மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.12

Astrology புத்தி எத்தனை வகையடா?

 Astrology புத்தி எத்தனை வகையடா?

தேதி 30.10.2012 செவ்வாய்க் கிழமை
---------------------------------------
புத்தி எப்படி வகைப்படும்?  புத்தி ஒன்றுதானே என்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்

இன்டெலிஜென்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் புத்திசாலித்தனதைச் சொல்ல விழைகிறேன்!

I.Q. stands for intelligence quotient, and it is supposed to be a measurement of how naturally intelligent a person is. Intelligence tests are not designed to show how much a person has learned; rather, they are meant to measure a person's ability to learn. This ability is something that doesn't change much as a person grows older, even though he or she may pick up a lot of new facts and skills. Scientists think that each person is born with a certain amount of intelligence or mental ability. Still, how well a person uses his or her natural intelligence has a lot to do with the person's desire to learn and the learning environment in which he or she grows up.quotient means A result obtained by dividing one quantity by another.A degree or amount of a specified quality or characteristic: "an increase in our cynicism quotient".

புத்திசாலித்தனம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அது பிறவியிலேயே உண்டாவது. படிப்பினாலோ அல்லது பயிற்சியினாலேயோ உண்டாக்க முடியாதது!

புத்தி மூன்று வகைப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டுப்போயிருக்கிறார்கள்

1. கற்பூரப் புத்தி
2. கரிப் புத்தி
3. வாழைமட்டைப் புத்தி

கற்பூரம் நெருப்பைக் காட்டியவுடன் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ அப்படி எதையும், பார்த்தால், படித்தால், கேட்டால் சட்டென்று பிடித்துக் கொள்வான்.
அவன்தான் கற்பூர புத்திக்காரன். அதுதான் புத்தியில் முதல் நிலை!

கரியின் மேல் நெருப்பை வைத்து ஊத ஊதத்தான் அது மெதுவாகப் பற்றிக் கொள்ளும். கரிப் புத்திக்காரனும் அப்படித்தான், ஒரு முறைக்கு இருமுறை அல்லது  பல முறை சொல்லச் சொல்ல அல்லது படிக்கப் படிக்கத்தான் விஷயத்தைக் கிரகித்துக்கொள்வான். அதாவது அவன் மண்டையில் ஏறும். புத்தியில் அது இரண்டாவது நிலை!

வாழை மட்டையின் மேல் என்ன செய்தாலும் நெருப்பைப் பற்ற வைக்க முடியாது. அதுப்போல வாழைமட்டைப் புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அல்லது விளங்காது. படித்தாலும் அப்படித்தான். கேட்டாலும் அப்படித்தான். அது மூன்றாவது நிலை
---------------------------------------------------------------------------------------------------
இவை ஜாதகத்தில் தெரியுமா?

ஏன் தெரியாது?

ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும்! வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்! அது முதல் நிலை!

மேற்சொன்ன நிலைப் பாட்டில் (அதாவது உச்சமாகவோ அல்லது ஆட்சி பலத்துடனோ) இருந்தும், 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் புதன் அமர்ந்திருந்தால், அது 2ஆம் நிலை!

மேற் சொன்ன நிலைப் பாட்டில் இல்லாமல் அதாவது உச்சம், சொந்த வீடு பலம் எதுவும் இல்லாமல் நேரடியாக 6 அல்லது எட்டு அல்லது 12ஆம் வீடுகளில் புதன் இருந்தால் அது மூன்றாம் நிலை. புத்திக் குறைவு! (இது பொது விதி. இந்த நிலையில் குருவின் பார்வையைப் புதன் பெற்றால், இந்த விதி கேன்சலாகிவிடும். ஜாதகனுக்குக் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். மட்டை காய்ந்து சருகாகி இருக்கும்)
----------------------------------------------------------------------------------------------------
இதை உங்களுக்காக எழுதவில்லை. நம் வகுப்பறைக்கு வரும் அனைவருமே புத்திசாலிகள் என்பது தெரியும். இதை நீங்கள் மற்ற ஜாதகங்களைப் பரிசீலிக்கும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று இங்கே கொடுத்துள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 1.11.2012  வியாழக் கிழமையன்று நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. வாத்தியார் ஐயா! கரித்துண்டுகளை கற்பூரங்களாக்கும் தன்மை தங்கள் எழுத்துகளில் உண்டு! மிக்கநன்றி!

    ReplyDelete
  2. Sir, suppose Budhan is at kanni (uchham) with sevvai or sani as 5 house, native intelligence will be differed or still he is intelligent.
    And also in a lesson, you explained, at kanni, budhan has both aatchi and uchha balam. But for other planets like sani, it will be uchham at thulam. What is the difference here.
    Thanks,

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  4. புதன் நல்ல நிலையில் இருந்து 5 ல் சனி இருப்பின் புத்திசாலித்தனம் பாதிக்கப்படுமா அய்யா.

    ReplyDelete
  5. /////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. ////Blogger ஸ்கூல் பையன் said...
    நன்றி..////.

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    வாத்தியார் ஐயா! கரித்துண்டுகளை கற்பூரங்களாக்கும் தன்மை தங்கள் எழுத்துகளில் உண்டு! மிக்கநன்றி!/////

    வாங்கி வந்த வரம் இருக்கிறதே சாமி! என் எழுத்து எப்படி வரத்தை மாற்றும்?

    ReplyDelete
  8. /////Blogger KJ said...
    Sir, suppose Budhan is at kanni (uchham) with sevvai or sani as 5 house, native intelligence will be differed or still he is intelligent.
    And also in a lesson, you explained, at kanni, budhan has both aatchi and uchha balam. But for other planets like sani, it will be uchham at thulam. What is the difference here.
    Thanks,////

    ஏன் உங்கள் ஜாதகத்தில் அப்படி உள்ளதா? எத்தனை கிரகங்கள் சேர்ந்தாலும், உச்சபலனைப் புதன் தருவார். எதற்குக் கவலை?

    ReplyDelete
    Replies
    1. No sir. For me budhan is in lagnam(magaram). I got that doubt. So I have asked. Thank you very much for the lesson sir. Its very useful.

      Delete
  9. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger thanusu said...
    புதன் நல்ல நிலையில் இருந்து 5 ல் சனி இருப்பின் புத்திசாலித்தனம் பாதிக்கப்படுமா அய்யா./////

    5ஆம் வீடு keen intelligence எனப்படும் நுண்ணறிவிற்கும் உரிய இடம், மேலும் மன காரகனுக்கும் உரிய இடம். நுண்ணறிவை அந்த வீட்டுக்காரனும், காரகன் குருவும் தருவார்கள். சனி அந்த வீட்டில் இருப்பது மனக் கிலேசங்களை உண்டு பண்ணும். மனப்போராட்டங்கள் இருக்கும் சனீஷ்வரன் புத்திசாலித்தனத்தில் கையை வைக்க மாட்டார்! கவலை எதற்கு?

    ReplyDelete
  11. pathun udan sani sukeran suriyan chndran sernthu 9m edathil erundal ena palan sir

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா
    புதன் கிரகத்தைப் பற்றிய நல்லதொரு பாடம் வழங்கியதற்கு நன்றி. சூரியனுக்கு அருகில் பத்து பாகைக்குள் புதன் வரும்பொழுது அஸ்தங்கம் அடைவதால்,உச்ச நிலையில் , கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும்
    ஜாதகருக்கு மூன்றாம் நிலை புத்திசாலித்தனம்தான் வாய்க்குமா அய்யா?
    அன்புடன்
    அரசு.

    ReplyDelete
  13. /////Blogger Saravanan V said...
    pathun udan sani sukeran suriyan chndran sernthu 9m edathil erundal ena palan sir/////

    பாடத்தை மட்டும் படியுங்கள். பாடத்தையும் உங்கள் ஜாதகத்தையும் வைத்துக் கேள்விகள் கேடக வேண்டாம் அன்பரே! உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்வது தவறாகும். முழு ஜாதகத்தையும் வைத்துத்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். பதில் சொல்பவரும் முழு ஜாதகத்தையும் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என்னுடைய மின்னஞ்சல் பெட்டியில் நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் (வந்தவை) உள்ளன!

    ReplyDelete
  14. /////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா
    புதன் கிரகத்தைப் பற்றிய நல்லதொரு பாடம் வழங்கியதற்கு நன்றி. சூரியனுக்கு அருகில் பத்து பாகைக்குள் புதன் வரும்பொழுது அஸ்தங்கம் அடைவதால்,உச்ச நிலையில் , கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும்
    ஜாதகருக்கு மூன்றாம் நிலை புத்திசாலித்தனம்தான் வாய்க்குமா அய்யா?
    அன்புடன்
    அரசு./////

    புதன் அஸ்தமனமானாலும் புத்திசாலித்தனம் குறையாது. ஆனாலும் அஸ்தமனமானதால், சமயங்களில் உங்கள் புத்திசாலித்தனம் வேலை செய்யாமல் போய்விடும் அல்லது அதற்குப் பலன் இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  15. ///Blogger V Dhakshanamoorthy said...
    நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  16. Dear Vathiyar,
    If the person has the Mercury within 10 degrees of Sun, then how the Nipuna Yoga will be working?
    Is that yoga is still in effect and operative or the yoga benefits are gone for good?
    Thank you for the post.

    ReplyDelete
  17. nalathoru thagaval therithu konden..nandri ayya.oru santhegam..

    5ஆம் வீடு keen intelligence எனப்படும் நுண்ணறிவிற்கும் உரிய இடம், மேலும் மன காரகனுக்கும் உரிய இடம்.// endru koorinirgal..mana karagan endral santhiran..santhiran sontha veedu 4..sontha veedai vida adutha veedu vuriya veedaguma ? ipoluthu than ungalai pondrorin pathivugalinal sothidam therinthu kolkiren..nandri ayya

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா, புதன் 8ல் அஸ்தங்கம்,நீசம்,ஆனால் அம்சத்தில் நீச பங்க ராஜ யோகம்(கன்னியில்) என்றாலும் வாழை மட்டைதானா?

    ReplyDelete
  19. என் ஜாதகத்திற்கு லக்னநாதருமான புதனைப் பற்றி சற்று முன்புதான் படித்து விட்டு இந்த பாடத்தை இரண்டாவது தடவையாக படிக்கிறேன். மின்னல் வேக சிந்தனை/யோசனை இவரின் பூரண அருள் இருந்தால் ஏற்படுமாமே. எனக்கு புதன் 8ல் 7 பரல்களுடன் இருக்கிறார். எனக்கு எந்த மாதிரியான புத்தி என்று நானே சொல்லிக்கொள்ள கூடாது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com