மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.12

Astrology வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?


++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

Doubts: கேள்வி பதில் பகுதி 23

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.91
சரவண குமார்

Dear Sir,

1. Rishabathil Raghu Neesam, mithuna lagnathukku 12th place il Raghu ullar. Avar dhisai evaru irukkum?

தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!

2.In general, how is neesa grahas dhisai?

பொதுவாக நீச கிரகங்களின் தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது!

3 Oru graham neesamaga irunthalum, avar than suyavargathil 5 paral & 26 paral irunthal, avar balamaga ullar enru eduthu kollalama sir?

ஐந்து பரல்களைப் பெற்றுள்ளார் என்றாலே அவர் ஆட்டத்திற்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று அர்த்தம். ஆகவே அவர் ஓரளவிற்கு நன்றாக ஆடுவார். கவலை வேண்டாம்.

4. Pathaga isthanam, athan athipathi & athan dhasi patriya paadam vendum sir?

பழைய பாடங்களில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்
---------------------------------------------------------------------
email.No.92
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,
For Meena rasi Midhuna lagnam, Raghu is in Midhunam and keethu is in dhanusu and it is vargothamam. what will be effect of this for the persons on his married life during keedhu desai. waiting for your positive reply.
chandrasekaran

ஏழாம் அதிபதி குரு பகவானை ஏன் ஒளித்துவைத்திருக்கிறீர்கள். திருமண வாழ்விற்கு அவர் முக்கியமில்லையா? கேது தசை என்பது பிரேக் இல்லாத வண்டியில் போவதைப் போன்றது. உங்களுக்குக் கேது குருவின் வீட்டில் இருப்பதால், அவருடைய தசையில் அதிக பாதிப்புக்கள் இருக்காது!
------------------------------------------------------
email.No.93
சரஸ்வதி கல்யாணம், சென்னை

மதிப்பிற்கு உரிய ஐயா

தயவு செய்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும்

1.கடக லக்னத்துக்கு மூன்றாம் அதிபதி புதன்.பன்னிரெண்டாம் அதிபதியும் புதன்.இந்த நிலை விபரீத ராஜா யோகமா?

நிச்சயமாக இல்லை!

2.ரிஷப லக்னத்துக்கு ஒன்பது பத்து அதிபதி சனி. அதனால் பிறப்பிலேயே தர்மகர்மாதி யோகம் என்று சொல்லக் கேட்டு இருக்கின்றேன் . விபரீத ராஜா யோகமும் அதேபோலவா?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகம்!

3.கடக லக்னத்துக்கு கன்னியில் கேது , மிதுனத்தில் புதன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் இந்த நிலை பலன் என்ன?தயவு செய்து விளக்கவும்

முக்கியமான 4 கிரகங்கள் 12ஆம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளன. அவைகள் கிரகயுத்ததில் உள்ளனவா, அஸ்தமனம் பெற்றுள்ளனவா, சுயவர்க்கத்தில் எத்தனை பரல்களுடன் உள்ளன, அம்சத்தில் அவற்றின் நிலை என்ன, இது போன்று பல என்ன, என்ன கேள்விகளை வைத்து, முழு ஜாதகத்தையும் அலசினால்தான் பதில் சொல்ல முடியும்! ஆகவே எனது பாடங்களை முழுமையாகப் படியுங்கள். உங்களுக்கே அலசும் தன்மை/திறமை கிடைக்கும்.
------------------------------------------------------------------
email.No.94
சோழி கணேசன்

வணக்கம் அய்யா

1.சனியின் சஞ்சாரத்தின் போது பரல்கள் குறைவாக இருக்கும் போது சிரமமான பலன்கள் ஏற்படும் என்று சொல்லியுள்ளீர்கள் ,இப்பொது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறது .எட்டாம் இடத்தில சனி கோச்சாரத்தில் உள்ளார் அங்கு பரல்கள் 35 சனியின் சுயவர்க்க பரல்கள் 2 இதை எப்படி எடுத்துக்கொள்வது? பலன்கள் நன்றாக இருக்குமா அல்லது குறையுமா, அடுத்த சஞ்சரத்தின் போது 29பரல்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது பலன்கள் குறையுமா( because the house which has lesser than the previous one ,but normal is 25 isnt it?)

அடுத்த மாற்றத்தை அது நிகழும்போது பார்த்துக்கொள்வோம். இப்போது சனி சஞ்சாரம் செய்யும் இடத்தில் 35 பரல்கள் இருப்பதால், ஏற்றமான காலம். வாழ்க்கையின் அடுத்த லெவலுக்கு சனீஷ்வரன் உங்களை உயர்த்தி
விடுவான். அஷ்டமச் சனியும் சேர்ந்திருப்பதால், அந்த உயற்சி உங்கள் கடும் உழைப்பால் மட்டுமே கிடைக்கும்.

(கோள்சாரச்சனி 35 பரல்கள் உள்ள ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். தன்னுடைய சுயவர்க்கத்தில் அவர் வலிமை இழந்து காணப்படுவதால், அந்த நன்மையின் அளவுகள் குறையலாம். மற்றபடி பெரிய பதிப்பு ஒன்றும் இருக்காது. அடுத்த பெயர்ச்சியில் இருப்பதைவிட 6 பரல்கள் குறைவாக உள்ளதால், அங்கே சஞ்சரிக்கும் காலத்தில் பொருள்/பண விரையத்தை ஏற்படுத்துவார். அப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாகக் கொடுக்கல் வாங்கல் மற்றும் நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப்போடும் விவகாரங்கள், கூட்டுத்தொழில் போன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!)

2. இரண்டாவது சந்தேகம் பொதுவானது ,ராசியில் கிரகங்களின்
அமைப்பை வைத்து பார்க்கும் போது சில கிரகங்கள் நன்மையான
இடத்திலும் சில கிரகங்கள் பகை வீட்டிலும் இருந்தாலும் ,அம்சத்தில்
அவை நல்ல அமைப்பில் மாறிஇருக்கும் பட்சத்தில் மொத்தத்தில்
எல்லாமே நல்ல அமைப்பில் உள்ளதுபோல தோன்றுமே இதை
எப்படி எடுத்துக்கொள்வது (ie ; the four planet is in good positin in rasi
other five are good in amsa means is it worth to take this kind of consideration
which seems to be good for the person )
தங்கள் மாணவன்
கணேசன்

அம்சத்தில் நன்றாக இருந்தால் நல்லதுதானே? எதற்காகத் தோன்ற வேண்டும்? நல்லது நடக்கும். நன்மைகள் கிடைக்கும். அருகில் சோழீஸ்வரர் இருக்கையில் கவலை எதற்கு?
--------------------------------------------------------
email.No.95
ஜெய்

வணக்கம் வாத்தியரே
1.ஒரு ஜாதகத்தில் எதனை குழந்தைகள் என்று எப்படி கண்டு பிடிப்பது?

25.1.2010 அன்று, பாடம் எண் 18ல் மின்னஞ்சல் எண் 75ற்கான பதில்தான் உங்களுக்கும் உரிய பதில். அதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்!

2.ஜாதகத்தில் மறுமணம் செய்ய செய்யகூடிய வருடத்தை எப்படி கணிப்பது?
அன்பு மாணவன்
ஜெய்

வருடத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வயதாகிவிடும். முதல் மணம் முறிந்து போனதற்கு சம்பந்தப்பட்ட ஆசாமி, நீதிமன்றத்தில் விவாகரத்துத் தீர்ப்பை வாங்கி வைத்துள்ளாரா என்று கேளுங்கள்.
வாங்கி வைத்திருக்கிறார் என்றால், மறுமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடிப் பிடிக்கச் சொல்லுங்கள் (இன்றைய சூழ்நிலையில் மறுமணத்திற்குப் புதுப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே அவரைப் போலவே
விவாகரத்தான ஒரு பெண்ணை மணந்து கொள்வாரா என்று கேளுங்கள்). அவர் சம்மதம் என்று சொன்னால், அந்த அம்மணியும் சரியென்று சொன்னால், எதையும் பார்க்க வேண்டாம். உடனே திருமணத்தை நடத்திவிடுங்கள்!.

ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும். நவாம்சத்தில் ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் (That is free from afflictions) மறுமண வாய்ப்பு உண்டு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


14 comments:

  1. மீள் பதிவு கேள்வி பதில் படித்துப்பயன் பெற்றேன் நன்றி, ஐயா!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில் படித்து பலன் அறிய
    வாய்ப்பு தந்தமைக்கு,
    நன்றி.

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில் படித்து பலன் அறிய
    வாய்ப்பு தந்தமைக்கு,
    நன்றி.

    ReplyDelete
  4. REF: email.No.94
    பாடாவதி சாலையும் (= தசாபுத்தி) ஓட்டுனரும் (= கோள்சாரமும்) சேர்ந்தே கிடைப்பதுதான் எனக்கு வழக்கம் ஐயா. சனிதசை சனிபுத்தியில் ஜன்மகுரு நடந்தது. சே..சே..என்ன வாழ்க்கை இது என்று சலிக்கும் அளவுக்கு ஒரு மோசமான நேரம்.

    பிறகு சனிதசை ராகுபுத்தியில் அஷ்டமசனியும் மூன்றில் குருவும். எப்ப ஆள்கிடைக்கும் ஆளுக்கு ஒரு தர்மக்கை வைக்கலாம் என்று கூட்டமாக காத்திருப்பார்கள் என நினைக்கிறேன். பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அய்யாவுக்கு வணக்கம்,

    எனக்கு மகர லக்கனம், லக்கனாதிபதி சனி மேசத்தில் நீசம், எட்டாம் அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம், எனக்கு இப்பொழுது சனி தசை நடந்துகொண்டிருக்கிறது, இது எனக்கு நாலவது தசை, ஆயுசு முடிந்துவிடுமா?
    தயவுசெய்து தங்களின் கருத்தை சொல்லவும்,

    லக்கனம்‍‍‍ மகரம்

    மூன்றில் சுக்கிரன், ராகு

    நான்கில் சனி, சூரியன் , புதன்

    ஆரில் ‍ சந்திரன்

    ஒன்பதில் குரு, கேது

    பதினொன்றில் செவ்வாய்

    மிக்க நன்றி
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  6. தேமொழி, உங்களுக்காவது பரவாயில்லை. எனக்கு திருமணம் நடந்த போது, விரயச் சனி, ஜன்ம குரு. களத்திரகாரகன் ராசிக்கு 8ல். அப்போதுதான் கூடி வந்தது. சற்று தாமத திருமண என்பதால் கிரக பெயர்ச்சிக்கெல்லாம் காத்திருக்க அவகாசமில்லாமல் போய் விட்டது.

    இதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைக்கும் அளவுக்கு, பாதச் சனி முடிய ஒரு வருடம் இருக்கும் போது சனி தசை சுய புத்தி வந்தது பாருங்கள். குரு தசையில் அடக்கி வாசித்த ஏழரையோன் காலம், இந்த சமயத்தில் என்னை நன்றாகவே புரட்டியெடுத்து, அடித்து துவைத்து காய வைத்து விட்டுதான் சென்றது.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!

    2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.

    பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா !

    ஆனால்

    கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?

    ௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது.

    ௨. தாங்களே அந்த சமயத்தில் கூறி இருந்திர்கள் ஐயா! திருச்சி யில் எம்பெருமான் குடி கொண்டு உள்ள கோவிலின் மொட்டை கோபிரத்தை கட்டியதன தாள் இந்த அளவிற்கு லட்சகணக்கான உயிர் பலி வந்தது என்று .

    இதனை அல்லது இந்த கூற்றை எப்படி ஐயா! ஏற்றுகொள்ள முடியும் ஐயா!

    ஒங்களுக்கு ஒன்று தெரியுமா ? இன்றும் கூட தனது பூர்விர்கம் ஆன நாட்டிற்கு செல்ல பயந்து

    ( உயிரை காப்பாற்ற )

    வயது ஆன பெரியவர்களுடன் போனில் மட்டும் பேசி கொண்டு வாழும் ஜீவன்கள் எத்தனையோ நபர்களை நிதமும் பார்ப்பது உண்டு ஐயா !

    படிப்பில், வேலையில் மிகவும் திறமை வாந்த ஜீவன்கள் அத்தனை பெரும் ஐயா!

    நல்ல உள்ளம் கொண்ட மிகவும்

    " கௌரமாக ",

    கூறுவது என்றால் நாட்டை ஆளும் நல்ல உள்ளம்களை கொண்ட மிகவும் மதிப்பிற்கு உரியவர்களின் உதவியால் வாழும் ஜீவன்கள் எத்தனையோ எத்தனையோ ஐயா!

    அந்த பெரிய உள்ளம் கொண்டவர்களின்

    "பொற்பாதங்களை வணக்குவதர்க்கும்",

    தகுதி வாய்ந்தவர்கள் ஆன அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா நன்மையையும் கிடைக்க வேண்டி வேண்டிகொள்கின்றேன் ஐயா!

    இன்றும் உலகம் அழியாமல் உள்ளது என்றால் அதற்க்கு முக்கிய முழு காரணம் தன்னை நாடி வந்தவர்களை தன் மக்கள் போல பாதுகாத்து கொள்ளும் நிறைய நல்ல ஆத்மாக்கள் உள்ளதினதாள் தான் என்பது எமது கூற்று அல்லது எண்ணம் ஐயா!.


    Life is beautiful !!!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    மீள் பதிவு கேள்வி பதில் படித்துப்பயன் பெற்றேன் நன்றி, ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில் படித்து பலன் அறிய
    வாய்ப்பு தந்தமைக்கு,
    நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger தேமொழி said...
    REF: email.No.94
    பாடாவதி சாலையும் (= தசாபுத்தி) ஓட்டுனரும் (= கோள்சாரமும்) சேர்ந்தே கிடைப்பதுதான் எனக்கு வழக்கம் ஐயா. சனிதசை சனிபுத்தியில் ஜன்மகுரு நடந்தது. சே..சே..என்ன வாழ்க்கை இது என்று சலிக்கும் அளவுக்கு ஒரு மோசமான நேரம்.
    பிறகு சனிதசை ராகுபுத்தியில் அஷ்டமசனியும் மூன்றில் குருவும். எப்ப ஆள்கிடைக்கும் ஆளுக்கு ஒரு தர்மக்கை வைக்கலாம் என்று கூட்டமாக காத்திருப்பார்கள் என நினைக்கிறேன். பதிவிற்கு நன்றி ஐயா./////

    நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். சுவிஸ் வங்கிக்கு அனுப்பாமல் அதையும் கணக்கில் கொண்டு வாருங்கள்!

    ReplyDelete
  11. /////Blogger ஜீவா said...
    அய்யாவுக்கு வணக்கம்,
    எனக்கு மகர லக்கனம், லக்கனாதிபதி சனி மேசத்தில் நீசம், எட்டாம் அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம், எனக்கு இப்பொழுது சனி தசை நடந்துகொண்டிருக்கிறது, இது எனக்கு நாலவது தசை, ஆயுசு முடிந்துவிடுமா?
    தயவுசெய்து தங்களின் கருத்தை சொல்லவும்,
    லக்கனம்‍‍‍ மகரம்
    மூன்றில் சுக்கிரன், ராகு
    நான்கில் சனி, சூரியன் , புதன்
    ஆரில் ‍ சந்திரன்
    ஒன்பதில் குரு, கேது
    பதினொன்றில் செவ்வாய்
    மிக்க நன்றி
    அன்புடன் ஜீவா////

    எட்டாம் அதிபதி உச்சம் பெற்றிருக்கிறாரே? அப்புறம் என்ன குழப்பம்? ஆயுசை அவர் பார்த்துக்கொள்வார். கவலையை விடுங்கள். நாலாவது திசையை நானும் கடந்து வந்தவன். அதுவும் அது சனியினுடைய திசை. உயிரோடுதான் இருக்கிறேன்!

    ReplyDelete
  12. /////Blogger ananth said...
    தேமொழி, உங்களுக்காவது பரவாயில்லை. எனக்கு திருமணம் நடந்த போது, விரயச் சனி, ஜன்ம குரு. களத்திரகாரகன் ராசிக்கு 8ல். அப்போதுதான் கூடி வந்தது. சற்று தாமத திருமண என்பதால் கிரக பெயர்ச்சிக்கெல்லாம் காத்திருக்க அவகாசமில்லாமல் போய் விட்டது.
    இதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைக்கும் அளவுக்கு, பாதச் சனி முடிய ஒரு வருடம் இருக்கும் போது சனி தசை சுய புத்தி வந்தது பாருங்கள். குரு தசையில் அடக்கி வாசித்த ஏழரையோன் காலம், இந்த சமயத்தில் என்னை நன்றாகவே புரட்டியெடுத்து, அடித்து துவைத்து காய வைத்து விட்டுதான் சென்றது./////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  13. ////Blogger Maaya kanna said...
    வணக்கம் ஐயா!
    2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.
    பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா !
    ஆனால்
    கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?
    ௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது./////

    நாட்டின் யுத்த இழப்பிற்கெல்லாம் தனிக் கணக்கு உள்ளது. அதை பின் ஒருமுறை விவரமாகப் பார்ப்போம்! தற்சமயம் நேரமில்லை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////௨. தாங்களே அந்த சமயத்தில் கூறி இருந்திர்கள் ஐயா! திருச்சி யில் எம்பெருமான் குடி கொண்டு உள்ள கோவிலின் மொட்டை கோபுரத்தை கட்டியதால் இந்த அளவிற்கு லட்சகணக்கான உயிர் பலி வந்தது என்று .
    இதனை அல்லது இந்த கூற்றை எப்படி ஐயா! ஏற்றுகொள்ள முடியும் ஐயா!//////

    அப்போது இருந்த மன்னன் பிசன்னம் பார்த்துவிட்டு, அதை முடிக்காமல் மொட்டையாக விட்டதாக ஒரு புராதனக் கதை உண்டு. அதை எல்லாம் எடுத்து எழுதுவதற்கு ஆதாரங்கள் இல்லையே சுவாமி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ////Life is beautiful !!!//////

    ஆனால் இன்றைய மனிதர்கள் பலருக்கு wealth is beautiful"
    என்ன செய்வது சொல்லுங்கள்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  14. 2009 ல் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வி ஐயா! வகுப்பிற்கு வரும்பொழுது மறந்து போகி விடும் ஐயா!. இன்றுதான் கேட்க தோணியது அல்லது மனதில் ஞாபகத்திற்கு வந்தது ஐயா.
    பெரிய விஷயம் என்று ஒன்றும் இல்லை ஐயா! சிறிய கேள்வி தான் ஐயா !
    ஆனால்
    கண்டிப்பாக பதில் தர வேண்டும் என்ற நிபந்தைனை உடன் கேள்வியை கேள்கின்றேன் ஐயா?
    ௧. நமக்கு அருகில் உள்ள நாடான ஒரு நாட்டில் பல லட்சம் உயிர்களை பலி கொண்ட மாபெரும் போரில் மரணத்தை தழுவிய அனைத்து உயிர்களுக்குமா iyaa ஜாதகம் மற்றும் நேரம் காலம் சரி இல்லாமல் போனது./////

    கும்பலில் மரணம் என்பதற்கு சில ஜாதக அமைப்புகள் உள்ளன. அவர்களுடைய ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வாய்ப்புள்ளது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com