லீரல்  hips, thighs, liver, and sciatic nerve

11. 11ஆம் வீடு: முழங்கால், இணைப்பு எலும்புகள் மற்றும் skeletal system,calves, and circulatory system Left Ear, Calves, Ankles, Lower Legs

12. 12ஆம் வீடு: கால்கள், பாதம், Feet lymphatic system, and adipose tissue

உடல் ஆரோக்கியத்தில் சனியின் பங்கு! Saturn and Health

அதீதமான துரதிர்ஷ்டத்தை அளிப்பவர் சனீஷ்வரன். துன்பங்கள், தடைகள் ஆகியவற்றிற்கும் காரணகர்த்தா அவர்தான். மனிதனுக்குப் பலவிதமான நோய்களைக் கொடுப்பவர் அவர்தான். (Saturn is the chief planet in producing diseases)

6, 8, 12ஆம் வீடுகளுக்கு அவர்தான் காரகர் (authority) சிறிய, பெரிய நோய்களுக்கும் மருத்துவமனையில் படுப்பதற்கும் தொடர்பு உடைய வீடுகள் அவைகள் (6th, 8th and 12th houses are connected with short or long ailments and hospitalization)

சூரியனுக்குக் கடும் பகைவர் அவர். சூரியனுடன் அவர் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியனுக்கு 7ஆம் வீட்டில் நேரடிப் பார்வையில் இருந்தாலும், அவர் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உரிய (அதாவது சூரியன் இருக்கும் பகுதிக்குரிய உடற்பகுதியில்) ஊனத்தை அல்லது கடும் நோயை ஏற்படுத்துவார்.

உதாரணத்திற்குப் பன்னிரெண்டில் சூரியன் இருந்து, 6ஆம் வீட்டில் சனியிருந்தால், ஜாதகனுக்குப் பாதத்தில் ஊனம் அல்லது தீராத நோய் இருக்கும். தற்சமயம் இல்லை என்றாலும் சனி திசை சூரிய புத்தியில் அல்லது சூரிய தசை சனிபுத்தியில் உண்டாகும்.

ஏழில் சூரியன் இருந்து, சனியின் பார்வையும் அவர்மேல் இருந்தால், கிட்னியில் பிரச்சினைகள் உண்டாகும். அதுபோல அந்த வீட்டுடன் சம்பந்தப்பட்ட உடற்பகுதியிலும் பிரச்சினைகள் உண்டாகும். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் பார்த்த்துக்கொள்ளுங்கள்.

சூரியன் சனியின் நேரடி பார்வையில் இருக்கக்கூடாது. இருந்தால் சூரியன் இருக்கும் வீடும் அது சம்பந்தப்பட்ட உடலின் பகுதியும் பாதிக்கப்படும்

அதுபோல சூரியனுடன் சனி அல்லது ராகு கூட்டணி போட்டிருந்தாலும் உடற்கோளாறுகள் உண்டாகும்.

நல்ல ஆரோக்கியமான உடம்பிற்கு சூரியன் ஜாதகத்தில் நீசமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்!

சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடந்து தனது சுற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிறைவு செய்யும். சித்திரை ஒன்றாம் தேதி (தமிழ்வருடப்பிறப்பு அன்று) மேஷ ராசியில் அடியெடுத்துவைக்கும் சூரியன் ஒரு மாதகாலம் அங்கே இருந்து விட்டு வைகாசி மாதம் முதற் தேதியில் ரிஷப ராசிக்கு வரும்

1.சித்திரை மாதத்தில் - மேஷம்
2.வைகாசி மாதத்தில் - ரிஷபம்
3.ஆனி மாதத்தில் - மிதுனம்
4.ஆடி மாதத்தில் - கடகம்
5.ஆவணி மாதத்தில் - சிம்மம்
6.புரட்டாசி மாதத்தில் - கன்னி
7.ஐப்பசி மாதத்தில் - துலாம்
8.கார்த்திகை மாதத்தில் - விருச்சிகம்
9.மார்கழி மாதத்தில் - தனுசு
10.தை மாதத்தில் - மகரம்
11.மாசி மாதத்தில் - கும்பம்
12.பங்குனி மாதத்தில் - மீனம்

இப்படிச் சூரியன் வலம் வரும்போது, தனது சுயவர்க்கத்தில் எந்த இடத்தில் பரல்கள் மிகவும் குறைவாக உள்ளதோ, அந்த இடத்தில் இருக்கும் ஒரு மாத காலத்தில், அதற்குள்ளான காலத்தில், தற்காலிக நோய்களைக் கொடுப்பான். காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை என்பது போன்று அது எந்த வடிவில் வேண்டுமென்றாலும் வரும்.

அந்தக் காலகட்டத்தில் ஜாதகனுக்கு தற்காலிக உடல் உபாதைகள் ஏற்படும். அது காய்ச்சலில் இருந்து constipationவரை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

18 comments:

  1. காலை வணக்கம் ஐயா ... உண்மையிலேயே மிகவும் அருமையான பாடம் .. மற்றும் தேவையான பாடமும் கூட .. ஏனெனில் உடல் உபாதைகளை பற்றி தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நாட்டம் இருக்கும். நன்றி !!

    ReplyDelete
  2. கஷ்டமோ அதனால் வருவது
    நங்ஷடமோ தெரியாது. நம்

    இஷ்டத்திற்கு வருவது அல்ல
    கஷ்டமோ, நஷ்டமோ இஷ்டமோ

    கஷ்டம் என்பது நம் அபிப்ராயமே
    சாஷ்டாங்கமாக இறைவனை பணிதலே

    அமைதியை தரும் வாழ்க்கையில்
    ஆனந்தம் கிடைக்கும்

    பிரச்சனையே இல்லாத ஒருவனே
    பிரச்சனையே எனக்கு பிரச்சனை இல்லை என்பது தான் என்பார்

    இருக்கட்டும்..

    மறு மொழி கூறாமல் வேண்டுகோளினை ஏற்று
    மருத்துவ சோதிடம் தொடங்கியது மகிழ்ச்சியே

    நான் யார்.. நான் யார்..
    நாலும் தெரிந்தவர் யார் .. யார்..

    பிணியார் வருவார்
    மருந்தார் தருவார்
    பிழைப்பார் யார் யாரோ

    என்ற வாத்தியாரின் பாடல் வரிகளை
    எப்போதும் போல் வலமாக சுழல விடுகிறோம்


    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது
    நன்றி.

    ReplyDelete
  4. தெளிவாக மிக அருமையான விளக்கங்கள், தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களிலும் இத்தனை தெளிவு இல்லை. நன்றிகள் அய்யா.

    /////சூரியனுக்கு நேரடி பார்வையில் சனி இருக்கக் கூடாது, இருந்தால்..../////

    சூரியன் 10 இல் இருந்தால்.... "hips"...../////


    எனக்கு நேரடி பார்வையில் இருக்கிறார்கள், சனி 4 இல், சூரியன் 10 இல். சுமார் ஒன்னரை வருடம் முன்பு எனக்கு இடுப்பில் ஒரு வலி, மருத்துவர்களிடம் காட்டி குனமாகியது. நடப்பது குரு திசை சுக்கிர புக்தி. இன்றைய பாடத்தை படித்த பின் இந்த தேதிகளை சரி பார்த்த போது வலி துவங்கிய தேதிகள் சூரிய புக்தி நடந்துள்ளது.(வாக்யா படி).

    அதே நேரம் அம்சத்திலும் இந்த சூரியன் அதே இடத்தில் வர்கோத்மம். சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஆறாம் இடத்து பரல்கள் 32.இந்த இடுப்பு வலி எதிர் காலத்திலும் இப்படி வந்து போகுமா ,அல்லது தீவீரமாகுமா அய்யா.

    ReplyDelete
  5. காலை வணக்கம்,

    சூரியன்...மற்றும்...சனி....உள்ள...தொடர்புகளை பற்றி மிகவும் அற்புதமான முறையில் எடுத்துரைத்ததுக்கு நன்றி......... இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9....அம்சதில்.... மேலும்...

    அஷ்டகவர்க்க பதிவில்.....

    சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
    வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
    இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
    ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
    வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.


    எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து....

    இளையராஜா அவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்க அவருடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டிர்கள்.... எனக்கும் அந்த மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.......


    Please see below:

    ////ilayaraja said...
    sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please...... ////

    உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கிறேன்!


    I can even know by you sir, that the computer can calculate this paralgal.... but still i need this example horoscope......please..

    நானும் சற்று என் மூளைக்கு வேளை கொடுக்க விரும்புகிறேன்....


    Email ID: onlinewithraja16@gmail.com

    Thanking you,
    Raja

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல் படித்ததை 50% மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது, ஜாதகங்களை வைத்து படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் வறுகிறது.என் கணவரின் ஜாதகத்தை நிறைய ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டேன்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி சொல்கிறார்கள்,தற்சமயம் திருவனந்த்தபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது,அங்கு ஒருவர்(பெண்) ஜோதிடப்பள்ளி வைத்திருப்பதை கேள்விபட்டு என் கணவரின் ஜாதகத்தை கொடுத்து நிறைய கேள்விகள் கேட்டேன்,அதற்கு அவர் ராசி கட்டத்தையும்,பாவ கட்டத்தையும் வைத்து பதில் கூறினார், நான் படித்ததை வைத்து எழுதியதிற்கும்,அவர் கூறியதிற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது.அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை,ஒரே குழப்பமாக உள்ளது ஐயா,தெழிவற்ற குட்டையில் மீன் பிடிப்பது என்பது இதுதானோ?

    ReplyDelete
  7. என் ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருக்கிறார்கள். கடந்த ஐப்பசியில் இருவரும் ஒரே ராசியில் இருந்த போது எனக்கு நோய்த் தொல்லை ஆரம்பித்து மீண்டும் சூரியன் மறு ராசிக்கு பெயர்ச்சியானதும்தான் சிறிது சிறிதாக தணிந்தது. இப்போது நடக்கும் சனி தசையில் கேது புத்தி நிலையை மேலும் மோசமாக்குவதாக இருந்தது. ஆயினும் இது நிரந்தரமாக அல்லாமல் தற்காலிகம் என்ற வகையில் சேர்ந்துக் கொண்டது.

    ReplyDelete
  8. குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என செல்வத்திற்கு நிகராக‌ ஆரோக்கியம் போற்றப்படுகிறது. சுவரிருந்தால் தான் சித்திரம். பதிவிற்கு மிக்க நன்றி. தங்கள் மாணவ்ன், ரெங்கா.

    ReplyDelete

  9. //////Blogger Sanjai said...
    காலை வணக்கம் ஐயா ... உண்மையிலேயே மிகவும் அருமையான பாடம் .. மற்றும் தேவையான பாடமும் கூட .. ஏனெனில் உடல் உபாதைகளை பற்றி தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நாட்டம் இருக்கும். நன்றி !!////

    நல்லது. நன்றி நண்பரே

    ReplyDelete
  10. /////Blogger அய்யர் said...
    கஷ்டமோ அதனால் வருவது
    நங்ஷடமோ தெரியாது. நம்
    இஷ்டத்திற்கு வருவது அல்ல
    கஷ்டமோ, நஷ்டமோ இஷ்டமோ
    கஷ்டம் என்பது நம் அபிப்ராயமே
    சாஷ்டாங்கமாக இறைவனை பணிதலே
    அமைதியை தரும் வாழ்க்கையில்
    ஆனந்தம் கிடைக்கும்
    பிரச்சனையே இல்லாத ஒருவனே
    பிரச்சனையே எனக்கு பிரச்சனை இல்லை என்பது தான் என்பார்
    இருக்கட்டும்..
    மறு மொழி கூறாமல் வேண்டுகோளினை ஏற்று
    மருத்துவ சோதிடம் தொடங்கியது மகிழ்ச்சியே
    நான் யார்.. நான் யார்..
    நாலும் தெரிந்தவர் யார் .. யார்..
    பிணியார் வருவார்
    மருந்தார் தருவார்
    பிழைப்பார் யார் யாரோ
    என்ற வாத்தியாரின் பாடல் வரிகளை
    எப்போதும் போல் வலமாக சுழல விடுகிறோம்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  11. ////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது
    நன்றி./////

    இப்போது பரவாயில்லை. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  13. /////Blogger thanusu said...
    தெளிவாக மிக அருமையான விளக்கங்கள், தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களிலும் இத்தனை தெளிவு இல்லை. நன்றிகள் அய்யா.
    /////சூரியனுக்கு நேரடி பார்வையில் சனி இருக்கக் கூடாது, இருந்தால்..../////
    சூரியன் 10 இல் இருந்தால்.... "hips"...../////
    எனக்கு நேரடி பார்வையில் இருக்கிறார்கள், சனி 4 இல், சூரியன் 10 இல். சுமார் ஒன்னரை வருடம் முன்பு எனக்கு இடுப்பில் ஒரு வலி, மருத்துவர்களிடம் காட்டி குனமாகியது. நடப்பது குரு திசை சுக்கிர புக்தி. இன்றைய பாடத்தை படித்த பின் இந்த தேதிகளை சரி பார்த்த போது வலி துவங்கிய தேதிகள் சூரிய புக்தி நடந்துள்ளது.(வாக்யா படி).
    அதே நேரம் அம்சத்திலும் இந்த சூரியன் அதே இடத்தில் வர்கோத்மம். சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஆறாம் இடத்து பரல்கள் 32.இந்த இடுப்பு வலி எதிர் காலத்திலும் இப்படி வந்து போகுமா ,அல்லது தீவீரமாகுமா அய்யா.////

    நிறைய மேட்டர் உள்ளது சுவாமி. தீவிரமாகாது நம்பிக்கையுடன் இருங்கள்!

    ReplyDelete
  14. /////Blogger raja said...
    காலை வணக்கம்,
    சூரியன்...மற்றும்...சனி....உள்ள...தொடர்புகளை பற்றி மிகவும் அற்புதமான முறையில் எடுத்துரைத்ததுக்கு நன்றி......... இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9....அம்சதில்.... மேலும்...
    அஷ்டகவர்க்க பதிவில்.....
    சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
    வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
    இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
    ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
    வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.
    எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து....
    இளையராஜா அவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்க அவருடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டிர்கள்.... எனக்கும் அந்த மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....../////

    அஷ்டகவர்க்கப்பாடத்தில் அது உள்ளது. அது தனி இணையதளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பொது இடத்தில் நடத்தினால் அது திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே தனி இணைய தளம்! நீங்கள் ஒன்றும் கணக்கிடவேண்டாம். கணினி கணித்துக்கொடுக்கும்! பிடித்துக்கொள்ளுங்கள்


    ReplyDelete
  15. /////Blogger geetha lakshmi said...
    வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல் படித்ததை 50% மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது, ஜாதகங்களை வைத்து படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் வறுகிறது.என் கணவரின் ஜாதகத்தை நிறைய ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டேன்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி சொல்கிறார்கள்,தற்சமயம் திருவனந்த்தபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது,அங்கு ஒருவர்(பெண்) ஜோதிடப்பள்ளி வைத்திருப்பதை கேள்விபட்டு என் கணவரின் ஜாதகத்தை கொடுத்து நிறைய கேள்விகள் கேட்டேன்,அதற்கு அவர் ராசி கட்டத்தையும்,பாவ கட்டத்தையும் வைத்து பதில் கூறினார், நான் படித்ததை வைத்து எழுதியதிற்கும்,அவர் கூறியதிற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது.அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை,ஒரே குழப்பமாக உள்ளது ஐயா,தெழிவற்ற குட்டையில் மீன் பிடிப்பது என்பது இதுதானோ?/////

    ஒரு நோய்க்கு, நல்ல மருத்துவராக ஒருவரை மட்டுமே அனுகவேண்டும். பல மருத்துவர்களைப் பார்த்தால் ஆளுக்கொரு மருந்தைச் சொல்லத்தான் செய்வார்கள். அதுதான் இது.

    ReplyDelete
  16. /////Blogger ananth said...
    என் ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருக்கிறார்கள். கடந்த ஐப்பசியில் இருவரும் ஒரே ராசியில் இருந்த போது எனக்கு நோய்த் தொல்லை ஆரம்பித்து மீண்டும் சூரியன் மறு ராசிக்கு பெயர்ச்சியானதும்தான் சிறிது சிறிதாக தணிந்தது. இப்போது நடக்கும் சனி தசையில் கேது புத்தி நிலையை மேலும் மோசமாக்குவதாக இருந்தது. ஆயினும் இது நிரந்தரமாக அல்லாமல் தற்காலிகம் என்ற வகையில் சேர்ந்துக் கொண்டது.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  17. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என செல்வத்திற்கு நிகராக‌ ஆரோக்கியம் போற்றப்படுகிறது. சுவரிருந்தால் தான் சித்திரம். பதிவிற்கு மிக்க நன்றி. தங்கள் மாணவ்ன், ரெங்கா.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com